Saturday, July 10, 2010

கேரக்டர் - நரசிம்மன்.

குறைந்தது ஒரு நூறு பேராவது தினமும் சாப்பிடும்போது அந்த புண்ணியவானால் இன்றைக்கு நானும் என் குடும்பமும் சோறுண்கிறோம் என நினைக்க வாழ முடியுமா? ஒரு ஐந்நூறு பேராவது அந்தய்யா மட்டும் இல்லைன்னா என் குடும்பம் நடுத்தெருவில் என பல நேரங்களில் நினைக்கும்படி வாழ்வது சாத்தியமா? 

இவை எதுவும் என்னால் என்று ஒரு நொடியும் எண்ணாது, “Its good! We could do it" என்று மகிழ்ச்சி பொங்க அனைவரையும் அரவணைக்கும் மனது சாத்தியமா? மிகச் செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தும் கடைமட்ட ஊழியனின் பிரச்சனையை அவன் பார்வையில் பார்க்கும் மனதென்பது மிக அரிதான ஒன்று.

அவர் மகானல்ல. சாமானியர். ஆனால் மனிதன். நெடு நெடுவென்று ஆறடி தாண்டிய உயரம். மெல்லிய உடல்வாகு. படபடவென்று சிமிட்டும் கண்கள். பேசியபடி சிரிக்கிறாரா, சிரித்தபடி பேசுகிறாரா என்றறியாப் பேச்சு. அவர்தான் தென்னக இரயில்வேயின் ஜெனரல் மேனேஜராக இருந்து காலமான திரு நரசிம்மன் அவர்கள்.

“அய்யாவ பாரு! அவரு மனசு வெச்சி எதுனா செஞ்சா உண்டு. அவரு முடியாதுன்னு சொல்லிட்டா கடவுளாலயும் முடியாது” என்ற நம்பிக்கைக்குச் சொந்தக்காரர். எளிமையானவர். 

பொதுவாக தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு ஆணை வந்தால், நமக்கென்ன போயிற்று? அரசாணையை நடைமுறைப்படுத்துவது மட்டுமே வேலை என்ற மனப்பான்மை சாதாரணம். அதைத் தவறென்றும் சொல்லவியலாது. இவர் மட்டும் விதிவிலக்கு. 

“என்னமோ சரியில்லை பாருய்யா! கீழ்மட்டத்தில் அவனுக்கு தெரிஞ்ச இங்கிலீஷ் எழுதி வைப்பான். மேல இருக்கிறவனுக்கு புரிஞ்சதோ இல்லையோ. இதோட விளைவு என்னவாகும் பாரு” என்பார். பெரும்பாலும் அத்தகைய கடிதங்களில் “I” (இம்ப்ளிகேஷன்ஸ்) என்ற குறியோடு அவரின் கையெழுத்திருக்கும். அலசி ஆராய்ந்து, அவரின் பரிசீலனைக்குத் தரும்போது அந்த ஆணை தவறாகவோ, தொழிளாளருக்கு பாதகமாகவோ இருப்பின் வரிந்து கட்டிக் கொண்டு பிரித்து மேய்வார். 

ஒரெ ஒரு சொல் அனாவசியமாக இராது. ஒன்றல்ல இரண்டல்ல, எத்தனை அத்தகைய ஆணைகள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன? சூத்திரதாரி அவர்தான். ஆனாலும்,  “திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்று கடிதம் வரும்போது பொறுப்பான கீழ் அலுவலரை அழைத்து, “தேங்க்ஸ் டு யு, தே ஹாவ் வித்ட்ரான் தட் இடியாடிக் ஆர்டர்” எனும் போது ஒரு அரசு ஊழியனுக்கு வேறென்ன வேண்டும்?

அவர் சென்னைக் கோட்ட அதிகாரியாக இருந்தபோது லெவல் கிராசிங் கேட்டில் இருந்த ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்து விட்டார்கள். குற்றம், வேலை நேரத்தில் போதையில் தூங்கி ட்ரெயின் போன பிறகும் கதவை திறக்கவில்லை என்பது.

