மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய
அடங்கொன்னியா! ஒன்னுக்கு பத்துன்னு கணக்கு வெச்சாக் கூட நீ போட்டுத்தள்ளுனது ஒரே நாள்ள எத்தனை. அந்த கணக்கச் சொல்ல மாட்டானே.
-------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரம்: கருணாநிதியை சந்திக்கிறார் நிருபமா ராவ்.
சரி சரி! அங்க எல்லாருக்கும் மறுவாழ்வு வழங்கப்படும். மீனவர் பிரச்சனை குறித்து உறுதி மொழி வாங்கியாச்சு. மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ!
-------------------------------------------------------------------------------------------------------
ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழப்பதற்கு ரணில், மங்கள மற்றும் புலி ஆதரவாளர்களுமே காரணம்: டலஸ்
இவங்களால இவ்வளவு பண்ணமுடியுது. உங்க அத்தனை பேரு, உங்க அல்லக்கைங்களால இதத் தடுக்க முடியலைன்னா, இவங்க கிட்ட குடுத்துட்டு வாத்து மேய்க்க போலாமே வெண்ணைகளா!
-------------------------------------------------------------------------------------------------------
பிரபாகரன், மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்
யா யா! புண்சேகா மசிரு கொட்டிப் போறத விடவா தமிழன் உசுரு போறது பெருசு?
-------------------------------------------------------------------------------------------------------
நல்லிணக்க ஆணைக்குழு முன் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்: செய்தி
என்ன கைய புடிச்சி இளுத்தியா மாதிரி எது கேட்டாலும், இஃப் யூ கொஸ்சன் ட குட் காஸ் யூ ஹாவ் ப்லட் இன் யுவ்ர் ஹாண்ட்ஸ்னு வெறிபுடிச்சா மாதிரி கத்தி இருப்பான்.
-------------------------------------------------------------------------------------------------------
சரத் பொன்சேகாவை ஜெனரல் என அழைக்கக் கூடாது : இராணுவப் பேச்சாளர்
பின்ன? அவரு பெசலில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: இலங்கை மீனவர் சொல்கிறார்
அய்ங்! அப்ப மீன் புடிக்கப் போய் கடல்ல கனவு கண்டுட்டு சொல்றாய்ங்களா? முதல்ல இவரு மீனவரா அரசியல் அல்லக்கையா செக் பண்ணுங்கப்பா செக் பண்ணுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------------
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு.
நியாயாம்தானே! நாள பின்ன வருமானத்துக்கு அதிகமான சொத்துன்னு வந்தா கணக்கு காட்ட வேணாமா?
-------------------------------------------------------------------------------------------------------
111 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா முடிவு
அய்ய! ஏற்கனவே கோவிந்தா! ஒன்னு கூட குறைய வாங்குங்கப்பா. இந்த நம்பர் சரியில்லை.
-------------------------------------------------------------------------------------------------------
திரைப்படத்தொழிலில் இறங்கும் முகேஷ் அம்பானி
ஏம்பா? வம்பா நீ?. எங்க ஒரு தமிழ் படம் எடு பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்
தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும். அதென்னா சின்னப்புள்ளத்தனமா விமான நிலையத்துக்கு குறுக்க நிக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------
ஊதிய உயர்வு போதாது: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு
போதை கூடத்தான் போதலைன்னு கத்துறாங்க. நீங்க கலக்காமலா விடுறீங்க?
-------------------------------------------------------------------------------------------------------
டாஸ்மார்க் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ஆமா! டாஸ்மார்க் ஊழியருக்கு ஆதரவா பேசினா ஏழைகளுக்கு எதிரில்லையோ?
-------------------------------------------------------------------------------------------------------
அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்
அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.
-------------------------------------------------------------------------------------------------------
சமூக நீதியைப்பற்றி பேச யார் தகுதி படைத்தவர்கள்: ராமதாசுக்கு கலைஞர் கேள்வி
சன் அண்ட் சன்ஸ்தான். நீங்க ஏன்யா கேள்வி கேட்டுகிட்டு. ஒரு பய இல்லைன்னு சொல்லட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------
புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்
இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?
-------------------------------------------------------------------------------------------------------
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.
ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?
-------------------------------------------------------------------------------------------------------
அசின் படத்தை வாங்க சக்தி சிதம்பரம் முடிவு
பேரு குடுக்குற சக்திதான்.
-------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழர்கள் நிலை: கண்கலங்கிய ரஜினி
ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.
-------------------------------------------------------------------------------------------------------
தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Wednesday, August 18, 2010
Sunday, August 15, 2010
கேரக்டர் - மணிக்கோனார்...
காமாச்சியப்பத்தி சொல்லிட்டு மணிக்கோனாரை சொல்லாம ரொம்பநாள் கடத்திட்டேன். மனுசன் சண்டியர். ஆளென்னமோ ஒல்லியாத்தான் இருப்பாரு. தொண்டை மட்டும் எட்டூருக்கு கேக்கும். அதுவும் எப்பொழுதாவது ஒரு சாவுக்குப் போய் சரக்கடித்து விட்டு, அவிழும் லுங்கியை ஒரு கையில் சுருட்டி, அரை நிஜார் தெரிய, அங்கங்கே ப்ரேக் போட்டு, காசித்துண்டை மறுகையில் சுழட்டி ‘ஏய்! வர்சொல்லு அவன! தில்லிருந்தா இங்க, இதோ இங்க’ என்று உட்காரப்பார்த்து விழுந்தாலும் சமாளித்து தரையைத் தட்டி சவால் விடும்போது, எதிரில் வருபவர்கள் மிரள்வது சகஜம்தானே!
