Friday, April 16, 2010

பதிவர் தத்துவம்ஸ்...

டிஸ்கி: (ரண்டு நாளா ஒரே அழுவாச்சி. வீக் எண்ட்ல எதுக்கு மூட கெடுக்கணும்னு இந்த மொக்கை. ஒவ்வொருத்தரு வலைப்பூவிலயும் என்னா தத்துவம்டா சாமீ!)

பழமைபேசி:/எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!/

என்னதான்  இரவிரவா வலைமேஞ்சாலும் நித்திரைக்கு போறப்ப ஜிமெயில்ல ஏதாச்சும் பின்னூட்டமிருக்கானு பார்த்து அவுத்துவுட்டுதான் தூங்கணும்.

மணிஜீ: /நானும் கொஞ்சம் பேசுகிறேன்..../

தாடிக்குள்ள வாயசையறது தெரியமாட்டங்குதாங்ணா.

பின்னோக்கி: /பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்/

பின்னாடி பார்த்துக்கிட்டே போய் ஒரு வாட்டி மேன்ஹோல்ல விழுந்தப்புறம் திரும்ப அந்த தப்பு நடக்குமா? எப்புடீஈஈஈ

ஸ்நேக் பிரபா: /பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்./

ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?

பலாபட்டறை ஷங்கர்: /பலா என்றால் இனிப்பு. பட்டறை என்றால் பட்டறைதான் - விளக்கம் = ஷங்கர் (நாந்தான்). /

விளக்கத்துக்கே விளக்கம் அடைப்புக்குள்ளயாம்யாம்யா

கதிர் ஈரோடு: /நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்/

ஓஹோ. கட்டைன்னும் சொல்லலாம் மரம்னும் சொல்லலாம். நகரத்துல இருக்கிறப்ப காதல் கவுஜ கிராமத்து பக்கம் போனா மரம் வளர்க்கற இடுகை. என்னா வில்லத்தனம்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீ

பாலாசி: /சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை./

தபார்ரா. உள்ளூரு ஓணான் இல்லாம அசலூரு ஆந்தையெல்லாம் அலறுதாம் பாலாசி வாரான் கட் அண்ட் பேஸ்ட் போடன்னு ரவுசப்பாரு.

நசரேயன்: /தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு/

ம்கும். துண்டு போடத் தெரியலைன்னாலும் இடுகை போடுறதுல என்னா உசாரு! தப்பெழுதுவியான்னு முட்டிய தட்டுவாங்கன்னு தடிய எடுக்க கூடாதாம்.

ஜெட்லி & கோ: /நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து, படித்து, கேட்டு ரசித்தவற்றை இங்கே பகிர்வோமாக./

பாக்குறவரு ஜெட்லி, படிக்கிறவரு சாரு சங்கர், கேட்டு சொல்றவர் சித்துவா?

சேட்டைக்காரன்: /ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?/

இப்புடி போட்டா மட்டும் சொல்லுன்னு கேட்றுவமாக்கும்.

துபாய் ராஜா: /இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு./

ஃபாலோயர் விட்ஜட்ட காணோமாம். இப்புடி போட்டா சரியா போச்சா?

செந்தில்வேலன்: /இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று../

ஊறுகா போடணும்னா கனி உதவாதே! ஒதைக்கிற மாட்ட ஊசி போட்டுதானே கறந்தாவணும்.

சூர்யா கண்ணன்: /இப்பொழுது "கம்ப்யூட்டர்" விற்றுக் கொண்டிருக்கிறேன், அவ்வப்பொழுது கீரையும் கூட..,/

கம்ப்யூட்டர் புரியாத மண்டையில கீரையாவது வளத்துக்கன்னா பாஸ்?

கார்த்திகைப் பாண்டியன்: /மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே.../

இதத்தான் பொட்ட்டு வாஆஆங்கறதுன்னு பார்த்திபன் அண்ணா சொல்லிக் குடுத்துட்டாருல்ல. சிக்கமாட்டம்டியேய்.

நைஜீரியா ராகவன்: /நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்../

கார்னாலும் சரி பதிவுன்னாலும் சரி வாரம் ஒரு வாட்டி ஸ்டார்ட் பண்ணி ஒரு ரவுண்ட் வரணும்னே. 

கலகலப்ரியா: /பாரதியின் பரம விசிறி, "ரௌத்ரம்" மட்டும் பழகிக் கொண்டிருக்கும் பயங்கரவாதி!/

ஹி ஹி! இதப்போய் நீ கரப்பான் பூச்சிகிட்ட சொல்லி மிரட்ட, அது பதிலுக்கு மீசைய ஆட்டி உன்னைய வெறுப்பேத்தி டுர்ர்ருன்னு பறந்து வந்து உன் மூக்குமேல உக்காந்துச்சின்னு வைய்யீ..ஹய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ ஹைய்ய்யோ

வானம்பாடிகள்: /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/

உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.

~~~~~~~~~~~~~~~~
Post a Comment