Thursday, November 12, 2009

பரம்பரை..

ஏய் ரமா! இங்க வா என உறுமியதில் நடுங்கிப் போய் தந்தையிடம் வந்தாள் ரமா.

கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை. நீ மெதுவா வேலியோரம் போய் நிக்குறதும், பக்கத்து வீட்டு ராஜா திருட்டுத் தனமா வேலியோரம் வந்து நிக்குறதும் முனகி முனகி பேசிக்கறதும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்ன நடக்குது அங்க என்றார்.

மெதுவாக, எனக்கு அவனப் பிடிச்சிருக்கு என்றாள் ரமா.

என்னது?  என்று அடித்தொண்டையிலிருந்து உறுமி, அடியே இங்க பாரு உம்பொண்ணு பேசுறத என்றதில் அவள் தாய் ஓடி வந்து, என்னடி என்றாள். தயங்காமல் மீண்டும் சொன்னதையே சொன்னாள் ரமா. பிடித்தது சனி, தாயும் தந்தையும் மாறி மாறி கத்தினாலும் சலனமின்றி இருந்த ரமா எனக்கு அவந்தான் வேண்டும் என்றாள்.

நம்ம ஜாதி என்ன, அவன் ஜாதி என்ன. ஏண்டி புத்தி இப்புடி போகுது உனக்கு. உனக்கு மூத்தவ இருக்கா. தலை நிமிர்ந்து பார்க்குறாளா. கொழுப்பெடுத்து திரியுது இது என்றவர், அடியே எனக்கு பொறந்தது இவளுக்கு முன்னாடி 7 பேரு. ஆம்பள புள்ள கூட இப்படி பொறுக்கியா இருக்கலை.

இவள் மட்டும் ஏண்டி இப்படி இருக்கா என்று கூறி முடிக்கும் முன்னரே ரமாவின் அம்மா மேலே பாய்ந்து தரையில் விழுத்தி மார்பின் மேல் அமர்ந்து, என்ன பத்தி தப்பா பேசின குரவளைய கடிச்சிடுவேன் ஜாக்கிரதை என்று உறுமினாள்.

மெதுவே எழுந்து, ராட்சசி, இப்போ என்னாடி கேட்டுட்டேன் என்று முனகி, திரும்ப ரமாவிடம், இங்க பாரு என் கண் எதிரில் என் பெண்ணை சாவக் குடுக்க ஒத்துக்க மாட்டேன். நம்ம ஜாதில எவ்வளவு நல்ல பசங்க இருக்காங்க.

அவங்கள்ள உனக்கு யாரை பிடிச்சிருக்கோ சொல்லு, நாங்க மறுபேச்சு பேசாம ஒத்துக்குவோம். அத விட்டு அவந்தான்னு பேசி நம்ம ஜாதிக்கு கெட்ட பேரு கொண்டு வராத. உன்னால நம்ம ஜாதிக்காரங்க அத்தனை பேருக்குமே கெட்ட பேரு என்றார்.

ரமா கோபமாக, ஜாதி என்னப்பா பெரிய ஜாதி. நம்ம ஜாதி அடையாளம் அவங்களுக்கு இல்லைன்னா அவங்க வேற ஜாதியா? நிஜமா சொல்லுங்க. அவன் கருப்புன்னு தானே உங்களுக்கு பிடிக்கலை. மினு மினுன்னு ஓங்கு தாங்கா இருக்கான்னு உங்களுக்கு அவன் மேல பொறாமை கூட இருக்கலாம். இவ்வளவு ஏன். அவங்கப்பா கூட உங்க ஃப்ரெண்ட்தானேப்பா? வாக்கிங் போறப்போ உராய்ஞ்சுகிட்டு போறப்போல்லாம் இல்லாத ஜாதி, எனக்கு பிடிச்சதால மட்டும் தெரியுதோ?

உங்களுக்கு தெரியுமா? சீதா, ராதா எல்லாம் எவ்வளவோ ட்ரை பண்ணியும் அவன் என்னதான் லவ் பண்றான். ஏம்பா புரிஞ்சிக்க மாட்டிங்க. ஜாதி ஜாதின்னு சாவறீங்க என்று எகிறினாள் ரமா?

