Monday, January 25, 2010

கேரக்டர் -1


ரயில்வே ஸ்டேஷன் மாதிரி ஒரு அலுவலகத்தில் பணிபுரிவது மிகவும் சுவாரசியமான விடயம். மனுசப் பொறப்பில எத்தனை வகையுண்டோ அத்தனையும் காணக்கூடும். ஆஜானுபாகுவாய், அரட்டலான பேச்சுடன் மிரட்டும் மனிதர், ஏதோ ஒரு தவறுக்கு எக்ஸ்ப்ளனேஷன் மெமோ அல்லது ஒரு ‘என்னய்யா வேலை பார்க்கற’க்கு தேம்பித் தேம்பி அழுவார். இருக்கிற இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு ஜந்து எதற்கும் அஞ்சாமல் அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கும்.

நம் தோழர் இரண்டாவது ரகம். நெற்றியில் திருமண். முட்டிவரை ஏற்றிக்கட்டிய பஞ்சகச்சம். மேல்துண்டு போர்த்தியபடி கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருவார். அலுவலக வளாகத்துள் வந்ததும், மஞ்சள் பையில் சுருட்டி வைத்திருந்த சட்டையை போட்டுக் கொண்டு, மிலிட்டரிக்காரன் ரிப்பன் மாதிரி சிவப்பு, நீலம், கருப்பு பேனாக்களைச் சொருகிக் கொள்வார். மேல் துண்டை உதறி மடித்து பைக்குள் வைப்பார். பிறகு தன் அலுவலகம் நோக்கிப் போவார்.

மனுசனோட அலப்பறைக்கு முன்னால் வடிவேலு எல்லாம் காணாமல் போவார்கள். அலுவலகத்தில் கழிவாக பார்சல் வந்த மரப்பெட்டிகளை 5 ரூபாய்க்கு வாங்கி, தானே உடைத்து சும்மாடு கட்டி தலையில் வைத்துப் போக , ரிக்‌ஷாவில் போகலாமே என்று கரிசனப் பட்டவரிடம், அந்த 5 ரூ சேர்த்தா வீட்டருகில் விறகு வாங்க மாட்டேனா? உன்னை தூக்கிக் கொண்டு வரச் சொன்னேனா என்று ஒரு பிடி பிடிப்பார்.

ஆவடி அருகில் ஒரு அத்துவானக் காட்டில் யாருமே இல்லாத இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடிபோன 2ம் நாளே பக்கத்து சவுக்குக் காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதால் தன் உயிருக்கு ஆபத்து. போலீஸ் காவல் வேண்டும் என்று மனு கொடுத்து, வியாபாரி நம்ம ஆளை கிள்ளுக் கீரை என நினைத்து மிரட்ட, ஒரே ஒரு அடி தாங்க மாட்டேன். ஹார்ட் பேஷண்ட். உயிர் போயிடும். 

என் உசிருக்கு ஆபத்துன்னு எழுதிக் கொடுத்திருக்கேன். நான் தடுக்கி விழுந்து செத்தாலும் உன்னைத்தான் பிடிப்பாங்க என்றால் அந்தாள் என்ன செய்வார்? ஒண்ணும் தகராரில்லாம நான் பார்த்துக்கறேன் சாமி, பொழப்பில மண்ணைப் போடாதே என்று சரண்டராகிப் போன கதை பிரசித்தம்.

பெருமாள் கோவிலில் புத்தகம் வைத்துக் கொண்டு உபன்யாசம் செய்பவரிடம், பயபக்தியாக, அடியேன் விக்யாபனம். பகவான் கீதையில், என்று முழ நீளம் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்லி, இதுக்கு அர்த்தம் என்ன என்று தேவரீர் விளக்கவேண்டும் என்பார். 

கண்கள் மேலே சொருக, வியர்த்து ஊத்த அது வந்து என்று தடுமாறி, தண்ணீர் குடித்து, கனைத்து ’இன்னைக்கு நான் அகப்பட்டேனா உனக்கு’ என்று ஹீனமாக பார்த்ததும் மடை திறந்தாற்போல் விளக்கம் சொல்லி, நான் புரிஞ்சிண்டது இப்படி. சரிதானா தேவரீர் சொல்லணும் என்றால் உபன்யாசம் செய்பவருக்கு சாஷ்டாங்கமாக காலில் விழத் தோணுமா தோணாதா?

எஞ்ஜினியரிங் பிரிவில் டிவிஷனல் அக்கவுண்டண்ட் என்ற பதவி எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல. கை சுத்தமில்லாவிடில் நாகமும் சாரையும் போல. பொதுவாக அப்படி போஸ்டிங் கிடைத்த அக்கவுண்டண்டை பாவப்பட்ட ஜன்மமாகத்தான் கருதுவார்கள். நம்ம ஆசாமிக்கு அப்படி போஸ்டிங் வந்ததும் எஞ்ஜினியருக்கு கட்டம் சரியில்லை என்று சிரித்தோம்.

அதுவும் புது அலுவலகம். அடுத்த நாள் திறப்பு விழா. தலைமை அதிகாரிகள் வர இருக்கிறார்கள். மொத்தமாக ஒரு 200 பேருக்கு மேல் வரக்கூடும் என்பதாலும், அதிகாரிகள் என்பதாலும் லட்டு, மிக்ஸர், டிகிரி காபிக்கு ஒரு சமையல்காரரை சொல்லி வைத்திருந்திருக்கிறார் எஞ்சினியர். நம்ம ஆசாமி, பஞ்சகச்சமும், மேல்துண்டுமாக வந்து அலுவலகத்தில் விசாரிக்க, எஞ்சினியர் ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கை காட்டினார்கள்.

அய்யா போய் வணக்கம் சொன்னதும், என்னய்யா நல்லா செய்வியா? ஒரு குறை வரப்படாது எனக் கூற அதெல்லாம் ஒரு குறையும் இருக்காது சார், நீங்களே பார்ப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்படி நோஞ்சானாக ஒன்று என்ன செய்ய முடியும் என்று அதிகாரி சொறிந்தபடி, என்னய்யா நீ மட்டும் வந்திருக்கா? அடுப்பு, கரண்டி ஒண்ணும் காணோம். இங்க வாடகைக்கு வாங்குவியா எனக் கேட்க பிடித்தது சனி.

ஆங்கிலத்தில் என்னல்லாம் மேற்கோள் உண்டோ அத்தனையும் சொல்லி, உருவத்தைப் பார்த்து சமையல்காரன் என்று நினைத்த மாபெரும் குற்றத்துக்கு அடுத்த நாள் அதிகாரிகள் முன்னிலையில் நாட்டாமை என டரியலாக்கி, எல்லாரும் குறைந்த பட்சம் ஒன்றறை வருடங்களாவது குப்பை கொட்ட வேண்டிய அலுவலகத்தில் மூன்றே மாதத்தில் எங்களுக்கு அக்கவுண்டண்டே வேண்டாம் எனக் கதறலோடு திருப்பி அனுப்ப வைத்தவர்.

ரிட்டையர் ஆகும் அன்று மேலதிகாரியைச் சந்தித்து,  தன்னைப் போல் சட்டம் தெரிந்த, ரூல்சை கரைத்துக் குடித்த, எத்தனை பிரிவு உண்டோ அத்தனையிலும் வேலை செய்த (யப்பா..இந்தாளோட முடியல சாமி..மாத்திடுங்கன்னு கதறி கதறி எங்கேயும் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் செக்‌ஷன் செக்‌ஷனாக மாற்றப்பட்டார்) தன்னை பரீட்சையில் தேறாமல் செய்து மார்க் கொடுக்காத அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பரிதாபப்பட்டதை பெருமையாகச் சொல்லி, அனைவருக்கும் ஆசி கூறி சட்டை பட்டனை அவிழ்த்தபடி நடந்தார் அவர்.

Friday, January 22, 2010

உணர்வு மறக்கும் உறவுகள்.

ஆறேழு மாதமிருக்கும். ஒரு நாள் உரக்க என் பெயர் கூறி அழைத்தவாறே என் அறைக்குள் வந்தார் அந்த நப்ர். உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்குடா என்ற ஆத்மார்த்த சிரிப்புடன் கை கொடுத்தார். நீர்க்காவி வேட்டி. தோளில் மூக்குப் பொடி கறையுடன் ஒரு காசித் துண்டு. அழுக்கான சட்டை. கையில் ஒரு துணிப்பை.

ஆடை மட்டுமே அழுக்கு. நெடுநெடுவென்ற உடல்வாகு. மெலிந்த தேகம். மணக்கும் திருநீற்றுடன் 20வயது வாலிபனின் துடிப்போடு இருந்தவருக்கு வயது 80க்கு சமீபம் அல்லது கூட இருக்கலாம்.

தும்பைப்பூ வேட்டியும், ஆர்மிக்காரன் மடிப்பில் மடிப்பு கலையாத ஸ்லாக் ஷர்ட்டும், காலரில் அழுக்குப் படாமல் கைக்குட்டை வைத்தபடி கும்பகோணம் வெற்றிலையும், மூக்குப் பொடி வாசனையும், சித்தநாதன் விபூதியுமாய் மணந்தவரா இவர்?

மைப் பேனா தாண்டி, பால்பென் வந்த காலத்திலும் கட்டைப் பேனாவில் மைப்புட்டிக்குள் விட்டு தோய்த்து காலிக்ராஃப் மாதிரி  எழுதும் அச்சடித்த எழுத்துக்களின் சொந்தக்காரர். ஒரு அடித்தல், திருத்தல், பிழையிருக்காது.

ரிடையரானபின் வேறு ஊரில் இருந்தவர் மகனின் வற்புறுத்தலால் மகனுடன் வந்து விட்டதாகவும், மனு எழுதிக் கொடுப்பது, பத்திரிகையாரிசியருக்கு கடிதம், கன்ஸ்யூமர் கோர்ட் விவகாரங்கள் என்று சோம்பலின்றி உழைப்பதாகச் சொன்னார்.

யாராவது தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்களான்னு வந்தேன். நீயே இருக்க. சிரமம் பார்க்காமல் இதெல்லாம் கொஞ்சம் அட்டெஸ்ட் பண்ணிக் கொடுடா என்று 50-60 காகிதங்களை நீட்டினார். மகன் எப்படி பொறுப்பின்றி வீட்டு வரி, தண்ணீர் வரியெல்லாம் கட்டாமல், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட் கேட்காமல் இருக்கிறான் என்று செல்லமான வாஞ்சையுடன் கடிந்து கொண்டார். அதற்காகத்தான் இவ்வளவும் என்றார்.  எல்லாம் முடிந்து ஆசி கூறி கிளம்பியவரில் தந்தைக்கான ஒரு கர்வமிருந்தது.

இன்று டாய்லெட் சென்று வருகையில் காரிடாரில் மீண்டும் அவர். அருகில் சென்று வணக்கம் கூறியதும் வாடா என்றவரின் குரலில் நடுக்கம். கண்ணில் நீர் கோர்க்க, உதடு துடிக்க, போன 8ம் தேதி சூசைட் பண்ணிண்டிருப்பேண்டா. அரை மணி யோசிச்சேன். இருந்தவரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கலை. செத்துப் போய் போலீஸ் கேசுன்னு என்னால எதுக்கு கஷ்டம்னு இருந்துட்டேன் என்றபோது அதிர்ந்து போனேன்.

எம் பையன் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிட்டாம்பா. நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்காம். வயசான காலத்தில ஒரு மூலையில இல்லாம, எப்போப் பாரு எழுதறேன், படிக்கறேன்னு வீடு முழுக்க பேப்பர். இறைஞ்சி கிடக்காம். ஊர சுத்திண்டு வரன்னு சண்டை போட்டான். வீடு போறலை, மாடிக்கு ஏன் போறன்னு எல்லாம் சண்டை போட்டான்.

கட்டின வேட்டி, பனியனோடு வெளியே தள்ளிவிட்டான். காசு, என் பேங்க் பாஸ்புக், எல்லாம் எடுத்துக்கறேன். மாத்து துணி கூட இல்லாம எங்கடா போவேன்னு கேட்டா உள்ள வந்தா பெல்டால அடிப்பேன்னு பேரனை கூப்பிட்டு பெல்ட் கொண்டுவான்னு சொன்னாண்டா என்று கதறிவிட்டார்.

என் உயரத்துக்கு குறுகி, தோளில் சாய்ந்து கதறுபவரை என்ன சொல்லி நான் தேற்ற? ஏதும் பேசாமல் முதுகை நீவி விட்டபடி குரல் உடைய அழாதீங்க சார். புரிஞ்சிப்பாங்க என்ற போது மெதுவே தலை தூக்கி, போடா! அவன் புரிஞ்சிண்டு என்னாகப் போறது. என் வலி புரிஞ்சதே உனக்கு. உன் ஆறுதல் போறும் போடா.

நான் திரும்ப ஊருக்கு போறேன். வைஃப் பிள்ளையோடதான் இருப்பேன்னுட்டா. நான் 4 பேருக்கு சமைப்பேன். சாமி, பட்டா தர அலைய விடறான் சாமின்னு யாரோ வருவான். என் காலம் போய்டும். திரும்ப உன்னைப் பார்ப்பேனோ தெரியாது. 

தலையில் அடிபட்டு, சித்த சுவாதீனமில்லாத மகள் இருக்கிறாள். பென்ஷனுக்கு நாமினேஷன் கொடுத்துட்டேன். புக்குல எண்ட்ரி போடுன்னா, அந்த நேரம் வரும்போதுதான் மெடிகல் செக்கப் பண்ணி போடுவானாம். டிபார்ட்மெண்ட் ஆஃப் பென்ஷன், ரயில்வே போர்ட், ப்ரெசிடெண்ட்னு எழுதி கிழிக்க மாட்டேன்?

வயசான காலத்தில என்னமா அல்லாட விடறானுங்கடா. எப்பவாவது பேச தோணினா பேசறேன், செல் நம்பர் கொடு என்று வாங்கிக் கொண்டு நடந்தவரின் நடையில் அந்த மிடுக்கும் கர்வமும் காணவில்லை. தன்னம்பிக்கை மட்டும் குறையவேயில்லை.

நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.


Wednesday, January 20, 2010

பட விமரிசனப் பஞ்சாயத்து -1

(பொங்கல் படங்களை விமரிசனம் செய்து டரியலாக்கியாதால் கடுப்பான திரையுலகம் பஞ்சாயத்துக்கு தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. வழக்கம் போல் அதிகப்பிரசிங்கித் தனமான கற்பனை மற்றும் உரிமை. எப்பவும் போல மன்னிச்சுடுங்க எஜமான்)

ரா.ர: எங்கப்பா தலைவர் வர நேரமாச்சி இன்னும் பதிவருங்க ஒருத்தர் கூட வரலை.

