Sunday, June 13, 2010

இரங்கல்

நேற்றைய காலை ஓர் அதிர்ச்சியுடன் தொடங்கியது. பின்னிரவில் சிரித்தபடி பேசி விடைபெற்ற சிங்கை பிரபாகரின் உடைந்த குரல் பதற வைத்தது. 

ஆம்! இரண்டு வாரங்களுக்கு முன் தொலைபேசியில் பேசியபோது முன்பின் அறிமுகமில்லாவிடினும், வாஞ்சை கலந்த மரியாதையோடு ‘அண்ணன் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்காங்கைய்யா, பேசியதில் மிக்க மகிழ்ச்சிங்கைய்யா’ என்று உரையாடிய, பிரபாகரின் இடுகை மூலம் நம் அனைவருக்கும் அறிமுகமான திவாகர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என அறிந்தபோது நம்பவே முடியவில்லை.

மூளை ரத்தக் கசிவு, இரைப்பை செயலின்மை காரணங்களால் தம்பி திவாகர் பிரபாகரின் குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். 


திவாகர்

பிரபாகருக்கு என்ன ஆறுதல் சொல்ல? தொலை பேசியில் பேசும்போதெல்லாம் ஒரு முறையாவது “தம்பி இருக்கான்யா! அவன் எல்லாம் பார்த்துக்குவான்யா” என்று தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற சொலவடையை வாழ்க்கையாய் வாழ்ந்தவனுக்கு என்ன ஆறுதல் சொல்ல? தந்தையை இழந்து வாடும் மூன்று சிறுமொட்டுக்களுக்கு என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும். 

ஆனாலும், இந்த நிலையில் இச்சிறுவயதில் இறைவனடி சேர்ந்த அந்த நல்லாத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் பிரபா அவர்களின் குடும்பத்துக்கு நம் ஆறுதலையும் சொல்லிக் கொள்வோம்.

 “இன்றைய இழப்பைத்தாண்டி எதையும் அறிவது கடினம்
  இனிய நினைவுகள் உன்னை அமைதிப் படுத்தும் நண்பா”

மீண்டு வா பிரபாகர்! திவாகர் உன் எழுத்துக்களில் உயிரோடுதான் இருக்கிறான். 

 உன் இழப்பின் வேதனையோடு
வலையுலக நண்பர்கள்.

75 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரபா..வார்த்தைகளால் ஆறுதல் சொல்லத்தான் முடியும்..ஆனால் ஆறுதலை காலம்தான் உங்களுக்கு அளிக்க முடியும்..
மனம் தளராதீர்கள்..:(((

Raju said...

அண்ணன் பிரபாகர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வருத்தமாக உள்ளது.
:-(

Unknown said...

நாம் மிகவும் நேசித்த ஒருவரை இழக்கும்போது இருக்கும் வலி ஆயுசுக்கும் இருக்கும் ..
என்ன சொல்லி ஆறுதல் சொல்ல ..
கண்ணீருடன்.. என் அஞ்சலியும் ...
..

யூர்கன் க்ருகியர் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

Jerry Eshananda said...

ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

Ahamed irshad said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என் சார்பாக...அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...

துளசி கோபால் said...

வருந்துகின்றோம்.

எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன் நான் said...

நேற்று பிரபாவை விமான நிலையத்தில் நானும் சத்திரியனும் வழியனுப்பி வைத்தோம்... அப்போது பிரபா உடைந்த நிலையில்... கண்ணீர் மல்க... “தம்பி பிழத்துக்கொண்டாலே போதும்... இல்லையேல் இதே நிலையில் இருந்தாலும் போதும்... இதை விட வேறு சந்தோசமே இல்லை” என்றார்....
ஆனால் காலன் வென்றுவிட்டான்.

பிரபாவிற்கும் குடும்பத்தினருக்கும்... எனது ஆழ்ந்த இரங்கல்.

அப்பாவி முரு said...

இழப்பு., ஈடுசெய்ய முடியாதது.

ஆறுதல்., மருந்திடுவது.

என்னால் முடிந்தது மருந்திடுவது மட்டுமே.

அண்ணாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இறங்கள்கள்

:((((

எறும்பு said...

இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையவும் பிராபாகர் மற்றும் அவரின் குடும்பத்தினர் இந்த துயரிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன்..

:((

எறும்பு said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

புலவன் புலிகேசி said...

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா.........

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

முத்துகுமரன் said...

ஆழ்ந்த இரங்கல்கள். பெரும் துயரில் இருந்து மீண்டுவர பிரபாகருக்காய் எனது வேண்டுதல்கள்...

Subankan said...

அவரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கிறேன்.

Anonymous said...

அஞ்சலிகள்.

ஷர்புதீன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

சிநேகிதன் அக்பர் said...

ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

பிரபாகர் காலம்தான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் சக்தியை கொடுக்க வேண்டும்.

காமராஜ் said...