நிறுத்துடி! ஜாதின்னு நான் சாவலைன்னா நீங்க ரெண்டு பேரும் செத்துடுவிங்க. உனக்கே தெரியும். என் எட்டு பசங்கள்ள உன் மேல எனக்கு தனி பாசம். இன்னும் 2 வருஷத்தில நான் போய் சேர்ந்துடுவேன். இப்போவே என்னால முடியல. முளைச்சி மூணு இலை விடலை, ஜாதி பத்தி பேசுறியா நீ. ஆமாம். ஜாதிதான் முக்கியம் இங்க.

நண்பனா இருக்கிறது வேற. அதுக்காக அவன் பையன் கூட உன்னைச் சேர்த்து வைக்க முடியாது. சும்மா இல்லைடி, வேளா வேளைக்கு கறியும் சோறும் ஆக்கி போட, தடுப்பூசி போட, சீக்கானா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகன்னு செய்யுறது. எங்க தலை எழுத்து, முதல்ல பொறந்த ஆறும் பொறந்த கொஞ்ச நாள்ளயே போய் சேர்ந்துட்டுதுங்க. நீயாவது இருக்கியேன்னு ஆறுதலா இருந்தா, இப்படி பண்ணி சாவைத் தேடுறியே.

இங்க பாரு, நாம எல்லாம் ஒரே ஜாதியாத்தான் இருந்தோம். நம்மளுக்குள்ள ஜாதியை உண்டாக்கி, எப்போ நம்மள வித்து பொழைக்கிறதுன்னு மனுசன் முடிவெடுத்தானோ, அன்னைக்கு ஜாதிதான் முக்கியம்னு ஆகிப்போச்சு. எங்க தாத்தன 75 ஆயிரம் குடுத்து வாங்கினான்னு சொல்லுவாரு எங்கப்பா. நீ ஆசைப் படுறியே அவங்கப்பன எனக்கு தெரிஞ்சி 1.25 லட்சத்துக்கு வாங்கினான் முதலாளி.

எங்க‌க்கா, அவ‌ங்க‌ ஜாதிக்கார‌ன‌ ல‌வ் ப‌ண்ண‌து பார்த்துட்டு, மான‌மே போச்சேன்னு சுட்டு கொன்னுட்டாம்மா முத‌லாளி. அந்த‌ கொடுமைய‌ என‌க்கு கொடுத்துடாத‌. வேலி தாண்டி போய் நீ வாழ்ந்த‌ நேர‌மிருக்காது. அவ‌ன் கொன்னுடுவான்டா.

வாங்க‌ வ‌ற‌வ‌ன் கிட்ட‌ ஜாதி பேரு சொல்லி, அப்பா பேரு அம்மா பேரு சொல்லி சொல்லி விப்பானுங்க‌டா. பேர‌ம் பேசினா குடுக்க‌மாட்டான்டா முத‌லாளி. பெடிகிரீன்னா என்னான்னே தெரியாத‌ புற‌ம்போக்குக்கு என் கென்ன‌ல்ல‌ இருந்து சீக்கு புடிச்ச‌ நாய‌ கூட‌ த‌ர‌மாட்டேன்னு விர‌ட்டி விட்டுடுவான்டா  என் செல்ல‌ம்.

வ‌ய‌சான‌ கால‌த்துல‌ எங்க‌ளுக்கு இந்த‌ துக்க‌த்த‌ குடுத்துடாத‌ம்மா என்று முன‌கி அழும் தாயோடும் த‌ந்தையோடும் சேர்ந்து முன‌கி அழும் அல்சேஷ‌ன் ர‌மாவை ஏக்க‌த்தோடு பார்த்தான் ப‌க்க‌த்து வ‌லைக்குள் இருந்த‌ டாபர்மேன் ராஜா.

(பொறுப்பி : வசந்த், பின்னோக்கியின் இடுகைகளைப் பார்த்ததில் எனக்கும் இப்படி எழுத வருமா என சோதித்த வினை. நன்றி நண்பர்களே!)


