Sunday, March 14, 2010

காய் வலி -2



லேபர் வார்டை ஒட்டியிருந்த நீண்ட அறையில் இரண்டு பக்கமும் இருந்த கம்பியைப் பிடித்தபடி வலி தாங்காமல், முனகல், அழுகை, அலறல் என்று வகை வகையாய்க் குரல்களின் நடுவே, இடியாய் ஒலித்தது மேரியின் குரல். தே. கத்தாதீங்கடி. இன்னா கத்தினாலும் அதே வலிதான். பெரிய ரோதனயா போச்சி இதுங்ககிட்ட, என்றபடி, பெனாயில் கலந்த நீரில் முக்கி, தரையில் ஒழுகியிருந்த ரத்தம், பனிக்குடநீர் எல்லாம் சுத்தம் செய்தபடி, எப்புடியாச்சும் ரெண்டாயிரம் தேத்தி இங்க இருந்து மாறணும் என்று சலித்த படி, தோ! இன்னாமே? கொஞ்சம் நின்னு போ. தண்ணில வழுக்கி உழுந்து தொலைக்க போற என்றபடி அசுத்த நீரைக் கொட்டி மாற்றப் போனாள்.
-----------------------------------------------------------------------
எனக்கு பயமா இருக்கு ராம். பெய்ன் அதிகமாயிண்டிருக்கு. அத்தைக்கு ஃபோன் பண்ணியா? என்ன சொன்னாங்க என்றாள் ரம்யா. ரெண்டு மணி வரைக்கும் நாள் நல்லால்லையாம். டாக்டர முடிஞ்ச வரைக்கும் கேட்டு பார்க்க சொன்னாங்க. அப்புறம் எதுனாலும் பரவால்ல. நம்ம கையில என்ன இருக்குன்னாங்க. ஐ ஸெட் டாக்டர் வில் கம் அரௌண்ட் 2.30. பார்க்கலாம்னேன். கார் அனுப்பியிருக்கேன். அத்தையை சாப்பிட்டு விட்டு உனக்கும் லஞ்ச் கொண்டு வர சொல்லியிருக்கேன். அஸிஸ்டண்ட் நீ சாப்பிட கூடாதுங்கறாங்க. ஐ வில் கோ டு ஏ.டி.எம். அண்ட் பி பேக் இன் டென் மினிட்ஸ். இஃப் யூ நீட் மி கிவ் எ கால் என்று போனான் ராம்.
-----------------------------------------------------------------------
ஏ.டி.எம். க்யூவில் திட்டிக் கொண்டு உள்ளே நுழைய, செல் அடித்தது. ராம், ஐ திங்க் இட் ஹேஸ் ப்ரோகன். ஐ கால்ட் த அஸிஸ்டண்ட் டாக்டர். என்ன பண்ற நீ. ஐ நீட் யு ஹியர் மேன் என்றாள் ரம்யா. க்கே. ஐம் ரஷிங் தேர், என்று கட் செய்து ஓட்டமும் நடையுமாக வந்தான் ராம். என்ன சொன்னாங்க என்றான்.
ஷி செட் ஷி வில் கால் டாக்டர் மேனகா. லெட்ஸ் வெயிட். முடியலடா. இட்ஸ் சோ பெயின்ஃபுல் என்றாள்.
மிஸ்டர் ராம். டாக்டர் ஈஸ் ஆன் லைன் என்று செல்லை நீட்டினாள் ட்யூட்டி டாக்டர். ஹேய் ராம். ஐ செக்ட் அப் வித் த ட்யூட்டி டாக்டர். நதிங் டு வர்ரி. ஐல் பி தேர் பை 2.30 தென் வி வில் ஸீ என்றாள் டாக்டர் மேனகா.
-----------------------------------------------------------------------
சுவற்றுக் கட்டையில் கால் பதித்து கம்பி வலையில் விரல் கோர்த்து தொங்கியபடி, சுமதி எப்டி கீதுமா என்றாள் பாக்கியம். ரொம்ப நோக்காட கீது அத்த. ரத்தம் வேற போய்க்கினு கீது. நர்ஸம்மா அரைமணில ஆயிடும்னுது. மூணு பேரு போய்க்கிறாங்கோ. நிக்க கூட முடியல அத்தை என்றாள். லேபர் ரூமிலிருந்து, அய்ய்ய்யய்ய்ய்யம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, முடியலயே. உயிர் போவுதே. பாயா போனவன் வரட்டும். எட்டி மூஞ்சி மேல ஒதிக்கிறேன். யம்மாஆஆஆ என்ற அலரல் கேட்டது. 

