Saturday, December 5, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.5

வன்னி மாவீரர் இல்லம் அரசாங்கத்தால் தரைமட்டமாக அழிப்பு: செய்தி

இந்த நாய்ங்களுக்கு இது புதிசில்லையே. இறந்தப்புறம் கூட புதைய விடமாட்டானுவ!
______________________________________________________________________________________________________________
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை இல்லதொழிப்பேன் : சரத் பொன்சேகா

அவன் சொல்ற புளுகே எல்லாரும் சொன்னா பிஸினஸ் பிக்கப் ஆக வேணாமா? இவரு புதுசா விடுறாரு புருடா.
______________________________________________________________________________________________________________
இலங்கை அப்பல்லோ மருத்துவமனை கோத்தபயா கையில்?

பண்ண பாவத்துக்கு ஆசுபத்திரி வாங்கலாம், மருந்து வாங்கலாம், வைத்தியருங்கள கூட வாங்கலாம், எதுவும் ஒன்னும் செய்ய முடியாம பட்டுதாண்டி கழிக்கப் போற நீயி.
______________________________________________________________________________________________________________
ஆசியாவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமாக ராஜபக்ச குடும்பம்: ரனில்

ப்தூ. ஆசியால தானா! நிவாரணத்தில அடிச்சதே அவ்வளவு காணுமே. 4000 கிலோ தங்கத்துல வந்த சண்டைன்னு சொன்னாங்களே.
______________________________________________________________________________________________________________
ஈழத்தமிழர் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றில் தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா

இதுங்களுக்கு எப்போ பொங்கும் எப்போ மங்கும்னே தெரியலையே!
______________________________________________________________________________________________________________
இலங்கை அரசின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை ஜனவரி மாதம் அயர்லாந்தில்

தேர்தல் தேதி கழிச்சி வைங்க சாமிகளா! தோக்குறவன குற்றவாளியாக்கீடலாம்.
______________________________________________________________________________________________________________
ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்கிறார் டக்ளஸ்

உனக்கு ஆப்புக்கே அந்தாளு தோக்கணும் டகுள்ஸ்.
______________________________________________________________________________________________________________
அரசியல் தீர்வு முனைப்புகள், இலங்கையில் முன்னெடுக்கப்படவேண்டும்: இந்தியா

இது என்ன புது கதை. அவன் இணைப்புக்கே வழியில்லைங்குறானே. ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்த சவுண்ட் எங்க போச்சி.
______________________________________________________________________________________________________________
இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ்வதற்கு இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?: திமுக

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காற்று என் காதில் ஏதோ சொன்னது... இதுதான் அரசியிலனென்பதா?...
______________________________________________________________________________________________________________
விடுதலைப்புலிகளின் பணத்தில் ராஜபக்சே தேர்தல் பிரசாரம்: ரணில் விக்கிரமசிங்கே

கருவாடு வித்த காசு நாறுமா என்ன? காசு காசுதானே.
______________________________________________________________________________________________________________
ஈழத் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா

தொறந்துட்டான்யா திருவாயை. இதுக்காகவே அவன் நாங்க அப்படி சொல்லவே இல்லைன்னு அடைப்பான்.
______________________________________________________________________________________________________________
36 பள்ளி- கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்

இதை முன்னாடியே செய்யாததுக்கு என்ன அபராதம்?
______________________________________________________________________________________________________________
திருச்செந்தூர் வந்தவாசி தொகுதிகளில் 19ந் தேதி முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும்: நரேஷ்குப்தா

தொறந்தே வெச்சாலும் அன்னைக்கு யாரு போய் அங்க குடிப்பாங்க. அதான் முன்னாடியே குடுத்துடுவாங்கல்ல. என்னா சீனு!
______________________________________________________________________________________________________________
வேதாரண்யம் விபத்து ஒரு பாடமாகட்டும்: வைகோ

சரியா படிக்கலைன்னு அடுத்த வருஷமும் படிக்கவா? எத்தனை பாடம்தான் படிக்கிறது. கும்பகோணத்துக்கு அப்புறம் எல்லா பள்ளியும் விதிமுறைப்படியா இருக்கு?
______________________________________________________________________________________________________________
உலகளாவிய அளவில் பேரும், புகழும் பெற்று பாரதத் திருநாட்டின் பெருமையை உயர்த்திக் காத்து வருபவர் சோனியா காந்தி.: தங்கபாலு

ஏன் டங்குவாலு! உனக்கே ஓவரா தெரியல? அந்தம்மா கட்சித் தலைவிதானே? பிரதமரா? இல்லைன்னா அவங்க விருப்பப் படிதான் எல்லாம் நடக்குது. சிங்கு டம்மிங்குறியா?
______________________________________________________________________________________________________________

50 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//ஏன் டங்குவாலு! உனக்கே ஓவரா தெரியல? அந்தம்மா கட்சித் தலைவிதானே? பிரதமரா? இல்லைன்னா அவங்க விருப்பப் படிதான் எல்லாம் நடக்குது. சிங்கு டம்மிங்குறியா?//

:-)

ஈரோடு கதிர் said...