அத்தனை போதையிலும் அடையாளம் மட்டும் தெரியும். ‘நீ ஏன் அய்ரம்மா பயந்துகினு போற! அந்த பேமானிய திட்றேன். நீ போம்மா’ என்று கை காட்டுவார். தெருவோரம் பயந்து ஒண்டிக்கொண்டு போகின்றவரை, ‘அய்ய! மொய்லியாரம்மா என்னா சடாய்க்கும். பயந்துனு ஓடுது பார்! என்று சிரிப்பார். எல்லாம் காமாச்சி வரும்வரைதான்.
காமாச்சி வந்து, வெற்றிலை குதப்பிய எச்சிலை ‘த்தூ’ என்று கால்வாயில் உமிழ்ந்து, ‘இன்னான்றேன்’ என்று ஒரு வார்த்தைதான் சொல்லுவாள். ‘வந்துட்டியாம்மே! என்ன இன்னா கேட்டாந்தெரிமாமே அவன்’ என்று ஆரம்பிக்கும்போதே வேறு பேச்சின்றி வீட்டின் பக்கம் கைகாட்டுவாள். பெட்டிப்பாம்பாய் ஒரு சத்தமின்றி தள்ளாடியபடி போய், வீட்டுத் திண்ணையில் விழுவார்.
பால் கறக்க காலையில் வரும் அழகே அழகு. பசுவுக்கு பித்தளை அடுக்கு. எருமைக்கு அலுமினியம். அதிலும் எருமையின் அடுக்கை அதன் கொம்பிலேயே மாட்டி விடுவார். இரண்டு பசுக்களுக்கு நடுவே ஏதோ பேசிக்கொண்டு தயங்கி வரும் எருமைகளுக்கு மிரட்டல் விட்டுக் கொண்டு ஒரு வீடு தள்ளியிருக்கும் எங்கள் வீட்டு வாயில்தான் முதல் ஸ்டாப். ‘மா! பாலு’க்கு பாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடுவேன்.
பசுக்கள் இரண்டும் ஒரு மின்விளக்குக் கம்பத்தின் கீழ் தானே போய் நின்று கட்டிக் கொள் என்று சொல்லாமல் நிற்கும். எருமைகளை மட்டும் தட்டி குத்தி ஓரம் கட்டுவார். பித்தளை அடுக்கை கவிழ்த்து வேகமாய் சுற்றி ’பார்த்துக்கம்மா’ எனும் போதே, ’மணி! சுத்தாத என்பாள் அம்மா. அடுக்கில் தண்ணீர் இருந்தால், வேகமாக சுத்தி சிந்து முன்னரே டபக்கென நிமிர்த்தி தண்ணீர் இல்லை என ஏமாற்றும் டெக்னிக் புரிந்தது அப்போது.
குத்துக்கால் போட்டு உட்கார்ந்து, பசுவின் மடி அளைந்து, சுரப்பெடுக்கும் போதே ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் பாட்டு தவழும் உதட்டில். கால் இடுக்கில் அடுக்கை சரிவாக வைக்கும் போதே முதல் பீச்சு அடுக்கின் அடியில் விழவேண்டும் என்ற குவாலிட்டி கண்ட்ரோல் அமலாகும். அந்த சத்தத்திலேயே ‘மணி! பாத்திர ஓரம் கரக்காதே’ என்ற அடுத்த வார்னிங் வரும்.
படிக்காத அம்மாவுக்கு, சுற்றுவதைப் போலவே, படக்கென கவிழ்த்து நிமிர்த்தினாலும் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும் என்ற அறிவியல் அறிவு அதிகம். அப்படி வைத்துக் கொண்டு வெறும் பாத்திரத்தில் விழுவது போல் ஏமாற்ற பாத்திரத்தின் ஓரத்தில் கறப்பார்களாம். ‘அய்ரம்மா நம்பவே நம்பாதே’ என்று சிரித்தபடியே கறந்தாலும், வேடிக்கை பார்க்கிற சாக்கில் எனக்கு இன்ஸ்பெக்ஷன் டூட்டி தப்பாது.
சர சர வென்று கறக்க கறக்க நுரையில் பால் பீய்ச்சி வரும் இசை கேட்டு எவ்வளவு வருஷமாகி விட்டது. கறந்து எழுந்து நுரை வழித்து மாட்டு வாசனையோடு மீசை போடுவார். உதட்டால் நக்குவதை ரசித்துச் சிரித்தபடி பால் ஊற்றுவார். குழந்தையிருக்கும் வீடுகளுக்கு மட்டும் கறந்தபால். அப்புறம் எருமை கொம்பு அடுக்கிலிருந்து தண்ணீர் டபக்கென கலக்கும்.