உண்மையில் அந்த ஊழியர் ரிலீவர் வராததால் தொடர்ந்து ஓய்வின்றி 3 நாட்கள் பணியில் இருத்தப்பட்டிருக்கிறார். காய்ச்சலோடு இருந்தபோதும், அவரின் அதிகாரி, லீவ் தர மறுத்துவிட்டிருக்கிறார். குடிப்பழக்கமே இல்லாத அவரை, ஒரு சக ஊழியர், சாராயத்தில் மிளகுத்தூள் போட்டு அடித்தால் சரியாகிவிடும் என தான் குடிக்க வழி பார்த்துக் கொண்டு இவருக்கும் கொடுத்திருக்கிறார். பழக்கமின்மை, உடல் அசதி, ஜூரம் வேறு இருந்ததால் மயங்கிவிட்டிருக்கிறார். 

அவரின் உயரதிகாரி, இன்ஸ்பெக்‌ஷனில் பிடித்து, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, சஸ்பெண்ட் செய்துவிட்டார். மருத்துவ சோதனை முடிவில், ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதும், பணி நேரத்தில் போதையில் இருந்ததும் உறுதியாயிற்று. பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். 

அதற்கெதிரான, அப்பீல் மனுவைக் கொடுத்து, அந்த ஆள், மனைவி குழந்தையுடன் கதறி, அய்யா! நான் குடித்ததே இல்லை. அன்றைக்கு முடியாமல் வருத்தம், களைப்பு புத்தி கெட்டுப் போனேன். வாழ்க்கை கொடுங்கைய்யா என்று கைகூப்பி நின்றான். சத்தியமாய், வேறு யாராயினும், சாட்சியம் இருக்கிறது, முதலோ கடைசியோ பணி நேரத்தில் குடித்திருந்திருக்கிறாய். நான் என்ன செய்ய முடியும் என்றுதான் சொல்லத் தோன்றியிருக்கும். பார்க்கலாம் போப்பா என்று அனுப்பிவிட்டார்.

தகுந்த விசாரணைகளுக்குப் பிறகு, அவர் குடிப்பழக்கமற்றவர் என்பதும், சொன்னது உண்மை என்றும் தெரிந்தது. நாங்கள் (நான் அப்போது செக்‌ஷன் ஆஃபீஸர், என் அதிகாரி, இன்னோர் அதிகாரி) அப்போது அவருக்குக் கீழ் வேலை செய்யவில்லை எனினும், அழைத்து, விபரம் கூறி,  பாவம்பா! ஏதாவது வழியிருக்கும் பாருங்க. ஹி ஈஸ் ஒன்லி அ விக்டிம். நல்லகாலம், கேட் திறக்காம பூட்டி வச்சிட்டான். திறந்து வெச்சிருந்தா ஒன்னும் பண்ண முடியாது. எங்காவது சந்து பொந்து கண்டு பிடிப்பீங்களே பாருங்க என்று அனுப்பிவிட்டார். 

சட்டங்கள் தெளிவாயிருக்கின்றன. சாட்சியங்கள் அசைக்க முடியாததாக இருக்கிறது. தினசரி கிடைத்ததா கிடைத்ததா என்பதே கேள்வியாகிப் போனது எங்களுக்கு. அத்தனை வேலைகளுக்கிடையேயும் மறக்காமல் தினம் ஒரு முறை என்னாச்சு என்று கேட்கத் தவறியதில்லை அவர். நடைமுறைப் பிழை ஏதேனும் இருப்பின் மட்டுமே வழியென்பது தெரிந்திருந்தது.

எத்தனை புரட்டினாலும் ஒன்றும் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டிய கேசில் ஒரு ஒளிக்கீற்று தோன்றியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என்னால் மறக்க முடியாத ஒரு அற்புத தருணமது. நான் துள்ளியபடி என் அதிகாரியிடம் அலட்டிக் கொள்ள பத்து அடி நடந்திருப்பேன். எதிரில் என் அதிகாரி சிரித்தபடி, புடிச்சிட்டியா என்று வருகிறார். சரியாக அதே நேரம் அலுவலகத்தின் மறுகோடியில் இருந்த மற்ற அதிகாரி, க்ருஷ்ணமூர்த்தி புடி பட்டுடுத்துய்யா என்று வருகிறார். மூவருக்கும் ஒரே நேரம் கிடைத்தது அந்த ஒளிக்கீற்று.

