பெருசு, பெர்ஸேய் என்றெல்லாம் அன்பாய் அவமானிக்கப்படும் முதியவர்கள் நிகழ்காலத்தில் உறுத்தலாய் உணரப்படினும் அவர்களைப் புறக்கணிப்பதால் நட்டம் நமக்குத்தான். நான் படித்துக் கிழித்தவன், எனக்குத் தெரியாதா என்ற கர்வம், படிக்காத அவர்களால் தவிடு பொடியாவதை எத்தனை முறை அனுபவித்தாலும் ஏனோ உறுத்தல் மட்டுமே வென்று விடுகிறது. நம்ம பெருசுங்க எவ்வளவு விவரமான வில்லங்கமான ஆளுங்க என்பதற்கு சில உதாரணங்கள் இவை.
ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெரியவர் பகலுணவு உண்டுவிட்டு வரப்போர மர நிழலில் உட்கார்ந்திருந்தாராம். ஒரு வாலிபன் அந்த வழியாக போனவன் ஒரு ஊரின் பெயர் சொல்லி எப்படிப் போகவேண்டும் எனக் கேட்டானாம். வழி சொல்லிய பெரியவரிடம் எவ்வளவு தூரம் எனக் கேட்டானாம். பெரியவர் பதில் சொல்லாமல் இல்லாத பல்லைக் குத்திக் கொண்டிருக்கவே நடக்கத் தொடங்கினானாம். கொஞ்ச தூரம் போனவனை பெரியவர் கூப்பிட்டாராம். அங்கிருந்த படியே என்ன என்று கேட்டவனை, இங்கு வா என்றழைக்கவும், அவன் திரும்ப வந்தானாம். எவ்வளவு தூரமுன்னு கேட்டியேப்பா, 25 நிமிசமாகும் போக என்றாராம். இளசுக்கு வந்திச்சி கோவம். ஏம் பெருசு. அப்போ கேட்டா பல்லு குத்திட்டிருந்த. அவ்வளவு தூரம் போகவிட்டு திரும்ப கூப்பிட்டு சொல்றீரேன்னு பாய்ஞ்சதாம். அட போடா நீ எப்படி நடக்கிற, தெம்பா இருக்கியா, களைச்சிருக்கியான்னு தெரியாம எப்படி சொல்றது. போவைல குழப்பமா களைப்பான்னு தெரியாம தொய்ஞ்சி போய் இருந்திச்சி நடை, நாங்கூப்புடவும் வெரசா வந்த. அதனால தான் சொல்றேன் 25 நிமிசமாகும்னு சொல்லிட்டு களத்துமோட்டுக்குள்ள வேலைய பார்க்க போச்சாம். இளசுக்கு உச்சி மண்டைல உளிய வெச்சி போட்டா மாதிரி ஆகிப்போச்சாம்.
நம்ம ஹீரோ டு ஜீரோல சொல்லி இருந்தேன், நம்ம தம்பியான் வெண்ணெய் தின்ன லீலை. மாசத்துல முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறுக்காகத் தவமிருப்பேன். நெய்க்காரத் தாத்தா வருவாரான்னு. கால் கிலோ வெண்ணெய் வாங்குவாங்க. நெய் காய்ச்சின வாணலியில இருக்கிற நெய் வீணாகாம கேசரி கிண்டுவாங்க. அது பின்னூட்டம் மாதிரி. ஆனா ஒரு சின்ன கப் வெச்சிட்டு கவர்ச்சியா ஒரு இளி இளிச்சி தாத்தாக்கு ஒரு சொம்பு பான தண்ணி நீட்டுனா அரை கப் நெய் குடுப்பாங்க. அப்புடியெ ஒரு பெரிய தேக்கரண்டி சக்கரைய போட்டு விரல் எரிய எரிய குழைக்க சக்கரை கரைஞ்சி நுரை மாதிரி வரும் . லோகத்துல அத மிஞ்சி ஒரு இனிப்பு எவனும் கண்டு பிடிக்கலைன்னு சொல்லுவேன். சீத பேதி, சூட்டினால வயித்துவலி இருந்தா இதுக்கு மிஞ்சின வைத்தியமில்ல. இது அவரு சொல்லிக் கொடுத்தது.
