Thursday, April 8, 2010

பதிவர்ஃபோபியா பலவிதம்..

(ஓசில ப்ளாக்கர் கிடைச்சது, ஒளிஞ்சிகிட்டிருந்த எழுத்தாளன் எட்டிபார்த்தான்னு எழுத வந்துட்டு, தானே வச்சிக்கிட்ட ஆப்பு, பின்னூட்டத்துல அடிச்ச வேப்பிலை, ஓட்டு படுத்தற பாடு, அறச்சீற்றம், புறச்சீற்றம், குழு கூடி கும்மின்னு பலதுலயும் சிக்கி சின்னாபின்னமாகி, நிச்சயமா ஒரு மனோதத்துவ நிபுணர்கிட்ட போனா கொஞ்ச்ச்ச்சமா கழண்டிருக்குன்னு சந்தேகப்படுற அளவுலதான் இருக்கோம் என்பதில் சந்தேகமில்லை. செல்ஃப் அனாலிசிஸ்ல எனக்கு கலாய்ச்சோ ஃபோபியா இருக்கும் போல தெரியுது. அதனால மத்த பதிவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணர்கிட்ட போய் பிரச்சனைய சொன்னாமாதிரி கலாய்ச்சிக்க வேண்டிய நிர்பந்தம். ஹி ஹி..)

கதிர்: நல்ல விசயமாச்சேன்னு கண் தானம் பத்தி எடுத்து சொல்லி கிட்ட கிட்ட 85 கண்ணு தானம் வாங்கிட்டங்க. இப்ப என்னன்னா யாராச்சும் தாத்தாக்கு ஜலதோஷம்னு பேசினாலே, கண் தானம் பண்ணிட்டீங்களான்னு கேட்டுப்புடுறேன். கடைக்கு போனா கண்ணைப் பார் சிரின்னு போர்ட் வெச்சிருந்தா லவட்டிட்டு போலாமான்னு வருது. காலையில தூங்கிட்டிருக்க தயிர்க்கார பொம்பள நம்ம பாப்பாவ கண்ணூஊன்னு கூப்டுருக்குங்க. நான் வாரி சுருட்டிகிட்டு தோ வந்துட்டேன்னு ஓட, தங்கமணி கண்ணுல க்ராஃபிக்ஸ் தெரிஞ்சதுங்க. ஹி ஹின்னு சமாளிச்சிட்டு ஆஃபீஸ் கெளம்புறேன், பக்கத்தூட்டு அக்கா பேத்திக்கு சோறூட்டுது. ஒளுங்கா சாப்புடு, இல்லீன்னா கண்ணு புடுங்கற மாமாவ கூப்புடுவேன்னு மெரட்டுது. அதான் வந்துட்டேன். 

டாக்டர்:இது நல்ல விசயந்தான். ஆனாலும் ஃபாலோயர், ஓட்டுன்னு அடிமனசு தாக்கத்துல இன்னும் சிறப்பா செய்யணும்னு வர நம்பரோ ஃபோபியா. அதுனால கொஞ்ச நாளைக்கு கண்ண பார்த்து காதல் கவிதை எழுதுனீங்கன்னா சரியாயிரும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி: அதிகாலைச் சூரிய ஒளியில் வரட்டு வரட்டென்ற விளக்குமாற்றின் ஒலியில் சிறுவயது நினைவுகள் சிலிர்தெழ, நடுங்கியபடி எழுந்து, சிறுபறவை ஒலியை ரசித்தபடி, கோபால் பற்பொடி கொண்டு துலக்கி, வெறும்பல்லில் போட்டிக்கு ஒலியெழுப்பி மகிழ்ந்தவாறே நாயர்கடை சென்று மணக்கும் மசால் வடையும், மசாலா பாலும் உண்டு..

டாக்டர்: யோவ்! என்னா?

பாலாசி: இப்ப கொஞ்ச நாளா இப்புடிதாங்க எழுதவருது. எல்லாரும் என்னமோ சாண்டில்யன் பேரன் ரேஞ்சுக்கு ஏத்திவிடுறாங்களா? இன்னைக்கு ஆஃபீஸ்ல மேனஜர்கிட்ட இப்புடி பேசப் போய் உங்க கிட்ட போய் காட்ட சொன்னாருங்க.

டாக்டர்: இது வருணனையோஃபோபியாப்பா. கொஞ்ச நாளைக்கு கவிதை படிக்காம இரு சரியாயிரும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஷங்கர்: செக்கர் வான் நிறக்காவி அணிந்த பின்னா, கருகருவென தாடி வளர்த்த பின்னா, ஒளகப் படம் பார்த்த தாக்கமா? ஒடுங்கி நின்ற மனதின் ஏக்கமா? போதி மரம் தேடினேன். மீதி மரம் தென்படவில்லை. வெண்ணெய். தோசை. உள்குத்து. வெளிக்குத்து. சென்னை வெய்யிலா கொக்கா?

