தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Thursday, December 23, 2010
பிதற்றல் கவிதைகள் -1
காதல் கவிதை கேட்டாய்
உன்னைக் கண்ணாடி முன் நிறுத்தினேன்
சிவந்த உன் கன்னம் சொன்னது
உனக்குப் புரிந்ததென்பதை.
-*-
என்னைக் கூட்டுப் புழுவாக்கிவிட்டு
பிரிந்து செல்கிறாய்
உன் வரவில் பட்டாம்பூச்சியாய்
சிறகடிக்கிறேன்.
-*-
நிமிடங்களால் கடந்து போவதில்லை
என் நாட்கள்
உன் நினைவுகளால்
கடந்து போகின்றன
-*-
குளத்தருகே போகாதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன் கண்ணைக் காதலிக்க
எத்தனை மீன்கள் சண்டையிடுகின்றன?
-*-
உன்னிடம் தீபாராதனை வந்த நொடியில்
சிலிர்த்துக் கை கூப்பினேன்
உள்ளுக்குள் சிரித்து உன் கண்ணில்
கனன்ற காதல் கன்னத்தில் சிவந்தது.
-*-
பக்கத்துச் சிறுவனை
இழுத்தணைத்து முத்தமிடுகிறாய்
பரிதவிக்கிறது
என் கன்னம்.
-*-
உனக்குக் காய்ச்சலா
என்று காதலாய்ப் பார்த்தாய்
உதறியபடி உளறிக் கொட்டினேன்
ஜன்னியென்று.
-*-
Tuesday, December 7, 2010
கஸ்ஸ்ஸ்ஸியும் கவிதைகள்..
கவிஞர்கள் கண்ணை மீனென்றல்லவா சொல்வார்கள்
உனக்கு மட்டும் ஏனடி தூண்டிலானது
பார் என் இதயம் சிக்கித் தவிக்கிறது.
***
வாசம்
குளித்து நடந்த உன் கால்தடத்தை
இணைத்துக் கூந்தல் கசிந்த நீர் கோலம் போட்டது
நிமிடத்தில் கோலம் காய்ந்தாலும்
நீ விட்டுச் சென்ற மஞ்சள் வாசம் நிறைத்திருக்கிறது
***
மூச்சு
ஓடி வராதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன்னைப் பார்த்தவருக்கெல்லாம்
மூச்சிறைக்கிறது.
***
முத்திரை
பேரழகி நீ என்று வாக்களித்தேன்
கள்ள ஓட்டுப் போடாமல் மார்பில்
நீ கடித்த தடம் இன்னும் இனிக்கிறது.
***
இமைகள்
கருவண்டுக் கண்களென்றா
படபடவென
இமையடித்துப் பார்க்கிறாய்?
***
புள்ளிபுள்ளிகள் இணைத்து
பிரமன் வரைந்த ஓவியம் நீ
இணைக்காமல் விட்ட புள்ளிகளில்
இன்னும் அழகாயிருக்கிறாய்!
***
இதழ்கள்
உன் இதழ்கள்
எனக்காகப் படைக்கப்பட்டவை
நீ சுவைப்பதற்கல்ல!
~~~~~~~~~~~~~~~~
Subscribe to:
Posts (Atom)

