Wednesday, October 7, 2009

பதிவர் கூடலில் வடிவேலு!

(பொறுப்பி: நம்ம திண்ணைக்கு தவறாம வந்து ஊக்குவிக்கும் நண்பர்களின் பால் உரிமையுடன் நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்ட இடுகை இது. ஏதேனும் வருத்தம் விளைந்திடின் பிழை பொறுத்து, மறக்காமல் சுட்டவும் வேண்டுகிறேன்.  யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.  )

முன்னூட்டம்: சுற்றுப் பயணமாக இந்தியா வந்த கலகலப்ரியா வடபழனி முருகன் கோவிலுக்கு போவதாக ஒரு கற்பனையில் தொடங்குகிறது. ஆரம்பமே டெர்ரரில் தொடக்கமாகிறது பயணம். எலக்ட்ரிக் ட்ரெயினில் வெள்ளரிக்காய் தின்றுகொண்டு போகலாம் என்று அடம் பிடிக்கிறார் கலகலா. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருக்கும் ஆட்டோ நண்பர்கள் கேட்கும் கட்டணத்தின் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாகவும், ஆட்டோ பயணத்தில் கலகலாவுக்கு உள்ள வெறுப்பின் காரணமாகவும் அங்கிருந்து நடந்து செல்லலாம் என்று நானே வைத்துக் கொண்ட ஆப்பு.

கலகலா: சார். வழி தெரியலைன்னா யாரையாவது கேளுங்க.(அவ்வளவு நம்பிக்கை)

நான்: எனக்குத் தெரியாதாம்மா? நீ வா.

கலகலா: சார். சரியாத்தான் போறமா? இல்லை நீங்க இடுகை எழுதறா மாதிரி தொடங்கிட்டு எங்க போகன்னு தெரியாம சுத்தி சுத்தி வருவீங்களே அப்படியா?

நான்: இல்லம்மா. நேரா போய் ரைட்ல திரும்பினா மெயின் ரோடு. அங்க இருந்து கிட்டதான்.

கலகலா: சார். இவ்வளவு நேரமா போறோம் மெயின் ரோடே காணோமே. ஆமாம் சரியாதானே திரும்பினீங்க?

நான்: (மிரண்டு சுற்றுமுற்றும் பார்க்க ராகவேந்திரா கலியாண மண்டபம். அய்யோ இது இடப்பக்கத்தில இல்ல வரும்னு பதறிப் போய் விழி பிதுங்கி நின்றபடி) இல்லம்மா லெஃப்ட்ல திரும்பிட்டோம் போல.

கலகலா: எனக்கு அப்போவே சந்தேகம்.

நான்: ஏம்மா. உனக்கு ஊரு தெரிய வேணாம். லெஃப்ட் ரைட் தெரியும்லம்மா? சொல்லி இருக்கலாம்ல!

கலகலா:சார். கார்லாம் இந்தப்பக்கமா போகவும் எங்க ஊர் நினைப்பில ரைட்னு நினைச்சிட்டேன். உங்களுக்கு லெஃப்ட் ரைட் தெரிய வேணாம். ஊரு தெரியும்ல. ஏன் இப்படி திரும்பினீங்க?

(அதற்குள் அண்ணே என்றபடி ஒருவர் ஓடி வருகிறார்)

அவர்: நீங்க ரெண்டு பேரும் பதிவர் தானே?

நான்: ஆமாங்க. எப்புடி கண்டு பிடிச்சீங்க?

அவர்: இல்லண்ணே. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டிருந்தீங்களா. அவங்க பேசி முடியற வரைக்கும் காத்திருந்து நீங்க பேசி, நீங்க முடிக்கிற வரைக்கும் காத்திருந்து அவங்க பேசின்னு சண்டை பதிவரால மட்டும்தான போட முடியும்.

(அதற்குள் நிறைய வணக்கம், அண்ணே பரிமாற்றம். தேடித் தேடி வந்து வணக்கம் சொல்லுகிறார்கள் அவருக்கு. அந்த கேப்பில்(gap) ...)