பாலைக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஓடி வந்து விடுவேன். பசுக்களை அவிழ்த்துவிட்டு போங்க போங்க என்றால் போதும் தானே போய்விடும் வீட்டுக்கு. எருமைகளுக்கு பிடிக்கும் சனி. முட்டி மடக்கி குத்துவதில் என்ன ஆனந்தமோ. ‘தே! ட்ரு’க்கு சண்டி பிடித்து இன்னும் ரெண்டு குத்து வாங்கித்தான் போய் நிற்கும்.
அதில் ஒரு மாட்டுக்கு மட்டும் லுங்கியை தூக்கி ட்ரவுசர் உள்ளே கை விட்டு ஒரு பெரிய வயால் மருந்து எடுப்பார். அடுக்கின் அடியில் தட்டி முனை உடைப்பார். அடுக்குக்குள்ளிருந்து ஊசியெடுத்து, மருந்து உறிஞ்சி பெரிய டாக்டர் மாதிரி கொஞ்சம் மருந்து பீய்ச்சியெடுத்து, உள்ளங்கையில் பிடித்து அடி மடி அருகே ஒரு குத்து குத்தும்போது என்னையறியாமல் ‘ஸ்ஸ்ஸ்’ வரும். கட்டை விரலால் மருந்தேற்றி, தள்ளி விட்டு, மற்ற மாட்டு அருகே உட்கார்ந்து கறக்க ஆரம்பிப்பார்.
அதற்குள், காமாச்சி அடுக்குகளுடன் வர எல்லா மாட்டுக்கும் கறந்து முடித்து, கைக்கு ரெண்டு அடுக்கும் ஆழாக்கும் சொருகியபடி அம்மா பால் என்று விடும் சவுண்டில் மூன்றாவது வீட்டு ஆட்கள் வந்து விடுவார்கள். ஐந்தரை மணிக்குள் வாடகை வீட்டுப் பால் கடமை முடிந்து, சைக்கிளில் டீக்கடைக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தால் ஒன்பது மணிக்கு பல் விளக்கி நாஷ்டா சாப்பிடும் வரை தூக்கம்.
பிறகு நீர் இறைத்து, மாட்டைக் கழுவி தவிடு, புண்ணாக்கு, வைக்கோல், பசுவுக்கு மட்டும் புல் என்று பிரித்துப் போடுவார். அதற்குள் தொழுவத்தை காமாட்சி சுத்தமாக கழுவி விட்டிருப்பாள். பிறகு சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் தீவனம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, குளித்து முடித்து வர பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளுடன் சாப்பிடக் காத்திருப்பார்.
ஒரு தூக்கத்துக்குப் பிறகு மாலை மீண்டும் பால் வேலை. ஆறு மணியளவில் குளித்துவிட்டு கிளம்பும் போதே காமாச்சி குரல் கொடுக்கும் ‘ஒய்ங்கா வர்ணும் தெர்தா’ என்று. ஏழரை மணி வாக்கில் பெரும்பாலும் ஒழுங்காகவே வந்து சாப்பிட்டு ஒரு பீடி குடித்து விட்டு, திண்ணையில் பாய் விரித்து கட்டையை நீட்டுவார்.
அக்கம் பக்கம் சண்டைகளில் சொம்பில்லாத நாட்டாமையாக குரலை மட்டுமே வைத்து சமாதானம் செய்வதில் சமர்த்தர். கட்சித் தொண்டர் வேலை வேறு. அந்தச் சமயங்களில் காமாச்சியிடம் பெருமிதம் கலந்த திட்டு வாங்கும் போது வாய் கொள்ளாச் சிரிப்போடு சமாளிப்பார்.
அவர் மகனும் என் வகுப்பில் படித்தாலும் முரடன், என்னை விட பெரியவன் என்பதால் நெருக்கமில்லை. ஒரு முறை தவிட்டுக்கு கொடுத்த காசை ஆட்டையப் போட்டு விட்டு, பள்ளிக்கு வந்துவிட பாதி வகுப்பில் ஜன்னல் வழியாக மணிக்கோனார் குதித்து வீசிய அணைக்கயிற்றடிக்கு அவன் தாவிவிட, தடுக்க வந்த ஆசிரியரின் முழுக்கை சட்டை கிழிந்துபோகும் அளவுக்கு விழுந்தது அடி. ஒத்து சார் என்று கத்தியபடி வீசிய அடுத்த வீச்சில் மகனின் சட்டையும் முதுகும் சேர்ந்து பிய்ந்தது.
குத்து வாங்கும் எருமை போலவே சட்டை செய்யாமல் நின்றவனின் மேல் அடி விழாமல் மத்த வாத்திகள் மணிக்கோனாரை அழுத்தி தவிட்டுக்காசை மீட்டுக் கொடுத்தார்கள். இருவருக்கும் எப்போதும் ஆகாது. பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகி படிக்கமாட்டேன் என்று அடி வாங்கி, சரி மாடுதான் இவனுக்கும் என்றானதில் கோனாருக்குக் கொள்ளை வருத்தம்.