எந்த அதிகாரி, இவர் போதையில் மயங்கியிருந்ததைக் கண்டு பிடித்து, மருத்துவ சோதனைக்கு அனுப்பி, சஸ்பென்ஷனில் வைத்தாரோ அவரே ஒழுக்க அதிகாரியாக விசாரணை செய்து பணிநீக்கம் செய்திருந்தார். ஒழுங்கு முறைச் சட்டப்படி, அவர் அவருடைய மேலதிகாரிக்கோ, அல்லது மேலதிகாரியை வேறோர் அதிகாரியை நியமனம் செய்யச் சொல்லியோ கேட்டிருக்க வேண்டும்.

சாரிடம், குஷியாகப் போய் சொன்னபோது, “ ஐ நோ யூ பீபிள் ஆர் கேபபிள், எனிவே தேங்க் யூ” என்று சொல்லி, அந்த அதிகாரியை அழைத்து வறுத்தெடுத்தார். தன்னுடைய அடிப்படைக் கடமை தெரியாமல் ஒருவனின் மேல் நடவடிக்கை எடுத்ததுமின்றி, அவனின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் தண்டனை என்ற போதும் தகுந்த அக்கறையின்றி ஆணை வழங்கியமையைச் சுட்டிக் காட்டினார்.  சட்டத்துக்குப் புறம்பான அந்த ஆணையை ரத்து செய்து, அப்பீலின் மேல் தன் அதிகாரத்துக்குட்பட்டு, மிகக் கடுமையான சம்பளக் குறைப்பை தண்டனையாக்கினார்.

அவருடைய காலத்தில்தான் தென்னக இரயில்வே மருத்துவமனையில், வெளி ஆட்களும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற வழி செய்ய முடிந்தது. பலவிதமான இதய நோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடிந்தது. மறைமுகமாக இரயில்வேத் தொழிலாளர்களுக்கும் அனுபவம் காரணமாக எங்கள் மருத்துவர்களால் சிறந்த சிகிச்சை அளிக்க முடிந்தது.

இதய நோய் அறுவை சிகிச்சைக்கு குறைந்த கட்டணம், சிறந்த சிகிச்சை என்ற அளவுக்கு புகழ் வளர்ந்தது. இன்றும் இதய நோய் அறுவை சிகிச்சையில் தலை சிறந்த முன்னோடிகளாய் தனியாய் மருத்துவம் பார்ப்பவர்களில் ஆகச்சிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் இரயில்வேயில் பணிபுரிந்தவர்களே. அத்தகைய ஓர் வாய்ப்பமைத்துத் தந்தவர் திரு நரசிம்மன்.

ரூல் இப்படிச் சொல்கிறது சார் என்று சொல்லிவிட முடியாது. எனக்குப் படிக்கத் தெரியாமலா உன்னிடம் கேட்டேன். ஏன், எதற்கு என்று யோசி. அப்புறம் வந்து சொல், என்பார். அப்படிப் படிக்கும் போது அதன் உள்ளர்த்தம் புரியும். அடுத்த முறை, இதற்காகத்தான் என்று விளக்கும் போது வாதம், பிரதிவாதம் என்று புரியவைப்பார். நாளடைவில், புரிதல் எளிதாகிப் போகும்.

பணிமூப்பு பெற்ற பிறகும் அடிக்கடி பேசுவார். பழைய நாட்களுக்காக மனம் ஏங்கிப்போகும். தவறாமல், ‘இட் வாஸ் ப்ளஸண்ட் டு வர்க் வித் யூ பீப்பிள்.’ எனும் போது, இல்லை சார் அந்த சந்தோஷத்தைக் கொடுத்தவர் நீங்கள் என்றிருக்கிறேன்.

ஒரு நாள் தொலைபேசியில், பாலா ‘ஐம் நாட் வெல், எலும்பு மஜ்ஜையில் ஏதோ ப்ராப்ளமாம். ஒரு ஊசி போடுவான் பாரு எலும்பில், செத்துப் போறது பெட்டர்.  வி டோண்ட் ஹாவ் த ஃபெஸிலிடி. அதனால வெளியில் பார்த்தது. பில் அனுப்பியிருக்கேன், பார்த்து அனுப்பிவிட்டு தகவல் சொல்’ என்றபோது அதிர்ந்து போனது மனது.

