Showing posts with label மரணமொக்கை. Show all posts
Showing posts with label மரணமொக்கை. Show all posts

Thursday, April 21, 2011

சாரா! சாரா!

கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?

சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.

இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.

பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள்.

சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.

உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள்.

முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன்.

சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.

நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள்.

எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?

ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.

இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?

இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?

இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?

இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன்.

இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும்.

இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்
வானம்பாடிகள்.

சாராவின் கடிதம்.


--:::--

Friday, October 8, 2010

ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...



(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)

வலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி!! தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும்  ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி!! காணத்தவராதீர்கள்..

வா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.

கதிர்: வணக்கம்.

வா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.

கதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா?

வா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.

கதிர்:ரொம்பத் தேவை. கேளுங்க

வா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா?

கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.

வா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.

கதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.

வா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா?

கதிர்: (யோவ்! மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா?

வா.பா.
:யப்பா! தாங்கல சாமி! அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?

கதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.

வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்?

கதிர்:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ?

வா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க?

கதிர்: (அடப்பாவிங்களா! இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.

வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.

கதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.

வா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.

வா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.

(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)

வா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்களை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர்! அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா?

கதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.

வா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.

கதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.

வா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா?

கதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா?

வா.பா.
அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது? அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்?

கதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.

வா.பா.
இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.

கதிர்:
பேப்பர் கப் உபயோகிக்கலாமே.

வா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.

கதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.

வா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.

கதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.

இன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ!  ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.

வா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா?

கதிர்:
ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.

வா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.

கதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா? நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.  
~~~~~~~~~~~

Monday, September 13, 2010

தங்கமணி ராக்ஸ்..

சினிமாவில் ஒரு விரலசைப்பில் வில்லனை 7 மாடி உயரத்துக்கு உயர்த்தி எட்டு குட்டிக்கரணம் அடிக்க வைப்பார்களே, அதெல்லாம் தங்கமணியின் டேலண்டுக்கு முன் ஜுஜுபி. இணையத்தில் ROFL என்று உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு போடுவதை, நொடியில் நிஜமாக்குவதில் தங்கமணியை அடித்துக் கொள்ள முடியாது.

கொஞ்சமும் சிரிக்காமல், வெள்ளந்தியான முகபாவனையுடன் அஸால்டாக வீசும் குண்டுக்கு தரையில் படுத்து உருண்டு சிரிக்காமல் இருக்க எந்த கொம்பனாலேயும் முடியாது. அது போதாதென்று இதில் சிரிக்கவென்ன இருக்கு என்று நொடித்துக் கொண்டு போகையில் புரையேறி மூச்சடைத்துப் போய்விடும்.

தங்கமணியின் மாற்றமுடியாத ஒரு மேனரிசம் ஃபோன் செய்ததும் ‘ஹலோ! பாலாஜி சார் வீட்ல இருந்து பேசுறேன்’ என்பது. வாடிக்கையாக மினரல் வாட்டர் சப்ளையர், மருந்துக்கடை இவர்களுக்கு போன் செய்யும்போது பரவாயில்லை. கரண்ட் போனதும் எலக்ட்ரிசிடி போர்டுக்கு மல்லுக்கட்டி லைன் கிடைத்த கடுப்பில் தங்கமணி ஒரு முறை, எரிச்சலில் இருந்த இ.பி.ஆளிடம், வழக்கமான பாணியில் ‘நான் பாலாஜி சார் வீட்ல இருந்து பேசுறேன்’ என ஆரம்பித்திருக்கிறார்.

அந்த ஆள் ‘ஏங்க! எங்கருந்துன்னா பேசுங்க! என்ன வேணும் சொல்லுங்க எனப் பாய்ந்திருக்கிறார். வீதியில் அனைவர் வீட்டிலும் மின்சாரம் இருப்பதைச் சொல்லி, எங்கள் வீட்டில் மட்டும் இல்லை என்பதைச் சொல்லவும், அவர் போதாத காலம் பேரு அட்ரஸ் சொல்லுங்க என்று கேட்டுவிட்டார். இப்படி கேப்பிங்கன்னுதான் முதலிலேயே பேர் சொன்னேன். என்னமோ எங்கிருந்துன்னா பேசுங்கன்னு எரிஞ்சி விழுந்தீங்களே என்று ஒரு பாட்டம் லெக்சர் எடுத்திருக்கிறார். எங்கே நேரமானால் இன்னம் என்னமெல்லாம் வருமோ என்ற பயத்திலோ என்னமோ 15ம் நிமிடம் சர்வீஸ் வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது. 

ஒரு முறை, தங்கமணி ஹொகேனக்கல்லில் குளிக்கப் போய், சறுக்கி விழுந்து வலது கையில் ஃப்ராக்ச்சர் ஆக, அங்கிருந்து வந்து டாக்டரிடம் செல்வதற்குள் இரண்டு நாட்களாகிவிட்டது. டாக்டரிடம் நான் நடந்ததைச் சொல்லி, அவர் சர்ஜரி செய்ய வேண்டும் என்று அட்மிட் ஆகச் சொன்னதும், வார்டுக்கு அழைத்துச் சென்று ரூமில் விட்டுவிட்டு ஒரு நண்பனிடம், வீட்டுக்குப் போகச் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென அறையிலிருந்து இடி விழுந்தாற்போல் சிரிப்பும், கேவலுமாய் வினோதமான சப்தத்துடன், என்னங்க? என்னாச்சுங்க என்ற தங்கமணியின் குரலும் கேட்டது. திகைத்துப் போய் அறைக்கு ஓட நர்ஸ் பாதி சுற்றிய பேண்டேஜ் ரோல் தரையில் உருண்டொட வயிற்றைப் பிடித்துக் கொண்டு மடங்கி சிரித்துக் கொண்டிருந்தார்.

நர்ஸால் விஷயம் சொல்வதற்கு இப்போதைக்கு முடியாது எனத் தெரிந்தபடியால், தங்ஸிடமே என்ன கேட்டார்கள்? நீ என்ன சொன்னாய் என்றேன். ரொம்ப சாதாரணமாக, ஒன்னுமில்லைங்க, ‘எப்படிம்மா விழுந்தீங்கன்னு கேட்டாங்க! நான் தொப்புன்னு விழுந்தேன்’னு சொன்னதும் இப்படி சிரிக்கிறாங்க’ என்று சொன்னதும் நர்ஸ் அடுத்த ரவுண்ட் சிரிப்புக்குப் போக, நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன்.

நேற்று அதிகாலையில் கேரக்டர் இடுகை போட்டுவிட்டு தூங்கப்போனேன். ஒன்பதரை மணியளவில் கண்விழித்து, பல் தேய்த்து, காஃபி சாப்பிட ஆரம்பிக்க, தங்கமணி ட்ரேட்மார்க் எக்ஸ்ட்ரா வெள்ளந்தி முகத்துடன், ரெண்டு ஃபோன் கால் வந்தது. யாருன்னு தெரியலை. பேர் சொல்லமாட்டேன்னுட்டாரு என்றதும், என்னது? என்றேன். முதல் கால் வந்ததும், யார் பேசுறீங்கன்னு கேட்டேன், பேர் சொல்ல மாட்டேன்னாரு. என்னடா இதுன்னு வெச்சிட்டேன்.

திரும்ப கால் வர எடுத்து யார் சார் பேசறதுன்னா திரும்பவும் பேர் சொல்ல மாட்டேன் அப்படின்னாரு. இப்படி சொன்னா எப்படி சார்னா, நான் ப்ளாக்ல இருக்கேன்னு சொல்லுங்கோன்னார். தூங்கறார்னு சொல்லி வச்சிட்டேன். போன் பண்ணிட்டு பேரு சொல்ல மாட்டேன்னா எப்படி? ரிஸீவ்ட் கால்ல பாருங்க என்று இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போய்விட்டார். 