டாக்டர்: ஒன்னுமே சொல்ல வேணாம். கொஞ்ச நாளைக்கு சாரு சங்கர் கூட பேசாம இருங்க. ஜெட்லீ கூட ஒரு படம் விடாம பாருங்க. கொழப்போமேனியா வந்தமேனிக்கு போயிரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமை: ஆங்கிலம் கலந்து பேசிட்டேன்னு அப்புச்சிக்கு கோவம். உள்ளுக்குள்ள குத்து குத்துன்னு குத்துது. இவனுங்க வேற எம்பேரு பழமைன்னு எழுதுனாகூட படிக்காமலே இதுல உள்குத்து இருக்கான்னு போட்டு கடுப்பேத்துறானுங்க. அன்னைக்கு இடுகை போட்டு லேபில்ல உள்குத்துன்னு போட வச்சிட்டானுங்க..அவ்வ்வ்வ்வ்வ்.

டாக்டர்: இது செம்மொழியோ டெஃபிஷியன்சி சிண்ட்ரோம் பழமை. ஒரு பத்து நாளைக்கு அகராதி, சங்கப்பாடல்னு படிச்சா சரியாயிரும். இதும் ஒரு ஒவ்வாமைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகிலன்:கடவுள் செஞ்சுரி. ரங்கநாதன் தெரு. ராயல் சேலஞ்சர்ஸ். தோஹால நகை. சென்னைல போறப்ப பதிவர் சந்திப்புன்னு கூப்பிட்டா போலாமா வேணாமா? ப்ளேன்ல முகிலன் ஸ்னோல விளையாடலாம்னு அடம் புடிச்சா என்ன பண்ணுவேன்.?

டாக்டர்: இதான் ப்ரச்சனையா? இது டபுள் சேனல் ஊருக்குபோனோ ஃபோபியா. காலண்டர்ல மொத்தமா தேதி கிழிக்க சொல்லுமே. கொஞ்சம் பொறுத்துக்க வேண்டியதுதான். ஊருக்கு போய்ட்டு வந்து இடுகை தேத்தினா சரியாயிரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுசரி:  :O))). கொஞ்ச நாளா யுனைடட் அராப் ஏர்லைன்ஸ்ல ஏறிட்டு, ஷிவாஸ் ரீகல், ஹலால் பண்ணாத சிக்கன், போர்க் சாப்ஸ்னு ஆர்டர் பண்ணி அவிங்க அதெல்லாம் இல்லன்னா, சரி நான் வெச்சிருக்கேன் செர்வ்பண்ணுன்னு வெறுப்பேத்தணும் போல வருது. அந்தரத்துலயே எறக்கி விட்ருவானா டாக்டர்? :O)))

டாக்டர்: இதுக்கு கொழுப்போஃபோபியான்னு பேரு. கொஞ்ச நாளைக்கு வெறும் மோர்க்குழம்பு சாதம் சாப்டா சரியாயிருவ!

அதுசரி: அதுக்கு கருப்பு சாம்பார் சாப்டு செத்துபோய்க்குவேன் போய்யா :O)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலகல: ஷிட். ஷ்ஷ்ஷ்ஷ்ஷிட். ப்லடி ஷிட்.

அட்டெண்டர்: நேரா போயி லெப்ட்லங்கம்முனி

கலகலா: வாட் ட ஹெல். இங்கதானே சொன்னாங்க

அட்டெண்டர்: அட இது டாக்டர் ரூம்புங்க அம்முணி. ஷிட்டெல்லாம் நேரா போய் லெஃப்ட்ல

கலகல: யோவ். ஒத்துய்யா.ஷிட் @#!~*&^+_|].வந்தூட்டான்

டாக்டர்: வாம்மா. உக்காரு

கலகல: டாக்டர் வேணாம் அவந்தான் ஏதோ சொல்றான்னா நீங்களும் வாங்கி கட்டிக்காதிங்க. த ஹோல் வர்ல்ட் ஈஸ் ஷிட். &^%$#@!

டாக்டர்: ஓஓஓஓ. புரிஞ்சது. கொஞ்ச நாளைக்கு சமையல் இடுகை போடும்மா. மிளகுரசம், கருப்பு சாம்பார். ஷிட்டோஃபோபியா சரியா ‘போயிரும்’

கலகல: ம்கும். போகல நீ போய்ச்சேந்துருவ. வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபா:அய்யா! வணக்கங்கைய்யா!

டாக்டர்: அட வித்தியாசமா இருக்கே.

பிரபா: ஆமாங்கைய்யா. நடைய மாத்திட்டம்ல. பிரச்சனையே அதாங்கையா. சுத்திலும் எதப்பார்த்தாலும் இடுகை மேட்டராவே தெரியுதுய்யா. பயங்கரமா கற்பனை பிச்சிக்கிட்டு வருதுய்யா. ஒன்னுமில்ல பட்டாபட்டின்னு ஒருத்ததரு பின்னூட்டம் பார்த்ததும் எங்கூருல பட்டாபட்டி நெஜார் போட்ட தாத்தாவ டரியல் பண்ணது கவனம் வந்து பஸ்லயே ஐஃபோன்ல இடுகை போட்டுடேன்னா பார்த்துக்குங்களேன். அருவத்தியஞ்சு இடுகை ரெடியா இருக்குய்யா. ஒரு 5 மினிட்ஸ். உங்களமாதிரி எங்க ஊருல ஒரு டாக்டரப்பத்தி ஒரு இடுகை போட்றங்கைய்யா?

