Thursday, February 4, 2010

தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு. (நிறைவு)

(5 நிமிடத்திற்குள் முகிலன் வருகிறார்)

குடுகுடுப்பை: என்ன முகிலன் சாப்டாச்சா அதுக்குள்ள?

முகிலன்: இல்ல தலைவரே! அவ்வளவு தூரம் போகணுமே என்ன சாப்பாடுன்னு போன் பண்ணேன் தங்கமணிக்கு. சாப்பிட்டு கழுவி வெச்சிட்டாங்களாம். தான் கழுவினதால தட்டில பருக்கை கூட இல்லைன்னு நக்கல் வேற. சரிம்மான்னு நொந்து போய் சொன்னா, காலைல சாப்பிட்டு கிளம்பறப்போ பார்த்தாங்களாம். வாயோரம் ஒரு பருக்கை இருந்திச்சி பாருங்கன்னாங்க. அதான் சாப்பாடு. கிர்ர்ர்ர்ர்ர்ர். நீங்க நடத்துங்க.

(உணவுக்குப் பிறகு தொடர்கிறது)

அது சரி: இங்க பாருங்க தலைவரே. காதல் சொல்லி வந்தாய் எடுத்துக்குங்க. அது ரேட் பேசிக்கலாம். :O))). வேற எந்தக் கதையும் வடக்கச்சி ஏன் நசரேயன லவ் பண்ணுதுன்னு லாஜிக் இடிக்கும். பதிவில கிழிச்சி ஒட்டிடுவாங்க. இதுன்னா தற்கொலையா காதலான்னு ஒரு கேள்வி வந்து, இதுவே மேலுன்னு முடிவெடுத்தான்னு மாத்திக்கலாம்.

குடுகுடுப்பை:(படுபாவி. என்னமா மார்க்கட்டிங் பண்ணி துட்டு பாக்குறாருய்யா இந்தாளு! எதுனாச்சும் கேட்டா கலிஃபோர்னியா தீர்மானம்னு ஆரம்பிச்சிடுவாரே! இப்பதான் தலைவரேன்னு கூப்புடுறாரு வேற) அதும் நல்ல ஐடியாதான்.

அது சரி: ஹீரோக்கு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர சொருகி விடுறேன். பழமைதான் அந்த ஃப்ரெண்ட்.

நசரேயன்:யோவ். அப்ப படத்துல கூட என்னால துண்டு போட முடியாதா? என்னா வேலையிது?

அது சரி: அட இருங்க அண்ணாச்சி. நீங்க வெரட்டி வெரட்டி வடக்கச்சிக்கு துண்டு போடுறீங்க. அந்தம்மணி ஓடி ஓடி பழமைக்கு துண்டு போடுது. ஒரு நாள் ஆங்கிலத்துல ஐ லவ் யூனு சொல்லிடுது. பழமைக்கு கோவம் வந்து ஒன்னு உன் தாய்மொழி இந்திலயாவது சொல்லியிருக்கணும். இல்ல எனக்காக தமிழ் கத்துக்கிட்டாவது சொல்லியிருக்கணும்.

ஆங்கில மோகத்துல சொன்ன உன்காதல் எனக்கு வேணாம்னு சொல்லிடுறாரு. மனசொடிஞ்சி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க நயாகரா போகுது. அப்ப நசரேயன் ஒளிஞ்சிருந்து சொந்தக் குரல்ல ஒரு பின் நவீனத்துவ பேதாஸ் சாங் பாடுறாரு. இந்தப் பாட்டு கேக்குறத விட, நயாகரால விழுந்து எலும்பு நொறுங்கி சாவரத விட இந்தக் காதலை ஏத்துக்கிறது பெரிய வலியில்லைன்னு ஹீரோயின் கை பிரிச்சிக்கிட்டே ஹீரோவ பார்த்து ஸ்லோ மோஷன்ல ஓடி வராங்க. நசரேயனும் ஓடி வராரு.

நசரேயன்: வெள்ளை ட்ரெஸ்ல.

சின்னம்மணி: ரொம்ப முக்கியம்.

நசரேயன்: ஏ! அதோட கத முடிஞ்சிரும்லா! நான் எப்புடி லால்பாக்ல பூ குடுக்குறது?