இரண்டு மூன்று வருடங்கள், அஸிஸ்டண்டாக வந்து கோனார் மேற்பார்வையில் பால் கறந்து, வீடு கடைகளுக்கு ஊற்றினாலும், காசு விஷயம் மட்டும் கோனார்தான் பார்த்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக கோனார் ரிடையர்மெண்ட் எடுத்து, வீட்டோடு இருந்த ஒரு நாளில் பெரிய சண்டை அவர் வீட்டில். வீதிக்கு வீதி போய் பால் ஊற்ற அவசியமில்லை. பால் டிப்போவில் மொத்தமாகக் கறக்கலாம் என்பது பையன் வாதம்.
துட்டு பெரிசில்லடா! மனுசாள் முக்கியம்! எத்தினி வர்சம் தெரியுமா? தாயா புள்ளையா செய்ற தொழிலு. என் கை பால் குடிச்சி வளந்த பசங்க கொய்ந்தைங்களுக்கு கூட என் கை பால்தான். தொரைக்கு அவமானமா இருக்கா என்று கை ஓங்கியவரை நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான்.
‘என்னையாடா? என் நெஞ்சுலயாடா கை வச்சிட்ட?’ என்று டாக்டரின் ஸ்டெத்தைப் போல் எப்பொழுதும் கழுத்தைச் சுற்றியிருக்கும் அணைக் கயிற்றை கீழே வீசியதோடு ஒதுங்கிப் போனார். அன்று மாலை குடித்துவிட்டு கத்தியபோது மட்டும் காமாச்சி ‘இன்னான்ற’ சொல்லவேயில்லை. பிறகு எப்போதாவது செல்லப் பசுக்களுக்கு பொட்டு, புண்ணாக்கு தண்ணீர் கலக்கி ஊட்டுவதோடு சரி.
கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி, திண்ணையோடு ஒடுங்கியே போனவருக்கு காமாச்சி மட்டுமே எப்போதாவது பேச்சுத் துணை. காமாச்சியின் பிள்ளை குளிப்பாட்டல் சம்பளமும், குடலேற்ற வைத்தியம், கோமயம் வித்த காசும் இவர்கள் செலவுக்கு என்றானது. குடிப்பதும் தினசரியென்றாகிப் போனாலும், அமைதியாக வந்து திண்ணையில் விழுவார்.
குடித்துப் புண்ணான வயிற்றில் டைஃபாய்டும் சேர்ந்து வந்து கிடப்பாய் கிடத்தி கொண்டே போனது. போனது மணிக்கோனார் மட்டுமல்ல. முன்பு சொன்னபடி, காமாச்சியின் மனசையும் கொண்டே போனார். கோனாருக்கு பதில் வீட்டோடு முடங்கிப் போனாள் காமாச்சி.
அத்தனை போதையிலும் அடையாளம் மட்டும் தெரியும். ‘நீ ஏன் அய்ரம்மா பயந்துகினு போற! அந்த பேமானிய திட்றேன். நீ போம்மா’ என்று கை காட்டுவார். தெருவோரம் பயந்து ஒண்டிக்கொண்டு போகின்றவரை, ‘அய்ய! மொய்லியாரம்மா என்னா சடாய்க்கும். பயந்துனு ஓடுது பார்! என்று சிரிப்பார். எல்லாம் காமாச்சி வரும்வரைதான்.
காமாச்சி வந்து, வெற்றிலை குதப்பிய எச்சிலை ‘த்தூ’ என்று கால்வாயில் உமிழ்ந்து, ‘இன்னான்றேன்’ என்று ஒரு வார்த்தைதான் சொல்லுவாள். ‘வந்துட்டியாம்மே! என்ன இன்னா கேட்டாந்தெரிமாமே அவன்’ என்று ஆரம்பிக்கும்போதே வேறு பேச்சின்றி வீட்டின் பக்கம் கைகாட்டுவாள். பெட்டிப்பாம்பாய் ஒரு சத்தமின்றி தள்ளாடியபடி போய், வீட்டுத் திண்ணையில் விழுவார்.
பால் கறக்க காலையில் வரும் அழகே அழகு. பசுவுக்கு பித்தளை அடுக்கு. எருமைக்கு அலுமினியம். அதிலும் எருமையின் அடுக்கை அதன் கொம்பிலேயே மாட்டி விடுவார். இரண்டு பசுக்களுக்கு நடுவே ஏதோ பேசிக்கொண்டு தயங்கி வரும் எருமைகளுக்கு மிரட்டல் விட்டுக் கொண்டு ஒரு வீடு தள்ளியிருக்கும் எங்கள் வீட்டு வாயில்தான் முதல் ஸ்டாப். ‘மா! பாலு’க்கு பாத்திரம் எடுத்துக் கொண்டு ஓடுவேன்.
பசுக்கள் இரண்டும் ஒரு மின்விளக்குக் கம்பத்தின் கீழ் தானே போய் நின்று கட்டிக் கொள் என்று சொல்லாமல் நிற்கும். எருமைகளை மட்டும் தட்டி குத்தி ஓரம் கட்டுவார். பித்தளை அடுக்கை கவிழ்த்து வேகமாய் சுற்றி ’பார்த்துக்கம்மா’ எனும் போதே, ’மணி! சுத்தாத என்பாள் அம்மா. அடுக்கில் தண்ணீர் இருந்தால், வேகமாக சுத்தி சிந்து முன்னரே டபக்கென நிமிர்த்தி தண்ணீர் இல்லை என ஏமாற்றும் டெக்னிக் புரிந்தது அப்போது.
