Monday, May 16, 2011

நசரேயனுக்கு கலைஞர் கடிதம்

நசரின் கடிதம் இங்கே

அன்பு உடன் கருப்பே சே சே பிறப்பே,

துண்டு போட நீ எழுதும் கடிதமெல்லாம் பட்டாணி மடிக்கப் போனாலும், நீ வீசிய துண்டெல்லாம் தீரும்பிவந்தாலும், சற்றும் மனம் தளராமல் துண்டு வீசியபடியே இருப்பது இந்தக் கடிதத்தை எழுதும் முழுத்தகுதியும் உனக்கு உண்டு என்பதை உலகறியச் செய்தாலும், உன் ஆறுதலில் என் துண்டு நனைந்து விட்டது.

/ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது./

இந்த வரிகள் என்னை மெய் சிலிர்க்கச் செய்துவிட்டன. இதைத்தானே உன் கவசமாய்க் கொண்டு உள்ளூர் வளவளத்தா முதல், வெளியூர் கருப்பு, சிவப்பு, ப்ரவுன், உறிச்ச கோழி, சோகை வெள்ளை என்று பாய்ந்து பாய்ந்து துண்டு வீசி மனமுடைந்த போதெல்லாம் கடந்திருப்பாய்.

‘காதல்’ மூன்றெழுத்து. ‘ஜொல்லு’ மூன்றெழுத்து. அதற்கு நீ வீசும் ‘துண்டு’ மூன்றெழுத்து. அதற்கு விழும் ’வசவு’ மூன்றெழுத்து. அப்போது உடையும் உன் ‘மூக்கு’ மூன்றெழுத்து. நீ தின்ன அலையும் ‘நொங்கு’ மூன்றெழுத்து. அதை வைத்து நீ போடும் ‘பதிவு’ அல்லது ‘இடுகை’ மூன்றெழுத்து. அதன் வகை ‘மொக்கை’ மூன்றெழுத்து. அதற்கு நீ வாங்கும் ‘ஓட்டு’ மூன்றெழுத்து. படிப்பவர்களிடம் நீ எடுக்கும் ‘உயிர்’ மூன்றெழுத்து. அதற்கு வாங்கும் ’திட்டு’ மூன்றெழுத்து.  அந்தப் பத்தியில் வேண்டுமென்றே அந்தக் கனியை, கனியை என்று இழுத்த உன் ‘லொல்லு’ மூன்றெழுத்து. நீ மட்டும் சிக்கினா நான் வைக்கப் போகும் ‘ஆப்பு’ம் மூன்றெழுத்து.

ஏனோ இதைப் படிக்கையில், நீ எழுதாமலே கடந்த ஆட்சியில் நான் கொண்ட ‘திமிர்’ மூன்றெழுத்து. கொடுத்துக் கொண்ட ‘விருது’ மூன்றெழுத்து. நானே கொடுத்துக் கொண்ட ‘பேட்டி’ மூன்றெழுத்து.  வந்து சேர்ந்த ‘குஷ்பு’ மூன்றெழுத்து. நம்பி மோசம் போன ‘அன்னை’யும் ‘சோனியா’வும் மூன்றெழுத்து. செய்த ‘ஊழல்’ மூன்றெழுத்து. ராசா போன ‘ஜெயில்’ ‘திஹார்’ கூட மூன்றெழுத்து. குடைச்சல் கொடுக்கும் ‘சி.பி.ஐ’ மூன்றெழுத்து. போன ‘ஆட்சி’ மூன்றெழுத்து. வந்து சேர்ந்த ‘சோகம்’ மூன்றெழுத்து. ‘காமெடி’ என்ற மூன்றெழுத்தால் ‘வெற்றி’ என்ற மூன்றெழுத்து கிட்டும் என்பதும் ‘கனவு’ என்ற மூன்றெழுத்தாயிற்றே என்றெல்லாம் நீ சொல்லாமலே சொன்னாற்போல் தோன்றுகிறது.

வாலிப வயதிலே காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப் போவதில்லைதான். அதற்காக கள்ளும் காஜாபீடியும் அடித்து அடுத்த துண்டு வீச்சுக்கு காத்திருக்கும் களமில்லை இது. ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். நீ இடுகை போடும்போது வரும் பிழை மாதிரி இல்லை இது. நொங்கு நொங்கு என்று நீ இந்த வயதில் பறப்பதைப் போல் இந்த வயதில் என்னை நோண்டி நொங்கெடுப்பார்களோ என்று பயந்து தொலைய வேண்டியிருக்கிறது.

