Friday, August 20, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.0

பிரபாகரனைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளுக்கு நெடியவன் ஒத்துழைப்பு வழங்கவில்ல: குமரன் பத்மநாதன்

குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டாங்கொய்யாலே! இத அப்பவே கூவியிருக்கலாம்ல. தமிழனோட விஸ்வாசம் இருக்கே! அடடடா த்த்த்த்தூஊஊ 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கே.பி.யை கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன: கெஹலிய


அந்தாளு சொல்றதெல்லாம் வச்சிப் பார்த்தா செட்டப்பு மாதிரித்தான்யா தெரியுது. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொன்சேகாவிற்கு எதிரான தீர்ப்பு தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்படும்: ஐ.தே.க


ங்கொய்யால இந்தாளு யூனிஃபார்ம்ல இருந்தப்ப இந்த ஆணையகம் சொன்னதுக்கு என்னா மதிப்பிருந்திச்சி. இப்ப மட்டும் மனித உரிமையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளனர்

அது சரி. சொன்னத சொல்லிட்டு போறதுக்கு சலம்பலெதுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார்: பஷில் ராஜபக்ஷ

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காசு என்னல்லாமோ பண்ணுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாவது யுத்த நீதிமன்றின் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது! இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது!: சரத் பொன்சேகா

உனக்கே கிடைக்காதுன்னா தமிழனுக்கு எங்க கிடைக்கும். எதுக்கும் ராஜீவ்-ஜெயவர்த்தன உடன்படிக்கையில இதுக்கு தீர்வு இருக்கும். நல்லா தேடு பாரு ராசா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்
  
அதெப்டி மறக்கறது. இதச் சொல்லியேதானே கொள்ளுப்பேரன் வரைக்கும் ஓட்டு பதவி எல்லாம் வாங்கியாவணும். ராகுல் மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்னு சொல்லியிருக்கணும் கண்ணு.
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் முதலீட்டை குறைக்க மாட்டோம்: அமெரிக்கா

முன்னாடியே கோர்ட்ல குத்துமதிப்பா ஃபைன் கட்டிடுங்கப்பா. சும்மா முப்பது வருஷம் கேஸ் இழுத்து  கோடிக்கணக்குல செலவு பண்ணி தம்பிடி ஃபைன் போடுவாய்ங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமானத்தை கடத்தினால் மரண தண்டனை

மந்திரிங்க சொந்தகாரங்க யாரும் அந்த விமானத்தில் இல்லாவிடில்...... 
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எம்பிக்கள் சம்பளம் அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

கொள்ளு வேணாங்கிற குதிரை உண்டா? மந்திரிப் பதவி போனா என்ன பண்றது?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியா அளித்த நிதியை பாகிஸ்தான் ஏற்றது 

அய்ங்! அப்ப ஆயுதமா குடுத்தாதான் வாங்குவேன்னு அடம் புடிச்சானோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் 

நம்ம மருத்துவக் கல்லூரி வருதாங்ணா? டீல் ஓக்கேவா?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் உணவுப் பூங்கா: மத்திய அரசு ஒப்புதல்

சூரியனில்லாமல் உணவு ஏது?  Food Giantனு பேரு வச்சிடலாம். ரைமிங்கா வரும்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி கவலை

அப்பத்தானே குடியரசுங்கற வார்த்தைக்கு மருவாதி. ஏன் எதிர்க்கிறாரு?
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திராவிட கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்: கலைஞர்


தலைவரே! திராவிடக் கொள்கைகள் யாதுன்னு ஒரு பரிட்சை வைங்களேன். வீரமணி கூட ஃபெயில்தான். ஆமா! காங்கிரஸ் திராவிட கட்சியா தல!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(இது 150வது நறுக். )

39 comments:

க.பாலாசி said...

//குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டாங்கொய்யாலே! இத அப்பவே கூவியிருக்கலாம்ல. தமிழனோட விஸ்வாசம் இருக்கே! அடடடா த்த்த்த்தூஊஊ //

உங்களுக்கு துப்ப மட்டும்தான் தோணுதா?

க.பாலாசி said...

//அந்தாளு சொல்றதெல்லாம் வச்சிப் பார்த்தா செட்டப்பு மாதிரித்தான்யா தெரியுது.//

செட்டப்பாவது ஒண்ணாவது... அடிக்கு பயந்து கூவறாப்பலல்ல இருக்கு...

க.பாலாசி said...

//ங்கொய்யால இந்தாளு யூனிஃபார்ம்ல இருந்தப்ப இந்த ஆணையகம் சொன்னதுக்கு என்னா மதிப்பிருந்திச்சி. இப்ப மட்டும் மனித உரிமையோ?//

அய்யோ..அய்யோ...வேற மாதிரி சிரிக்க தோணுதுல்ல...

க.பாலாசி said...

//சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளனர்//

அப்டியே அளிச்சிட்டாலும்....

அப்பாதுரை said...

/சொன்னத சொல்லிட்டு போறதுக்கு சலம்பலெதுக்கு/

சலம்பல்னா என்னங்க?
நையாண்டி வழக்கு ரொம்ப அருமையா பயன்படுத்தி இருக்கீங்க.. சிந்திக்கவும் சிரிக்கவும் முடியுது

க.பாலாசி said...

//வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார்: பஷில் ராஜபக்ஷ //

என்னாத்துக்கு இணையப்போறான்.. மிச்ச மீதியையும் அழிக்கவா?

க.பாலாசி said...

//இலங்கையில் எனக்கு நீதி கிடைக்காது!: சரத் பொன்சேகா//

அடிங்கொய்யால... செத்துப்போனவங்களுக்கே நீதி கெடைக்கலையாம்... பண்ணுனதுக்குல்லாம் அனுபவிச்சுதாண்டா ஆவணும்...

க.பாலாசி said...

//ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்//

சொல்லிட்டாருய்யா... வௌக்கெண்ண...

க.பாலாசி said...

//இந்தியாவில் முதலீட்டை குறைக்க மாட்டோம்: அமெரிக்கா//

குறைச்சிட்டா சோத்துக்கு சிங்கி அடிக்கணும்ல...

ராஜ நடராஜன் said...

துண்டு போட்டுக்கவா?இல்ல யாராவது முந்திகிட்டாங்களா?

கலகலப்ரியா said...

150 - 150000 ஆக வாழ்த்துகள்...

க.பாலாசி said...

//எம்பிக்கள் சம்பளம் அதிகரிப்பு: அமைச்சரவை ஒப்புதல்//

நாட்டுல சோத்துக்கு வழியில்லாம எத்தனப்பேரு இருக்காங்க... இவனுங்களுக்கு சூ.... செண்ட் கேக்குதா?

க.பாலாசி said...

//நம்ம மருத்துவக் கல்லூரி வருதாங்ணா? டீல் ஓக்கேவா?//

இதுவரைக்கும் ஏதாவது இல்லாமலாயிருக்கும்...

VISA said...

நறுக் சுறுக் சூப்பர்

சூர்யா ௧ண்ணன் said...

150 வது நறுக்.. வாழ்த்துக்கள் தலைவா!
(150000 நறுக் வரதுக்குள்ள இவனுங்கெல்லாம் திருந்தினா சந்தோஷம்..)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ந்றுக்குலயே 150ஆ.. அதுக்கு ஒரு வாழ்த்துகள்.

கார்த்திக் சிதம்பரம், உணவுப் பூங்கா எல்லாம் டாப்

Ahamed irshad said...

மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்///

கூட்ட‌ணி ப‌த்தி எவ்ளோ நாளைக்குத்தான் பேசுற‌து..அதான் ஒரு சேஞ்சா..

பிரபாகர் said...

நூற்றைம்பதுக்கு வாழ்த்துக்கள் அய்யா!