அந்த நம்பரை அழுத்தி, கால் போய்க்கொண்டிருக்க குழப்பத்தோடு இருக்கையில், நண்பர் எடுத்து ‘சார்! நாந்தான் சார் ஃபோன் பண்ணேன். இந்த மாதிரி இடுகையெல்லாம் கார்த்தால போடாதங்கோ சார். படிக்கறப்பவே கலக்கமாப் போச்சு, என்று ஃபீலிங்க்ஸோடு பேச ஆரம்பித்தார். எனக்கு ஒரு புறம் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தாலும், இவ்வளவு ஆதுரத்துடன் பேசும்போது எப்படிச் சிரிப்பது என்று அடக்கிக் கொண்டேன்.

பேசி முடித்ததும் தங்கமணியிடம், ஆமாம் பேரு என்ன சொன்னாரு என்றேன். அட! பேரு சொல்ல மாட்டேன்னாருன்னு திரும்ப திரும்ப சொல்றேன், பேரு என்ன சொன்னாருன்னு கேட்டா என்ன பண்ண என்று எகிறினார். பேர் சொல்ல மாட்டேன்னாரா, பெயர் சொல்ல விருப்பமில்லைன்னாரா என்றேன். சற்றும் அசராமல் எதானா என்ன? ரெண்டும் ஒன்னுதானே என்று குழம்புக்கு தாளிக்க ஆரம்பித்தார். அடக்கி வைத்த சிரிப்பெல்லாம் அடித்துக் கொண்டுவர ஒரு பாட்டம் சிரித்துத் தீர்த்துவிட்டு, அது அவர் ப்ளாகில் எழுதும் பெயர் என்று விளக்கி, நான் வானம்பாடிகள் என்ற பெயரில் எழுதுவதைச் சொன்னபோது பார்த்த பார்வையிருக்கிறதே! 
~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, May 20, 2010

பி.ப. பிரபா பேட்டி எடுக்கிறார்..

பிரபல பதிவர் பிரபாகர் பத்து நாள் ஆணி புடுங்கும் வேலையில்லாததால் மன்னார் பத்திரிகையில் ஃப்ரீலான்ஸ் நிருபராகிறார். அவரின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்: (அதெப்புடி உன்கிட்டன்னு கேக்காதீங்க. நித்தியானந்தா விசாரணை வீடியோவே லீக்காவுது. ஜுஜுபி ஸ்னேக் பிரபா எம்மாத்திரம்?)

ட்ரீங்ங்ங் ட்ரீங்ங்ங்

கதிர்
: அல்லோ

பிரவு: வணக்கம் கதிர்

கதிர்:(அவ்வ்வ்வ். ஃபோன்ல ஏன் இன்வி மோட் இல்ல?) வணக்கம் பிரபா. எங்க இருக்கீங்க? என்ன மேட்டர் இவ்வளவு காலீல ஃபோன்?

பிரவு
:(எட்டுமணிக்கு மேல போன் பண்ணா பிஸி ஆன் த அதர்ஃபோன்னு டயல்டோன் வரும்னு தெரியும்டி). ஷ்ஷ்ஷ். நான் நிருபர். நாந்தான் கேள்வி கேப்பேன் நீங்க பதில் மட்டும்தான் சொல்லணும். சரியா?

கதிர்: கேளுங்க

பிரவு: ஆமா ஊர் நாயத்தயெல்லாம் இழுத்து விட்டு பக்கம் பக்கமா இடுகை எழுதிட்டு மௌனமாக கடந்து போகிறேன்னு போட்டா எப்புடி?

கதிர்:(அடங்கொன்னியா! பயபுள்ள மொத பாலே பவுன்ஸரா போட்டுட்டானே) வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க பிரபா. இந்த அக்குரும்பெல்லாம் பார்க்கிறப்ப மனதில் அடர் இருள் சூழ்கிறது.

பிரவு: அது அது! அப்பப்ப இந்த ட்ரேட் மார்க் அடர் இருள் சூழ்கிறது, கனத்த மனதுடன், கஸ்ஸ்ஸியும் இதெல்லாம் எங்க இருந்து புடிச்சீங்க. பெரியாருக்கு வெங்காயம் மாதிரி உங்களுக்கு இதா?

கதிர்:(பய புள்ள ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கான்! கதிரு! வேற வழியில்லை! உன் டெக்கினிக்க யூஸ் பண்ணி எஸ்ஸாயிரு.) அல்லோ பிரபா. ஒரு நிமிஷம். செந்தில் லைன்ல வராபடி. கான்ஃபரன்ஸ் போட்டு விட்றேன், சரியா?

பிரவு: ஓக்கே கதிர். வணக்கம் செந்தில்

செந்தில்: வணக்கம் பிரபா. நல்லாருக்கீங்களா?

பிரவு: நன்றாயிருக்கிறேன் நண்பா. நான் இப்போது ஒரு நிருபராக உங்களுடன் பேசுகிறேன். குஷ்புவை கட்சியில் கலைஞர் சேர்த்துக் கொண்டது பற்றி உங்கள் கருத்தென்ன?

செந்தில்:(அடியே! என்கிட்டயேவா?நான் இந்த வில்லங்கம் புடிச்சதெல்லாம் எழுதமாட்டேன்னு தெரிஞ்சுமா கேக்குறீரு கேள்வி?) அது வந்து நண்பா! கலைஞருக்கு வயதாகிவிட்டது. குஷ்பூ இட்டிலியில் சோடா மாவு சேர்ப்பதாக அறிகிறேன். இந்த வயதான காலத்தில் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல..

பிரவு: (யப்பா! கழுவுற மீன்ல நழுவுற மீனுன்னு கேள்வி பட்டிருக்கேன். இவரு அதையும் மிஞ்சிட்டாரு போலயே.) அதில்லை நண்பா..

செந்தில்
: இருங்க பிரபா. பழமையண்ணன் கூப்புடுறாங்க. ஒரு நிமிஷம்...(பாலாண்ணே. அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த போட்டு குடுத்ததுக்கு நன்றிண்ணே..ஹி ஹி..)