முகிலன்: அடடடா. கனவு சீன் இருக்கில்லா

நசரேயன்: அட ஆமா! அப்ப ஒரு பத்து பதினஞ்சி வடக்கச்சிங்கள வெள்ள ட்ரெஸ்ல உடுவீங்களா?

அது சரி: அக்கவுண்ட்ல எவ்வளவு போடுவீங்க? அத பொறுத்துதான்.

நசரேயன்: அட ஒரு நப்பாசைல கேட்டா! சரி அது கேமரா ட்ரிக்ஸ்ல வடக்கச்சி பத்தா பிரிஞ்சி வராமாதிரி பார்த்துக்குங்க.

குடுகுடுப்பை: காமெடிக்கு யாரு?

நசரேயன்: நானே டபுள் ரோல் பண்றேனே!

அது சரி: ம்கும். ஈரொயினும் நீங்களே இருங்களேன். சுண்ணாம்பு அடிச்சா அவ்வளவு செலவாகாது.

பழமை:(பொட்டியை தட்டியபடி) அட இருங்க நம்ம மாப்பு ஆன்லைன்ல இருக்காரு. அவர கேக்கலாம். ஏனுங் மாப்பு? பதிவர் பிக்சர்ஸ்ல ஒரு காமெடி ரோல் இருக்கு? யார போடலாம் சொல்லுங்க.

கதிர்: அது வந்துங்க மாப்பு, நானே பண்றேன். ஆனா கூட ஆரூரனும் இருந்தா கலக்கலா இருக்கும்.

பழமை: ஏனுங் அது சரி? ரெண்டு பேருக்கு காமெடி ரோல் கதையில முடியுமா?

அது சரி: நோ ப்ராப்ஸ். விக்கிரமாதித்தன், வேதாளம் ரெண்டு பேர்த்தையும் நசரேயனுக்கு ஃப்ரெண்டாக்கிடலாம்.

பழமை: சரிங்க மாப்பு. காமெடி ட்ராக் எப்படிங்க. நீங்களே எழுதுவீங்களா?

கதிர்: அது ஒன்னும் பிரச்சினையில்லிங்க. இந்த பாலாசி பய போடுற பின்னூட்டத்த தேத்தினாலே செம காமெடியா இருக்கும்.

பழமை: சரிங் மாப்பு! அப்ப தயாரா இருங்க. படப்பிடிப்பு தேதி சொல்லுவாங்க.

கதிர்: மாப்பு! அது வந்துங்..வந்துங்..கோவை சரளா நடிக்குதுங்ளா?

பழமை: இருங்க தங்கச்சிய கேக்கறேன்..

கதிர்: அட எனக்கில்லீங்..நீங்க வேற. ஆரூரன் கேக்க சொன்னாருங்..

பழமை: அப்புறங் மாப்பு, இந்த டைரக்‌ஷனுக்கு, திரைக்கதைக்கு கேமராக்கு எல்லாம் யார போடலாமுங்.

கதிர்: இருங்க! கேபிள கான்ஃபரன்ஸ்ல போடுறேன்.

கேபிள்: சொல்லுங்க தலைவரே.

கதிர்: அமெரிக்கால இருந்து பேசராங்க தலைவரே! ஒரு படம் எடுக்கறாங்களாம். டைரக்‌ஷன், கேமராக்கு எல்லாம் என்ன பண்ணலாம்னு கேட்டாங்க. அதான். மாப்பு நீங்களே பேசுங்க.

பழமை: சொல்லுங்க சங்கர். நல்லாருக்கீங்களா? அது வந்துங் தி.கு.ஜ.மு.க. சார்பில ஒரு படம் எடுக்குறமுங். அதுக்கு டைரக்‌ஷனுக்கு உங்கள கேக்க சொன்னாருங்! கதிர்.

கேபிள்: நானே பண்றேங்க பழமை! ஆனா ஒரு கண்டிஷன். என்னோட எண்டர் கவிதை ஒரு சாங்கா வரணும்.