81 comments:

vasu balaji said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஓட்டு மட்டும் போட்டு ஒன்னும் சொல்லாம போய்ட்டாங்களப்பா. ஊட்டுக்கு போற அவசரமோ. செரி. நமக்கு நாமே திட்டம் இருக்கவே இருக்கு. மீ த பஸ்ட்டு=))

மணிஜி said...

ம்ம்ம்...சரி...நடத்துங்க

vasu balaji said...

தண்டோரா ...... said...

/ம்ம்ம்...சரி...நடத்துங்க/

ஹி ஹி..வாங்கண்ணே.

க.பாலாசி said...

//ரமாவின் அம்மா மேலே பாய்ந்து தரையில் விழுத்தி மார்பின் மேல் அமர்ந்து//

என்னடாயிது ஆரம்பமே சரியில்லையேன்னு பார்த்தேன்.

அங்கயும் சாதி சண்டையா.....இதுல சாதிய தேடி மனுஷனுங்களுக்குள்ள சண்ட வராம இருந்தா சரிதான். ஏன்னா ஏற்கனவே வீதிக்கொரு சாதி சங்கம் இருக்கு.....

கற்பனையும் கதையும் நல்லாருக்கு....

vasu balaji said...

க.பாலாசி said...
/அங்கயும் சாதி சண்டையா.....இதுல சாதிய தேடி மனுஷனுங்களுக்குள்ள சண்ட வராம இருந்தா சரிதான். ஏன்னா ஏற்கனவே வீதிக்கொரு சாதி சங்கம் இருக்கு.....

கற்பனையும் கதையும் நல்லாருக்கு..../

அதயேன் கேக்குறீங்க. பெடிகிரி செர்டிஃபிகேட்லாம் குடுக்குறாங்களாம்ல. வாரண்டி மாதிரி. =))

கலகலப்ரியா said...

naaaaa-samaaa pochchu...! ean sir ungalukku intha velai..!

இராகவன் நைஜிரியா said...

அண்ணே தாங்க முடியலை அண்ணே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (நாய் கணக்கா இப்பிடி அழ வுட்டீட்ங்களே...)

இராகவன் நைஜிரியா said...

பின்னூட்டம் 10 வரலை ஆனால் தமிழிஷில் 10 ஓட்டு வாங்கிட்டீங்க..

இதுவே ஒரு பெரிய சாதனை அண்ணே..

இராகவன் நைஜிரியா said...

// நமக்கு நாமே திட்டம் இருக்கவே இருக்கு. //

தமிழ் நாட்டின் தலை நகரில் வாழ்ந்துகிட்டு இது கூடத் தெரியலைன்னா எப்படி?

vasu balaji said...

கலகலப்ரியா said...

/naaaaa-samaaa pochchu...! ean sir ungalukku intha velai..!/


செரி செரீஈஈஈஈஈ.சாரி:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே தாங்க முடியலை அண்ணே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (நாய் கணக்கா இப்பிடி அழ வுட்டீட்ங்களே...)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..சாரி

இராகவன் நைஜிரியா said...

// கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை. நீ மெதுவா வேலியோரம் போய் நிக்குறதும், பக்கத்து வீட்டு ராஜா திருட்டுத் தனமா வேலியோரம் வந்து நிக்குறதும் முனகி முனகி பேசிக்கறதும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்ன நடக்குது அங்க என்றார். //

அட்டகாசமுங்க... அந்த காலத்து சினிமாவில் வரும் வசனம் மாதிரியே இருக்கு..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/பின்னூட்டம் 10 வரலை ஆனால் தமிழிஷில் 10 ஓட்டு வாங்கிட்டீங்க..

இதுவே ஒரு பெரிய சாதனை அண்ணே../

=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ தமிழ் நாட்டின் தலை நகரில் வாழ்ந்துகிட்டு இது கூடத் தெரியலைன்னா எப்படி?/

=)). அய்யோ சாமி. இப்படி வேற இருக்கோ.

இராகவன் நைஜிரியா said...

// மெதுவாக எனக்கு அவனப் பிடிச்சிருக்கு என்றாள் ரமா. //

அப்ப வேகமா பிடிக்கலையா... (சும்மா ஒரு இதுக்காக நீங்க போட்டு இருந்த கமாவை எடுத்துட்டு படிச்சு பார்த்தேன்..)