டாக்டர்: இது பின்னூட்டோ டெஃபிஷியன்ஸி சிண்ட்ரோம் அண்ட் இடுகையோ மேனியா காம்பி. நிறைய பின்னூட்டம் போடுங்க. நைட்டூட்டில நெட்ல லாகின் பண்ணாதீங்க. முக்கியமா பஸ் வாட்ச்சிங் ஆகவே ஆகாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானம்பாடி: யோவ் என்ன உடுய்யா. ஏன்யா கடத்திகிட்டு போறீங்க.

ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். 
~~~~~~~~~

86 comments:

பிரபாகர் said...

ஆஹா! முதலா நான்... பின்னூட்டம் பிறகு...

பிரபாகர்...

பிரபாகர் said...

எல்லோரையும் கலாய்த்தலை அருமையாய் செய்து, கடைசியாய் அசத்தலாய் உங்களையும்! இதைப்படிக்கும்போது எங்கள் ஊரில் கலாய்க்கும் ஒருவரின் நினைவு வந்து அதை இடுகையாக்கலாமா என....(அய்யய்யோ, நமக்கு நிசமாவே வியாதி இருக்கு போலிருக்கே...)

பிரபாகர்...

பழமைபேசி said...

முடியல... எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்பிடி? பின்னிப் படல் எடுக்குறீங்க??

வந்தப்ப, ரெண்டே ரெண்டு பேர்த்தோட நறுக்கு மட்டும்....

இப்ப பாருங்க, பன்முகமும் காட்டி.... நம்பவே முடியலை.... அவரா இவரு?? இதான் பதுங்கிப் பாயுறதோ??

ராஜ நடராஜன் said...

இரண்டாவது நானா?

பழமைபேசி said...

//அதுசரி: அதுக்கு கருப்பு சாம்பார் சாப்டு செத்துபோய்க்குவேன் போய்யா :O)))//

முடியல...முடியல...

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
இரண்டாவது நானா?

April 8, 2010 7:02 PM//

வுட்ருவமா என்ன??

Subankan said...

கடைசிவரி கலக்கல் சார். நல்லவேளை நமக்கு ஒரு ஃபோபியாவும் இல்லை :p

Unknown said...

//ஒளுங்கா சாப்புடு, இல்லீன்னா கண்ணு புடுங்கற மாமாவ கூப்புடுவேன்னு மெரட்டுது//

//எல்லாரும் என்னமோ சாண்டில்யன் பேரன் ரேஞ்சுக்கு ஏத்திவிடுறாங்களா//

//மீதி மரம் தென்படவில்லை. வெண்ணெய். தோசை. உள்குத்து. வெளிக்குத்து. சென்னை வெய்யிலா கொக்கா?//

//இது செம்மொழியோ டெஃபிஷியன்சி சிண்ட்ரோம் பழமை. ஒரு பத்து நாளைக்கு அகராதி, சங்கப்பாடல்னு படிச்சா சரியாயிரும். இதும் ஒரு ஒவ்வாமைதான்//

// ப்ளேன்ல முகிலன் ஸ்னோல விளையாடலாம்னு அடம் புடிச்சா என்ன பண்ணுவேன்.?
டாக்டர்: இதான் ப்ரச்சனையா? இது டபுள் சேனல் ஊருக்குபோனோ ஃபோபியா. //

// ஷிவாஸ் ரீகல், ஹலால் பண்ணாத சிக்கன், போர்க் சாப்ஸ்னு ஆர்டர் பண்ணி அவிங்க அதெல்லாம் இல்லன்னா, சரி நான் வெச்சிருக்கேன் செர்வ்பண்ணுன்னு வெறுப்பேத்தணும் போல வருது//

//டாக்டர் வேணாம் அவந்தான் ஏதோ சொல்றான்னா நீங்களும் வாங்கி கட்டிக்காதிங்க. த ஹோல் வர்ல்ட் ஈஸ் ஷிட். &^%$#@!//

//அருவத்தியஞ்சு இடுகை ரெடியா இருக்குய்யா. ஒரு 5 மினிட்ஸ். உங்களமாதிரி எங்க ஊருல ஒரு டாக்டரப்பத்தி ஒரு இடுகை போட்றங்கைய்யா?//

//ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம்.//

டோட்டல் டேமேஜ்.


ஆமா ஆகாய ஊர்தியில போகும்போது எப்பிடி பதிவு படிச்சி பின்னூட்டம் போடுறது?

Unknown said...

//இதைப்படிக்கும்போது எங்கள் ஊரில் கலாய்க்கும் ஒருவரின் நினைவு வந்து அதை இடுகையாக்கலாமா என....(அய்யய்யோ, நமக்கு நிசமாவே வியாதி இருக்கு போலிருக்கே...)//

இது சூப்பர்

ராஜ நடராஜன் said...

பழம முந்திகிட்டாரா?இன்னிக்கு முழுதும் ஆனியும்,ஆவணியும் சேர்த்து வச்சு ஆணி,வாரக்கடைசியானதால.

எனக்கு இன்னைக்கு இருந்த போபியோவெல்லாம் இப்ப கழண்டுகிச்சு,அதுவும் கடைசி பாராவுல:)டேங்க்ஸ்.

ராஜ நடராஜன் said...

//வுட்ருவமா என்ன??//

மணி அண்ண,அங்க இப்ப மணி என்ன:)

துபாய் ராஜா said...

கலக்கல் கற்பனை சார்.... :))