பழமை: (போச்சுரா) எண்டர் தானுங்ளே! டைட்டில் சாங்கா வெச்சிடலாமுங். எப்புடீஈஈஈ

கேபிள்: அசத்திட்டீங்க தலைவரே. கேமராக்கு தண்டோராவ போடலாங்க! ஜாக்கி கிட்ட கன்ஸல்டேஷன் வெச்சிகிட்டா சூப்பரா பண்ணிடலாம். ஹீரோயின் யாருங்க.

தண்டோரா: ரீமாவ  போட்றலாமா கேளுங்கண்ணே.

அது சரி: இந்த பட்ஜட்டுக்கு ரீமாவோட டூப்பு கூட நடிக்கமாட்டாங்க. அங்கயே சௌகார்பேட்டயில யாராவது மார்வாடி வீட்ல வேலை செய்யற பொண்ணா பாருங்க.

நசரேயன்: வெள்ளையா இருந்தா போறாது சொல்லிபுட்டேன். என்னிய மாதிரி அளக்க்க்க்க்கா இருக்கணும். நாந்தான் செலக்ட் பண்ணுவேய்ன்.

குடுகுடுப்பை:(ஷூட்டிங்க் முடியறதுக்குள்ள எத்தன ஹீரோயின மாத்தணுமோ தெரியலையே) அதான் சொல்லிருக்கில்ல?

தண்டோரா: ஏங்க கேபிள்? விசாக்கெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா? எங்க லொகேஷன்லாம் கேட்டீங்களா? நெட்ல தேடி லோகல் சரக்கு ப்ராண்ட் நேமெல்லாம் பார்த்து வைச்சுக்கணும்.

அது சரி: நோ வே! அவ்வளவு பேரு இங்க வரதுக்கு, ஹீரோவ அங்க அனுப்பி விடுறோம். ஒரு வாரத்துக்கு. அது சீப். எப்புடீ?

கேபிள்: தல எழுத்துடா. எண்ட்ரீயே ஃபாரின் லொகேஷன்னு நினைச்சா ஏர்போர்ட்ல கூட ஷூட்டிங் பண்ண முடியாது போல.

குடுகுடுப்பை: ஓகே. இப்போ சாங்ஸ்.

அப்துல்லா: அய்! சாங் நான் பாடுவேன். அதுசரி கூட சொன்னாங்கல்ல.

குடுகுடுப்பை: (என் பிரச்சனை இவங்களுக்கு புரியுதா. ரெண்டு அம்மணிங்க வாயத் தொறக்காமலே மெறட்டுறாங்களே) அட இருங்க சார். பாட்டு இருந்தாதானே அப்புறம் பாடுறது யாருங்கற கேள்வி? கவிஞர் யாருன்னு தீர்மானம் பண்ணனும்ல. ஒரு பின் நவீனத்துவ சாங் நான் எழுதுறேன்.

கலகலப்ரியா, சந்தனமுல்லை: சொந்தமா எழுதணும். எதிர்கவுஜ போட்டா....

அது சரி: :O)))..கவுஜ மோசடிக்கும் சேர்த்து ஜக்கம்மாவும் குடுகுடுப்பையும் விரட்டப்படுவார்கள்.

குடுகுடுப்பை: சரிங்க ஆளுக்கு மூணு சாங் எழுதிக் குடுங்க. தலா ரெண்டு ரெண்டு அப்புடியே போட்டுடலாம். ஒண்ணே ஒண்ணு நான் எதிர் கவுஜ போட்டுக்கறேன்.

முகிலன்: அல்லோ. தல. எளக்கிய அணித் தலைவர் இதெல்லாம் வேடிக்கை பார்க்கவா உக்காந்திருக்கேன்.

குடுகுடுப்பை: யப்பா. ராஜா. படுத்தாதப்பா. அந்தகால சினிமாக்கு பாட்டு புத்தகம் மாதிரி இவங்க பாட்டுக்கு விளக்க உரை போட்டுக்க ராசா.

முகிலன்: சரி சரி! ஆனா இதான் கடைசி. பேக்ரவுண்ட் ம்யூசிக்குக்கு என்ன வழி?

தண்டோரா: தேவாக்கு ஒரு கம்பேக் குடுக்கலாங்க. அங்க இருந்தே டெலிகான்ஃபரன்ஸ்ல கிராமிய அவார்ட் குடுத்தா நல்லது.

