Friday, January 1, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.0

ஊடகவியலாளர்களைக் கொன்றவர்களை அம்பலப்படுத்த முடியும் : சரத்

டபுள் ஓக்கே! பதிலுக்கு பிச்ச என்ன காட்டப் போகுதோ வெயிட்டிங்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

எலும்புத்துண்டு காட்டீட்டான். நீங்க வால் ஆட்டீடுங்க சாமிகளா. இதுக்குதானே அடிச்சிகிட்டீங்க. தேர்தல் முடிஞ்சப்புறம் வைப்பான் ஆப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மகிந்தவின் அழுத்தத்தின் பேரிலேயே பொன்சேகாவிடம் கரனகொட நட்டஈடு கோரினார் என்கிறார் சுமண தேரர்

ங்கொய்யாலே! இது புது அரசியலா இருக்கே. அவ்வளவு கோடி அடிச்சிட்டானா அந்தாளு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரத் பொன்சேகா மட்டக்களப்பில் பிரசாரம் நடத்த மாநகர முதல்வர் அனுமதி

கருணா அனுமதி குடுத்துட்டாரா. இது லெவலுக்கு ஒரு பிலிம் காட்டிடிச்சி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை நிரூபிப்பதற்கு தயார்: லக்ஸ்மன் கிரியெல்ல

யப்பா. புண்ணியமா போகும். ஒருத்தன ஒருத்தன் போட்டு குடுத்து நீங்களே நாறடிச்சாத்தான் உண்டு. அப்பதான் அங்க என்ன நடந்துச்சுன்னு வெளிய வரும். இல்லாட்டி ஒருத்தனும் கவலப்படமாட்டானுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நலன்புரி நிலைய மக்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை: சரத் பொன்சேகா

அடி செருப்பால. அதெல்லாம் பண்ணாமலே சரணடையுங்கள்னு சொன்னியா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அவசரக்காலச்சட்டத்திற்கு எதிராக குரல்கொடுப்போம்: டக்ளஸ் தேவானந்தா

இவரு போஸ்டுக்கு இவரு மிரட்டிட்டாருப்பா. எப்புடியெல்லாம் பொழைக்கிறானுங்க பன்னாடைங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரத் பொன்சேகாவின் திட்டத்தினால் திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்படும்: அரசாங்கம்

கோத்தபாய குடும்பம் தங்க அமெரிக்கால 70கோடிக்கு பங்களா வாங்கினதுல திறைசேரிக்கு லாபம் வந்திச்சா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை மக்களுக்கு மாறுபட்ட அரசாட்சி வழங்கப்படும்: சரத் பொன்சேகா

எப்புடீ? வித்தியாசமா லவட்டுவீங்களோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்களை பெற்றுக் கொள்ள அரசு எடுத்த முயற்சி தோல்வி

ஆஹா! வடை போச்சே. சரி கப்பலுக்கு மெதுவா சொல்லிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
150 மில். ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின தகவல்

ஆமா! கே.பி.ய திவயின பொறுப்பில விட்டுட்டாங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்கிலாந்தில் ஆயுத களவாடலில் ஈடுட்ட மூன்று இலங்கையர்கள் கைது

அட மத்த நாடு கொடுத்ததே என்ன பண்ணன்னு தெரியாம கொட்டிக் கெடக்கே. ஒரு நட ஊரு பக்கம் வரக்கூடாது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் 'சின்வாத்ரா' இலங்கையின் பொருளாதார ஆலோசகர்?