எல்லோர் பதிவையும் ரொம்ப உன்னிப்பா படிக்கிறது என்ன
ஃபோபியா சார்... உங்களுக்கு அந்த ஃபோபியா தான்... :))

சத்ரியன் said...

பாலா சார்....பாலா சார்...

நான் சத்ரியன் வந்திருக்கேன். ஒரு டீ, காஃபி எதுவும் உண்டா?

இல்ல. கொஞ்சம் கழண்டுபோன மாதிரின்னு எழுதியிருக்கீங்க.
எங்க, என்னைய மறந்துட்டீங்களோளோளோளோளோன்னு....!

சத்ரியன் said...

//இன்னைக்கு ஆஃபீஸ்ல மேனஜர்கிட்ட இப்புடி பேசப் போய் உங்க கிட்ட போய் காட்ட சொன்னாருங்க.//

பாலா சார்,

அந்த ‘டொக்டர்’ எல்லாத்தையும் பார்ப்பாரா?

ஸ்ரீராம். said...

செம கலக்கல் காமெடி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிரிக்க வெச்சிட்டீங்க வானம்பாடி சார்..


//”டெஃபிஷியன்ஸி சிண்ட்ரோம் அண்ட் இடுகையோ மேனியா காம்பி. ”//


சார், இதுக்கு ஏதுனா பாட்டி வைத்தியம் இருக்குங்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பிரபாகர் said...
எங்கள் ஊரில் கலாய்க்கும் ஒருவரின் நினைவு வந்து அதை இடுகையாக்கலாமா என....(அய்யய்யோ, நமக்கு நிசமாவே வியாதி இருக்கு போலிருக்கே...)
//

அண்ணே.. எதுனாலும் பேசித் தீத்துக்கலாமுண்ணே..பயமுறுத்தாதீங்க..

பழமைபேசி said...

9.50am

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு ஸ்பெஷல் கும்மி போல? கலக்கல் பாலா சார்..:-))

சத்ரியன் said...

//யோவ். @#!~*&^+_|].//


இந்த மொழியில எந்த நாட்டுல ஓய் பேசறாங்க?

சத்ரியன் said...

//நைட்டூட்டில நெட்ல லாகின் பண்ணாதீங்க. முக்கியமா பஸ் வாட்ச்சிங் ஆகவே ஆகாது.//

பிரபா,

அப்ப உங்க பொழப்புக்கு ‘ஆப்பு’ தானா?

பழமைபேசி said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

//ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். //

ஆஹா.... போலி டாக்டராய்யா நீயி? பிரபா 100 எண்ணுக்கு ஒரு கால போடுங்க.....

பனித்துளி சங்கர் said...

///////ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். ~~~~~~~~~/////


இதை முதலிலே சொல்லக்கூடாதா

ரோஸ்விக் said...

அம்புட்டு பேரும் செத்தாய்ங்க போ... பாவம் டோட்டல் டேமேஜ். :-)

நேசமித்ரன். said...

ஆஹா சாமி முடியலைங்க

பத்மா said...

அந்த டாக்டருக்கு ஏதும் மேனியா இல்லையா ?
ரவுண்டு கட்டி கலாய்கிறீங்க.
பேஷ் பேஷ்

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்...

ஆனா பாருங்க ஒரு நாளைக்கு 10 வலைப்பூவை மேஞ்சு, 20 பின்னூட்டம் போடலைன்னா தூக்கம் வரமாட்டேங்குது...

இதுக்கு என்னா பண்ணனும் அண்ணே???

க.பாலாசி said...

ஆகா... இவ்ளோ மிஸ் பண்ணிட்டனே... சாயந்தரம் ஈரோட்டுல நெட் வேலசெய்யல... இப்ப ஃபீல் பண்றேன்...

ச்ச்ச்.... கும்மிப்போச்சே...கும்மிப்போச்சே.... இந்தளவுக்கு டேமேஜ் பண்ணிட்டீங்களே....

//கண்ணு புடுங்கற மாமாவ கூப்புடுவேன்னு மெரட்டுது.//

எல்லாத்தவிடவும் செம டாப்பு... இப்டித்தான் தெருவுல உள்ள குழந்தைகள் எல்லாம் டெய்லியும் சாப்புடுதாம்ல...

(அவருகிட்ட சொன்னா கேட்குறாரா...கம்பனி சீக்ரெட்டலாம் வெலியில சொல்லாதீங்கன்னு....)

//பிரபாகர் said...
(அய்யய்யோ, நமக்கு நிசமாவே வியாதி இருக்கு போலிருக்கே...)//

ஆகா...சரண்டர் ஆயிட்டாரே....

ஆமா அதாருங்க பாலாசி... பயபுள்ள ஒருவாரமாவே ஒரு மார்க்கமாத்தான் சுத்திகிட்டிருக்கு.... தமிழ்மணத்துல கவிதையப்பாத்தாலே தலைக்கு மேல பல்பு எரியுதாம்ல... உங்களுக்கு ஏதாச்சும் தெரியுங்களா?

மதுரை சரவணன் said...

good. really i enjoyed this post. s its some how serious to discuss if it is really like this. thank u for make me more relax.