எத்தனை பேரின் கண்ணீர் துடைத்த ஒரு மனிதனுக்கு தன் கடைசிக் காலம் வலியில் துடித்துச் சாகவா? எப்படியோ, அதிக காலம் வலிபடாமல், சீக்கிரமே விடுதலை பெற்று விட்டார். வாராது வந்த மாமணி அவர்.

சொல்ல மறந்து விட்டேனே. எக்மோர் குப்பத்து திருவேங்கடத்தை தென்னக இரயில்வே டென்னிஸ் ப்ளேயராக்கியவர் இவர்தான்.

We miss you Sir! 

66 comments:

http://rkguru.blogspot.com/ said...

மனதுக்கு மறந்ததை நினைவுபடுத்திய பதிவு.....வாழ்த்துகள்

ராம்ஜி_யாஹூ said...

நல்ல மனிதர் போல, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

இவர் எதும் புதிய ரயில் அல்லது புறநகர் ரயில் விரிவாக்கத்திற்கு உதவி செய்து/முயற்சி எடுத்தாரா

அகல்விளக்கு said...

//எக்மோர் குப்பத்து திருவேங்கடத்தை தென்னக இரயில்வே டென்னிஸ் ப்ளேயராக்கியவர் இவர்தான்//

திருவேங்கடம் பதிவில் இவர் இடம்பெற்றபோதே யார் அந்த மாமனிதன் என யோசித்தேன் ...

Hats off to u Sir...

Subankan said...

அருமையான மனிதர்கள் கிடைப்பது அபூர்வம்தான். பகிர்வுக்கு நன்றி :)

எல் கே said...

மிக மிக நல்ல பதிவு. இந்த மாதிரி அதிகாரிகள் இன்று மிகக் குறைவு

காமராஜ் said...

பாலாண்ணா...
எங்கிருந்தாலும் மனிதர்கள் மனிதர்களாகவே ஜொலிக்கிறார்கள்.
இந்த பதிவு,இந்தக்கேரக்டர். நான் மேலதிகாரிகளிடம் இருக்கனும் என்று ஏங்குகிற கேரக்டர் பாலாண்ணா. இதே போல இரண்டு பேரை நானும் மாதுவும் மறுபிழைப்புக் கொடுக்கவைத்தோம்.அவர் சுதாகரன் மலையாள மனிதன்.தப்பு செய்த ஊழியன் தண்டிக்கப்படலாம் அவன் குடும்பம் தண்டிக்கப்படக்கூடாது என்று சொன்ன பீரோக்ரேட் அவர்.விசாரணை அதிகாரியும்,குற்றம் சுமத்துபவரும் ஒரே நபராக இருக்கக்கூடாது என்கிற வாதத்தோடு நாங்கள் பல விசாரணைகளைத் திசை திருப்பியிருக்கிறோம். பெரியவர் நரசிம்மனை உரக்கப்பேசவேண்டும் அரிதானவைகளை முன்னிருத்தி பாருங்கள் பாருங்கள் என்று உலகத்துக்கு உரைக்கவைக்கவேண்டும். பாலாண்ணா. வியக்கிறேன். வழிமொழிகிறேன்.

கலகலப்ரியா said...

நெகிழ்வான பதிவு சார்..

||குப்பத்து திருவேங்கடத்தை||

லிங்க் போட்டு விடுங்க..

ஈரோடு கதிர் said...

ப்ச்..

படிக்கும் போதே மனம் நெகிழ்ச்சியில் மகிழ்கிறது, அதே நெகிழ்ச்சியில் கனக்கிறது

மனிதன் மனிதனாக இருப்பதுதான் சிரமம் போல

அந்த மாமனிதருக்கு வணக்கங்கள்

ரோஸ்விக் said...

இவர் தலைவனாய் இருக்க தகுதி உடையவர். இதை படித்து எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு துறைக்கு இது போன்ற அதிகாரி கிடைப்பார் என்ற நம்பிக்கையில்... உங்களுக்கு சாவில்லை நரசிம்மன் சார்.

செ.சரவணக்குமார் said...

நெகிழ்ந்து கரைகிறேன் பாலா சார்.

எத்தனை அற்புதமான மனிதர்.

கொடுத்து வைத்திருக்கவேண்டும், இப்படி நல்ல மனிதர்கள் சுற்றியிருக்க‌ ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி Bala

உண்மைத்தமிழன் said...

