Wednesday, August 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 95

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாது: மகிந்த ராஜபக்ஸ

துள்ளுற மாடு பொதி சுமக்கும்னு பழமொழி. அவனும் இவனும் பிச்ச போடுறான் பொழப்பு ஓடுதுன்னு இருக்கீரு. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கில்லடி. அப்போ தெரியும்!
_____________________________________________________
முகாம்களில் மக்கள் 'எலிகளைப் போல வாழ்கிறார்கள்': ஆனந்த சங்கரி

கிழத்துக்கு எதுகை மோனை வேற! வேளா வேளைக்கு உண்டு உறங்கி ஜனாதிபதிக்கு கால் நக்காத குறையா கடிதம் எழுதிதான் என்ன கிழிஞ்சது?
_____________________________________________________
இலங்கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது - அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பணக்கார பிச்சக்காரனுங்கடா யப்பா. இத வெச்சி 3 ஹில்டன் ஹோட்டல் கட்டலாம்னு புத்தி போவுதே ஒழிய யாரைக் காட்டி எடுத்த பிச்சையோ அவங்களுக்கு என்ன பண்ணலாம்னு போவுதா?
_____________________________________________________
அகதி முகாமகளில் தமிழர்களுக்கு மற்றொரு முள்ளிவாய்க்கால் அவலம்: சர்வதேசம் இதனையும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?: சுரேஸ் பா.உ. கேள்வி

மாட்டாங்களே! கோரிக்கை, கண்டனம், தூதர அனுப்புறது எல்லாம் பண்ணிட்டு அப்புறம் பொத்திட்டு இருப்பாங்க.
_____________________________________________________
தவறு செய்யும் அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்காது: இலங்கை பிரதமர்

தவறு செய்யும் அரசை அகில உலகமும், ஐ.நா.வும் பாதுகாக்கும்.
_____________________________________________________
இடியமீன் ஆட்சி காலத்தில் கூட இவ்வாறான முகாம்கள் காணப்பட்டதா என்பது சந்தேகமே: புதிய சிஹல உறுமய

அவன் மனுசக்கறி தின்னாலும் மனுசனா இருந்தான். இவனுக்கு ராக்ஷச பக்சேன்னு பேரு வைக்கலாம்.
_____________________________________________________
வட இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா 6 மில்லியன் டொலர் நிதியுதவி

இதயும் வாங்கிக்கிட்டு கொழுத்துப் போய் கன்னிங்களுக்கு வெடி வைப்பான். ஏண்டா இப்படி? அவ்வளவு அக்கறைன்னா எல்லாத்தையும் நீங்க வந்து புடுங்கி போட்டு இப்போ விடுடா ஜனங்களன்னு சொல்லிப் பாறேன்.
_____________________________________________________
செல்வராசா பத்மநாதன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம்?

என்னா டீலிங்கு?
_____________________________________________________
வெள்ளிமுள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான வெடி பொருட்கள் மீட்பு : உதய நாணயக்கார

நீ கொண்டு போனதுல வெடிச்சது எத்தன. மிச்சம் எத்தனைன்னு கணக்குப் பாரு ராசா. அவசரப்பட்டு இப்படி புளுவிட்டா அக்கவுன்டு இடிக்கும்.
_____________________________________________________
வேதம் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்: எஸ்.வி.சேகர்

படி சேகரு! இனிமேல்லாம் M.L.A. ஆக முடியுமா. பொழப்ப பார்க்க வேணாமா?
_____________________________________________________
சென்னை: விமானம் மீது லாரி மோதல்

லாரிக்கு விமான பெட்ரோலும், விமானத்துக்கு டீசலும் மாத்திப் போட்டுட்டாங்களா?
_____________________________________________________
ஜெ.வை மக்கள் புறக்கணித்து விட்டனர்: தங்கபாலு

இவ்வளவு நாளா சத்தமே காணோம். நாக்குல புண்ணா டங்குவாலு (காபிரைட்:யூர்கன்)
_____________________________________________________
கொட்டும் மழையில் கஞ்சி கலய ஊர்வலம்

அட்றா சக்க! கஞ்சித்தண்ணின்னு தானே சொல்லுவோம். இப்படி போனா கலயம் நிரம்பிடும். கவுண்டர் மாதிரி, தண்ணி இங்க இருக்கு. கஞ்சி எங்கன்னு கொடச்சல் குடுக்கலாம்.
_____________________________________________________
பீர் அருந்திய பெண்ணுக்கு பிரம்படி: மலேசிய கோர்ட்

வலி தெரியாம இருக்க பிராந்தி அடிக்கப் போவுது அந்தப் பொண்ணு.
_____________________________________________________

இன்னும் கொஞ்சம் சந்தேகம்!