கண்ணை மூடிக் கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம் என்ற உன் வரியில் பின்லேடனை விட பெரிய குண்டு வைத்திருப்பதை நான் அறிவேன். இதைப் பாராட்டி நான் எழுதப் போக காண்டிலிருக்கும் தங்கபாலு சொக்குவிடம் போட்டுக் கொடுத்து கூட்டணியை உடைக்க வழி செய்கிறாயா உடன் பிறப்பே? அழிவில்லா விதைகளா? விதை அழியாமல் செடி எப்படி முளைக்கும்? இதில் மரமாகி விண்ணை முட்டும் என்று உன் பதிவின் வரிகளைச் சேர்த்து விளம்பரம் வேறு தேடுகிறாய்.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும். பொறுத்திரு என்கிறாயே. குப்பை கூட்டி குளிர்காயச் சொல்லி நக்கலடிக்கிறாயா? ராத்தூங்கும் நம்மோடா? நான் தூங்கி எத்தனை நாளாயிற்று தெரியுமா? ஆனாலும் உடன் பிறப்பே இத்தனை வேலையிலும் ஆட்டையை போடலாம் என்ற ஆசையில் பொன்னர் சங்கர் படத்தை வெளியிட்டதை எள்ளல் செய்து நமக்காகக் காத்திருக்கிறது சரித்திரமும், சாதனையும் என்று நொந்த புண்ணில் நூடில்ஸ் வேக வைக்கிறாயே.

உன் கடிதம் மூலம் ஒன்று மட்டும் தெரிகிறது. என் கடிதம் என்று அழைப்பும் இல்லாமல் முடிவும் இல்லாமல் உன் பாணியில் துண்டு வீச எழுதும் உசார் மொட்டைக் கடிதப் பாணியில் எழுதியதிலிருந்தே உன் துண்டு ஏன் விலை போகவில்லை என்று தெரிகிறது. ‘பத்து பிள்ளை பெத்தவளுக்கு தலைச்சன் பிள்ளைக்காரி பத்தியம் சொன்னது போல்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதைப் போல் மூணு துண்டு வீசி வெற்றி பெற்ற எனக்கு ஒரு துண்டு கூட போணியாகாத உன் ஆறுதல் இந்தச் சோகத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.

அன்புள்ள

மு.க. (முழுதும் கற்பனை)

(பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்.)

38 comments:

நசரேயன் said...

அட்டகாசம் ..

ஓலை said...

500 க்கு வாழ்த்துகள். தளபதியை வழிமொழிகிறேன்.

ஓலை said...

புழல் மூன்று எழுத்து கூட. எத்தினி பேர் reserve பண்ணியிருக்காங்களோ!

நசரேயன் said...

மூணு எழுத்திலே இம்புட்டு இருக்கா ?

பனித்துளி சங்கர் said...

ஐநூறுக்கு எனது வாழ்த்துக்கள் முதலில் . பாவம் நோந்துபோனவர் நெஞ்சில் கடப்பாரையை கொண்டு சொருகுவது போல இருக்கு இந்த வசனங்கள் . சிரித்து மாளவில்லை போங்க

ஸ்ரீராம். said...

சூப்பர். 500 ஆ? அட..வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

எதிர்க் கவிஜதான் இதுவரைக்கும் படிச்சிருக்கேன்.எதிர்க் கடிதமா? நேற்று நசர்ஜி பதிவு போடற நேரத்துலயும் பின்னூட்டம் போட்டு விட்டு இன்னைக்கு ரிலிஸ் செய்திட்டீங்களாக்கும்:)

CS. Mohan Kumar said...

ஐநூறுக்கு வாழ்த்துக்கள் Bala Sir.

ராஜ நடராஜன் said...

500 ஆ!ராக்கெட் வேகம்தான்.வாழ்த்துக்கள்.

kathir said...

500க்கு வாழ்த்துகள்!

அப்பாலிக்கா வாரேன்!

Subankan said...

ஐநூறுக்கு எனது வாழ்த்துகள் :-)

ஜோதிஜி said...

