Monday, February 1, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.4

இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை

ஓ. அப்போ இறையாண்மை?
______________________________________________________________________________________
பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு

பாவம். யார் தகவலறியும் சட்டத்தில் இதைச் சொன்னாங்களோ இருக்கு ஃபைன். சிம்பு வந்துடுச்சின்னு ஆப்பு வச்சிட்டாரப்பா.
______________________________________________________________________________________
பிரபாகரன் மரண சான்றிதழ் வந்து விட்டதாக ப.சிதம்பரம் சொல்கிறார்

சிம்பு. இதென்னா வம்பு. அத தேடி கண்டுபிடிக்கட்டும் சி.பி.ஐன்னு சொல்லாம விட்டுட்டாங்களா?
______________________________________________________________________________________
அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்....

ஆமாம். வருஷம் சொல்லைலைன்னு சொல்லுவான் பரதேசி.
______________________________________________________________________________________
தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

சொல்லுப்பா புண்ணு. வச்சிக்கிட்டு வஞ்சன பண்ணாத. ’போற’ வழிக்கு புண்ணியம் சேத்துகோ.
______________________________________________________________________________________
நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?

என்ன? திரும்ப ரகசியமா திருப்பதி வந்து போய்ட்டார்னு சொல்லுதா என்ன?
______________________________________________________________________________________
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவர்: கெஹலிய

ஓஹோ. நாலாவது மாடில ரூம் ரெடியோ?
______________________________________________________________________________________
இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தால்.....  :EVKSஇளங்கோவன் பேச்சு

அங்க யாரோ சத்தியமூர்த்தி பவனுக்குள் நீங்கள் வந்தால்னு... சொல்றாங்க பாரப்பு.
______________________________________________________________________________________
நளினியை விடுதலை செய்வது தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும்: இளங்கோவன்

கோர்ட்டு கூட இவர கேட்டுதான் பண்ணனும் போல. செல்லாத தம்பிடிக்கு லொள்ளப் பாரு.
______________________________________________________________________________________
புலிகள் வைத்திருந்த 4 ஆயிரம் கிலோ தங்கம் எங்கே?

கோட்டபாய சம்சாரம் கொண்டு போச்சோ என்னமோ?
______________________________________________________________________________________
நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS

செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.
______________________________________________________________________________________
அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ

செஞ்சிட்டாலும்!.....
______________________________________________________________________________________
கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு

காத்து ரட்சிக்கேணும் எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ.
______________________________________________________________________________________

48 comments:

நிஜாம் கான் said...

யப்பே! மீ த பஸ்ட்டாம்...,

நிஜாம் கான் said...

//நளினியை விடுதலை செய்வது தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும்: இளங்கோவன்//

ராஜீவ்வ போட்டதுக்கு பதிலா....,,,,,,,,,,,

நிஜாம் கான் said...

//அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ//

கழுதைக்கு வாக்கப்பட்டால்...,

Paleo God said...

நல்லா கேட்டீங்க சார்..

க.பாலாசி said...

//இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தால்..... :EVKSஇளங்கோவன் பேச்சு
அங்க யாரோ சத்தியமூர்த்தி பவனுக்குள் நீங்கள் வந்தால்னு... சொல்றாங்க பாரப்பு. //

அதானே...ஈரோட்டுலக்கூட கொஞ்சப்பேரு அப்டித்தான் சொல்றாங்க...

//அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ
செஞ்சிட்டாலும்!.....//

ஹா..ஹா...இது சூப்பரப்பு....

வெற்றி said...

உள்ளேன் ஐயா :)

S.A. நவாஸுதீன் said...

வழக்கம்போலவே “சம்போ சிவ சம்போ சிவ சிவ சம்போ” பேக்ரௌண்ட்ல கேக்குது சார்.

///////கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு
காத்து ரட்சிக்கேணும் எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ///////

ஹா ஹா ஹா சிரிச்சு முடியலை.

இப்ப உடம்பு எப்படி சார் இருக்கு?

Menaga Sathia said...

நல்லா கேட்டீங்க.எல்லாமே நச்னு இருக்கு.

//இப்ப உடம்பு எப்படி சார் இருக்கு?// என்னாச்சு சார் உடம்பு சரியில்லையா?இப்போ பரவாயில்லையா....

அகல்விளக்கு said...

//நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS

செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.//

இது டாப்பு.....

தாராபுரத்தான் said...

நாக்கையே புடுங்கிற மாதிரியல்ல நாலு வார்த்தை.

நேசமித்ரன் said...