கத்தாதடி. நாலு மாசத்தில குழந்தைய கூட்டிட்டு வரும்போது வயித்த சாச்சிட்டு வருவ. மூஞ்சில உதைப்பாளாம். முக்குடி. ரீனா! பக்கதுல இரு, நான் நெக்ஸ்ட் லேபர்ல பார்த்துட்டு வரேன், என்று நகர்ந்தாள் டாக்டர்.
-----------------------------------------------------------------------
ராம் டைம் என்ன என்றாள் ரம்யா. பன்னெண்டரைடா, ஜஸ்ட் டூ அர்ஸ். டாக்டர் வந்துடுவாங்க என்றான். 

இட்ஸ் கெட்டிங் வர்ஸ் ராம், தாங்க முடியல. டெல் ஹர் அண்ட் ஹாவ் யுர் லஞ்ச் என்றாள். 

மணி ரெண்டே முக்கால். ஹாய் ரம்யா. என்னம்மா பயந்துட்டியா? என்று சிரித்தபடி, ராம் வில் யூ ப்ளீஸ் வெய்ட் அவுட்சைட். ஐ ஹாவ் டு செக் ஹர் என்றார் டாக்டர். பத்து நிமிடத்தில் வெளியில் வந்தவர், ஒரு ஸ்கேன் பாத்துடலாம், ஒண்ணும் சீரியஸ் இல்லை என்றவாரே ஸ்கேனிங் ரூமிற்கு ரம்யாவை அழைத்து வரச் சொல்லிவிட்டுச் சென்றார்.
-----------------------------------------------------------------------
மீண்டும் கட்டைச்சுவற்றில் கட்டைவிரல் ஊன்றி, கம்பி வலைக்குள் எட்டிப்பார்த்து சுமதி என்று மெதுவாகக் குரல் கொடுத்தாள் பாக்கியம். அய்யய்யோ யம்மாக்கிடையே ஒரு குரல், லேபர் ரூமுக்கு இட்டுனு போய்ட்டாங்கம்மா என்றது. 

பரபரப்பாக இறங்கி ஓடி, கிசோரு என்றாள் கதவின் பின்புறம் நின்றவாரு. இன்னாச்சிம்மா என்றபடி ஓடிவந்தான். காசு வெச்சிகிறியாடா? லேபர் ரூமுக்கு இட்டுனு போய்ட்டாங்கடா. டெலிவரி ஆச்சின்னா பேரு கூவுவாங்க. துட்டு குட்தாதான் சொல்லுவாங்க இன்னா கொய்ந்த, எப்டி கீதுன்னு. எர்னூரு ரூபா குடுடா என்றாள். 

வெளாட்றியா. காலைல இருந்து சவாரி போல. இங்கயே குந்தினுகுறேன். துட்டுக்கு நான் எங்க போக. அம்பது ரூபா கீது அவ்ளதான் என்றான். குடிக்கறதுக்கு மட்டும் எங்கனாலும் வரும் உனுக்கு துட்டு. என்ன செய்வியோ, துட்டு ஒரு ஐனூறாவது பொர்ட்டிகினு வா. 5 ரூபாக்கி காபி வாங்கியாந்தா அவளுக்கு குடுக்க 10ரூ கேப்பாளுங்கோ என்றாள் பாக்கியம்.
-----------------------------------------------------------------------
எவ்ரிதிங் ஈஸ் ஆல்ரைட் ராம். ஐ வில் அரேஞ்ச் ஃபார் த அனஸ்தடிஸ்ட். வி வில் ஹாவ் இட் அரௌண்ட் ஃபைவ் ஆர் சோ. அவ கிட்ட ப்ரோசீஜர் இன்னோரு வாட்டி எக்ஸ்ப்ளெயின் பண்ணியிருக்கேன். ஹாவ் எ டிஸ்கஷன் இஃப் யூ வாண்ட். நார்மல்னா வெயிட் பண்ணலாம். இட்ஸ் யுர் சாய்ஸ். அப்புறம், இஃப் யு டிசைட் டு கோ அஹட் சைன் த பேப்பர்ஸ் என்றார் டாக்டர். ட்யூட்டி டாக்டரிடம் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