ஓ. அண்ணந்தம்பிக்குள்ள அடிதடி வராம சொத்து பிரிக்க நாட்டாமையா. குரங்கு அப்பம் பிட்ட கதைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் தலைமையில் ஈழப் போராட்டம் தொடரும்: வைகோ

அது அவங்க பார்த்துப்பாங்க. இந்த கீரி-பாம்பு சண்டை பொழைப்பு நாறுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை: மு.க.அழகிரி தகவல்

ரைட்டு. அடுத்தது மதுரை கதை வெளிய வருமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தை 2ஆக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்

முதல்ல ஆந்திரால கிள்ளுடி. தமிழன் காமெடி பீசுன்னு தெரியும்ல. இங்க வந்துட்டாரு தொடைய தட்டிகிட்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெ. ஆட்சிக்கே வரமாட்டார்: தேமுதிக தேராத கட்சி: மு.க.அழகிரி கிண்டல்

அப்ப டாக்டரைய்யா? ங்கொய்யால. அண்ணன் ஃபார்முலாவ அடிச்சிக்க ஆளில்லடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈஈஈஈஈஈஈஈ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மோசடி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: திலகவதி

இதுக்கு முன்னாடி 50 வாட்டி எடுத்த நடவடிக்க எங்க ஓடிப்போச்சுன்னு கண்டு புடிங்கம்மா. ஏண்டா பாவிங்களா. கண்டுக்கலையா. தேர்தல் வருதுடா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிமுக முடிவே மதிமுகவின் முடிவு: வைகோ

ஓஓ. இததான் உடன்கட்டை ஏர்றதுங்கறதா? கூட்டணின்னா இது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆட்சியில் குறைகள் இருந்தால் திருத்திக்கொள்கிறோம்: கலைஞர்

ஆமாங்கையா. எங்க தேர்தல்னாலும் எல்லாரையும் கண்டுக்கணும். மிச்ச குறையெல்லாம் ஒன்னுமே இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த ஆண்டு 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது

அதுக்கு அய்யாக்கு ஒரு விருது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலக்கியவாதிகள் அருகில் இருக்கவே ஆசை: கலைஞர்

ஓக்கே. இனிமே நேரு ஸ்டேடியத்துல ஆஃபீஸ் வெச்சிடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மத்திய அரசுக்கு தடுமாற்றம் இல்லை: ப.சிதம்பரம்

தள்ளாட்டம் தானோ. குடிச்சவந்தான் ஸ்டெடியா இருக்கேன்னு அலப்பறை பண்ணுவான்னு எங்கண்ணன் கதிர் எப்பவோ சொல்லீட்டாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது

அட அதான் ஆயிடிச்சே. பி.ஜி, 4 பாட்டு, விளக்குமாத்து அடியை சேர்த்தா ஃபைட் ஆச்சி, டைட்டில் போட்டா சரி. எதுக்கு தண்டசெலவு. ரொம்ப முக்கியம்டா. கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

57 comments:

பின்னோக்கி said...

//அதிமுக முடிவே மதிமுகவின் முடிவு: வைகோ

//ஓஓ. இததான் உடன்கட்டை ஏர்றதுங்கறதா

கண்ணுல தண்ணிவர்ற அளவுக்கு சிரிக்க வெச்சதுக்கு நன்றி. எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது ?. சூப்பர். உடன்கட்டை.. சரிங்க..சிரிச்சு முடிச்சுட்டு அப்புறம் பின்னூட்டத்த தொடருகிறேன்.

priyamudanprabu said...

தமிழகத்தை 2ஆக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்

முதல்ல ஆந்திரால கிள்ளுடி. தமிழன் காமெடி பீசுன்னு தெரியும்ல. இங்க வந்துட்டாரு தொடைய தட்டிகிட்டு.
///

ha haa

க.பாலாசி said...

//மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை: மு.க.அழகிரி தகவல்
ரைட்டு. அடுத்தது மதுரை கதை வெளிய வருமா?//

டாக்டர் பட்டம் வாங்குற ஐடியாவா இருக்கும்.

//குடிச்சவந்தான் ஸ்டெடியா இருக்கேன்னு அலப்பறை பண்ணுவான்னு எங்கண்ணன் கதிர் எப்பவோ சொல்லீட்டாரு.//

ஆமா நானும் அதை நேத்து என் காதால கேட்டேன்...

//கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க. //

என்னா ஆச...???

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))

Maheswaran Nallasamy said...

கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க.


Hahahahahaaaaaaa..

ஈரோடு கதிர் said...

//அதுக்கு அய்யாக்கு ஒரு விருது.//
டி.வி பாத்துபோட்டீங்களா?

//முதல்ல ஆந்திரால கிள்ளுடி.//
யார கிள்ளச் சொல்றீங்ங்ங்ங்ங்க....

//கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க. //
ஓ... அது படம் புடிக்கிலியா

ஆரூரன் விசுவநாதன் said...

அண்ணன் கதிர் வாழ்க.....

ஆரூரன் விசுவநாதன் said...

//தமிழகத்தை 2ஆக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்

முதல்ல ஆந்திரால கிள்ளுடி. தமிழன் காமெடி பீசுன்னு தெரியும்ல. இங்க வந்துட்டாரு தொடைய தட்டிகிட்டு.//

நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில், இந்த நாடு இன்னும் எத்தனை துண்டுகளாகப் போகிறதோ என்று கவலையாக இருக்கிறது....

ஆந்திரா என்று இப்பொழுதுதான் துவங்கியிருக்கிறது.... இன்னும் பல மாநிலங்கள் பாக்கியிருக்கின்றன....

ஆரூரன் விசுவநாதன் said...

லக்கியவாதிகள் அருகில் இருக்கவே ஆசை: கலைஞர்

ஓக்கே. இனிமே நேரு ஸ்டேடியத்துல ஆஃபீஸ் வெச்சிடலாம்.


நல்ல நகைச்சுவை

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அண்ணன் கதிர் வாழ்க.....//

நன்றிங்க யூத்த்த்த்த்து

ஈரோடு கதிர் said...

//ஆந்திரா என்று இப்பொழுதுதான் துவங்கியிருக்கிறது.... இன்னும் பல மாநிலங்கள் பாக்கியிருக்கின்றன....//

எதுக்கு தலைவரே.... ராஜபக்சேவ வரச்சொல்லி.... சொந்தச் செலவுல காவு கொடுத்துக்கிறதுக்கா

மணிஜி said...

/லக்கியவாதிகள் அருகில் இருக்கவே ஆசை: கலைஞர்

ஓக்கே. இனிமே நேரு ஸ்டேடியத்துல ஆஃபீஸ் வெச்சிடலாம்.
//

நேரு குடும்பத்தை வச்சுதான் இங்கன ஆகிசு ஓடிகிட்டிருக்கு. வழக்கம் போல் நச்..

மணிஜி said...

நேரு குடும்பத்தை வச்சுதான் இங்கன ஆபீசு ஓடிகிட்டிருக்கு. வழக்கம் போல் நச்.

ப்ரியமுடன் வசந்த் said...

:))

geethappriyan said...

ஐயா சரியான சிரிப்பு
ஓட்டுக்கள் போட்டாச்சு

கலகலப்ரியா said...

ஒண்ணாந்தேதியேவா சார்... நறுக்குங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான நச் கமெண்டுகள்..:-)))

Rajasurian said...

:)))

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

vasu balaji said...

பின்னோக்கி said...
// கண்ணுல தண்ணிவர்ற அளவுக்கு சிரிக்க வெச்சதுக்கு நன்றி. எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது ?. சூப்பர். உடன்கட்டை.. சரிங்க..சிரிச்சு முடிச்சுட்டு அப்புறம் பின்னூட்டத்த தொடருகிறேன்.//

ஹி ஹி:))

vasu balaji said...

பிரியமுடன் பிரபு said...

/ ha haa/

நன்றி பிரபு. புத்தாண்டு வாழ்த்துகள்.

vasu balaji said...

க.பாலாசி said...

/ டாக்டர் பட்டம் வாங்குற ஐடியாவா இருக்கும்.//

யப்பா. நீ ஒருத்தன் போதும்.