கலகலா: யார் சார் இவர்? தெரியுமா.

நான்: பதிவர பத்தி எல்லாம் பேசுறாரு. எல்லாரும் பாசமா வணக்கம் சொல்றாங்க. நைஜீரியா இராகவன்னு நினைக்கிறேன். இங்க எப்புடின்னு தெரியலையேம்மா?

அவர்: சார், இங்க சண்டை போடாதீங்க சார். ந்யூசன்ஸ் கேஸ்ல புடிச்சிடுவாங்க. அதுக்குதானே இங்க கூடல் நடக்குது. உள்ள வந்து போடுங்க சார் சண்டையை!

(அப்பொழுதுதான் பேனர் கண்ணில் படுகிறது பதிவர் கூடல்)

அவர்: யக்கா. நீங்க கலகலப்ரியா தானே!

கலகலா: நீங்க இராகவாச்சார்யா தானே!

நான்: அப்பாடா! மீ த எஸ்கேப்பு!

அவ‌ர்:எப்ப‌டிம்மா க‌ண்டு பிடிச்சீங்க‌?

க‌ல‌க‌லா: நீங்க‌ எப்ப‌டி சார் க‌ண்டு பிடிச்சீங்க‌?

இராக‌வ‌ன்:இப்புடி ப‌ட்டு ப‌ட்டுன்னு பின்னூட்ட‌ம் சாரி ப‌தில் சொல்ற‌து நீங்க‌தானே அக்கா அதான்!

க‌ல‌க‌லா: இப்புடி எல்லாருக்கும் ந‌ல்ல‌வ‌ரா பாச‌மா வ‌ண‌க்க‌ம் சொல்றாங்க‌ன்னா நீங்களாத்தானே இருக்க முடியும்.

இராக‌வ‌ன்: ச‌ரி ச‌ரி. உள்ள‌ வாங்க‌க்கா. இவ‌ரு யாருன்னு தெரிஞ்சா மாதிரியும் இருக்கு தெரியாத‌ மாதிரியும் இருக்கே!

க‌ல‌க‌லா: வான‌ம்பாடி என்கிற‌ பாலா என்கிற‌..

இராக‌வ‌ன்: தெரியுது தெரியுதுக்கா. ஃபோட்டோவ‌ விட‌ நேர்ல‌ ரொம்ப‌ பேக்கு மாதிரி இருக்கிற‌தால‌ குழ‌ம்பிட்டேன். வாங்க‌ண்ணே உள்ள‌ போலாம்.

(க‌ல‌க‌லா என்னை முறைக்கிறார். அர்த்த‌ம்: வான‌ம்பாடி. நீ வாடி. இம்சை அர‌ச‌னுக்கு தூது வ‌ந்த‌ புறாக்கு ஆன‌துதான்டி உன‌க்கும்)

(நான் பாவமாக பார்க்கிறேன். அர்த்தம்:க‌த‌வோர‌மா உக்காந்துட்டு ஓடிட‌ட‌லாம்மா.)

திரும்ப‌வும் இராக‌வ‌ன் ஓடி வ‌ருகிறார். அக்கா அக்கா. நீங்க‌தான் ஒரு உத‌வி ப‌ண்ண‌னும்.

க‌ல‌கலா: என்ன‌ சார்!

இராக‌வ‌ன்:விழாத் த‌லைவ‌ர் வ‌ர‌ நேர‌மாச்சு. வ‌ர‌வேற்க‌ யாரும் தோது ப‌ட‌லைம்மா. எல்லாம் அடிதடின்னு வந்தா எஸ்ஸார‌துக்கு வ‌ச‌தியா ஜீன்ஸ், சூடின்னு வ‌ந்திருக்காங்க‌. நீங்க‌தான் ப‌ட்டுப் புடவைல‌ வ‌ந்திருக்கீங்க‌.