இப்புடி ஒரு ஞாயிறு வாங்கி வெச்சிட்டு பக்கத்து வீட்டம்மாமார் கூட அரட்டைல இருக்கதான் இவன் கால்கிலோ வெண்ணெய லவட்டிட்டான். ஒளிஞ்சிட்டதால நேரம் கடந்து போய் கண்டு பிடிச்சப்ப கண்ணு முழியெல்லாம் மேல சொருகி பயமா போச்சி. அரக்க பறக்க அள்ளி எடுத்து அம்மா கதறுது. அன்னைக்குன்னு வீட்டு சொந்தக்காரங்க பேரனுக்கு தொட்டில்ல போட்டு பேரு வைக்கிற விசேஷம். வந்துச்சு அந்தம்மா. தோபாரு. ஒப்பாரி வைக்காத. டாக்டர்கிட்ட தூக்கிட்டு போ. ஒரு வேள ஏதாவது ஆய்ட்டா 8 மணிக்கு மேல வா ங்குது. துள்ளத்துடிக்க தூக்கி போட்டுகிட்டு வெளிய வந்தா எதிரூட்டுல ஒரு பெருசு. மழை நாள் போக திண்ணைலதான் வாசம். அது கூப்பிட்டு என்னாடி புள்ளைக்குங்குது.
அழுதுகிட்டே இப்படின்னா, அட சீ கொண்டாடி புள்ளையன்னு வாங்கி, கால்ல போட்டு போய் வென்னித்தண்ணி, பாலோடை கொண்டுவான்னாங்க. வெது வெதுன்னு முதல் பாலோடை தண்ணி போட்டு வயத்தை நீவிக் கொடுக்கவே ப்ளக்கு புடிங்கிடிச்சி அய்யாக்கு. நெய்யா போகுது. 10 நிமிசத்துல வயிரு ஒட்டிபோக ஞேனு சிரிக்கிறான். தூக்கி கொஞ்சி, ஒரு அறை போட்டு அவன் அலற திரும்ப கொஞ்சின்னு பைத்தியமாயிடுச்சி அம்மா. கிழவி கூலா சொல்லுது. இன்னும் வென்னீர் கொண்டு வந்து இந்த இடமெல்லாம் அரப்பு பொடி போட்டு அலம்பி விடு. ராத்திரி எறும்பு என்ன தூக்கிட்டு போய்டும்னு.
அம்மம்மா சொல்லும். கலியாணமாகி, மறுவீடு வந்தப்ப தன்னோட மாமியாருக்கு மாமியார் கிழவி கால்ல விழுந்துச்சாம். அந்தம்மா சீக்கிரமே உன் பொட்டு அழிய. தாலி அறுகன்னு வாழ்த்தவும் அலண்டு போயி அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். கூட வந்த ஒரு அம்முணி போயி இன்னோரு பெருசு கிட்ட கேட்டுச்சாம். என்னங்க முத முதல்ல கலியாணபொண்டு கால்ல விழுந்தா இப்படியா சொல்றது? விவஸ்தை வேணாம்னு. அந்த லொள்ளு புடிச்ச பெருசு, என்னாடியம்மா தப்பு கண்டுட்ட? இப்ப என்னா சொல்லிட்டாங்க? சீக்கிரமே புள்ள பொறக்கட்டும்னு வாழ்த்துச்சி. அவ்வளவுதான்னா இந்தம்மா இதென்னாடா லூசுப்பய குடும்பத்துல வாக்க பட்டுட்டமோன்னு ஆகிப்போச்சாம்.
அப்புறம் சொல்றாங்களாம் விளக்கம். துறுதுறுன்னு இருக்கிற புள்ளைங்க பாலூட்டும்போது தாலிக்கயித்த புடிச்சி இழுக்குமாம். எண்ணெய் வியர்வைன்னு ஊறி தாலிக்கயிறு இத்துப்போய் இருக்க அத்துக்குமாம். கிட்ட போய் கொஞ்சுறப்ப, தூக்கி வெச்சி கொஞ்சுறப்ப பொட்டை விரலால அழிச்சி விடும்ல அதத்தான் அப்புடி சொல்றது. புடிக்காத ஆளுங்க இருந்தா நேரடியா வாழ்த்துவான்னு நினைச்சி நடக்காதுன்னு நினைப்பாங்களாம். இப்படி சொன்னா நடக்காதுன்னு நினைச்சதும் ஆசீர்வாதம் மாதிரியாயிடும்னு அப்புடி சொல்றது வழமைன்னாங்களாம்.