இவர் ஒருவர் வீட்டில் மட்டும்தான் சி.பி.ஐ. நுழையவில்லை என்று கேள்விப்பட்டேன்..!

இது ஒன்றே போதுமே..?

மாதவராஜ் said...

யப்பா!
உலுக்கியும் போடுகிறது. நெகிழவும் வைக்கிறது.உண்மைக்கு இருக்கும் வலிமை மிக அடர்த்தியானது. பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said...

இப்படியும் சில நல்லவர்கள் ...

பிரபாகர் said...

இது போன்று நல்லவர்கள் சிலர் இருப்பதை, இருந்ததைக் கேட்கும் போது, படிக்கும்போது நம்மையெல்லாம் சார்ந்து இருக்கும் வஞ்சக எண்ணம் கொண்ட பலரைப்பற்றிய எண்ணங்களால் சோர்ந்திருக்கும் மனதிற்க்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது!

உண்மையில் அவர் ஒரு மனிதருள் மாணிக்கம்!

பிரபாகர்...

ஸ்ரீராம். said...

இது மாதிரி மனிதர்களோடு பணியாற்றியிருக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரது கடைசி கால வேதனையை படித்த போது என்ன கொடூரம் இயற்கைக்கு என்று தோன்றியது.

VISA said...

good one sir

sriram said...

பாலாண்ணா, இப்படி ஒருவருக்கு ரிப்போர்ட் செய்த நீங்க பாக்கியம் செய்தவர்...
அப்துல் கலாமின் சுயசரிதை படிச்சிருக்கீங்களா? அவரோட பாஸ் நல்ல தலைவருக்கு ஒரு அடையாளம், நரசிம்மனும் அந்த Category இல் வருவார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிநேகிதன் அக்பர் said...

மிகவும் நெகிழவைத்த பதிவு பாலா சார். நரசிம்மன் சாருக்கு ஒரு சல்யூட்.

Romeoboy said...

\\குப்பத்து திருவேங்கடத்தை///

தல நம்பவே முடியல .. ஒருவரை பாராட்ட நல்ல மனசு வேணும் அது உங்களிடம் இருக்கு தல .. நெகிழ வைத்த பதிவு தாழ்

க ரா said...

சார் படிச்சு முடிச்சிட்டு என்ன சொல்றதுன்னு வார்த்தை இல்லாம தவிக்கிறேன். இந்த மாதிரி ஒரு சிறந்த மனிதருக்கு கிழ வேலை பாக்கறதுன்றது எல்லாருக்கும் கிடைக்காது. நீங்க ரொம்ப லக்கி. இப்படி ஒரு உயர் அதிகாரிக்கு கிழ வாழக்கையில வேல பார்த்துடனும் நான். வாழ்க்கையில நாளக்கு ஒரு உயர்ந்த நிலைக்கு போனாலும் கிழ இருக்கறவங்களுக்கு இவர மாதிரி ஒரு அதிகாரியா இருக்கனும். ரொம்ப நன்றி சார் பகிர்ந்தமைக்கு :-).

Mahi_Granny said...

என்ன சொல்ல. very touching one . thanks for sharing sir

a said...

நல்ல ஒரு பகிர்வு...

பா.ராஜாராம் said...

பாலாண்ணா,

வழக்கம் போல்தான். one of the best charector!

cheena (சீனா) said...

அன்பின் பாலா

இவர மாதிரி உயர் அதிகாரிகள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். நெஞ்சம் நெகிழ்ந்தது. பாலா.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

நசரேயன் said...

நல்லா இருக்குண்ணே

Unknown said...

பொறாமையா இருக்கு சார் உங்களைப் பாக்க..

க‌ரிச‌ல்கார‌ன் said...

கொடுத்து வைத்த‌வ‌ர் சார் நீங்க‌ள்

நாடோடி said...

ந‌ல்ல‌ ம‌னித‌ர்... ப‌கிர்விற்கு ந‌ன்றி பாலா சார்..

Paleo God said...