எல்லா பாலும் பவுண்ட்ரிக்கு வெளிய சார்

அடி பின்னிட்டீங்க

ஸ்ரீராம். said...

:))

Unknown said...

முதல்ல இந்தப் பதிவே நீங்க உடம்பு தேறிட்டிங்கன்னு சொல்லுது..

வழக்கமான வானம்பாடிகள் டச்...

ரசித்தேன்..

ராஜ நடராஜன் said...

இளங்கோவனுக்கெல்லாம் கருத்து சொல்லிகிட்டு.

அப்பன் பெயரையாவது காப்பத்தனும்.இல்ல பாட்டன் பேரையாவது காப்பத்தனும்.இல்லைன்னா ஈரோட்டுப் பெயரையாவது காப்பத்தனும்.மக்குப் பிள்ளைய கூட திருத்திடலாம்.இதெல்லாம் ஒரு தனி லிஸ்ட்....விடுங்க

செ.சரவணக்குமார் said...

அசத்தல். நீங்க அடிச்சி ஆடுங்க அப்பு.

ஜோதிஜி said...

ஐயா வணக்கம்.

குடல் புண்ணுக்கு இந்த திருப்பூர் டாக்டரு பசங்க காச புடுங்குறானுகளே தவிர வேறு ஒன்னும் ஆக மாட்டுது.

இதுல ஒவ்வொன்னையும் போட்டு விமர்சிக்க ஆசை.

எத்தனை முறை சிரித்து இருப்பேன் என்றே தெரியவில்லை.

வணக்கம் டாக்டரு.

ரொம்ப ரசித்தது போற போது புண்ணியமாவது (பொன்சேகா)

Subankan said...

வழமைபோலவே :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Sir

Starjan (ஸ்டார்ஜன்) said...

உள்ளேன் ஐயா

பிரபாகர் said...

அய்யா,

உங்களின் வழக்கமான வேதனையுடன் கூடிய நக்கல் திரும்பியிருக்கிறது. ஈழம் சம்மந்தமாய் வரும் விஷயங்கள் மனதிற்கு பகீரெனெ இருந்தாலும், இவ்வாறு அவர்களை கேட்பதன் மூலம் கொஞ்சம் ஆறுதலாயிருக்கிறது.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

என்னடா ஒரு ஆறு நாளா ஆளக்காணோமென்னு பாத்தேன். நல்லா காரசாரமாத்தான் திரும்பிருக்கீங்க..

balavasakan said...

ம்..ம்..என்னாச்சு சார்.. கொஞ்சநாளா காணல...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒவ்வொரு முறையும் உங்களுடைய இந்த வகை இடுகைகளைப் படிக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது பாலா சார்.. ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம்என்று

சவுக்கடி said...

///கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு

காத்து ரட்சிக்கேணும் எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ. ///

உணமைதான்.

இவர்கள் கூடிப் பேசினாலே ஏதோ பெருங்கேடு வரும் என்றே பட்டறிவு சொல்கிறது.

ஈரோடு கதிர் said...

அட சிங்கம் இன்னிக்கு செரியா நறுக்கித்தள்ளியிருக்கு

அதுவும் எங்க ஊர் பேரனை(!!!) பட்டாசு கிளப்பியிருக்கீங்க...

Ramesh said...

நறுக்கென்று ்ம்உகும் "நச" எண்டு டமக்கு டமக்கு டம்மா அசத்தல்

Chitra said...

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ

செஞ்சிட்டாலும்!.....
____________________ ha, ha, ha...... super punch!

Unknown said...

இப்ப வரைக்கும் மைனஸ் ஓட்டே விழல.. அதிசயமா இருக்கே???

நசரேயன் said...

நறுக் .. நச் ன்னு இருக்கு

கலகலப்ரியா said...

//
#
முகிலன் Says:

இப்ப வரைக்கும் மைனஸ் ஓட்டே விழல.. அதிசயமா இருக்கே???//

தமிழ்மணம்ல ஒரு கட்டைவிரல் நறுக்கிட்டாங்களோ என்னமோ.....

அது சரி(18185106603874041862) said...

Good...very good...

thiyaa said...

என்ன சார் கொடுமையா கிடக்கு
வாழவும் விடுறாங்களில்லை சாகவும் விடுறாங்களில்லை
அரசியலே ஒரு சாக்கடை

உங்களின் நறுக் நச்சென்று இருக்கு

//நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS


செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.
//

இது செம அடி

sathishsangkavi.blogspot.com said...

ஐயா நச்சுன்னு இருக்குதுங்கோ...

Thenammai Lakshmanan said...

