Sunday, April 5, 2009

தேர்தல் - Inside Story

இந்த தேர்தல் வந்தாலே அரசு ஊழியர்கள் பாடு கொஞ்சம் அல்லாட்டமாதான் போகும். அதிலயும் மாநில அரசு ஊழியர்கள் அது அவர்களுக்கு மக்களோட தினம் போராடி எகிறி பழக்கம். அவங்க பரவால்ல. இந்த மத்திய அரசு ஊழியர்கள் கோப்போட தான் பெரும்பாலும். அதனாலயே தேர்தல்னா கொஞ்ச பேத்துக்கு காலரா, மலேரியா, டெங்கு எல்லாம் சேர்ந்து வந்தா மாதிரி இருக்கும். அது என்னாமோ பாராளுமன்ற தேர்தல்னா மத்திய அரசு ஊழியர்கள களப்பலிக்கு. மாநில அரசு ஊழியர்கள் ஆவணம் வழங்க போகன்னு பாதுகாப்பு வலயத்துள்ள.

மாநகராட்சில நாய் பிடிக்க வருவாய்ங்க. பாத்திருக்கிங்களா? ஒரு நீண்ட கழில கம்பி சுருக்கு போட்டு. எனக்கு தெரிஞ்சி அரசு வாகனத்துல அதிகம் அடிபட்டது இதாத்தான் இருக்கும். அவ்ளோ சொட்ட. வாண்டுகளுக்கு இந்த நாய்வண்டிய கல்லால அடிக்கறதுன்னா அவ்ளோ குஷி. அப்பிடி வருவாரு. தாசில்தார். வரும்போதே விரைச்சிக்கிட்டு, யாரு கீழ்மட்டத்துல பொறுப்பான அதிகாரியோ அவர புடிக்கறது. ஹி ஹினு ஆரம்பிச்சி, அறிமுகப் படுத்திக்கிட்டு மெதுவா ஆட்கள் பட்டியல் வேணும், நீங்களே பண்ணுவிங்களா இல்ல மேலதிகாரிய பார்க்கறதான்னு(போய் பார்த்துக்க போய்யான்னா சரண்டராய்டுவாய்ங்க. அவ்ளோ சுளுவில பார்த்துட முடியுமா?). ஹி ஹி இதுக்கெதுக்கு. வழக்கமா பண்றது தானெ. நாமளே பண்றோம்னு சொல்லி, காபிய கீபிய குடுத்தா உறிஞ்சிட்டு, கிளம்பறப்போ வில்லன் ரேஞ்ச்ல ஒரு மிரட்டல், லிஸ்ட்லாம் பக்காவா இருக்கணும். நாம இன்கம்டாக்ஸ்ல வாங்கிட்டோம். ஒப்பு நோக்குறப்ப பிழை இருந்தா உனக்கு ஆப்புன்னு சொல்லிட்டு போவாய்ங்க. அவ்ளோதான். நாய் புடிக்கிற படலம் ஆரம்பிச்சிடும்.

தெரு நாயவாவது ஒரு மாட்டு ஒரு இளு. வண்டிக்குள்ள. இது அத விட கொடுமை. ஏங்க நீங்க சொல்லுங்க. ஒரு சாமானியனுக்கு, பால்பூத் தெரியும், ஓட்டல் தெரியும், மருந்து கட தெரியும். நம்ம வீடு எந்தக் காவல் நிலையக் கட்டுப்பாட்டில வருதுன்னு கேட்டா என்னாங்க தெரியும்.காவல் நிலயத்துக்கு எதிர்ல கொலை கொள்ளைன்னு கம்ப்ளைன்ட் பண்ண போனாலே, இது எங்க ஏரியா இல்ல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஏதோ ஒண்ணிலனு சொல்லுவாய்ங்க. இப்படியான மிரட்டல் தகவலெல்லாம் கேட்டு ஒரு தகவல் பட்டியல குடுப்பாய்ங்க. நிரப்பி குடுன்னு. இவரு பங்குக்கு சேர்த்து மிரட்டுவாரு. தரலைன்னான்னு.