இராகவன் நைஜிரியா said...

// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஓட்டு மட்டும் போட்டு ஒன்னும் சொல்லாம போய்ட்டாங்களப்பா //

நான் இருக்கேன் இல்ல... வேலை இருக்கு, இருந்தாலும் அண்ணனுக்காக ஒரு 10 பின்னூட்டம் போட்டுட்டு அப்பாலிக்க போய் வேலையை கவனிக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// அத விட்டு அவந்தான்னு பேசி நம்ம ஜாதிக்கு கெட்ட பேரு கொண்டு வராத. உன்னால நம்ம ஜாதிக்காரங்க அத்தனை பேருக்குமே கெட்ட பேரு என்றார். //

அது சரி... ஒருத்தராலேயே எல்லோருக்கும் கேடா?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அட்டகாசமுங்க... அந்த காலத்து சினிமாவில் வரும் வசனம் மாதிரியே இருக்கு../

கவிதைன்னாதான் வயசுங்கறாங்க, நீங்க இதுலயும் அந்தக்காலம்னு இழுத்து விடுறீங்களேண்ணே=))

இராகவன் நைஜிரியா said...

// இவள் மட்டும் ஏண்டி இப்படி இருக்கா என்று கூறி முடிக்கும் முன்னரே ரமாவின் அம்மா மேலே பாய்ந்து தரையில் விழுத்தி மார்பின் மேல் அமர்ந்து, என்ன பத்தி தப்பா பேசின குரவளைய கடிச்சிடுவேன் ஜாக்கிரதை என்று உறுமினாள்.//

ரமா சூப்பர் டெரர் போலிருக்கு... காதல் என்று வந்திட்டாலே, அப்பம், ஆத்தா கண்ணுக்கு தெரியாதுங்களா?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/அப்ப வேகமா பிடிக்கலையா... (சும்மா ஒரு இதுக்காக நீங்க போட்டு இருந்த கமாவை எடுத்துட்டு படிச்சு பார்த்தேன்..)/

இது த்ரீ மச்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/நான் இருக்கேன் இல்ல... வேலை இருக்கு, இருந்தாலும் அண்ணனுக்காக ஒரு 10 பின்னூட்டம் போட்டுட்டு அப்பாலிக்க போய் வேலையை கவனிக்கிறேன்./

அது அது.ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்கண்ணே=))

இராகவன் நைஜிரியா said...

// வாங்க‌ வ‌ற‌வ‌ன் கிட்ட‌ ஜாதி பேரு சொல்லி, அப்பா பேரு அம்மா பேரு சொல்லி சொல்லி விப்பானுங்க‌டா. //

ஜாதி வச்சு வியாபரம் நடத்தறாங்க என்பது மட்டும் உண்மை - அது மனுஷனா இருந்தாலும் சரி, மாடா இருந்தாலும் சரி, நாயா இருந்தாலும் சரி.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/
அது சரி... ஒருத்தராலேயே எல்லோருக்கும் கேடா?/

ஒரு நாக்குட்டி என்னா விலை=))

இராகவன் நைஜிரியா said...

// வ‌ய‌சான‌ கால‌த்துல‌ எங்க‌ளுக்கு இந்த‌ துக்க‌த்த‌ குடுத்துடாத‌ம்மா என்று முன‌கி அழும் தாயோடும் த‌ந்தையோடும் சேர்ந்து முன‌கி அழும் அல்சேஷ‌ன் ர‌மாவை ஏக்க‌த்தோடு பார்த்தான் ப‌க்க‌த்து வ‌லைக்குள் இருந்த‌ டாபர்மேன் ராஜா.
//

பக்கத்தில் இருந்த டாபர்மேன் ப்ளாக்கர் ராஜான்னு போடுங்கண்ணே அப்பத்தான் இன்னும் வித்யாசமா இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

25

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...
/ஜாதி வச்சு வியாபரம் நடத்தறாங்க என்பது மட்டும் உண்மை - அது மனுஷனா இருந்தாலும் சரி, மாடா இருந்தாலும் சரி, நாயா இருந்தாலும் சரி./

நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/
அது சரி... ஒருத்தராலேயே எல்லோருக்கும் கேடா?/