ஐந்துக்கு வந்து பேப்பர்ஸ் சரி பார்த்து, அனஸ்தடிஸ்ட் ஓ.டி.யில் இருக்கிறார் என்றதும், ஓ.கே. லெட்ஸ் கோ அஹட் என்றவாறு, கிளம்பினார். உலகக் கவலை மொத்தமும் முகத்தில் தாங்கி ராம் குட்டி போட்ட பூனையாய் நடந்து கொண்டிருக்க, ஃப்ளோரின் ஒரு கோடியில் மாட்டப்பட்டிருந்த, ஏசு, மக்கா படங்களுக்கு நடுவே கர்ப்பரட்சாம்பிகை படத்தின் முன் அமர்ந்து கண்மூடி உட்கார்ந்திருந்தார் ரம்யாவின் அம்மா. 

அரை மணி பறந்ததே தெரியவில்லை. வெளியே வந்த டாக்டர், ராம் இட்ஸ் எ ப்யூடிஃபுல் கேர்ல், கங்க்ராஜுலேஷன் என்ற வார்த்தையைக் கேட்டதும் வாவ் என்று கண் பனிக்க அவர் கையைப் பிடித்துக் கொண்டான். ஹவ் ஈஸ் ரம்யா? பார்க்கலாமா டாக்டர் என்றான். முதல்ல உன் பெண்ணைப் பாரு யங் மேன், அனதர் 15 மினிட்ஸ். ரம்யா ஆப்ஸர்வேஷன்ல வர இன்னும் ஒன் அவர் ஆகும், அப்புறம் பார்க்கலாம் என்றபடி தன் அறைக்குள் போனார். 

அடுத்த பதினைந்து நிமிடம் நாள் கணக்காகத் தெரிந்தது. சுத்தம் செய்யப்பட்டு, அழகான கிஃப்ட் பேக் மாதிரி முகம் மட்டும் தெரிய அவன் குழந்தையைப் பார்த்ததும் சொல்லவொணா உணர்ச்சிகளுடன் மிக மெதுவாக ஒரு விரலால் அதன் கன்னத்தைத் தொட்டு, ரம்யா மாதிரியே இருக்கால்ல அத்தை என்றான்.
-----------------------------------------------------------------------
கட்டைசுவர், கம்பியில் கோர்த்த விரல் என்று தொங்கிய பாக்கியத்தின் காதில் கேட்ட சுமதியின் அலறலும், படார் எனத் தொடையில் விழும் அடியும், சில நொடி அமைதியும், ஹாஆஆ என்ற குரல் தொடர்ந்த சிற்றிடைவெளியில் கேட்ட குவா குவாவும் ஒரு புன்னகையையும், வயிற்றில் பசி உணர்வையும் தந்தது. பரபரவெனெ கதவிடம் ஓடி கிசோரு கிசோரு என்றாள் பதிலில்லை. நடக்கச் சக்தியற்று, மரத்தடியில் உட்காருவதும், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கதவருகில் வந்து கிசோருவுமாக அரைமணி பறந்தது. அடுத்த கிசோருக்கு, இன்னாச்சிம்மா என்றவனை துட்ட குடுடா முதல்ல இன்னா கொயந்த, இவ எப்டி கீறா கேட்டுகுனு வரேன். நீ போய் அதுக்குள்ள காபி வாங்கியாந்துடு என்று ஓடினாள். 

கெஞ்சி கூத்தாடி, இருனூரு ரூபாய் கொடுத்தபின் ஒரு ஆயா அம்மா பேரு சுமதி, அப்பா பேரு கிசோருதானே. ஆம்பளபுள்ள. நெல்லா கொயு கொயுன்னு கீது, ஆத்தாகாரி ரொம்ப வீக்கா கீறா, மவளா என்றாள். இல்லம்மா மருமவ, ஒரு நிமிசம் உடும்மா பாத்துட்டு போய்டுறேன் என்றாள். அதெல்லாம் இப்போ பார்க்க முடியாது. இன்னும் கொஞ்ச நேரமாவும் பெட்டுக்கு வர. நீ போய் காபி டீ எதுனாலும் எடுத்துனு வா என்றாள். சரிம்மா என்று வாய் கொள்ளா சிரிப்புடன் கதவருகே ஓடி, கிசோரு பேரன் பொறந்துகுறாண்டா, எங்கடா காபி என்றவளிடம், யம்மா நீ எதும் சாப்டலையே, இந்தாம்மா தோசை என்று காஃபியுடன் ஃப்ளாஸ்கை நீட்டிய போது குரல் உடைந்தது கிசோருக்கு.
-----------------------------------------------------------------------
விசிட்டிங் அவரில் பரபரவென ஓடி, கிழிந்த நாராய்க் கிடந்த சுமதியின் கை பிடித்து எப்படி இருக்கமே, ரொம்ப நோவுச்சா? அம்மா சொல்லிச்சி. எங்க என் பையன் என்று அருகிலிருந்த தொட்டிலில் எட்டிப் பார்த்தான். சுமதியின் பழைய புடவைப் பொதிக்குள் இருந்து தெரிந்த குழந்தையைப் பார்த்து, அய்ய இன்னாமே இப்பிடி கீது என்றபடி சிரித்தான்.