//மந்திரிங்க சொந்தகாரங்க யாரும் அந்த விமானத்தில்ல இல்லாவிடில்......//

அது! இதுதாங்கய்யா டாப்பு!

பிரபாகர்...

நிஜாம் கான் said...

அண்ணே! குடுத்த காசுக்கு மேல அவன் மட்டுமா கூவுறான்?? இனி யாரெல்லாம் கூவுவானுகன்னு பாருங்க‌

நிஜாம் கான் said...

இருந்தாலும் உங்களுக்கு காங்கிரஸ் மேல ரொம்பத்தான் பாசம். கொள்ளுப்பேரன் வரைக்கும் கணிச்சி வச்சி இருக்கியலண்ணே!

Paleo God said...

நூற்றைம்பதுக்கு வாழ்த்துக்கள் அய்யா!

ரிப்பீட்டு சார் :)
(என்னதிது நறுக்கிகிட்டே இருக்கீங்களேன்னு பார்த்தேன்:)

//மந்திரிங்க சொந்தகாரங்க யாரும் அந்த விமானத்தில்ல இல்லாவிடில்......//

அது! இதுதாங்கய்யா டாப்பு!

//

தனக்கு பாதிக்கறத மட்டும் எடுத்து டாப்ல போடறார் பாருங்க சார்..:)
அவ்வ்வ்வ்வ்

Unknown said...

//ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்///
அப்படியே காந்தி கொலை, இந்திரா கொலை போன்றவற்றை தூசி தட்டினால் நல்லாருக்கும் ...

150 க்கு வாழ்த்துக்கள் ஐயா... இது நல்லாருக்கு இனிமே அதிகமா தொடருங்க...

VELU.G said...

150 வது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

settaikkaran said...

//தமிழகத்தில் மது அருந்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும்: அன்புமணி கவலை

அப்பத்தானே குடியரசுங்கற வார்த்தைக்கு மருவாதி. ஏன் எதிர்க்கிறாரு?//

இப்படியொரு கருத்தை வெளியிட்டதற்காக, குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி தலைமையில், நாளை முதல் கண்டனப்பொதுக்கூட்டமும் ராவோடு ராவாக, றாவாக மதுவருந்தும் போராட்டமும் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. :-)

கிரி said...

//மருத்துவ படிப்புக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

நம்ம மருத்துவக் கல்லூரி வருதாங்ணா? டீல் ஓக்கேவா?//

ஹி ஹி ஹி இல்லைனா போராட்டம் தான்

150 நறுக்கா! வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காசு என்னல்லாமோ பண்ணுது.//
ஹை சினி சாங்க்ஸ்ல கூட ரைமிங்கா கலாக்கிறீங்களே பாலா சார்..

a said...

//
அதெப்டி மறக்கறது. இதச் சொல்லியேதானே கொள்ளுப்பேரன் வரைக்கும் ஓட்டு பதவி எல்லாம் வாங்கியாவணும்.
//

Chitra said...

திராவிட கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்: கலைஞர்


தலைவரே! திராவிடக் கொள்கைகள் யாதுன்னு ஒரு பரிட்சை வைங்களேன். வீரமணி கூட ஃபெயில்தான். ஆமா! காங்கிரஸ் திராவிட கட்சியா தல!


...... அப்படி போடு அருவாளை! சூப்பர்!

பெசொவி said...

வழக்கம்போல் தூள் சார்!

//கலகலப்ரியா said...
150 - 150000 ஆக வாழ்த்துகள்...
//

மன்னிக்கணும் சகோதரி,
இந்த மாதிரி பதிவு வராமலே இருக்கனும்னுதான் எனக்கு ஆசை, அதாவது பாலா சார் கொதித்தெழக் கூடிய சூழலே வரலைனா, நாட்டுக்கு நல்லதுதானே!

நர்சிம் said...

150வது நறுக்// வாழ்த்துகள்.

Unknown said...