ஒரு நாக்குட்டி என்னா விலை=))//

சத்தியமா தெரியாதுங்க... என்ன மிஞ்சி மிஞ்சி போனா 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரத்துக்குள் இருக்கும் என நினைக்கின்றேன்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/பக்கத்தில் இருந்த டாபர்மேன் ப்ளாக்கர் ராஜான்னு போடுங்கண்ணே அப்பத்தான் இன்னும் வித்யாசமா இருக்கும்./

சொந்தக் காசுல சூனியமா? வடிவேலு சொன்னா மாதிரி எனக்கு மூக்கு பொடப்பா இருக்குண்ணே=))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

அது அது.ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்கண்ணே=)) //

அதுவும் 10,000 + கிமீ அப்பாலிக்கா இருந்து..

உங்க சந்தோஷம்தான் எங்க சந்தோஷம் அண்ணே..

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/சத்தியமா தெரியாதுங்க... என்ன மிஞ்சி மிஞ்சி போனா 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரத்துக்குள் இருக்கும் என நினைக்கின்றேன்./

அது பெங்களூர் சிவாஜி மார்கட்ல ஷாம்பூ போட்டு விக்கிற நாய் விலைண்ணே. =))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...


சொந்தக் காசுல சூனியமா? வடிவேலு சொன்னா மாதிரி எனக்கு மூக்கு பொடப்பா இருக்குண்ணே=)) //

அண்ணே சும்மா சாதரணமாகத்தான் எழுதினேன்.. அது இந்த மாதிரி அர்த்தம் கொடுத்துடுச்சு. நினைச்சுக் கூட பார்க்கவில்லை.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அதுவும் 10,000 + கிமீ அப்பாலிக்கா இருந்து..

உங்க சந்தோஷம்தான் எங்க சந்தோஷம் அண்ணே../

அஹா. நன்றிண்ணே. அவ்வ்வ்வ்வ்(பீலிங்க்சு)

வெண்ணிற இரவுகள்....! said...

எதோ ஒன்று குறைவதை போலவே உள்ளது .......கதை நன்றாக இருந்தாலும்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...


நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. //

நாங்களும் அதைத்தான் அண்ணே சொல்லுகின்றோம்.

தமிழ் அமுதன் said...

அண்ணே ..! எண்ணன்ணே இது ???;;))

பாதி படிக்கும்போது நல்லா இருக்கேன்னு நான் வேற இந்த வாசகத்த காபி பண்ணி வைச்சேன் ..!

//உங்களுக்கு தெரியுமா? சீதா, ராதா எல்லாம் எவ்வளவோ ட்ரை பண்ணியும் அவன் என்னதான் லவ் பண்றான் ///

கலக்குறீங்க அசத்துங்க ...!

இராகவன் நைஜிரியா said...

// வெண்ணிற இரவுகள்....! said...
எதோ ஒன்று குறைவதை போலவே உள்ளது .......கதை நன்றாக இருந்தாலும் //

கண்டுபிடிச்சு எடுத்து போட்டுகுங்க... அப்படி இல்லாட்ட் எவ்வளவு குறைகிறதோ அதுக்கு தகுந்த மாதிரி பின்னூட்டத்தை கூட போட்டு விடுங்க..

vasu balaji said...

வெண்ணிற இரவுகள்....! said...

/எதோ ஒன்று குறைவதை போலவே உள்ளது .......கதை நன்றாக இருந்தாலும்/

ம்ம்ம்ம். என்ன செய்யலாம். நாய்க் கதை தானே. அதுங்களயே கண்டு பிடிக்க விடலாம்.=))

இராகவன் நைஜிரியா said...

// ஜீவன் said...
அண்ணே ..! எண்ணன்ணே இது ???;;))

பாதி படிக்கும்போது நல்லா இருக்கேன்னு நான் வேற இந்த வாசகத்த காபி பண்ணி வைச்சேன் ..!

//உங்களுக்கு தெரியுமா? சீதா, ராதா எல்லாம் எவ்வளவோ ட்ரை பண்ணியும் அவன் என்னதான் லவ் பண்றான் ///

கலக்குறீங்க அசத்துங்க ...! //

அதான் பொறுப்பி போட்டு இருக்காரில்ல... ஒரு முயற்சி அப்படின்னு..

vasu balaji said...

