வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவருக்கும் நெருக்கமாகவும் இரண்டு தினங்களாக வெறுப்போடும் சித்தரிக்கப்படும் ஒருவர். சில பல பத்திரிகைகள், இடுகைகள், பின்னூட்டங்களில் படித்தபோது நியாயமோ இல்லையோ ஒரு சின்ன ஆதங்கத்தின் வெளிப்பாடு பகிர்ந்து பகிர்ந்து, இந்தியனா, தமிழனா என்பதையும் தாண்டி ஜாதி வரை போய்விட்டது வருந்தக்கூடிய விடயம்.
இதில் கூட பாரபட்சமற்ற தன்மையைக் காண முடியவில்லை.மூன்று வயதிலேயே நான் குஜராத் சென்றுவிட்டேன். பின்னெப்படி கோவிந்தராஜன் போன்றோர் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தேன் எனக் கூறமுடியும் என்ற அவரின் வருத்தம் எவராலும் கண்டுக் கொள்ளப் படவேயில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இது குறித்து மறுத்தோ ஆமோதித்தோ அறிக்கை விட்டதாக நான் எங்கும் பார்க்கவில்லை.
இத்துணை வெறுப்புக்கு காரணம், திரு வெங்கட்ராமன், தன்னைப் பாராட்டி வரும் மின்னஞ்சல்கள் குறித்துக் கூறிய கருத்தும், தனக்கு மிகப் பிடித்தமான பணிபுரியும் சூழல் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைத் தவிர்த்த வேறோர் இடத்தை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது எனக் கூறியதும்தான். பார்க்கப் போனால் இது குறித்து நாம் கருத்துக் கூறுவது கூட அவரது தனிமையில் நாம் செய்யும் அத்துமீறல் எனக் கருதுகிறேன்.
உதாரணத்துக்கு பதிவுலகை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் சில நூறு பேர்களாவது வருகிறார்கள். ஒன்றோ இரண்டோ இடுகைகள் படிக்கிறார்கள். அது ஒரு நாளோ, அல்லது சில நாட்களோ, அத்தனை பேரும் பாராட்டியோ எதிர்த்தோ பின்னூட்டம், மின்னஞ்சல் என கருத்துத் தெரிவிப்பார்களானால், அத்தனையையும் படிக்கவில்லை, பதிலளிக்கவில்லை. எனவே அவருக்கு தலைக்கனம் என்ற தீர்மானத்துக்கு வருவோமேயானால் அது எவ்வளவு தவறு.
உங்கள் குழந்தை மாநிலத்தில் ப்ளஸ் டூவில் முதலாவதாக வந்திருக்கிறது என வைத்துக் கொள்ளுவோம். முதலில் எங்கள் பள்ளி என ஆரம்பித்து, எங்கள் வீதி, எங்கள் ஊர், எங்கள் அலுவலக நண்பரின் குழந்தை என அனைவரும் பாராட்டியே தீருவேன் என உங்கள் வீட்டில் வந்து அடைகிறார்கள். ஒரு புறம் நிருபர்கள். இவையெல்லாம் தாண்டி ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உங்கள் பெற்றோர் செய்தி கேட்டு வந்திருக்கிறார்கள். உள்ளே வர முடியாமல் அவ்வளவு நெரிசல்.
என்ன செய்வீர்கள்? எல்லாரும் போன பிறகு வாருங்கள் என்பீர்களா? கொஞ்சம் வழி விடுங்கள் என் பெற்றோர் வந்திருக்கிறார்கள் எனக் கேட்கலாம். சரியென்று வழிவிட்டால் பரவாயில்லை. நாங்களும் பாராட்டத்தானே வந்தோம் என்றால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் இனி முடியாது, நாளை பார்க்கலாம் எனக் கதவடைத்தால் அதன் பெயர் திமிரா?
நேற்று கதிரின் இடுகையில் அவர் தாத்தா கேட்டது போல் (அவருக்கு உரிமை இருந்தாலும்) கதிர் விவசாயம் செய்யப் போவதில்லை என ஒரு நிலைப்பாடு எடுப்பாரேயானால் அது குறித்த விமரிசனம் செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? அதனால் அவர்கள் ஊரில் விவசாயிகள் சேர்ந்து கண்டனம் தெரிவிப்பார்களேயானால் என்ன நியாயம் இருக்கிறது?
