Tuesday, February 22, 2011

பதிவேண்டாஆஆஆஆஆஆஆ!!!!

நண்பர்: உங்களுக்கு எத்தன பசங்கங்க?

பதிவர்: ரெண்டுதாங்க. மூத்தவ ப்ளாக்ஸ்பாட், இளையவன் வேர்ட்ப்ரஸ்.
------------------------------------------------------------------------------------------------------------------
விருந்தினர்: இது என்ன ஐட்டங்க? கூட்டு மாதிரியும் இல்ல, குழம்பு மாதிரியும் இல்ல, ரசம் மாதிரியும் இல்ல ஆனா எல்லா மாதிரியும் இருக்கு?

பதிவர்: அது எளக்கிய குழம்புங்க. சாப்புட்டு பாருங்க. பின் நவீனத்துவ ப்ரச்சனையே இருக்காது.
-----------------------------------------------------------------------------------------------------------------
தோழி:
என்னடி உங்கப்பா அடுத்த கட்டத்துக்கு நகர ஐடியா இல்லையான்னு கேக்குறாரு?

பதிவர் மகள்:ம்கும். படிக்காம டி.வி. பாக்கறனாம். ஃபெயிலாவப் போறன்னு அவங்க பாஷைல திட்டுறாரு.
-----------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்: ஏங்க நேத்து ஆடிட்டிங்னு லேட்டா போனதுக்கா உங்கூட்டம்முணி அந்த போடு போட்டுச்சு. சொல்ல வேண்டியதுதானே?

பதிவர்: இதெல்லாம் கண்டுக்காம கடந்து போய்ட்டே இருக்கணுங்க.
------------------------------------------------------------------------------------------------------------------
பதிவர்: ஏம்மா! பொடவ வாங்கிட்டு வந்து குடுத்தா பின்னூட்டமே போடாம போற?

பதிவர் மனைவி: ம்கும். சொல்லீட்டாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம்னு வம்பிழுப்பீங்க.
-------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்: என்னங்க அவருட்ட நேத்து பதிவுக்கு செம ஹிட்டுன்னு சொல்லிட்டிருந்தீங்க?

பதிவர்:
நேத்து லேட்டா போனதுக்கு ஊட்ல சொன்ன ரீஸனுக்கு விழுந்த அடிப்பா. கண்டுக்காத.
-------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்:
ஏங்க சோகமா இருக்கீங்க?

பதிவர்: பின்ன என்னங்க. கொஞ்சம் எதாச்சும் தகராருன்னா ஊட்டம்முணி பொதுவெளியில நின்னு கத்துது. ஆளாளுக்கு கருத்து சொல்றாய்ங்க
---------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்: என்னங்க ஊட்ல விருந்தாளிங்க வந்திருக்காங்க போலருக்கு.

பதிவர்: நீ வேறப்பா! ஊட்டுக்காரிகிட்ட கொஞ்சம் தகராரு. அது எப்பதான் ட்வீட்டுவாளோ, விடியறதுக்குள்ள அவங்கப்பன் சொம்ப தூக்கிட்டு வந்துடுறான்.
----------------------------------------------------------------------------------------------------------------------
ராமு: என்னங்க நம்ம பதிவன் தலைய நட்டுகிட்டு நடக்குறான்?

கதிர்:
வேலையப் பாருப்பா! ஏன்னு கேட்டா வாங்கின சார்ஜ் ஷீட்ட கூட வாசகர் கடிதம்னு சலம்புவான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கதிர்: எதுக்குங்க பதிவன் என்னமோ அலெக்ஸா ரேட்டிங் ஏறிப்போச்சுன்னு இன்னைக்கு பார்ட்டி குடுக்குறாரு?

ராமு: அட பக்கியே! அப்புடியா சொன்னான். இந்த மாசம் எரநூறு ரூபா இன்கிரிமெண்ட் போட்டாங்க. அதுக்கு அலட்டறான் போல.
-------------------------------------------------------------------------------------------------------------------------

ராமு: ஏங்க எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டுட்டிருக்கீங்க. 

பதிவர்: யோவ்! அத சண்டைன்னு சொல்லாதய்யா! அறச்சீற்றம்னு சொல்லு
-------------------------------------------------------------------------------------------------------------------------

34 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படியல்லாம் யோசிக்கிறாங்கக்கா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதுக்குள்ள அவர் வந்துட்டாரா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

kathir said...

அடிச்சு நகத்து ஆசானே
அடுத்தக் கட்டத்துக்கு!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னைய்யா இப்பிடியும் வம்பிளுக்கலாமோ.....

Thenammai Lakshmanan said...

அறச்சீற்றம்..:)) சூப்பர்..

நட்புடன் ஜமால் said...

ha ha ha

I laughed very much for one, but I can't tell that publically

if I tell then above will happen

Unknown said...

:)))))

//பதிவர்: அது எளக்கிய குழம்புங்க. சாப்புட்டு பாருங்க. பின் நவீனத்துவ ப்ரச்சனையே இருக்காது.//

class ....

ஓலை said...

செமையா இருக்கு.

ஓலை said...

ஆமா, பதிவர் வீட்டு கலியாணம்னா அம்புட்டு ஜனமும் ஒண்ணா ஆஜர் ஆயிடரதுள்ள சூட்சுமத்த விளக்கலையே?

settaikkaran said...

