Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, December 23, 2010

பிதற்றல் கவிதைகள் -1




காதல் கவிதை கேட்டாய்
உன்னைக் கண்ணாடி முன் நிறுத்தினேன்
சிவந்த உன் கன்னம் சொன்னது
உனக்குப் புரிந்ததென்பதை.

-*-

என்னைக் கூட்டுப் புழுவாக்கிவிட்டு
பிரிந்து செல்கிறாய்
உன் வரவில் பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கிறேன்.


-*-

நிமிடங்களால் கடந்து போவதில்லை
என் நாட்கள்
உன் நினைவுகளால்
கடந்து போகின்றன


-*-

குளத்தருகே போகாதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன் கண்ணைக் காதலிக்க
எத்தனை மீன்கள் சண்டையிடுகின்றன?


-*-

உன்னிடம் தீபாராதனை வந்த நொடியில்
சிலிர்த்துக் கை கூப்பினேன்
உள்ளுக்குள் சிரித்து உன் கண்ணில்
கனன்ற காதல் கன்னத்தில் சிவந்தது.

-*-

பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது
என் கன்னம்.

-*-

உனக்குக் காய்ச்சலா
என்று காதலாய்ப் பார்த்தாய்
உதறியபடி உளறிக் கொட்டினேன்
ஜன்னியென்று.

-*-

Tuesday, December 7, 2010

கஸ்ஸ்ஸ்ஸியும் கவிதைகள்..



தூண்டில்

கவிஞர்கள் கண்ணை மீனென்றல்லவா சொல்வார்கள்
உனக்கு மட்டும் ஏனடி தூண்டிலானது
பார் என் இதயம் சிக்கித் தவிக்கிறது.
***
வாசம்

குளித்து நடந்த உன் கால்தடத்தை
இணைத்துக் கூந்தல் கசிந்த நீர் கோலம் போட்டது
நிமிடத்தில் கோலம் காய்ந்தாலும்
நீ விட்டுச் சென்ற மஞ்சள் வாசம் நிறைத்திருக்கிறது
***
மூச்சு

ஓடி வராதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன்னைப் பார்த்தவருக்கெல்லாம்
மூச்சிறைக்கிறது.
***
முத்திரை

பேரழகி நீ என்று வாக்களித்தேன்
கள்ள ஓட்டுப் போடாமல் மார்பில்
நீ கடித்த தடம் இன்னும் இனிக்கிறது.
***

 


இமைகள்

கருவண்டுக் கண்களென்றா
படபடவென
இமையடித்துப் பார்க்கிறாய்?

***
புள்ளி

புள்ளிகள் இணைத்து
பிரமன் வரைந்த ஓவியம் நீ
இணைக்காமல் விட்ட புள்ளிகளில்
இன்னும் அழகாயிருக்கிறாய்!
***

இதழ்கள்

உன் இதழ்கள்
எனக்காகப் படைக்கப்பட்டவை
நீ சுவைப்பதற்கல்ல!



~~~~~~~~~~~~~~~~