நசரேயன்: என்னோட சாங் யாரு எழுதினதுன்னு சொல்லுங்க. முக்கியமா டூயட் சாங்.

கலகலா: அண்ணாச்சி! என்னோட கவுஜதான்.

நசரேயன்: போச்சிடா. படிக்கும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே! அப்போ டூயட்டு?

அப்துல்லா: அந்த கடைசியா எழுதினாங்களே அந்த பாட்டு இருக்கட்டும்ணே. எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாட அதான் சரி:))

நசரேயன்: நீர் பாடுவீரு. நான் மூச்சு விடாம வாயசைச்சா போய் சேந்திருவேன். அப்புறம் எப்படி துண்டு போடுறது?

தண்டோரா: அது முதுகு பக்கமா எடுக்கிறப்ப மூச்சு விட்டுக்குங்க சாமி. ரிலீஸ் எப்ப?

அது சரி: அது நான் சொல்றேன். சும்மா சுறா படத்துக்கெல்லாம் போட்டியா இறக்கி பேர கெடுத்துக்கறதில்லை. முடிஞ்சா எந்திரன். அது வர நேரமாகும்னா பெண்சிங்கம்.
(போயும் போயும் பெண்சிங்கத்துக்கு எதிரா ஊத்திக்கிட்ட படம்னு பேரு வந்தா ஒரே ஸ்ட்ரோக்ல குடுகுடுப்பை, ஜக்கம்மா, நசரேயன் எல்லாரும் காலி..அப்புடி ஒரு வேள எந்திரனையும் கவுத்துட்டு ஒரு தூக்கு தூக்கினா என்னோட ஸ்ட்ராடஜின்னு அமுக்கிறலாம் இவங்கள. அதுக்குள்ள திருட்டு டிவிடி வந்தா அந்த ஊழலையும் சேர்த்தே ஈசியா கழட்டி விடலாமே! எப்படியும் வின் வின் சிடுவேஷன்...ஹ ஹ ஹ)

குடுகுடுப்பை:(இப்படியெல்லாம் யோசிப்பீருன்னு தெரியாமலா நேத்தே ரம்யாவ வருங்கால முதல்வராக்கினேன்?) சரி சரி. அவங்க அவங்க ஒழுங்கா ப்ளான் பண்ணி வேலையப் பாருங்க. ப்ளான் முக்கியம். அடுத்த மாநாடு ரஷ் பார்க்க பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

அதுசரி: அட்லீஸ்ட் என்னோட கொள்கை விளக்கப் பாடலை பாடிட்டாவது கலைஞ்சி போகலாமே!

நசரேயன்: நான் சொந்த குரல்ல பாடவா?

(அடுத்த நிமிடம் நசரேயன் மட்டும் நிற்க அனைவரும் எஸ்ஸாகிறார்கள்)

Wednesday, February 3, 2010

தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு.

(புதிய பொறுப்பாளர்களை அறிவித்த பிறகு சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாகவும், மற்ற பதவிகளுக்கான கோரிக்கைகள், ஒரே தலைவர் இரண்டு கட்சிக்கும் பொ.செ.வாக இருக்க முடியுமா என்ற முக்கியமான முடிவுகளை எடுக்கவும் தி.கு.ஜ.மு.க. அவசரக் கூட்டம் நடைபெறுகிறது)

குடுகுடுப்பை: ஜக்கம்மா சொல்றா! வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும்.

குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா?

அது சரி: இல்லவே இல்லை. இனி நீங்க படப்போறதுதான் பெரும்பாடு.

முகிலன்: இலக்கிய அணித்தலைவர் நாந்தான் ரைமிங்கோட பேசலாம் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

குடுகுடுப்பை: எல்லாரும் வந்தாச்சா? அங்க யாரு சேர்ல தலைல கை வெச்சிக்கிட்டு தூங்கறது?

வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.

குடுகுடுப்பை: நசரேயன் எங்கே?

வானம்பாடி: அதோ ஜன்னல் கிட்ட நின்னு கட்சிப் பணியாற்றுகிறாராம்.