க‌ல‌க‌லா: நான் கோவிலுக்கு வ‌ந்தேன். இதெல்லாம் இந்தாளால‌ வ‌ந்த‌து. வான‌ம்பாடீஈஈஈஈஈ

நான்: சார். விட்றுங்க‌ சார்.

இராக‌வ‌ன்:அக்கா! வ‌ந்த‌தும் வ‌ர‌வேற்று கிள‌ம்புங்க‌க்கா. ப்ளீஸ்.

(க‌ல‌கலா த‌ல‌ எழுத்துடா சாமி என்ற‌வாறு மேசைய‌ருகில் செல்கிறார். இராகவன், அண்ணே நீங்க கூட்டிட்டு வாங்க, நான் உள்ளே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று எஸ்கேப் ஆகிறார்.  ஒரு ஹோண்டா சிடி வ‌ர‌ அதிலிருந்து வ‌டிவேலு இற‌ங்குகிறார்.)

நான்:அண்ணே வாங்க‌ண்ணே. நீங்க‌ளாண்ணே. ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்ணே.

வ‌டிவேலு: வ‌ண‌க்க‌ம்ணே. கொள்ள‌ப் பேரு வ‌ந்திருக்காய்ங்க‌ போல‌. நான்தான் லேட்டோ?

நான்:அதெல்லாம் இல்ல‌ண்ணே. உள்ள‌ வாங்க‌ண்ணே.

வ‌டிவேலு:தெதெதெ. நிறுத்து நிறுத்து. யாரு த‌ண்ணிய‌ ஊத்த‌ற‌து மேல‌. தைரிய‌மிருந்தா எதிர்ல‌ நின்னு ஊத்து. அதென்ன‌ ஒளிஞ்சிருந்து ஊத்த‌ற‌து சின்ன‌ப்புள்ள‌ த‌ன‌மா!

நான்: அண்ணே. த‌ண்ணி இல்ல‌ண்ணே. ப‌ன்னீரு தெளிச்சாங்க‌ண்ணே வ‌ர‌வேற்க‌ற‌துக்கு. அங்காருங்க‌ க‌ல‌க‌ல‌ப்ரியா.

வ‌டிவேலு: நீதான் தெளிச்சியா பாப்பா. எந்த‌ வ‌குப்பு ப‌டிக்க‌ற‌.

நான்: ண்ணே. அந்த‌ம்மா ப‌டிக்க‌ல‌ண்ணே. வேலைக்கு போறாங்க‌. மேசை கொஞ்ச‌ம் உச‌ர‌ம் அதான். அவ‌ங்க‌ளும் ப‌திவ‌ர்ணே. சிவ‌ சிவா.

க‌ல‌க‌ல‌:கை கூப்பிய‌ப‌டி சிவ‌னை அறிந்த‌வ‌ர் சீவ‌னை அறிவார், அடியே பாட்டி ம‌ர‌த்துல‌ க‌ல்லால‌ அடிச்சி மாங்காயை விளுத்தின‌து ம‌ற‌ந்து போச்சாடி. ப‌ன்னீர் சொம்பு கைல‌ இருக்கா இல்லையா. சீவ‌னை அறிந்த‌வ‌ர் சிவ‌ன‌றிந்தாரே... வான‌ம்பாடி ப‌தின‌ஞ்சி நிமிச‌த்தில‌ கிள‌ம்ப‌ற வ‌ழிய‌ப்பாருங்க‌. இல்லைன்னா ம‌ண்டையோ ப‌ன்னீர் சொம்போ ஏதோ ஒண்ணுதான் மிஞ்சும் என்று முணுமுணுத்தவாறே லேப்டாப்பை ஆன் செய்தார் ப்ரியா.   

நான்: பாருங்க‌ண்ணே இதுதான் அவ‌ங்க‌ ப‌திவு. க‌ல‌க‌ல‌ப்ரியான்னு. ரொம்ப‌ ந‌ல்லா எழுதுவாங்க‌ண்ணே. த‌ன் க‌விதைக்கு தானே உரை எழுதின‌ ஒரே ப‌திவ‌ர்ணே.

