ஐயா! கூவிக்கூவிச் சொல்லியாகிவிட்டது. நான் புர்ச்சி எழுத்தாளனில்லை. மொக்கைப் பதிவர். பல வல்லுனர்களும் கூட சர்டிஃபிகேட் கொடுத்தாகிவிட்டது. கூகிளோ தமிழ்மணமோ நீ கிழபோல்டு. அதனால் பதிவு போடக்கூடாது எனச் சொல்லவும் இல்லை. அப்படிச் சொல்வதால் எனக்கு எந்த நட்டமும் இல்லை. பின் ஏன் இதை எழுதுகிறேன்? பொதுப் பிரச்சனைக்கு புர்ச்சி செய்யாதவன், காலை மிதித்தால் ஒதுங்கிப் போகலாம். தேடி வந்து மிதித்தால் ஏன் என்று கேட்கலாம். முகமூடியை விட்டு மிதித்தால் புர்ச்சி செய்யாமல் இருக்க முடியாது.
ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார் ஒருவர். (அதென்ன ஒருவர் என்கிறீர்களா? ஆள் மாறாட்டத்தில் காலை மிதித்த எழவை வேறெப்படி சொல்வது? அல்லது ஆத்திரம் அறிவை மறைத்ததோ தெரியவில்லை) பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. காசு கொடுக்காமல் போய்விட முடியுமா? கொடுத்துவிட்டு போனார். உப்புசமாக இருக்கிறதே என்று ஒரு டீக்கடையில் டீக்குடித்தார். நன்றாக இருந்தது. நல்லாயிருக்கு என்று சொல்வது தப்பா? சொல்லிவிட்டு காசு பார்த்தால் எட்டணா கம்மி. இருந்த காசைக் கொடுத்துவிட்டு வருவது தப்பா?
ஒரு கடையில் பிரியாணி சாப்பிடுகிறார் ஒருவர். (அதென்ன ஒருவர் என்கிறீர்களா? ஆள் மாறாட்டத்தில் காலை மிதித்த எழவை வேறெப்படி சொல்வது? அல்லது ஆத்திரம் அறிவை மறைத்ததோ தெரியவில்லை) பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. காசு கொடுக்காமல் போய்விட முடியுமா? கொடுத்துவிட்டு போனார். உப்புசமாக இருக்கிறதே என்று ஒரு டீக்கடையில் டீக்குடித்தார். நன்றாக இருந்தது. நல்லாயிருக்கு என்று சொல்வது தப்பா? சொல்லிவிட்டு காசு பார்த்தால் எட்டணா கம்மி. இருந்த காசைக் கொடுத்துவிட்டு வருவது தப்பா?
கொடுமை என்னவென்றால் பிரியாணிக் கடைக்காரர் அதே டீக்கடையில் பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டு காசும் கொடுத்துவிட்டு, நன்றாயில்லை என்றும் திட்டிவிட்டு, என் கடையில் பிரியாணியும் சாப்பிட்டு, காசும் கொடுத்த நீ அவன் கடையிலும் டீ குடித்துவிட்டு, காசும் கொடுத்துவிட்டு நன்றாயிருக்கிறது என்று சொல்கிறாயே, இது என்ன புத்தி என்று கேட்டிருந்தால் உன் கடையில் பிரியாணி இருக்க இங்கு வந்து பஜ்ஜி தின்று, டீ குடித்து, திட்டிவிட்டும் வருகிறாயே! அதைவிட நல்ல புத்திதான் என்று சொல்லி இருக்கலாம். பிரியாணி சாப்பிட்டால் டீ குடிக்கக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா ஐயா?
இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார். மகுடம் போய்விட்டால் அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன செய்வேன். அடையாறில் வாங்கிய பங்களாவுக்குத் தவணை எப்படிக் கட்டுவேன். இதற்கா பாடுபட்டு சுயமாக மொக்கை எழுதுகிறேன்? புர்ச்சிக் கையேடு வேறு படித்துத் தொலைத்துவிட்டேன். எந்திரனுக்கும் ரஜனிக்கும் ஆதரவாக எழுதியதைப் படித்தும் ஆகிவிட்டது. ஆக எந்திரனையும் சன் பிக்சர்சையும் எதிர்க்கிறார்கள் ஆதரிக்கிறார்களே தவிர ஏழைக்காக யாரும் புர்ச்சி செய்வதாய்க் காணோம்.
