மனக் குளம்
நிறைந்த மனக் குளத்தில்
என் முகம் பார்க்க
உன் முகம் கண்ட நாள் எத்தனை?
கரையோர ஆலமரக் கனி விழ
சிற்றலையாய்த் தோன்றிய கலங்கலுக்கு
காரணம் நானெப்படியாவேன்?
விழுந்த ஆலங்கனி விஷ வித்தாய்!
குளம் குழம்பி குட்டையாக
முகம் பார்க்க முயலும்
முட்டாள் நான்
முழுதாய்த் தொலைந்து போனேன்.
உன் முகம் காண முயன்று
முற்றாய்த் தோற்று
என் உயிர் தேடும்
பிரயத்தினத்தில் மூச்சடைக்கிறது!
ஏன் என் உயிர் என்னை
வெறுப்பதாய்ச் சொல்கிறது?
என் ஏக்கம் மறுத்தேன்
எள்ளி நகைக்கிறது?
நானறிவேன்! என் உயிருக்கு
வெறுக்கத் தெரியாது.
உயிர்ப்பிக்கும் தேவதைக்கு
உயிர்வாங்கத் தெரியாது
உயிர் அளிப்பது இறைவனெனில்
நீயும் அதுவன்றோ?
ஏங்கி அழாமல் நீங்கள்
எப்பொழுது வந்தீர்கள்?
வரமளிப்பது இறைவனெனில்
நீயும் அது தான்
ஆரத் தழுவி
தன்னுள்ளடக்கையில்!
__/\__

