Tuesday, July 19, 2011

தலைப்பில்லாக் கவிதைகள்

துளிர்த்த பச்சையின் சிலிர்ப்பில்
பழுத்த இலையுதிர்வின் வலியை
உணராதா மரம்?
உதிரினும் 
மண் புகுந்து
தன் உயிர்கலக்கும்...


***
ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கேக்
என்றாள் குழந்தை

ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கண்
என்றிருந்தது எனக்கு..



****


குடை ராட்டினமாய்
மேலும் கீழுமாய்
அலைபாய்கிறது மனது
படி, எழுது, படம் பார்,
நட, ஓடு,
ஏதாவது செய்
என்றார்கள்..
ஆறோ, குளமோ,
ஏரியோ, கடலோ
எங்கு எறிந்தாலும்
கரையொதுங்கும்
கட்டைபோல்
மனமொதுங்குகிறது
நினைவு..



****


குடுவையில் அடைபட்டிருந்தேன்
இறுக்கம் உணர்ந்ததில்லை
அல்லது பழகிவிட்டிருந்தது
உன் விரல் தொட்டுத் திறந்தாய்
மென் மொழியால்
வெளி காட்டினாய்
உள்ளும்..
ரந்து விரிந்திருந்ததென் உலகம்
மொழியற்று
வழியற்று
திசை தப்பி
மீண்டும் குடுவைக்குள் நான்
இறுக்கம் திணறடிக்கிறது
வெளியில்லை
உள்ளும்..



****
அழுதழுதலைபாய்ந்து
அணைத்த கையொடுங்கி
ஆவலாய் முலையுண்ணும்
குழந்தையின்
முதல் ’ம்’க்கும்
உண்டபிறகான
’ஹா’வுக்கும் ஈடாக
நன்றிக்கும்
நிறைவுக்குமான
வார்த்தைகள்
எந்த மொழியிலும் இல்லை

***
Post a Comment