// ஆமா நானும் அதை நேத்து என் காதால கேட்டேன்...//

இது வேறயா:))

/ என்னா ஆச...???//

தோடா.

vasu balaji said...

ஸ்ரீ said...

/:-))))))))/

வாங்க ஸ்ரீ.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ டி.வி பாத்துபோட்டீங்களா?//

அந்த கருமத்த வேற பார்க்கணுமா.

/ யார கிள்ளச் சொல்றீங்ங்ங்ங்ங்க....//

ஆந்திரான்னா கசியறது கூட கடலா பொங்கும் போலயே. :)) ஒரு மார்க்கமாத்தான்யா இருக்கீரு.

/ ஓ... அது படம் புடிக்கிலியா//

டிவிடி புடிச்சாங்களாம். பாட்டு சீனு கனவு சீனு சேர்த்து விடுவாங்க போல. அதான் எப்பன்னேன்.

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

/ Hahahahahaaaaaaa../

வாங்க மஹேஸ்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/அண்ணன் கதிர் வாழ்க.../

தென்னாங்கடா..திடீர்னு.

/நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உண்மையில், இந்த நாடு இன்னும் எத்தனை துண்டுகளாகப் போகிறதோ என்று கவலையாக இருக்கிறது....

ஆந்திரா என்று இப்பொழுதுதான் துவங்கியிருக்கிறது.... இன்னும் பல மாநிலங்கள் பாக்கியிருக்கின்றன..../

கருங்கல் பாளையம் தனி மானிலம்னு ஆரம்பிச்சா என்னா.

vasu balaji said...

தண்டோரா ...... said...

/நேரு குடும்பத்தை வச்சுதான் இங்கன ஆபீசு ஓடிகிட்டிருக்கு. வழக்கம் போல் நச்./

அட நாடே அத வெச்சிதான் ஓடுது. நாம என்னா தலைவரே.

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/:))/

:)

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/ ஐயா சரியான சிரிப்பு
ஓட்டுக்கள் போட்டாச்சு//

வாங்க கார்த்திக்:)) நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.

vasu balaji said...

Subankan said...

/ :)))/

நன்றி சுபாங்கன்

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ ஒண்ணாந்தேதியேவா சார்... நறுக்குங்க../

கிடைக்கிறப்ப நறுக்க வேண்டியதுதான்.:))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/அருமையான நச் கமெண்டுகள்..:-)))//

வாங்க சார்.:)) நன்றி.

vasu balaji said...

Rajasurian said...

/:)))/

:))

vasu balaji said...

நினைவுகளுடன் -நிகே- said...

/இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்/

நன்றிங்க

இராகவன் நைஜிரியா said...

// மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை: மு.க.அழகிரி தகவல்

ரைட்டு. அடுத்தது மதுரை கதை வெளிய வருமா? //

அது சரி டாக்டர் பட்டம் அவரும் வாங்க வேண்டாமா என்ன.

இராகவன் நைஜிரியா said...

// ஜெ. ஆட்சிக்கே வரமாட்டார்: தேமுதிக தேராத கட்சி: மு.க.அழகிரி கிண்டல் //

ஓவர் காண்பிடன்ஸ் ?

இராகவன் நைஜிரியா said...

// மோசடி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: திலகவதி //

2010 முதல் ஜோக்

பிரபாகர் said...

ஈழம் விஷயங்களில் வழக்கமான வேதனையுடன் கூடிய வசையாடல்களும், அரசியலின் அவலங்களை தோலுரித்து காட்டியும் மிக நன்றாய் பதித்திருக்கிறீர்கள்.

பிரபாகர்.
(நறுக் ரசிகர் மன்ற உறுப்பினர்)

பி.கு. மன்னிக்கவும், மன்றத்தில் சேர விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருப்பதால் விவரங்கள் அனுப்ப கொஞ்சம் தாமதமாகிறது.

balavasakan said...

