Tuesday, April 27, 2010

பதிவராமை..தலைப்ப மாத்திச் சொல்லு...

(டிஸ்கி: ஆஃபீசுல ஆணி அதிகமில்ல. இருந்தாலும் அடிக்கிற வெயில்ல புடுங்கற மூடு இல்ல. சொந்தமா யோசிக்க பொறுமையில்ல. சுத்தி வந்தப்ப நினைச்சத போடுறது தப்பில்ல. சோ.. ஸ்டார்ட் த மீஜிக்)
கதிர்: வலைமனை:- மாறுதல்--ம்கும். ரெண்டு மூணுதடவை டெம்ப்ளேட்டு அப்பப்ப ப்ரொஃபைல் ஃபோட்டோதான் மாறுச்சு. என்னதான் சீறுனாலும் எவனாவது மாறினானா?

அறிமுகம்: நிஜமாய் வாழ கனவைத் தின்னு: தினம் பாதி தலகாணி தின்னா உடம்பு என்னத்துக்காறது.

ப்ரொஃபைல்: ஏனுங்க இப்ப இருக்கிற ஃபோட்டோ எதுனாச்சும் கலியாணத்துல எடுத்ததா? மாப்புள பயல பார்த்து எங்களல்லாம் பார்த்து கூட திருந்தாம இப்பிடி இளிச்சிக்கிட்டு அடிமையாவுறியேன்னு அந்த பரிதாப லுக்கு என்னா லுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமைபேசி: வலைமனை: ‘மணி’யின்பக்கம். அது அப்ப. இப்ப அமெரிக்காவ விட தேசாய் கிட்ட துட்டு அதிகம்.

ப்ரொஃபைல்: எத்தன நாளுதான் பின்னாடி கைய கட்டிகிட்டு புள்ளைங்கள விளையாட விடாம சறுக்கு மரத்த மறிப்பீங்க. தள்ளி நில்லுங்க சித்த.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகர்: வலைமனை:  ‘வாழ்க்கை வாழ்வதற்கே.’ பாவி மனுசா இடுகைக்கு இடுகை ஒன்னொன்னா தற்கொலை பண்ணிக்க வெச்சி சாவடிச்சிட்டு பேரு வைக்கிறாரு பேரு

எப்புடி எப்புடி? ‘நிறைய படித்து குறைவாய் எழுதி ’. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல. வலை மனை அறிமுகமே ஒன்னரை முழத்துக்கு எழுதிட்டு இது வேற.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி: வலைமனை: சி@பாலாசி. இங்க பாரு ராசா. இப்புடி இருந்தா எல்லாம் பார்த்துட்டு போய்ட்டே இருப்பாய்ங்க. லுக்கு வேணும்மா லுக்கு. லுக்@பாலாசின்னு வைய்யி. ஆனிமாசம் கலியாணம் (கடோசி முகூர்த்தம். அப்பதான் அடங்குவ)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரோஸ்விக்: வலைமனை: திசைகாட்டி . ஒன்னுமே எழுதாம எல்லா பக்கமும் காட்டிக்கிட்டு ஒரு கம்பம். அது மேல ஒரு சேவல் கூட இல்ல. என்னா டகல்பாஜி வேலையிது?

வலைஅறிமுகம்:.... ‘தாங்கிக் கொள்ளுங்கள் தங்க மனதுடன்’. வடிவேலுவ உரசினா மாதிரி செங்கல வெச்சி தேய்க்கவா. நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதிய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நசரேயன்: வலைமனை: என் கனவில் தென்பட்டது. கனவுலகூட தென்பட்டதுதானா. சிக்கினதுன்னு மாத்திபாருங்க. துண்டுக்கு வேலை வரும்.