//ரூல் இப்படிச் சொல்கிறது சார் என்று சொல்லிவிட முடியாது. எனக்குப் படிக்கத் தெரியாமலா உன்னிடம் கேட்டேன். ஏன், எதற்கு என்று யோசி. அப்புறம் வந்து சொல், என்பார். அப்படிப் படிக்கும் போது அதன் உள்ளர்த்தம் புரியும். அடுத்த முறை, இதற்காகத்தான் என்று விளக்கும் போது வாதம், பிரதிவாதம் என்று புரியவைப்பார். நாளடைவில், புரிதல் எளிதாகிப் போகும்.//

ஆஹா .. வரம். பகிர்வுக்கு நன்றி சார்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ட்ரெயின் போன பிறகும் கதவை திறக்கவில்லை என்பது.//

இதுவாவது பரவாஇல்லை புண்ணியவான் ரயில் வருமுன் கதவை அடைத்தாரே!

Ahamed irshad said...

நல்ல பதிவு.. நிறைவான பகிர்வு..

நிஜாம் கான் said...

இதுபோன்ற மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்...இருக்க வேண்டும்.. நெகிழ்ச்சியான விசயம் அண்ணே!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி :)

ரிஷபன் said...

நல்ல மனிதர்கள் பற்றிய பதிவு படிக்கையில் ஒரு ஆனந்தம் மனசுக்குள்.. அதற்காகவே இம்மாதிரி வரவேண்டும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப நெகிழ வைத்த பதிவு!
நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்!! BENEFIT OF DOUBT எல்லாம்
யார் பார்க்கிறார்கள், இப்போது?

vasu balaji said...

@@நன்றிங்க குரு
@@நன்றிங்க ராம்ஜி. சப்தகிரி/திருப்பதி எக்ஸ்ப்ரஸ் பார்த்திருப்பீங்களே. இதுக்கு முன்னாடி ரேணிகுண்டால இஞ்ஜின் மாத்தன்னு ஒருமணி நேரம் நிக்குமே. அதை ரெண்டு பக்கமும் இயக்கும்படி செய்தது ஒன்று போதும் சான்றென நினைக்கிறேன்.
@@நன்றி ராஜா
@@நன்றி சுபாங்கன்

vasu balaji said...

@@நன்றி LK
@@நன்றி விசா
@@நன்றி அக்பர்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@நன்றிங்க செந்தில்
@@நன்றி ரோமியோ
@@நன்றி மஹி_க்ரான்னி
@@நன்றி வழிப்போக்கன்
@@நன்றி நசரேயன்
@@நன்றி நாடோடி
@@நன்றி கரிசல்காரன்
@@நன்றி நாய்க்குட்டி மனசு
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி நிஜாம்
@@நன்றி ஆறுமுகம் முருகேசன்
@@நன்றிங்க ரிஷபன்
@@நன்றி ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

vasu balaji said...

காமராஜ் said...
பாலாண்ணா...
எங்கிருந்தாலும் மனிதர்கள் மனிதர்களாகவே ஜொலிக்கிறார்கள்.
இந்த பதிவு,இந்தக்கேரக்டர். நான் மேலதிகாரிகளிடம் இருக்கனும் என்று ஏங்குகிற கேரக்டர் பாலாண்ணா. இதே போல இரண்டு பேரை நானும் மாதுவும் மறுபிழைப்புக் கொடுக்கவைத்தோம்.அவர் சுதாகரன் மலையாள மனிதன்.தப்பு செய்த ஊழியன் தண்டிக்கப்படலாம் அவன் குடும்பம் தண்டிக்கப்படக்கூடாது என்று சொன்ன பீரோக்ரேட் அவர்.விசாரணை அதிகாரியும்,குற்றம் சுமத்துபவரும் ஒரே நபராக இருக்கக்கூடாது என்கிற வாதத்தோடு நாங்கள் பல விசாரணைகளைத் திசை திருப்பியிருக்கிறோம். பெரியவர் நரசிம்மனை உரக்கப்பேசவேண்டும் அரிதானவைகளை முன்னிருத்தி பாருங்கள் பாருங்கள் என்று உலகத்துக்கு உரைக்கவைக்கவேண்டும். பாலாண்ணா. வியக்கிறேன். வழிமொழிகிறேன்.//

நன்றிங்க காமராஜ். இது ஒரு துளிங்க. மஹாபாரதம் போல் அத்தனை கதை இருக்கு.

vasu balaji said...

கலகலப்ரியா said...
நெகிழ்வான பதிவு சார்..

||குப்பத்து திருவேங்கடத்தை||

லிங்க் போட்டு விடுங்க..//

சந்தோஷம்மா. போட்டுவிட்டேன்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...
ப்ச்..