களைத்த முகத்துடன் வந்த டாக்டர், என்ன சுமதி என்ன சொல்றான் பையன்? இவர் தான் அப்பாவா? சுமதி வீக்கா இருக்காய்யா. டிஸ்சார்ஜ் ஆகி போகும்போது எழுதித் தர மருந்தெல்லாம் ஒழுங்கா வாங்கிக் கொடு. ஒரு அட்டை தருவாங்க. அந்தந்த தேதிக்கு தவறாம குழந்தையை கொண்டு வந்து காட்டி ஊசி, மருந்து எல்லாம் போடணும். நல்லா சாப்புடும்மா சுமதி. முக்கியமா நீ சொன்னா மாதிரி கிட்ட வந்தா, இந்தாளு மூஞ்சி மேலயே உதை என்று சிரித்தபடி நகர்ந்த டாக்டரின் முதுகை கை கூப்பி வணங்கினார்கள் மூவரும்.
-----------------------------------------------------------------------
ஹாய் ரம்யா. இன்னைக்கு வீட்டுக்கு போலாம். அம்மா, பத்தியம் பிள்ளை பெத்தவள்னு திணிப்பாங்க. கீப் யுர் செல்ஃப் ஃபிட். எக்ஸர்சைஸ் பண்ணு. ஃபிஃப்டீன் டேஸ் கழிச்சி ஒரு வாட்டி செக்கப் பண்ணீடலாம். போகும்போது சைட் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட காண்பிச்சிட்டு போங்க. அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கு. அப்புறம் பேர் வைக்கிற ஃபங்க்‌ஷனுக்கு இன்விடேஷன் உண்டா என்று சிரித்தபடி போனவளை பார்த்த மூவரின் முகங்களிலும் கடவுளாகத்தான் தெரிந்தார். 
------------------------------------------------------------------------
காரில் போகும்போது ரம்யா, சுமதிக்கு என்னாச்சிம்மா என்று கேட்டாள். இந்தக் களேபரத்தில் அவளை சுத்தமா மறந்தே போச்சுடி.  முன்னாடியே காசு வாங்கினா புருஷன் குடிச்சே தீத்துடுவாரும்மா, ஆஸ்பிடல் போக முன்ன அத்தைய அனுப்பறேம்மா. ஒரு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வேணும்னு சொன்னாள். அவளையும் காணோம். பக்கத்து ப்ளாக்ல அவள் வீட்டு கிட்டேயிருந்து ஒரு பொண்ணு வேலைக்கு வரான்னு சுமதி சொல்லியிருக்கா கேட்கலாம் என்றார்.
----------------------------------------------------------------------- 

69 comments:

தமிழ் அஞ்சல் said...

அப்பப்பா ...உங்களது பதிவுக்கு முதல் விமர்சனம் போடனும்கற ஆசை நிறைவேறிடுச்சு ...

நல்லாருக்குங்க..

thiyaa said...

nallaayirukku valthukal

ஸ்ரீராம். said...

எப்படி இந்த ஐடியா பிடித்தீர்களோ...அருமையாக இருக்கிறது. என்ன வித்யாசங்கள்..

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் கதை அண்ணே..

இரண்டு வேறு வேறு நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருக்கீங்க..

இராகவன் நைஜிரியா said...

அருமை...

இராகவன் நைஜிரியா said...

நன்று...

இராகவன் நைஜிரியா said...

சூப்பர்...

இராகவன் நைஜிரியா said...