வலை அறிமுகம்: .... ‘நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் வரை உயரும்’. ஏன் நாசால பேசி ராக்கட் உடாமலே சந்திரன் செவ்வாய்க்கெல்லாம் போய்க்கலாம்னு லீஸ் போட்டுடீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தினேஷ்: வலைமனை: ‘முகிலனின் பிதற்றல்கள்’ முகிலன்: ஏங்க? எல்லாம் பெரியவங்க! தினம் இவ்வளவு பேரு வந்து போறீங்க. அப்பா பேரு சொல்லி பசங்க பொட்டி கடையில ஆட்டைய போட்டா அது அழகு. எம்பேர வெச்சிகிட்டு எங்கப்பா பிதற்றினா எடுத்து சொல்லாம அருமை அருமைன்னு பின்னூட்டம் போடுறீங்களே! வெக்கமாயில்ல. அவ்வ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிஜி: வலைமனை: மணிஜீ (எ) தண்டோரா: அண்ணே! என்னா இந்த வெயில் காலத்துல மார்கழிமாச பனில நனைஞ்சா மாதிரி கொஞ்ச நாளா சொத்து சொத்துனு கேக்குது. வார இழுத்து புடிச்சி காச்சுங்கண்ணே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
TVR: வலைமனை: தமிழா தமிழா... ஆரம்பிச்சப்போ பெருமையா இருந்திருக்கும். இப்போ கொஞ்சம் சலிச்சிண்டு சொல்றாமாதிரி ஆக்கிப்புட்டானுவ இந்த அரசியல் வியாதிங்க.

அறிமுகம்:  ‘ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்’
ஒன்று எங்கள் ஜாதி : பதிவர் ஜாதி
ஒன்று எங்கள் நீதி : கவுஜக்கு எதிர் கவுஜ இடுகைக்கு எதிர் இடுகை
நம்மால் முடியாதது யாராலும் முடியாது: ஐ. நான் சொல்லமாட்டனே.
யாராலும் முடியாதது நம்மால் முடியும்: பின்னூட்டமும் காசு வாங்காம ஓட்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுசரி: வலைமனை: முரண் தொடை : தமிழ்பட வில்லன் மாதிரி கன் நீட்டிகிட்டே இருக்குபாஸ். புல்லட்தான் எப்பவோ ஒன்னு வருது. LMGயாவது போடுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரியா: வலைமனை: கலகலப்ரியா.. நீ மட்டுமா நாங்களுந்தான். ரெம்ப நாளாச்சி கலகலப்பே காணோம்.