இதில் நம் தவறு எதுவுமே இல்லையா? ஒரு கடையில் துணி எடுக்கப் போகிறோம். பணம் செலுத்துகையில் ஒரு படிவத்தை நீட்டுகிறான். உங்கள் குடும்ப விபரம், முகவரி, கைபேசி எண், அலுவலக முகவரி, மின்னஞ்சல் முகவரி, அனைவரது பிறந்த நாள் தகவல் அத்தனையும் கேட்டிருக்கிறது அதில். வாய் பேசாமல் சந்தோசமாக நிரப்புவோம்.
ஒரு சிலர் எதற்கு இது எனக் கேட்டால் ஒரு கார்ட் தருவோம். நீங்க ள் வாங்கும்போதெல்லாம் 1 சதவீதம் தள்ளுபடி என்றால் போதும். மறு பேச்சே இல்லாமல் நிரப்புவோம். ஆனால், கடன் அட்டை எண் உட்பட நம் சொந்தத் தகவல் அத்தனையும் யாரோ ஒருவனிடம் என்பதை உணருவதில்லை.
இதில் கூட பாரபட்சமற்ற தன்மையைக் காண முடியவில்லை.மூன்று வயதிலேயே நான் குஜராத் சென்றுவிட்டேன். பின்னெப்படி கோவிந்தராஜன் போன்றோர் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தேன் எனக் கூறமுடியும் என்ற அவரின் வருத்தம் எவராலும் கண்டுக் கொள்ளப் படவேயில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இது குறித்து மறுத்தோ ஆமோதித்தோ அறிக்கை விட்டதாக நான் எங்கும் பார்க்கவில்லை.
இத்துணை வெறுப்புக்கு காரணம், திரு வெங்கட்ராமன், தன்னைப் பாராட்டி வரும் மின்னஞ்சல்கள் குறித்துக் கூறிய கருத்தும், தனக்கு மிகப் பிடித்தமான பணிபுரியும் சூழல் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைத் தவிர்த்த வேறோர் இடத்தை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது எனக் கூறியதும்தான். பார்க்கப் போனால் இது குறித்து நாம் கருத்துக் கூறுவது கூட அவரது தனிமையில் நாம் செய்யும் அத்துமீறல் எனக் கருதுகிறேன்.
உதாரணத்துக்கு பதிவுலகை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் சில நூறு பேர்களாவது வருகிறார்கள். ஒன்றோ இரண்டோ இடுகைகள் படிக்கிறார்கள். அது ஒரு நாளோ, அல்லது சில நாட்களோ, அத்தனை பேரும் பாராட்டியோ எதிர்த்தோ பின்னூட்டம், மின்னஞ்சல் என கருத்துத் தெரிவிப்பார்களானால், அத்தனையையும் படிக்கவில்லை, பதிலளிக்கவில்லை. எனவே அவருக்கு தலைக்கனம் என்ற தீர்மானத்துக்கு வருவோமேயானால் அது எவ்வளவு தவறு.
உங்கள் குழந்தை மாநிலத்தில் ப்ளஸ் டூவில் முதலாவதாக வந்திருக்கிறது என வைத்துக் கொள்ளுவோம். முதலில் எங்கள் பள்ளி என ஆரம்பித்து, எங்கள் வீதி, எங்கள் ஊர், எங்கள் அலுவலக நண்பரின் குழந்தை என அனைவரும் பாராட்டியே தீருவேன் என உங்கள் வீட்டில் வந்து அடைகிறார்கள். ஒரு புறம் நிருபர்கள். இவையெல்லாம் தாண்டி ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உங்கள் பெற்றோர் செய்தி கேட்டு வந்திருக்கிறார்கள். உள்ளே வர முடியாமல் அவ்வளவு நெரிசல்.
என்ன செய்வீர்கள்? எல்லாரும் போன பிறகு வாருங்கள் என்பீர்களா? கொஞ்சம் வழி விடுங்கள் என் பெற்றோர் வந்திருக்கிறார்கள் எனக் கேட்கலாம். சரியென்று வழிவிட்டால் பரவாயில்லை. நாங்களும் பாராட்டத்தானே வந்தோம் என்றால் உங்கள் எதிர்வினை எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் இனி முடியாது, நாளை பார்க்கலாம் எனக் கதவடைத்தால் அதன் பெயர் திமிரா?
