Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Monday, August 30, 2010

மத்தாப் பூ...

இரயில்வேத்துறையில் அப்ரெண்டிஸ் சர்வீஸ் என்ற ஒன்றிருப்பதை பலரும் அறிவார்கள். அது தொழிற்பயிற்சி மட்டுமே, வேலை உத்தரவாதமில்லை என்பதும் அறிந்ததே. ஆனால் Special Class Railway Apprentices என்ற ஒரு பயிற்சி குறித்து பரவலாக அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது பி.யூ.சி/+2 படித்தவர்களுக்கான அனுமதித் தேர்வு. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஜமால்பூரிலுள்ள இந்திய இரயில்வே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெகானிகல் அண்ட் எலக்ட்ரிகல் எஞ்சினீரிங் எனும் பயிற்சிக் கல்லூரியில் நான்காண்டு கடும் பயிற்சிக்குப் பிறகு Indian Railway Service of Mechanical Engineer பிரிவில் Class I அதிகாரியாக இரயில்வேயில் பணியில் சேரலாம். இந்தப் பயிற்சித் திட்டமானது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியின் செமஸ்டர் திட்டப்படி நடக்கும். 

பயிற்சிக்காலத்தில் கிட்டத்தட்ட மாதம் ரூ 12,000க்கும் அதிகமான ஸ்டைபண்ட், மருத்துவ உதவி, பாஸ் மற்றும் பி.டி.ஓ என்ற சலுகையும் பெறலாம். இதற்கான நுழைவுத் தேர்வு குறித்த தகவல் இங்கே 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புறாக்கூண்டு போன்ற ஓர் ஒண்டுக் குடித்தனத்திலிருந்து, ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்கு ரெண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்பது கனவுலகம். கடனை உடனை வாங்கி, நகை நட்டை விற்றோ அடமானம் வைத்தோ ஓர் அளவான ஃப்ளாட் வாங்கலாம் என்று போனால், தங்க முலாம் பூசிய குழாய் (வருவது கடலிலிருந்து நேரடியான உப்புத் தண்ணீர்), க்ளோஸ்ட் லாஃப்ட், இன்ன பிற லக்சுரி அயிட்டங்களைச் சேர்த்து சதுர அடி ரூ 3000-4000 என்று ப்ளானில் பெரிய பங்களா மாதிரி தோற்றம் தரும் ஃப்ளாட்டை வாங்கி, குடியேறிய பின், ஒரு பெட்ரூம் ஸ்டோர் ரூம் ஆக மாற, பழையபடி புறாக்கூண்டு போலவே நெருக்கடியாய் அமைந்து விடும்.