இப்படி எல்லாம் அடி பட்டு மிதிபட்டு வடிவேலு ரேஞ்சுக்கு கரம்பேரி, ஏரி எத்தன பார்த்ததுன்னு வில்லங்கமா ஒரு சொலவட இருக்கே. அப்படி கொள்ள பேரு இருப்பாய்ங்க. இவங்கதான் பெரிய ஆறுதல். வேணாம் வலிக்குது மாதிரி இருக்கறவங்களுக்கு இவங்க சொல்ற ஆறுதல் இருக்கே. அட அட. ஏங்க பயப்படுறீங்க. அத்தன பேத்தையுமா புடிச்சி போட போறான். அப்பிடி கெரகம் சரியா இல்லன்னா பதிலுக்கு ஆள தயார் பண்ணலாம் விடுங்கன்னு சமாதானம் பண்ணுவாய்ங்க.

இத நாடி விரும்பிப்போற கும்பல் ஒண்ணு இருக்கு. பதவிக்கு தக்கண படி. தேடி தேடி குழு குழுவா வெளியூருக்கு விரும்பிக் கேட்டுக்கிடுறது. வேணாம். வேணாம்னு எல்லாம் சொல்லிக்கிட்டிருந்தா அவனா மிச்சம் மீதி, உடஞ்சது உடயாததுன்னு பக்கத்து பஸ் ஸ்டேன்டுக்கு 15 கி.மீ தூரத்துல இருக்கிற ஊரா போட்றுவாய்ங்க.அங்க போனா வெளியூரா? கொஞ்சம் அலம்பல் பண்ணலாம். உள்ளூர்னா வாடி இருக்கு உனக்கு. அஞ்சாம் நம்பர் ஊட்டு மாடில தான கீரனு பாசமா மிரட்டுவாங்க. இப்பிடி போன இடத்துல கச்சி ஆளுங்க வந்து பொறுப்பா எல்லாம் வசதியா இருக்கா என்னான்னு கேட்டு, சண்ட சச்சரவில்லாம சாப்பாடு, ஊக்க‌ பான‌ம் எல்லாம் பொறுப்பா செய்வாய்ங்க‌. த‌க‌ராரு ப‌ண்ணி என்னா பண்ண‌ப் போற‌ம். வேணாம்னா வில்ல‌ங்க‌ம். அதுல‌யும் பொறுப்ப‌திகாரின்னா அல்லு க‌ண்டுடும். அது அது கூட‌ வ‌ந்த‌து பிரியாணியும் பிராந்தியும் அடிச்சிட்டு தனியா விட்டு உல்லாசத்துக்கு கிளம்பிடும். இவரு வடிவேலுக்கு ட்ராக்ல அடிபட்ட பாடிக்கு ராக்காவல் போட்டா மாதிரி உக்காந்திருப்பாரு.

இவிங்களுக்கு என்னா பண்ணணும்னு ஒரு அதிரடி பயிற்சி குடுத்து தான் அனுப்பறது. ஒரு பயத்துக்கும் தேர்தல் விதிமுறைன்னு ஒன்னு இருக்கே. அது என்னான்னு பாப்பம்னு ரோசனயே வராது. படிச்சென்ன பண்ண போறம். விதிய சொன்னா விதி முடிஞ்சாலும் முடிஞ்சிடும்னு நடுங்கறப்ப. எனக்கு மை வெக்கிற வேல. அது சொல்லிட்டாங்க ஆள்காட்டி விரல்ல வைக்கணும். எனக்கு பட்டியல் சரி பார்க்குற வேல. தொண்டர்கள் குத்திட்டோம். அடிச்சிக்கன்னா மரியாதயா அடிச்சா வேல முடிஞ்சது. அதுக்கும் மேல ஒரு அலம்பல் பார்டி வந்து நாந்தேன் கோவாலு. அதெப்டி என் ஓட்டு விளுகும். விரல பாருன்னு நீட்டினா எல்லாருமா எகிறி அவன ஆமாம் நான் ஓட்டு போட்டேன். மையாவது வெச்சி விடுங்கப்பா. இல்லாட்டி ஓட்டக் கூட பாதுகாப்பா வெச்சிக்க தெரியல உன்ன நம்பி எங்கப்பன் என்ன குடுத்தான்னு பொண்டாட்டி துப்புவான்னு வெச்சிக்கிட்டு போறது தான்.