மு.காளை: தல! கெளம்பிட்டாங்களாம் தல. வர வழியில ஓட்டேரி முக்கு சந்துல ஒரு மெஸ்ல இட்லி வடகறி சூப்பர்னு கேபிள் அங்க எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டாராம். வந்துட்டே இருக்காங்களாம். தோ வந்துட்டாங்க.

ரா.ர: வாங்க வாங்க. பதிவர்லாம் அந்த பக்கம் உக்காருங்க.

(கேபிளார் எப்பவும் போல் ஆட்டோவில் வந்து லேட்டாக வருகிறார்.)

ரா.ர: ஏப்பா காளை. இவரு படவுலகா? பதிவுலகா?

வடிவேலு: நான் சொல்றேன் நான் சொல்றேன். ரெண்டும். இவருதான் கேபிள் சங்கர். கவிதையெல்லாம் எழுதுவாரு. தோ எண்டர் ஆய்ட்டாரு. கூப்பிட்டு நம்ம பக்கம் இழுத்து விடுங்க பாதி செயிச்சிட்டா மாதிரி.

ரா.ர: ஓ. அதனாலதான்  இவரு  எண்டர் கவியா?

கேபிள்: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். அண்ணே! ரொம்ப சந்தோஷம்ணே. நீங்களாவது எண்டர் கவிதைய புரிஞ்சி வெச்சிருக்கீங்களே.

தண்டோரா: தோ! தோ! இந்த பக்கம் வாங்கண்ணே. இப்புடியே அந்த பக்கம் போனா அப்புறம் எதிர் இடுகை போடுவேன்.

கேபிள்: இருப்பா இருப்பா. நான் எந்த பக்கமும் இல்லை. நடுவில. நியாயமாதான் பேசுவேன்.

ஆ.வீ: நியாயம் பேச தலைவர் உந்தி. வேற யாரும் நியாயம் பேச அருகதை உள்ளதா என சிந்தித்து....சரி சரி. கட்சி மீட்டிங்னு நினைச்சிட்டேன். இதோ தலைவர் ஒச்சிந்தி..

பாலாசி: அய்யோஓஓ(மயங்கி விழுகிறார். கதிர் பண்ணாரி அம்மன் திருநீறு பூசி, தம்பி வேணாம்னா கேக்காம நமீதாவ பார்க்கணும்னு முன்வரிசையில வந்தா இப்புடிதான்.பின்னாடி போய் உக்காரு ராசா)

ஆ.வீ:ஏமாய்ந்தி?

கதிர்: அது ஒண்ணுமில்லீங். ஒரு நாள் பவர்கட்டுல வீட்டுக்கு போயிருக்காரு ராத்திரி. டி.வி குடுக்க போறீங்கன்னு உங்க கட் அவுட் பார்த்து பேய்னு பயந்துட்டாரு. அப்பல இருந்து உங்க ஃபோட்டோ பார்த்தாலே இப்புடித்தான்.

ஆரூரன்: ஆமா. பாலாசி. நீ இங்க வா. நான் அங்க வரேன்.

பாலாசி: அட இவரு வேறங்ணா. இடுகை படிக்கப் போனாதான் பின்னாடியே வராருன்னா இங்கயும் போட்டியா?

ஆ.வீ: தலைவர் ஒச்சிந்தி. வாழ்க!

தலைவர்: வணக்கம். வணக்கம். இதாருப்பா நடுவில எனக்கு எதிரா இன்னோரு சேர் போட்டது. அம்மா வராங்களா?

ஆ.வீ: லேது லேது. அது கேபிளாருக்கு. அவரு நியாயமா ரெண்டு பக்கமும் சேராம இருக்காராம்.

தலைவர்: அன்பு உடன் பிறப்பே. அண்ணா அன்றே சொன்னார். நன்றே சொன்னார். நாட்டாமை என்று ஒன்று உண்டென்றால் அது தம்பி...

ஆ.வீ: தலைவா! நீங்கதான் துண்டு போட்டிருக்கீங்க. நீங்கதான் நாட்டாமை. டவுட்டே லேது.

தண்டோரா: ஏன் கேபிள். அப்போ சொம்பு...

கேபிள்: (சிரிப்பை அடக்க முடியாமல்) தலைவரே. அடக்கி வாசிங்க. போகும்போது கவனிச்சிக்கறேன். அய்யோ சாமி முடியல..

ரா.ர: இவங்கல்லாம் பதிவருங்க. இவரு கேபிள் சங்கர். குறும்படம் எல்லாம் எடுத்திருக்காரு. அடுத்ததா படம் எடுக்க போறாரு. அதனால திரையுலகத்தை

தண்டோரா: அல்லோ. இந்த கதையெல்லாம் வேணாம். அவர் பதிவ பார்த்தீங்களா? பதினெட்டே நாளில் எவ்ளொ ஹிட் வாங்கியிருக்காருன்னு.. அதெல்லாம் விட அவர் எங்க கூட இருக்கிறப்பதான் யூத்தா இருப்பாரு. உங்க மேக்கப் கூட்டத்துல அந்த இமேஜ் போய்டும். சினிமால எண்டர் கவிதை எடுக்க முடியுமா? வந்துட்டாரு..பதிவர் கேபிள்யா. பதிவர் கேபிள்.

கார்க்கி:மி த ஃபர்ஸ்ட். கலக்கிட்டீங்க தலைவா

கேபிள்: தண்டோரா. :))

வானம்பாடி: அசத்தல்

டி.வி.ஆர் :  :))

பட்டர்ஃப்ளை சூர்யா: தலைவா! பிரமாதம்.

தலைவர்: இருங்கப்பா இருங்கப்பா. என்ன இது

ரா.ர: இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க.

தலைவர்: ஹூம். நம்ம தொண்டனுங்க இவ்ளோ சுறுசுறுப்பா இருந்தா எவ்ளோ காசு மிச்சம்.

ஆ.வி.: தலைவரே. இவங்க இண்டிக்கி பவர் கட் பண்ணிட்டா? இடுகை போட முடியாதில்ல. எப்புடீஈஈ

தலைவர்: முதல்ல உன் பவர் கட் பண்ணனும் ஓவரா ஊத்துற. சரி சரி! இப்போ என்ன பிரச்சன அத சொல்லுங்க.

ரா.ர: அய்யா.. பொங்கலுக்கு அய்யா மனசிறங்கி 5 காட்சி நடத்தலாம்னு அனுமதி குடுத்தீங்க. ராத்திரி ஒன்னரை மணிக்கு படம் முடிஞ்சி 2 மணிக்கு இடுகை போட்டு கிழிக்கிறாங்கய்யா. 5 காட்சிக்கு 25 விமரிசனம்லாம் டூ மச்சுங்கய்யா.

ரஜினி: அய்யா! நா சொன்னேன். திருட்டு விசிடி நல்ல விளம்பரம் உடனே ரிலீஸ் பண்ணுங்கன்னு. இவங்க அத விட வேகமா இண்டர்வல்லயே பொட்டி தட்டி பாதி படம் போர் மீதி பட விமரிசனம் தொடரும்னு போடுவாங்க போலய்யா. அடங்க மாட்றாங்க.

தலைவர்: இருங்கப்பா. முதல்ல ஒரு ஒரு படமா சொல்லுங்க. முதல்ல யாரு

ரா.ர: ஆயிரத்தில் ஒருவன்.

தலைவர்: ஐ ஊத்திகிச்சா? அம்மையார் படம் ஊத்திகிச்சா. உய் உய் அ உய்.

ரா.ர: தல தல. இது அதில்ல. இது செல்வராகவன்

தண்டோரா: ஆஆஆ. செல்வா எங்க எங்க! நான் கட்டி பிடிச்சி பாராட்டணும் எங்க?

செல்வா: அய்யாங். எம்பேண்டு. புடிங்க புடிங்க அவர.

ரா.ர. பாருங்க தலைவா! பய புள்ள எப்புடி பயந்து போயிருக்கு. விமரிசனம் எழுதறேன்னு அநியாயம் பண்றாங்க தலைவா.

(தொடரலாமா)

Tuesday, January 19, 2010

பொழைக்கத் தெரியணும்...

வாழ்க்கையில் கட்டம் சரியில்லாமலோ, விதியோ, இதெல்லாம் யாரு நம்புறாங்கறவங்களுக்கு ஏன்னே சொல்லத் தெரியாமல் ஏதோ ஒன்றாலோ நடக்கும் சில நிகழ்வுகள் நம் மனத்தில் இவருக்குப் போய் ஏன் இப்படி நடந்தது என உச்சுக் கொட்ட வைக்கும்.

1975 முதல் 1978 வரை இந்திராகாந்தி அம்மையாரால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட காலம் அது. உண்மையில் அரசுத்துறைக்கு பொற்காலம் அது. இரயில்வேத் துறையில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.  வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு, பங்கு பெறுபவர்கள் வேலை நீக்கம் செய்யப் படுவார்கள் என்று நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என தொழிற்சங்கத்தால் தடுக்கப்பட்டது.

சொந்தக் காரணங்களுக்காக திருப்பத்தூர், திண்டிவனம், நெல்லூர் என்று 100-150 கி.மீ.க்கு அப்பாலிலிருந்து தினசரி வந்து போகும் தொழிலாளர்கள் அதிகம். வேலை நிறுத்தம் காரணமாக வர முடியாமல் போக நேரலாம் என்று அலுவலகத்திலேயே பெரும்பான்மையானோர் தங்கிவிட்டனர். திடீரென தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அலுவலக வாயிலில் கூடி கோஷம் எழுப்புவதும், வேலைக்கு வருபவர்களைத் தடுப்பதும், போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு போவதும் தினசரி வழமையாகிப் போனது.

சக தொழிலாளர் ஒருவரும் அவர் சகோதரர்கள் மூவரும் செங்கல்பட்டிலிருந்து தினசரி வந்து செல்பவர்கள். அவர்களும் அலுவலகத்தில் தங்கியவர்கள். நண்பர் மிக நேர்மையான திறமையான அலுவலர். அலுவலக நேரத்தில் சீட் தேய பணி செய்தும், பயண நேரத்தில் முடிக்க முடியும் என வீட்டுக்கு அள்ளிக் கொண்டு செல்பவர். அதிகாரிகளிடத்தில் மிக நல்ல பெயர் எடுத்தவர்.

வேலை நிறுத்த நாள் ஒன்றில் அமாவாசை வந்துவிட அலுவலக நேரத்துக்கு முன் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று, யாரோ ஒரு ஏழைக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு அலுவலகம் செல்ல வருகையில் கதவடைப்பு போராட்டம் துவங்கிவிட்டிருந்தது. இத்தனைக்கும் அலுவலகத்துக்கும், கோவிலுக்கும் 50மீ தூரம் கூட இல்லை. நண்பர் பதைத்துப் போய் செய்வதறியாமல் நின்றிருக்க, பின்பக்கமிருந்து வந்த போலீஸ் கதற கதற இவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதால் பணி நீக்கம் செய்யப் பட்டார்.

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து, பங்கேற்காதவர்களை ஊக்குவிக்கிறேன் என அரசுத் தரப்பு அவர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு வேலை அல்லது அதற்குத் தகுதியற்றோருக்கு ஒரு இன்கிரிமெண்ட் என அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் பழைய சர்வீஸ் கணக்கெடுக்கப் படாமல் புதியதாக பணி நியமனம் என்ற எலும்புத்துண்டு நீட்டப்பட்டது.

நண்பரும் அப்படி கிட்டத்தட்ட 25 வருட பணிமூப்பைத் துறந்து வேலைக்குச் சேர்ந்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம் என்பதால் பழைய பணியும் வேலை நிறுத்ததில் பங்கேற்றவர்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும். வேலை நிறுத்தக் காலம் மன்னிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நண்பரைத் தவிர அனைவரும் பயனடைந்தனர்.

காரணம் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற பாவம் (அலுவலக நேரத்துக்கு முன்பே) அலுவலகத்தில் முறைகேடாக கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றமைக்காக பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்.

அடுத்த 15 வருடங்கள் தினசரி நரகம் ஆனது அவர் வாழ்க்கை. அதிகாரிகள் தரப்பில் எவரும் இவருக்காக எதுவும் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருப்பினும், அதற்கு மேல் அவருக்காக பரிந்துரைக்கவோ மேல் முறையீட்டில் உதவவவோ எவருமில்லை என்பதே உண்மை. அழுது, கெஞ்சி அலுவலக நடைமுறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் ஒரே பதில் முடியாது என்பதே.

இருந்த ஒரே வழி, முதல் குடிமகனின் மன்னிப்பு. தூக்கு தண்டனைக் கைதிகளின் கடைசி நம்பிக்கைத் துளியாக இருக்குமே அந்த ஒரு வழி. பணிமூப்புக்கு 3 மாதம் முன் நேர்மையா உழைச்சேன், நல்லகாரியம்னு சொன்னதை செய்தேன், எனக்கு இதுதானா வழியென்று அழுதபடியே தயங்கித் தயங்கி கையொப்பமிட்ட மனு, பத்து நிமிடத்தில் காமாட்சி அருளால் ஏற்கப்பட்டது.

சரி! இது உணர்த்துவது என்ன?

அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?
ஆ)15 வருஷமா சரியில்லாத கட்டம் ஏதோ ஒரு கட்டத்துல சரியானதா?
இ)நேரத்தோட ஆளு அம்பு தேடாம பொழைக்கத் தெரியாம இருந்து அவஸ்தைப்பட்டது அவர் தப்பு என்ற யதார்த்தமா?

Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன், நாணயம்--விமரிசனம்(இல்லை)

(பல) ஆயிரத்தில் ஒருவன்

அல்லோ. கோவிச்சிக்காதிங்க சார். இது சினிமா விமரிசனம் இல்லை. ஆனா அத விட த்ரில்லிங்கான கதை. இல்லன்னா வருஷா வருஷம் ரிலீஸ் ஆகியும் கொஞ்சம் கூட தொய்வில்லாம கலக்‌ஷன் கட்டுமா?

இதுவும் 3 வருஷம் தயாரிப்பில இருந்து பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கும் படம்தான். ரொம்ப சில பேருக்கு குறும்படம் மாதிரி பட்ஜட்ட விட கம்மியா முடிஞ்சிடும்.  பல பேருக்கு இது பட்ஜெட்டெல்லாம் கடந்து கிட்டதட்ட இருக்கிறதெல்லாம் தொலைச்சும் கடனாளியாக்கி விட்டுடும்.