மொக்கை எழுத்தாளன் என்ற அவச்சொல் நீங்கவும், புர்ச்சி எழுத்தாளன் என்று பெயர் வாங்கவும் பீட்ரூட் போடாமலே புர்ச்சி செய்யப் போகிறேன். என் புர்ச்சி கோஷங்களுக்கு பதில் சொல்லட்டும். இப்போது ஏழையைப் பற்றி எழுதாவிட்டால், நாளை எழுத்தாளர் ஆகிவிட்டால் மேட்டுக் குடி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிடலாம். இப்போதே என்னை முகிலன் நடுத்தர வர்க்கத்து சிந்தனையாளன் என்று சொல்லிவிட்டார்.
எந்திரன் ரிலீஸ் ஆன பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து யாரும் சிந்திப்பதாய்த் தெரியவில்லை. ஏழை ரசிகன் பாலபிஷேகம் செய்வான், அதனால் பசி போய் விடுமா என்றெல்லாம் கேட்கிறார்கள். இது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய சினிமாக் கலாச்சாரம். சிவாஜிக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏன் டி. ஆர். ராமசாமிக்குக் கூட இதெல்லாம் நடந்திருக்கிறது. கலாச்சாரத்தை கட்டிக் காப்பது தமிழன் கடமையல்லவா? அதன் பிறகு இத்தனை நடிகர்கள் வந்தும் எல்லாருக்கும் பாலாபிஷேகம் செய்ததால் ஏழை பசியில் அடியோடு அழிந்தா போய்விட்டான்?
இருந்த புர்ச்சியாளர்கள் மீண்டும் பிறந்தாலும் சரி, அல்லது புது புர்ச்சியாளர் தோன்றினாலும் சரி, ஏழைத் தொண்டன் 24ம் வட்டத்தின் சார்பாக துண்டு போடாமல் இருப்பானா? புர்ச்சிக்கு சந்தாவோ, நிதியோ தராமல் இருப்பானா? நீ ஏழை! துண்டு போட்டால், நிதி கொடுத்தால் உன் ஏழ்மை போய்விடுமா என்று கேட்பார்களா? இது சரி எனும்போது பாலபிஷேகம் செய்வது அவன் விருப்பமல்லவா? அதை எதிர்க்க நாம் யார்?
எந்திரனால் ஏழைக்கு என்ன பயன் என்று கேட்கிறார்கள். படம் பிடித்திருந்தால் அந்த இரண்டரை மணி நேரம் அவன் கவலை மறந்து இருக்கிறான். தண்டமானால் இதை விட என் கவலை எவ்வளவோ தேவலை என்று மன அமைதி அடைந்துவிட்டுப் போகிறான். அவன் கவலையோடே இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் ஆசைப் படுகிறார்கள்.
படம் ஹிட் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? ரஜனி இன்னும் பெரிய சக்தி என்பது நிரூபணமாகிவிடும். தேர்தல் வேறு வரப்போகிறது. தனிக்கட்சி தொடங்க வேண்டும் தலைவா என்று ஏழை ரசிகன் டீக்குடிப்பான். கலைஞர் அழைத்து இது வரை மேடையில் ஜல்லியடித்தது போதும். இப்போது சொல். குஷ்புவுக்கு ஜோடியாக சை, சினிமா புத்தி போகமாட்டேன் என்கிறது. குஷ்பு போல் கட்சியில் இணைந்துவிடு. ஸ்டாலினுக்கு ஈடாக, அழகிரிக்குக் கூட தராத இணை முதல் அமைச்சர் பதவி தருகிறேன் என்பார். ரஜனிக்கு எவ்வளவு பெரிய சங்கடம்? ஏழை ரசிகர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஜெ. கர்நாடக ஆணிவேரைச் சுட்டிக் காட்டி, நீவு நாவு ஒப்பரே என்று அழைப்பு விடலாம். கேஸ் முடிந்தவுடன் நீங்கள்தான் தலைவர். இங்கு வாரிசுச் சண்டையில்லை என ஆசை காட்டலாம். மருத்துவர் ஐயா எந்த யோசனையும் இன்றி ரஜனிக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார். அன்புமணிக்கு துணைப் பிரதமர் போஸ்ட் கொடுத்தால் போதும். சில்லரைக் கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரஜனி என்ற சுனாமியை எதிர்த்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்று தெரியும்.