பிரமாதம்..

இராகவன் நைஜிரியா said...

ஃபர்ஸ் கிளாஸ்..

இராகவன் நைஜிரியா said...

:-)))))

இராகவன் நைஜிரியா said...

நாங்களும் இப்ப எல்லாம் பின்னூட்டம் போட கத்துகிட்டோமில்ல..

இராகவன் நைஜிரியா said...

சூப்பரா கீது நைனா...

எம்மாம் நல்லா சொல்லிகீற...

இராகவன் நைஜிரியா said...

// பாயா போனவன் வரட்டும். எட்டி மூஞ்சி மேல ஒதிக்கிறேன். //

பிரசவ வைராக்கியம்...!!

இராகவன் நைஜிரியா said...

// இருனூரு ரூபாய் கொடுத்தபின் ஒரு ஆயா அம்மா பேரு சுமதி, அப்பா பேரு கிசோருதானே. //

கோஷா ஆஸ்பத்திரியில் நடக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்று..

இராகவன் நைஜிரியா said...

இன்னும் நிறைய ஒரு வார்த்தை பின்னூட்டம் போட கை துறு துறுங்குது... ஆனால் வார்த்தை கிடைக்கவில்லை..

டிக்‌ஷனரியைப் பார்த்துட்டு அப்பாலிக்கா வரேன் நைனா..

Chitra said...

APPLAUSE! Super!

Paleo God said...

அருமை...

இன்னொருக்கா படிச்சிடறேன்..

Unknown said...

நல்லா இருக்கு சார்..

புலவன் புலிகேசி said...

ஒரே நிகழ்வு வேறு வேறு கோணங்களில் தொடர்புபடுத்தியமை சூப்பர் சார்...

பின்னோக்கி said...

இரண்டு துருவங்களில் ஒரு நிகழ்வு. மிக நேர்த்தியான வாழ்க்கைப் பதிவு. அருமை சார்.

ஆரூரன் விசுவநாதன் said...

kalakkal

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!அருமை!

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு சார்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சூப்பர்.

மணிஜி said...

அண்ணா !!!

க.பாலாசி said...

ஓ... முகிலனோட சேர்ந்துட்டீங்களா!!!!!

இரண்டு விதமும் அந்த இடத்தை அப்படியே காட்டுது.... எனக்கு அந்த மெட்ராஸ் பாஸை இப்பவும் கேட்டுகிட்டேயிருக்கு...

ஈரோடு கதிர் said...

ஆஹா...

நாம் பேசும் போது சொன்ன மாதிரி.. அரசு மருத்துவமனை வலிதான் மனதை பிசைகிறது...

கலகலப்ரியா said...

யதார்த்தங்களை படம் புடிக்கிறீங்க போலருக்கு...
(கர்ப்பிணிப் பெண்கள் படிக்க வேணாமின்னு அறிவுப்பு போடணுமா..0)))

ராஜ நடராஜன் said...

மகுடமா?வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan said...

மிக அருமையா யதார்த்தமா முடிச்சிட்டீங்க பாலா சார்

அருமை..!!!

பரபரப்பும் பதட்டமுமா வந்து யதார்த்தில் மனுஷங்களோட எண்ணம் எப்பிடி இருக்குனு காண்பித்து முடிச்சு இருக்கீங்க

நேசமித்ரன் said...

அருமையாக சொல்லியிருக்கீங்க...

இரு வேறு உலகின் வலியை சொல்லி இருக்கும் விதம் ரொம்ப நல்லா இருக்கு வானம்பாடிகள் சார்

vasu balaji said...

திருப்பூர் மணி Tirupur mani said...

அப்பப்பா ...உங்களது பதிவுக்கு முதல் விமர்சனம் போடனும்கற ஆசை நிறைவேறிடுச்சு ...

நல்லாருக்குங்க..//

நன்றிங்க.

vasu balaji said...

தியாவின் பேனா said...

nallaayirukku valthukal//

நன்றி தியா.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

எப்படி இந்த ஐடியா பிடித்தீர்களோ...அருமையாக இருக்கிறது. என்ன வித்யாசங்கள்..//

மிக்க நன்றி ஸ்ரீராம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

கலக்கல் கதை அண்ணே..

இரண்டு வேறு வேறு நிகழ்வுகளை அருமையாக சொல்லியிருக்கீங்க..//

அண்ணே நன்றிங்கண்ணே

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

அருமை...//

:))). நன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி

vasu balaji said...