ஜீவன் said...

/அண்ணே ..! எண்ணன்ணே இது ???;;))

பாதி படிக்கும்போது நல்லா இருக்கேன்னு நான் வேற இந்த வாசகத்த காபி பண்ணி வைச்சேன் ..!

கலக்குறீங்க அசத்துங்க ...!/

=)). நன்றி

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
வெண்ணிற இரவுகள்....! said...

/எதோ ஒன்று குறைவதை போலவே உள்ளது .......கதை நன்றாக இருந்தாலும்/

ம்ம்ம்ம். என்ன செய்யலாம். நாய்க் கதை தானே. அதுங்களயே கண்டு பிடிக்க விடலாம்.=)) //

அது சரிதாங்க...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே சும்மா சாதரணமாகத்தான் எழுதினேன்.. அது இந்த மாதிரி அர்த்தம் கொடுத்துடுச்சு. நினைச்சுக் கூட பார்க்கவில்லை./

நானும் தமாஷாதான் சொன்னேன்=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கண்டுபிடிச்சு எடுத்து போட்டுகுங்க... அப்படி இல்லாட்ட் எவ்வளவு குறைகிறதோ அதுக்கு தகுந்த மாதிரி பின்னூட்டத்தை கூட போட்டு விடுங்க../

ரைட்டு=))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அதான் பொறுப்பி போட்டு இருக்காரில்ல... ஒரு முயற்சி அப்படின்னு../

அது பின்னாடில்ல வருது=))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே போதுமான்னே..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது. நடை அருமை.

ஈரோடு கதிர் said...

தங்காச்சிய்ய்ய்ய்ய்ய நாய் கட்ச்சுடுச்சு...னு ஜனகராஜ் சொல்வாரெ.... ஒருவேளை இந்த நாய்தானோ அது....

புலவன் புலிகேசி said...

அடக் கொடுமையே உங்களுக்கும் இந்த வியாதி வந்துடுச்சா. நீங்க இந்த மாதிரி உள்குத்து வச்சி எழுதுவீங்கன்னு தெரியாம ரொம்ப சீரியசாப் படிச்சி ஏமாந்துட்டேன். சூப்பரு.....

பின்னோக்கி said...

சார்.. இப்ப எல்லாரும் டிவிஸ்ட் கதை மூடுல இருக்காங்க. உங்க பேர் எழுதுனா கூட அதுல எதாவது டிவிஸ்ட் இருக்கான்னு பார்ப்பாங்க :).
கதை யூகிக்க முடிஞ்சாலும், நல்லாவே இருக்கு. தொடருங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே போதுமான்னே../

நிறைவா இருக்குண்ணே=)) தேங்க்ஸ்

vasu balaji said...

ஸ்ரீ said...

/ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது. நடை அருமை./

நன்றிங்க ஸ்ரீ

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/தங்காச்சிய்ய்ய்ய்ய்ய நாய் கட்ச்சுடுச்சு...னு ஜனகராஜ் சொல்வாரெ.... ஒருவேளை இந்த நாய்தானோ அது..../

=)). ஆஹா

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

/அடக் கொடுமையே உங்களுக்கும் இந்த வியாதி வந்துடுச்சா. நீங்க இந்த மாதிரி உள்குத்து வச்சி எழுதுவீங்கன்னு தெரியாம ரொம்ப சீரியசாப் படிச்சி ஏமாந்துட்டேன். சூப்பரு...../

தம்பிங்க அசத்துறப்ப நம்மளால முடியுமான்னு ஒரு சுய சோதனை. நன்றிங்க

vasu balaji said...

பின்னோக்கி said...

/சார்.. இப்ப எல்லாரும் டிவிஸ்ட் கதை மூடுல இருக்காங்க. உங்க பேர் எழுதுனா கூட அதுல எதாவது டிவிஸ்ட் இருக்கான்னு பார்ப்பாங்க :).
கதை யூகிக்க முடிஞ்சாலும், நல்லாவே இருக்கு. தொடருங்க./

ம்கும். உங்கள பார்த்து தான் கெட்டு போனேன்.=))

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நமக்கு நாமே திட்டம் இருக்கவே இருக்கு. மீ த பஸ்ட்டு=))//


இது தல டச்!