ஐயா, எது என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்பதற்காக, இரண்டு சாம்பிள்.......

//பதிவர்: ரெண்டுதாங்க. மூத்தவ ப்ளாக்ஸ்பாட், இளையவன் வேர்ட்ப்ரஸ்.//

வீட்டுக்கு மூத்தவன் வீணாப்போனவன்னு கிராமத்துலே சொல்லுவாங்க ஐயா! :-)

//பதிவர்: அது எளக்கிய குழம்புங்க. சாப்புட்டு பாருங்க. பின் நவீனத்துவ ப்ரச்சனையே இருக்காது.//

ஹிஹி! செம பஞ்ச்! :-)

இதுக்கும் நிறைய பின்னூட்டம் போட்டிருப்பேன். ஆனா, யாராவது சேட்டையின் நுண்ணரசியல்னு கலாய்ச்சிருவாங்களோன்னு தோணுது. அதனால், "கண்டுக்காம வுட்டுக்கிறேன்." :-)))

கார்த்திகைப் பாண்டியன் said...

அடிச்சு ஆடியிருக்கீங்க பாலா சார்.. நைஸ்..:-))

பா.ராஜாராம் said...

:-))

ராஜ நடராஜன் said...

நண்பேண்டாஆஆஆஅ எதிர் கீச்சாக்கும்:)

மரா said...

ஆசானே அருமை அருமை.

ராஜ நடராஜன் said...

//நண்பர்: என்னங்க ஊட்ல விருந்தாளிங்க வந்திருக்காங்க போலருக்கு.

பதிவர்: நீ வேறப்பா! ஊட்டுக்காரிகிட்ட கொஞ்சம் தகராரு. அது எப்பதான் ட்வீட்டுவாளோ, விடியறதுக்குள்ள அவங்கப்பன் சொம்ப தூக்கிட்டு வந்துடுறான். //

சிரித் தேன்:)

மதுரை சரவணன் said...

எப்படித்தான் யோசிக்கிறீங்களோ... வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

அய்யா... வணக்கம்.
மாறுப்பட்ட சுவையை தந்திருக்கிங்க....

ப.கந்தசாமி said...

கலக்கல பதிவு.

Unknown said...

haa...haaa

நசரேயன் said...

//அத சண்டைன்னு சொல்லாதய்யா! அறச்சீற்றம்னு சொல்லு
//

அடுத்த சண்டையிலே பயன் படுத்துறேன்

தெய்வசுகந்தி said...

:-))))

Chitra said...

பதிவர்: ஏம்மா! பொடவ வாங்கிட்டு வந்து குடுத்தா பின்னூட்டமே போடாம போற?

பதிவர் மனைவி: ம்கும். சொல்லீட்டாலும் டெம்ப்ளேட் பின்னூட்டம்னு வம்பிழுப்பீங்க.


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... இதுதான் எல்லாத்தையும் விட டாப்பு! பின்னிட்டீங்க!!!

sathishsangkavi.blogspot.com said...

..நண்பர்: உங்களுக்கு எத்தன பசங்கங்க?

பதிவர்: ரெண்டுதாங்க. மூத்தவ ப்ளாக்ஸ்பாட், இளையவன் வேர்ட்ப்ரஸ்...

ஐயா இது டாப்பு...

கல கல பதிவு..

Unknown said...

அல்டிமேட் கலக்கல்...

அகல்விளக்கு said...

எல்லாமே பஞ்ச்....

vasu balaji said...

@@நன்றி கருன்
@@நன்றிங்க சௌந்தர்
@@நன்றிங் கதிர்
@@நன்றிங்க மனோ
@@நன்றிங்க தேனம்மை
@@Thanks Jamaal:))
@@நன்றிங்க தஞ்சாவூரான்
@@நன்றி சேது
@@நன்றி சேட்டை. நீங்க பூந்து வெளையாடுங்க.
@@நன்றி கா.பா.

vasu balaji said...

@@நன்றி பா.ரா.
@@நன்றி ராஜாண்ணா
@@நன்றி மரா
@@நன்றிங்க சரவணன்
@@நன்றி சார்
@@நன்றி கலாநேசன்
@@நன்றிங் தளபதி
@@நன்றிங்க தெய்வசுகந்தி
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி சங்கவி
@@நன்றி செந்தில்
@@நன்றி ராஜா

'பரிவை' சே.குமார் said...

Very Nice.

ரிஷபன் said...

சான்ஸே இல்ல.. கையக் கொடுங்க..

ம.தி.சுதா said...

இந்த பதிவுலகம் எப்படி ஆட்டிப் படைக்குது பாத்தியளா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

Pranavam Ravikumar said...

Good One..வாழ்த்துகள்!

ராஜ நடராஜன் said...

நீங்களும் ஜோதியில் கலந்திட்டீங்களாக்கும்:)

த வ க ளை கண்டு பயப்படுவதாவது கலங்குறதாவது!

அப்படி நினச்சுகிட்டுத்தான் வானம்பாடிகள் கிட்ட ஒரு கேள்வி கேட்டுப்புட்டேன்.அவரு நமட்டு சிரிப்பு சிரிக்கிறாரு:)

பழமை கடைல அடிச்ச் ஒட்டறை இங்க வந்து ஒட்டிகிச்சு.