பிரவு:
(கைமாத்துற டெக்கினிக்க கண்டு புடிச்சதே நம்மூரு ஆளுங்கன்னா பய புள்ளைங்க அதுல டாக்டர் பட்டமே வாங்குவாங்க போலயே..அல்லோ..வணக்கங்க பழமை..ம்ம்ம்ம். எவ்வளவு நாளாச்சி பேசி..

பழமை: சொல்லுங் பிரபா. நல்லாருக்கீங்களா? எதிர்பாராம உங்க கூட பேச முடிஞ்சது நெம்ப நல்ல விஷயம். மகிழ்ச்சி.

செந்தில்: (இஃகி இஃகி..மகிழ்ச்சியாம்ல. அண்ணன் நிருபர்னு தெரியாம வாய குடுத்து மாட்டிக்கிட்டாரு..செந்திலு..கம்முன்னு மூச்சு உடாம என்சாய்..)

பிரபா: எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க பழமை. நான் ஃப்ரீலான்ஸ் நிருபரா செந்தில்கிட்ட கேட்டுட்டிருந்தேன். நீங்க வந்ததும் உங்க கிட்ட பேச முடிஞ்சது.

பழமை: அதுக்கென்ன பிரபா. கேளுங்க

கதிர்:(மாப்பு! அதெப்புடி இம்புட்டு தகிரியமா பதில் சொல்றாமாதிரியே போசு?)

பிரவு: எனக்கு ஒரு டவுட்டுங்க நண்பா! இப்பல்லாம் அப்புச்சிகூட பேசறதே இல்லையே! பணிச்சுமையினால் தூக்கமின்மையா அல்லது தூங்க விடாம பெருசு டார்ச்சர் பண்ணுதுன்னு முதியோர் இல்லத்துல சேர்த்துவுட்டீங்களா?

பழமை: சரிங்க பிரபா. நான் அட்லாண்டா விமான நிலையத்துல இருந்து பேசினேன். விமானத்தில் ஏற அழைப்பு வந்துவிட்டது. போய் இறங்கிட்டு கூப்பிடுறேன். ஆ ஆ.

பிரபா: சரிங்க நண்பா. அல்லோ அல்லோ. என்னாது அமெரிக்கா ஃபோன்ல கூட க்ராஸ்டாக் வருது? அல்லோ யாருங்க

பெண்குரல்: அல்லோ. நீங்க அல்லோன்னு  யாருங்கன்னு கேட்டா எப்புடி? கண்ட நம்பருக்கு அடிச்சிட்டு யாரு பேசறதுன்னு க்ரைண்டர் சுத்தற வேலை வேணாம். ஒழுங்கு மரியாதையா யாருன்னு சொல்லுங்க. இல்லன்னா திருப்பாச்சி பேசும்.

பிரவு: அடியாத்தீ. க்ரைண்டர். திருப்பாச்சி. சகோ! வளவளத்தா சாரி சித்ரா சகோதானே! ஆஹா! என்ன ஒரு அதிர்ஷ்டம். நாந்தாங்க ஸ்னேக் பிரபா! பழமைகிட்ட பேசிட்டிருந்தனா. க்ராஸ் டாக்குல நீங்க வந்தீங்க. நான் நிருபரா பேட்டி எடுத்திட்டிருக்கேன். உங்க கிட்டயும் ஒரு கேள்வி கேக்கலாமா?

சித்ரா
: ஹா ஹா ஹா. கேளுங்க கேளுங்க! கேட்டுக்கிட்டேயிருங்க. நாங்க வெட்டிப் பேச்சும் பேசுவோம்! வெட்டிப் போட்டும் பேசுவோம்ல. ஸ்டார்ட் மீஜிக்

பிரவு: இல்லைங்க சகோ! பின்னூட்டம் போடுறதில உங்களுக்கு சீனியர் நானு. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி. நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி  ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?

சித்ரா: அதுவா. கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.

பிரவு
: ஏங்க! கார்ட்ல பண்றேன். அப்படியே நம்ம தினேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுங்க ப்ளீஸ். இல்லைன்னா கான்ஃபரன்ஸ் போட்டாவது எஸ்ஸாயிக்கிங்க அவ்வ்வ்...

தினேஷ்
: அல்லோ. தினேஷ் ஹியர்! என்னங்க சித்ரா?

சித்ரா:(ம்கும்! பதில் சொல்ல நான் லூசா! )

பிரவு: அல்லோ அல்லோ. நாந்தான் சகா!

தினேஷ்: ஹை! சகா! இன்னைக்கு யாரு காலி?

பிரவு:ஹா ஹா ஹா (பிரவு! எப்புடிய்யா எப்புடி?) இல்ல சகா! நான் இப்போ ஃப்ரீலான்ஸ் ரிபோர்டரா உங்க கிட்ட பேசறேன். ஒரு பேட்டி. நம்ம கலைஞர் இருக்காரே..

தினேஷ்:(ஆஹா! நாம ஊருக்கு வரோம்னு தெரிஞ்சும் இப்புடி போட்டு குடுக்க பாக்கறாரே இந்தாளு) அது வந்து சகா, முகிலனுக்கு மூச்சா வருதாம். நான் ஊருக்கு வரும் போது சிங்கை வந்து காதுக்குள்ள சொல்றேன் சரியா..மீ த எஸ்கேப்பு..

பிரவு:(பிரவு! இந்த ஒத்த கேள்விய வெச்சே எத்தன பேர சாச்சுப்புட்ட. வுடாத ஸேம் ப்ளட்ட புடி..ட்ரிங் ட்ரிங்)

ஷங்கர்: ஹல்லோ!

பிரவு: நாந்தான் சேம் ப்ளட்.

ஷங்கர்: கண்மூடி கால் சம்மணமிட்டு நாவல் மரத்தடியில் அமர்ந்து புருவம் நோக்கி கண்குவித்து சிந்தை ஒருமித்து அஸ்தராய பட்..ipod, விண்கலம், வெங்கலம். வெண்ணெய்..

பிரவு: போச்சிடா! சாமி வந்திருச்சி. இப்போதைக்கு பேசாது. செல்லும் செல்லாததுக்கு செட்டியார கேளுன்னு பழமொழி இருக்கே. மணி ஒன்னாவுது. இன்னேரம் ஆந்தை மாதிரி ஆசாந்தான் சிக்குவாரு. போட்டு தள்ளிறலாமா? ஆசான் வணக்கம்.