நல்லா நச் நச்சென்று இருக்கு எல்லாமே ...
உடம்புக்கு என்ன வானம் பாடி ..?

நலம்தானே இப்போ..

vasu balaji said...

@@நன்றி நிஜாம்.
@@நன்றி ஷங்கர்
@@நன்றி பாலாசி
@@வாங்க வெற்றி. நன்றி.
@@நன்றி நவாஸ். பரவாயில்லை.
@@நன்றிங்க மேனகா. ஆமாங்க.
@@நன்றிங்க ராஜா.
@@நன்றிங்க அப்பன்.
@@நன்றி நேசமித்ரன்
@@நன்றி ஸ்ரீராம்
@@:)நன்றி முகிலம். ஆமாம். கொஞ்சம்.
@@வாங்க நடராஜன்:)
@@நன்றி சரவணக்குமார்
@@:)நன்றி ஜோதிஜி
@@நன்றி சுபாங்கன்.
@@:)).நன்றி டிவிஆர்
@@நன்றி ஸ்டார்ஜன்
@@நன்றி ப்ரபா
@@காய்ச்சலும், அசதியும் வாசு. நன்றி
@@நன்றி புலிகேசி.
@@நன்றி கார்த்திக். ஆமாம்:)
@@ஆமாங்க சவுக்கடி. நன்றி
@@வாங்க கதிர்:)ம்கும். சிங்கமா..அவ்வ்வ்
@@வாங்க றமேஸ். நன்றி
@@வாங்க சித்ரா. நன்றி
@@ஹிஹி கமுத்து போடுறது யாருன்னு தெரிஞ்சப்புறம் அனாவசியமா விளுறதில்லை. கொஞ்ச நாளா காணோம்னு மறந்துட்டாங்க போல முகிலன்:))

vasu balaji said...

@@நன்றி நசரேயன்
/ கலகலப்ரியா said...

//
#
முகிலன் Says:

இப்ப வரைக்கும் மைனஸ் ஓட்டே விழல.. அதிசயமா இருக்கே???//

தமிழ்மணம்ல ஒரு கட்டைவிரல் நறுக்கிட்டாங்களோ என்னமோ//

அட இல்லம்மா. ஒரு வாரமா நம்மள காணோம்னு மறந்துருப்பாங்க.
@@thank you athu sari
@@நன்றி சங்கவி
@@நன்றி தியா
@@நன்றிங்க தேனம்மை. காய்ச்சலுங்க.:)

யூர்கன் க்ருகியர் said...

//இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தால்..... :EVKSஇளங்கோவன் பேச்சு//

ஊருக்குள்ள ஒரு பய என்ன பாக்க முடியாதுன்னு சொல்றாரு

யூர்கன் க்ருகியர் said...

//கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு //

கூனன் என்னத்த ஆப்பு வைக்க போறானோ ??

Unknown said...

//அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்....

ஆமாம். வருஷம் சொல்லைலைன்னு சொல்லுவான் பரதேசி.//

கண்டிப்பா இப்படி தான் சொல்லுவானுங்க...

துபாய் ராஜா said...

சும்மா 'சொருக்', 'சொருக்'குன்னு இருக்கு. உறைக்கிறவங்களுக்கு உறைச்சா நல்லாருக்கும். :(

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ. //

Ella sari yarunga antha "ஈஈஈஈ" ?

திவ்யாஹரி said...

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ

செஞ்சிட்டாலும்!.....

ஹா.. ஹா.. ஹா..
மீ தி லாஸ்ட்..

திவ்யாஹரி said...

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ

செஞ்சிட்டாலும்!.....

ஹா.. ஹா.. ஹா..
மீ த லாஸ்ட்..

முத்தரசன் said...

நல்லாதான் இருக்கு...... ஆனா எதுகு சிம்பு சிம்புனு ரெண்டு இடத்துல எழுதிருக்கிங்க..... ஓ..ஓ....ஓ.... இதுக்கு பேருதான்.. மேயிர மாட்ட நக்குற மாடு கெடுத்த மாதிறி சும்மா கிடக்குறவன சொரிஞ்சி விடுறதா...

சிநேகிதன் அக்பர் said...

சுருக்குன்னு இருக்கு.

தமிழ் அமுதன் said...

நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS

செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.
_______________________________________________________ ;;;)

பின்னோக்கி said...

இந்த வாட்டி கத்தி சரியா நறுக்கலையே.... :)

ரோஸ்விக் said...

ஐ எனக்கு பிடிச்ச நறுக்குன்னு நாலு வார்த்த... :-)) வழக்கம் போல சும்மா நச்சுன்னு..