குத்துக்கால் போட்டு உட்கார்ந்து, பசுவின் மடி அளைந்து, சுரப்பெடுக்கும் போதே ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் பாட்டு தவழும் உதட்டில். கால் இடுக்கில் அடுக்கை சரிவாக வைக்கும் போதே முதல் பீச்சு அடுக்கின் அடியில் விழவேண்டும் என்ற குவாலிட்டி கண்ட்ரோல் அமலாகும். அந்த சத்தத்திலேயே ‘மணி! பாத்திர ஓரம் கரக்காதே’ என்ற அடுத்த வார்னிங் வரும்.
படிக்காத அம்மாவுக்கு, சுற்றுவதைப் போலவே, படக்கென கவிழ்த்து நிமிர்த்தினாலும் பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும் என்ற அறிவியல் அறிவு அதிகம். அப்படி வைத்துக் கொண்டு வெறும் பாத்திரத்தில் விழுவது போல் ஏமாற்ற பாத்திரத்தின் ஓரத்தில் கறப்பார்களாம். ‘அய்ரம்மா நம்பவே நம்பாதே’ என்று சிரித்தபடியே கறந்தாலும், வேடிக்கை பார்க்கிற சாக்கில் எனக்கு இன்ஸ்பெக்ஷன் டூட்டி தப்பாது.
சர சர வென்று கறக்க கறக்க நுரையில் பால் பீய்ச்சி வரும் இசை கேட்டு எவ்வளவு வருஷமாகி விட்டது. கறந்து எழுந்து நுரை வழித்து மாட்டு வாசனையோடு மீசை போடுவார். உதட்டால் நக்குவதை ரசித்துச் சிரித்தபடி பால் ஊற்றுவார். குழந்தையிருக்கும் வீடுகளுக்கு மட்டும் கறந்தபால். அப்புறம் எருமை கொம்பு அடுக்கிலிருந்து தண்ணீர் டபக்கென கலக்கும்.
பாலைக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்க ஓடி வந்து விடுவேன். பசுக்களை அவிழ்த்துவிட்டு போங்க போங்க என்றால் போதும் தானே போய்விடும் வீட்டுக்கு. எருமைகளுக்கு பிடிக்கும் சனி. முட்டி மடக்கி குத்துவதில் என்ன ஆனந்தமோ. ‘தே! ட்ரு’க்கு சண்டி பிடித்து இன்னும் ரெண்டு குத்து வாங்கித்தான் போய் நிற்கும்.
அதில் ஒரு மாட்டுக்கு மட்டும் லுங்கியை தூக்கி ட்ரவுசர் உள்ளே கை விட்டு ஒரு பெரிய வயால் மருந்து எடுப்பார். அடுக்கின் அடியில் தட்டி முனை உடைப்பார். அடுக்குக்குள்ளிருந்து ஊசியெடுத்து, மருந்து உறிஞ்சி பெரிய டாக்டர் மாதிரி கொஞ்சம் மருந்து பீய்ச்சியெடுத்து, உள்ளங்கையில் பிடித்து அடி மடி அருகே ஒரு குத்து குத்தும்போது என்னையறியாமல் ‘ஸ்ஸ்ஸ்’ வரும். கட்டை விரலால் மருந்தேற்றி, தள்ளி விட்டு, மற்ற மாட்டு அருகே உட்கார்ந்து கறக்க ஆரம்பிப்பார்.
அதற்குள், காமாச்சி அடுக்குகளுடன் வர எல்லா மாட்டுக்கும் கறந்து முடித்து, கைக்கு ரெண்டு அடுக்கும் ஆழாக்கும் சொருகியபடி அம்மா பால் என்று விடும் சவுண்டில் மூன்றாவது வீட்டு ஆட்கள் வந்து விடுவார்கள். ஐந்தரை மணிக்குள் வாடகை வீட்டுப் பால் கடமை முடிந்து, சைக்கிளில் டீக்கடைக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தால் ஒன்பது மணிக்கு பல் விளக்கி நாஷ்டா சாப்பிடும் வரை தூக்கம்.
பிறகு நீர் இறைத்து, மாட்டைக் கழுவி தவிடு, புண்ணாக்கு, வைக்கோல், பசுவுக்கு மட்டும் புல் என்று பிரித்துப் போடுவார். அதற்குள் தொழுவத்தை காமாட்சி சுத்தமாக கழுவி விட்டிருப்பாள். பிறகு சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் தீவனம் வாங்கிக் கொண்டு வந்து வைத்துவிட்டு, குளித்து முடித்து வர பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளுடன் சாப்பிடக் காத்திருப்பார்.
ஒரு தூக்கத்துக்குப் பிறகு மாலை மீண்டும் பால் வேலை. ஆறு மணியளவில் குளித்துவிட்டு கிளம்பும் போதே காமாச்சி குரல் கொடுக்கும் ‘ஒய்ங்கா வர்ணும் தெர்தா’ என்று. ஏழரை மணி வாக்கில் பெரும்பாலும் ஒழுங்காகவே வந்து சாப்பிட்டு ஒரு பீடி குடித்து விட்டு, திண்ணையில் பாய் விரித்து கட்டையை நீட்டுவார்.