குடுகுடுப்பை: இங்க வாரும்யா நசரேயன். அங்க என்ன பண்றீரு.

நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.

குடுகுடுப்பை: ஆரம்பிக்கலாமா?

(வாட் ட ஹெல்! நாமன்னா இளிச்ச வாயா சந்தனமுல்லை. விடுறதில்லை. லகலகலக)

குடுகுடுப்பை: அங்க என்ன சத்தம்? யாரங்க?

கலகலப்ரியா: ஹூஊஊஊஊஊஊம். ஜக்கம்மா! பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத கட்சி எப்படி நடக்கும்னு பார்க்கலாம். நாங்க இல்லாம எதிர் கவுஜ எப்படி எழுதுவீங்கன்னு பார்க்கலாம்? என்ன நடக்குது இங்க?

அது சரி: :O))))

குடுகுடுப்பை: அட இருப்பா. எப்ப பாரு பீப்பீ ஊதிக்கிட்டு. இவங்க சொல்றதும் சரிதான். சமாளிப்போம். வாங்க வாங்க. ஹி ஹி. அதான் அஜண்டால போட்டிருக்கே, இதர பதவிகளுக்கு நியமனம்னு. இமெயில் அனுப்பறதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. வாங்க வாங்க.

கலகலா: அத்த்த்த்த்து!

(நாட்டாமாஆஆஆஆஆஆ! தீர்ப்ப மாத்திச் சொல்லுங்)

குடுகுடுப்பை: என்ன எழவுடா. இப்பதான் ஒரு சவுண்டுக்கு சரண்டர் ஆனோம் இப்ப யாரு? அட பழமை! வாங்க வாங்க!

பழமை: வரதெல்லாம் இருக்கட்டுங்ணா! இந்தக் குழந்த என்னமோ கேக்குது பாருங்! ஒரு வேல பார்க்க முடியலிங். ஒரே அழுவாச்சி!

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு சிறுவர் அணி தலைவர் பதவி வேணூஊஊஊம்.

குடுகுடுப்பை: குடுத்தாச்சி குடுத்தாச்சி. தோ! அந்த ஓரம் சொப்பு சாமான்லாம் இருக்கு பாரு குழந்தை. அங்க போய் சமர்த்தா விளையாடிக்க கண்ணு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..

கலகலா: தலைவரா இருந்தாலும் ஸ்ஸ்ஸ்ஸப்பால்லாம் என்கிட்ட திருடப்படாது. அது நாந்தான் சொல்லுவேன்.

குடுகுடுப்பை: சைலேன்ஸ்! கூட்டம் ஆரம்பிக்கப் போறேன்!

அது சரி: அல்லோ! நீங்க யாரு கூட்டம் ஆரம்பிக்க? கட்சில இருந்தே தூக்கியாச்சிங்கறேன். அப்புறம் கூட்டம் ஆரம்பிக்கறாராம்ல.

குடுகுடுப்பை: (அது சரின்னு பேர வெச்சிகிட்டு எது பண்ணாலும் தப்புன்னே சொல்லிக்கிட்டிருக்காரே. கேப்பாரே இல்லையா ஜக்கம்மாஆஆஆ)

கலகலா: கூப்டிங்களா குடுகுடுப்பை.

குடுகுடுப்பை: இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி. நீங்க வேறயாம்மா. உக்காருங்க.

பழமை: அது சரிங்கண்ணே. அந்த வருங்கால முதல்வர் யாருன்னு கேட்டேனே.

அது சரி: என் கேள்விக்கு பதில் சொல்லாம வேற எந்த தீர்மானமும் செல்லாது! சொல்லிட்டேன்.

குடுகுடுப்பை:ஓஒ. சரி சரி. இப்பத்தாம்வே புரியுது. உம்ம பதிவில எமினெம் படத்த தூக்கிட்டு டாலர் படம் போட்டதுக்கு அர்த்தம். நிதித்துறைத் தலைவரும் நீர்தான்யா. போதுமா? (இனிமே கருப்புப் பணம் கூட கோழி, காடைன்னு வாங்கித்தான் தேத்தணும்)

அது சரி:மிஸ்டர் குடுகுடுப்பை! யூ ஆர் ஸ்மார்ட். பட் வேதாளம் என்ன கேக்குதுன்னா அந்த நிதில நாய் பத்திர ஊழல் பணமும் செண்ட் சுத்தமா கணக்கில வந்திருக்கான்னு. இதுக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலைன்னா....)