வானம்பாடிகள்: வணக்கம் பிரபா.

பிரவு: ஒரு நிமிடம் அழைக்கலாமா?

வானம்பாடிகள்: ப்ரியாட்ட பேசிட்டிருக்கேன் பிரபா.

பிரவு: அட தங்கச்சி இன்வியா. பஸ்ஸுங்களாய்யா.

வானம்பாடிகள்: ஆமாம்.

பிரவு: (ஒரே கல்லுல ரெண்டு தல சை மாங்கா) தோ வந்துட்டேன். வணக்கம் ஆசான். வணக்கம் சகோ.

கலகலப்ரியா: வாங்கண்ணா!

பிரவு
: ஒரே ஆணி சகோ! இப்போ அண்ணன் ஃப்ரீலான்ஸ் ரிபோர்டர் சகோ!

கலகலா
: அப்படின்னா ஓசில வேல பாக்குறதாண்ணா?

பிரவு: தங்கச்சிக்கு எல்லாம் ஜோக்குதான். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே கேள்வி. பதில் சொல்லுங்க. இந்த கலைஞர் கட்சில குஷ்பு சேர்ந்தத பத்தி என்ன நினைக்கிறீங்க?

கலகலா: (புதியபறவை சரோஜாதேவி மாதிரி விவேக் பேசினா மாதிரி படிங்க மக்கா) அய்யோ அண்ணா! என்னைப் பார்த்தா இந்த கேள்வி கேட்டீர்கள் அண்ணா? ஏன் அண்ணா ஏன்? குஷ்புவே கலைஞர்தானேயண்ணா? அல்லது கலைஞரே குஷ்புவா? எனக்கு குஷ்புவைத் தெரியாதே அண்ணா? கூடையிலே என்ன பூ என்றாலே சொல்லத் தெரியாதே அண்ணா சொல்லத் தெரியாதே!

பிரவு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..த்த்த்த்தங்க்ச்சீ! தப்புதான் தங்கச்சி தப்புதான்.

வானம்பாடி: அடச்சை! நிறுத்துறிங்களா என்னா? என்ன சேட்டை இது?

பிரவு: ஆ! சேட்டை! என் உயிர் நண்பா! உன்னை எப்படி மறந்து போனேன். அய்யகோ! அய்யா ஒரே நிமிசங்கையா. அவசரமா ஒரு ஆணி அய்யா.

வானம்பாடி
: இப்போ யாரு மீ த எஸ்கேப்பு சொன்னது? ஏம்மா நீயா? வானம்பாடி நீயா? பிரவு நீயா?

சேட்டை: அல்லோ! சொல்லுங்க நண்பா! என்ன விஷயம்?

பிரவு: இல்ல சேட்டை! ஒரு கேள்விக்கு விடை வேணும். உடனே உங்க கவனம்தான் வந்திச்சி. கேள்வியும் நானே பதிலும் நானேக்கு உங்கள விட்டா வேறயாரு நண்பா?

இந்த கலைஞர் எப்படி நண்பா குஷ்புவ கட்சில சேர்த்தாரு?

சேட்டை: அது நண்பா! கலைஞர் கில்லாடி நண்பா. உலகத்துலயே முகம் மறந்து போனாலும் முதுக வெச்சே கண்டுபிடிக்க முடியர ஒரே ஆள் நம்ம குஷ்புதான். கட்சிக்கு வாக்கு சேர்க்க மேடையில பேசமுடியாம இருக்கலாம். ஆனா அந்த முதுகுல உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கேன்னு எட்டு மைல் தூரத்துல இருந்தும் பார்த்தா தெரியரா மாதிரி எழுத முடியும்.

தேர்தல் அன்னைக்கு சூரியன் ஜன்னல் வெச்சி ஜாக்கட் போட்டுகிட்டு கேக்காமலே ஓட்டு கேக்க முடியும். கலைஞரா கொக்கா! சரிதானே நண்பா?

பிரவு: இடுக்கண் வருங்கால் சை உடுக்கை இழந்தவன்..என்பது மிக்க சரி நண்பா! இந்த ஒரு கேள்வி கேட்டா அது அதுங்க என்னமோ வேதாளம் விக்கிரமாதித்தன கேட்ட கேள்வி மாதிரி கான்ஃபரன்ஸ் போட்டு எஸ்ஸாரதும்..காபி போட போறேன்னு எஸ்ஸாரதும்..மிக்க நன்றி நண்பா! இத வெச்சி இடுகை சை பேட்டி தேத்திடுவேன். வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, May 17, 2010

மயிர் நீப்பின் வாழா..

மனுசனாப் பொறந்தவன் ஒவ்வொருத்தனுக்கும் குறைந்தது ஒரு வயசில இருந்து கட்டையில போற வரைக்கும் தொடர்ந்து இருக்கிற உறவுன்னா அது சவரக்கடைதான். முடிஞ்சா நாமளே போறது முடியலீன்னா அவிங்க வாரதுன்னு ஒரு உன்னதமான ஏற்பாடு அது.

மசிரு பொறாத விஷயம்னு நக்கலா பேசிடுறதும் திட்டுறதும்னு இருக்கிறவங்களுக்கு அதோட மதிப்பு தெரியறதில்லை. ஆனானப்பட்ட வள்ளுவரே ‘மயிர் நீப்பின்’ அப்படின்னு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கார். (டி.வி.ஆர். சார் ஒரு வாரம் லீவு. வள்ளுவர் ஏங்கிறப்படாதுன்னு நான் சொல்லிட்டேன். எப்புடீ). அந்த உன்னதமான உறவுக்கு உலைவைக்கும் சதி நடக்கும்போது ஒரு மனுசம்மனசு என்ன பாடுபடும்?

எனக்கு மட்டும் ஏன் சார் இப்புடியெல்லாம் நடக்குது?

சின்ன வயசில தவறாம இழுத்துட்டு போய், மண்டை தெரிய வெட்டி விடுங்கன்னு சொன்னப்போ பலியாடு மாதிரி போவேன். அஞ்சாம்பு படிக்கிற சம்முவம் ஜம்முன்னு சேர்ல உக்காந்து வெட்டிக்கும்போது நம்ம உசரத்த காரணம் காட்டி ஏழாம்பு படிச்ச என்னை கைப்பிடி மேல கட்டைய போட்டு உக்கார வெச்சி வெட்டினப்பவும் ஒரு வார்த்த ஏன்னு கேட்டிருப்பேன்?