கதைன்னு எடுத்துண்டா அரைச்ச மாவுதான். ஆனா எந்த ஆங்கிலப் படத்துலயும் இந்த மாதிரி காட்சி வந்திருக்காதுங்கறதால தழுவலா, காப்பியான்னு சந்தேகமே இல்லாம நூறு சதம் சுத்தமான தமிழ்ப் படம். தொழிற் கல்விங்கற பசங்களோட குல தெய்வத்த தனியார் கல்லூரி கடத்திட்டு போய்டுறாங்க. அரசாங்கம் ரெண்டு பக்கத்துக்கும் நட்பா இருந்து டென்ஷன கூட்டுறதால விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

பெத்தவங்க என்னல்லாம் தில்லாலங்கிடி வேல பண்ணி அந்த குலதெய்வத்த மீட்டுக் குடுக்கறாங்கங்கறதுதான் கதை. அரைப்பரீட்சை வரைக்கும் பர பரன்னு போய்ட்டிருக்கிற படம், அப்புறம் கேபிள் கட், சினிமா நாட் அலவ்ட், படி படின்னு டார்ச்சர், கம்பேரிசன், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கா இல்லையான்னு பல குழப்பங்களில் சிக்கி அலுப்பு தட்ட வைக்கும்.

அட்டு ஃபிகர்னு ஓரம் கட்டின பொண்ணும், சடைன்னு கண்டுக்காம விட்ட பையனும் பேய் மாதிரி படிச்சி 70 மார்க்ல இருந்து 90னு தாவி டரியலாக்கி கவுக்கிற காட்சி மெய் சிலிர்க்கும். ஊத்திகிட்டா வம்புன்னு முன்னெச்சரிக்கையா டொனேஷன் குடுத்து சீட் வாங்கின அப்பாக்கள நல்ல மார்க் எடுத்து கவுக்கறதும், கண்டிப்பா 95 வரும்னு நம்பி இருக்கிற அப்பாங்கள 80-85 எடுத்து இன்னும் கடனாளியாக்கி சீட்டுக்கு அலைய விடுற எதிர் பாராத திருப்பங்கள் சீட் நுனிக்கு கொண்டு வரும்.

எக்ஸாம் நெருங்கி வர சமயத்துல பொறுப்பா படிக்கிறது பத்தி அப்பா அம்மாக்கள் பேசுற பாஷை புரியாம பசங்க மட்டுமல்ல அந்த வயசு பசங்க இல்லாத பெற்றோர்களும் அரைப் பைத்தியமா நெளியறது மைனஸ்.

ஒரு வழியா அட்மிஷன் வாங்கி கதை முடியற நேரத்துல கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்விக் குறியோட முடிக்கிறது அடுத்த பாகம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும்.