//36 பள்ளி- கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்

இதை முன்னாடியே செய்யாததுக்கு என்ன அபராதம்?//

ஒரு நாலு நாளைக்கு இப்படி பண்ணுவாங்க

பழமைபேசி said...

தொலைபேசி, அலைபேசி இதுல உங்களுக்குண்டான ஒன்னை அனுப்பி வையுங்க பாலாண்ணே!

பழமைபேசி said...

எண் விடுபட்டு போச்சுங்க அண்ணே, அலைபேசி எண்!

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/ :-)/

இதில்ல.:-s

vasu balaji said...

ஈரோடு கதிர் said...


/ஒரு நாலு நாளைக்கு இப்படி பண்ணுவாங்க/

மொதல்ல இஸ்கோலுக்கு ஆப்பு. அப்புறம் வேனுங்களுக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//பிரியமுடன்...வசந்த் said...

/ :-)/

இதில்ல.:-s

//

ஹ ஹ ஹா லொள்ளு

vasu balaji said...

பழமைபேசி said...

/தொலைபேசி, அலைபேசி இதுல உங்களுக்குண்டான ஒன்னை அனுப்பி வையுங்க பாலாண்ணே!/

மின்னஞ்சல் அனுப்பிட்டேன் பழமை.

vasu balaji said...

வானம்பாடிகள் said...

//பிரியமுடன்...வசந்த் said...
ஹ ஹ ஹா லொள்ளு//

இல்ல. நிஜமாத்தான்.

அகல்விளக்கு said...

//ஏன் டங்குவாலு! உனக்கே ஓவரா தெரியல? அந்தம்மா கட்சித் தலைவிதானே? பிரதமரா? இல்லைன்னா அவங்க விருப்பப் படிதான் எல்லாம் நடக்குது. சிங்கு டம்மிங்குறியா?//

இதுதான் டாப்பு...

பிரபாகர் said...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்... என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது அய்யா....

பிரபாகர்.

மணிஜி said...

போட்டுத் தாக்கு...

vasu balaji said...

அகல்விளக்கு said...

/ இதுதான் டாப்பு.../

வாங்க வாங்க. நன்றி.

vasu balaji said...

பிரபாகர் said...

/ திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்... என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது அய்யா..../

அதான் ரனில் சொல்லீட்டாரே. ஆசியாலயே பெரிய பணக்காரன்னு. லாபம் இல்லாமலா?

vasu balaji said...

தண்டோரா ...... said...

/போட்டுத் தாக்கு.../

வாங்க தலைவரே:)). உங்க தாக்கு அற்புதம் இன்னைக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

ஈழத்தமிழர் அவலம் குறித்து இந்திய நாடாளுமன்றில் தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சுஷ்மா

இதுங்களுக்கு எப்போ பொங்கும் எப்போ மங்கும்னே தெரியலையே

சரியாச் சொன்னீங்க...


உலகளாவிய அளவில் பேரும், புகழும் பெற்று பாரதத் திருநாட்டின் பெருமையை உயர்த்திக் காத்து வருபவர் சோனியா காந்தி.: தங்கபாலு

ஏன் டங்குவாலு! உனக்கே ஓவரா தெரியல? அந்தம்மா கட்சித் தலைவிதானே? பிரதமரா? இல்லைன்னா அவங்க விருப்பப் படிதான் எல்லாம் நடக்குது. சிங்கு டம்மிங்குறியா

கலக்கல்

பூங்குன்றன்.வே said...

/36 பள்ளி- கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்

இதை முன்னாடியே செய்யாததுக்கு என்ன அபராதம்?//


திருந்தாத ஜென்மங்கள் ஸார் நம்ம அதிகாரிகளும்,அரசியல்வியாபாரிகளும்...

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said..

வாங்க ஆரூரன். நன்றி

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

/ திருந்தாத ஜென்மங்கள் ஸார் நம்ம அதிகாரிகளும், அரசியல்வியாபாரிகளும்../.

ஒரு விதத்தில கதிர் சொன்னா மாதிரி நாமளும்தான். நன்றிங்க

நிஜாம் கான் said...

//ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்கிறார் டக்ளஸ்//

தமிழகத்துக்கு ஒரு எட்டப்பன், லங்காவிற்கு ஒரு டக்லஸ். அந்த நாய் வெற்றி பெற இந்த நாய் பாடுபடுமாம். வள்..,வள்..,வள்..,வள்..,வள்ளல்னு சொல்ல வந்தேன் வாய் திக்கிடிச்சி.

