Tuesday, November 20, 2012

இணையத் தமிழ்ச் சங்கம்

முருகன்: தந்தையே தமிழகத்தில் மீண்டும் தமிழுணர்வு தழைத்தோங்குகிறது தந்தையே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததொருகாலம். இப்போது டொட்காம் வைத்து வளர்க்கிறார்கள். தந்தையீர் உதவ வேண்டும்.

சிவன்: என்ன வேண்டும் கேள் மகனே.

முருகன்: புலவர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்து மீண்டும் தமிழகத்தில் பிறக்கச் செய்ய வேண்டும்.

சிவன்: ஆகட்டும். யாரங்கே! சித்திரகுப்தனிடம் புலவர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் க்ராஷ் கோர்ஸ் கொடுத்து ஜிமெயில் கணக்கு ஆரம்பித்து பூலோகத்துக்கு அனுப்பு.

முருகன்: நன்றி தந்தையே.

அவ்வையார்: ப்ளாகும் ப்ளஸ்ஸும்
                             ட்வீட்டும் முகநூலும் இவை
                             நான்கும் கலந்துனக்கு
                            ஸ்டேடஸ் உடுவேன்
                            துங்கக் கரிமுகத்துத் தூமணியே
                            நீ எனக்கு அன்லிமிடட் ப்ராட் பேண்ட் தா!
விநாயகர் : அவ்வையே! உன் அன்புக்கு மெச்சினோம்.

முருகன்: அவ்வையே! உனக்கு இண்டர்நெட் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்து தமிழ் வளர்க்க சொன்னது நான். நீயோ அண்ணனிடம் டீலிங் பேசுகிறாய். தமிழ்ப் பண்பாட்டைக் காட்டிவிட்டாயல்லவா! நீ விடும் ப்ளஸ்ஸெல்லாம் கைய புடிச்சி இழுத்தியா ஆகக் கடவது.

அவ்வை:முருகா! குமரா! என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்...

முருகா: அவ்வையே! போதும் உன் சமாதானம். நான் உன்னை ப்ளாக் செய்துவிட்டேன். நீ டேக் பண்ணாலும் எனக்கு மெசேஜ் வராது.

அவ்வையார்: இதுவும் கடந்து போகும்.

அவ்வையார்: வள்ளுவரே! ஏன் வாட்டமாய் இருக்கிறீர்?

திருவள்ளுவர்: என்னத்தைச் சொல்ல சகோ! என் நிலமை இப்படி ஆயிருக்க வேண்டாம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்று குறளெழுதினேனாம். பாலியல் குற்றத்தில் பிடிக்கப் போகிறார்கள் என்று திருமூலர் சொல்கிறார்.

அகநாழிகை: கவலை வேண்டாம் வள்ளுவரே. நீர் அறம் பொருள் மட்டும் அப்டேட் பண்ணும். அது ஆவின் பாலை விட மட்டமாக இருக்கும். காமத்துப்பால் காண்ட்ராக்ட் போகன் என்று கோத்து விடுவோம்.

வள்ளுவர்: நன்றி கவிஞரே.

அவ்வையார்: ஹி ஹி. திருவள்ளுவரே பழைய படிக்கும் பாதில உடைஞ்ச பென்சில் ஊக்கு மாதிரி செய்யுள் எழுதாதீரும். செய்யுளெல்லாம் சீந்துவார் இல்லை. கவிஞருக்குதான் மவுசு.

அகர முதல
எழுத்தெல்லாம்
ஆதி பகவன்
முதற்றே
உலகு

இப்புடி எழுதணும். சிரமம்தான். நான், நாலடியாரெல்லாம் அப்பவே இப்படி.

போகன்:: அவ்வையே கர்வம் வேண்டாம். அமுதம் கங்கையிடம் அப்ரசண்டியாகி கவிதை எழுதப் பாருங்கள். நீங்கள் ஒரு கவுஜ ப்ளஸ் விடுவதற்குள் 50 கவுஜ ஃப்ளீட்டே விடுவார்.

அவ்வையார்: ஆ! தொல்காப்பியரே! இதைக் கேட்பார் இல்லையா? இலக்கணம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா?