இவற்றில் எது நடந்தாலும் பாதிக்கப் படப்போவது ஏழை ரசிகன் மட்டுமே. இனி எப்படி அவனால் ரஜனி படம் பார்க்க முடியும். பாலபிஷேகம் செய்ய எங்கே போவான். ஒரு கலாச்சாரத்தையே அடியோடு தொலைக்கும் அவலம் அல்லவா நடந்துவிடும். ஒரு வேளை ரஜனி அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்வாரேயானாலும் பாதிப்பு ஏழைத் தமிழனுக்கே. அதன் பிறகு எந்தப் படத்திலும் ரஜனி நடிக்க முடியாது. காரணம் சன் பிக்சர்ஸ் மட்டுமே தமிழ்த் திரைப்படம் தயாரிக்க முடியும் என்ற சூழலில் கட்சியில் சேர மறுத்த ரஜனி போன்ற பெரிய நடிகர்களுக்கு வாய்ப்பு ஏது?
இந்தத் தொல்லையே வேண்டாம் என்று இமயமலைக்கு ஓய்வெடுக்கச் செல்லலாம் என்றால், குளிர்காலம் வந்துவிடும். அவர் நினைத்தால் ஸ்விட்ஜர்லாந்து போய் அனுபவிக்க முடியாதா? இமய மலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலா இருக்கிறது? இல்லை குகைக்குள் ஹெலிகாப்டரில் போய் இறங்குகிறாரா? உங்களிடம் 10 ரூபாய் இருந்தால் எனக்கு ஐந்து ரூபாய் என்று பங்கு போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு டீ குடிக்க காசு இல்லை என்றால், என்னிடம் குவார்ட்டர் அடிக்க காசிருந்தாலும், நானும் கம்மென்றிருப்பது கஷ்டத்தைப் பங்கு போடுவது இல்லையா?
ரஜனி ஏழைக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்குத் தெரியாதா? படம் தோல்வியடைந்தால் வினியோகஸ்தர்கள் ஏழையாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு பணம் திருப்பித் தரவில்லையா? ஏழை டெய்லர் என்ன செய்தான்? அவன் பிழைப்புக்கு வழி என்ன? ஏழைக்குக் கவலைப்படும் யாராவது இதை யோசித்தார்களா?
இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார். மகுடம் போய்விட்டால் அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன செய்வேன். அடையாறில் வாங்கிய பங்களாவுக்குத் தவணை எப்படிக் கட்டுவேன். இதற்கா பாடுபட்டு சுயமாக மொக்கை எழுதுகிறேன்? புர்ச்சிக் கையேடு வேறு படித்துத் தொலைத்துவிட்டேன். எந்திரனுக்கும் ரஜனிக்கும் ஆதரவாக எழுதியதைப் படித்தும் ஆகிவிட்டது. ஆக எந்திரனையும் சன் பிக்சர்சையும் எதிர்க்கிறார்கள் ஆதரிக்கிறார்களே தவிர ஏழைக்காக யாரும் புர்ச்சி செய்வதாய்க் காணோம்.
மொக்கை எழுத்தாளன் என்ற அவச்சொல் நீங்கவும், புர்ச்சி எழுத்தாளன் என்று பெயர் வாங்கவும் பீட்ரூட் போடாமலே புர்ச்சி செய்யப் போகிறேன். என் புர்ச்சி கோஷங்களுக்கு பதில் சொல்லட்டும். இப்போது ஏழையைப் பற்றி எழுதாவிட்டால், நாளை எழுத்தாளர் ஆகிவிட்டால் மேட்டுக் குடி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிடலாம். இப்போதே என்னை முகிலன் நடுத்தர வர்க்கத்து சிந்தனையாளன் என்று சொல்லிவிட்டார்.