சிலவோடு சிலவென்று இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி ஃபர்னிச்சர் என்று போனால், அசல் தேக்கு என்று ஏமாற்றி விற்கும் மரச் சாமான்களும், உரிந்து வரும் சீன ஃபர்னீச்சர்களும் ஏமாற்றக் காத்திருக்கும். இருக்கும் இடத்தை எவ்வளவு அழகாக, நேர்த்தியாக பயன்படுத்தி வித விதமான ஃபர்னிச்சர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நம்ம ஊரில் மட்டும் ஏன் இப்படி யோசிப்பதில்லை. அவ்வ்வ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம கவுண்டர் காந்தக் கண்ணழகி என்று அலப்பறை செய்யும் காட்சி கவனமிருக்கும்.லண்டனில் ஒரு அம்மணி நிஜமாகவே காந்தசக்தி கொண்ட உடல் வாகாம். சின்ன வயதிலிருந்து கடிகாரம் கூட ஓடாமல் கெட்டுப் போகுமாம். டி.வி., ம்யூசிக் ஸிஸ்டங்கள் கெட்டுப் போவது ஒரு புறம், கடை கண்ணிக்கு போனால், எடை போடும் எந்திரங்கள் ஆகியவை தாறுமாறாக அம்மணிக்கு எத்தனை சங்கடம். 45 நிமிடம் இந்த காந்த சக்தி இருக்குமாம். செம்பு, பித்தளை, இரும்பு எல்லாம் ஒட்டிக் கொள்ளுமாம். ஹூம். நமக்கு இந்த சக்தி இருந்தால் பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம். 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமால ஹீரோவா வாரவங்க எல்லாம் நிஜத்தில அப்படி இருக்கணுமா என்ன? நாமளுந்தான் ப்ளாக் வெச்சிருக்கோம். எப்புடியெல்லாமோ பின்னூட்டம் வருது. வடிவேலு மாதிரி வந்தல்ல, அடிச்சியா போய்க்கேயிருன்னு நம்ம வேலைய பார்க்கிறோம்ல. இந்த அமிதாப்பு பதிவுல எவனோ டாஆஆர்ச்சர் பண்றான்னு சின்னப்புள்ளத்தனமா போலீசுக்கு போயிருக்காரு. ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேச்சே பாட்டுப் போலிருக்கும் மலையாள மொழியில் நான் ரசித்த நாடன் பாடல் எனும் நாட்டுப்புறப் பாடல். உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்ய ஒருவன் வருவான் என ஆறுதலாக தோழியர் பாடி, காதில் கழுத்தில் கையில் காலில் நகையில்லாவிடினும், அழகில்லாவிடினும், உன் அழகான மனதை நாடி வருவான் என்று பாட, திருமணம் செய்ய வருபவனுக்கு காசு, பணம்தான் முக்கியம் என அந்தப் பெண் பாட மனதை ஏதோ செய்யும் பாடல். ஆடும் பெண்களின் உற்சாகம், பாடும் குரலின் அழகு..
அறிமுகப்படுத்திய மஹேசுக்கும் பகிர்ந்த ப்ரியாவுக்கும் நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..
கடந்த வார நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், பாராட்டி ஊக்குவித்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
__/\__

Monday, August 23, 2010

நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு...