S.A. நவாஸுதீன் said...

செம காட்டு காட்டுறீங்க சார். சூப்பர்

நிஜாம் கான் said...

அண்ணே! வழக்கமா உங்களுக்கு விழற 2 எதிர் ஓட்டுக்கள காணோமே??

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/ தமிழகத்துக்கு ஒரு எட்டப்பன், லங்காவிற்கு ஒரு டக்லஸ். அந்த நாய் வெற்றி பெற இந்த நாய் பாடுபடுமாம். வள்..,வள்..,வள்..,வள்..,வள்ளல்னு சொல்ல வந்தேன் வாய் திக்கிடிச்சி.//

ஆஹா. காலையிலயே செம ஃபார்ம்ல இருக்காப்பல. ஒரு எட்டப்பந்தானா? அது இருக்கு நிறைய.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/செம காட்டு காட்டுறீங்க சார். சூப்பர்/

வாங்க நவாஸூதீன்.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

/அண்ணே! வழக்கமா உங்களுக்கு விழற 2 எதிர் ஓட்டுக்கள காணோமே??/

வீக் எண்ட் இல்லையாண்ணே. அதுமில்லாம 8 மணிக்கா போட்டது. ஒண்ணு இன்னைக்கு விழும். மிச்ச ரெண்டு நாளைக்கு விழும்ணே.

vasu balaji said...

பார்த்துக்குங்க நிஜாம். விழுந்திடுச்சி. =))

சிங்கக்குட்டி said...

//தொறந்தே வெச்சாலும் அன்னைக்கு யாரு போய் அங்க குடிப்பாங்க. அதான் முன்னாடியே குடுத்துடுவாங்கல்ல.//

ஹ ஹ ஹ...

சிரிக்க வைத்தாலும், மக்கள் சிந்திக்க வேண்டும், ஓட்டை விற்கும் முறை மாற வேண்டும் :-)

பின்னோக்கி said...

வழக்கமான சாட்டை சுழற்றல். சுளீர். திருந்தனுமே ஜென்மங்கள் :(

vasu balaji said...

சிங்கக்குட்டி said...

/ ஹ ஹ ஹ...

சிரிக்க வைத்தாலும், மக்கள் சிந்திக்க வேண்டும், ஓட்டை விற்கும் முறை மாற வேண்டும் :-)//

விக்கலைன்னா திருடுவான்னு காரணம் சொல்லுவாங்க.

vasu balaji said...

பின்னோக்கி said...

/வழக்கமான சாட்டை சுழற்றல். சுளீர். திருந்தனுமே ஜென்மங்கள் :(/

ம்ம்.

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை அப்பல்லோ மருத்துவமனை கோத்தபயா கையில்?

பண்ண பாவத்துக்கு ஆசுபத்திரி வாங்கலாம், மருந்து வாங்கலாம், வைத்தியருங்கள கூட வாங்கலாம், எதுவும் ஒன்னும் செய்ய முடியாம பட்டுதாண்டி கழிக்கப் போற நீயி.//

எல்லோரையும் அழிச்சுட்டு, யாருக்காக மருத்துவமனை என்றுப் புரியவில்லை

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ எல்லோரையும் அழிச்சுட்டு, யாருக்காக மருத்துவமனை என்றுப் புரியவில்லை//

இது காசு பண்ண வழி. அப்போலோன்னா தமிழன்னாலும் காசு குடுத்தா பார்ப்பான் பரதேசி.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//தொலைபேசி, அலைபேசி இதுல உங்களுக்குண்டான ஒன்னை அனுப்பி வையுங்க பாலாண்ணே//

நேக்கும் -:)

thiyaa said...

வழமைபோல் நல்லாயிருக்குது

ராஜவம்சம் said...

ஏஞ்ஜாமி உங்களுக்கு இந்தமாதிரில்லாம் ஜொல்ல தரிய்மா !!!

ரொம்ப கொவமா இருக்கிங்க போல

ராஜ நடராஜன் said...

நேற்று போட வேண்டிய பின்னூட்டம் இது.Shooting dogs (Aka Beyond the gates)ன்னு ருவாண்டா படுகொலை பற்றிய படம் ஒன்று பார்க்க நேர்ந்தது.ஒப்புக்கு சப்பாணியா இருந்த ஐ.நா படையையும் அப்புறப் படுத்தி செய்யப் பட்ட இனப் படுகொலை அது.1994ல் நிகழ்ந்த படுகொலைக்கு ஆசுவாசமா பில் கிளீண்டன் காலத்தில் மன்னிப்பு கேட்கப் பட்டது.

vasu balaji said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

/ நேக்கும் -:)/

எங்க அனுப்பறது. மின்னஞ்சல் முகவரி ப்ரொஃபைல்ல இல்லையே:)

vasu balaji said...