அறிமுகம்: லக்கலக்கலக்கலக்க..ம்கும். அப்புடியாவது ஒன்னு ரெண்டு போட்டா தேவலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானம்பாடிகள்: வலைமனை:  ‘பாமரன் பக்கங்கள்’. இப்புடியே சொல்லிட்டு திரியற வானம்பாடி! என்னைக்கோ உன்ன சூப்பு வச்சிறப்போறாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(டிஸ்கிக்கி: மக்கா. அல்லாத்தையும் புடிச்சி எழுதிட்டேன். இனிமே மொக்க தேத்த வழியில்ல. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி புதுசா ஏதாவது வழி பண்ணுங்க. புண்ணியமா போவும். ச்ச்ச்ச்செரியா?)
~~~~~~~~~~~~~~~~~

85 comments:

settaikkaran said...

ஆஹா, நான் தான் ஃபர்ஸ்டா? :-))

மொக்க தானே தேத்தணும்? நாளைக்கு பந்த் குறித்து ஆளாளுக்கு அறிக்கை விடுவாங்க பாருங்க! ஒரு வாரத்துக்கு மேட்டர் தேறிடும்! (நானும் அதைத் தான் நம்பிட்டிருக்கேன்; நம்மாளுங்க காப்பாத்துவாங்களா?)

சங்கர் said...

யாரந்த ஆமை ??????

சங்கர் said...

பதிவர் ராம் எதுக்காக தலைப்ப மாத்த சொல்லணும், யாருகிட்ட சொல்லணும்?

சங்கர் said...

// சுத்தி வந்தப்ப //

சுத்தி வந்திடுசின்னா ஆணிய புடுங்க வேண்டியது தானே

க.பாலாசி said...

ஹா...ஹா... யாரும் தப்பிக்கல... எல்லாருமே மாட்டிட்டாங்க... ரொம்ப சந்தோஷமாயிருக்கு...

க.பாலாசி said...

//ரெண்டு மூணுதடவை டெம்ப்ளேட்டு அப்பப்ப ப்ரொஃபைல் ஃபோட்டோதான் மாறுச்சு//

உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா..

//தினம் பாதி தலகாணி தின்னா உடம்பு என்னத்துக்காறது.//

நைட்டு 12 மணிவரைக்கும் ஆபிஸ்ல முழிச்சிகிட்டு உட்காந்திருந்தா தலையணையத்தான் திங்க முடியும்...

கலகலப்ரியா said...

ஒன்னியும் புரியலன்னாலும் சிப்பு சிப்பா வர்து சார்... இதுதான் உங்க வெற்றி ஃபார்முலாவா...

ம்க்கும் லக்கலக்கதானே இருங்கடி.. எல்லாரயும் கவனிச்சுக்கறேன்..

க.பாலாசி said...

//இப்பிடி இளிச்சிக்கிட்டு அடிமையாவுறியேன்னு அந்த பரிதாப லுக்கு என்னா லுக்கு.//

இது அதுவாத்தான் இருக்கும்னு நம்புறீங்களா...!!!!

கலகலப்ரியா said...

||நைட்டு 12 மணிவரைக்கும் ஆபிஸ்ல முழிச்சிகிட்டு உட்காந்திருந்தா தலையணையத்தான் திங்க முடியும்...||

ஏன் ஆபீஸ்ல தலயணை யாவாரமா.. இல்ல தூங்கறதுதான் தொழிலா...

க.பாலாசி said...

//எத்தன நாளுதான் பின்னாடி கைய கட்டிகிட்டு புள்ளைங்கள விளையாட விடாம சறுக்கு மரத்த மறிப்பீங்க. தள்ளி நில்லுங்க சித்த.//

நேக்கும் நெம்ப நாளா அதே டவுட்டுதான்...

க.பாலாசி said...

//எப்புடி எப்புடி? ‘நிறைய படித்து குறைவாய் எழுதி ’. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல. வலை மனை அறிமுகமே ஒன்னரை முழத்துக்கு எழுதிட்டு இது வேற.//

ஆகா.... நல்லவேள நம்மள பாக்கல....

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
ஏன் ஆபீஸ்ல தலயணை யாவாரமா.. இல்ல தூங்கறதுதான் தொழிலா...//

வீட்டுல அந்தக்கா சோறு போட்டாத்தான திங்கறதுக்கு...

நாடோடி said...

ஒருத்த‌ரையும் விட‌லை போல ந‌ல்லா இருக்கு சார்

ஈரோடு கதிர் said...

நீங்க ஏன் இந்த 24-க்கு 7 மேட்டர பத்தி எழுதக்கூடாது

க.பாலாசி said...

//ஆனிமாசம் கலியாணம் (கடோசி முகூர்த்தம். அப்பதான் அடங்குவ)//