கொஞ்சம் பட்டணமா இருந்தா பிடுங்கல். இந்தியன்ல வர க்ரேசி மோகன் மாதிரி தேர்தல் விதி சொல்லி ஹிந்துல எழுதறேன்னு சிலது வரும். 49-O, கள்ள ஓட்டுக்கெதிரா புகார்னு வந்தா, அது இங்க இல்ல வட்ட அதிகாரி அலுவலகத்தில. இல்லாட்டி ஒரு விண்ணப்பம் தான் இருக்கு. இருங்க ஜெராக்ஸ் எடுக்க அனுப்பறேன்னு அலக்கழிச்சா திட்டிண்டு போய்டுவாய்ங்க.

ஒரு மாதிரியா ஒப்பேத்தி களம் கண்டு வந்து அனுபவங்கள பகிந்துக்கற அழகே அழகு. இதுக்கு நேர்மாறா கைப்புள்ள கேஸ் சிலது இருக்கு. இது பெரும்பாலும் மகளிரணி. உசாரா தேர்தல் தேதி தெரிஞ்சதுமே சிங்கப்பூர்ல இருக்கிற தம்பிய பாக்க, துபாய்ல இருக்கற புருசன பார்க்க, எதுமில்லன்னா வெளிநாட்டு டூர்னு லீவ் வாங்கிடுவாய்ங்க. சிலது செரியா 2 நாளுக்கு முன்னாடி மாமனார் மாமியார அமுக்கி காசு போனா போச்சுன்னு அதி தீவிர சிகிச்சை பிரிவில சேர்த்து ஒரு சர்டிபிகேட். இன்னும் சிலது ரத்த தானம் குடுத்துட்டு நெம்ப வீக், நிக்கவே முடியாதுன்னு எல்லாம் வரும். நாய் சேகர் மாதிரி பேஸ்மட்டம் வீக் கேஸ் சிலது போனா என்னாகும், போவாட்டி என்னாகும்னு சோறு தண்ணி இல்லாம கிடந்து யோசிச்சே போகாம விடும்.

பாவப்பட்ட ஜென்மங்க இதுங்கதான். என்னமொ ரொம்ப ஒழுங்கா தேர்தல் நடந்தா மாதிரி, இதுங்க மேல ஒழுங்கு நடவடிக்கைன்னு அதிகாரிங்க ஒரு பக்கம். நாமல்லாம் போய்ட்டு வரல. இது 10வது தேர்தல். ஜாலியா போய்ட்டு வந்திருந்தா இப்படி குத்த கேசு ஆகாம இருக்குமா இல்லயான்னு வெறுப்பேத்துவாய்ங்க.

சரி. இவ்வளோ ராமாயணம் எதுக்குடா வெண்ணெய்னு கேக்கறிங்களா. நிஜம்மா சொல்லுங்க. இத படிக்கிறவங்கள்ள பாதிக்கப் பட்டவங்கள தவிர மத்த பேருக்கு இந்த உள்குத்து தெரியாது தானே.இந்த 49 -ஒ வேலைக்காவாதுன்னா பேசாம எல்லாத் தொகுதிலயும் யார்னே தெரியாம ஒரு சுயேச்சை நிக்கும். அதுக்கு குத்தினா அலம்பல் இல்லாம நாம நினைச்சத சாதிக்கலாம். அதுங்களும் டிபாசிடாவது வாங்கும்ல. அதான்.

அறிவியல் வரம்

அழிவுக்கு வழிகோலும் அறிவியல் உலகில் சிலர் ஆக்கத்துக்கும் பாடு படத்தான் செய்கிறார்கள். அரக்கர்களின் குண்டு வீச்சில் எத்தனை குழந்தைகள் இப்படி. இவர்களுக்கு இது கிடைத்தால் எத்தனை அறிஞர்கள், எழுத்தாளிகள், ஆசிரியர்கள் உருவாகலாம்.பாருங்கள்
Bionic Hand

_________________________________________________

Saturday, April 4, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல-6

வடிவேலு: நாளை நமதே நாஆஆஆளை நமதே...