எனக்கு இப்போ அரசியல் புடிக்காது நோ கொமன்ட்ஸ்

நாகா said...

v 4.0? நடத்துங்க நடத்துங்க.. உங்களை நேரில சந்திச்சதுலயும் பேசுனதுலயும் ரொம்ப மகிழ்ச்சி, ஆனா ஐயா நறுக்குன்னு நாலு வார்த்த மாதிரியே பேசுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.

ஊடகன் said...

மதிப்பிற்குரிய ஐயா வானம்பாடிகள் அவர்களுக்கு முதலில் வலைசரத்தில் என்னைப் பற்றிய அறிமுகத்துக்கு மிக்க நன்றி...

தங்களின் இந்த ஊக்கம் என்னிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்கும்....

அன்புடன்,

ஊடகன்

புலவன் புலிகேசி said...

//தமிழகத்தை 2ஆக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்

முதல்ல ஆந்திரால கிள்ளுடி. தமிழன் காமெடி பீசுன்னு தெரியும்ல. இங்க வந்துட்டாரு தொடைய தட்டிகிட்டு.//


சரியான பதிலடி..ஐயாவுக்கு நன்றி

//மத்திய அரசுக்கு தடுமாற்றம் இல்லை: ப.சிதம்பரம்

தள்ளாட்டம் தானோ. குடிச்சவந்தான் ஸ்டெடியா இருக்கேன்னு அலப்பறை பண்ணுவான்னு எங்கண்ணன் கதிர் எப்பவோ சொல்லீட்டாரு.//

நேத்து தினமணில படிச்சேன். அரசியல் வாதிகள் அவங்க நிலையை தெரிஞ்சிக்க வலைப்பூக்களை பாக்கனும்னு. இந்த பதிவ பாத்தாங்கன்னா திருந்துவாங்களா..???

S.A. நவாஸுதீன் said...

//அதிமுக முடிவே மதிமுகவின் முடிவு: வைகோ

//ஓஓ. இததான் உடன்கட்டை ஏர்றதுங்கறதா

செம, செம, செமையா இருக்கு சார்.

மத்ததும் வழக்கம்போல ”நறுக்”குக்கு பஞ்சமில்லை

நிஜாம் கான் said...

//தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அவசரக்காலச்சட்டத்திற்கு எதிராக குரல்கொடுப்போம்: டக்ளஸ் தேவானந்தா

இவரு போஸ்டுக்கு இவரு மிரட்டிட்டாருப்பா. எப்புடியெல்லாம் பொழைக்கிறானுங்க பன்னாடைங்க.//

செத்தபிறகு சிறந்தமுறையில் கல்லறை கட்டித்தரப்படும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணே!

நிஜாம் கான் said...

//S.A. நவாஸுதீன் said...
//அதிமுக முடிவே மதிமுகவின் முடிவு: வைகோ

//ஓஓ. இததான் உடன்கட்டை ஏர்றதுங்கறதா///


போயஸ் தோட்டம் பக்கமும், தாயகம் பக்கமும் கொஞ்ச நாளைக்கு போயிடாதீங்கண்ணே!

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அது சரி டாக்டர் பட்டம் அவரும் வாங்க வேண்டாமா என்ன.//

மதுரை காமரஜர் பல்கலைக் கழகத்துக்கு தலைவலியா

/ஓவர் காண்பிடன்ஸ் ?/

ஓவர் கொழுப்புண்ணே.

vasu balaji said...

பிரபாகர் said...

ஈழம் விஷயங்களில் வழக்கமான வேதனையுடன் கூடிய வசையாடல்களும், அரசியலின் அவலங்களை தோலுரித்து காட்டியும் மிக நன்றாய் பதித்திருக்கிறீர்கள்.