தண்டவாளத்துக்கு கீழ இருக்கிறதையும் ஸ்லீப்பருங்கறான், அது மேல ஓடுறதையும் ஸ்லீப்பருங்கரானே. ஏன்?
------------------------------------------------------------------------------
லைன் மேல ஓடுற ரயிலுக்கு ரயில்வேன்னு பேர வெச்சிட்டு தண்ணில போற கப்பலுக்கு ஷிப்லைன், வானத்துல பறக்குற விமானத்துக்கு ஏர்லைன்னு ஏன் பேரு வெச்சான் வெள்ளைச்சாமி?
------------------------------------------------------------------------------
தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது மட்டும் ஹைவேஸ்னே இருக்கே எப்படி?
------------------------------------------------------------------------------
அமெரிக்கா விட்ட ராக்கட்டு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமா இறங்குச்சின்னு வெள்ளக்காரன் சொல்றான். அது இறங்க ஆறு மாசம் முன்னதான் செவ்வாய் கிரகப் பெயற்சி; 8 ல இருந்து 9 கு போச்சி, 8 ல சந்திரன் வருதுடிச்சின்னு நம்மூரு ஜோசியன் சொல்றான். எத நம்பறது?
------------------------------------------------------------------------------
சந்த்ரயான் வெற்றிகரமா பறக்கணும்னு தேங்கா உடைச்சி, கற்பூரம் காட்டினப்புறம் தான விட்டாங்களாம். நாள பின்ன சந்திரனுக்கு ஆளு போய் இறங்கினா ரிடர்ன்ல வெற்றிகரமா திரும்ப பூஜை பண்ண வேணாமா? அங்க கற்பூரம் எரியாது. தேங்கா உடையாதே. என்ன பண்ணுவாங்க?
------------------------------------------------------------------------------
கணினி முன்னாடி உக்காந்திருந்தாலும் மணி என்னன்னா கொள்ள பேரு கைக்கடிகாரம் இல்லன்னா சுவர்க்கடிகாரம் தானே பார்க்குறாங்க. வலக்கை ஓரமா கணினி காட்டுற மணியை பார்க்கறதில்லை?
------------------------------------------------------------------------------
திரைக்கும் மூஞ்சிக்கும் மூணு அடி தூரத்துல தான் பாக்குறதுனு உலகம் முழுதும் இருக்கிறப்ப அத ஏன் இன்னும் தொலைக்காட்சின்னு சொல்லணும்?
------------------------------------------------------------------------------
என்னதான் காசு குடுத்து வாங்கின கீ வெச்சிருந்தாலும் கதவ தொறந்தா கணினி உள்ள விடுது.அப்பவும் திருடன் மாதிரி 'விண்டோஸ்' வழியாதானெ போகணும். அப்புறமெதுக்கு அது நல்ல கீயா சுட்ட கீயான்னு செக்கப்பு?
------------------------------------------------------------------------------
விமானமோட்றப்ப ஹெட்ஃபோன் மாட்டணும்னு விமானி எப்படியும் தொப்பி போட மாட்டாருல்ல. அப்புறம் எதுக்கு காசுக்கு தண்டமா அத குடுக்கறது?
------------------------------------------------------------------------------
ஆசுபத்திரி கட்டின டாக்டர் கோவிலுக்கு போய் ஆசுபத்திரி அமோகமா வளரணும்னு வேண்டுனா சாமி வரம் குடுப்பாரா? சாபம் குடுப்பாரா?
------------------------------------------------------------------------------
ஹார்ட் டிஸ்க்னு பேர வெச்சிட்டு க்ராஷ் ஆயிடிச்சின்னா அபத்தமா இல்லை?
------------------------------------------------------------------------------
விழுப்புரம் போறதுன்னாலும் வீடடில இருந்து சாப்பாடு கட்டிட்டு போறவன் அமெரிக்கா போறதுன்னா அவன் குடுக்கறாதே போதும்னு போறானே? என்ன கூச்சம்?
------------------------------------------------------------------------------
என்னதான் ஊருக்கு முன்ன செக் இன் பண்ணி கதவு பக்கத்துல சீட் போட்டாலும் கடோசியா லக்கேஜ் வந்தா கடோசியாதானே போகமுடியும். அப்புறம் ஏன் முதல்ல அந்த சீட் போடுறாங்க?
------------------------------------------------------------------------------
வடைய எண்ணெயில் பொறிக்கிறோம். இட்டிலிய ஆவியில அவிக்கிறோம். தோசை கல்லுல ஊத்துறோம். ஆனாலும் சொல்றப்ப வடசுட்டா, இட்லிசுட்டா, தோச சுட்டான்னே ஏன் சொல்றாங்க.?
------------------------------------------------------------------------------

Tuesday, August 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 94

தமிழர் படும் துயரை துடைப்பதற்கு இலங்கை அரசுக்கு, இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும்: கலைஞர்