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே........ரூம் போட்டு யோசிப்பீங்களோ.......

ம்ம்ம்ம்.....கலக்கறீங்க....

vasu balaji said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நமக்கு நாமே திட்டம் இருக்கவே இருக்கு. மீ த பஸ்ட்டு=))//


இது தல டச்!//

ஹி ஹி. நன்றி

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே........ரூம் போட்டு யோசிப்பீங்களோ.......

ம்ம்ம்ம்.....கலக்கறீங்க..../

=)). நன்றி ஆரூரன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயோடா.. நீங்களுமா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முடியல... அவ்வ்வ்வ்வ்வ்...

நல்ல இருந்தது பாலாண்ணே..

geethappriyan said...

// கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை. நீ மெதுவா வேலியோரம் போய் நிக்குறதும், பக்கத்து வீட்டு ராஜா திருட்டுத் தனமா வேலியோரம் வந்து நிக்குறதும் முனகி முனகி பேசிக்கறதும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்ன நடக்குது அங்க என்றார். //

ஐயா நல்ல கதை சிரிப்பு தாங்கலை
நல்லா இருந்தது ஓட்டுக்கள் போட்டாச்சு:))))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/ஐயோடா.. நீங்களுமா?/

சாரி. ஆர்வக் கோளாரு:).

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

/முடியல... அவ்வ்வ்வ்வ்வ்...

நல்ல இருந்தது பாலாண்ணே../

நன்றிங்க.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said

/ஐயா நல்ல கதை சிரிப்பு தாங்கலை
நல்லா இருந்தது ஓட்டுக்கள் போட்டாச்சு:))))/

நன்றிங்க.

cheena (சீனா) said...

அய்யோ - கத படிசிட்டே வந்தேன் - நசுன்னு கொஞ்சம்கூட எதிர்பாராத முடிவு - நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் நண்ப பாலா

துபாய் ராஜா said...

சரியான 'லொள்'ளு பதிவு...

பிரபாகர் said...

ஒரு சம்பவம் பல கோணங்கள்...

வானம்பாடிகள் அய்யா எழுதிய பரம்பரை.. படிக்கும்போதே, நமக்கு ஒரு சிறு பொறி தட்டுப்பட, இதோ களத்துல இறங்கிட்டோம்ல...


உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்காம, முதல் ரெண்டு பாராவ படிக்கும் போதே வேற ஒரு கதைக்கு பொறி தட்ட, கருவை எழுதி வெச்சிட்டு தொடர... நல்லா ஏமாத்திப்புட்டீங்க நாயின்னு சொல்லு. எனக்கு வேணும், எனக்கு வேணும். இருந்தாலும் விடறதா இல்ல. எழுதத்தான் போறேன்.

நல்லாருக்குங்கய்யா!

பிரபாகர்.

thiyaa said...

கதை நன்றாக, இயல்பான பேச்சுவழக்கில் வந்துள்ளது.
என்ன சாதி - சண்டை என்று ஒரே தடாலடியா நகர்கிறது அவ்வளவுதான்.
அதவிட சமூக சீரழிவு, சந்தேகம் , நட்பு வேற - உறவுவேற என்ற வித்தியாசம் ,
காதல் - மோதல் என அட்டகாசமா நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நைனா...கலக்கல்...

ரகசியம் ஒண்ணு சொல்லவா சேம் போஸ்ட் ட்ராஃப்ட்ல இருந்துச்சு ஆனா நீ ரிலீஸ் பண்ணிட்ட...வட போச்சே...

vasu balaji said...

cheena (சீனா) said...

/அய்யோ - கத படிசிட்டே வந்தேன் - நசுன்னு கொஞ்சம்கூட எதிர்பாராத முடிவு - நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் நண்ப பாலா/

:). நன்றி சார்.

vasu balaji said...

துபாய் ராஜா said...

/சரியான 'லொள்'ளு பதிவு.../

சரியான லொள்ளு பின்னூட்டம்=)) நன்றி ராஜா.

vasu balaji said...

பிரபாகர் said...