கொஞ்சம் முடி வளர்த்துகிட்டு ஒரு தலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்டிங் வெட்டுங்கன்னு கேட்டேன். முகவாய புடிச்சி திருப்பி பாவமா ஒரு பார்வை பார்த்து இந்த முடிக்கு ஸ்டெப் கட்டிங் வராது தம்பின்னாங்க. இன்னும் கொஞ்சம் வளந்த பிறகு வரவான்னு பணிவா கேட்டேன். பளிச்சின்னு மூஞ்சில அடிச்சா மாதிரி கோர முடிக்கு ஸ்டெப்கட்டிங் நல்லாருக்காதுன்னு சொன்னப்பவும் பழயபடி மண்ட தெரிய கட்டிங்குக்கு ஒத்துக்கிட்டேன்.

பதினொண்ணாம்பு போயும், கிளாசுல இருந்த சுகுணாவுக்கு இருந்த பூனை முடி கூட மீசை இல்லைன்னு கிண்டல் பண்ணப்ப ஒம்பதாம்புல இருந்து ஷேவிங் பண்ற சுந்தரமூர்த்திய கேட்டு எதிர் போடுறதுன்னா என்னான்னு தெரிஞ்சிகிட்டு வரட்டு வரட்டுன்னு இல்லாத மீசையும் தாடியையும் எரிய எரிய ஷேவ் பண்ணேனே எதுக்கு?

அந்த நல்லெண்ணம் புரியாம, முதல் முறையா தாடியும் மீசையுமா முடிவெட்டிக்க போனா ஷேவ் பண்றப்ப என்னமோ கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி எதிர் போட்டியான்னு கேட்டாலும் பரவால்ல. தம்பி எதிர் போட்டாலும் பரவால்ல, கண்டமேனிக்கு இழுத்தியான்னு நக்கலா கேட்டப்போவும் மனசுக்குள்ளயே அழுதேன்.

இவ்வளவு கொடுமை அவமானமெல்லாம் தாங்கிக்கிட்டேனே ஏன்? எந்தக் கெட்ட வார்த்தை திட்டுக்கும் பொங்காத ஒரு சுரணை கெட்ட மனுசன் கூட ‘ஒம் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க’ என்ற வசவுக்கு கொலை செய்யற அளவுக்கு போவான். பிச்சைக்காரனா இருந்தாலும் சரி, பிரதமரானாலும் சரி இவிய்ங்க பீச்சக்கை மூஞ்சில வெக்காம முடிவெட்டணும்னு சொல்ல முடியுமா?

அதுவும், ஷேவிங் பண்றப்ப அந்த நாத்தம் புடிச்ச சோப்ப குழைச்சு தடவி வழிச்சி உள்ளங்கையில கத்தில இருந்து ட்ரான்ஸ்வர் பண்ணி, மூக்கு மேல படாம மூஞ்சில பீச்சாங்கைய வச்சி வசதிக்கு திருப்பி திருப்பி சவரம் பண்ணப்போ எந்தப் பயபுள்ளையாவது கொதிக்க வேணாம். ஏம்ப்பான்னு ஒரு வார்த்த கேட்டிருப்பான்?

இதெல்லாம் விடுங்க. ஒரு மனுசனுக்கு ஆயிரம் துக்கம், கவலை, வியாதி எது வேணா இருக்கட்டும். சவரக்கடையில போய் உக்காந்து கிச்சு கிச்சுன்னு கத்தரி சத்தத்தில அஞ்சாவது நிமிஷம் கண்ணு சொக்காத மனுசன் உண்டுமாய்யா? தூக்கமா அது? அப்புடி ஒரு தூக்கம் தூக்கமாத்திரையோ, டாஸ்மாக் சரக்கோ கூட கொடுக்க முடியாதே. இதுக்கெல்லாம் மதிப்பு குடுத்துதானே.

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது.

நம்ம வெண்ணெய் இருக்கானே, அவன் எல்லாத்துலயும் கொடுத்து வச்சவன். அழகா முன் மண்டையில ஆரம்பிச்சி 30 வயசுக்கெல்லாம் நயாகரா மாதிரி அப்படியே பரவி, காதோரத்தில இருந்து கழுத்துக்கு கொஞ்சம் மேல் வரைக்கு ஒரு ஒன்னரை இஞ்சு பிறை மாதிரி வழிச்சிட்டு போயிடுச்சி. அவனும் ப்ளேட் போடுற சீப்பு வெச்சி குளிக்கும்போது ரெண்டு வாரு வாரிட்டு ‘யப்பா! அம்பது ரூபா மிச்சம்பான்னு’ அப்பா படம் முன்னாடி இருக்கிற உண்டில காசு சேக்குறான்.

ஆனா எனக்கு? ஒரு நேந்திரங்கா சிப்சு சைசில பின்மண்டையில ஆரம்பிச்சி சேப்பாக்கம் ஸ்டேடியம் மாதிரி வளர்ந்துச்சி. அட முடியில்லைங்க! சொட்டை. கொஞ்ச நாள் வலப்பக்கம் அதிகமாக, அய்யோ கடவுளே! ஏன் இப்புடி? இடப்பக்கம் மட்டும் முடிய நீளமா வளர்த்தி, மண்டையில கொஞ்சமா விளக்கெண்ணெய் போட்டு, இந்த முடிய மத்த காது வரைக்கும் பரத்தி விட்டு செட்டப் பண்ண வச்சிறாதன்னு வேண்டாத கடவுள் இல்லை.

ச்சேரி போடான்னு இடப்பக்கமும் வளர ஆரம்பிச்சதும் அப்பாடான்னு சொட்டைக்கு சந்தோஷப்பட்ட பிறவி நானாத்தானிருக்கும். விட்றுவானா? முன் மண்டையில இருந்து அப்ரோச் ரோடு மாதிரி ரெண்டு பக்கமும் அத்து மீறல் தொடர்ந்தது.

அப்படி இப்படி வருசத்துக்கு ரெண்டு வாட்டிதான் முடிவெட்டுற நிலமை வந்தது கூட பெரிசில்ல. நவம்பர் மாசம்னு நினைக்கிறேன். மனசு சுக்கு நூறாகுற சம்பவம் நடந்துச்சி.

முடிவெட்டன்னு போனேன். ஒரு நாள் தாடி கூட இல்லாத என்னப் பார்த்து ஷேவிங்கான்னு கேட்டாங்க. மார்ல நடுவில சுருக்குன்னு ஒரு வலி. சகிச்சிக்கிட்டு கட்டிங்னேன். இருந்த நாலு சேர்ல ஒரு சேர் காலியாயிருக்க உக்காருன்னாங்க.