அமெரிக்க உபி நசருக்கு வாழ்த்துகள்.
ஐநூறாறாறாறாறா ஆஆஆஆஆ
டபுள் வாழ்த்துகள்.

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் பாலா சார்

Chitra said...

(பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்.)


...... Super! 500 வது இடுகைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! :-))))

sriram said...

வாழ்த்துக்கள் பாலாண்ணா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ரிஷபன் said...

500 க்கு வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

500 ஆவது இடுகை – வாழ்த்துகள். கலக்கலான கடிதம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தமிழ்நாட்டு மக்கள் ரெஸ்ட் குடுத்துட்டாங்கன்னு விட்டத்தப் பாத்து மல்லாந்து படுத்துட்டு இருக்கற மனுஷன விடமாட்டீங்கறீங்களே பாலாண்ணா.

பெசொவி said...

//பொறுப்பி: மொக்கையாய் போட்டுத் தள்ளினாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்று ஆதரவு தரும் நட்புக்களுக்கு இந்த என் 500வது இடுகை சமர்ப்பணம்//

வாழ்த்துகள், ஐந்நூறுக்கு!

Thenammai Lakshmanan said...

பாலா சார்.. 500 க்கு வாழ்த்துக்கள்..:)

சிநேகிதன் அக்பர் said...

500 க்கு வாழ்த்துகள் பாலாண்ணா.

Menaga Sathia said...

500 க்கு வாழ்த்துக்கள் சார்!!

தாராபுரத்தான் said...

போட்டுத்தாக்கு..வாழ்துங்கோ.

Unknown said...

நசரேயம் இனி கடிதம் என்ன! இ மெயில் கூட அனுப்ப மாட்டார்..

சத்ரியன் said...

500 க்கு 500 மதிப்பெண்.

நசர்... நசர்... நசர்!

காமராஜ் said...

பாலாண்ணா...
நலமா ?
500 பதிவுக்கு உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

:-)))))))

கலக்கல் பாலாண்ணா :-)

vasu balaji said...

@@ நன்றி தளபதி
@@நன்றி சேது
@@நன்றி பனித்துளி சங்கர்.
@@நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

/ராஜ நடராஜன் said...

எதிர்க் கவிஜதான் இதுவரைக்கும் படிச்சிருக்கேன்.எதிர்க் கடிதமா? நேற்று நசர்ஜி பதிவு போடற நேரத்துலயும் பின்னூட்டம் போட்டு விட்டு இன்னைக்கு ரிலிஸ் செய்திட்டீங்களாக்கும்:)/

ஹி ஹி:)) பின்ன

vasu balaji said...

@@நன்றி மோகன்குமார்
@@நன்றி ராஜண்ணே
@@நன்றிங் மேயர். அப்பாலிக்கா இன்னும் இப்பாலிக்கா வர்லங்கோ
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி ஜோதிஜி
@@நன்றிங்க மஹி க்ரான்னி
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க வெங்கட் நாகராஜ்
@@நன்றி சுந்தர்ஜி
@@நன்றி பெ.சொ.வி.
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றி அக்பர்
@@நன்றிங்க மேனகா
@@நன்றிண்ணா
@@நன்றி செந்தில்
@@நன்றி கண்ணன்
@@நன்றிங்க காமராஜ். நலம்.
@@நன்றி பா.ரா.

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 55/100 மார்க். நன்றி!

Unknown said...

வாழ்த்த வயதில்லை, அதனால் வணங்குகிறேன், இது தான் அர்த்தமுள்ள 500

Unknown said...

500 க்கு வாழ்த்துகள் பாலா சார்..


இடுகை டெரர் ...

vidivelli said...

அடடா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
500வதுக்கு முதலில் வாழ்த்துக்கள்

நண்பரே நீண்ட நாட்களின் பின்......
நலமா!!!!

நம்ம பக்கமும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

கும்மாச்சி said...

இவர் கூற்றின்படி ஆப்பு வைக்கும் பார்பான் மூன்றேழுதல்லவே, இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க?

vasu balaji said...

/கும்மாச்சி said...

இவர் கூற்றின்படி ஆப்பு வைக்கும் பார்பான் மூன்றேழுதல்லவே, இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க?/

ஐயர் மூன்றெழுத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

500 க்கு வாழ்த்துக்கள் bala

// நசரேயன் said...
அட்டகாசம் ..//

அட்டகாசம்