நேற்று கதிரின் இடுகையில் அவர் தாத்தா கேட்டது போல் (அவருக்கு உரிமை இருந்தாலும்) கதிர் விவசாயம் செய்யப் போவதில்லை என ஒரு நிலைப்பாடு எடுப்பாரேயானால் அது குறித்த விமரிசனம் செய்ய யாருக்கு உரிமை இருக்கிறது? அதனால் அவர்கள் ஊரில் விவசாயிகள் சேர்ந்து கண்டனம் தெரிவிப்பார்களேயானால் என்ன நியாயம் இருக்கிறது?
இதில் நம் தவறு எதுவுமே இல்லையா? ஒரு கடையில் துணி எடுக்கப் போகிறோம். பணம் செலுத்துகையில் ஒரு படிவத்தை நீட்டுகிறான். உங்கள் குடும்ப விபரம், முகவரி, கைபேசி எண், அலுவலக முகவரி, மின்னஞ்சல் முகவரி, அனைவரது பிறந்த நாள் தகவல் அத்தனையும் கேட்டிருக்கிறது அதில். வாய் பேசாமல் சந்தோசமாக நிரப்புவோம்.
ஒரு சிலர் எதற்கு இது எனக் கேட்டால் ஒரு கார்ட் தருவோம். நீங்க ள் வாங்கும்போதெல்லாம் 1 சதவீதம் தள்ளுபடி என்றால் போதும். மறு பேச்சே இல்லாமல் நிரப்புவோம். ஆனால், கடன் அட்டை எண் உட்பட நம் சொந்தத் தகவல் அத்தனையும் யாரோ ஒருவனிடம் என்பதை உணருவதில்லை.
தெரியாத ஒருவன் நம் வீட்டு முகவரி கேட்டால் தருவோமா? ஆனால், பஸ்ஸிலோ ரயிலிலோ மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் எதுவானாலும் கவலையே இன்றி சொல்லுவோம். வீட்டு முகவரி மாதிரி இதுவும் மிகத் தேவைப்பட்டால் மட்டுமே, தேவைப்படுபவர்களுக்கு மட்டுமேயானது என்பதை ஏன் நாம் உணருவதில்லை? எனக்கு ஒரு முகவரி தெரியுமென்பதாலேயே மின்னஞ்சல் செய்துவிட்டு அந்த ஆள் எதற்காக எனக்கு மின்னஞ்சல் செய்தீர்கள் எனக் கேட்பாரேயானால் கோபிப்பது நியாயமா?
ராஜீவ் காந்தி காலத்தில் அயல்நாட்டில் பணி புரியும் விஞ்ஞானிகள் தாய்நாடு திரும்ப வேண்டும். எல்லா வசதிகளும் தரப்படும் என்பதை நம்பி வந்து, விட்டால் போதும் என ஓடியவர்கள் எத்தனை பேர்?
நம் வீட்டுப் பிள்ளையை எங்கோ தொலைத்து விட்டோம். யாரோ ஒருவர் எடுத்து வளர்த்து படிக்க வைத்து எல்லா வசதியும் செய்து கொடுத்து அந்தப் பிள்ளை ஒரு சாதனை செய்கையில் அதுவரை கவலையே படாத, அல்லது காணோம் என நினைத்து அழுதது தவிர வேறெதுவும் செய்யாத நாம், இப்போது போய் என் பிள்ளை நீ, எங்களோடு தான் இருக்க வேண்டும், மாட்டேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது என்பது நியாயமா?
அமெரிக்கக் குடிமகனான வெங்கட்ராமன் இங்கிலாந்தில் பணி புரிந்து இந்த சாதனை செய்ததற்கு அமெரிக்கர்கள் வேண்டுமானால் குறைபட்டுக் கொள்ளலாம். நமக்கு என்ன உரிமை இருக்கிறது?
இது குறித்து வெங்கட்ராமனின் விரிவான விளக்கம். இப்போது என்ன சொல்லப் போகிறோம்? வழக்கம்போல தலைகுனிய வேண்டியதுதான்.