தொல்காப்பியர்: அட அப்டி ஓரமா குந்தும்மா! நானே கடுப்புல இருக்கேன். இலக்கணம் பிலாக்கணம்னு

அவ்வையார்: தொல்காப்பியரே! என்ன மொழி இது? தமிழ் போலிருக்கிறது. ஆனால் ஒன்றும் புரியவில்லை..

தொல்ஸ்: இப்ப புரியுதா? தமிள் இழமை வாய்ந்தது. தழ தழவெண்று செளித்தோங்குவது. பழ்ழம் கண்டு பாயும் நீர் போல் நம் மனதை நிரப்பி கழிப்பிக்கச் செய்வது...

அவ்வையார்: அய்யோ தொல்காப்பியரே. தமிழன்னை இந்த நிலையிலா இருக்கிறாள்?

தொல்ஸ்: இன்னாது? ஒரு கும்பலே வந்து மிரட்டிட்டு போயிருக்கிறார்கள். திருத்து அல்லது திருத்தப் படுவாய்னு. என் ஃபாலோயரைப் பார்த்தாயா? சித்தார்த் ஃபேமிலில மூணு பேர், ஹிட்டன் ஐடில ஜெ.மோ...அவ்வ்வ்ளோதான்

அவ்வையார்: பாவம் நீர். இதோ செம்புலப் பெயநீரார். ஏன் அழுது கொண்டு வருகிறார்?

செ.பெ: அன்னையே! நீரே சொல்லும். யாயும் ஞாயும் எழுதியது நாந்தானே

அவ்வையார்: யார் இல்லை என்றது?

செ.பெ: இதோ இந்தப் பெரியப்ஸ் டைனோஜி சொல்கிறார் எழுதியது வைரமுத்து. பாட்டு போட்டது ரகுமானு. நறுமுகையே நறுமுகையே அவர் எழுதியதை நான் சுட்டு நான் எழுதியது என்கிறேனாம்.

டைனோ: லிங்க் இதோ. நீங்கள் எழுதியதற்கு சுட்டி இருந்தால் கயுவி கயுவி ஊத்துங்கள்.

அவ்வையார்: தொல்காப்பியரே! கயுவி என்றால்

தொல்ஸ்: ஏ கிழவி! ஓடிப் போயிடு. கயுவி கியுவின்னா ப்ளாக் பண்ணிடுவேன்.

அவ்வையார்: நீர் என்ன ஓய் ப்ளாக் செய்வது. இப்போதுதான் தெரிகிறது ஏன் உமக்கு ஃபாலோயர் இல்லை என்று.

ரா சு: தொல்காப்பியரே! உங்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதுதான். எதற்கும் ஸ்ரீதர் நாராயணனை ஃபாலோ செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதுக்குன்னு பஞ்சாமிருதத்துல பிரியாணி தயிர்பச்சடி லெக்பீசெல்லாம் கலந்தா மேரி சிலது எடுத்து வச்சிருக்கார். அதுலருந்து நாலு எடுத்து உட்டார்னா தெளிஞ்சாலும் தெளியும். இல்லைன்னா ஞை ஞைன்னு போவலாம்.

சீத்தலை: அய்யாங். ஞை ஞை நானு நானு. சைபர் போலீஸ் இவிங்கள புடிச்சி கேஸ் போடுங்கைய்யா.

இளங்கோவடிகள்: அய்யோ என்னை விட்டு விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள் (ஓடி வருகிறார்)

அவ்வை: இளங்கோவடிகளே நில்லும். ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள். உங்களைத் துரத்தும் இவர்கள் யார்? ஏன் துரத்துகிறார்கள்?

இளங்கோவடிகள்: அன்னையே! தமிழகத்தில் காவிரி வறண்டு விட்டதென்று தெரியாமல் கர்நாடகம் சென்று அங்கே காவிரியோரம் உட்கார்ந்து மணிமேகலையின் கொள்ளுப் பேத்தியை வைத்து ஒரு காவியம் படைக்க விழைந்தேன். ஒரே ஒரு பாட்டெழுதினேன். இதோ இந்த ஜீவ்ஸ் வெடுக்கென்று காபி பேஸ்ட் செய்து மச்சி இதப் பாரேன் என்று கேவியாருக்கு ஷேர் போட்டார். அந்த மனிதர் பிரித்து மேய்ந்து  ‘மச்சி! இதப் பாருடே’ என்று சுபைருக்கு டேக் செய்தார். மூவரும் சேர்ந்து தளை தட்டுகிறது, கிளை முட்டுகிறது என்று கலாய்க்கிறார்கள்.