குடுகுடுப்பை: சிக்கன் புளிசாதம் வாங்காம மிச்சம் பண்ண காசு கூட அதிலதான் இருக்கு போதுமா?

அது சரி: தி.கு.ஜ.மு.க தலைவர் வாழ்க (இப்போதைக்கு)

பழமை: அந்த வருங்கால முதல்வர் பதவி..

குடுகுடுப்பை: பழமை! தெரியாம கேக்கறேன். எம்.ஜி.ஆர். கலர்ல இருக்கீரு. தொப்பியும் போட்டிருக்கீரு. அதுக்காக அடுத்த முதல்வரா உங்களை ஆக்கிட்டு கட்சித்தலைவர்னு நான் எதுக்கு? முதல்ல கட்சிய பலப்படுத்தணும். முதல்வர்னா திரைப்படத்துறையில சம்பந்தமிருக்கணும். இல்லைன்னா போணியாகாது. அதுக்கு வழிய பார்ப்பம் வாங்க. ஒரு படம் எடுப்போம்.

அதுசரி: அதான பார்த்தேன். நிதித்துறையை குடுத்துட்டு சினிமா எடுக்கறா மாதிரி எடுத்து இருக்கற பணத்தை சூறை விட்டுட்டு வட போச்சேன்னு நான் இருக்கணும்னு ப்ளானா? சன் பிக்சர்ஸ் ரிலீஸா?

குடுகுடுப்பை: அதெல்லாம் இல்லப்பா. எல்லாத் துறையிலயும் பதிவர் இருக்கோம்ல. பதிவர் பிக்சர்ஸ்னு ஆரம்பிச்சி அவங்கவங்க பங்களிப்புன்னு ஒரு இடுகை போட்டு அத்தனை பதிவரும் தன்பதிவில் ஒரு இடுகை போட்டா...

நசரேயன்: அருமை அருமைன்னு பின்னூட்டம்தான் வரும். ஓட்டு கூட வராது..

முகிலன்: அதும் ஒரு சிலர் ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன்னு பின்னூட்டம் போடுவாங்க.

கலகலா: யோவ்! இனிமே பொழிப்புரைன்னு பேச்சு வரட்டும்..அப்புறம் இருக்கு சேதி..

முகிலன்: ஓ. அது ஒன்னு இருக்கோ. என் அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.

குடுகுடுப்பை: இருங்கப்பா. எல்லாத் துறையிலயும் நாம இருக்கிறதால டைரக்‌ஷன் ஒருத்தரு, பாட்டு ஒருத்தரு, மீஜிக் ஒருத்தரு, திரைக்கதை, நடிப்புன்னு நாமளே எடுத்தா

அது சரி: நாமளே பார்த்து மகா கழிசடைன்னு இடுகை போடலாம்:O)))

பழமை: இதும் நல்ல ஆலோசனையாத்தானுங்க தெரியுது. பண்ணலாமுங்க.

குடுகுடுப்பை:சரி முதல்ல ஹீரோ!

நசரேயன்: கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?

(அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)

நசரேயன்: (கடுப்பாகி) நான் இந்த ஆட்டைக்கு வரலை. ஏன் எல்லாரும் இப்படி சிரிக்கணும்?

முகிலன்:ஹிஹ்ஹீஈஈஈ. முடியல..கருப்பு கருப்புன்னு சொல்லிகிட்டு வெண்ணைன்னு சொல்றத கேட்டு சிரிக்கிறதா இல்ல தன்னையே வெண்ணெய்னு சொல்லிக்கிறீங்கன்னு சிரிக்கிறதா.

பழமை: சே! பாவம்யா. நாமளே ஒரு சக பதிவருக்கு உதவலைன்னா எப்படி. நசரேயந்தான் ஹீரோ.