ஆகா... இந்த வார்த்தைய கேக்குறச்ச என்னமா இருக்கு....

கலகலப்ரியா said...

||க.பாலாசி has left a new comment on the post "பதிவராமை..தலைப்ப மாத்திச் சொல்லு...":

//கலகலப்ரியா said...
ஏன் ஆபீஸ்ல தலயணை யாவாரமா.. இல்ல தூங்கறதுதான் தொழிலா...//

வீட்டுல அந்தக்கா சோறு போட்டாத்தான திங்கறதுக்கு... ||

அடங் தலயணை வாங்கற காசுக்கு ஒரு பரோட்டா வாங்கித் திங்கலாமில்லப்பு... எதுக்கெடுத்தாலும் யக்காவையே குத்தம் சொன்னா எப்பூடீ..

எல் கே said...

yappa naan escape

@pamaran

thala ithe mathiri nan onnu eluthinen padichu parunga
http://lksthoughts.blogspot.com/2010/04/ii_16.html

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
அடங் தலயணை வாங்கற காசுக்கு ஒரு பரோட்டா வாங்கித் திங்கலாமில்லப்பு... எதுக்கெடுத்தாலும் யக்காவையே குத்தம் சொன்னா எப்பூடீ..//

யாருங்க யக்காவ குத்தம் சொன்னது.. இந்த மனுஷன் நேரங்காலத்தோட வூட்டுக்கு போனாதானே ஆச்சு.....

க.பாலாசி said...

//‘தாங்கிக் கொள்ளுங்கள் தங்க மனதுடன்’. வடிவேலுவ உரசினா மாதிரி செங்கல வெச்சி தேய்க்கவா. நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதிய.//

ஹ்..ஹ்.க.. நாங்கள்லாம் யாரு தீப்பொறி திருமுகம் மாதிரி... சும்மா பட்டாலே பத்திக்கும்ல....

க.பாலாசி said...

//அருமை அருமைன்னு பின்னூட்டம் போடுறீங்களே! வெக்கமாயில்ல. அவ்வ்வ்வ்//

ஆகா... நம்மள பின்னூட்டமே போடவுடாம செஞ்சிடுவாங்க போலருக்கே.. நம்ம பொழப்பே இப்டித்தான ஓடிகிட்டிருக்கு....

க.பாலாசி said...

//யாராலும் முடியாதது நம்மால் முடியும்: பின்னூட்டமும் காசு வாங்காம ஓட்டும்//

அட இதுவல்லவோ தத்துவம்... பின்னிட்டீங்க...

க.பாலாசி said...

//அறிமுகம்: லக்கலக்கலக்கலக்க..ம்கும். அப்புடியாவது ஒன்னு ரெண்டு போட்டா தேவலாம். //

எப்புடி லக்கலக்லக்லக்லக்... (எப்பாடி டைப்புறப்பவே கொழப்புதே) ன்னு போட்டா தேவலாமா...ம்ம்ம்.....

க.பாலாசி said...

ஆகா.. இனிமே எந்த விட்ஜட்டும் இல்லாமத்தான் பிளாக் வச்சிக்கணும் போலருக்கு... என்னா வில்லத்தனம்...

//இனிமே மொக்க தேத்த வழியில்ல. //

சைடுல நல்லா தேடிப்பாருங்க... எதுனாச்சும் கிடைக்காமலா போவப்போவுது...

பிரபாகர் said...

பாலாசி, இன்னா நல்ல மனசு பாருங்க அய்யாவுக்கு, ஆனி கடைசி முகூர்த்ததுல கல்யாணமாம்... ஆடியில அடங்கறது அந்த காலம், அசத்துறது இந்தக்காலம்... அய்யாவுக்கு தெரியல... அவ்...

பிரபாகர்...

சைவகொத்துப்பரோட்டா said...

பதிவு போட கொடுத்த "ஐடியா"விற்கு
நன்றி :))

இராகவன் நைஜிரியா said...

// க.பாலாசி said...
ஹா...ஹா... யாரும் தப்பிக்கல... எல்லாருமே மாட்டிட்டாங்க... ரொம்ப சந்தோஷமாயிருக்கு... //

நான் தப்பிச்சுட்டேனே.. :-)

க ரா said...

கலக்கல் அய்யா. அசத்துங்க.

செ.சரவணக்குமார் said...

//எத்தன நாளுதான் பின்னாடி கைய கட்டிகிட்டு புள்ளைங்கள விளையாட விடாம சறுக்கு மரத்த மறிப்பீங்க. தள்ளி நில்லுங்க சித்த.//

சிரிச்சு முடியல தலைவரே.

ரோஸ்விக் said...

பாலா அண்ணே!

மேல சேவல் இருந்தா அப்புறம் வேற சாயம் பூசிடுவாங்க... அதான் சேவலை சுக்கா வ்றுவல் போட்டு சாப்பிட்டாச்சு. :-)