எந்திரன் ரிலீஸ் ஆன பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து யாரும் சிந்திப்பதாய்த் தெரியவில்லை. ஏழை ரசிகன் பாலபிஷேகம் செய்வான், அதனால் பசி போய் விடுமா என்றெல்லாம் கேட்கிறார்கள். இது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய சினிமாக் கலாச்சாரம். சிவாஜிக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏன் டி. ஆர். ராமசாமிக்குக் கூட இதெல்லாம் நடந்திருக்கிறது. கலாச்சாரத்தை கட்டிக் காப்பது தமிழன் கடமையல்லவா? அதன் பிறகு இத்தனை நடிகர்கள் வந்தும் எல்லாருக்கும் பாலாபிஷேகம் செய்ததால் ஏழை பசியில் அடியோடு அழிந்தா போய்விட்டான்?
இருந்த புர்ச்சியாளர்கள் மீண்டும் பிறந்தாலும் சரி, அல்லது புது புர்ச்சியாளர் தோன்றினாலும் சரி, ஏழைத் தொண்டன் 24ம் வட்டத்தின் சார்பாக துண்டு போடாமல் இருப்பானா? புர்ச்சிக்கு சந்தாவோ, நிதியோ தராமல் இருப்பானா? நீ ஏழை! துண்டு போட்டால், நிதி கொடுத்தால் உன் ஏழ்மை போய்விடுமா என்று கேட்பார்களா? இது சரி எனும்போது பாலபிஷேகம் செய்வது அவன் விருப்பமல்லவா? அதை எதிர்க்க நாம் யார்?
எந்திரனால் ஏழைக்கு என்ன பயன் என்று கேட்கிறார்கள். படம் பிடித்திருந்தால் அந்த இரண்டரை மணி நேரம் அவன் கவலை மறந்து இருக்கிறான். தண்டமானால் இதை விட என் கவலை எவ்வளவோ தேவலை என்று மன அமைதி அடைந்துவிட்டுப் போகிறான். அவன் கவலையோடே இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் ஆசைப் படுகிறார்கள்.
படம் ஹிட் ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? ரஜனி இன்னும் பெரிய சக்தி என்பது நிரூபணமாகிவிடும். தேர்தல் வேறு வரப்போகிறது. தனிக்கட்சி தொடங்க வேண்டும் தலைவா என்று ஏழை ரசிகன் டீக்குடிப்பான். கலைஞர் அழைத்து இது வரை மேடையில் ஜல்லியடித்தது போதும். இப்போது சொல். குஷ்புவுக்கு ஜோடியாக சை, சினிமா புத்தி போகமாட்டேன் என்கிறது. குஷ்பு போல் கட்சியில் இணைந்துவிடு. ஸ்டாலினுக்கு ஈடாக, அழகிரிக்குக் கூட தராத இணை முதல் அமைச்சர் பதவி தருகிறேன் என்பார். ரஜனிக்கு எவ்வளவு பெரிய சங்கடம்? ஏழை ரசிகர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஜெ. கர்நாடக ஆணிவேரைச் சுட்டிக் காட்டி, நீவு நாவு ஒப்பரே என்று அழைப்பு விடலாம். கேஸ் முடிந்தவுடன் நீங்கள்தான் தலைவர். இங்கு வாரிசுச் சண்டையில்லை என ஆசை காட்டலாம். மருத்துவர் ஐயா எந்த யோசனையும் இன்றி ரஜனிக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார். அன்புமணிக்கு துணைப் பிரதமர் போஸ்ட் கொடுத்தால் போதும். சில்லரைக் கட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரஜனி என்ற சுனாமியை எதிர்த்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்று தெரியும்.
இவற்றில் எது நடந்தாலும் பாதிக்கப் படப்போவது ஏழை ரசிகன் மட்டுமே. இனி எப்படி அவனால் ரஜனி படம் பார்க்க முடியும். பாலபிஷேகம் செய்ய எங்கே போவான். ஒரு கலாச்சாரத்தையே அடியோடு தொலைக்கும் அவலம் அல்லவா நடந்துவிடும். ஒரு வேளை ரஜனி அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்வாரேயானாலும் பாதிப்பு ஏழைத் தமிழனுக்கே. அதன் பிறகு எந்தப் படத்திலும் ரஜனி நடிக்க முடியாது. காரணம் சன் பிக்சர்ஸ் மட்டுமே தமிழ்த் திரைப்படம் தயாரிக்க முடியும் என்ற சூழலில் கட்சியில் சேர மறுத்த ரஜனி போன்ற பெரிய நடிகர்களுக்கு வாய்ப்பு ஏது?