சிலப்பதிகாரம் எழுதிய எனக்கா தளை தட்டுகிறது என்று அங்கே போய்க்கொண்டிருந்த ஜ்யோவ்ராம் என்ற ஒருவரிடம் காட்டி நீதி கேட்டேன்.

எப்படிங்க இப்படி மொக்கையா எழுதீட்டு இதைக் காப்பியம்னு வேற சொல்றீங்க என்று சொல்லிவிட்டார்.

அப்துல்லா: அண்ணே அழுவாதண்ணே. அக்கா சொல்லுக்கா. எல்லாம் நம்ம பயகதான். இப்ப என்னாகிப் போச்சு. ஆரம்பமே காப்பியம், ஓப்பியம்னா இங்கல்லாம் ஒத்துக்கிர மாட்டாங்க. அதும் இவிங்க வில்லங்கம் புடிச்சவங்க. மொதல்ல என்கிட்ட குழந்தை கவிதை எழுதப் பழகுங்க. அப்புறம் விதூஷக்காட்ட சேர்த்து விடுறேன். சிலப்பதிகாரத்துல ஒரு பாட்டை எடுத்து போட்டு டிங்கரிங் பண்ணி சயனைட் கவுஜன்னு டேக் பண்ணுங்க. பய புள்ளைங்க யம்மேன்னு தெறிச்சி ஓடுவாய்ங்க.

கம்பர்:மகனே ஜீவ்ஸ்! என்னை மாதிரி கவிஞன் உண்டா என்பாயே. நெட்டு புடுங்கிட்டான். சப்ஸ்க்ரிப்ஷன் கட்டுவாயா என் சடையப்ப வள்ளலே.

ஜீவ்ஸ்: கம்பு மாம்ஸ்! இப்படித்தான் ஒரு கதை சொல்லுவாய்ங்க. உம்பாட்ட படிச்சேன் எனக்கு சந்தோசமா இருந்துச்சு. என்னா எழுத்துடான்னு எழுதுனேன் உனக்கு சந்தோஷமாச்சு. அதோட முடிஞ்சது. நீங்க என்ன பண்றிங்க கேளுங்கள் கிடைக்கும்னு ஒரு க்ரூப்ல சேர்ந்து யார்னா ராஜாவ போய் கேளுங்க.

அவ்வை: சரி வாரும். அதியமான் எனக்காக நெல்லிக் கனி கொடுத்தவன். சப்ஸ்க்ரிப்ஷனா கட்டமாட்டான். மன்ன்ன்ன்ன்ன்ன்னா

அதியமான்: அவ்வையே! மன்னர் மரபெல்லாம் ஒழிந்து நானே மானியத்தில் உயிர் வாழ்கிறேன். உங்களுக்கு என்ன கொடுப்பது? இணையத்தில் அட்வைஸ் மட்டுமே எல்லாரும் தயக்கமின்றி கொடுப்பது பழக்கம். கூகிள் அட் சென்ஸ் விட்ஜட் போட்டு காசு தேத்தப் பாருங்கள். வர்ட்ட்ட்டா..

அவ்வையார்: முருகா! ஞான பண்டிதா. உன் கோபம் தணிந்ததா?

முருகன்: அவ்வையே! ஃபேக் ஐடியில் வந்து புலம்புகிறாயே இது உனக்கு அழகா? இனி என்ன எழுதினாலும் அம்பலவாயறும், ஜாக்கியும் பிழைதிருத்தினால்தான் டொட்காம் ஏற்கும்.

ஜாக்கி: உ.த அண்ணே. சொல்லி வைண்ணே. நாம்பாட்டுக்கு தாதாயிசம் போல...

உ.த: இருய்யா இருய்யா. ஆரம்பிக்காத. என்னாச்சி இப்ப

ஜாக்கி: உங்காளு அநாவசியமா என்ன சீண்ட்றான். ஓ...