மொத்தத்துல எப்படியும் கல்லாக் கட்டுறாங்க காலேஜ் நிர்வாகம் என்பது தெரிஞ்ச விஷயங்கறதால, அரசே எவ்வளவுன்னு சொல்லிட்டா பட்ஜட் எகிறும்னு திகில் இல்லாம இருக்கலாம். அரசு ஒரு தீர்மானம் இல்லாம குழம்பியிருக்கிறது நல்லாவே தெரியுது.
~~~~~~~~~~~~~~~~~~~

நாணயம்

  பையனோ பொண்ணோ ஆறாம்பு போனதுமே ஐ.ஐ.டி. கனவில சகலமும் துறந்து படிப்பு படிப்புன்னு சாவுறவங்க அப்பா அம்மா. ஒம்பதாம்பு வந்ததும் 2 லட்சம் கட்டி அகர்வால் க்ளாஸ்ல சேர்ந்து கட் அடிச்சி, மொத டெஸ்ட்ல முட்ட மார்க் வாங்கி இதுக்கு மேலயும் ஐ.ஐ.டின்னா ஐ.டி.ஐக்கு கூட போகமாட்டேன்னு பசங்க ப்ளாக் மெயில் ஆரம்பிக்கறப்ப படம் சூடு பிடிக்கும்.

அய்யா அம்மான்னு கெஞ்சி ஆல் இந்தியா ட்ரிப்பிள் ஈயாவதுன்னு இறங்கி வந்து அங்கயும் தொங்கல்ல விடுற டென்ஷன் ஒரு பக்கம், ஹாஸ்டல்ல விட்டா கெட்டு போயிடும், என்னால பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு தங்கமணி செண்டிமெண்ட்னு  திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை.

அதுவும் கடைசியில எவனோ ஒரு போக்கத்த பய சிங்கிள் விண்டோ சிஸ்டம் வேணும்னு கேஸ் போட்டு அரசு ஒரு பக்கம் ஆதரவாகவும், மறு பக்கம் தனியார் கல்லூரிக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டதும் அடுத்தது என்னன்னு பதற வைக்கும்.

படி படின்னு உசிரெடுக்கிற அம்மா அப்பா கிட்ட, இது புரியலைன்னு கால்குலஸ் கணக்க நீட்ட, அவங்க இதெல்லாம் நாங்க படிக்கிறப்போ கண்டு பிடிக்கவே இல்லைன்னு சொல்லி சமாளிக்கிற சீன்ல அதிரும். கடைசியில 100 கி.மீ தூரத்தில இருக்கிற காலேஜ்ல கம்ப்யூட்டர் எஞ்ஜினீரிங் சீட் வாங்கிட்டு வரும்போது கடை போட்டிருக்கிற கம்ப்யூட்டர்காரன்  100ரூ கட்டினா லேப்டாப், மாசம் 3000ரூ 20 மாசம் கட்டினா போதும்னு பிட்ட போட, அது இல்லைன்னா எப்படி படிக்கிறதுன்னு பசங்க மிரட்ட, விதியேன்னு கடன் பத்திரத்துல கையெழுத்து போட்டு தளர்ந்து நடந்து வர காட்சியில விசும்பல் சத்தம் கேக்க முடியுது.

குறைன்னா, ஆஃபீஸுக்கு லீவ் போட்டு அம்மாக்காரி ஹெல்ப் பண்றேன்னு முட்ட முட்ட சாப்பாடு போட்டு தூங்க விடாம படின்னு சொல்றது, கேபிள் கட் பண்றது, நண்பர்கள் கூட பேச விடாம தடுக்கிறது, மத்த பசங்க எவ்ளோ மார்க்குன்னு சாவடிக்கறதெல்லாம் படத்தின் விறுவிறுப்புக்கு தடை. மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்.

__/\__

Thursday, January 14, 2010

பட்டணத்துப் பொங்கல்.

நானும் பொறுமையா இருந்து பார்த்தேன். அடக்கமாட்டாம வருது. ஆளாளுக்கு கிராமத்து பொங்கல் வைபவம், அதும் மாட்டுப் பொங்கல் பத்தி அளந்து விடுறாங்க. என்னடா, பாவப்பட்ட ஜன்மங்க பட்டணத்துல பொழைக்குதுங்களே, நல்ல நாளும் அதுவுமா ஏங்க விடுறமேன்னு தோணுதா?

சரி எழுதட்டும், வேணாங்கல. எல்லாரும் பெரிய பெரிய இடுகையா போட்டு, மாடு எழுந்திருக்கிறதில இருந்து அது தூங்க போற வரைக்குமா எழுதுவாங்க? இங்க இருக்குற மாடு படிச்சா இப்புடி ஒரு பொறப்பான்னு சூசைட் பண்ணிக்கும்.

இங்கயும் மாடு இருக்கு. இங்கயும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவாங்க தெரியுமா? கறவை மாடுன்னா ஒரு மாதிரி, வண்டி மாடுன்னா ஒரு மாதிரி. கறவை மாடுன்னா, மாட்டுக்காரரு, பாலெல்லாம் ஊத்திட்டு வந்து, நாஷ்டா சாப்டு, கடைக்கு போய் பெயிண்ட் டப்பா, கலர் பேப்பரு, பலூனு, புது நைலான் கயிறு எல்லாம் வாங்கிட்டு வருவாரு.

பத்து மணிக்கு மேல மாடுங்கள அவுத்து தெருவில விடுவாரு. தெரு தாண்டி போகாம காவலுக்கு ஆளிருக்கும். இவரு தொழுவத்த (ம்கும். அந்த காலத்துல  தொழுவம் அளவுதான் இவரு மனை) அது இருக்கும் ஒரு ஓரம், அத சுத்தம் பண்ணுவாரு.

அப்புறம் மாட திரும்ப கொண்டுவந்து கட்டி, நாத்தம் புடிச்ச பெயிண்ட் அடிப்பாரு கொம்புக்கு. அது முடிய சாப்பிட போவாரு. அப்புறம் ஒரு தூக்கம் போட்டுட்டு கொழால ட்யூப் கனெக்‌ஷன் குடுத்து கழுவி விடுவாரு. இதமா வைக்கோல்ல தேய்க்கிறதெல்லாம் இல்ல.

அதான் இப்ப வண்டி கழுவற ட்யூப் 100ரூன்னு விக்கிறானே அதில சுள்ளுன்னு அடிச்சி கழுவுவானுங்க. 4 மணிக்கா ஊசி போட்டு, ஒட்ட கறந்துட்டு, பால் ஊத்த போவாரு. அவரு சம்சாரம், பொட்டு வச்சி விட்டு, காஞ்ச வைக்கோல் பிரிச்சி போடும். பால் காரரு பால் ஊத்திட்டு டாஸ்மாக்குல ஊத்திகிட்டு வருவாரு.

ஒரு பக்கம் பால்காரம்மா பொங்கலுக்கு (ரேஷன் அரிசிலதானுங்கோ) வழி பண்ணும். இவரு கயிறு மாத்தி, பலூன் கட்டி, எல்லாம் முடிய அந்தம்மா பொங்கல் ரெடின்னா, கட்டுன படியே, கற்பூரம் சுத்துவாங்க. ஒரு ஒரு உருண்ட பொங்கல் ஊட்டுவாங்க.

அப்புறம் ஒரு கதர் துண்டு கழுத்துல இல்லன்னா கொம்புல கட்டி, வாடிக்கை வீட்டுக்கு ஓட்டிகிட்டு போவாங்க. அங்க வெல்லம், சில பேரு அருகம்புல்லு 4 தழைன்னு குடுப்பாங்க. மொதலாளிக்கு காசு குடுப்பாங்க. இப்போ, வீதில போனா போலீசு புடிக்குமாமே. அந்தக் காசையும் புடிங்கிக்குறான்னு மெயின்ரோடு பக்கம் போகாம முட்டுசந்து, மூத்திர சந்தாதான் கூட்டிட்டு போறானுவ மொதலாளிங்க.

அப்புறம் கொண்டாந்து கட்டிட்டு, திரும்ப டாஸ்மாக் போய் ஊத்திகிட்டு உழுந்து கெடக்கறதோ ஊட்டுக்கு வரதோ அவங்க வசதிக்கு பண்ணுவாங்க. வண்டி மாடு இன்னும் பாவம். லோடடிக்கற நேரத்துல பெயிண்ட் அடிப்பாங்க கொம்புக்கு. இல்லன்னா அதுவுமில்ல.அது 4 மணி வரைக்கும் வண்டி இழுத்துட்டு வந்து, அத பேருக்கு கழுவி விடுவாங்க.

அப்புறம் மூக்கணாங்கயிறு மாத்தி, அரை முழம் பூ கொம்புல சுத்தி, கற்பூரம் காட்டி, கட்டி போட்டு, அய்யா கெளம்பிடுவாரு தண்ணியடிக்க. அதுங்களுக்கு உண்டகட்டி பொங்கல் ஒரு வாய், அப்புறம் வைக்கோல்.



அடுத்த நாள், காலையிலயே கிளம்பிடுவாங்க. ஒரு பஸ் அளவு ஜனம் ஏறிக்கும் வண்டியில. தொங்கட்டான் தொங்கட்டான்னு பீச்சு, பொருக்காட்சின்னு கூட்டிட்டு போவானுங்க. எதோ, அதுங்க புரட்சிய காட்ட போலீச பார்த்ததும் ஒன்னுக்கு போறது, சாணி போடுறதுன்னு அழிம்பு பண்ணிகிட்டே போவும். அதுங்க பாஷைல இன்னிக்கு மாமூல் போச்சான்னு நக்கலடிக்கும் போல.

மாடு இல்லாத மாடுங்க. அட மனுசப் பன்னாடைங்க சிலது இருக்குங்க. என்னமோ அதுங்களுக்குதான் பொங்கல் மாதிரி, ரயிலு, பஸ், காலியா வர லாரின்னு ஏறிகிட்டு பொறுக்கித்தனம் பண்ணிகிட்டு பீச்சு, பொருட்காட்சி, தியேட்டர்னு வருவானுங்க.

ரயில்னா இவனுங்க அப்பன் ஊட்டு வண்டி மாதிரி, டிக்கட்டெல்லாம் வாங்க மாட்டானுங்க. மப்புல மேல சாயரது, கொஞ்சம் ஏம்பான்னா கும்பலா சேர்ந்து ரவுசுடுறதுன்னு அழிம்பு பண்ணுவானுங்க. பஸ்ஸுன்னா சர்ர்ர்னு போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்திடுவானுவன்னு மாறி மாறி குரங்கு மாதிரி தாவிகிட்டு, ஜன்னல் வழியா கிள்றது, அலறினா ஓடுற பஸ்ல இருந்து குதிச்சி வேற பஸ்ல தாவறதுன்னு குஜாலா போவானுங்க.

நாள் ஃபுல்லா பொறுக்கிட்டு, பெரிய சாதனை மாதிரி கத்திகிட்டு, வந்த மாதிரியே திரும்புவானுங்க. அப்புறம் டாஸ்மாக்கு, தெருவோர பரோட்டா கடைல தீனி, கோஷ்டி சண்டைன்னு கலகலப்பா போகும்.

ரீஜண்டா இருக்கிறவங்க, டி.வி. பார்த்துகிட்டே, பால்கனில பொங்கல் வெச்சி, ரகசியமா பொங்கலோ பொங்கல்னு பானைக்கு சொல்லிட்டு, ஏப்பி பொங்கல் எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. சாயந்திரம், கரும்பு சீவி, சின்ன சின்ன துண்டு போட்டு வச்சிகிட்டு, டிவி பார்த்துகிட்டே சாப்புட்டு, நியூஸ் பேபர்ல துப்பி, இருட்டினதும் தெருவுல போட்டுடுவாங்க.

சினிமாக்கு போறவங்க போவாங்க. போவாதவங்க டி.வில சேனல் மாத்தி மாத்தி சினிமா பாப்பாங்க. எப்புடியோ, நாங்களும் கொண்டாடுவம்ல பொங்கலு! அலட்டாதீங்கடி!

Wednesday, January 13, 2010

ஏக்கம்..


பெட்டைக் குயிலோசைக்கு
எசபாட்டாய் ஒற்றைக் குயிலோசை
மரங்களெல்லாம் தாண்டி
மனம் மாற்றிக் கொண்டன..

ஏனோ இப்போதெல்லாம்
ஒற்றைக் குயிலின்
உரத்த ஓசையில்
மற்றக் குயில் அடங்கியே போகிறது

எப்போதேனும்
சேர்ந்து கூவிடினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனிமையும் தவிப்பும் மட்டுமே
துணையான நாட்கள் அவை

கருவேம்புக் கஷாயம்
கால்கடுக்க நடைப் பிரதட்சணம்
கண்ணன் கோவிலில் தொட்டில்
கடும் விரதம் பல நாள்

மாரியாத்தா கோவிலில் மண்சோறு
மலையேறி முருகனிடம் மடிப்பிச்சை
மாதம் தவறாமல் செக்கப்பும் மருந்தும்
மலடி என்றதோர் அடைமொழியும் கூட

மருந்து பலித்ததோ
மாயம் நிகழ்ந்ததோ
அவள் மலர்ந்தாள்
அவளும் மலர்ந்தாள்

அம்மா பாரும்மாவும்
அண்ணா அடிச்சிட்டாம்மாவும்
அலுத்துப் போன ஒரு நாளில்
அனிச்சையாய் சொடுக்கியது நாக்கு

இந்தச் சனியனுங்க தொல்லையில்லாம
எங்கயாவது தனியா நிம்மதியா தொலையணும்!

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

Tuesday, January 12, 2010

தேடுங்கள் கிடைக்குமென்றார்..




ஆல் இந்தியா ரேடியோவில் 70-80 கால கட்டத்தில் காலை 7.00 - 7.15 ஒரு கர்னாடக இசை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். அப்புறம் இரவில் ரஸிக ரஞ்சனி என்று நேயர் விருப்பமாக வாரம் ஒரு நாள் (கிழமை கவனமில்லை) கர்னாடக இசை ஒலிபரப்பாகும். இரண்டுமே ஒலித்தட்டுகளிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள்.

ஒரே ஒரு நிகழ்ச்சி கூட தவறவிட்டதில்லை. சில நாட்களில் கீறல் விழுந்த இசைத்தட்டால் ஒலிபரப்பு தடைபட்டாலும் சுனில் கங்கூலியின் எலக்ட்ரானிக் கிடார் இசை மனதைக் கொள்ளை கொள்ளும். அருமையான மிகப் பழைய இசைக் கலைஞர்கள் தண்டபாணி தேசிகர், பி. ராஜா அய்யங்கார், அரியக்குடி, முசிறி சுப்ரமணியம் ஆகியோர் அறிமுகமானது அப்போதுதான்.

இசைவிழாவின் நேரடி ஒலிபரப்புகள், சென்னை ஒன்று, இரண்டு அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். அப்போதெல்லாம் வானொலி என்ற புத்தகமும் வரும். நிகழ்ச்சி நிரல்கள், கலைஞர்களின் படங்கள் என்று. வாங்கி வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் இருந்தது. அந்தப் படங்களை வெட்டி வைத்து ஆல்பம் கூட தயார் செய்து  வைத்திருந்தேன்.

ஆகாஷ்வாணி ரேடியோ சங்கீத் சம்மேளன் நிகழ்ச்சி மூலம் இந்துஸ்தானி இசையும் மனதை ஈர்த்த காலம் அது. எந்த ஔரங்கசீப் பொறுப்பேற்றதோ தெரியாது. எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது. மெல்ல மெல்ல இசைத்தட்டுக்கள் அரிதாகி, ஒலி நாடாக்கள் அறிமுகமானது.

ஒலித் தட்டிலிருந்து ஒலி நாடாவுக்கு மாற்றித் தருவது ஒரு மிகப் பெரிய வியாபாரமாய் கால் ஊன்றத் துவங்கியது. வாக்மென் வாங்கிய காலத்தில் தி.நகருக்கு வாரா வாரம் படை எடுப்பது வழமையாகிவிட்டிருந்தது. ரங்கநாதன் தெருவில் கர்னாடக இசைத் தட்டுகள் அதிகமாக இருக்குமென்பதாலும், 12ரூ 15 ரூக்கெல்லாம் தெருவோரம் தேடினாலும் கிடைக்காத பாடல்களின் பதிவுகள் கிடைக்குமென்பதாலும் கூடுதலாக காய்கறிகள் வாங்கும் வேலையும் முடியுமென்பதாலும் அரை நாள் சந்தோஷமாக இதில் போய்விடும்.

என் நண்பனுக்கு பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் மேல் காதல். அது ஏனோ சென்னையில் புதுப் பாடல்களுக்குத்தான் மவுசு. பழைய பாடல்கள் ஒரு சில இடத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும். பழைய பாடல்களுக்கு சொர்க்க பூமி ஈரோடு மற்றும் சேலம். நண்பர் ஞாயிறு காலை கோவையில் கிளம்பி ஈரோடு போய் கடை பிடித்து பாடல்களை எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவார். அடுத்த ஞாயிறு அடுத்த லிஸ்ட் கொடுத்து போன முறை கொடுத்ததைக் கொண்டு வருவார்.

இன்றும் அவரிடம் உள்ள பழைய பாடல்கள் பொக்கிஷம். சரி இந்த ராமாயணமெல்லாம் எதுக்குங்கறீங்களா. ஒரு தேடலுங்க. முதல்ல சொன்னேன் பாருங்க 7:00 - 7:15 அதில அடிக்கடி கேட்டது. என்னைக்காவது இந்த பாட்டை எனக்கு சொந்தமாக்கிக்கணும்னு ஒரு சபதம்.

அலையாத இடமில்லை. ஊரு ஊரா சொல்லிப் பார்த்துட்டேன். எனக்காக ப்ரியாவும் ரிகார்டிங் கம்பெனி, வேற தெரிஞ்சவங்க கிட்டல்லாம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டுச்சி. எங்கயும் சாதகமான பதில் இல்லை. சும்மா இல்லைங்க என்னுடைய 35 வருஷ தேடலுங்க இது.

இப்பதான் பதிவுலகம் பெரிய சக்தியா இருக்கே. கிடைக்கும்னு ஒரு நம்பிக்கை. எந்த தேசத்துல இருக்கிற சாமியாவது வரம் குடுக்காதான்னு ஒரு நம்பிக்கை. தகவல் இதோ:

பாடல்: தியாகராஜரின் ‘கலிகியுண்டே கதா’
ராகம்: கீரவாணி
கலைஞர்: திரு டி. என். கிருஷ்ணன்.
கருவி: வயலின்
இசைத்தட்டு: கொலம்பியா எல்.பி. ரிகார்ட்.