இந்தத் தொல்லையே வேண்டாம் என்று இமயமலைக்கு ஓய்வெடுக்கச் செல்லலாம் என்றால், குளிர்காலம் வந்துவிடும். அவர் நினைத்தால் ஸ்விட்ஜர்லாந்து போய் அனுபவிக்க முடியாதா? இமய மலையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலா இருக்கிறது? இல்லை குகைக்குள் ஹெலிகாப்டரில் போய் இறங்குகிறாரா? உங்களிடம் 10 ரூபாய் இருந்தால் எனக்கு ஐந்து ரூபாய் என்று பங்கு போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு டீ குடிக்க காசு இல்லை என்றால், என்னிடம் குவார்ட்டர் அடிக்க காசிருந்தாலும், நானும் கம்மென்றிருப்பது கஷ்டத்தைப் பங்கு போடுவது இல்லையா?
ரஜனி ஏழைக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்குத் தெரியாதா? படம் தோல்வியடைந்தால் வினியோகஸ்தர்கள் ஏழையாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு பணம் திருப்பித் தரவில்லையா? ஏழை டெய்லர் என்ன செய்தான்? அவன் பிழைப்புக்கு வழி என்ன? ஏழைக்குக் கவலைப்படும் யாராவது இதை யோசித்தார்களா?
ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க கம்பெனி ஜீன்சும் போட்டுக் கொண்டு ஏழை, அமெரிக்க அடிவருடி என்றெல்லாம் அமெரிக்க கூகிள் பிச்சை போட்ட வலைப்பூவில் இடுகை எழுதி ஏழை என்ன செய்வான் என்று கத்தினால் புர்ச்சியா?
அட 15ரூபாய்க்கு செல்ஃபோனில் எந்திரன் பாட்டு ரிகார்ட் செய்து கொண்டு (நல்ல காலம் ஏழை எதற்கு செல்ஃபோன் வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் கவலைப் படவில்லை) ராவுக்கு சோறோ சரக்கோ இல்லை என கவலைப்படாமல், பாட்டுகேட்டுக் கொண்டே தூங்கக் கூடாதா?
அட 15ரூபாய்க்கு செல்ஃபோனில் எந்திரன் பாட்டு ரிகார்ட் செய்து கொண்டு (நல்ல காலம் ஏழை எதற்கு செல்ஃபோன் வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் கவலைப் படவில்லை) ராவுக்கு சோறோ சரக்கோ இல்லை என கவலைப்படாமல், பாட்டுகேட்டுக் கொண்டே தூங்கக் கூடாதா?
ஒன்று மட்டும் நிச்சயம். அது 150 கோடி தயாரிப்பு படமோ, ரஜனியோ, சூர மொக்கை எழுதி பரிந்துரையும், மகுடமும், பின்னூட்டமும் பெறும் கிழபோல்ட் பதிவனோ எனக்குக் கட்ட கோவணமில்லை உனக்கு சட்டை என்னடா கேடு என்று மறைமுகமாகவாவது அடுத்தவனைச் சீண்டுவதற்குப் பெயர் சமுதாயச் சிந்தனைப் புர்ச்சி.
இனிமேல் யாரும் என்னை மொக்கை எழுத்தாளன் என்று சொல்ல முடியாது. பாவம்! எனக்குத் தெரிந்த அளவில் ஏழைக்கு ஆதரவாய் புர்ச்சி இடுகை எழுதிவிட்டேன். ஏற்கனவே பரிந்துரையையும் தாண்டி மகுடம் என்று திட்டிவிட்டதால் அதற்காக இந்தப் புர்ச்சி இடுகை என்றும் சொல்ல முடியாது. இந்த இடுகை மகுடத்துக்குப் போனால் கிடைக்கும் லாபத்தை ரஜனிக்கு பாலாபிஷேகம் செய்ய விரும்பும் ஏழைக்குக் கொடுப்பதாய் உத்தேசம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~