ஒரு தபா ஒரு மனை ரிஜிஸ்டர் பண்ண போனேன். அங்க ஒரு பெருசு. நீர்க்காவி வேட்டி, காலர் பிஞ்சி போன சட்டைன்னு குத்துக்காலு போட்டு உக்காந்திருந்திச்சி. பக்கத்துல ஒரு பெரிய அலுமினிய தூக்கு. சொட்டைன்னா அப்படி ஒரு சொட்டை. கொஞ்ச நேரத்துல வக்கீல் வந்தாரு. ஸ்டைலா ஒரு பய புள்ள வந்தான். பத்திரத்த ப்ரீஃப் கேஸ்ல இருந்து எடுத்து படிக்க ஆரம்பிச்சாங்க. இரு இருன்னு அமர்த்தி, தம்பி இத வாங்கி படி நைனான்னாங்க. வாங்கி படிச்சேன். நல்லா இரு தம்பின்னு வாழ்த்தினாங்க. வக்கீலுக்கு ஒரு பக்கம் கடுப்பு ஒரு பக்கம் மலைப்பு.
காசெல்லாம் கொண்டாந்திருக்கீங்களான்னாரு. அதெல்லாமிருக்குது நீ ஐயாட்ட குடுப்பான்னு பெருசு டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. ரிஜிஸ்ட்ரார் வாங்கி பார்த்துட்டு, என்னா பெரியவரே எல்லாம் பேசியாச்சா. பதிஞ்சிறலாமான்னா, ஆமாங்க நீங்க பதிங்க நான் காசு செட்டில் பண்ணிட்டு வரேன்னு கெளம்பி வெளிய போனாங்க. கண்ணு மறைவா கூட்டி போகவும் நமக்கு சொறியுது. இடுப்புல கட்ற அளவிருக்காதே பணம். என்னாங்கடான்னு. வக்கீலுக்கும் விக்கிற ஆளுக்கும் அதே குழப்பம். தூக்க தொறந்து கட்டு கட்டா எடுக்குறாரு. தல சுத்திப் போச்சு. குடுத்துட்டு அந்த புள்ளைக்கு அட்வைசு. பத்திரமா கொண்டு போ தம்பி. அதுக்குதான் தூக்குல போட்டு கொண்டாந்தேன். ஒரு பயலுக்கும் சந்தேகம் வராது பாரு. காலம் கெட்டு கெடக்குன்னு. யப்பா. இந்த வெவரம் புரியாம , அலட்டலா பேங்க்ல காச எடுத்து பொட்டில வெச்சிகிட்டு தண்டோரா போடாத குறையா விளம்பரம் பண்ணி எத்தன பேரு பறி குடுக்குறாங்க? பதிவு கட்டணம் கட்டிட்டு வரேன் தம்பின்னு சொல்லிட்டு போன ஆள பார்த்த அந்த ஆளு, வக்கீலு ஏன் நானுந்தான் கண்ணுல உங்களயெல்லாம் பட்டிக்காட்டான்னு சொல்லிட்டு திரியிறமேன்னு இருந்திச்சி.
ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெரியவர் பகலுணவு உண்டுவிட்டு வரப்போர மர நிழலில் உட்கார்ந்திருந்தாராம். ஒரு வாலிபன் அந்த வழியாக போனவன் ஒரு ஊரின் பெயர் சொல்லி எப்படிப் போகவேண்டும் எனக் கேட்டானாம். வழி சொல்லிய பெரியவரிடம் எவ்வளவு தூரம் எனக் கேட்டானாம். பெரியவர் பதில் சொல்லாமல் இல்லாத பல்லைக் குத்திக் கொண்டிருக்கவே நடக்கத் தொடங்கினானாம். கொஞ்ச தூரம் போனவனை பெரியவர் கூப்பிட்டாராம். அங்கிருந்த படியே என்ன என்று கேட்டவனை, இங்கு வா என்றழைக்கவும், அவன் திரும்ப வந்தானாம். எவ்வளவு தூரமுன்னு கேட்டியேப்பா, 25 நிமிசமாகும் போக என்றாராம். இளசுக்கு வந்திச்சி கோவம். ஏம் பெருசு. அப்போ கேட்டா பல்லு குத்திட்டிருந்த. அவ்வளவு தூரம் போகவிட்டு திரும்ப கூப்பிட்டு சொல்றீரேன்னு பாய்ஞ்சதாம். அட போடா நீ எப்படி நடக்கிற, தெம்பா இருக்கியா, களைச்சிருக்கியான்னு தெரியாம எப்படி சொல்றது. போவைல குழப்பமா களைப்பான்னு தெரியாம தொய்ஞ்சி போய் இருந்திச்சி நடை, நாங்கூப்புடவும் வெரசா வந்த. அதனால தான் சொல்றேன் 25 நிமிசமாகும்னு சொல்லிட்டு களத்துமோட்டுக்குள்ள வேலைய பார்க்க போச்சாம். இளசுக்கு உச்சி மண்டைல உளிய வெச்சி போட்டா மாதிரி ஆகிப்போச்சாம்.