உக்காரப் போகும் போது ஒரு ஆள் வந்து ‘ஓ! ஃபுல்லான்னாரு’. எனக்கு வெட்டுற ஆள் ஓனர் கூட இல்லை. ஆனாலும் பளிச்சின்னு உக்காருங்க அஞ்சு நிமிசம், முடிஞ்சிரும்னாரு. அப்படியே கூசிப் போச்சு உடம்பு. பொறுத்துகிட்டேன்.

காலர இளக்கி விட்டாரு. நான் கண்ணாடிய கழத்தி வெச்சிட்டு கம்பீரமா உக்காந்தேன். பசங்களுக்கு போத்துர அரைத்துண்டு கூட இல்ல. ஷேவிங் பண்ற டர்க்கி டவல காலருக்கு பின்னாடி சொருவினதும் கண்ணு தளும்பிருச்சி. அதையும் விழுங்கிகிட்டு ஷார்ட்டா வெட்டுங்கன்னேன். பார்க்காட்டியும் களுக்குன்னு சிரிச்ச மாதிரி இருந்திச்சி.

ரெண்டு நிமிசம்தான் கர்ர்ர்ர்ர்ர்ர்ரக்சிக் கர்ர்ர்ர்ர்ர்ரக்சிக்குன்னு கேட்டுச்சி. அப்புறம் வெறும் சிக் சிக்னுதான் சத்தம். ஓரக்கண்ணால பார்த்தேன். சீப்பால ஒரு கையில வாரிய படி ரெண்டு இஞ்சு தள்ளி வெறும் கத்திரிய வெட்டிக்கிட்டிருந்தாரு.

அப்புறம் ஷேவிங்? அப்படின்னாரு. ஆடிப்போயிட்டேன். ஆனாலும் வேணாங்கன்னேன். அப்புறம் கத்திய வெச்சி காதோரம், புருவம், மூக்கு மேலன்னு இழுத்துட்டு, கத்திரிய மூக்குள்ள விட்டு கிச் கிச் பண்ணி, இதுக்கும் மேல என்னதான் செய்யன்னு ஒரு பார்வை பார்த்தாரு.

ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன். இந்த வாட்டி குபுக்குன்னு சிரிச்சிட்டு பரிதாபமா அங்க முடியில்லைங்களேன்னாரு. அப்புறம் துண்ட உதறினாரு சரி. நான் கேட்டனா? பின்பக்கமா ஒரு கை கண்ணாடிய வாகா புடிச்சி திருப்தியான்னு ஏன் கேக்கணும்? அதயும் விட, இறங்கினதும் சீப்ப நீட்டினா என்னா நக்கலு அது?

சரியா அந்த நேரம்தான் பக்கத்து ஆளுக்கும் முடிய இறங்கி 50ரூ நீட்டினாரு. கீழ பார்த்தா கூடை முடி. நான் எவ்ளோன்னேன். அசராம அம்பது ரூபான்னு சொன்னாரு. ஓரக்கண்ணால பார்த்தேன். ஒரு கைப்பிடி தேராது. ஆனாலும் ஒரு பேச்சு பேசாம அம்பது ரூபா கொடுத்துட்டு டிப்ஸா அஞ்சு ரூபா கொடுத்தேன்.

இல்லைங்க பரவால்ல வேணாம்னு சொன்னா விம்மி விம்மி அழத் தோணுமா தோணாதா? தினத்தந்தி பிரிச்சா லேசர் டெக்னாலஜில வீவிங் பண்றோம்னு சிகிச்சைக்கு முன் பின் படமெல்லாம் போட்டிருந்தத பார்த்ததும் கொஞ்சம் சபலம்தான்.

ஆனாலும், மண்டைக்குள்ள களிமண் இருந்தாலும், மணல் இருந்தாலும் பரவால்லைங்க, மொட்டப் பாறையில பயிர் விளைஞ்சாலும் மயிர் விளையாதுன்னு சொல்லிட்டா தாங்கற சக்தி எனக்கில்லை.

இதோ! இப்போ இருக்கிற முடி வளர்ந்துடிச்சி. காத்தில பறந்து மூஞ்சில அடிக்குது. ஆனாலும் இந்த வாட்டி போனா நின்ன வாக்குலயே ரெண்டு கிச் கிச் பண்ணி முடிஞ்சி போச்சி போங்கன்னு சொல்லிருவாங்களோன்னு அந்த பீலிங் தாங்க முடியல.

ஆனாலும் பதிவுலகம் பலருக்கு பல விதத்துல ஆறுதல். எனக்கு மட்டும் இல்லாம போகுமா? ஒருத்தர பார்த்து முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...இஃகிக்கீன்னு சிரிச்சுக்குவேன். இன்னொருத்தரு அட ஏங்க பாலாண்ணே! நானெல்லாம் இந்த கொடுமைக்கு அப்பாயின்மெண்ட் வெச்சி, போய்ட்டு அஞ்சு மடங்கு டிப்ஸ் குடுக்கறேன்னு ஆறுதலா சொல்றா மாதிரி இருக்கும். நெம்ப நன்றி மாப்பூஸ்.

Tuesday, April 27, 2010

பதிவராமை..தலைப்ப மாத்திச் சொல்லு...

(டிஸ்கி: ஆஃபீசுல ஆணி அதிகமில்ல. இருந்தாலும் அடிக்கிற வெயில்ல புடுங்கற மூடு இல்ல. சொந்தமா யோசிக்க பொறுமையில்ல. சுத்தி வந்தப்ப நினைச்சத போடுறது தப்பில்ல. சோ.. ஸ்டார்ட் த மீஜிக்)
கதிர்: வலைமனை:- மாறுதல்--ம்கும். ரெண்டு மூணுதடவை டெம்ப்ளேட்டு அப்பப்ப ப்ரொஃபைல் ஃபோட்டோதான் மாறுச்சு. என்னதான் சீறுனாலும் எவனாவது மாறினானா?

அறிமுகம்: நிஜமாய் வாழ கனவைத் தின்னு: தினம் பாதி தலகாணி தின்னா உடம்பு என்னத்துக்காறது.

ப்ரொஃபைல்: ஏனுங்க இப்ப இருக்கிற ஃபோட்டோ எதுனாச்சும் கலியாணத்துல எடுத்ததா? மாப்புள பயல பார்த்து எங்களல்லாம் பார்த்து கூட திருந்தாம இப்பிடி இளிச்சிக்கிட்டு அடிமையாவுறியேன்னு அந்த பரிதாப லுக்கு என்னா லுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமைபேசி: வலைமனை: ‘மணி’யின்பக்கம். அது அப்ப. இப்ப அமெரிக்காவ விட தேசாய் கிட்ட துட்டு அதிகம்.