Chitra said...

APPLAUSE! Super!//

Thank you

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அருமை...

இன்னொருக்கா படிச்சிடறேன்..//

:).நன்றி.

vasu balaji said...

முகிலன் said...

நல்லா இருக்கு சார்..//

நன்றி:))

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

ஒரே நிகழ்வு வேறு வேறு கோணங்களில் தொடர்புபடுத்தியமை சூப்பர் சார்...//

நன்றிங்க புலிகேசி

vasu balaji said...

பின்னோக்கி said...

இரண்டு துருவங்களில் ஒரு நிகழ்வு. மிக நேர்த்தியான வாழ்க்கைப் பதிவு. அருமை சார்.//

நன்றி சார்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

kalakkal//

மெட்ராஸ் பாஷைல சொல்ற கலக்கல் இல்லையே:))

vasu balaji said...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!அருமை!//

நன்றிங்க. :)

vasu balaji said...

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு சார்//

நன்றிங்க அண்ணாமலையான்.

vasu balaji said...

ஸ்ரீ said...

சூப்பர்.//

நன்றிங்க ஸ்ரீ

vasu balaji said...

தண்டோரா ...... said...

அண்ணா !!!//

என்னண்ணா!!!:)))

vasu balaji said...

க.பாலாசி said...

ஓ... முகிலனோட சேர்ந்துட்டீங்களா!!!!!

இரண்டு விதமும் அந்த இடத்தை அப்படியே காட்டுது.... எனக்கு அந்த மெட்ராஸ் பாஸை இப்பவும் கேட்டுகிட்டேயிருக்கு...//

ஆஹா:)). நன்றி நன்றி.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

ஆஹா...

நாம் பேசும் போது சொன்ன மாதிரி.. அரசு மருத்துவமனை வலிதான் மனதை பிசைகிறது...//

ஆமாம் கதிர். ஆனா, நார்மல் டெலிவரி அங்கதான் அதிகம்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

யதார்த்தங்களை படம் புடிக்கிறீங்க போலருக்கு...
(கர்ப்பிணிப் பெண்கள் படிக்க வேணாமின்னு அறிவுப்பு போடணுமா..0)))//

அவங்கதான் படிக்கணும்:o)))

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

மகுடமா?வாழ்த்துக்கள்!//

:)). அண்ணா..குசும்பு..ம்ம்ம்..இருக்கட்டு இருக்கட்டு:))

vasu balaji said...

thenammailakshmanan said...

மிக அருமையா யதார்த்தமா முடிச்சிட்டீங்க பாலா சார்

அருமை..!!!

பரபரப்பும் பதட்டமுமா வந்து யதார்த்தில் மனுஷங்களோட எண்ணம் எப்பிடி இருக்குனு காண்பித்து முடிச்சு இருக்கீங்க//

நன்றிங்க:))

vasu balaji said...

நேசமித்ரன் said...

அருமையாக சொல்லியிருக்கீங்க...

இரு வேறு உலகின் வலியை சொல்லி இருக்கும் விதம் ரொம்ப நல்லா இருக்கு வானம்பாடிகள் சார்//

வாங்க நேசமித்ரன். நன்றி:)

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !

பனித்துளி சங்கர் said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

Veliyoorkaran said...

வணக்கம்..எப்டி இருக்கீங்க..உங்களுக்கும் எனக்கு எதுனா சண்டையா..ஏன், நம்ப ரெண்டு பெரும் பேசிக்கமாட்டேங்கறோம்...நீங்களும் அந்த பக்குட்டு வர்றதுள்ள..நானும் இந்த பக்குட்டு வர்றதுள்ள..ஏன் என்னாச்சு.பதிவுலகத்தோட அதிமுக்கியமான சக்தி வாய்ந்த பதிவர்கள் ரெண்டு பேரு பேசிக்காம இருந்தா நல்லாவா இருக்கும்..?

ரோஸ்விக் said...

யோவ் வெளியூரு என்னைய விட்டுபுட்டியேயா லிஸ்டுல...

ரோஸ்விக் said...

பாலா அண்ணே... இப்போதான் காய்வலி - 1 படிச்சுகிட்டு இருக்கிறேன்... இதோ வந்துடுறேன்... :-)

ரோஸ்விக் said...