அன்புத்தம்பி பிரபாகருக்கும் குடும்பத்தாருக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்.

என்ன சொன்னாலும்
வலிதீராது.
எல்லோரும் அருகிருந்தால்
வலி தெரியாது.

நாங்கள் இருக்கிறோம்.

சென்ஷி said...

:(

இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையவும் பிராபாகர் மற்றும் அவரின் குடும்பத்தினர் இந்த துயரிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை பிராத்திக்கிறேன்..

Radhakrishnan said...

பிரபாகர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கிறேன்..

Ramesh said...

எமது அனுதாபங்கள் பிரபாகர் குடும்பத்துக்கு. ஆறுதல் மொழிகள் கொணர்கிறோம்...
இதய அஞ்சலி

உண்மைத்தமிழன் said...

என்னுடைய வருத்தங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..!

cheena (சீனா) said...

அருமை நண்பர் பிரபாகர் மற்றும் திவாகர் குடுமபத்தாரூகு ஆழ்ந்த அனுதாபங்கள் - இழக்க முடியாத இழப்பு - இழந்து வாடும் குடும்பங்கலுக்கு ஆறுதலை காலம் அளிக்க வேண்டுகிறேன்.

கௌதமன் said...

ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சூர்யா ௧ண்ணன் said...

பிரபாவிற்கும் குடும்பத்தினருக்கும்... எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

ஆ.ஞானசேகரன் said...

பிரபாவிற்கும் குடும்பத்தினருக்கும்... எனது ஆழ்ந்த இரங்கல்.


ம்ம்ம் ஒன்னும் சொல்ல முடியவில்லை... அடிமேல் அடியா... பிரபாவின் மனம் தாங்கும் சக்தியை பெறவேண்டும்..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.

பா.ராஜாராம் said...

கண்ணீர் அஞ்சலிகள்.. :-(

பிரபா மற்றும் குடும்பத்தினர் இத்துயரில் இருந்து மீள ப்ராப்திக்கும்..

ஆ.ஞானசேகரன் said...

உன் இழப்பின் வேதனையோடு
வலையுலக நண்பர்கள்.

க ரா said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

செ.சரவணக்குமார் said...

அதிர்ச்சியாக இருக்கிறது.

எனது கண்ணீர் அஞ்சலிகள்.

பழமைபேசி said...

மிக வருத்தமாக உள்ளது; ஆழ்ந்த இரங்கல்கள்!!

Hai said...

மரணம் தரும் வலி மிகக் கொடியது.
வார்த்தைகளால் ஆற்ற இயலாது.
எனினும் வார்த்தைகளே என்னிடம் உள்ளன.ஆழ்ந்த இரங்கல்கள்.

ரிஷபன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்..

கானா பிரபா said...

மிகுந்த கவலையோடு இரங்கலைப் பகிர்கிறேன். அவரின் படம் பார்த்ததும் இன்னும் மனதை கனக்கச் செய்கிறது

Ashok D said...

பிராபகர் மனதிற்கும்... திவாகர் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்

பின்னோக்கி said...

சிறு வயது மரணம் கொடுமை. துன்பத்தை தாங்கும் சக்தியை, இறைவன் அளிப்பாராக. அஞ்சலிகள். :(.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

ஆழ்ந்த இரங்கல்கள்

ஈரோடு கதிர் said...

மனம் முழுதும் வேதனையோடு, அமரர். திவாகரின் ஆத்மா சாந்தியடையவும், பிரபாகரின் மனது இழப்பிலிருந்து மீண்டு வரவும், மனது முழுதும் தேங்கி நிற்கும் கண்ணீரோடு எனது வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் சமர்பிக்கிறேன்.

அன்புடன் அருணா said...

ஆன்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகளும்,

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தனயனை இழந்த தாய்க்கும், தம்பியை இழந்த அண்ணனுக்கும், தந்தையை இழந்த குழந்தைகளுக்கும், எல்லாவற்றிக்கும் மேலாய் தன் வாழ்வையே இழந்த பெண்ணுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

ரோஸ்விக் said...

வார்த்தைகள் இல்லை பாலா அண்ணே... :-(

அவரை அழைக்கக்கூட திராணியற்று இருக்கிறேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன சோதனை இது... ஓ.. பிரபா மனதை தளரவிடாதீங்க.. எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கு மனஅமைதியையும், உங்க தம்பிக்கு ஒரு நல்ல நிலையையும் தந்தருள்வானாக என்று அனைவரும் பிராத்திப்போமாக...ஆமீன்.

திவாகரின் குடும்பத்துக்கு மனநிம்மதியையும் நல்ல நிலையையும் எல்லாம்வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.. ஆமீன்.

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்.

குடுகுடுப்பை said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

நேசமித்ரன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்

பிரபா மனம் தளராதீர்கள்

அகல்விளக்கு said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

திவாகர் அவர்களின் ஆத்மா அமைதியடையட்டும்.