உ.த: அய்யோ ஸ்டாப் ஸ்டாப். நான் பாத்துக்கறேன். அப்பனே முருகா இது ரத்த பூமி. நீயும் உங்கப்பனும் சேர்ந்து எதுனா பண்ணி வச்சா நீ ஏண்டா சொம்பு தூக்கிட்டு பஞ்சாயத்து பண்ணலன்னு என்ன கலாய்ப்பாங்க. அப்புடியே இதெல்லாம் எரேஸ் பண்ணிட்டு போ ராசா. ஸ்ஸ்ஸப்பா! நாம சொன்னா எவன் கேக்குறாய்ங்க. 66 ஏ வந்தாதான் அடங்குவானுங்க.

Tuesday, October 2, 2012

நறுக்னு நாலு வார்த்த V 6.1

ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி வற்புறுத்தல்

நல்ல சாமிய பார்த்தா நாறசாமிக்கு பொறுக்காதே.
----------------------------------
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஈரோட்டில் உண்ணாவிரதம்

பத்தாயிரம் ரூவா கட்டினா டெய்லி ஒரு க்வார்ட்டரு பிறந்த நாளைக்கு ஒரு ஃபுல்லுன்னு எதுனா திட்டம் வருதா?
___________________________________
கொலையான வீட்டில் கொள்ளையடித்த போலீசார்!

அப்ப கொள்ளை போச்சுன்னு புகார் பண்ணா கொலையும் பண்ணுவாய்ங்களோ?
-----------------------------------
சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் -ஜெ

உங்க கட்சில ஒரு ஆம்பிளையாவது நிக்குறாய்ங்களா. மொதல்ல நேரா நிக்கச் சொல்லுங்கம்மா.
-----------------------------------
நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு! நகைச்சுவை நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்டு!

வில்லன காமெடி பீசாக்கின காமெடியன் வில்லன்.
------------------------------------
வி.ஏ.ஓ. கீ-ஆன்சர் வெளியீடு

பரிட்சை முடிஞ்சி வெளியிட்டதால என்னை மாதிரி விடை தெரியாதவங்க பாஸ் ஆக வாய்ப்பு பறிபோச்சுன்னு எவனாச்சும் கோர்ட்ல கேஸ் போடாம இருந்தாச் சரி.
-------------------------------------
திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு இல்லை: கலைஞர் பேட்டி

அதுக்கெல்லாம் சொரணைன்னு ஒன்னு வேணும்
-------------------------------------
மது மீது மோகம்! மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

மது யாரு அவர் காதலியா?
-------------------------------------
இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா? ராமதாஸ் கேள்வி

படிச்சு டாக்டரான உங்களாலயே முடியாது. பட்டத்துல டாக்டரான அவிங்க என்ன செய்வாங்க மருத்துவரைய்யா
-------------------------------------
அக்டோபர் 5ல் மனித சங்கிலி

தலைவர் போராட்ட லிஸ்ட்ல இதுக்கொரு எண்ட்ரியப் போடேய்.
--------------------------------------
மத்திய மந்திரி சபையில் தி.மு.க. சார்பில் புதிதாக யாரும் இடம் பெறமாட்டார்கள்: கலைஞர் அறிவிப்பு

என்னமோ இவர கெஞ்சினா மாதிரியும் இவரு முடியாதுன்னு சொல்லிட்டா மாதிரியும் என்னா பில்டப்பு?
--------------------------------------

Tuesday, August 14, 2012

வீடு

'வனக்கம் சார்! மெனையா பாக்கறீங்களா? ஊடு இர்ந்தா பரவால்லியா?’

‘வணக்கங்க. மனை இருந்தா நல்லது. இல்லைன்னா ரொம்ப பழைய வீடு இருந்தாலும் பரவால்ல’

‘இன்னா பஜ்ஜிட்ல பாக்குறீங்கோ?’ (கேட்கும்போதே குத்துமதிப்பா எவ்வளவுக்கு நான் ஒர்த் என்ற எக்ஸ்பர்ட் அனலிஸிஸ்)

‘இடம் பிடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்ல’ (ஒன்னைய மாதிரி எத்தன பேருட்ட நான் பதில் சொல்லிருப்பேன்)

‘அப்பார்மெண்டு வோணாவா?’ (உன்னப் பாத்தா தனியா மனை வாங்கி கட்டுற அளவுக்கு ஒர்த்தா தெரியலையே)

‘இல்லைங்க. அபார்ட்மெண்ட், டூப்லெக்ஸ் எல்லாம் வேணாம்.’