மக்கா, நெட்ல தேடிட்டு தோ புடி மோனேன்னு பட்டுன்னு லிங்க் குடுக்காதீங்க. அதே டி.என்.கிருஷ்ணன், மகள் விஜி கிருஷ்ணன் மகனுடன் வாசிச்சது இருக்கு. நான் தேடுறது சோலோ. கொஞ்சம் பெரிய மனசு வைங்க சாமிகளா! புண்ணியமா போகும்.

அப்படி ஒரு கீரவாணி கேட்கலை இது வரைக்கும். ஒரு வேளை அவரே இதைப் படிப்பாரோ, அவர் மகனோ மகளோ படிப்பாங்களோ. இப்படி ஒரு பைத்தியம் இருக்கியாப்பா. இந்தான்னு குடுப்பாங்களோன்னு ஏக்கத்தோட கேக்குறேன்.



Monday, January 11, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.3


 யார்ப்பா அது? எது கையிலயோ கிடைச்ச தேங்கான்னு கமெண்ட் உடுறது

 
துணிய உருவினா கூட அடங்கமாட்றானுங்களே.


முருகா! மறக்காம எனக்கே ஓட்டு போடுப்பா. சாரி சாரி சாமி! இப்புடியே கேட்டு பழகிடிச்சி.


சீக்கிரமா மடத்துக்கு வந்து சேருப்பா! காவித்துணி வாங்கி வைக்கிறேன்.

சொந்த சாமி காப்பாத்தாது போல. கந்த சாமி என்ன பண்றானோ? இந்த சாமியாவது கை கொடுக்குமா டக்கு



பழம் நீயப்பா! டக்கு பழம் நீயப்பா! என்னா பக்திடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈ

ஆளுக்கொரு குடை கொடுக்குறாங்கன்னு வந்தா அடைச்சி போட்டான் பாவி!

சாமிகளா! டேன்சுப்பா! இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு விழுந்து விழுந்து சிரிக்காதீங்க.
(photo: நன்றி தமிழ்வின்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்
 

ஏங்க மீ த எஸ்கேப்புன்னு சொல்லீட்டு போனாங்களா பாஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிழக்கில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்: மட்டக்களப்பில் ஜனாதிபதி


மக்களுக்கு சொல்லி என்ன பண்ண? கர்ரு புர்ருன்னு சண்ட போட்டு கால் நக்கிட்டிருக்கிறதுங்கள என்ன பண்ணப்போற?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை: கலைஞர்
 
பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றிவேல் கொலையில் அதிமுகவினருக்கு தொடர்பா?

இதுலயுமாடா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க? பன்னாடைங்களா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருட்டு வழக்கில் மாஜி குற்றப்பிரிவு எஸ்.ஐ. கைது


பொய்க்கேஸா போட்டதால தான எப்புடி திருடறதுன்னு கத்துக்கல? இப்ப பாரு மாட்டிகிட்ட.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருமங்கலம் ஃபார்முலா போலவே பென்னாகரம் ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறோம்.

ங்கொய்யால. போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே. ஆமா இவரு மருத்துவரா பார்மஸிஸ்டா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, January 10, 2010

பாக்கட் மணி.


அஞ்சாம்பு படிக்கும் போதுதான் இஸ்கோலு வாசல்ல அவிச்ச மரவள்ளி, பனங்கிழங்கு, பனம்பழம், மூக்குசளிப் பழம், கமருகட்டு இத்யாதி விக்கறது பசங்க வாங்கன்னு ஞானம் பொறந்துச்சி.

அதுலயும் பலப்ப மூக்கு தண்டபாணிதான் எப்பவும் ஏதாச்சும் வாங்கி வச்சிகிட்டு தின்னுட்டே இருப்பான். அதும் புளியம்பழம் சப்புனா நாக்கு ஊறுமா ஊறாதா. ஏதுறான்னா அப்பா கை காசு குடுத்தாருங்கற கான்ஸப்ட அறிமுகம் பண்ணான்.

அடப் பன்னாடையே! இது தெரியாம அஞ்சாம்பு வரைக்கும் எப்புடிடா படிச்சன்னு நொந்துகிட்டு, அடுத்த நாள் இஸ்கோல் கிளம்ப, நேர அப்பாட்ட போய் கேட்ற முடியுமா? அம்மாதான். யம்மா கைகாசுன்னா அவங்களுக்கும் கான்ஸப்ட் தெரியல.

என்னாமோ கேக்கறான் பாருங்கன்னா ரெகமண்ட் பண்றது? யப்பாரு என்னாடான்னாரு. கேக்க வந்த காசு தொண்டையை அடைக்க எச்சிய முழுங்கிகிட்டு இல்ல, இல்ல, வாங்கித் திங்க கைகாசு கொண்டுவராங்க எல்லாரும். எனக்கும் தாங்கன்னேன்.

படிக்க போறியா? வாங்கித் திங்க போறியா? யாரு உங்க வாத்தின்னு ஆரம்பிச்ச ஜோர்ல நான் இஸ்கோல்ல நின்னேன். சாயந்திரம் வந்ததும் கூப்டு வெச்சி, கைக்காசு கேக்குறதுக்கும் கொலக்குத்தம் பண்ணதுக்கும் பெரிய வித்யாசமில்லன்னு புரிய வச்சாங்க.

கொஞ்சம் விவரம் தெரியவும், அதாவது எட்டாம்பு போகவும், கைக்காசுங்கறது கொலக்குத்தமில்ல. பசங்க வாங்கித்திங்கதான் குடுக்கறது. சில நேரம் லஞ்சமா, சில நேரம் டிப்ஸான்னு எல்லாம் புரிஞ்சாலும் அதுக்கெல்லாம் வழியில்லாம கெஞ்சி கெஞ்சி 10 காசு எப்பவாவது கிடைச்சா பால் ஐஸ், இல்லாட்டி சேமியா ஐஸ் வாங்கித்தின்னு நாங்களும் பாக்கட் மணி வச்சிருக்கோம்டின்னு காட்டிக்கறது.

வெயில் காலம் வந்தா, சர்பத் வண்டி தெருவுல வரும். அதனால நோண்டி நொங்கெடுத்து திட்டு வாங்கினாலும், இழைப்புளிய கவுத்து போட்டு அதில ஐசை துருவி, சிரப் தெளிச்சி குடுப்பானே அது வாங்க காசு தருவாங்க.

வேலைக்கு போய், ஒரு வருஷம் கழிச்சிதான், மதியம் டீ கூட கொண்டு வரும் மிக்சர், காராபூந்தி (20 பைசா) வாங்கி யாரும் பாராம சாப்டுறது. இல்லீன்னா அங்க இருக்குற பெருசுங்க வெட்டி செலவு பண்றியாடான்னு ஆரம்பிச்சுடுவாங்க.

ஒரு நாள், நம்ம பாஸ் சொன்னாரு. அவங்க மக படிக்கிற இஸ்கூல்ல டீச்சரம்மா ஒரு பையன பாக்கட்ல கை உட்டு செக் பண்ணிச்சாம். எட்டாம்பு படிக்கிற பய. 900 ரூ ஏதோ வச்சிருந்தானாம். பக்கி பயபுள்ள அந்த டீச்சருக்கு இது ஒரு பெரிய விசயமா பட்டு போச்சி. நமக்கு 2 நாள் சம்பளம்னு நினைச்சதோ தெரியல.

ஏதுடா காசுன்னா பாக்கட் மணின்னானாம். எட்டாம்பு படிக்கிற பரதேசிக்கு 900ரூ பாக்கட் மணி தராங்களான்னு புடுங்கி, ஹெட்மாஸ்டர்கிட்ட கூட்டிட்டு போய் சொல்லி குடுத்திருக்காங்க. எச்சம்மு அலண்டு போய் என்னடான்னா தெனாவட்டா பாக்கட்மணின்னானாம்.

சரி! நாளைக்கு உங்கம்மாவ வர சொல்லுன்னு சொல்லி லெட்டர் குடுத்து உட்டாங்களாம். அந்த பையனோட அம்மா சும்மா பின்னி பெடலெடுத்துச்சாம். அட ஹெட்மாஸ்ட்ரசங்க! என்னா நினைச்சிருக்கற. எம்புள்ளய திருடன்னா நினைச்ச? எட்டாம்பு படிக்கிற பையன் கையில பாக்கட் மணி 1000 ரூ இருக்கிறது பெரிய விஷயமா?

என்னமோ பெரிய காஸ்மோபாலிடன் ஸ்கூலுன்னு சேர்த்தா இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்றீங்கன்னு எகிறிச்சாம். ஒரு கட்டத்துல இத இப்புடியே விட்டா டேஞ்சர்னு ஹெட்மிஸ்ட்ரஸ், தோ! ஆடாத குந்து. பாக்கட் மணி ஒரு நாளைக்கு 50ரூ அலவ்ட். அதும் ஒரு வேளை ஆட்டோ பஸ், அல்லது வேற சிலவு தேவையானது ஏற்பட்டா அதுக்குதான்.

அதுக்கு மேல பார்த்தேன், டி.சி தான். இல்ல சரி வராதுன்னா உக்காரு. டி.சி தரேன்னா, இங்கிலிபீசுல கத்திகிட்டு போச்சாம் அந்த காஸ்மோ அம்மாக்காரி. இன்னைக்கு ஒரு நியூஸ் படிச்சேன். அப்புடி ஒரு இஸ்கோல்ல பய புள்ளைக வீக் எண்டுக்கு 70ஆயிரத்துல இருந்து ஒரு லட்சத்துக்கு மேல செலவு பண்றாங்களாம். அதுவும் கடனட்டைல.

ஒரு பரதேசி, அப்பன் சுட்டு வச்ச கள்ள பணத்த சுட்டு வெச்சி காரே வாங்கிட்டானாம். (ஆமா! டாகுமெண்ட்லாம் வேணாம்?).







இப்பதான் புரியுது. எங்க பாத்தாலும் நகை பறிப்புல கல்லூரி மாணவர் கைதுன்னு ந்யூஸ் வருதே ஏன்னு. இதுக்கு யாரை போய் நொந்துக்கறது. வயத்த கட்டி வாயக் கட்டி கொஞ்சம் நல்ல இஸ்கோலுன்னு சேர்த்து, வண்டி, கோச்சிங்னு எல்லாம் தியாகம் பண்றதே பெரிய பாடா இருக்கிறப்ப, இதுங்களையெல்லாம் பார்த்து கெட்டு போக சின்ன வயசா?

உழைப்பால் உயர்ந்தவர்களுக்குத் தெரியும் காசின் அருமையை விட உழைப்பின் அருமை. அவர்களின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பணப் புழக்கத்துக்கு வழியிருக்காது.  நேர்மையற்ற முறையில் சம்பாதிக்கும் பரதேசிகள்தான் நெறிப்படுத்த வாயிழந்து தானும் கெட்டு தன் சந்ததியையும் கெடுப்பவர்கள்.

பசங்களை விட பெத்ததுங்களுக்கு ஆப்பு வச்சாதான் சரியாவும். ம்கும். இதெல்லாம் பண்ண வேண்டியவங்க பசங்க என்ன பண்ணுதோ?

Saturday, January 9, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.2

யுத்தக் குற்ற விசாரணைக்கு உதவ நிபுணர் குழுவை ஜ.நா நியமிக்கும்: ஒளிநாடா உண்மை என்பதால் நடவடிக்கைக்கு வலியுறுத்து

உங்களுக்கு இன்னுமாடா இந்த வலி உறுத்தல. பன்னாடைங்களா! அவன் ஒத்துக்கிட்டு ஆமாம் சாரின்னு கூட சொல்லப் போறதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்

இன்னும் புலிகள்னு தானடா சொல்றீங்க அப்புறமென்ன புனர் வாழ்வு. பின்னயும் சாவடிக்கவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல்,வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது - பிரபாகரனின் தாயும் விடுவிப்பு

தேர்தலோ வோட்டோ இந்த மட்டுக்குமாவது மரியாதை இருக்கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சனல் 4 தொலைக்காட்சி காணொளி உண்மை; அதுவே போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியாக அமைந்துள்ளது : ஐ.நா.சபை

விசாரணை எப்ப. சாட்சிய வெச்சிகிட்டு சூப்பு வைக்கிறீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்காக பாரியளவில் அரச சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன

நாட்ட மீட்டெடுத்தவராச்சே. அவங்களுக்கில்லாமலா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மட்டு. மேயர் சிவகீதா பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு நீக்கம்

பின்ன. முதல்ல இல்லைன்னு அப்புறம் புண்சேகா பேச அனுமதி கொடுத்தா இதெல்லாம் போய்டும்னு தெரியவேணாம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையின் மனித உரிமை மீறல்கள்: தனி விசாரணைக்குழுவுக்கு ஐ.நா. பரிசீலனை

பொகல்லாகமவ தலைவரா போட்டு, கோஹன்னவ சாட்சியா போட்டு திருப்தியளிக்கிறதுன்னு மூடிடுவானுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடேசன் கொலையில் பதிலளிக்க அவகாசம் தேவை: இலங்கை

உண்மைன்னா டக்குன்னு சொல்லலாம். கதைன்னா எழுதணுமில்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜபக்சேவிடமே அரசியல் கற்றேன்: பொன்சேகா

உருப்பட்டுடும். அவரு உன்கிட்ட ராணுவம் கற்றேன்னு சொல்லிக்குவாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரத் பொன்சேகா தமிழில் ஆற்றிய உரை

தேர்தல்னா என்ன வேணா பண்ணலாம். சரி அதுக்கெதுக்கு இந்த படம் போட்டானுங்க. உள்குத்தோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை ஆஸ்பத்திரியில் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணிடம் ஆண் குழந்தை பிறந்ததால் ரூ 1500 கேட்ட பெண் ஊழியர்.

அடிச்சது லக்கி ப்ரைஸ். சஸ்பென்ஷன். வேலை செய்யாம விசாரணை முடியற வரைக்கும் பாதி சம்பளம். அப்புறம் சாட்சியம் போறலைன்னு திரும்ப வேலை. மிச்ச சம்பளம் அரியர்ஸ்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புகழ்பாடுவதை நிறுத்துங்கள் : கலைஞர்

அப்புடி போடுங்கைய்யா. சொந்த காசு போட்டு விருது குடுக்க வக்கில்ல. சட்டசபைல அலம்பலா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போலீஸ்காரர்கள் கட்டிப்புரண்டு சண்டை

பங்குச் சண்டையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துணைமுதல்வர் எனக்கு அல்வா கொடுக்கவில்லை: எஸ்.வி.சேகர்

அல்வாக்கு அல்வா குடுக்க முடியுமா சேகரு. நீ என்னா சோக்கா தேத்திட்டு நழுவிட்ட!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்டப்பேரவையில் ஜெயலலிதா: 10 நிமிடம் அமர்ந்திருந்து புறப்பட்டார்

அல்லோ. நோட் த பாயிண்ட். வெளிய இருந்தே கையெழுத்து போட்டு போகல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைகோடி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் சாதனைகள் செய்து பயன் இல்லை: மாதவன் நாயர்

அடிக்கடி ராக்கட் உட்டா திருஷ்டிக்கு உடைக்கிற சிதறுகாய்ல 10 பேரு பசியாருவாங்கய்யா. நடத்துங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அல்டிமேட் ஸ்டார் பட்டம் வேண்டாம்: அஜீத்

இந்த நேர்மைய நான் பாராட்டுறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையில் 2 நாள் நாய் கண்காட்சி

தண்டோரா அண்ணே. நாமள்ளாம் போணுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்.டி.திவாரிக்கு மேலும் ஒரு தலைவலி!

யோவ். அதுக்கு ஒன்னு மஸாஜூக்கு வேணும்பாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, January 8, 2010

அல்லோ! நாங்களும் மிகப் பெரிய ரவுடிதான்..

நேற்று காலையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்தேவிட்டது. என்னன்னு கேக்க மாட்டிங்களா? ப்ரியா நீ கேளேன். கதிர் நீங்க கேளுங்களேன். பாலாசி நீயாவது கேளேன். சரி நானே சொல்லிடுறேன். நாய் சேகர் மாதிரி கெஞ்சாம, அலப்பற பண்ணாம நானும் கோர்ட்டுல போய் சாட்சி சொல்லிட்டு வந்தேன். (யோவ்! த்த்தூன்னு சத்தம் வந்திச்சே யாரு துப்பினது?)