படிக்கும் போதே மனம் நெகிழ்ச்சியில் மகிழ்கிறது, அதே நெகிழ்ச்சியில் கனக்கிறது

மனிதன் மனிதனாக இருப்பதுதான் சிரமம் போல

அந்த மாமனிதருக்கு வணக்கங்கள்//


நன்றி கதிர். அவர் பலபேர மனுசனா மாத்தியும் விட்டிருக்கார்.

vasu balaji said...

ரோஸ்விக் said...
இவர் தலைவனாய் இருக்க தகுதி உடையவர். இதை படித்து எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு துறைக்கு இது போன்ற அதிகாரி கிடைப்பார் என்ற நம்பிக்கையில்... உங்களுக்கு சாவில்லை நரசிம்மன் சார்.//

நன்றி ரோஸ்விக். ஆமாம்.

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...
நெகிழ்ந்து கரைகிறேன் பாலா சார்.

எத்தனை அற்புதமான மனிதர்.

கொடுத்து வைத்திருக்கவேண்டும், இப்படி நல்ல மனிதர்கள் சுற்றியிருக்க‌ ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு.//

ஆமாங்க சரவணன். அந்த விதத்தில் நான் பாக்கியசாலி.

vasu balaji said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இவர் ஒருவர் வீட்டில் மட்டும்தான் சி.பி.ஐ. நுழையவில்லை என்று கேள்விப்பட்டேன்..!

இது ஒன்றே போதுமே..?//

அப்புடி போடுங்க அருவாள. நீங்க பெரிய சி.பி.ஐ.ஆ இருக்கீங்களே. உண்மைதாங்க.:)

vasu balaji said...

மாதவராஜ் said...

யப்பா!
உலுக்கியும் போடுகிறது. நெகிழவும் வைக்கிறது.உண்மைக்கு இருக்கும் வலிமை மிக அடர்த்தியானது. பகிர்ந்தமைக்கு நன்றி.//


நன்றிங்க மாதவராஜ். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

பிரபாகர் said...
இது போன்று நல்லவர்கள் சிலர் இருப்பதை, இருந்ததைக் கேட்கும் போது, படிக்கும்போது நம்மையெல்லாம் சார்ந்து இருக்கும் வஞ்சக எண்ணம் கொண்ட பலரைப்பற்றிய எண்ணங்களால் சோர்ந்திருக்கும் மனதிற்க்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது!

உண்மையில் அவர் ஒரு மனிதருள் மாணிக்கம்!

பிரபாகர்...//

நன்றி பிரபா.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

இது மாதிரி மனிதர்களோடு பணியாற்றியிருக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரது கடைசி கால வேதனையை படித்த போது என்ன கொடூரம் இயற்கைக்கு என்று தோன்றியது.//

ஆமாம் ஸ்ரீராம். அவருக்கு இந்த வேதனை வந்திருக்கவேண்டாம்.

vasu balaji said...

sriram said...

பாலாண்ணா, இப்படி ஒருவருக்கு ரிப்போர்ட் செய்த நீங்க பாக்கியம் செய்தவர்...
அப்துல் கலாமின் சுயசரிதை படிச்சிருக்கீங்களா? அவரோட பாஸ் நல்ல தலைவருக்கு ஒரு அடையாளம், நரசிம்மனும் அந்த Category இல் வருவார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

ஆமாம் ஸ்ரீராம்.படித்திருக்கிறேன். நன்றி

vasu balaji said...

இராமசாமி கண்ணண் said...
சார் படிச்சு முடிச்சிட்டு என்ன சொல்றதுன்னு வார்த்தை இல்லாம தவிக்கிறேன். இந்த மாதிரி ஒரு சிறந்த மனிதருக்கு கிழ வேலை பாக்கறதுன்றது எல்லாருக்கும் கிடைக்காது. நீங்க ரொம்ப லக்கி. இப்படி ஒரு உயர் அதிகாரிக்கு கிழ வாழக்கையில வேல பார்த்துடனும் நான். வாழ்க்கையில நாளக்கு ஒரு உயர்ந்த நிலைக்கு போனாலும் கிழ இருக்கறவங்களுக்கு இவர மாதிரி ஒரு அதிகாரியா இருக்கனும். ரொம்ப நன்றி சார் பகிர்ந்தமைக்கு :-)./

உங்க விருப்பம் நிறைவேறட்டும். நன்றி இராமசாமிகண்ணன்

vasu balaji said...