வ‌டிவேலு:ஆங்.அப்புடியா. எங்க‌ பார்க்கலாம்.(பார்த்துக் கொண்டே இருந்த‌வ‌ர் மேல் க‌ண்ணால்  க‌ல‌க‌லாவைப் பார்த்த‌வாறு)ஏம்மா! எங்க‌ள‌ பார்த்தா எப்புடி தெரியுது?

க‌ல‌க‌லா: ஏன் சார். என்ன‌ பிர‌ச்ச‌ன‌?

வ‌டிவேலு:இது என்னா?

க‌ல‌க‌லா:ஜிமிக்கி. அதுக்கென்னா?

வ‌டிவேலு:காதுல‌ ஜிமிக்கி போட்டா க‌ல‌க‌ல‌ன்னு ச‌த்த‌ம் வ‌ருமா? கால்ல‌ கொலுசு போட்டாதான் வ‌ரும். இப்புடி ப‌ட‌த்த‌ போட்டு கொள்ள‌ பேத்த‌ ஏமாத்தியிருக்க‌ நீயி. ந‌ம்ம‌கிட்ட‌யேவா. நாம‌ யாரு. சூனா பானா தெரியும்ல‌. ஒளுங்கா கொலுசு போட்ட‌ கால் ப‌ட‌ம் போடு.

க‌ல‌க‌ல‌: அப்புடியா. க‌ல‌க‌ல‌ப்ரியா கீழ‌ என்ன‌ எழுதியிருக்கு கொஞ்ச‌ம் பாக்க‌றீங்க‌ளா?

வ‌டிவேலு:என்னாஆஆது! லக்கலக்கலக்கலக்க (ட‌ரிய‌லாகி)அடிப்பாவி. அவ‌ளா நீயீ. (மா..மா..மாப்பூஊஊஊ வ‌ச்சிட்டாடா ஆப்பூஊஊஊ என்றலறியவாறு வ‌டிவேலு எஸ் ஆக‌ லகலகா க‌ல‌க‌ல‌வென‌ சிரிக்கிறார்)

(தொடருமோ முற்றுமோ உங்க ஊக்கத்தைப் பொறுத்து)

80 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//க‌ல‌க‌லா:ஜிமிக்கி. அதுக்கென்னா?

வ‌டிவேலு:காதுல‌ ஜிமிக்கி போட்டா க‌ல‌க‌ல‌ன்னு ச‌த்த‌ம் வ‌ருமா? கால்ல‌ கொலுசு போட்டாதான் வ‌ரும். இப்புடி ப‌ட‌த்த‌ போட்டு கொள்ள‌ பேத்த‌ ஏமாத்தியிருக்க‌ நீயி. ந‌ம்ம‌கிட்ட‌யேவா. நாம‌ யாரு. சூனா பானா தெரியும்ல‌. ஒளுங்கா கொலுசு போட்ட‌ கால் ப‌ட‌ம் போடு.

க‌ல‌க‌ல‌: அப்புடியா. க‌ல‌க‌ல‌ப்ரியா கீழ‌ என்ன‌ எழுதியிருக்கு கொஞ்ச‌ம் பாக்க‌றீங்க‌ளா?

வ‌டிவேலு:என்னாஆஆது! லக்கலக்கலக்கலக்க (ட‌ரிய‌லாகி)அடிப்பாவி. அவ‌ளா நீயீ. (மா..மா..மாப்பூஊஊஊ வ‌ச்சிட்டாடா ஆப்பூஊஊஊ என்றலறியவாறு வ‌டிவேலு எஸ் ஆக‌ லகலகா க‌ல‌க‌ல‌வென‌ சிரிக்கிறார்)//


சூப்பர் தலைவா!
ஜிமிக்கி மேட்டர் சூப்பர், கலகலப்ரியா இன்னும் வரலை போல, வந்தாங்கன்னா, உங்க டப்பா டான்ஸ் ஆடிடும் தலைவா!
உங்க நிலைமையை அப்புறம் வந்து பார்க்கிறேன்.