/எழுதத்தான் போறேன்.

நல்லாருக்குங்கய்யா!

பிரபாகர்./

படிச்சேன். நல்லாருக்கு=)). நன்றி பிரபாகர்.

vasu balaji said...

தியாவின் பேனா said...

/ கதை நன்றாக, இயல்பான பேச்சுவழக்கில் வந்துள்ளது.
என்ன சாதி - சண்டை என்று ஒரே தடாலடியா நகர்கிறது அவ்வளவுதான்./

நன்றி தியா

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/நைனா...கலக்கல்...

ரகசியம் ஒண்ணு சொல்லவா சேம் போஸ்ட் ட்ராஃப்ட்ல இருந்துச்சு ஆனா நீ ரிலீஸ் பண்ணிட்ட...வட போச்சே.../

அய்யோ சாரி வசந்து. உன் ஸ்டைலே வேற்..இதப் போட்டு சொதப்பிட்டனா:((..அவ்வ்வ்

VISA said...

//ரகசியம் ஒண்ணு சொல்லவா சேம் போஸ்ட் ட்ராஃப்ட்ல இருந்துச்சு ஆனா நீ ரிலீஸ் பண்ணிட்ட...வட போச்சே...//

ஐய்யயோ அங்க வேறயா....வேண்டாம்ய்யா.....விட்டிறுங்க....

கதைய ரொம்ப சீரியஸா படிச்சு ஏமாந்துட்டேன். நல்லா எழுதி கடைசியில ஏமாத்திட்டீங்க.

vasu balaji said...

VISA said...

/ஐய்யயோ அங்க வேறயா....வேண்டாம்ய்யா.....விட்டிறுங்க....

கதைய ரொம்ப சீரியஸா படிச்சு ஏமாந்துட்டேன். நல்லா எழுதி கடைசியில ஏமாத்திட்டீங்க./

வாங்க. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

சூர்யா ௧ண்ணன் said...

யூத்ஃபுல் விகடனில் உங்க கவிதை "மௌனம்" சூப்பர் தலைவா!

வாழ்த்துக்கள் தலைவா!

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

/யூத்ஃபுல் விகடனில் உங்க கவிதை "மௌனம்" சூப்பர் தலைவா!

வாழ்த்துக்கள் தலைவா/

நன்றி தலைவா

சத்ரியன் said...

//வ‌ய‌சான‌ கால‌த்துல‌ எங்க‌ளுக்கு இந்த‌ துக்க‌த்த‌ குடுத்துடாத‌ம்மா என்று முன‌கி அழும் தாயோடும் த‌ந்தையோடும் சேர்ந்து முன‌கி அழும் அல்சேஷ‌ன் ர‌மாவை ஏக்க‌த்தோடு பார்த்தான் ப‌க்க‌த்து வ‌லைக்குள் இருந்த‌ டாபர்மேன் ராஜா.//

பாமரன்,


நடத்துங்க...!

என் நெத்திக்கு நேரா என் ஆள்காட்டி விரலை வெச்சிக்கிட்டேன்.

"உனக்கு வேணுன்டா சத்ரியா. ஒக்காந்து சீரியஸா படிச்ச பாரு, உனக்கு இது வேணும்"

vasu balaji said...

சத்ரியன் said...
/பாமரன்,


நடத்துங்க...!

என் நெத்திக்கு நேரா என் ஆள்காட்டி விரலை வெச்சிக்கிட்டேன்.

"உனக்கு வேணுன்டா சத்ரியா. ஒக்காந்து சீரியஸா படிச்ச பாரு, உனக்கு இது வேணும்"/

அவ்வ்வ்வ். வசந்து எழுதுனா மட்டும் சூப்பரு, கொன்னுட்டம்பாய்ங்க. =))

S.A. நவாஸுதீன் said...

சார் உங்க குசுப்புக்கு அளவே இல்லை போங்க. கடைசி வரைக்கும் நம்பி படிச்சேனே.

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/சார் உங்க குசுப்புக்கு அளவே இல்லை போங்க. கடைசி வரைக்கும் நம்பி படிச்சேனே./

=)). இப்போ என்ன நடந்து போச்சு.இருக்கறது தானே