‘கொள்த்தூர் பிஜ்ஜு கிட்ட சூப்பரா ஒரு எடம் இருக்குது பாக்குறியா’ (ங்கொய்யால! உன் தம்புடி எப்புடின்னு கண்டு புடிக்கறேன் மவனே)

‘பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம் இதுக்குள்ள சொல்லுங்க சாமி’

‘லோக்கோ டேசன் கிட்ட ஒரு வெடம் கீது. நாப்பத்தஞ்சிக்கு அம்பத்தஞ்சி. நல்ல ஏரியா. பேப்பர் க்ளீனா இருக்குது. மெனதான். ஒன்னு நாப்பது சொல்றாங்கோ. பார்ட்டி கிட்ட இட்டும்போறேன். உக்காந்து பேசிக்கிங்க. தோ! லோக்கோ பிஜ்ஜி கீய லெப்ட்ல திரும்புனாங்காட்டியும் நேர கார்னர் ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டு. ஊடு நல்லாருக்குது. சரிபட்டா பார்க்கலாம். இல்லன்னா இட்சி கட்டிக்கலாம். நாப்பதுக்கு முப்பது. தொர ஊடு. பேசனா மேண்டேன்ஸ் பண்ணிக்கிறாரு. உங்க இஸ்டம். ஒன்னு இரவத்தஞ்சு. ஒன்னு இரவது வரிக்கும் கேட்டாங்கோ குடுக்கல. நீங்க ஒக்காஞ்சு பேசுங்க. இன்னா நா சொல்றது’

போகும் வழியில் அவன் காட்டிய வீட்டைப் பார்க்கிறேன். 1964-65களில் அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டு லோகோவர்க்ஸ் ஸ்டேஷனின் தென்புறம் இறங்கி கண்டெம்ட் வேகன்களை கடையாக்கி சோடா ஃபேக்டரிகளில் ஒன்றில் பச்சை கலர் கோலி சோடா. குடிக்க முடியாமல் முக்கி முக்கி குடித்தும் பாதிக்கு மேல் அப்பாவுக்கு. பிறகு திரும்ப ப்ரிட்ஜ் ஏறி பட்மோடாக இருந்த தரிசு நிலத்தில் இருந்த கேம்பில் டெண்ட் ஆஃபீஸில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்து ஆஃபீஸில் மஞ்சள் பையிலிருந்து கட்டுக் கட்டாக காகிதங்கள், டிஸ்சார்ஜ் புக், ஜார்ஜ் படம் போட்ட வெள்ளிப் பதக்கம், ராணி படம் போட்ட செம்பு ஸ்டார் பதக்கம் எல்லாம் காட்டி சண்டை போடுவதும் வருவதுமாக இருந்தது. யாரு சண்டை போட்டா நமக்கென்ன போச்சு. நமக்கு பச்சை சோடா கிடைச்சா சரி.

மாசம் ரண்டு மூணு வாட்டி இதுக்கே அலைய முடியாதுன்னு அம்பத்தூரிலிருந்து அயனாவரத்துக்கு 65ல டேரா தூக்கியாச்சு. மாசம் நாலு பச்சை சோடா கேரண்டின்னு ஒரே சந்தோஷம். ஒன்னு ரண்டு மாசம் அப்படியும் நடந்தது. சபிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. அந்த ப்ரோக்கர் சொன்ன அதே வீதியில் கார்னர் ப்ளாட். ஒரு க்ரவுண்ட் என்று கவனம். அப்பாவுக்கு இடம் காட்டின ஆசாமி ஏதோ சொல்லி டெண்டுக்குள் அழைத்துப் போனான். கொஞ்ச நேரத்தில் அப்பாவின் இடி முழக்கக் குரல். இங்கயே இருக்கணும்னு நிறுத்திப் போன இடத்தில் இருந்து அசையும் அளவுக்கெல்லாம் நமக்கு தைரியமும் இல்லை.

கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்த கையோடு கையில் இருந்த பேப்பரெல்லாம் சுக்கு நூறாக கிழித்து வீசி டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டை கிழிக்க முயன்றபோது அது காலிக்கோ பௌண்ட் என்பதால் முடியாமல், ‘அப்பா வேணாம்பாக்கும், சார்! என்ன இதுக்கும்’ அடங்கிப் போய் அதை மட்டும் பையில் போட்டுக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்குப் போய் 500ரூ லஞ்சம் கேக்கறான். கேட்டா நீ சிப்பாய் இல்லை. க்ளார்க்குங்கறான். நான் ஆஃபீஸ்ல உக்காந்தா கிழிச்சேன். பர்மா காட்டுலயும், பாகிஸ்தான்லயும் குண்டுக்கு நடுவில இருந்தாக்கும் வேலை பார்த்து அந்த மெடல் வாங்கினது. இப்படி ஒரு கேவலப்பட்டு காசு குடுத்து அந்த மனை வாங்கத் தேவையில்லை என்ற வீராப்பு (500ரூ அப்போ ஒரு ஆறேழு மாச சம்பளமா இருக்கும்)

சரிங்க பார்க்கலாம் என்று ப்ரோக்கரிடம் சொல்லிவிட்டு வந்து ஒரு குட்டித் தூக்கம். கனவில் அப்பா.

‘அப்பா! புருபுருன்னு கத்திண்டு பேப்பர கிழிச்சி போட்டு வந்தீங்களே. அந்த இடத்துல பாதி ஒன்னேகால் கோடி சொல்றாம்பா! ஒரு ஐந்நூறு அழுதிருக்கப்படாதா?’

‘ஒழச்ச ஒழப்புக்கு மரியாத இல்ல. க்ளார்க்குன்னு சொல்றான். சரி சொல்லிட்டு போ. அதுக்கு லஞ்சம் குடுத்தா மட்டும் சரியாயிடுமா. அப்படி மானத்த விட்டு மனை வாங்கி என்ன பொழப்புடா அது’

‘ம்க்கும். அதான் மானத்த பாத்துண்டிருக்கா மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு. ரண்டு கோடி போச்சேப்பா’

‘வெங்கட்ராமையர் காலனில 5 வீடு. மாசம் அம்பதுரூபா மேனிக்கு அம்பது மாசம் குடுத்து க்ரயம் பண்ணிக்கோ வாசுன்னு அந்த ப்ராம்மணன் எவ்வளவோ சொன்னார். இரவத்தஞ்சி ரூபா வாடகையோட இன்னும் இரவத்தஞ்சு கட்டிருக்க முடியாதா. பையன் வளந்தா காலேஜுக்கு எல்லாம் கஷ்டம். பட்டணம் போறேன்னு ஒரே பிடிவாதம்.’.இது அம்மாவோட குரல்.

‘வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அதிசயமாக அம்மாவுக்கு எதிரான அப்பாவின் குரல். அதைவிட அதிசயமாக அம்மாவிடம் சைலேன்ஸ்.

‘அசுர சந்தியாச்சு. எழுந்திருங்கோ. விளக்கேத்தணும்’ (எங்கூட்டம்மணி)

‘ம்! காஃபி குடு’ (அப்பாவுக்கேத்த தப்பாத ஒபீடியண்ட் புள்ள)

(ராத்திரி 12.30 மணி)

மீ: ஓய் இருக்கியா?

மொவன்: சொல்லு நைனா

மீ: லோக்கோல ஒரு இடம் பார்த்தேண்டா. ஒன்னேகால் சொல்றான்.

மொவன்: இதெல்லாம் ஆவறதில்ல நைனா. பேசாம பொள்ளாச்சி, ஈரோடுன்னு எங்கனா ஒரு அரை ஏக்கர் பாரு நைனா. ஒரு கொட்டாய் போட்டுக்கலாம். நீ ஜம்முன்னு புக்கு படிச்சிக்கினு நெட்டுல மொக்க போட்டுனு இரு. நான் ஒரு நாலு மாடு வச்சிக்கினு வெவசாயம் பண்றேன். ஜாலியா இருந்துக்கலாம்.

(என்ன பெத்ததும் சரியில்ல. நான் பெத்ததும் சரியில்ல.=)))))))