அக்கம் பக்கம் சண்டைகளில் சொம்பில்லாத நாட்டாமையாக குரலை மட்டுமே வைத்து சமாதானம் செய்வதில் சமர்த்தர். கட்சித் தொண்டர் வேலை வேறு. அந்தச் சமயங்களில் காமாச்சியிடம் பெருமிதம் கலந்த திட்டு வாங்கும் போது வாய் கொள்ளாச் சிரிப்போடு சமாளிப்பார்.
அவர் மகனும் என் வகுப்பில் படித்தாலும் முரடன், என்னை விட பெரியவன் என்பதால் நெருக்கமில்லை. ஒரு முறை தவிட்டுக்கு கொடுத்த காசை ஆட்டையப் போட்டு விட்டு, பள்ளிக்கு வந்துவிட பாதி வகுப்பில் ஜன்னல் வழியாக மணிக்கோனார் குதித்து வீசிய அணைக்கயிற்றடிக்கு அவன் தாவிவிட, தடுக்க வந்த ஆசிரியரின் முழுக்கை சட்டை கிழிந்துபோகும் அளவுக்கு விழுந்தது அடி. ஒத்து சார் என்று கத்தியபடி வீசிய அடுத்த வீச்சில் மகனின் சட்டையும் முதுகும் சேர்ந்து பிய்ந்தது.
குத்து வாங்கும் எருமை போலவே சட்டை செய்யாமல் நின்றவனின் மேல் அடி விழாமல் மத்த வாத்திகள் மணிக்கோனாரை அழுத்தி தவிட்டுக்காசை மீட்டுக் கொடுத்தார்கள். இருவருக்கும் எப்போதும் ஆகாது. பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகி படிக்கமாட்டேன் என்று அடி வாங்கி, சரி மாடுதான் இவனுக்கும் என்றானதில் கோனாருக்குக் கொள்ளை வருத்தம்.
இரண்டு மூன்று வருடங்கள், அஸிஸ்டண்டாக வந்து கோனார் மேற்பார்வையில் பால் கறந்து, வீடு கடைகளுக்கு ஊற்றினாலும், காசு விஷயம் மட்டும் கோனார்தான் பார்த்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக கோனார் ரிடையர்மெண்ட் எடுத்து, வீட்டோடு இருந்த ஒரு நாளில் பெரிய சண்டை அவர் வீட்டில். வீதிக்கு வீதி போய் பால் ஊற்ற அவசியமில்லை. பால் டிப்போவில் மொத்தமாகக் கறக்கலாம் என்பது பையன் வாதம்.
துட்டு பெரிசில்லடா! மனுசாள் முக்கியம்! எத்தினி வர்சம் தெரியுமா? தாயா புள்ளையா செய்ற தொழிலு. என் கை பால் குடிச்சி வளந்த பசங்க கொய்ந்தைங்களுக்கு கூட என் கை பால்தான். தொரைக்கு அவமானமா இருக்கா என்று கை ஓங்கியவரை நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டான்.
‘என்னையாடா? என் நெஞ்சுலயாடா கை வச்சிட்ட?’ என்று டாக்டரின் ஸ்டெத்தைப் போல் எப்பொழுதும் கழுத்தைச் சுற்றியிருக்கும் அணைக் கயிற்றை கீழே வீசியதோடு ஒதுங்கிப் போனார். அன்று மாலை குடித்துவிட்டு கத்தியபோது மட்டும் காமாச்சி ‘இன்னான்ற’ சொல்லவேயில்லை. பிறகு எப்போதாவது செல்லப் பசுக்களுக்கு பொட்டு, புண்ணாக்கு தண்ணீர் கலக்கி ஊட்டுவதோடு சரி.
கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி, திண்ணையோடு ஒடுங்கியே போனவருக்கு காமாச்சி மட்டுமே எப்போதாவது பேச்சுத் துணை. காமாச்சியின் பிள்ளை குளிப்பாட்டல் சம்பளமும், குடலேற்ற வைத்தியம், கோமயம் வித்த காசும் இவர்கள் செலவுக்கு என்றானது. குடிப்பதும் தினசரியென்றாகிப் போனாலும், அமைதியாக வந்து திண்ணையில் விழுவார்.
குடித்துப் புண்ணான வயிற்றில் டைஃபாய்டும் சேர்ந்து வந்து கிடப்பாய் கிடத்தி கொண்டே போனது. போனது மணிக்கோனார் மட்டுமல்ல. முன்பு சொன்னபடி, காமாச்சியின் மனசையும் கொண்டே போனார். கோனாருக்கு பதில் வீட்டோடு முடங்கிப் போனாள் காமாச்சி.
Friday, August 13, 2010
இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா?
பொறுப்பி:
1.இந்த இடுகையிலிருக்கும் தகவல்கள் மேம்போக்காக எழுதப்பட்டவை அல்ல. என் முப்பத்து ஐந்து வருட சர்வீஸில் முப்பது வருடங்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமான விதிமுறைகளுடன் கழிந்துள்ளதன் அடிப்படையில் எழுதியது.