44 வருஷமா சென்னை மாநகருக்குள்ள இருந்தாலும், சுத்திப்பார்க்கன்னு கூட ஹைகோர்ட் உள்ள போகாத ஒரு அப்புராணிய விதி இழுத்து கொண்டு போய் விட்டுடுச்சி.  அலுவலக சம்பந்தமான ஒரு கேஸ் (அல்ல்ல்லோ! க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிமினல் கேசுங்க) விஷயமாக 7ம் திகதி காலை 10 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய யூத்து (நாந்தான் நாந்தான்) சாட்சி சொல்ல வேண்டியிருப்பதால் முந்தா நாள் சாயந்திரம் 4.00 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்ற கடிதம் சுமார் 4 மணிக்கு கொடுக்கப்பட்டது.

ஆட்டோ பிடித்து ஓடி, வக்கீலை பார்த்து விபரம் கேட்டுக் கொண்டு நாளைக் காலை 10க்கெல்லாம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வரும் வரையில் எந்த பரபரப்பும் இல்லை. நேரம் செல்லச் செல்லத்தான் இந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சியின் தாக்கம் என்னுள் இறங்க ஆரம்பித்தது.

ஒரு ஃபேன் வாங்கவும், வாக்மேன் வாங்கவுமே அரைலூசாகும் அளவுக்கு பல்வேறு சிந்தனைகளுக்கு ஆளாகும் நான் இதில் மட்டும் சோடை போய் விடுவேனா என்ன? மனதிற்குள் பராசக்தி முதல் பார்த்த படங்களில் எல்லாம் வந்த கோர்ட் சீன் கண்முன் வந்தது. ஆண் பெண் என்று அத்தனை வக்கீல் பாத்திரத்தில் நடித்த நடிகர்களும், பெர்ரிமேசனும் சூழ்ந்து நின்று கும்மியடித்தார்கள். அந்தக் கும்பலில் ரொம்ப சாதுவாய் இருந்தது நானும் எங்கள் வழக்கறிஞரும்தான்.

நானே சாட்சியாய், நானே வக்கீலாய், நானே எதிர்கட்சி வக்கீலாய், நானே நீதிபதியாய், நானே வானம்பாடி, வானம்பாடி வானம்பாடி எனக்கூவும் டவாலியாய் எல்லாம் கற்பனை செய்து கொண்டு விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் நடாத்தி ரிகர்சல் பார்த்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் தூங்கப் போனேன்.

காலையில் ஒரு வழியாக, தேடி கண்டுபிடித்து சரியான கோர்ட்டில் ஆஜராகி, அங்கிருந்தவரிடம் சம்மனை நீட்டி இங்கதானே என்றேன். அரைக்கண்ணால் பார்த்து, விட்னஸா, அங்க போய் உக்காருங்க என்று ஒரு பெஞ்சைக் காட்டினார். முதல் முறை கோர்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவற விட்டாங்களேன்னு அனுதாபமா இருந்தது.

உள்ள நுழைஞ்சா 2 கூண்டு இருந்திச்சி. கொஞ்சம் மிரண்டு போய் அப்புறம் சரி பெருசா கும்பலா இருக்கிறது குற்றவாளிக் கூண்டு, ஒத்தையா இருக்கிறது சாட்சிக் கூண்டுன்னு சமாதானமாகி அந்த பெஞ்சில் போய் அமர்ந்தேன். சுற்றிலும் தூங்குமூஞ்சி மரம், குளுகுளுவென்ற காற்று, ஜன்னலோர பெஞ்ச். சவாசனம் செய் என்று மனசு கெஞ்சினாலும் இல்லை கோழியாசனம்தான் நல்லது என்று யோகாவில் மூழ்கினேன்.

சைலேன்ஸ் என்று சினிமா மாதிரியே கோர்ட் ஆரம்பித்தது. கேஸ் நம்பர் படித்து குற்றவாளிகள் பெயர்களைப் படிக்க என்னமோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் வரிசையாக அவர்கள் இடத்தில் வந்து நின்று கை தூக்குவார்களே அப்படி வந்து நின்றதும் ஆடிப்போனேன்.

ங்கொய்யால நெத்தி நிறைய விபூதி, சந்தனம், குங்குமம், கையில கழுத்துல கலர் கலரா கயிறு, தாயத்து இன்னும் என்னல்லாம் உண்டோ அத்தனையும் வைத்துக் கொண்டு வந்தவர்கள் நடுவில் நான் கேடி மாதிரி இருந்ததாகப்பட்டது. (ப்ரியா: இல்லன்னாலும்!)

எனக்குன்னே அமையுமா தெரியல. அந்த கும்பல்ல ஒருத்தன் பேரு என் பேரா இருந்து தொலையுமா? அதுவும் வராம இருந்து தொலைவானா. இவங்க பேர் சொல்லி திரும்ப திரும்ப கூப்பிட கால் எழுந்து ஓடுறேன்னு இழுக்க, மண்டை பன்னாட அது குற்றவாளி பட்டியல் நீயில்லடான்னு இழுத்து புடிக்க அந்த கும்பல்ல ஒரு புண்ணியவான் அவரு வரலைங்கன்னான். அப்பாடான்னு இருந்திச்சி.

ஒரு வழியா ஏறு ராசான்னு கூப்புட்டாக. நான் பொசுக்குன்னு ஊடால போய் நின்னா, அங்க நின்ன ஆளு, ஏங்க இப்புடி குறுக்கால வரக்கூடாதுங்க. சுத்திக்கிட்டு வரணும்னான். சரியா, ஏறி நின்னு, எல்லா சாமியும் கும்பிட்டு மனசுக்குள்ள இருந்த பக் பக்கை  மறைத்து நீதிபதியை பார்த்து ஒரு கான்ஃபிடண்ட் அண்ட் ப்ளீசிங் ஸ்மைல் (ப்ரியா:ஹய்யோ ஹய்யோ! பிதாமகன் விக்ரம் மாதிரி சிரிச்சிருக்கும். இதுக்கு இந்த சீனப் பாரேன். சார் முடியல) விட்டு நிற்க, எதிர் கட்சி வக்கீல் புதுசா ஏதோ பிரச்சனை கிளப்பினார்.

இறங்கிப் போய் உக்காருங்க கூப்புடுவாங்கன்னு என் முதல் எண்ட்ரியே ஊத்திகிச்சி. இந்த முறை வடிவேலுக்கு எதிர் திசையில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சகுனமே சரியில்லையே என்னாகுமோ என்ற பயம் ஒரு பக்கம். எதிர் கட்சி வக்கீலும் நீதிபதியும் விவாதத்தில் இறங்கி யார் சூடாகி விட்டாலும் பொரியப் போறது நான் என்ற பயம் ஒரு பக்கம்.

பக்கத்து பன்னாட சத்தமாகவே ஸ்லோகம் சொல்லி சாமிகிட்ட டீலிங் போடுறாரு. எனக்கு அதுவும் வராது. வேணாம்! வேணாம். கூப்டுருங்க. அழுதுறுவேன்னு நான் ஸ்லோகம் சொல்லிக்கிட்டேன்.

இந்த முறை கூப்பிட்டதும் வக்கீல்கள் கோட்டுப் பின்னாடி மறைஞ்சு வந்ததால ஏன் இப்படி வந்தன்னு யாரும் கேக்கல. ஏறீட்டேன் கூண்டுக்குள்ள. ஜட்ஜ் அய்யாக்கும் என்ன பத்தி தெரிஞ்சிருக்கும் போல. இங்லீஷ் வருமான்னாரு. மனசுக்குள்ள ஆத்தா சொல்ற ஜாவும் இல்லாம யாவும் இல்லாம ஒரு மாதிரியான ஜ்யா வந்து அப்புடியே எடுத்து வுட்டேன். ரொம்ப நட்பா பிரமாணம் சொல்ல வச்சாரு.

அப்புறம் எங்க வக்கீல பார்த்து நீங்க கேக்கலாம்னாரு. உள்ளங்கால்ல இருந்து ஒரு சூடு பரவிச்சி. சொறி நாய்க்கு பயந்து ஓடுறவன் மாதிரி லப்டப் காதுல டோல்பி சவுண்ட்ல கேக்குது. பாடி, பேஸ்மெண்ட் எல்லாம் தடதடன்னு ஆடுது. நாவு அண்ணத்துல ஒட்டிகிச்சி.
ஆரம்பிச்சது அந்த வரலாற்று நிகழ்ச்சி:-

வக்கீல்: இந்தக் கையெழுத்து உங்களோடதா?

நான்: ஆமாம்

வக்கீல்:இந்த நம்பர் உங்களோடதா?

நான்: ஆமாம்

வக்கீல்: இந்த நம்பர் ரிசர்வ் பேங்க் குடுத்த நம்பரா?

நான்: ஆமாங்க.

கமான் நேக்ஸ்ட்னு இருக்க பொசுக்குன்னு அவ்ளதான்னுட்டாரு. நோஓஓஓஓ. திஸ் ஈஸ் நாட் ஃபேர். இதுக்கா நான் இவ்வளவு மெர்ச்சலானேன்னு வந்திச்சி. ஜட்ஜ் அய்யா எதிர்கட்சி வக்கீல பார்த்து க்ராஸ்னாரு.

அவரு இன்னும் நட்பா நோ யுவர் ஹானர்னு என்னிய பார்த்து சிரிச்சதுல அழுகை முட்டிகிட்டு வந்திச்சி. குற்றம் சாட்டப் பட்டவர்களை நீங்க ஏதாவது கேக்க போறீங்களான்னா, என்னிய பார்க்க கூட பாராம ச்ச்ச்சீ போடான்னுட்டானுங்க.

அத்தனையும் விழுங்கிக்கிட்டு ஆஃபிஸ் வந்தா, நம்ம சதீஷ் (எனக்கு உதவிக்கு இருக்கிறவரு) எங்க சார் போய்ட்டீங்கன்னப்ப சொன்னேன்: நானும் மிகப் பெரிய ரவுடிதான்னு இந்த உலகத்துக்கு காட்டிட்டு வந்தேன்னு!

Thursday, January 7, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.1

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை காலமானார்.

படுபாவிங்க.அடக்கம் பண்ணவாவது குடுப்பானுங்களா? இதையும் எவனும் கேக்கப் போறதில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
வடக்கு-கிழக்கை ஒருபோதுமே இணைக்கப் போவதில்லை: திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறார் ஜனாதிபதி

நீ என்னைக்கும் பிரச்சனை தீக்கப் போறதுமில்லை. ஆமாம். நீயே குழம்பிபோயிருக்கன்னு தானே வைத்தியம். இதில என்னாத்த நீ தெளிய வைக்கிறது எச்ச?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக சிங்கள ஊடகம் தகவல்

அந்த நேரத்துல இதெல்லாம் புதைச்சி வைக்கறதுக்கு நேரம் வேற இருந்திச்சா? கைத்துப்பாக்கி கூட ஒளிச்சி வச்சிட்டு கல்யாணத்துக்கா வந்தாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
சனல் 4 தொலைக்காட்சி வீடியோ தொடர்பிலான நிபுணர்களின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

அத வெச்சி ஒரு கண்டனம். ஒரு மறுப்பு. அதுக்கு மேல ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது. போங்கடே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
வேறு தெரிவற்ற நிலையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

அதும் சரிதான். எரியற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேடுறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐ.நா.சபை தெரிவிப்பு


இதுல ஏதும் உள்குத்து இருக்கோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
சரத் பொன்சேகாவின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாங்கம்

அப்புடியே எல்லா கொடுக்கல் வாங்கலுக்கும் இருக்குமா? ஆமா யாரு குடுத்தா? யாரு வாங்கினா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
தமிழ்க் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்:யாப்பா

அட போப்பா! நீங்க சொல்ல வேண்டிய தகவலையெல்லாம் சொல்லுங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
ஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை

தேர்தல் முடிஞ்சதும் திரும்ப புலிகளை ஒழிப்போம்னு கல்லா கட்டவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
ஈழ விடுதலைக்காக சட்டக்கல்லூரியில் படித்த போதே கவிதை எழுதினேன்: திருமாவளவன்

நாங்கோட 52 வயதில எழுதினேன். ஒரு மயித்துக்கும் ஆகல. வேலைய பாருங்க சாமி. வந்துட்டாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
பென்னாகரத்தில் பாமகவை ஒழிக்க முடியாது: ராமதாஸ்

ஏன்? அங்க இல்லவே இல்லையா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
கவர்னர் உரை மேலும் ஒரு மைல்கல்: திருமா

அப்புடி ஒரு ஓரமா இருக்கும் அவ்ளோதானே?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
மாணவர்கள் எப்படியிருக்ககூடாது என்பதற்கு நான் உதாரணம்: நடிகர் பாக்யராஜ்

மனுசன் எப்படி இருக்கக்கூடாதுங்கறதுக்கும்தான். ராயப்பேட்டை ஃப்ண்டாபீஸ் லோனு கட்டிட்டீங்களா சார். எனக்கும் காசு வரணும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
மனசாட்சிப்படி வாக்களியுங்கள்: ராமதாஸ் பிரச்சாரம்

நிஜம்மா சொல்லுங்க. அப்படி பண்ணா ஒரு ஓட்டாவது விழும்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
ஹேமலதாவை நான் கற்பழிக்கவில்லை: எனக்கு மசாஜ் மட்டுமே செய்வார்: சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார்

அங்கதானே வில்லங்கம். ஏஞ்சாமி. ஆம்பள மஸாஜ் பண்ணா ஒவ்வாமையோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

Wednesday, January 6, 2010

டெக்னிக்கலா கொஞ்சம் பிரச்சனைகள்..

 எலக்ட்ரிசியன்:

அன்பே!
முதன் முதலில் நான் உன்னைச் சந்தித்த போது டெஸ்டிங் பல்ப் போல் என் மனது மினுக்கியது. முதன் முதலாய் என் விரல் தீண்டியபோது டெஸ்டர் விளக்காய் சிவந்தாய். மினுக் மினுக்கென்று பொய்கோபம் காட்டினாய். எப்படியோ கனெக்‌ஷன் கொடுத்து நம் வீட்டு விளக்கெரிய உன்னைத் திருமணம் செய்தேன். இ.பி. காரனை விட மோசமாக உன் தம்பிக்கு லஞ்சம் கொடுத்தது எனக்குத் தான் தெரியும்.

நாம் த்ரீ ஃபேஸ் ஆன பிறகு அடிக்கடி பவர் போகிறது. வாரா வாரம் சினிமா, வெளியில் சாப்பாடு என்று ஸ்பைக் பஸ்டர் வைத்தாலும் உன் வோல்டேஜ் ஸ்டெடியாக இருப்பதில்லை. 230ல் இருக்கிறாய் என்று பார்த்துக் கொண்டேயிருக்க 300க்கு எகிறி டி.வி, டேபிள் லேம்ப் எல்லாம் காலியாகிறது.

கொஞ்சல் செருப்பு, கெஞ்சல் டெஸ்டர் எல்லாம் பக்காவாக வைத்துக் கொண்டு, ந்யூட்ரல் வைரில் பிரச்சினை எனச் சரிசெய்யப் போனால் அங்கே பவர் கொடுக்கிறாய். பவர் வயராச்சே என்று டெஸ்டர் வைத்தால் சப்ளை மறைத்து, துணிந்து தொடுகையில் திடீரென ஷாக் கொடுக்கிறாய். 11 kv ட்ரான்ஸ்ஃபார்மரில் அடிபட்ட காக்காயாய் நான் தூக்கியடிக்கப் படுகிறேன்.

சில நேரம் மிகுந்த சந்தோஷத்துடன் லைன் கொடுத்து பகிரலாம் என வருகையில் எர்த்தாக்கி விடுகிறாய். அதையும் மீறி நான் கொஞ்சம் உற்சாகம் காட்டினால் இன்வெர்ட்டர் வைத்திருக்கிறேனோ என்று சந்தேகப்படுகிறாய். தீர்வாக தனிக்குடித்தனம் என்ற ட்ரிப்பர் வைத்தும் அடிக்கடி வோல்டேஜ் ஃப்ளக்சுவேஷனால் மிகவும் பாதிக்கப்படுகிறேன். என்னதான் செய்வது என்றே புரியவில்லை.

தங்கமணி: உன் ஃப்யூஸ் புடுங்கிட்டா இப்புடி பெனாத்த மாட்ட. பொத்திகிட்டு உக்காரு. இல்லாட்டி எலொக்ட்ரோக்யூட் ஆய்டுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொட்டி தட்டி:

அன்பே!

