Friday, May 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 52

48 மணித்தியாலத்தில் மக்களை விடுதலைசெய்யவேண்டும்: மகிந்தா

படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஒரே அடியாக விடுதலை.
_____________________________________________
ரிச்சர்ட் பவுச்சர், ‘தாங்கள் அளித்த வாக்குறுதிகளை அவர்களே மதித்து நடக்காதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.’

இதனால தானே இந்த போராட்டமே! எப்பவும் இதே கதைதானே? இதில உக்காந்து பேசி அரசியல் தீர்வுன்னு கதைச்சா என்ன நடந்துடும்? அதையும் கிடாசுவான்.
_____________________________________________
இலங்கைக்கு நிதியுதவி அளிக்கக் கூடாது: அமெரிக்கா

அவனுக்கு குடுக்க ஆளா இல்லை? நிதி இல்லாட்டி என்ன ஆயுதமா வாங்கிக்க தயார்னு சொல்லமாட்டானா?
_____________________________________________
பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார்.

போன முறை போய்ட்டு வந்து வாய தொறக்க மாட்டேன்னு அடம் புடிச்சவருதானே? இவர விட்டா வேற ஆளுங்களே இல்லையா?
_____________________________________________
இலங்கை அரசுமீது போர் குற்ற விசாரணை:இங்கிலாந்து

நீ யாரு விசாரிக்கன்னு கேப்பான்? விசாரிச்சி தண்டிக்கிறதுக்கு நேரமா நடவடிக்கை எடுத்தா நாலு ஜீவன் பிழைக்குமா இல்லையா?
_____________________________________________
இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமா

என்னான்னு. ஐ. நா. வரதுக்குள்ள முடிச்சிடுன்னா? போங்க சார். ஓட்டு முடிஞ்சது. ஜெயிச்சா எங்க ஒட்டலாம்னு பாருங்க.
_____________________________________________
ஈழத்தமிழர்களுக்கு உதவ தயார்: அமெரிக்க கடற்படை

இல‌ங்கை அர‌சுட‌ன் இணைந்தாம். இது ப‌ண்ண‌தான் ஆளில்ல‌ன்னு அழுதாங்க‌ளா? சாப்பாடு, ம‌ருந்து குடுங்கையா முத‌ல்ல‌. ந‌ட‌க்க‌ முடிய‌ட்டும். அப்புற‌ம் வ‌ரீங்க‌ளா என்னான்னு கேளுங்க‌.
_____________________________________________
பதுங்குகுழிகுள் மருத்துவர்கள்:மயான பூமியான மருத்துவமனை

இத விட கொடுமை இருக்குமா? உயிருடன் இருக்கிறவங்க குழிக்குள்ள.
சடலங்கள் வெளியில. இதுக்கு பேரு மனிதாபிமான நடவடிக்கை.
_____________________________________________
தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களை இடைத்தங்கல் முகாம்களில் கடமையில் ஈடுபடுத்த வேண்டும் - ஐ.நா

ஒரு நாளாவ‌து ந‌ட‌க்கிற‌ விஷ‌ய‌மே பேச‌ மாட்டிங்க‌ளா? க‌ருணா ஆளுங்க‌ள‌ அனுப்புவான்.
_____________________________________________
வடக்கு அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதிக் குழுவில் ஒரு தமிழர் கூட அங்கம் வகிக்கவில்லை

இதென்னங்க அநியாயம். வடக்கை அபிவிருத்தி பண்றது தமிழனுக்குன்னு நீங்களா நினைக்கிறதா?
_____________________________________________
இலங்கை: மனிதாபிமானப் பிரச்சனையை தீர்க்காவிட்டால் பேரழிவைத் தவிர்க்கமுடியாது:ஒபாமா

அவ‌ன்தான் போரை ம‌னிதாபிமான‌ ந‌ட‌வ‌டிக்கைங்கிறான். தீர்த்து க‌ட்டிட்டு நீங்க‌ சொன்னீங்க‌ன்னு சொல்ல‌ப் போறான்.
_____________________________________________
தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின் ஒபாமா விடுதலை புலிகளை ஆயுதங்களைக் களைந்து சரணடையுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும்: மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இவனுக்கு அக்கறையில்லையாம். அதனால தான் அடிக்கிறாராம். இத விட எப்படி தெளிவா விளங்க வைக்கிறது. இவன் மனித எருமை அமைச்சர்.
_____________________________________________
ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்திராவின் தந்தை மோசடி வழக்கில் கைது: செய்தி
பிள்ளை சுட்டா பதக்கம். அப்பா சுட்டா கைதா? சுடுறது ரத்ததில ஊறி இருக்கு போல.
_____________________________________________

5 comments:

SUBBU said...

:(((((((((((((

sakthi said...

இலங்கைக்கு நிதியுதவி அளிக்கக் கூடாது: அமெரிக்கா

அவனுக்கு குடுக்க ஆளா இல்லை? நிதி இல்லாட்டி என்ன ஆயுதமா வாங்கிக்க தயார்னு சொல்லமாட்டானா?

NIJAM

sakthi said...

இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்: திருமா

என்னான்னு. ஐ. நா. வரதுக்குள்ள முடிச்சிடுன்னா? போங்க சார். ஓட்டு முடிஞ்சது. ஜெயிச்சா எங்க ஒட்டலாம்னு பாருங்க.

SUPERB

vasu balaji said...

நன்றி சுப்பு. நாலு வார்த்தைக்கு ஒரு வார்த்த சொல்லக்கூடாதா? :p

vasu balaji said...

வாங்க சக்தி. தலைப்புச் செய்தி பார்த்து ஆஹா விடிஞ்சதுடான்னு உள்ள படிச்சா கள்ளக் கூட்டால்ல இருக்கு. எரிச்சலா வருதுங்க. ஒரு ஒரு செகண்டும் எவ்ளோ உயிர்னு தெரியாம போச்சா?