2.ஒரு புறம் இதன் பயனை அடைவோர்களின் மேலான என் பெருங்கோபத்தைச் சரிவர புரியவைக்க இயலுமா என்ற பயமிருந்த போதிலும் வேறெந்த வழியிலும் இந்த உண்மை தெரியவரப் போவதில்லை என்பதே எழுதியாக வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.
3. எடுத்தோம் எழுதினோம் என்று எழுதியதில்லை இது. திரு காமராஜ் இடுகையில் அனேகமாக மூன்று மாதங்களுக்கு முன் இட்ட பின்னூட்டத்தின் தொடர்ச்சி இது.
4.தகவலில் சந்தேகமிருப்பின் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் எந்த அரசு அலுவலகத்திலும் இதில் சொல்லப்படும் தகவலை உறுதி செய்துக் கொள்ள இயலும்.
______
சாதிவாரிக் கணப்பெடுப்புக்கு கோரிக்கை வைத்திருக்கும் நேரமிது. அதன் பின்னான அரசியல் குறித்த விடயம் நமக்கு அக்கறையில்லை. இப்போதிருக்கும் சட்டத்தின் படி இட ஒதுக்கீடு என்பது முற்று முழுதாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒன்று.
இதனைப் பெற எத்தனைப் போராட்டங்கள்? எத்தனை உயிர்த் தியாகங்கள்? அப்படிப் போராடிப் பெற்ற ஒரு சலுகை எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்தக் குறிக்கோளை அடைந்திருக்கிறதா? இல்லையெனில் காரணம் யார்?
இது குறித்தான அலசலுக்கு முன் இரண்டு நாட்களுக்கு முன்பான செய்தி இது. ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்.
New Delhi, Aug 11 (IANS) A total of 54,637 posts for Scheduled Caste, Scheduled Tribe and Other Backward Classes are vacant in central government ministries and departments.
Minister of State in the Prime Minister's Office Prithviraj Chavan told parliament Wednesday that the number of vacancies in the three categories were 26,565, 25,649 and 21,143 respectively.
Of these, 12,045, 2,799 and 3,876 posts had been filled, Chavan said in the Lok Sabha in reply to a question from P.L. Punia.
The minister said a special recruitment drive was launched Nov 19, 2008 to fill up the backlog of reserved vacancies
படித்தவுடன் மனதில் எழும் கேள்வி, இத்தனை காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குக் காரணமென்ன? அரசா என்பது.
ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் எனும் சொல் இது அரசின் தவறல்ல. வழக்கம்போல் நடைபெற்ற தேர்வுகளில் நிரப்பப்படாமல் சேர்ந்து போன இடங்கள் என்பதாலேயே, மீண்டும் இவர்களுக்கு மட்டுமே ஒரு சிறப்புத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைச் சுட்டுகிறது.
அப்படியெனில், நாட்டில் வேலையின்மை என்பதே இல்லையா? அரசுத் துறையை புறந்தள்ளி தனியார்த் துறையில் சலுகைகளும் சம்பளமும் அதிகமாகவா இருக்கிறது? பின்னெப்படி இத்தனை காலியிடங்கள் சேர்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும்புகிறதா இல்லையா?
மாநில வாரியாகப் பார்த்தோமானால், கேரளாவில் ஒரு இடம் கூட இப்படி காலியிருக்காது. தமிழகத்தில் மிக அதிகமாயிருக்கும் என்பது என் கணிப்பு. இதற்கு முன்பே ஒரு இடுகையில் கூறியிருந்தபடி ரயில்வே ரெக்ரூட்மெண்ட் ட்ரைவ் நடத்தும் இத்தகைய ஸ்பெஷல் ட்ரைவ்களில் பங்கேற்போர் பெரும்பாலும் பீகார் மாநிலத்திலிருந்தும் இதர வட மானிலங்களிலிருந்து வந்தவர்களுமே. அப்படியும் பங்கேற்போர் சதவீதம் வெகு குறைவே.
இது பனிப்பாறையின் ஒரு விளிம்பே. ஆரம்பக்கட்ட வேலை வாய்ப்பில் நிரப்பப் படாத காலியிடங்களின் எண்ணிக்கை மட்டுமென்றே கொள்ளவேண்டி யிருக்கிறது.
இதையும் தாண்டி இச் சலுகையின் பின்னான முக்கியத்தை உணராமல் அரசு இயந்திரத்தை முடக்கிப் போடுபவர்கள் யார்? தன்னலம் என்று கூட சொல்லமாட்டேன் தன்சுகம் கருதி, தன்னையொத்தவன் வயிற்றில் மண்ணள்ளிப் போடுவது யார்? இட ஒதுக்கீட்டின் பயன் அனுபவிப்பவர்களே என்பது அதிர்ச்சியளிக்கக் கூடும்.
அரசுப் பணியானது வர்ணாஸ்ரமத்தைப் போன்றே நான்கு. க்ரூப் ‘A’, ‘B', 'c', மற்றும் ‘D' எனப்படும் கடை நிலை ஊழியர்கள். இதில் க்ரூப் 'A' என்பது ஐ.ஏ.எஸ் போன்ற நேரடி வேலை வாய்ப்பு. அதிலும் பின் தங்கல் இருக்கிறதென்றாலும் அது குறித்த விவாதமில்லை இது. B,C, மற்றும் D குறித்தான நிலைப்பாடு இது.