நம்ம ஹீரோ டு ஜீரோல சொல்லி இருந்தேன், நம்ம தம்பியான் வெண்ணெய் தின்ன லீலை. மாசத்துல முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறுக்காகத் தவமிருப்பேன். நெய்க்காரத் தாத்தா வருவாரான்னு. கால் கிலோ வெண்ணெய் வாங்குவாங்க. நெய் காய்ச்சின வாணலியில இருக்கிற நெய் வீணாகாம கேசரி கிண்டுவாங்க. அது பின்னூட்டம் மாதிரி. ஆனா ஒரு சின்ன கப் வெச்சிட்டு கவர்ச்சியா ஒரு இளி இளிச்சி தாத்தாக்கு ஒரு சொம்பு பான தண்ணி நீட்டுனா அரை கப் நெய் குடுப்பாங்க. அப்புடியெ ஒரு பெரிய தேக்கரண்டி சக்கரைய போட்டு விரல் எரிய எரிய குழைக்க சக்கரை கரைஞ்சி நுரை மாதிரி வரும் . லோகத்துல அத மிஞ்சி ஒரு இனிப்பு எவனும் கண்டு பிடிக்கலைன்னு சொல்லுவேன். சீத பேதி, சூட்டினால வயித்துவலி இருந்தா இதுக்கு மிஞ்சின வைத்தியமில்ல. இது அவரு சொல்லிக் கொடுத்தது.
இப்புடி ஒரு ஞாயிறு வாங்கி வெச்சிட்டு பக்கத்து வீட்டம்மாமார் கூட அரட்டைல இருக்கதான் இவன் கால்கிலோ வெண்ணெய லவட்டிட்டான். ஒளிஞ்சிட்டதால நேரம் கடந்து போய் கண்டு பிடிச்சப்ப கண்ணு முழியெல்லாம் மேல சொருகி பயமா போச்சி. அரக்க பறக்க அள்ளி எடுத்து அம்மா கதறுது. அன்னைக்குன்னு வீட்டு சொந்தக்காரங்க பேரனுக்கு தொட்டில்ல போட்டு பேரு வைக்கிற விசேஷம். வந்துச்சு அந்தம்மா. தோபாரு. ஒப்பாரி வைக்காத. டாக்டர்கிட்ட தூக்கிட்டு போ. ஒரு வேள ஏதாவது ஆய்ட்டா 8 மணிக்கு மேல வா ங்குது. துள்ளத்துடிக்க தூக்கி போட்டுகிட்டு வெளிய வந்தா எதிரூட்டுல ஒரு பெருசு. மழை நாள் போக திண்ணைலதான் வாசம். அது கூப்பிட்டு என்னாடி புள்ளைக்குங்குது.
அழுதுகிட்டே இப்படின்னா, அட சீ கொண்டாடி புள்ளையன்னு வாங்கி, கால்ல போட்டு போய் வென்னித்தண்ணி, பாலோடை கொண்டுவான்னாங்க. வெது வெதுன்னு முதல் பாலோடை தண்ணி போட்டு வயத்தை நீவிக் கொடுக்கவே ப்ளக்கு புடிங்கிடிச்சி அய்யாக்கு. நெய்யா போகுது. 10 நிமிசத்துல வயிரு ஒட்டிபோக ஞேனு சிரிக்கிறான். தூக்கி கொஞ்சி, ஒரு அறை போட்டு அவன் அலற திரும்ப கொஞ்சின்னு பைத்தியமாயிடுச்சி அம்மா. கிழவி கூலா சொல்லுது. இன்னும் வென்னீர் கொண்டு வந்து இந்த இடமெல்லாம் அரப்பு பொடி போட்டு அலம்பி விடு. ராத்திரி எறும்பு என்ன தூக்கிட்டு போய்டும்னு.
அம்மம்மா சொல்லும். கலியாணமாகி, மறுவீடு வந்தப்ப தன்னோட மாமியாருக்கு மாமியார் கிழவி கால்ல விழுந்துச்சாம். அந்தம்மா சீக்கிரமே உன் பொட்டு அழிய. தாலி அறுகன்னு வாழ்த்தவும் அலண்டு போயி அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். கூட வந்த ஒரு அம்முணி போயி இன்னோரு பெருசு கிட்ட கேட்டுச்சாம். என்னங்க முத முதல்ல கலியாணபொண்டு கால்ல விழுந்தா இப்படியா சொல்றது? விவஸ்தை வேணாம்னு. அந்த லொள்ளு புடிச்ச பெருசு, என்னாடியம்மா தப்பு கண்டுட்ட? இப்ப என்னா சொல்லிட்டாங்க? சீக்கிரமே புள்ள பொறக்கட்டும்னு வாழ்த்துச்சி. அவ்வளவுதான்னா இந்தம்மா இதென்னாடா லூசுப்பய குடும்பத்துல வாக்க பட்டுட்டமோன்னு ஆகிப்போச்சாம்.