தியாவின் பேனா said...

/வழமைபோல் நல்லாயிருக்குது/

நன்றி தியா.

vasu balaji said...

ராஜவம்சம் said...

/ ஏஞ்ஜாமி உங்களுக்கு இந்தமாதிரில்லாம் ஜொல்ல தரிய்மா !!!

ரொம்ப கொவமா இருக்கிங்க போல/

ம்கும். இது 135வது வெத்து வேட்டு கோவம்.

vasu balaji said...

ராஜ நடராஜன் said...

/நேற்று போட வேண்டிய பின்னூட்டம் இது.Shooting dogs (Aka Beyond the gates)ன்னு ருவாண்டா படுகொலை பற்றிய படம் ஒன்று பார்க்க நேர்ந்தது.ஒப்புக்கு சப்பாணியா இருந்த ஐ.நா படையையும் அப்புறப் படுத்தி செய்யப் பட்ட இனப் படுகொலை அது.1994ல் நிகழ்ந்த படுகொலைக்கு ஆசுவாசமா பில் கிளீண்டன் காலத்தில் மன்னிப்பு கேட்கப் பட்டது./

நிஜமாதான் இந்த ஐ.நா. தண்டத்துக்கு இருந்துண்டு எதுக்கு இவ்வளவு காசு தண்டம்.

Anonymous said...

தங்களின் இந்தப் பதிவானது www.tamiljournal.comசிறப்புக்கட்டுரை பகுதியில் மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளதோடு ஆக்கத்துக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

செய்திப்பிரிவு சார்பாக
மொழிவேந்தன்

கிரி said...

//தொறந்தே வெச்சாலும் அன்னைக்கு யாரு போய் அங்க குடிப்பாங்க. அதான் முன்னாடியே குடுத்துடுவாங்கல்ல. என்னா சீனு!//

:-)))) அதெல்லாம் கண்டுக்கப்படாது..

சார் நீங்க இப்பெல்லாம் நறுக்குன்னு நாலு வார்த்தை அடிக்கடி எழுதுவதில்லை.. ரொம்ப குறைச்சுட்டீங்க :-(

Chitra said...

இலங்கை தமிழர்கள் மானத்தோடு வாழ்வதற்கு இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?: திமுக

நேற்று இல்லாத மாற்றம் என்னது? காற்று என் காதில் ஏதோ சொன்னது... இதுதான் அரசியிலனென்பதா?...
____________________super punch!

vasu balaji said...

Anonymous said...

/ தங்களின் இந்தப் பதிவானது www.tamiljournal.comசிறப்புக்கட்டுரை பகுதியில் மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளதோடு ஆக்கத்துக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

செய்திப்பிரிவு சார்பாக
மொழிவேந்தன்/

நன்றிங்க மொழிவேந்தன்.

vasu balaji said...

கிரி said...

// :-)))) அதெல்லாம் கண்டுக்கப்படாது..

சார் நீங்க இப்பெல்லாம் நறுக்குன்னு நாலு வார்த்தை அடிக்கடி எழுதுவதில்லை.. ரொம்ப குறைச்சுட்டீங்க :-(//

மனசு வெறுத்துப் போகுது கிரி. ரொம்ப தாங்கமாட்டமதான் எழுதுறேன். :)

vasu balaji said...

Chitra said...

//____________________super punch!

நன்றிங்க.

Unknown said...

//ஏன் டங்குவாலு! உனக்கே ஓவரா தெரியல? அந்தம்மா கட்சித் தலைவிதானே? பிரதமரா? இல்லைன்னா அவங்க விருப்பப் படிதான் எல்லாம் நடக்குது. சிங்கு டம்மிங்குறியா?//

இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகலாமா ... இதெல்லாம் காங்கிரஸ்-ல சாதாரணம்..,

vasu balaji said...

பேநா மூடி said...

/ இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகலாமா ... இதெல்லாம் காங்கிரஸ்-ல சாதாரணம்..,/

இதுக்கு டென்ஷனாவாம எதுக்கு ஆவுறது.

நசரேயன் said...

//வேதாரண்யம் விபத்து ஒரு பாடமாகட்டும்: வைகோ

சரியா படிக்கலைன்னு அடுத்த வருஷமும் படிக்கவா? எத்தனை பாடம்தான் படிக்கிறது. கும்பகோணத்துக்கு அப்புறம் எல்லா பள்ளியும் விதிமுறைப்படியா இருக்கு?//

நறுக்கு நறுக்குன்னு இருக்கு