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்
/சூப்பர் தலைவா!
ஜிமிக்கி மேட்டர் சூப்பர், கலகலப்ரியா இன்னும் வரலை போல, வந்தாங்கன்னா, உங்க டப்பா டான்ஸ் ஆடிடும் தலைவா!
உங்க நிலைமையை அப்புறம் வந்து பார்க்கிறேன்./

அவ்வ்வ்வ். ஆமாம் சூர்யா. எனக்கு சிவபுராணம் வேற தெரியாது. வெறும் நகம் கடிச்சிகிட்டு உக்காந்திருக்கேன்.

ஈரோடு கதிர் said...

//நான்: பாருங்க‌ண்ணே இதுதான் அவ‌ங்க‌ ப‌திவு. க‌ல‌க‌ல‌ப்ரியான்னு. ரொம்ப‌ ந‌ல்லா எழுதுவாங்க‌ண்ணே. த‌ன் க‌விதைக்கு தானே உரை எழுதின‌ ஒரே ப‌திவ‌ர்ணே. //

பிரியாஆஆஆஆஆஆ..... பன்னீர் சொம்பால இன்னும் மண்டைய உடைக்கலையா!!!!!!!???

ஈரோடு கதிர் said...

என்னானானானாது.... முற்றுமா!!!!!....

உடமாட்டோம்ல..... பின்னுங்கண்ணே....

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/பிரியாஆஆஆஆஆஆ..... பன்னீர் சொம்பால இன்னும் மண்டைய உடைக்கலையா!!!!!!!???/

ஆண்டவா. எல்லாரும் பீதிய கெளப்புறாங்களே.அவ்வ்வ்வ்

ஈரோடு கதிர் said...

//யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். )//


No auto... only train

ஈரோடு கதிர் said...

//இப்புடி ப‌ட‌த்த‌ போட்டு கொள்ள‌ பேத்த‌ ஏமாத்தியிருக‌ நீயி.//

அட நீங்களுமாண்ணே!!!

என்னமோ போங்க.... எல்லா ஏமாந்த பயபுள்ளைகளாவே இருக்கு

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/என்னானானானாது.... முற்றுமா!!!!!....

உடமாட்டோம்ல..... பின்னுங்கண்ணே....//

எண்ட அம்மா வந்து கிழிக்காம விட்டா பார்க்கலாம்:))

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/No auto... only train/
நாங்க பேசின் ப்ரிட்ஜ்லயே நிப்பாட்டிடுவோம்ல. நியூஸ் படிச்சிருப்பீங்களே. ஒரு அதிகாரி மனைவி வந்த ரயில 10 நிமிஷம் சிக்னல் இல்லைன்னு அங்க போட்டதுக்கு தங்கமணி குடுத்த குடைச்சல்ல ரங்கமணி பேயாடி, அதுக்கு சமாதானம் பண்ண சஸ்பெண்ட் பண்ணி அடுத்த நாள் பல்டியடிச்சின்னு நாறுதே=))

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/அட நீங்களுமாண்ணே!!!

என்னமோ போங்க.... எல்லா ஏமாந்த பயபுள்ளைகளாவே இருக்கு/

அது வடிவேலு எஃபக்டுக்கு போட்டது.

சூர்யா ௧ண்ணன் said...

இன்னுமா வரல அவிய்ங்க?...

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்

/இன்னுமா வரல அவிய்ங்க?.../

காணேமே. இனிமே கடிக்க நகம் கூட இல்லை. அவ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

எங்க அக்கா வரட்டும் அப்பறம் இருக்குடி..எல்லாருக்கும் அப்பறம் வந்து நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்.....