Chitra said...

வானம்பாடி: யோவ் என்ன உடுய்யா. ஏன்யா கடத்திகிட்டு போறீங்க.

ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம்.


...... சான்சே இல்லை. கலக்கல் கற்பனை! ஹா,ஹா,ஹா,ஹா.....

Paleo God said...

சார் உங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது, சிரிச்சு முடியல. :)))
--
பிரபா கமெண்ட் படிச்சிட்டு கண்ணுல தண்ணி:))))

தொடருங்கள்.:)

பழமைபேசி said...

This post has been removed by the author.

அது சரி(18185106603874041862) said...

//
பாலாசி: அதிகாலைச் சூரிய ஒளியில் வரட்டு வரட்டென்ற விளக்குமாற்றின் ஒலியில் சிறுவயது நினைவுகள் சிலிர்தெழ, நடுங்கியபடி எழுந்து, சிறுபறவை ஒலியை ரசித்தபடி, கோபால் பற்பொடி கொண்டு துலக்கி, வெறும்பல்லில் போட்டிக்கு ஒலியெழுப்பி மகிழ்ந்தவாறே நாயர்கடை சென்று மணக்கும் மசால் வடையும், மசாலா பாலும் உண்டு..
//

இதுக்கெல்லாம் ரணசிகிச்சை தான் சரியா வரும். கவுஜ எழுதினா, படிச்சா மூணு நாளு சோறு தண்ணி கட்...அப்புறம் எப்படி பாலாசி டைப் பண்ண முடியுதுன்னு பார்க்கலாம்? :)))

அது சரி(18185106603874041862) said...

//
ஷங்கர்: செக்கர் வான் நிறக்காவி அணிந்த பின்னா, கருகருவென தாடி வளர்த்த பின்னா, ஒளகப் படம் பார்த்த தாக்கமா? ஒடுங்கி நின்ற மனதின் ஏக்கமா? போதி மரம் தேடினேன். மீதி மரம் தென்படவில்லை. வெண்ணெய். தோசை. உள்குத்து. வெளிக்குத்து. சென்னை வெய்யிலா கொக்கா?
//

மீதி மரம் தென்படலியா? ஒரு கடப்பாறை எடுத்து மண்ணை தோண்டி பாருங்ணா...உள்ள தான் இருக்கும் :)))

அது சரி(18185106603874041862) said...

//
டாக்டர்: ஓஓஓஓ. புரிஞ்சது. கொஞ்ச நாளைக்கு சமையல் இடுகை போடும்மா. மிளகுரசம், கருப்பு சாம்பார். ஷிட்டோஃபோபியா சரியா ‘போயிரும்’

கலகல: ம்கும். போகல நீ போய்ச்சேந்துருவ. வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//

அதான...கருப்பு சாம்பார் சாப்பிட்டு எவனும் பொழச்சதா சரித்திரமும் இல்ல பூகோளமும் இல்ல... உண்டவர் கண்டதில்லை...கண்டவர் உண்டதில்லை :)))

அது சரி(18185106603874041862) said...

//
அதுசரி: :O))). கொஞ்ச நாளா யுனைடட் அராப் ஏர்லைன்ஸ்ல ஏறிட்டு, ஷிவாஸ் ரீகல், ஹலால் பண்ணாத சிக்கன், போர்க் சாப்ஸ்னு ஆர்டர் பண்ணி அவிங்க அதெல்லாம் இல்லன்னா, சரி நான் வெச்சிருக்கேன் செர்வ்பண்ணுன்னு வெறுப்பேத்தணும் போல வருது. அந்தரத்துலயே எறக்கி விட்ருவானா டாக்டர்? :O)))
//

ஷிவாஸ் ரீகலா?? ச்சேச்சே..அதை எவன் குடிப்பான்? நாம ரொம்ப கீழ எறங்கி குடிச்சாலே ஃபேமஸ் க்ரவ்ஸ், ஜேமிஸன் மாதிரி தான். இல்லாட்டி குடிக்காமயே இருப்போமில்ல? :)))

//

அதுசரி: அதுக்கு கருப்பு சாம்பார் சாப்டு செத்துபோய்க்குவேன் போய்யா :O)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
//

கருப்பு சாம்பாரா? என்னய்யா இது இப்பிடி மெரட்டறீங்க? இதுக்கு நான் சவுதிக்கே போயிடலாம் போலருக்கே..

தாராபுரத்தான் said...

இதுக்கு பேர்தான் பின்னி பெடலை எடுக்கிறதா? சிரித்து சிரித்து ...

balavasakan said...

ஆகா...கலக்கீட்டிங்க ..சார்..க.க.க.கோ..

ஈரோடு கதிர் said...

அய்யோ சாமி..

சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்கதுங்கண்ணா..

நானும் பிரபாவும் தான் டோட்டல் டேமேஜ்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் Bala

ஈரோடு கதிர் said...

//Blogger Subankan said...

கடைசிவரி கலக்கல் சார். நல்லவேளை நமக்கு ஒரு ஃபோபியாவும் இல்லை//