க்ருப் ‘D' மற்றும் க்ருப் ‘c' பிரிவுகளில் பணி உயர்வுக்கு வாய்ப்பாக பல்வேறு நிலைகளில் பதவிகள் இருக்கும். ஒவ்வொரு பதவியிலும் மொத்த எண்ணிக்கையில் 15 சதம் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் மலைச் சாதியினருக்குமான ஒதுக்கீடாகும்.
பதவி உயர்வு பெரும்பாலும் மூப்பு மற்றும் தகுதி என்ற அடிப்படையிலும், பல பதவிகளுக்கு தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்தத் தேர்விலும் பொதுஜன பாதுகாப்பு தவிர இதரப் பதவிகளுக்கு குறைந்த மதிப்பெண்கள் போதுமானது.
ஆனால் உண்மையில் நடப்பதென்ன? மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு கிடைக்கும் வரை இவர்களுக்குப் பிரச்சனையில்லை. தேர்வு என்ற கட்டம் வரும்போது பெரும்பாலோர் பங்கேற்க முன்வருவதில்லை. காரணம் பொறுப்பை ஏற்கத் தயக்கமும், எதற்கு தேவையற்ற ரிஸ்க் என்ற மனோபாவமும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
சரி இதனால் என்ன பாதிப்பு? அது அவர்கள் உரிமையல்லவா என்று கேட்கலாம். நிச்சயமாக அவர்கள் உரிமைதான். ஆனால் அவர்கள் உரிமைக்கு பலிகடா ஆவது யார் தெரியுமா? அவர்களேதான். காரணம், அவர்கள் தேர்வுக்கு தயாரில்லை எனும் பட்சத்தில் அவர்களுக்கு மேலான பதவிகளுக்கான காலியிடம் அப்படியே இருக்கும். வேறு எந்த விதமாகவும் அதை நிரப்ப முடியாது.
அதே போல் இவர்களுக்கு கீழ் பதவியில் இருப்பவர்களின் பதவி உயர்வையும் இவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் பாதிப்பாகும். இதற்குக் காரணமென்ன? சலுகையளிக்கிறோம் என்ற பெயரில் அரசும் ஒரு வகையில் காரணம்.
ஒரு பதவியில் குறித்த காலம் பணியாற்றி அனுபவம் பெறு முன்னரே அதற்கும் உயரிய பதவியில் காலியிடமிருக்கிறது என்ற காரணத்துக்காக, மடமடவென பதவி உயர்வளித்து ஒரு நிர்வாகப் பொறுப்புக்கு உரித்தாna பதவியில் அவர்களை அமர்த்துகையில் அப்பணி குறித்தான அனுபவ அறிவோ, தகவலறிவுக்கோ வழியின்மை அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக்குகிறது.
இப்படித் தேங்கிப் போன பதவி உயர்வுகளுக்கான காலியிடங்களை நிரப்பவே முடியாது என்ற நிலையில், அடிப்படைப் பதவியிலும் சேர ஆட்களே இல்லாமல் பதவிகள் தேங்கியும் கிடக்கிறதென்றால் தவறு எங்கே?
பெரும்பாலான நிர்வாகப் பதவிகள், காலியிடங்களாகவே இருக்கும் பட்சத்தில் அரசு நிர்வாகம் எப்படி சீராக நடக்கும். அரசுக்கு இதனால் நஷ்டமா என்ன? துண்டு போட்டு வைத்திருக்கிறது, குந்த ஆட்கள் இல்லையெனச் சொல்லிவிட்டு சும்மாயிருக்கும்.
இஞ்சினியரிங் மற்றும் மருத்துவக் கல்லூரி, பட்டப்படிப்புகளிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது அல்லவா. அவற்றிலும் காலியிடங்கள் இருந்தாலும் அது மிகக் குறைவே. அப்படிப் படித்து தேறி வருபவர்கள் அரசுத் தேர்வு எழுத மறுப்பது ஏன்? இரயில்வே போன்ற தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் ஏன் இஞ்சினியர்கள் பங்கெடுப்பதில்லை.
எஞ்சினியரிங் படித்துவிட்டு பேங்க் கிளார்க் வேலைக்கு தேர்வாகி அட்டெஸ்டேஷன் என்று வருபவர்களிடம் ஏன் இப்படி என்றால் வரும் பதில் என்ன தெரியுமா? ஏதோ ஒரு வேலை வேணும்சார். இதுன்னா ரிஸ்க் இல்லையாம். ஒரு பட்டப் படிப்பு படித்து இந்த வேலைக்கு காத்திருப்பவன் வாயில் மண்ணள்ளிப் போடுவதில்லையா இது?
இன்று DNB டாக்டர்கள் இல்லையெனில் பல அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் மருத்துவர்களாக வரத்தயாராய் இருப்பவர்கள் ஏன் UPSC பரீட்சை எழுதி அரசு டாக்டராக வர மறுக்கிறார்கள்?
இப்போது சொல்லுங்கள். இட ஒதுக்கீடு விழலுக்கிறைத்த நீரா இல்லையா?
~~~~~
Subscribe to:
Posts (Atom)