பார்த்தி:ஏய். இங்க வா. என்ன? ஆள பார்த்ததும் பம்முவ. இன்னைக்கு பாட்டு, துபாய் டிரஸ்ஸூ. ஏறிப்போச்சா.

வடிவேலு:ஏய். மரியாத மரியாத.இந்த மிரட்டலெல்லாம் வேணாம். நம்ம ரேஞ்சே வேற.

பார்த்தி:அப்டிங்களா. இப்பொ என்னா டுபாக்குரு நான் தெரிஞ்சிக்கலாமா?

வ‌டிவேலு:தம்பி. அய்யா இப்போ சுஸ்ஸுக்கு போய்க்கிருக்கேன். வந்து பார்க்கலாம்.

பார்த்தி: ஏன் அங்க‌ மாட்டுக்கு க‌ழுவ‌ ஆளெடுக்க‌றாங்க‌ளா. அல‌ம்பாம‌ சொல்லிட்டு அப்புற‌ம் ந‌வுரு.

வ‌டிவேலு:நக்கலு.ம்ம்ம். ச‌ரி. அண்ணன் சொல்ல‌லைன்னா வ‌ருத்த‌ப் ப‌டுவ‌. சொல்றேன். ந‌வ‌னீத‌ம் ந‌வ‌னீத‌ம்னு ஒரு புள்ள. ந‌ம்ம‌ ஊருதான். சின்ன‌புள்ள‌ல‌ பார்த்த‌து. பாச‌க்கார‌ புள்ள‌. இப்போ சுஸ்ஸுல‌ பெரிய‌ வேலைல‌ இருக்கு. இல‌ங்க‌ பிர‌ச்ச‌ன‌ அந்தம்மா பார்க்குதாம். அன்னைக்கு யூ டீப்ல‌ நாம‌ இங்க‌ த‌மிழ்நாட்டுக்கு அதிக‌ அதிகார‌ம் கிடைக்க‌ வ‌ழி சொன்ன‌ம்ல‌. இங்க‌ இருக்க‌ற‌ கேன‌ப்ப‌ய‌ புல்லா சோக்குனு நினைச்சி சிரிச்சிட்டு போட்ட்டாக‌. ந‌ம்ம‌ ஐடியா புரியாம‌. அந்த‌ம்மா பார்த்துட்டு அடுத்த‌ ப்ளேன் புடிச்சி ஓடியாந்து, அண்ணே அச‌ந்து போய்ட்ட‌ண்ணே. இந்த‌ ஐடியா ந‌ல்லா இருக்க‌ண்ணே. இல‌ங்க‌ல‌ ப‌ண்ண‌ முடியாதான்னு கேட்டுச்சி. ஏம்மா முடியாது. அனுமாரு அங்க‌ தான‌ ப‌ண்ணாரு. வ‌ன்னி வ‌ட‌ தொங்கல்ல‌. கொளும்பு தென் தொங்க‌ல்ல. அவனுக்கும் வேணாம் இவனுக்கும் வேணாம். அலுங்காம நகர்த்தி ந‌டு சென்ட‌ர்ல‌ ரென்ட‌யும் ப‌க்க‌த்து ப‌க்க‌த்துல‌ வெச்சிட்டா ச‌ம‌ அதிகார‌ம்னு சொன்ன‌து தான். காலைல‌ போனு. அதுக்கு ச‌ரியா சொல்ல‌ தெரிய‌லையாம். பான்கிமூனோ எவ‌னோ ந‌ம்ம‌ள‌ கூட்டியார‌ சொல்லி எலிகாப்ட‌ர் அனுப்ப‌றாய்ங்க‌ளாம். இன்னும் அர‌ம‌ணில‌ உசில‌ம்ப‌ட்டி ப‌ஸ் ஸ்டேன்ட்ல‌ நான் இருக்க‌ணும். வ‌ர‌ட்டா.

பார்த்திபன்: பார்த்துடா. நீ அனுமார மாதிரியே இருக்கன்னு உன்னயே பண்ண சொல்லிட போறாங்க.
---------------------------------------------------------------------------------------------

வடிவேலு: ஏம்பா. ஒண்ணு கேக்கவா. குண்டக்க மண்டக்க பதில் சொல்லாம ஒளுங்கா சொல்லுவியா?