பா.ராஜாராம் said...
பாலாண்ணா,

வழக்கம் போல்தான். one of the best charector!//

நன்றிங்க பா.ரா.

vasu balaji said...

cheena (சீனா) said...
அன்பின் பாலா

இவர மாதிரி உயர் அதிகாரிகள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். நெஞ்சம் நெகிழ்ந்தது. பாலா.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா//

ஆமாங்க சீனா.

vasu balaji said...

முகிலன் said...

பொறாமையா இருக்கு சார் உங்களைப் பாக்க..//

ம்ம். ya. I was lucky.

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//ரூல் இப்படிச் சொல்கிறது சார் என்று சொல்லிவிட முடியாது. எனக்குப் படிக்கத் தெரியாமலா உன்னிடம் கேட்டேன். ஏன், எதற்கு என்று யோசி. அப்புறம் வந்து சொல், என்பார். அப்படிப் படிக்கும் போது அதன் உள்ளர்த்தம் புரியும். அடுத்த முறை, இதற்காகத்தான் என்று விளக்கும் போது வாதம், பிரதிவாதம் என்று புரியவைப்பார். நாளடைவில், புரிதல் எளிதாகிப் போகும்.//

ஆஹா .. வரம். பகிர்வுக்கு நன்றி சார்.//

yes. true. He was god to us

மாதேவி said...

பகிர்தலுக்கு நன்றி.

Unknown said...

வானம்பாடி சார்! நிறைவான obituary நோட் உங்களது. நல்ல வேலை! Retire ஆகும் கடைசி நாளில் suspension ஆர்டர் கொடுத்து வஞ்சக ஆட்டம் ஆடும் மக்களின் பாதிப்பு இல்லாதது அறிந்தது நிறைவே! அதை பற்றியும் , ஒரு பதிவில் எழுதுங்களேன்.

நேசமித்ரன் said...

பின்னிரவுகளில் வாசிக்கவென்று வைத்திருக்கும் பக்கங்களில் உங்களுடையதும் ஒன்று பாலா சார்

நெகிழ்த்தி அமர்த்தி விடும் அப்படியே இதுவும் அப்படியான ஒன்றுதான்

ஆரூரன் விசுவநாதன் said...

இப்படி பட்ட மனிதர்களிடம் வேலை பார்ப்பதே பெருமையான விசயம் தான்.

நல்ல பகிர்வு அன்ணே

க.பாலாசி said...

உயர்திரு. நரசிம்மன் என்பது மிகப்பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

நிகழ்காலத்தில்... said...

இது போன்றவர்களுக்காகவே பூமி இன்னும் இயங்கிக்கொண்டே இருக்கிறது

பெசொவி said...

அந்த மாமனிதர் GM ஆக இருந்த காலத்தில் நானும் ரயில்வேயில் பணி புரிந்திருக்கிறேன் என்பதே எனக்கு பெருமைதான். மிக அருமையான மனிதர், வாழ்த்துகள் சார்!

பெசொவி said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

இப்படிப்பட்ட மனிதர்கள் இறப்பதில்லை... !

இறப்பு நிலைக்கு பின்னும் சில பல மனங்களில் மானசீகமாய் வாழ்வதென்பது.... சிலரின் வாழ்வியலை பொருத்தது.
திரு நரசிம்மன் ... வாழ்கிறார்.

பகிர்வு மிக நெகிழ்வுங்கைய்யா.

பெசொவி said...

I want to talk to you. If possible give me your cell no.
Mine is 9442053584)

Venkat M said...

(sir) Narasim is great..

Sir, have you tried to follow him..

Regards - Venkat M

பின்னோக்கி said...

மேலதிகாரி ஒருவர் தன்னை புகழ்ந்து எழுதும் படி வாழ்வது மிகக் கடினமான ஒன்று. அவருக்கு மிக அழகாக அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள் இந்தப் பதிவின் மூலம்.

Maria Mcclain said...

hello sir,Nice blog & good post. overall You have beautifully maintained it, you must try this website which really helps to increase your traffic. hope u have a wonderful day & awaiting for more new post. Keep Blogging!