Solla maranthuttene, 150kku vaazthukkaL.

Neenga 15000 eluthurathukku munnadiyavathu arasiyalviyathikaL thirunthidanum.

சத்ரியன் said...

//ராஜீவ் காந்தி படுகொலையை எப்படி மன்னிக்க முடியும்? கார்த்தி சிதம்பரம்

அதெப்டி மறக்கறது. இதச் சொல்லியேதானே கொள்ளுப்பேரன் வரைக்கும் ஓட்டு பதவி எல்லாம் வாங்கியாவணும். ராகுல் மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்னு சொல்லியிருக்கணும் கண்ணு.//


அதானே! எப்புடி மன்னிக்கமுடியும் கார்த்தி?

நம்ம மீனவங்கள ...சிங்களவன் கொல்றத மட்டும் தானே மன்னிக்க முடியும்!

அடிங்கொய்யால...வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது!

vasan said...

என‌க்கு ஒரு ஆசை பாலாசார்,நீங்க‌,க‌லைஞ‌ர்,ராஜ‌ப‌க்சே மூனு பேரையும்
ஒரு காட்டேஸ்ல‌ ஒரு நாள் முழுவ‌தும் விட்டுட்டு (ச‌க‌ல‌ வ‌சதியோட‌)
உங்க‌ பேச்சு/உரையாட‌ல்க‌ளை ப‌திவு ப‌ண்ணிட்டு (ஜாப‌ர்ட்ட‌ ச‌வுக்கு ரெக்க‌ம‌ண்டேஷ‌ன்ல‌)
ப‌திவாள‌ர்க‌ளை எல்லாம் கூட்டி கும்ப‌லா கேக்க‌னும். ஓகேயா?

vasu balaji said...

@@நன்றி பாலாசி
@@நன்றிங்க அப்பாதுரை. சலம்பல்னா உதாரு, ஆர்ப்பாட்டம், அலட்டல் இப்படி சமயத்துக்கு தகுந்தாமாதிரி..ஹி ஹி.
@@அடடா நசரேயன் மாதிரி ஆகிப் போச்சேண்ணே:)).

vasu balaji said...

கலகலப்ரியா said...

/150 - 150000 ஆக வாழ்த்துகள்...//

கிர்ர்ர்ர்..நன்றி நன்றி.

vasu balaji said...

@@நன்றி விசா
@@நன்றி சூர்யா. (ஆமாம்:()
@@நன்றிங்க செந்தில்
@நன்றிங்க இர்ஷாத்
@@நன்றி பிரபா
@@நன்றிங்க நிஜாமண்ணே.
@@நன்றிங்க ஷங்கர்
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க வேலு
@@நன்றி சேட்டை
@@நன்றி கிரி

vasu balaji said...

@@நன்றிங்க யோகேஷ்
@@நன்றி சித்ரா
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றிங்க பெ.சொ.வி

vasu balaji said...

@@நன்றி சத்ரியன்
@@நன்றி முகிலன்
@@நன்றி நர்சிம்

vasu balaji said...

vasan said...

//என‌க்கு ஒரு ஆசை பாலாசார்,நீங்க‌,க‌லைஞ‌ர்,ராஜ‌ப‌க்சே மூனு பேரையும்
ஒரு காட்டேஸ்ல‌ ஒரு நாள் முழுவ‌தும் விட்டுட்டு (ச‌க‌ல‌ வ‌சதியோட‌)
உங்க‌ பேச்சு/உரையாட‌ல்க‌ளை ப‌திவு ப‌ண்ணிட்டு (ஜாப‌ர்ட்ட‌ ச‌வுக்கு ரெக்க‌ம‌ண்டேஷ‌ன்ல‌)
ப‌திவாள‌ர்க‌ளை எல்லாம் கூட்டி கும்ப‌லா கேக்க‌னும். ஓகேயா?//

எனக்கேன் இவ்வளவு பெரிய தண்டனை.அவ்வ்வ்வ்வ்:)))