இந்த வாரம் நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ் மணத்துக்கு நன்றி!
 ~~~
ஏன்னு எனக்குள்ளயே கேட்டு பதில் கிடைக்காத கேள்விகள் இவை. பதில் சொல்லிட்டு சிரிங்கப்பு.

1.போற வழியில கோவில் தென்பட்டா, தாண்டி போக மனசில்லாம, செருப்ப அவிழ்த்துட்டு, கண்ணு மூடி வேண்ட்ற நேரத்துல ஆட்டய போட்றுவானுவன்னு சாமிய அதுக்கு கூட நம்பாம கட்டை விரல்ல செருப்பு முனைய அழுத்திக்கிட்டு, சாமி எனக்கு அதக்குடு, இதப்பண்ணு, உன்னயத்தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன்னு உருகி வேண்டுனா மட்டும் இவன நம்பறதுக்கு சாமி என்ன கேனையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.கண்ணு தெரியமாட்டிங்குதுன்னு டாக்டர் கண்ணாடி எழுதி குடுத்தா, ஸ்டைலு போயிரும்னு கண்ணுக்குள்ள ஒட்டுற கண்ணாடி ஒட்டிக்கிறவைங்க 50ரூ கூலிங்க்ளாஸ் மட்டும் ராவுல கூட போட்டுகிட்டு ஸ்டைல் காட்டுறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.ரெண்டாயிரத்து ஐநூறு குடுத்து காது கேக்குற மிசினு வெச்சிக்கிட்டா அவமானம்னு காதுக்குள்ள தெரியாம வைக்கிற மிசினு இரவத்தி அஞ்சாயிரம்னாலும் வாங்குறவைங்க, காதுல பனை வண்டு (அதாங்க ப்ளூடூத்) அத்த சொருவிட்டு அலையிறாங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4.ஒரு இடுகை முழுசும் சினிமா விமரிசனத்துல அது நொட்டை இது நொள்ளை, லாஜிக் இல்லைன்னு திட்டிட்டு, ஒரு பாட்டுல ஒரு வரிக்கு நாலு நாட்டுல எட்டு உடை மாற்றின்னு அபத்தமா வந்தாலும் அந்தப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அபாரம்னு எழுதுறாய்ங்களே, எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5.டூ வீலர்ல போறவங்க ஹெல்மெட் போட்டா நல்லது. அதுவும் பின்னாடி உக்கார்ந்து போறவங்க போட்டே ஆகணும்னு கரடியா கத்தினாலும், போலீசுக்கு மாமூல் குடுக்கணுமேன்னு பயந்து பின்னாடி உட்கார்ந்து போற மனைவி அத சுமந்துகிட்டு, பேச்சு குடுத்துட்டே போறாய்ங்களே தவிர, போடுங்கன்னோ இல்ல போட்டுக்கிட்டோ போக மாட்டங்குறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
6.கிட்டத்தட்ட கால்வாசி சினிமா எடுக்குற காசுல விளம்பரப் படமெல்லாம் எடுக்குறாய்ங்களே. வியாவாரம் நல்லா போகுறதால இப்புடி செலவு பண்ணி எடுக்குறாய்ங்களா இல்ல இப்புடி எடுத்து விளம்பரம் பண்றதால வியாவரம் பிச்சிக்கிட்டு போகுதா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
7.காசு வெட்டாம இங்க லைசன்ஸ் வாங்க முடியாதுன்னு தெரிஞ்சும், தானும் அப்படித்தான் காசு வெட்டி லைசன்ஸ் வாங்கிட்டும் யாராவது மேல இடிச்சிட்டாலோ, இடிக்கிறா மாதிரி வந்தாலோ ‘உனக்கெல்லாம் எப்புடி லைசன்ஸ் குடுத்தாய்ங்கன்னு’ கூசாம திட்டுறாய்ங்களே! எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
8.ஏதோ நோவுன்னு டாக்டர்கிட்ட போனா அவரு ஸ்கேன், எம்.ஆர்.ஐன்னு பாதி சொத்துக்கு வேட்டு வெச்சிட்டு உனக்கு ஒன்னும் இல்லப்பான்னு மெடாசின் குடுத்தா இத்தோட போச்சேன்னு சந்தோசப்படாம, ரூ 50000 அனியாயமா போச்சுன்னு புலம்புறாய்ங்களே ஏன்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
9.ரேஷன் கார்ட் வாங்க போனா வூட்டு அட்ரசுக்கு ப்ரூஃப் கேக்குறானுவ. பேங்குக்கு போனா ரேஷன் அட்டை ப்ரூஃப் கேக்குறானுவ. PAN கார்ட் வாங்கப் போனா இன்கம்டாக்ஸ் காரன் பேங்க் விவரம் கேக்குறான். பாஸ்போர்ட் வாங்கப் போனா PAN கார்ட் விவரம் கேக்குறான். அப்புறமெதுக்கு போலீஸ் வெரிஃபிகேஷன்னு ஊட்ட தேடி போலீச அனுப்பி மாசக்கணக்கா இழுத்தடிக்கிறானுவ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
10.ஒரு சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொன்னா நம்பாம செகண்ட் ஒபினியன் தேர்ட் ஒபினியன் வாங்கறது சரி. மெஜாரிடி பார்த்து வேற வழியில்லைன்னு ஆனதுக்கப்புறம், முதல் டாக்டர்கிட்டயே சர்ஜரிக்கு போறாய்ங்களே. ஏங்க நீங்களும் வந்து  சரியா பண்றாரான்னு பார்த்துக்குங்கன்னு மத்த டாக்டருங்கள கேக்காம இப்ப மட்டும் அந்த டாக்டர நம்புறாய்ங்களே எப்புடி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~