எல்லா திசையையும் காட்டுவோம்... புத்தியுள்ளவங்க எங்குட்டாவது போய் பொழைச்சுக்கட்டும். நாளைப்பின்ன எதாவது ஒன்னுன்னா... நம்ம திசையை நோக்கி வந்து நம்மளைப் போட்டுத் தள்ள மாட்டாங்கள்ல... :-)

நேசமித்ரன் said...

//இப்புடியே சொல்லிட்டு திரியற வானம்பாடி! என்னைக்கோ உன்ன சூப்பு வச்சிறப்போறாங்க. //

hahahahaa

சத்ரியன் said...

// பாவி மனுசா இடுகைக்கு இடுகை ஒன்னொன்னா தற்கொலை பண்ணிக்க வெச்சி சாவடிச்சிட்டு பேரு வைக்கிறாரு பேரு//

கைய குடுங்க சார். இன்னிக்கிதான் உருப்படியா யோசிச்சிருக்கீங்க..!

சத்ரியன் said...

//ஆனிமாசம் கலியாணம் (கடோசி முகூர்த்தம். அப்பதான் அடங்குவ)//

ஆமாண்ணே! இந்த பயபுள்ள அப்பதான் அடங்கும். (கல்யாணத்துக்கு முன்ன சிரிச்ச முகத்தோட ஒரு போட்டோ எடுத்து ப்ளாக்-குல போடு ராசா)

சிநேகிதன் அக்பர் said...

நல்ல நகைச்சுவை பதிவு சார்

சத்ரியன் said...

//‘தாங்கிக் கொள்ளுங்கள் தங்க மனதுடன்’. வடிவேலுவ உரசினா மாதிரி செங்கல வெச்சி தேய்க்கவா. நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதிய.//

ஹி..ஹி..ஹி..!

சத்ரியன் said...

//வானம்பாடி! என்னைக்கோ உன்ன சூப்பு வச்சிறப்போறாங்க. //

நாங்க பாத்துக்கறோம்.

சத்ரியன் said...

//ஆஃபீசுல ஆணி அதிகமில்ல. இருந்தாலும் அடிக்கிற வெயில்ல புடுங்கற மூடு இல்ல. சொந்தமா யோசிக்க பொறுமையில்ல. சுத்தி வந்தப்ப நினைச்சத போடுறது தப்பில்ல. சோ.. ஸ்டார்ட் த மீஜிக்)//

டண்டண்டண்டனக்கா... டண்டண்டண்டனக்கா... டண்டண்டண்டனக்கா...

Paleo God said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!

பிரபாவ எஸ்கவேட்டர் வெச்சி வாற்றீங்களே! :))

காமராஜ் said...

ஒருமுறை போய்வந்தால்
பாரம் குறையும்.
வயிறு குலுங்கும்,
மனசு மயிலிறகாகும்.

வானம்பாடிகள் பாருங்கள்.

பத்மா said...

காமராஜ் அண்ணன் நீங்க என்ன சொல்ல வரீங்க
.வானம்பாடிகள் சார் நீங்க எந்த ஆபீஸ்

பெசொவி said...

பதிவு போட்டு பேர் வாங்கும் புலவர் உண்டு.....நீரோ பதிவரைப் போட்டுத் தாங்கியே பேர் வாங்கி விட்டீர்.

வாழ்க உமது புலமை!

இப்படிக்கு

பெயர் சொல்ல விருப்பமில்லை
(பட்டதைச் சொல்பவன் "பட்"டென்று சொல்பவன்)

Chitra said...

பதிவராமை - கலக்கிட்டீங்க ............ சூப்பரு!

பழமைபேசி said...

முடியலை...சாமீ!

Thenammai Lakshmanan said...

ஏன் நாசால பேசி ராக்கட் உடாமலே சந்திரன் செவ்வாய்க்கெல்லாம் போய்க்கலாம்னு லீஸ் போட்டுடீங்களா?// எப்படி சார் இப்படி எல்லாம் அவ்வ்வ்வ்வ் முடியல...நாங்களெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கோம் ஸ்கோர் மேல ஸ்கோர்தான் ..

Thenammai Lakshmanan said...

ஆமா இங்கெ இருக்குறவங்க எல்லாம் ராத்திரிப் பூராத் தூங்காம பஸ்ல வேற ஏறி சுத்துறீங்களே எப்புடி....ஹிஹிஹி...நானும் தூங்காம பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்...யாருக்காவது கண்ணுல பிரச்சனைஇல்லாம இருந்தா புண்ணியம்தான்

நசரேயன் said...

//(டிஸ்கிக்கி: மக்கா. அல்லாத்தையும் புடிச்சி எழுதிட்டேன். இனிமே மொக்க தேத்த வழியில்ல. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி புதுசா ஏதாவது வழி பண்ணுங்க. புண்ணியமா போவும். ச்ச்ச்ச்செரியா?)
~~~~//

நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன்

அது சரி(18185106603874041862) said...

//
ப்ரொஃபைல்: எத்தன நாளுதான் பின்னாடி கைய கட்டிகிட்டு புள்ளைங்கள விளையாட விடாம சறுக்கு மரத்த மறிப்பீங்க. தள்ளி நில்லுங்க சித்த.
//

எங் அண்ணன் பழமையாரை தள்ளி விட எத்தனை நாளா திட்டம் நடக்குது?? அண்ணன் அதுக்கெல்லாம் அசர மாட்டருங் :)))

அது சரி(18185106603874041862) said...

//
‘நிறைய படித்து குறைவாய் எழுதி ’. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல. வலை மனை அறிமுகமே ஒன்னரை முழத்துக்கு எழுதிட்டு இது வேற.
//

இதுக்கு பேரு அஜீத் ஸ்டைல்...பேச மாட்டேன்னு சொல்றதுக்கு நாலரை மணி நேரம் ப்ரஸ்மீட் வைக்கிற மாதிரி :))

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன்: ஏங்க? எல்லாம் பெரியவங்க! தினம் இவ்வளவு பேரு வந்து போறீங்க. அப்பா பேரு சொல்லி பசங்க பொட்டி கடையில ஆட்டைய போட்டா அது அழகு. எம்பேர வெச்சிகிட்டு எங்கப்பா பிதற்றினா எடுத்து சொல்லாம அருமை அருமைன்னு பின்னூட்டம் போடுறீங்களே! வெக்கமாயில்ல. அவ்வ்வ்வ்
///

முகிலன் அவங்க அப்பா மேல மானநஷ்ட ஈடு வழக்கு போட வக்கீல் கூட பேசிட்டுருக்கதா கேள்வி...

அது சரி(18185106603874041862) said...

//
முரண் தொடை : தமிழ்பட வில்லன் மாதிரி கன் நீட்டிகிட்டே இருக்குபாஸ். புல்லட்தான் எப்பவோ ஒன்னு வருது. LMGயாவது போடுங்க.
//

இருக்கறது ஆறு புல்லட்டு தான் பாஸ்...அதை வச்சிக்கிட்டு 12 மாசம் ஓட்டணுமில்ல? :))

அது சரி(18185106603874041862) said...

//
லக்கலக்கலக்கலக்க..ம்கும். அப்புடியாவது ஒன்னு ரெண்டு போட்டா தேவலாம்.
//

அப்படியே அதற்கு பதவுரை, தெளிவுரை, பொழிப்புரையும் போடும்படி கேட்டுக் கொள்கிறோம்..முகிலன் நோட்ஸ் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு...

(அப்புறம் இப்படி யாராவது கவிதை போட்டா தான் குடுகுடுப்பை எதுனா எழுதுவார். அவருக்கு ஒரு வாய்ப்பு குடுங்கப்பா)

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள்: வலைமனை: ‘பாமரன் பக்கங்கள்’. இப்புடியே சொல்லிட்டு திரியற வானம்பாடி! என்னைக்கோ உன்ன சூப்பு வச்சிறப்போறாங்க.
//

அப்படி சூப்பு வச்சா எனக்கு ஒரு கப்பு :))

Cable சங்கர் said...

நல்ல வேலை நம்ம பேரு இல்லை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

///TVR: வலைமனை: தமிழா தமிழா... ஆரம்பிச்சப்போ பெருமையா இருந்திருக்கும். இப்போ கொஞ்சம் சலிச்சிண்டு சொல்றாமாதிரி ஆக்கிப்புட்டானுவ இந்த அரசியல் வியாதிங்க//

சொல்ல வந்தது சரியா புரியலையே!!!:)))

Unknown said...