இரண்டு பிரசவங்களும், உங்களின் எழுத்திலும் பாராதூரம் வித்தியாசப்பட்டு பிரசுரமாகி இருக்கிறது மிக அருமையாக.... :-)

vasu balaji said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !//

:)). வாங்க வாங்க.

vasu balaji said...

Veliyoorkaran said...

வணக்கம்..எப்டி இருக்கீங்க..உங்களுக்கும் எனக்கு எதுனா சண்டையா..ஏன், நம்ப ரெண்டு பெரும் பேசிக்கமாட்டேங்கறோம்...நீங்களும் அந்த பக்குட்டு வர்றதுள்ள..நானும் இந்த பக்குட்டு வர்றதுள்ள..ஏன் என்னாச்சு.பதிவுலகத்தோட அதிமுக்கியமான சக்தி வாய்ந்த பதிவர்கள் ரெண்டு பேரு பேசிக்காம இருந்தா நல்லாவா இருக்கும்..?//

அட நீங்க வேற தம்பி. நமக்கு உள்ளூர்லயே சண்டயில்ல. வெளியூர்க்காரங்க கிட்ட சண்ட போடுறமா?

நீங்கதான் இங்குட்டு வரதில்லைன்னு நினைக்கிறேன். நான் உங்க முதல் பதிவிலிருந்து படிச்சிகிட்டுதான் வாறன். அதுல பாருங்க, புதுசா எழுதறாங்க, நல்லாருக்குன்னு பின்னூட்டம் போட்டு, ஓட்டு போட்டா புள்ள புடிக்கிறவன பேசுறாமாதிரி பேசுராய்ங்க. நீங்களும் பட்டாபட்டியும் அடிக்கிறகூத்த ரசிச்சிகிட்டுதான் இருக்கேன். இனிமே பேசிக்கிருவோம். ச்ச்ச்சரியா?

vasu balaji said...

ரோஸ்விக் said...

யோவ் வெளியூரு என்னைய விட்டுபுட்டியேயா லிஸ்டுல...//

என்னத்த லிஸ்ட்ல விட்றது:))

vasu balaji said...

ரோஸ்விக் said...

இரண்டு பிரசவங்களும், உங்களின் எழுத்திலும் பாராதூரம் வித்தியாசப்பட்டு பிரசுரமாகி இருக்கிறது மிக அருமையாக.... :-)//

நன்றி ரோஸ்விக்

ராஜ நடராஜன் said...

சுகப் பிரசவம்!

Veliyoorkaran said...

அப்ப இனிமே உங்க பாசத்துக்கு நான் அடிமை..!..என் பதிவுல எல்லாத்துக்கும் நீங்க வந்து பாராட்டுவீங்கன்னு நான் கண்டிப்பா எதிர்பார்க்கமாட்டேன்.நான் எதிர்பார்த்தாலும் நீங்க அத தயவு செஞ்சு எனக்கு பண்ணாதீங்க...ஆனா நல்லாருக்கற பதிவுகளுக்கு உங்க கருத்த பதிவு செய்ங்க..ஏன்னா நமக்குள்ள பார்மாலிட்டி வேணாம்னேன்...நீங்க என்னோட மூணாவது பதிவுக்கு வந்து சொல்லிருந்த கருத்து எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு.சந்தோசமா இருந்துச்சு....அந்த மாதிரி...(பயலுக எவனாச்சும் வந்து எதிர்கருத்து சொல்லி இங்குண பிரச்சன பண்ணா சொல்லுங்க..வூடு பூந்து கலாசிடுவோம்..கலாசரதுகுன்னு ஒரு இராணுவமே தயார் நிலைல வெச்சிருக்கறோம்.நானும் பட்டாபட்டியும்....)

Veliyoorkaran said...

@@@அதுல பாருங்க, புதுசா எழுதறாங்க, நல்லாருக்குன்னு பின்னூட்டம் போட்டு, ஓட்டு போட்டா புள்ள புடிக்கிறவன பேசுறாமாதிரி பேசுராய்ங்க.///

நீங்க என்ன கலாய்க்கறீங்க..ரொம்ப நன்றி அண்ணன்...பிரமாதம்.அருமை .! :)

Veliyoorkaran said...

அண்ணேன் வோட்டு போட்டேன் அண்ணேன்...!! ஹி..ஹி...!

Ashok D said...

தாங்க்யூ :)