கலக்கல் பாலா சார்

பிரபாகர் said...

//இல்லண்ணே. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டிருந்தீங்களா. அவங்க பேசி முடியற வரைக்கும் காத்திருந்து நீங்க பேசி, நீங்க முடிக்கிற வரைக்கும் காத்திருந்து அவங்க பேசின்னு சண்டை பதிவரால மட்டும்தான போட முடியும். //

அய்யா, எல்லா வரிகளையும் எடுத்து விமர்சிக்கலாம்போல் இருக்கு. அருமையாய் நகைச்சுவையில் பின்னி பெடலேடுத்திருக்கிறீர்கள். எல்லாம் அனுபவம்.

நீர் மொக்கையின் மன்னர்தாம், ஒத்துக்கொள்கிறோம்...

மிக அருமை.

பிரபாகர்.

பிரபாகர் said...

5/5.... கண்டிப்பா தொடரனும்....

பிரபாகர்...

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/எங்க அக்கா வரட்டும் அப்பறம் இருக்குடி..எல்லாருக்கும் அப்பறம் வந்து நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்.....

கலக்கல் பாலா சார்/

கலக்கலுக்கு நன்றி சொன்னா கூட விழுமோ? சரி நானும் அப்புறம் சொல்லிக்கிறேன். அவ்வ்வ்

vasu balaji said...

பிரபாகர்
/அய்யா, எல்லா வரிகளையும் எடுத்து விமர்சிக்கலாம்போல் இருக்கு. அருமையாய் நகைச்சுவையில் பின்னி பெடலேடுத்திருக்கிறீர்கள். எல்லாம் அனுபவம்./

சம்மந்தப்பட்ட கலகலாவும், இராகவன் சாரும் வந்து சொல்லிட்டா தைரியமா நன்றி சொல்லலாம். அவருமில்ல ஸ்ட்ரைக் பண்றாரு.

/நீர் மொக்கையின் மன்னர்தாம், ஒத்துக்கொள்கிறோம்...

மிக அருமை./

இதுக்கு பேருதான் மொக்கையா?=))

/5/5.... கண்டிப்பா தொடரனும்..../

ஏன் இன்னைக்கு 4/4 இல்லை. =)) தொடரலாம்னுதான் நினைக்கிறேன்.

கலையரசன் said...

"மே ஏக் பார் கமிட்மெண்ட் கர்த்தீத்தி.. மே பீச்சே நை ஆட்டேகா!!"

அதுமாதிரி எழுதுனுமுன்னு நினைச்சா எழுதிடுங்க தலைவா!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))

துபாய் ராஜா said...

அருமை சார். :))

கோடம்பாக்கம் ஸ்டேசன்லயிருந்து அக்காவை நடத்தியே கூட்டிட்டு வர்றீங்களா... இன்னும் மெயின் ரோடே வரலை. அதுக்குள்ளே இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ.... மீனாட்சி காலேஜ்,பவர் ஹவுஸ்,ராம் தியேட்டருன்னு இன்னும் ஒரு வருசத்துக்கு மேட்டர் இருக்குதே....

நீங்க தொடருங்க... நாங்க ஊக்கறோம்..... :))

துபாய் ராஜா said...

ஆமா... சம்பந்தப்பட்டவங்களைத் தவிர மத்த சொந்தக்காரங்கள்லாம் வந்துட்டம்... என்ன இன்னும் ப்ரியாக்காவையும்,இராகவாச்சார்யாவையும் காணோம்.... :))

பிரபாகர் said...

//ஆமா... சம்பந்தப்பட்டவங்களைத் தவிர மத்த சொந்தக்காரங்கள்லாம் வந்துட்டம்... என்ன இன்னும் ப்ரியாக்காவையும்,இராகவாச்சார்யாவையும் காணோம்.... :))//

//ராம் தியேட்டருன்னு இன்னும் ஒரு வருசத்துக்கு மேட்டர் இருக்குதே....//

வெளியூர்ல இருக்காங்கல்ல.... கொஞ்சம் நேரமாகும்.