ப்ரொஃபைல்: எத்தன நாளுதான் பின்னாடி கைய கட்டிகிட்டு புள்ளைங்கள விளையாட விடாம சறுக்கு மரத்த மறிப்பீங்க. தள்ளி நில்லுங்க சித்த.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகர்: வலைமனை:  ‘வாழ்க்கை வாழ்வதற்கே.’ பாவி மனுசா இடுகைக்கு இடுகை ஒன்னொன்னா தற்கொலை பண்ணிக்க வெச்சி சாவடிச்சிட்டு பேரு வைக்கிறாரு பேரு

எப்புடி எப்புடி? ‘நிறைய படித்து குறைவாய் எழுதி ’. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல. வலை மனை அறிமுகமே ஒன்னரை முழத்துக்கு எழுதிட்டு இது வேற.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி: வலைமனை: சி@பாலாசி. இங்க பாரு ராசா. இப்புடி இருந்தா எல்லாம் பார்த்துட்டு போய்ட்டே இருப்பாய்ங்க. லுக்கு வேணும்மா லுக்கு. லுக்@பாலாசின்னு வைய்யி. ஆனிமாசம் கலியாணம் (கடோசி முகூர்த்தம். அப்பதான் அடங்குவ)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரோஸ்விக்: வலைமனை: திசைகாட்டி . ஒன்னுமே எழுதாம எல்லா பக்கமும் காட்டிக்கிட்டு ஒரு கம்பம். அது மேல ஒரு சேவல் கூட இல்ல. என்னா டகல்பாஜி வேலையிது?

வலைஅறிமுகம்:.... ‘தாங்கிக் கொள்ளுங்கள் தங்க மனதுடன்’. வடிவேலுவ உரசினா மாதிரி செங்கல வெச்சி தேய்க்கவா. நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதிய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நசரேயன்: வலைமனை: என் கனவில் தென்பட்டது. கனவுலகூட தென்பட்டதுதானா. சிக்கினதுன்னு மாத்திபாருங்க. துண்டுக்கு வேலை வரும்.

வலை அறிமுகம்: .... ‘நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் வரை உயரும்’. ஏன் நாசால பேசி ராக்கட் உடாமலே சந்திரன் செவ்வாய்க்கெல்லாம் போய்க்கலாம்னு லீஸ் போட்டுடீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தினேஷ்: வலைமனை: ‘முகிலனின் பிதற்றல்கள்’ முகிலன்: ஏங்க? எல்லாம் பெரியவங்க! தினம் இவ்வளவு பேரு வந்து போறீங்க. அப்பா பேரு சொல்லி பசங்க பொட்டி கடையில ஆட்டைய போட்டா அது அழகு. எம்பேர வெச்சிகிட்டு எங்கப்பா பிதற்றினா எடுத்து சொல்லாம அருமை அருமைன்னு பின்னூட்டம் போடுறீங்களே! வெக்கமாயில்ல. அவ்வ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிஜி: வலைமனை: மணிஜீ (எ) தண்டோரா: அண்ணே! என்னா இந்த வெயில் காலத்துல மார்கழிமாச பனில நனைஞ்சா மாதிரி கொஞ்ச நாளா சொத்து சொத்துனு கேக்குது. வார இழுத்து புடிச்சி காச்சுங்கண்ணே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
TVR: வலைமனை: தமிழா தமிழா... ஆரம்பிச்சப்போ பெருமையா இருந்திருக்கும். இப்போ கொஞ்சம் சலிச்சிண்டு சொல்றாமாதிரி ஆக்கிப்புட்டானுவ இந்த அரசியல் வியாதிங்க.

அறிமுகம்:  ‘ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்’
ஒன்று எங்கள் ஜாதி : பதிவர் ஜாதி
ஒன்று எங்கள் நீதி : கவுஜக்கு எதிர் கவுஜ இடுகைக்கு எதிர் இடுகை
நம்மால் முடியாதது யாராலும் முடியாது: ஐ. நான் சொல்லமாட்டனே.
யாராலும் முடியாதது நம்மால் முடியும்: பின்னூட்டமும் காசு வாங்காம ஓட்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுசரி: வலைமனை: முரண் தொடை : தமிழ்பட வில்லன் மாதிரி கன் நீட்டிகிட்டே இருக்குபாஸ். புல்லட்தான் எப்பவோ ஒன்னு வருது. LMGயாவது போடுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரியா: வலைமனை: கலகலப்ரியா.. நீ மட்டுமா நாங்களுந்தான். ரெம்ப நாளாச்சி கலகலப்பே காணோம்.

அறிமுகம்: லக்கலக்கலக்கலக்க..ம்கும். அப்புடியாவது ஒன்னு ரெண்டு போட்டா தேவலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானம்பாடிகள்: வலைமனை:  ‘பாமரன் பக்கங்கள்’. இப்புடியே சொல்லிட்டு திரியற வானம்பாடி! என்னைக்கோ உன்ன சூப்பு வச்சிறப்போறாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(டிஸ்கிக்கி: மக்கா. அல்லாத்தையும் புடிச்சி எழுதிட்டேன். இனிமே மொக்க தேத்த வழியில்ல. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி புதுசா ஏதாவது வழி பண்ணுங்க. புண்ணியமா போவும். ச்ச்ச்ச்செரியா?)
~~~~~~~~~~~~~~~~~