முதன் முதலில் நான் எவ்வளவு முயன்றும் நீ ட்ரைவர் நாட் ஃபவுண்ட் மாதிரியே இருந்தாய். பிறகுதான் உன் மனதில் ஆண்கள் என்றாலே நிறைய வைரஸ் இருப்பது அறிந்து, உன் தோழி மூலம் கோல்ட் பூட் செய்து, உன் ஆபரேடிங் சிஸ்டத்தில் இடம் பிடித்தேன்.

சேஃப் மோடில் மெது மெதுவே உன் வைரஸ் எல்லாம் நீக்கிய பின்னும், பூட் ஆக வெகு காலம் பிடித்தது. மிகுந்த பொறுமையுடன் உன் மன ரிஜிஸ்ட்ரியில் தேவையில்லாத எண்ட்ரிக்கள் நீக்கி, டிஃப்ராக் செய்து, ஆடோஸ்டார்ட் ப்ரோக்ராமெல்லாம் மாற்றி நான் சிஸ்டம் ரிஸ்டோர் கிரியேட் செய்தேன்.

எவ்வளவுதான் வைரஸ் சேராமல் பார்த்துக் கொண்டாலும், மால்வேர்கள் இறக்குமதி செய்து கொண்டு லோடாக்கத் தயங்குகிறாய். சில நேரம் நான் காணவில்லை என்று வேறு பொய் சொல்கிறாய். உனக்கு ஏதாவது வேண்டுமென்று கேட்கையில், விண்டோஸ் மெசேஜ் பாக்ஸ் மாதிரி வேணுமா வேணாமா, சரியா தவறா, என்று இரண்டு கேள்விகள் வாயில் வந்தாலும் எனக்கு மட்டும் எதிர் கருத்துக்கான நோ பட்டன் டிசேபிள் ஆகியே இருக்கிறது. க்ளோஸ் பட்டனும் இல்லாததால் மேற்கொண்டு பயணிக்க எஸ் பட்டன் அமுக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை.

கொஞ்சம் கோபப் பட்டாலும் ஹாங் ஆகி சாகடிக்கிறாய். ரி பூட் போட்டால் பூட் ஃபைலை ஒளித்து வைத்து பைத்தியமாக்குகிறாய். பல நேரங்களில், ட்ரெஸ்,சினிமா, ஹோட்டல் (alt+ctrl+del) அமுக்கினாலும் சட்டை பண்ணுவதேயில்லை.

ஏதாவது விவாதம் என்று வந்தால் சிண்டாக்ஸ் எர்ரர் என்று ஓரம் கட்டுகிறாய். நான் கொஞ்சம் கவனக் குறைவாய் இருக்கும் நேரம் ரிபூட் ஆகிறாய். என் உழைப்பெல்லாம் காணாமல் போகிறது. உனக்குத் தெரியாமல் சேமித்தால் ஹிட்டன் அட்ரிப்யூட் கொடுத்து டரியலாக்குகிறாய்.

முக்கியமான விஷயங்களை நினைவு படுத்தச் சொன்னல் மறந்துவிட்டு மெமொரி டம்ப் என்று போகிறாய். மூன்று வருடம் முன்பு சொன்ன மூக்குத்தி விஷயம் கவனம் வைத்துக் கொண்டு பூட்டிங் வைரஸாய் கொல்கிறாய். ரெகுலர் அப்டேட் செய்தாலும் அடிக்கடி லைசன்ஸ் செக் செய்கிறாய். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

தங்கமணி: அடிங்கொய்யாலே. விட்டா ஓவராத்தான் போய்க்கிருக்க. என்னா ப்ளான்? ப்ராஸஸர் இல்லாம பண்ணிடுவேன். சி ப்ராம்ப்டுக்கு கூட சிங்கியடிக்கணும் ஜாக்கிரதை.

Tuesday, January 5, 2010

சொன்னாக் கேக்’காது’ங்க..

சாமிகளா! நானு ஊரு உலகம் தெரியாத அப்புராணி. வூடு உட்டா ஆபீசு ஆபீசு வுட்டா ஊடுன்னு இருக்குற ஆளு. அங்க இங்கன்னு திர்ர ஆளுங்க கொஞ்சம் சொல்லுங்கப்பு.

பேப்பர்ல, டிவியில எல்லாம் பார்க்குறேன். எதிர்ல வர ஆளு மூஞ்சி தெரியாம பனி. அங்கல்லாம் இப்படி இல்ல. தமிழ்நாட்டுல மட்டும்(ம்கும் இங்க மட்டும் பாத யாத்திரை போனியான்னு கேக்காதீங்க) ஏங்க இப்புடி. என்ன மாதிரி கிறுக்குப் பயலுவ கொஞ்ச பேத்த தவிர மத்த யாருக்கும் காதைக் காணோங்க.

கொஞ்ச வருசம் முன்னாடி, இந்த கன்னுகுட்டி மண்ணு தின்னாம இருக்கிறதுக்கு ஒரு கூடைய கட்டி உடுவாங்களே. அப்பிடி மாட்டிகிட்டு திரிஞ்சாங்க பொல்யூஷனுக்கு. அதுவும் டெல்லில இருந்து வாங்கிட்டு வந்து கொள்ளை விலைக்கு வித்தானுங்க. அது உள்ள இருக்கிற ஃபில்டர் 2 நாள்ள சூப்பு விக்கிறவன் சட்டி மாதிரி கருத்துப் போக, ரிஃபில்லுக்கு வழியில்லாம கெடாசினாங்க.

ஹெல்மட் போடுங்கப்பான்னா, மசிரு கொட்டிப் போகுது. கழுத்து வலி வருதுன்னு இவனுவளே சொல்லிகிட்டு போடுறதில்ல. இதுல வேற, உலகத்துலயே ஜடைக்கு இடைஞ்சல் இல்லாம ஒரு ஆர்ச் வெச்ச ஹெல்மட் கண்டு புடிச்சவனும் நம்மாளுதான்.

மருத்துவருங்க தலைபாடா அடிச்சிக்கிறாங்க. மூக்க சுத்தி துணிய இறுக்கமா கட்டாதீங்க. ப்ராணவாயு கொஞ்ச நஞ்சமும் மூளைக்கு சரிவர போகலைன்னா மயக்கம் வரும். அதனால விபத்துக்கள் உண்டாகலாம். சர்ஜிகல் மாஸ்க் போடுங்கப்பான்னா கேக்குறதில்ல.

ஆம்பிளைங்க இதுக்காகவே பெரிய கைக்குட்டை வாங்கி முகமூடி கொள்ளைக்காரன் மாதிரி கட்டிக்கிறானுங்கன்னா, பெண்கள் நைலான் துப்பட்டாவை முடி பறக்காம, மூக்குல தூசு போகாமன்னு இறுக்கி சுத்திக்கிறாங்க வண்டியோட்டுறப்ப. எதிர் காத்துல அடைக்குமா இல்லையா?

அப்புறம் பனிக்காலத்துக்கு, குத்தாலத்துல பலாப் பழம் குடுப்பாங்களே பன ஓலையில படகு மாதிரி செஞ்சி. அதுக்கு வாலு வெச்சா மாதிரி ஒன்னு வந்து செம சேல்ஸ் பிச்சிகிட்டு போச்சி.

இப்ப ஒரு காம்புல ரெண்டு பக்கம் கரண்டிமாதிரி ஒன்னு வந்திருக்கு. யாரப்பாத்தாலும் நடக்குறவன், ஏசி கார்ல போறவன், ஆட்டோ ஓட்டுறவன், உக்காந்து போறவன்னு உச்சி வெயில்ல கூட மாட்டிகிட்டு திர்ராங்க. யாருக்கும் காதைக் காணோம்.  குழந்தைக்கு கூட பாதி கண்ணை மறைக்கிறா மாதிரி இருந்தாலும் இதை மாட்டியாவணும். சென்னைலதான் இப்புடின்னு பார்த்தா ஈரோட்டுல மதியம் 2 மணி வெயில்ல பாதிப்பேரு காத தொலைச்சுபுட்டு அலையறாங்க. மத்த ஊருலயும் இப்புடித்தான் இருக்கும்.

எங்காத்தா, அவுங்கூருல மைனஸ் 6 மைனஸ் 7 (கதிர் நமக்கு விழற மைனஸ் ஓட்ட சொல்லல) குளிர்ல மொசக்குட்டி மாதிரி காதை விடச்சிக்கிட்டு கட கண்ணின்னு போய்ட்டு வருது.

ஆயில் புல்லிங் பண்ணா செரிமானம் ஆவும், ரோகமே வராது, வாய் நாறாதுன்னு ஒரு அலை உண்டாகி நல்லெண்ணெய் பாக்கட்டுல எல்லாம் இத சொல்லியே கல்லா கட்டுனானுங்க. கொஞ்ச காலத்துக்கு எவனப் பார்த்தாலும் குரங்கு மாதிரியே திரிஞ்சானுங்க. அப்புறம் காணோம்.

நீங்க வேணா பாருங்க. இந்த சூப்பான் ரப்பர் இருக்கே, அதாங்க பேசிஃபையர். அத விளையாட்டா வாய்ல வெச்சிகிட்டு சீரியசா போனா போதும். ஏன் ஏன்னு அடக்க மாட்டாம ஏதோ ஒண்ணு கேக்கும் ஏன் இத சப்பிகிட்டு திர்றன்னு.

இது ஜப்பான்ல இருந்து வந்த மச்சான் சொன்னாரு. அங்க புதுசா தெராபியாம். இப்புடி வெச்சிகிட்டு  நடந்தா, மனசு நம்ம அறியாம குழந்தைப் பருவத்து மனசு மாதிரி ஆயிடுமாம். டென்ஷனே வராதாம். நாள் ஃபுல்லா ஃப்ரெஷ்ஷா இருக்குமாம். நான் 2 நாளாதான் ட்ரை பண்ணேன். சூப்பரா இருக்குங்கன்னு சொல்லி பாருங்க.

பேசாம இருந்தாலே டென்ஷன் கம்மியாச்சே. எனர்ஜி வேஸ்ட் ஆவாதே. அப்புறம் எப்படி ஃப்ரெஷ்ஷா இல்லாம இருக்க முடியும்னு எல்லாம் யோசிக்க மாட்டாங்க. அடுத்த வாரம் பார்த்தா எல்லார் வாய்லயும் சூப்பான் ரப்பர் இருக்கும்.

ஆனாங்கொய்யாலே. அப்பக்கூட கரண்டிக்குள்ள ஹெட்ஃபோனு, ப்ளூடூத்து வெச்சிக்கிட்டு, சூப்பானோடயே செல்லுல பேசுவாங்களே தவிர அத மட்டும் நிறுத்த மாட்டாங்க.


Monday, January 4, 2010

விசாப்பன்யார்...

என்னா பாக்கறீங்க? விசாப்பன்யார்னா என்னான்னா? இந்த அவசர உலகத்தில புத்தாண்டு வாழ்த்து சொல்றது இப்புடித்தான் நம்ம ஆஃபீஸ்ல. விஷ் யூ எ ஹாப்பி ந்யூ இயர்னு சொல்லவோ கேக்கவோ யாருக்கு பொறுமை இருக்கு? சின்ன ஆஃபீஸ்னா பரவால்ல. இது மட்டு மட்டா 3000 பேருக்கு மேல வேலை செய்யிற இடம். அதுல பாதி பேரு எதுக்கோ அலைஞ்சிண்டே இருப்பாங்க.

விவேக் சொல்லுவாரே, எனக்கு கமிஷனர தெரியும் ஆனா அவருக்குதான் என்னைத் தெரியாதுன்னு. அப்படி உங்களுக்கு தெரியாதவங்களுக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு உங்களத் தெரியாது. இந்த மாதிரி சூழல்ல காமெடிக்கு பஞ்சமா என்ன?

100 மீட்டர் தூரத்துல நேரா முகம் பார்த்து ஹல்லோஓஓ பாஸ்னு கைய நீட்டிட்டு ஒருத்தரு வருவாரு. இவனாரு? நமக்கு இவன தெரியுமா இல்ல இவனுக்கு நம்மள தெரியுமான்னு மண்டைக்குள்ள ஸர்ச் கமாண்ட் ஓடிட்டிருக்க, யோவ் கிட்ட வந்துட்டான் கை நீட்டுய்யான்னு கை அனிச்சையா நீள, நான் யார் தெரியுதான்னு கேக்காம இருக்கணுமே கடவுளேன்னு மனசு வேண்ட, அந்த கடைசி நொடியில நம்மள தாண்டி ஒரு பத்து அடி பின்னால பாண்ட் பாக்கட் உள்ள கை விட்டுகிட்டு தலைய சாய்ச்சி குறும்பா சிரிச்சிகிட்டிருக்கறவருக்கு விசாப்பன்யார் சொல்லுவான் பாருங்க.

நீட்டுன கை நீட்டுன படி இருக்க, சட்டுன்னு நம்மள எவனும் தெரிஞ்சவன் பார்த்திருப்பானான்னு திகிலோட சுத்திமுத்தி பார்த்து, இல்லைன்னா யப்பேன்னு ஒரு நிம்மதியும், அப்புடி எதுக்கு அவசரமா நீண்டன்னு கைய ஒரு வெறுப்போடவும் பார்க்குற பார்வையிருக்கே, அத உலகத்துல எந்த நடிகனாலயும் காட்ட முடியாது.

அப்புடி ஒரு வேள தெரிஞ்ச முகம் தெம்பட்டுச்சோ, அசராம கையில புதுசா முளைச்ச ரேகைய ஆராய்ச்சி பண்றா மாதிரி அதே டெக்கினிக்க யூஸ் பண்ணி அல்லோன்னு போய் அந்த தெரிஞ்ச மூஞ்ஜிக்கு விசாப்பன்யார் சொல்லுவாய்ங்க. அது லந்து பார்ட்டியா இருந்து தொலைஞ்சதோ, சும்மாதானே சொல்றான் கைய நீட்டினா என்ன போச்சின்னு இருக்கமாட்டான். இப்பதான 10 நிமிஷத்துக்கு முன்ன கக்கூஸ்ல விஷ்பண்ண, மறந்துட்டியான்னு மானத்த வாங்குவான்.

அட இந்த கை குலுக்குறதுலதான் எத்தன வில்லங்கம் இருக்கு தெரியுமா? விரல சேர்த்து கொத்தா புடிச்சி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நொறுக்கி(இறுக்கமான நட்பாம் ங்கொய்யால) அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒன்னுமே பண்ண முடியாதபடி சிலது, அடிபம்புல அடிக்கிறா மாதிரி, உன் கைய கழட்டி எடுத்துட்டுதான் மறுவேலைன்னு குலுக்கோ குலுக்குன்னு குலுக்கும் சிலது, புடிக்கவும் புடிக்காம, எடுக்கவும் எடுக்காம கூச்சமா தொட்டுகிட்டு சிலது, கைய நீட்டினா கும்புடு, கும்புடு போட்டா கைய நீட்டின்னு டரியலாகும் சிலது.

கக்கூஸ் வாஷ்பேசின்ல கை கழுவிட்டு ஈரக்கைய நீட்டுவான், சாப்பிட்டு கை கழுவிட்டு வரும்போதே கை நீட்டுவான் சில பேரு. அவசரமா கைக்குட்டை எடுக்கறதுக்குள அட கைய குடுங்க சார்னு ஈரக்கைய புடிச்சி கசக்கோ கசக்குன்னு கசக்கி விசாப்பன்யார் சொல்லியாவணும் இவனுவளுக்கு.

அப்புறம் பாஸ்ங்களுக்கு விசாப்பன்யார் சொல்றது இருக்கே அது சும்மா போனமா சொன்னமான்னு பண்ணமுடியாது. கூடிக்கூடிப் பேசி, க்ருப் க்ரூப்பாத்தான் (வரலாறு முக்கியம் அமைச்சரே) முடிவெடுப்பாங்க. ஆஃபீஸ் இம்ப்ரெஸ்ட்ல பொக்கே வாங்கறதா, மொமெண்டோ வாங்கறதான்னு பலதும் தீர்மானிக்கணும். அப்புறம் ஃப்ரீயானா சொல்லுங்கன்னு சொல்லிட்டு காத்திருக்கணும்.

சில நேரம் அப்புறம் பார்க்கறேன்னு சொன்னா இது வரைக்கும் வந்த இனிப்புகள் ஸ்ரீமித்தாய், க்ராண்ட் ஸ்வீட்ஸ் போல வீட்டுக்கு கொண்டு போற அயிட்டமா வந்திருக்கும்னு புரிஞ்சிக்கணும். ஸ்ரீகிருஷ்ணா, ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் இருந்தா நம்ம தலைல கட்ட வசதி. அதனால உடனே பார்த்துடலாம்.

அரை மணி நேரத்துக்கு முன்ன நாக்கு புடிங்கிக்கிறா மாதிரி திட்டி, நீயெல்லாம் ஆஃபீசருன்னா பெரிய கொம்பா? கேட்டு தாண்டமாட்டன்னு திட்டிட்டு போன தலைவரு, அவரை விட பெரிய தலைவர் கூட வந்து நம்ம தகுதிக்கு ஏற்ப குளிக்கிற துண்டோ, சால்வையோ, பொன்னாடையோடவோ வந்து, விசாப்பன்யார் சொல்லி, சின்னதா நம்மள பாராட்டி உரையோட போர்த்துறப்ப, தொழிலாளர் தோழர் சுனாபானா வாழ்கன்னு சவுண்ட் விடுறப்ப என்னிய வெச்சி காமெடி கீமடி பண்ணலயேன்னு கேக்க தோணுமா தோணாதா?

ஆனா சக ஊழியர்ல இருந்து பெரிய தலைவரைக்கும் அலற வைக்கிற பார்ட்டி ஒண்ணு இருக்கு நம்ம ஆஃபீசுல. பத்துபைசா ந்யூட்ரீன் ஆரஞ்சு முட்டாய் (சக ஊழியருக்கு), 25 பைசா சாக்லேட் சூபர்வைசருக்குன்னு, முழங்காலுக்கு கொஞ்சம் மேல் வரைக்கும் பாக்கட் வச்ச தொளதொளா பாண்ட் பாக்கட்ல பக்கத்துக்கு ஒண்ணுன்னு ரொப்பிக்கிட்டு வருவாரு.

எல்லாருக்கும் கொடுக்க முடியுமா. அது பம்மி பம்மி குடுக்கறதுக்குள்ள வேர்வைலயும் சூட்டுலயும் கொத கொதன்னு இருக்கும். பாசமா குடுத்து விசாபன்யார் சொல்லி, ஆசையா குடுக்குறேன்ல அத சாப்டமாட்டியான்னு அடம்புடிப்பாரு.

அந்த ரவுண்ட் முடிஞ்சதும் பைக்குள்ள இருந்து ஒரு ரூபா, 2ரூபா பார் சாக்லேட் அடுத்த பெரிய அதிகாரிங்களுக்கு ரொப்பி வெச்சிகிட்டு கூழாக்கி நீட்டி, கொஞ்சம் தன்மையா சாப்டுங்க சார்னு மென்முறைய கையாளுவாரு. ஒரு 12 மணி வாக்கில எலுமிச்சம்பழம், அத விட பெரிய சைஸ்ல ஒரு ஆப்பிள் அதுங்கள பாக்கட் உள்ள போட்டுகிட்டு, நழுவுற பேண்ட இழுத்து இழுத்து விட்டு, அய்யா ஃப்ரீன்னா சொல்லு, அம்மா ஃப்ரீன்னா சொல்லுன்னு சுத்தி சுத்தி வருவாரு.

உள்ள விடாதன்னு சொல்லி வச்சாலும், மவனே/ளே வீட்டுக்குப் போவல்ல அப்போ இருக்குடி உனக்குன்னு இருப்பாரு. ஒரு 4 அல்லது 5 மணி நேரத்துக்கு கவட்டி சூட்டுல நல்லா வெம்பி சுருங்கிப்போய், எலுமிச்சம்பழம் கலர் மாறிப்போய் இருக்க லிஃப்ட், கார்னு காத்திருந்து மடக்கி விசாப்பன்யார் சொல்லி குப்பைல போடவோ வேற யாருக்குமோ குடுக்காம பார்த்துக்கற அழகிருக்கே, அட அட. அதவிட தேடி தேடி போய் கோவிச்சிக்கிட்டாங்க ஏன் காலைலயே சொல்லலன்னுன்னு அளந்துட்டுத் திரிவாரு.