அப்புறம் சொல்றாங்களாம் விளக்கம். துறுதுறுன்னு இருக்கிற புள்ளைங்க பாலூட்டும்போது தாலிக்கயித்த புடிச்சி இழுக்குமாம். எண்ணெய் வியர்வைன்னு ஊறி தாலிக்கயிறு இத்துப்போய் இருக்க அத்துக்குமாம். கிட்ட போய் கொஞ்சுறப்ப, தூக்கி வெச்சி கொஞ்சுறப்ப பொட்டை விரலால அழிச்சி விடும்ல அதத்தான் அப்புடி சொல்றது. புடிக்காத ஆளுங்க இருந்தா நேரடியா வாழ்த்துவான்னு நினைச்சி நடக்காதுன்னு நினைப்பாங்களாம். இப்படி சொன்னா நடக்காதுன்னு நினைச்சதும் ஆசீர்வாதம் மாதிரியாயிடும்னு அப்புடி சொல்றது வழமைன்னாங்களாம்.
ஒரு தபா ஒரு மனை ரிஜிஸ்டர் பண்ண போனேன். அங்க ஒரு பெருசு. நீர்க்காவி வேட்டி, காலர் பிஞ்சி போன சட்டைன்னு குத்துக்காலு போட்டு உக்காந்திருந்திச்சி. பக்கத்துல ஒரு பெரிய அலுமினிய தூக்கு. சொட்டைன்னா அப்படி ஒரு சொட்டை. கொஞ்ச நேரத்துல வக்கீல் வந்தாரு. ஸ்டைலா ஒரு பய புள்ள வந்தான். பத்திரத்த ப்ரீஃப் கேஸ்ல இருந்து எடுத்து படிக்க ஆரம்பிச்சாங்க. இரு இருன்னு அமர்த்தி, தம்பி இத வாங்கி படி நைனான்னாங்க. வாங்கி படிச்சேன். நல்லா இரு தம்பின்னு வாழ்த்தினாங்க. வக்கீலுக்கு ஒரு பக்கம் கடுப்பு ஒரு பக்கம் மலைப்பு.
காசெல்லாம் கொண்டாந்திருக்கீங்களான்னாரு. அதெல்லாமிருக்குது நீ ஐயாட்ட குடுப்பான்னு பெருசு டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. ரிஜிஸ்ட்ரார் வாங்கி பார்த்துட்டு, என்னா பெரியவரே எல்லாம் பேசியாச்சா. பதிஞ்சிறலாமான்னா, ஆமாங்க நீங்க பதிங்க நான் காசு செட்டில் பண்ணிட்டு வரேன்னு கெளம்பி வெளிய போனாங்க. கண்ணு மறைவா கூட்டி போகவும் நமக்கு சொறியுது. இடுப்புல கட்ற அளவிருக்காதே பணம். என்னாங்கடான்னு. வக்கீலுக்கும் விக்கிற ஆளுக்கும் அதே குழப்பம். தூக்க தொறந்து கட்டு கட்டா எடுக்குறாரு. தல சுத்திப் போச்சு. குடுத்துட்டு அந்த புள்ளைக்கு அட்வைசு. பத்திரமா கொண்டு போ தம்பி. அதுக்குதான் தூக்குல போட்டு கொண்டாந்தேன். ஒரு பயலுக்கும் சந்தேகம் வராது பாரு. காலம் கெட்டு கெடக்குன்னு. யப்பா. இந்த வெவரம் புரியாம , அலட்டலா பேங்க்ல காச எடுத்து பொட்டில வெச்சிகிட்டு தண்டோரா போடாத குறையா விளம்பரம் பண்ணி எத்தன பேரு பறி குடுக்குறாங்க? பதிவு கட்டணம் கட்டிட்டு வரேன் தம்பின்னு சொல்லிட்டு போன ஆள பார்த்த அந்த ஆளு, வக்கீலு ஏன் நானுந்தான் கண்ணுல உங்களயெல்லாம் பட்டிக்காட்டான்னு சொல்லிட்டு திரியிறமேன்னு இருந்திச்சி.