நசரேயன்: (நா தழுதழுக்க) நல்லாருங்க அண்ணாச்சி..அவ்வ்வ்வ்வ்வ்...

குடுகுடுப்பை:(குணசித்திர நடிகராம். என்னமா சீன் போடுராரு பாரு) சரி சரி. அப்புறம் மேக்கொண்டு..

நசரேயன்: அல்லோ. நாந்தான் ஹீரோ! கண்டிசன கேட்டுக்கிடுங்க. ஈரோயினி ஒரு வடக்கச்சியாதான் இருக்கணும். அதே லால்பாக்ல நான் குடுக்கிற ரோஜாப்பூவ தலையில வெச்சிகிட்டு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடணும். வடக்கச்சி சம்பளம் வேணும்னாலும் நான் ஒரு விட்ஜெட் எழுதி சம்பாதிச்சி தாரன்.

குடுகுடுப்பை:திரைக்கதை?

முகிலன்: இப்ப லஞ்ச் டைம் வந்துட்டுது. தலைவரே! சாப்பாட்டுக்கு என்ன அரேஞ்மெண்ட்?

குடுகுடுப்பை: இப்புடி வேற ஆட்டைய போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் நேத்து ரைஸ், மீன் கொழம்பு கொண்டுவந்துட்டேன். அவங்கவுங்க பார்த்துக்க வேண்டியதுதான். இந்த பழமை பக்கத்துல உக்காந்ததுல இருந்து பறவை வாசனை வேற பசிய தூக்குது.

(டிஸ்கி: எல்லாரும் கலைந்து போகிறார்கள். நிஜம்மா மொத்தம் எழுதிட்டேன். நீளம் காரணமாதான் ப்ரேக். கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி)

Monday, February 1, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.4

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை

ஓ. அப்போ இறையாண்மை?
______________________________________________________________________________________
பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு

பாவம். யார் தகவலறியும் சட்டத்தில் இதைச் சொன்னாங்களோ இருக்கு ஃபைன். சிம்பு வந்துடுச்சின்னு ஆப்பு வச்சிட்டாரப்பா.
______________________________________________________________________________________
பிரபாகரன் மரண சான்றிதழ் வந்து விட்டதாக ப.சிதம்பரம் சொல்கிறார்

சிம்பு. இதென்னா வம்பு. அத தேடி கண்டுபிடிக்கட்டும் சி.பி.ஐன்னு சொல்லாம விட்டுட்டாங்களா?
______________________________________________________________________________________
அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்....

ஆமாம். வருஷம் சொல்லைலைன்னு சொல்லுவான் பரதேசி.
______________________________________________________________________________________
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

சொல்லுப்பா புண்ணு. வச்சிக்கிட்டு வஞ்சன பண்ணாத. ’போற’ வழிக்கு புண்ணியம் சேத்துகோ.
______________________________________________________________________________________
நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?

என்ன? திரும்ப ரகசியமா திருப்பதி வந்து போய்ட்டார்னு சொல்லுதா என்ன?
______________________________________________________________________________________
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவர்: கெஹலிய

ஓஹோ. நாலாவது மாடில ரூம் ரெடியோ?
______________________________________________________________________________________
இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தால்.....  :EVKSஇளங்கோவன் பேச்சு

அங்க யாரோ சத்தியமூர்த்தி பவனுக்குள் நீங்கள் வந்தால்னு... சொல்றாங்க பாரப்பு.
______________________________________________________________________________________
நளினியை விடுதலை செய்வது தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும்: இளங்கோவன்

கோர்ட்டு கூட இவர கேட்டுதான் பண்ணனும் போல. செல்லாத தம்பிடிக்கு லொள்ளப் பாரு.
______________________________________________________________________________________
புலிகள் வைத்திருந்த 4 ஆயிரம் கிலோ தங்கம் எங்கே?

கோட்டபாய சம்சாரம் கொண்டு போச்சோ என்னமோ?
______________________________________________________________________________________
நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS

செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.
______________________________________________________________________________________
அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ

செஞ்சிட்டாலும்!.....
______________________________________________________________________________________
கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு

காத்து ரட்சிக்கேணும் எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ.
______________________________________________________________________________________