இப்பிடியெல்லாம் ஒரு விசாப்பன்யார் இல்லைன்னு யாரு கேட்டா?

(டிஸ்கி:விசாப்பன்யார் பெயரல்ல!!! விஷ்+யூ+எ+ஹாப்பி+ந்யூ+இயர் சேர்த்து அவசரமா சொல்லுறப்ப இப்புடிதான் காதில விழுது)

Sunday, January 3, 2010

தனிமை..


உன்னோடு இருக்கும் போதான நம் தனிமை
சொர்க்கமாயிருக்கிறது
நீயில்லாத போதான என் தனிமை மட்டும்
ஏன் நரகமாகிறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் நினைவுகளுடனான என் தனிமை
சந்தோஷமாயிருக்கிறது
உன் நினைவுகளுடனான என் தனிமையே
துடிக்கவைக்கிறது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடுவது உணர்ச்சியென்று
எவன் சொன்னது?
உன் முதல் முத்த நினைவை
எப்படி என்னால் உணர முடிகிறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நினைவுகள் மூளை சம்பந்தப்பட்டதல்ல
உடல் சம்பந்தப்பட்டதென எனக்கு உணர்த்தினாய்
உன்னோடு இருப்பதான என் நினைவு
உற்சாகமாய் இருக்கிறது
உன்னைப் பிரிந்த நினைவோ
உடலைச் சில்லிட்டு ஓய்ச்சலாக்குகிறது..
~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரிந்திருக்கும் நினைவுகள்
நோவாகிறது
சேர்ந்திருக்கும் நினைவுகள்
மருந்தாகிறது
பிரிந்திருக்கும் நேரம் அதிகமென்பதால்
மருந்தாகவேனும் என்னோடிருப்பாயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதலே ரோகமாய்
காதலே சிகிச்சையாய்
காதலே மூச்சாய்
காதலே பேச்சாய்
காதலே பசியாய்
காதலே உணவாய்
காதலே எல்லாமுமாய்
காதலோடும் கண்ணீரோடும்
காத்திருக்கிறேன் உனக்காய்..

Saturday, January 2, 2010

பி.ப.க்களின் புத்தாண்டுத் தீர்மானங்கள்

சில பி.ப. அதாங்க மைனஸ் ஓட்டு வாங்குறவங்க, பிரபல பதிவர்கள் புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து விபரங்கள் கசிந்துள்ளது.

(கதிர்:தாருங் என்ன கேக்காம கசிய உட்றது
 வானம்பாடி:யூத்து! இது அது இல்ல.கொஞ்சம் பொருமை)

கதிர்:
இனிமே இட்லிலருந்து வர ஆவி, சட்னில இருக்குற கடுகெல்லாம் பார்த்து ஓவரா கசியமாட்னுங். அட கவிதை எழுதி பாலாசி, ராஜா மாதிரி பெருசுங்கள டார்ச்சர் பண்ணமாட்னுங்.

வாரத்துக்கு ரெண்டு மொக்கன்னாச்சும் போடுவனுங்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலகலப்ரியா:
வலையூர் வண்டிப் பயணத்தில்
அடிக்கடி களைத்து ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
விதியின் கவிதை
முற்றுப்புள்ளியாய்.

குறைந்தது 5 இடுகை வாரத்துக்கு அதிலும் 2 கலகல மொக்கை கட்டாயம் எழுதப் பார்க்கிறேன்.
        
(முகிலன்: ஹய்யா! அசைன்மெண்ட்!நோட்ஸ்!
/வலையூர் வண்டிப் பயணத்தில்/ நெட்ல இருக்கிறது
/அடிக்கடி களைத்து ஓசோன் ஓட்டையில் இளைப்பாறாமல்/
ஒரு இடுகை போட்டுட்டு 3 அல்லது 4 நாள் கேப் விடுறது
/மேகம் மூடிக் களிக்க/ ம்ம்.ஓ. அப்டி வரீங்களா நோட்ஸ் கம்பெனிய மூடிட்டு முகிலன் சந்தோஷமா இருக்க
/விதியின் கவிதை/புரியாத கவிதை
/முற்றுப் புள்ளியாய்/ எழுத மாட்டேன்.
பாஸா ப்ரியா?ம்கும் இத கூட இப்படித்தான் சொல்லுவீங்களா?/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகர்: 
பாட்டில் பின்னூட்டம்
பரபரவென்றெழுதி
வரி கோர்த்து வார்த்தையில்
வாகாய்  வந்திடினும்

தங்கையவள் தமிழ் கண்டு
தேன் குடித்த வண்டாகி
அம்பான வார்த்தையையும்
அன்பாய் உரைத்த விதம்
(எட்டு வரி தாண்டிடிச்சே இடுகையா போட்டுடலாமா?
  வானம்பாடி:நாட்டாமை..இங்காருங்க
பிரபாகர்: அய்யா. இல்லீங்கைய்யா. இப்படி இனிமே பண்ணமாட்டன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நாட்டாமைல்லாம் ஏங்கையா

சந்திரமுகி மயான கதை, நல்லதங்காள் கதை மாதிரி இல்லாம இடுகைக்கு பொருத்தமான பேர் யோசிச்சி வைப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரூரன்:
தென்னங். என்ன வார்த்த போடுறதுன்னு தெரியாம முழிக்க வைக்கிற இடுகையில இனிமே அருமை அருமை அன்புடன் ஆரூரன் போடமாட்னுங்.
(பாலாசி:அட ஏங் நீங்க வேற. எப்புடியும் 2 வரி புரியாம போகாதுங். அத வெட்டி ஒட்டி அசத்தல். உண்மை, பிரமாதம்னு போட்டா போச்சி)

என்ன வேலையிருந்தாலும் சி.எஸ்.பர்தி மாதிரி மொக்கை ஒன்னு, நல்ல பழைய பாடல் ஒண்ணு, ஊரு அக்க போரு ஒன்னுன்னு இடுகை போடுவனுங்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி:
இந்த யூத்துங்க கொட்டம் தாங்கல சாமி. இனிமே கவிதையே படிக்க மாட்டன். முக்கியமா மாடு வண்டிக்காரன பார்த்து பொறாம படுற மேட்டர்லாம் எழுத மாட்டன்.ஆரூரனுக்கு சொன்ன ஐடியாலதான் பொழப்ப ஓட்டிகிட்டிருந்தேன். அத இனிமே பண்ண முடியாது.

என்னேரமும் தமிழ்மணம் ஓபன் பண்ணி வெச்சிகிட்டு இல்லாம நானே எழுதுவேன். தினம் ஒரு இடுகை காமெடி அதிகமா போடுவன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகிலன்:
விசா கதைக்கு க்ளைமாக்ஸ், கலகலா கவிதைக்கு விளக்கம்னு கல்லா கட்ட மாட்டேன். நம்ம சரக்குதான் இனிமே.

கலிஞ்சர் மாதிரி அறிக்கையோட இருக்காம அந்த பத்து பேர் சேர்ந்து எழுதுற கதைய ஆரம்பிச்சிடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நசரேயன்:
நம்ம இங்கிலீஷ நக்கலடிச்சி எழுதுற இடுகையில தமிழ் எழுத்துப் பிழை கல்லுல சோறு மாதிரி எழுதமாட்டேன்.

இனிமே எண்டர் கவிதை, பின் நவீனத்துவ கவிதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.
(குடுகுடுப்பை:இத படிக்கறதுக்கு நான் கக்கூசுலயே உக்காந்திருக்கலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தண்டோரா: 

 இனிமே ஈரோடு போனா குப்பண்ணா மெஸ் பக்கமே போகமாட்டேன். போனாலும் கோழி சாப்டவே மாட்டேன். சாப்பிட்டாலும் சொல்ல மாட்டேன்.

அப்படி சொல்லி இருந்தா அது சரக்கு சொன்னதாத்தான் இருக்கும். நான் இதை கவிதையிலயே சொல்லுவேன்.
(கேபிள்:யோவ். எண்டர் கவிதை ஓனர் நானு. என்ன கேக்காம எப்புடி சொல்லலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இராகவன் நைஜீரியா:

இனிமே ஃபோட்டோ இடுகையில காமிரா பேரு சொல்லுவேன். கலையரசன் காமிரான்னு சொல்லமாட்டேன்.

வாரம் ஓவர்டைம் பண்ணியாவது 2 இடுகை போடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(டிஸ்கி 1. உன் கதை என்னன்னு கேக்க வேணாம். வலைச்சரம் பொறுப்பு இருந்ததால எனக்கு இதுக்கு நேரமில்லை..எப்புடீஈஈஈஈ)

(டிஸ்கி 2. சம்பந்தபட்டவங்க எல்லாரும் மன்னிச்சிக்கங்க. டமாசுக்கு)                 
                                

Friday, January 1, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.0

ஊடகவியலாளர்களைக் கொன்றவர்களை அம்பலப்படுத்த முடியும் : சரத்

டபுள் ஓக்கே! பதிலுக்கு பிச்ச என்ன காட்டப் போகுதோ வெயிட்டிங்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கூட்டமைப்பு எம்.பி.க்கள் அமைச்சர்களாக மாறவேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

எலும்புத்துண்டு காட்டீட்டான். நீங்க வால் ஆட்டீடுங்க சாமிகளா. இதுக்குதானே அடிச்சிகிட்டீங்க. தேர்தல் முடிஞ்சப்புறம் வைப்பான் ஆப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மகிந்தவின் அழுத்தத்தின் பேரிலேயே பொன்சேகாவிடம் கரனகொட நட்டஈடு கோரினார் என்கிறார் சுமண தேரர்

ங்கொய்யாலே! இது புது அரசியலா இருக்கே. அவ்வளவு கோடி அடிச்சிட்டானா அந்தாளு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரத் பொன்சேகா மட்டக்களப்பில் பிரசாரம் நடத்த மாநகர முதல்வர் அனுமதி

கருணா அனுமதி குடுத்துட்டாரா. இது லெவலுக்கு ஒரு பிலிம் காட்டிடிச்சி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை நிரூபிப்பதற்கு தயார்: லக்ஸ்மன் கிரியெல்ல

யப்பா. புண்ணியமா போகும். ஒருத்தன ஒருத்தன் போட்டு குடுத்து நீங்களே நாறடிச்சாத்தான் உண்டு. அப்பதான் அங்க என்ன நடந்துச்சுன்னு வெளிய வரும். இல்லாட்டி ஒருத்தனும் கவலப்படமாட்டானுவ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நலன்புரி நிலைய மக்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை: சரத் பொன்சேகா

அடி செருப்பால. அதெல்லாம் பண்ணாமலே சரணடையுங்கள்னு சொன்னியா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் அவசரக்காலச்சட்டத்திற்கு எதிராக குரல்கொடுப்போம்: டக்ளஸ் தேவானந்தா

இவரு போஸ்டுக்கு இவரு மிரட்டிட்டாருப்பா. எப்புடியெல்லாம் பொழைக்கிறானுங்க பன்னாடைங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரத் பொன்சேகாவின் திட்டத்தினால் திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்படும்: அரசாங்கம்

கோத்தபாய குடும்பம் தங்க அமெரிக்கால 70கோடிக்கு பங்களா வாங்கினதுல திறைசேரிக்கு லாபம் வந்திச்சா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை மக்களுக்கு மாறுபட்ட அரசாட்சி வழங்கப்படும்: சரத் பொன்சேகா

எப்புடீ? வித்தியாசமா லவட்டுவீங்களோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலிகளுக்குச் சொந்தமான 10 விமானங்களை பெற்றுக் கொள்ள அரசு எடுத்த முயற்சி தோல்வி

ஆஹா! வடை போச்சே. சரி கப்பலுக்கு மெதுவா சொல்லிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
150 மில். ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் வீசப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின தகவல்

ஆமா! கே.பி.ய திவயின பொறுப்பில விட்டுட்டாங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்கிலாந்தில் ஆயுத களவாடலில் ஈடுட்ட மூன்று இலங்கையர்கள் கைது

அட மத்த நாடு கொடுத்ததே என்ன பண்ணன்னு தெரியாம கொட்டிக் கெடக்கே. ஒரு நட ஊரு பக்கம் வரக்கூடாது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் 'சின்வாத்ரா' இலங்கையின் பொருளாதார ஆலோசகர்?

ஓ. அண்ணந்தம்பிக்குள்ள அடிதடி வராம சொத்து பிரிக்க நாட்டாமையா. குரங்கு அப்பம் பிட்ட கதைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் தலைமையில் ஈழப் போராட்டம் தொடரும்: வைகோ

அது அவங்க பார்த்துப்பாங்க. இந்த கீரி-பாம்பு சண்டை பொழைப்பு நாறுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளை: மு.க.அழகிரி தகவல்

ரைட்டு. அடுத்தது மதுரை கதை வெளிய வருமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தை 2ஆக பிரிக்கும் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்: ப.சிதம்பரம்

முதல்ல ஆந்திரால கிள்ளுடி. தமிழன் காமெடி பீசுன்னு தெரியும்ல. இங்க வந்துட்டாரு தொடைய தட்டிகிட்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெ. ஆட்சிக்கே வரமாட்டார்: தேமுதிக தேராத கட்சி: மு.க.அழகிரி கிண்டல்

அப்ப டாக்டரைய்யா? ங்கொய்யால. அண்ணன் ஃபார்முலாவ அடிச்சிக்க ஆளில்லடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈஈஈஈஈஈஈஈ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மோசடி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: திலகவதி

இதுக்கு முன்னாடி 50 வாட்டி எடுத்த நடவடிக்க எங்க ஓடிப்போச்சுன்னு கண்டு புடிங்கம்மா. ஏண்டா பாவிங்களா. கண்டுக்கலையா. தேர்தல் வருதுடா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதிமுக முடிவே மதிமுகவின் முடிவு: வைகோ

ஓஓ. இததான் உடன்கட்டை ஏர்றதுங்கறதா? கூட்டணின்னா இது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆட்சியில் குறைகள் இருந்தால் திருத்திக்கொள்கிறோம்: கலைஞர்

ஆமாங்கையா. எங்க தேர்தல்னாலும் எல்லாரையும் கண்டுக்கணும். மிச்ச குறையெல்லாம் ஒன்னுமே இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த ஆண்டு 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது

அதுக்கு அய்யாக்கு ஒரு விருது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலக்கியவாதிகள் அருகில் இருக்கவே ஆசை: கலைஞர்

ஓக்கே. இனிமே நேரு ஸ்டேடியத்துல ஆஃபீஸ் வெச்சிடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மத்திய அரசுக்கு தடுமாற்றம் இல்லை: ப.சிதம்பரம்

தள்ளாட்டம் தானோ. குடிச்சவந்தான் ஸ்டெடியா இருக்கேன்னு அலப்பறை பண்ணுவான்னு எங்கண்ணன் கதிர் எப்பவோ சொல்லீட்டாரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது

அட அதான் ஆயிடிச்சே. பி.ஜி, 4 பாட்டு, விளக்குமாத்து அடியை சேர்த்தா ஃபைட் ஆச்சி, டைட்டில் போட்டா சரி. எதுக்கு தண்டசெலவு. ரொம்ப முக்கியம்டா. கவர்னர் கதைய எப்பப்பா எடுக்க போறீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~