அண்ணே இந்த சுபாங்கனு ”நோ போபியா கவலை” இருக்கும் போல இருக்கு...

பார்த்து கவனிங்க

ஈரோடு கதிர் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சார் உங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது, சிரிச்சு முடியல. :)))//

க்கும் ஆள வெச்சு வேற அடிக்கனுமாக்கும்... அவ்ரே அவர அடிச்சுக்குவாருங்க

செ.சரவணக்குமார் said...

செம்ம காமெடி சார் நீங்க.

"உழவன்" "Uzhavan" said...

:-))

Rekha raghavan said...

எப்படி சார் உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க வருது?
செமையா கலாய்க்கறீங்க.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

Kiruthigan said...

அடெங்கப்பா..

prince said...

/* ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம்.*/ முடியலடா சாமி..........ஹ ஆஹா அஹாஹ் ....உங்கள் இளமையின் குறுகுறுப்பு அப்பப்போ உங்கள மீறி எட்டி பார்க்குது

கலகலப்ரியா said...

ஹூம்... வேற வழி இல்ல எல்லாத்துக்கும் சாம்பார்தான் ஒரே வழி...

சார் உங்க கதை க்ளைமாக்ஸ் ரொம்பப் புடிச்சிருக்கு சார்...

உண்டவர் பத்தி எல்லாம் யார் பேசுறதுன்னு ஒரு வெவஸ்தயே இல்லாம போச்சுபா... பாலா சார் அப்புறம் ஏதேதோ பேரு சொல்றாய்ங்களே அதுக்கெல்லாம் அருஞ்சொற்பொருள் விளக்கம் போட்டு... போதலைன்னா பாலாசி பற்பொடி போட்டு விளக்கிடுங்க...

Thenammai Lakshmanan said...

அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு///ஹாஹாஹா
முடியல சாமீஈஈஈஈஇ இந்த பாலா சார்கிட்ட இருந்து காப்பாத்து

கவிதன் said...

கலாய்ச்சோ மேனியா கலக்கல் காமெடி சார்!!! அருமை!!!

vasu balaji said...

/ பிரபாகர் said...

எல்லோரையும் கலாய்த்தலை அருமையாய் செய்து, கடைசியாய் அசத்தலாய் உங்களையும்!/

இந்தக் குசும்புதானே:))

vasu balaji said...

/ பழமைபேசி said...

முடியல... எப்படிண்ணே உங்களுக்கு மட்டும் இப்பிடி? பின்னிப் படல் எடுக்குறீங்க??

வந்தப்ப, ரெண்டே ரெண்டு பேர்த்தோட நறுக்கு மட்டும்....

இப்ப பாருங்க, பன்முகமும் காட்டி.... நம்பவே முடியலை.... அவரா இவரு?? இதான் பதுங்கிப் பாயுறதோ??//

கலாய்ச்சோ ஃபோபியா! அவ்வ்வ்

vasu balaji said...

Subankan said...

கடைசிவரி கலக்கல் சார். நல்லவேளை நமக்கு ஒரு ஃபோபியாவும் இல்லை :p//

இதுவே ஒரு ஃபோபியாவோ?:))

vasu balaji said...

/முகிலன் said...

டோட்டல் டேமேஜ்.


ஆமா ஆகாய ஊர்தியில போகும்போது எப்பிடி பதிவு படிச்சி பின்னூட்டம் போடுறது?//

நோ டேமேஜ். ஒன்லி ஃபன்:)). பைலட் கிட்ட சொல்லிதான்:))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

பழம முந்திகிட்டாரா?இன்னிக்கு முழுதும் ஆனியும்,ஆவணியும் சேர்த்து வச்சு ஆணி,வாரக்கடைசியானதால.

எனக்கு இன்னைக்கு இருந்த போபியோவெல்லாம் இப்ப கழண்டுகிச்சு,அதுவும் கடைசி பாராவுல:)டேங்க்ஸ்.//

இப்பல்லா தெரியுது:))

vasu balaji said...

துபாய் ராஜா said...

கலக்கல் கற்பனை சார்.... :))

எல்லோர் பதிவையும் ரொம்ப உன்னிப்பா படிக்கிறது என்ன
ஃபோபியா சார்... உங்களுக்கு அந்த ஃபோபியா தான்... :))//

அட உங்கள உட்டுபோட்டனே:)) சரி சரி எங்க போறீங்க மாட்டாம:))

vasu balaji said...

ஸ்ரீராம். said...

செம கலக்கல் காமெடி...//

நன்றி ஸ்ரீராம்:)

vasu balaji said...

பட்டாபட்டி.. said...

சிரிக்க வெச்சிட்டீங்க வானம்பாடி சார்..//

நன்றிங்க பட்டாபட்டி:)

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு ஸ்பெஷல் கும்மி போல? கலக்கல் பாலா சார்..:-))//

நன்றிங்க கார்த்தி:))