சத்யராஜ்: என்னா கேளு.

வடிவேலு: இல்ல. நீயும் சும்மா இருந்த என்ன புடிச்சி ஸ்போர்ட்ஸ் பார்க்கலாம்னு கூட்டியாரயே. ஒண்ணு கூடவா உருப்படியா ஸ்போர்ட்ஸ் தெரியாது உனக்கு. இப்பொ பாரு. கலியாணத்துக்கு போய்கிருந்த ஆள கூட்டியாந்து இங்க பீச்சு மண்ணுல கைப்பந்து மேச்சுன்னு உக்கார வெச்சிருக்க. வேட்டி அளுக்காயிருமேன்னு தூக்கி விட்டு அன்ராயரோட உக்காந்து பார்க்கவே இந்த அரிப்பு அரிக்குதே. இவிங்க எப்டிப்பா சொரியாம கொள்ளாம பந்த அடிச்சிட்டிருக்காய்ங்க?
---------------------------------------------------------------------------------
வடிவேலு:நீ ஆயிரந்தான் சொல்லு வெள்ளக்காரன் வழியே தனி!

ச‌த்ய‌ராஜ்: அப்டி என்னா வ‌ழிய‌ க‌ண்ட‌.

வ‌டிவேலு:அங்க‌ பாரு. வாழ்க்கைல‌ விர‌க்தி அடைஞ்சி த‌ற்கொல‌ ப‌ண்ணிக்க‌ போற‌ கேஸெல்லாம் ஒண்ணாக் கூட்டி கால்ல‌ க‌ய‌த்த‌ க‌ட்டி விட்டு, அத‌ல‌ பாதாள‌த்துல‌ குதி. விதி முடிஞ்சா செத்துபோவ‌. இல்லாட்டி பொத்திட்டு போய் பொழைக்க‌ற‌ வ‌ழிய‌ பாருன்னு. அங்க‌ பாரு. அது அது வௌவால் க‌ண‌க்கா தொங்குற‌த‌. இப்போ அவ‌னுக்கு புரியுமா இல்லயா. ந‌ம‌க்கு ஆயுசு கெட்டினு.

ச‌த்ய‌ராஜ்: அட‌ கெரகம் புடிச்சவனே . இதும் ஒரு விளையாட்டு. பங்கி ஜ‌ம்பிங்.

வ‌டிவேலு: ம‌ன்கி வால்ல‌ தொங்கறா மாதிரி தொங்க‌றான். அப்ற‌மென்ன‌ ப‌ங்கி. மங்கினு வெச்சிட்டு போவ‌ வேண்டிய‌து தான‌.
---------------------------------------------------------------------------------------
வ‌டிவேலு: ஏம்பா. நீ என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே?

ச‌த்ய‌ராஜ்: அது உன் தொழிலு. நான் ஏன்டா பண்ணப்போறேன்.

வ‌டிவேலு: அட‌ சும்மா இருப்பா. எப்போ பாரு விளையாட்டு. பின்ன‌ என்னா. ஃபுட்பால் மேட்ச் பார்க்க‌லாம்னு கூட்டியாந்து இங்க‌ உக்கார‌ வெச்ச‌. அப்போவே நினைச்சேன். என்னாடா வ‌ல‌ய‌ காணோம். மெதுவா க‌ட்டுவாய்ங்க‌ போல‌ன்னு இருந்தா, முக‌மூடி கொள்ள‌க்கார‌ன் மொத்த‌ பய‌லும் ஒண்ணா சேர்ந்து வாராய்ங்க‌. அவ‌ங்க‌ளுக்குள்ள‌யே ப‌ந்த‌ ல‌வ‌ட்டிட்டு போக‌ பார்க்குது ஒரு மூதேவி. கேட்டா ஃபுட்பாலுங்க‌ற.

சத்தியராஜ்: அடேய் வெண்ண. இது அமெரிக்கன் ஃபுட்பால்டா.

வடிவேலு: யோவ் விட்டா அமெரிக்கால காலுக்கு பேரு கைன்னு சொல்லுவ. போய்யா.
----------------------------------------------------------------------------------------------