பிரபாகர்.
(நறுக் ரசிகர் மன்ற உறுப்பினர்)

பி.கு. மன்னிக்கவும், மன்றத்தில் சேர விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருப்பதால் விவரங்கள் அனுப்ப கொஞ்சம் தாமதமாகிறது.//

இப்பதான் நிதி மோசடிய புடிக்கிறாங்கன்னு ந்யூஸ். இது வேறயா

vasu balaji said...

Balavasakan said...

/எனக்கு இப்போ அரசியல் புடிக்காது நோ கொமன்ட்ஸ்//

ஆஹா. தேர்ந்த அரசியல் வாதியாகிற தகுதி இருக்கே வாசுக்கு=))

vasu balaji said...

நாகா said...

/ v 4.0? நடத்துங்க நடத்துங்க.. உங்களை நேரில சந்திச்சதுலயும் பேசுனதுலயும் ரொம்ப மகிழ்ச்சி, ஆனா ஐயா நறுக்குன்னு நாலு வார்த்த மாதிரியே பேசுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.//

பாத்தீங்களா. வாக்கு தவறப்படாது. இங்கயும் நாலு வார்த்ததான் அங்கயும் நாலே வார்த்ததான்:)).

vasu balaji said...

ஊடகன் said...

//மதிப்பிற்குரிய ஐயா வானம்பாடிகள் அவர்களுக்கு முதலில் வலைசரத்தில் என்னைப் பற்றிய அறிமுகத்துக்கு மிக்க நன்றி...

தங்களின் இந்த ஊக்கம் என்னிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்கும்....//

அசத்துங்கள் ஊடகன்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

சரியான பதிலடி..ஐயாவுக்கு நன்றி

நன்றி புலிகேசி.

/ நேத்து தினமணில படிச்சேன். அரசியல் வாதிகள் அவங்க நிலையை தெரிஞ்சிக்க வலைப்பூக்களை பாக்கனும்னு. இந்த பதிவ பாத்தாங்கன்னா திருந்துவாங்களா..???//

இப்புடியெல்லாம் கூட பேராசை படலாமா

Unknown said...

//ரொம்ப முக்கியம்டா. கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க. //

கவலை படாதிங்க... சீக்கிரம் எடுத்துருவாங்க...

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

செம, செம, செமையா இருக்கு சார்.

மத்ததும் வழக்கம்போல ”நறுக்”குக்கு பஞ்சமில்லை

/
நன்றி நவாஸ்

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ செத்தபிறகு சிறந்தமுறையில் கல்லறை கட்டித்தரப்படும். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் அண்ணே!/

அவன் இருக்கிற கல்லறைய உடைக்கிற ஜன்மம்ணே.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ போயஸ் தோட்டம் பக்கமும், தாயகம் பக்கமும் கொஞ்ச நாளைக்கு போயிடாதீங்கண்ணே!/

அவ்வ்வ்வ்வ்வ். மிரட்டாதீங்க பாஸ்

கிரி said...

"காஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது
அட அதான் ஆயிடிச்சே. பி.ஜி, 4 பாட்டு, விளக்குமாத்து அடியை சேர்த்தா ஃபைட் ஆச்சி, டைட்டில் போட்டா சரி. எதுக்கு தண்டசெலவு. ரொம்ப முக்கியம்டா. கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க. "

ஹா ஹா ஹா ஹா சார் சூப்பர் :-))))))

ஜோதிஜி said...

தடுமாறிய மனங்கள்
வந்து சேர வேண்டும்
சிரிக்காத சிடுமூஞ்சி
படித்துப் பார்க்க வேண்டும்
யோசிக்க வைக்கும் சிந்தனைகள்
படித்தே ஆக வேண்டும்.

நேரு ஸ்டேடியம் அலுவலகம்.

வண்டியில் போகும் போது கூட உங்கள் எழுத்துக்களை நிணைத்து சிரித்துக்கொண்டே பயணிக்கின்றேன்.

இந்த பாணி அப்படியே தொடரட்டும்.

வாழ்த்துகள்