அவரை இழந்து துயரத்திலிருக்கும் குடும்பத்தாருக்கும், அன்பு பிரபாகர் அவர்களுக்கும் மனஉறுதி கிடைக்கட்டும்...

மீண்டு வாருங்கள் பிரபாகர் அண்ணா... அவர் இன்னும் நம்முடன்தான் இருக்கிறார்...

geethappriyan said...

அட,கடவுளே,
கேட்கும் போதே பதைபதைக்கிறது ஐயா,
என் இரங்கல்களும் வருத்தங்களும், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

ஜெட்லி... said...

ஆழ்ந்த இரங்கல்கள்....பிரபா அண்ணா...

vasan said...

சோக‌ம். இள‌வ‌ய‌து இழ‌ப்பு, இறைவ‌ன் இருப்பையே?
ஆழ்ந்த‌ அனுதாப‌ங்கள்.

Menaga Sathia said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!!

சத்ரியன் said...

எப்படி... சொல்லட்டும்...! வாழ்வின் மேல் வெறுப்பாய் இருக்கிறது.

Anonymous said...

என்னுடைய வருத்தங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

பனித்துளி சங்கர் said...

அறிந்த நானே துடித்துப்போனேன் நண்பர் பிரபாகரின் மனநிலை எப்படி இருக்குமோ !
பிரபாகர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

Paleo God said...

இன்று மாலைதான் விவரம் அறிந்தேன். மிகவும் வேதனையாக இருக்கிறது பிரபா

:(


ஆழ்ந்த இரங்கல்கள்...

VR said...

நெஞ்செல்லாம் ஒரே கனமா இருக்கு பாலா அண்ணே. நல்லவனுக்கு இவ்வளவு சோதனையா?

Jey said...

உற்றவர் உயிர் இழப்பின் வலி அதிகமானது.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கலகலப்ரியா said...

என்ன சொல்றதுன்னு புரியல... தைரியமா இருங்க அண்ணா...

தாராபுரத்தான் said...

இதய அஞ்சலி.

Chitra said...

May his soul rest in peace. We pray for the peace, comfort and strength for the family members and friends.

Cable சங்கர் said...

மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது பிரபா.. கடவுள் உங்களை மீட்டு வரட்டும்..

Unknown said...

My deepest condolences to Praba and his family..

Though I never met or talked to Divakar, I have read so many things about him through Prabha and his blog. His death is a big loss for Prabha and his family..

ஆரூரன் விசுவநாதன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

CS. Mohan Kumar said...

பிரபாகர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

க.பாலாசி said...

இன்று காலைதான் இந்நிகழ்வை கேள்விப்படுகிறேன்.. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. படிக்கும்பொழுதே கண் கலங்குகிறது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய மனதார பிரார்த்தனை செய்கிறேன். பிரபாகர் அண்ணனை எப்படி ஆறுதல்படுத்துவதென்பது தெரியவில்லை.

Venkat M said...

படிக்கும்பொழுதே கண் கலங்குகிறது.

பிரபாகர், Please take care of his family... Hope you are the biggest support to them & their future.

"Dis time will pass away" - Birbal.

மணிஜி said...

ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

ராஜ நடராஜன் said...

தாமதமான பின்னூட்டம்:(

எனது ஆழ்ந்த வருத்தங்கள் பிரபாகர்.

நண்பன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

சாமக்கோடங்கி said...

அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

ஸ்ரீராம். said...

அதிர்ச்சியாய் இருக்கிறது... மிகக் கடினமான இந்த தருணங்களைக் கடக்க திவாகர் குடும்பத்துக்கு கடவுள் வல்லமையைக் கொடுக்கட்டும்.

தெடாவூர் அன்பு said...

திவாகர்.. என் ரத்தத்தின் ஒவ்வொரு செல்லிலும் கலந்துள்ள ஆத்மா.. நான் பிறந்தது முதலாய் என் நண்பன்.. அவனுக்காக உலகின் எத்தனையோ பகுதியில் இருந்து துக்கத்தில் பங்கெடுத்த அனைவரையும் நினைத்து நெகிழ்கிறேன். என்னைப் பொருத்தவரை அவன் இருந்தான்.. இருக்கின்றான்.. எப்போதும் இருப்பான்.. இரு மாதங்களுக்கு முன் திவாகரிடம் நான் பேசிய வார்த்தைகள் இன்னும் என் மனத்திரையில் ஓடி கொண்டே இருக்கிறது.. “திவாகர்.. என் ஆயுள் வரை கண்டிப்பாய் நீ இருப்பாய்..”

தவழ்ந்த காலம் முதல் இன்றைய இந்த நிமிடம் வரை எனக்கு தெரிந்த ஒரே நண்பன்.. அதுவும் பெயரளவில் அல்ல.. உண்மையில் உற்றுழி உதவிய உண்மையான நண்பன் என் திவாகர்..