vasu balaji said...

சத்ரியன் said...

//ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். //

ஆஹா.... போலி டாக்டராய்யா நீயி? பிரபா 100 எண்ணுக்கு ஒரு கால போடுங்க.....//

ஹி ஹி. மெண்டல்னு கேஸ் நிக்காதே:))

vasu balaji said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். ~~~~~~~~~/////


இதை முதலிலே சொல்லக்கூடாதா//

ஏன்?:(( அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோஓஓஓ போஓஓராஆஆஆஆவாஆஆஆஅ இருக்குதூஊஊஊஊஉ:))

vasu balaji said...

ரோஸ்விக் said...

அம்புட்டு பேரும் செத்தாய்ங்க போ... பாவம் டோட்டல் டேமேஜ். :-)//

நானும்தானே:))

vasu balaji said...

NESAMITHRAN said...

ஆஹா சாமி முடியலைங்க//

ஹி ஹி:))

vasu balaji said...

padma said...

அந்த டாக்டருக்கு ஏதும் மேனியா இல்லையா ?
ரவுண்டு கட்டி கலாய்கிறீங்க.
பேஷ் பேஷ்//

படிக்காமலே போட்டிங்களா என்ன? டாக்டரே பேஷண்டுதானே:))

vasu balaji said...

கனிமொழி said...

:-)//

:). நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன்...

ஆனா பாருங்க ஒரு நாளைக்கு 10 வலைப்பூவை மேஞ்சு, 20 பின்னூட்டம் போடலைன்னா தூக்கம் வரமாட்டேங்குது...

இதுக்கு என்னா பண்ணனும் அண்ணே???//

ம்ம்ம். கொஞ்ச நாளா எல்லாம் கம்மி பண்ணிட்டீங்கண்ணே! இது லோ சுகர் மாதிரி. நிறைய பின்னூட்டம் இடுகைன்னு போட்டா சரியாயிரும். ஆமா? உங்கள விட்ருவமா என்ன?

vasu balaji said...

க.பாலாசி said...

ஆகா... இவ்ளோ மிஸ் பண்ணிட்டனே... சாயந்தரம் ஈரோட்டுல நெட் வேலசெய்யல... இப்ப ஃபீல் பண்றேன்...

ச்ச்ச்.... கும்மிப்போச்சே...கும்மிப்போச்சே.... இந்தளவுக்கு டேமேஜ் பண்ணிட்டீங்களே....

//கண்ணு புடுங்கற மாமாவ கூப்புடுவேன்னு மெரட்டுது.//

எல்லாத்தவிடவும் செம டாப்பு... இப்டித்தான் தெருவுல உள்ள குழந்தைகள் எல்லாம் டெய்லியும் சாப்புடுதாம்ல...

(அவருகிட்ட சொன்னா கேட்குறாரா...கம்பனி சீக்ரெட்டலாம் வெலியில சொல்லாதீங்கன்னு....)

//பிரபாகர் said...
(அய்யய்யோ, நமக்கு நிசமாவே வியாதி இருக்கு போலிருக்கே...)//

ஆகா...சரண்டர் ஆயிட்டாரே....

ஆமா அதாருங்க பாலாசி... பயபுள்ள ஒருவாரமாவே ஒரு மார்க்கமாத்தான் சுத்திகிட்டிருக்கு.... தமிழ்மணத்துல கவிதையப்பாத்தாலே தலைக்கு மேல பல்பு எரியுதாம்ல... உங்களுக்கு ஏதாச்சும் தெரியுங்களா?//

ஆமாமா. இன்னைக்கு சாமி இறங்கிருச்சாம்ல:))

vasu balaji said...

Madurai Saravanan said...

good. really i enjoyed this post. s its some how serious to discuss if it is really like this. thank u for make me more relax.//

Thank you sir.:)

vasu balaji said...

Chitra said...

வானம்பாடி: யோவ் என்ன உடுய்யா. ஏன்யா கடத்திகிட்டு போறீங்க.

ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம்.


...... சான்சே இல்லை. கலக்கல் கற்பனை! ஹா,ஹா,ஹா,ஹா.....//


=))

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

சார் உங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது, சிரிச்சு முடியல. :)))
--
பிரபா கமெண்ட் படிச்சிட்டு கண்ணுல தண்ணி:))))

தொடருங்கள்.:)//

:)). நன்றி

vasu balaji said...

அது சரி said...
/இதுக்கெல்லாம் ரணசிகிச்சை தான் சரியா வரும். கவுஜ எழுதினா, படிச்சா மூணு நாளு சோறு தண்ணி கட்...அப்புறம் எப்படி பாலாசி டைப் பண்ண முடியுதுன்னு பார்க்கலாம்? :)))//

பாலாசிக்கு மட்டும்தானே:)

/மீதி மரம் தென்படலியா? ஒரு கடப்பாறை எடுத்து மண்ணை தோண்டி பாருங்ணா...உள்ள தான் இருக்கும் :)))///