பாலுக்கும் காவல். அட இரண்டு நாளுக்கு முன்னாடிதானே சுமுக நிலைன்னு சொன்னீங்க? இது எதுக்கு இப்ப?
_______________________________________________
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆத‌‌ரித்தால் நடவடிக்கை: மிழக அரசு ச்சரிக்கை

பூனைக்கும் தோழன். எத்தனை முறை கோர்ட்டில் செருப்படி பட்டாலும் தொங்கு சொல்ற ஆள புடிச்சி அனுப்பறது தான்.
_______________________________________________
குடாநாட்டிற்கான பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்படும்: சரத் பொன்சேகா

இவரு பங்குக்கு இவரு காசு தேத்த வேணாமா? மொத்த பேருமே ராணுவம்னு சொல்லிடு.
_______________________________________________
எவர் என்ன சொன்னாலும் அகதிகளை உடனடியாக மீளக்குடியமர்த்த முடியாது: சரத் பொன்சேகா

நீயே அகதியாகப் போறன்னு செய்தி வந்திச்சே. நீ குடியேற இடமில்லாம சாவணும்டா நாயீ. திமிரப் பாரு.
_______________________________________________
உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக முகாம் மக்களை விடுவிக்க முடியாது: கோத்தபாய திட்டவட்டமாக தெரிவிப்பு

பேச விட்டு வேடிக்கை பார்க்குறானுங்களே பெரியண்ணனுங்க. இதை விட காலம் முழுதும் வலைக்குள்ள தான்னு எப்படி விளங்க வைக்க முடியும்?
_______________________________________________
அதிகாரங்கள் பகிரப்படாவிட்டால் புலிகளின் தமிழீழ போராட்டத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும்: ரொபட் பிளக்

அய்யா வெள்ளச்சாமி! நீர் ஆதரவா பேசுறீரா? போட்டுக் குடுக்கிறீரா? அமெரிக்காவே சொல்லிட்டான். நான் விடமாட்டேன்னு கொட்டடிலயே வைக்கவா? ஏன்யா இந்தக் கொலை வெறி?
_______________________________________________
இலங்கை அகதிகள் முகாம்களில் வெள்ளம் ஏற்பட்டதற்கு .நா. நிறுவனங்களே பொறுப்பு!

இதுக்கு மேலயும் சொல்லுவான். அய்யோ நான் இல்லன்னு அலறுவானுங்களே தவிர, நீதாண்டா பொறுப்புன்னு நடவடிக்கை எடுப்பானுங்களா?
_______________________________________________
தனித் தமிழ் ஈழத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

முதல்ல உங்க கூட்டணி அங்கீகரிக்குதா பாருங்க. அப்புறம் உலகத்துக்கு குரல் விடலாம். மெரீனால பேசினீங்களே ஒரு வாட்டி கேட்டுப் பாருங்க.
_______________________________________________
யுத்த நிறுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் புலிகளுடன் தொடர்பினைப் பேணியுள்ளனர்: கோத்தபாய ராஜபக்ஷ

யார் யாருக்கெல்லாம் வெள்ளை வேன் வருதோ தெரியல. புள்ளி வெச்சிட்டான் போல.
_______________________________________________
விடுதலை சிறுத்தைகள் இன்றி எந்த அணியும் வெற்றி பெறமுடியாது: திருமா

ஓவராத் தெரியல?
_______________________________________________
அமெரிக்காவில் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தியது அத்து மீறிய செயல்: .சிதம்பரம்

அய்யா. பக்கத்து நாட்டில நாம நடத்தியது எத்தை மீறிய செயல்? இதெல்லாம் பேச முடியும்?
_______________________________________________
அரசுகளின் சாதனைகளுக்கு எதிராக ஓராயிரம் ஜெயலலிதா வந்தாலும் அரசியல் நடத்த முடியாது: தங்கபாலு

ஆமாம். கொஞ்ச நஞ்ச சாதனையா? பாதி படம் எரிஞ்சதுக்கு பதறின பரதேசி பச்சைக் குழந்தைங்க எறிஞ்சப்ப இறையாண்மை பேசின சாதனை ஒண்ணு போறாது?
_______________________________________________
சபரிமலையில் பூசைக் கட்டணம் பன்மடங்கு உயர்வு: செய்தி

சாமியெல்லாம் சம்பாதிக்க ஆரம்பிச்சா ஆசாமிங்க எங்க போறது?
_______________________________________________
தன் பெற்றோர்களை விஷம் வைத்துக் கொன்று விடுவேன் என்றதால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது!

செருப்பால அடிச்சா 5 ரூ தண்டனை. அடிப்பேன்னா 50ரூ தண்டனைன்னு சொல்றத நிஜம்னு நம்பிட்டாரோ?
_______________________________________________