//நசரேயன் said...
//(டிஸ்கிக்கி: மக்கா. அல்லாத்தையும் புடிச்சி எழுதிட்டேன். இனிமே மொக்க தேத்த வழியில்ல. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி புதுசா ஏதாவது வழி பண்ணுங்க. புண்ணியமா போவும். ச்ச்ச்ச்செரியா?)
~~~~//

நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன்//

நானும் நானும்..

Unknown said...

கதிர், பழமைபேசி, பாலாசி, பிரபாகர், ப்ரியா, அதுசரி, நசரேயன், முகிலன், வானம்பாடிகள் -

இப்பிடி மறுபடி மறுபடி ஒரே க்ரூப்பையே வச்சி எழுதுறீங்களே? அப்பிடியே கொஞ்சம் வெளிய போயி - சேட்டைக்காரன், சித்ரா மாதிரி ஆளுங்களையும் கொஞ்சம் வாருங்களேன்??

:)))

பனித்துளி சங்கர் said...

இதில் இருந்து தெரிகிறது . நீங்கள் ஒவ்வொரு பதிவரையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள் என்று . மிகவும் அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி !

prince said...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று பார்த்தா ஆபீஸ் போட்டு இல்லா யோசிக்கிறாங்க!!! முடியலடா சாமி கலாய்ப்புன்னு கேள்விபட்டிருக்கேன் ஆனா இப்பதான் பார்கின்றேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. இந்த பதிவுக்கும் நெகடிவ் ஓட்டு விழுந்திருக்கு..


எனக்கு பயமாயிருக்குண்ணே...

? said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

Thamira said...

:-))

பா.ராஜாராம் said...

:-)))

ஸ்ரீராம். said...

சரிதான்...!

ஸ்ரீராம். said...

சரிதான்...!

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி மக்கா. தனித்தனியா சொல்லைலைன்னு திட்டாதீங்க..அவ்வ்வ்.

Jerry Eshananda said...

மொக்கை தளபதி வாழ்க.

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா! பிசியாயிட்டிங்களா? எட்டு நாளாச்சு அப்டேட் பண்ணலை.. அவ்வ்வ்வ் ..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன சார்.. ரயில்வே எக்ஸாம் எழுதிட்டு இருக்கீங்களா?..

நானும் டெய்லி வந்து எட்டிப் பார்த்துட்டு இருக்கேன்..

சீக்கிரம் எழுதுங்க...

vasu balaji said...

ஜெரி ஈசானந்தன். said...
மொக்கை தளபதி வாழ்க.//

:)). நன்றி ஜெரி

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...
தலைவா! பிசியாயிட்டிங்களா? எட்டு நாளாச்சு அப்டேட் பண்ணலை.. அவ்வ்வ்வ் ..//

லைட்டா:)))

vasu balaji said...

பட்டாபட்டி.. said...
என்ன சார்.. ரயில்வே எக்ஸாம் எழுதிட்டு இருக்கீங்களா?..

நானும் டெய்லி வந்து எட்டிப் பார்த்துட்டு இருக்கேன்..

சீக்கிரம் எழுதுங்க.//

நன்றி பட்டா:). ம்ம்

சூர்யா ௧ண்ணன் said...

பத்து நாளாச்சு!..

சூர்யா ௧ண்ணன் said...

பதினொன்னு!..

சாமக்கோடங்கி said...

எப்படித்தான் உங்களுக்கெல்லாம் எழுத தலைப்பு கிட்டுதோ... நமக்கு ஒண்ணும் வர மாட்டேங்குதே... மூட்ட கட்டிட்டு பொழப்பப் பாக்க ஊரப்பக்கம் போக வேண்டியது தான் போல...

நல்லா இருக்குங்க.. உங்க வலை மனையும் அருமை..

சூர்யா ௧ண்ணன் said...

பன்னிரெண்டு!

சூர்யா ௧ண்ணன் said...

பதிமூணு ..,

கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...
பதிமூணு .||

வெளங்கிரும்...

சூர்யா ௧ண்ணன் said...

// கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...
பதிமூணு .||

வெளங்கிரும்...//

சரி... பதிமூணரை ..

கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...
// கலகலப்ரியா said...

||சூர்யா ௧ண்ணன் said...
பதிமூணு .||

வெளங்கிரும்...//

சரி... பதிமூணரை||

பதிமூணரை நாளா வானம்பாடிகள் பந்தா பண்ணுறாய்ங்களா.. ஐ மீன் பந்து பண்ணுறாய்ங்களா..

சூர்யா ௧ண்ணன் said...

பந்துதான் போல.. எல்லாருக்கும் ஒட்டு போடவும், பின்னூட்டம் போடவும்.. நேரமிருக்கு..

இடுகை மட்டும் போட மாட்டேன்றாரு.. ஏன்னு நீங்களே.. கேளுங்க..

vasu balaji said...

=)). அய்ய்யோ இங்க ஏலக்கடை நடக்குதா? சொல்லவே இல்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கொஞ்சம் ஆணி அதிகம். கொஞ்சம் வறட்சி..அம்புடுதேன். மன்னிச்சிடுங்க சாமீயோவ்:))

சூர்யா ௧ண்ணன் said...

அது...

கலகலப்ரியா said...

//சூர்யா ௧ண்ணன் said...
பந்துதான் போல.. எல்லாருக்கும் ஒட்டு போடவும், பின்னூட்டம் போடவும்.. நேரமிருக்கு..

இடுகை மட்டும் போட மாட்டேன்றாரு.. ஏன்னு நீங்களே.. கேளுங்க..
May 10, 2010 1:25 PM //

ஏன் சார்.. ஏன்... ஏன்.. ஏன் சார்... ஏன்... இருங்க ஒரு ப்ரேக் எடுதுட்டு வர்றேன்..

கலகலப்ரியா said...

ஏன் சார்... ஏன்...

பதிமூணரை நாள் பதினாலு நாள் ஆவறதுக்குள்ள இங்க மொக்கை வந்தாகனும்.. வரலைன்னா... வரலைன்னா என்ன வரனும்.. இது வேண்டுகோள் இல்ல... ஆர்டர்...

(இது மக்களுக்கு நான் செய்யும் தொண்டு..)