அது எங்கயாவது ரோட்டோர பரோட்டா கடையில எரிஞ்சி சாம்பலாயிருக்கும்:))

/அதான...கருப்பு சாம்பார் சாப்பிட்டு எவனும் பொழச்சதா சரித்திரமும் இல்ல பூகோளமும் இல்ல... உண்டவர் கண்டதில்லை...கண்டவர் உண்டதில்லை :)))//

அவ்வளவு சீக்ரட் ரெசிபியா:))

/ஷிவாஸ் ரீகலா?? ச்சேச்சே..அதை எவன் குடிப்பான்? நாம ரொம்ப கீழ எறங்கி குடிச்சாலே ஃபேமஸ் க்ரவ்ஸ், ஜேமிஸன் மாதிரி தான். இல்லாட்டி குடிக்காமயே இருப்போமில்ல? :)))/

இதெல்லாம் என்ன?:-?

/கருப்பு சாம்பாரா? என்னய்யா இது இப்பிடி மெரட்டறீங்க? இதுக்கு நான் சவுதிக்கே போயிடலாம் போலருக்கே../

தோடா:))

vasu balaji said...

தாராபுரத்தான் said...

இதுக்கு பேர்தான் பின்னி பெடலை எடுக்கிறதா? சிரித்து சிரித்து .//

வாங்கண்ணே:))

vasu balaji said...

Balavasakan said...

ஆகா...கலக்கீட்டிங்க ..சார்..க.க.க.கோ../

இப்புடி போட்டு குழப்பிட்டியே வாசு:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

அய்யோ சாமி..

சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்கதுங்கண்ணா..

நானும் பிரபாவும் தான் டோட்டல் டேமேஜ்....//

அல்லோ! என்னியவிடவா:))

vasu balaji said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் Bala//

நன்றி சார்:))

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

செம்ம காமெடி சார் நீங்க.//

ஹி ஹி:))

vasu balaji said...

உழவன்" "Uzhavan" said...

:-))//

நன்றி உழவன்:))

vasu balaji said...

KALYANARAMAN RAGHAVAN said...

எப்படி சார் உங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்க வருது?
செமையா கலாய்க்கறீங்க.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)//

ஃபோபியாவா இருக்குமோ:))

vasu balaji said...

Cool Boy said...

அடெங்கப்பா..//

நன்றி முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்

vasu balaji said...

ப்ரின்ஸ் said...

/* ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம்.*/ முடியலடா சாமி..........ஹ ஆஹா அஹாஹ் ....உங்கள் இளமையின் குறுகுறுப்பு அப்பப்போ உங்கள மீறி எட்டி பார்க்குது//

அப்பப்போ தானா? அவ்வ்வ்

vasu balaji said...

கலகலப்ரியா said...

//ஹூம்... வேற வழி இல்ல எல்லாத்துக்கும் சாம்பார்தான் ஒரே வழி...//

ஆமாம்மா:)

//சார் உங்க கதை க்ளைமாக்ஸ் ரொம்பப் புடிச்சிருக்கு சார்...//

என்ன புடிச்சிண்டு போறது புடிச்சிருக்கா. அவ்வ்வ்:((

// உண்டவர் பத்தி எல்லாம் யார் பேசுறதுன்னு ஒரு வெவஸ்தயே இல்லாம போச்சுபா... பாலா சார் அப்புறம் ஏதேதோ பேரு சொல்றாய்ங்களே அதுக்கெல்லாம் அருஞ்சொற்பொருள் விளக்கம் போட்டு... போதலைன்னா பாலாசி பற்பொடி போட்டு விளக்கிடுங்க...//

அவரதான் கேக்கணும்:))

vasu balaji said...

thenammailakshmanan said...

அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு///ஹாஹாஹா
முடியல சாமீஈஈஈஈஇ இந்த பாலா சார்கிட்ட இருந்து காப்பாத்து//

அவ்வளவு கொடுமையாவா இருக்கு:))

vasu balaji said...

கவிதன் said...

கலாய்ச்சோ மேனியா கலக்கல் காமெடி சார்!!! அருமை!!!//

நன்றிங்க கவிதன். முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.

Thenammai Lakshmanan said...

கொடுமை எல்லாம் இல்லை பாலா சார் நல்லா இருக்கு

பின்னோக்கி said...

இந்த ஃபோபியா எல்லாம் படிச்சு முடிச்சோன்ன, பின்னூட்டம் இட வேண்டும்னு, மூளைக்குள்ள ஒரு அரிப்பு எடுக்குதே, அது என்ன ஃபோபியான்னு சொல்லுங்க :)