ராம் தியேட்டர் இப்போ மண்டபமா ஆயிடுச்சி ராஜா...

ஆரூரன் விசுவநாதன் said...

பாலா கலக்கறீங்க.....

நடத்துங்க....நடத்துங்க......


சூப்.....பருப்பு...

இராகவன் நைஜிரியா said...

வந்துட்டோமில்ல...

இராகவன் நைஜிரியா said...

மீ த 25த் பின்னூட்டம்

இராகவன் நைஜிரியா said...

// யாரும் ஆட்டோ அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். //

நோ ஆட்டோஸ்... ஒன்லி ப்ளைட்ஸ்...

சரி போனாப் போகுதுன்னு கொஞ்சம் நைஜிரியா இ-மெயில் அனுப்பலாமா?

இராகவன் நைஜிரியா said...

// சார். வழி தெரியலைன்னா யாரையாவது கேளுங்க.(அவ்வளவு நம்பிக்கை) //

அது சரி... எங்க போகணும் அப்படின்னு ஞாபகம் இருக்கான்னு கேட்காமவிட்டாங்களே?

இராகவன் நைஜிரியா said...

// (அதற்குள் அண்ணே என்றபடி ஒருவர் ஓடி வருகிறார்) //

ஓடி வந்தாரா? இல்ல ஓடிப் போனாரா?

இராகவன் நைஜிரியா said...

// இல்லண்ணே. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டிருந்தீங்களா. அவங்க பேசி முடியற வரைக்கும் காத்திருந்து நீங்க பேசி, நீங்க முடிக்கிற வரைக்கும் காத்திருந்து அவங்க பேசின்னு சண்டை பதிவரால மட்டும்தான போட முடியும். //

சரியான அவதானிப்பு பதிவர்களைப் பற்றி

vasu balaji said...

கலையரசன்
/"மே ஏக் பார் கமிட்மெண்ட் கர்த்தீத்தி.. மே பீச்சே நை ஆட்டேகா!!"

அதுமாதிரி எழுதுனுமுன்னு நினைச்சா எழுதிடுங்க தலைவா!!/

இதுக்கு நான் சமச்சீர் கல்வி படிக்கணும். நன்றி தலைவா

vasu balaji said...

ஸ்ரீ
/:))))/

நன்றி ஸ்ரீ

இராகவன் நைஜிரியா said...

// (அதற்குள் நிறைய வணக்கம், அண்ணே பரிமாற்றம். தேடித் தேடி வந்து வணக்கம் சொல்லுகிறார்கள் அவருக்கு. அந்த கேப்பில்(gap) ...)//

தேடி வந்து வணக்கம் சொல்லுகிறார்கள் அவருக்கு... அண்ணே.. நான் ரொம்ப சிறியவன்... என்னைப் போய்.. ஒரு பெரிய லெவலுக்கு தூக்குறீங்களே... வேண்டாமண்ணே... அழுதுறுவேன்.... அவ்....அவ்...

பிரபாகர் said...

வாங்க ராகவன்... உங்கள வெச்சி படம் ஓட்டிகிட்டு இருக்காங்க, கதாநாயகனே இப்போ தான் வர்றீங்க... welcome, welcome....

பிரபாகர்.

vasu balaji said...

துபாய் ராஜா
/அருமை சார். :))/
/நீங்க தொடருங்க... நாங்க ஊக்கறோம்..... :))/
மெட்ராஸ் தமிழ்ல செம ஊக்குன்னா உதைன்னுல்ல அர்த்தம்.
/ஆமா... சம்பந்தப்பட்டவங்களைத் தவிர மத்த சொந்தக்காரங்கள்லாம் வந்துட்டம்... என்ன இன்னும் ப்ரியாக்காவையும்,இராகவாச்சார்யாவையும் காணோம்.... :))/

வந்தாச்சி வந்தாச்சி:))

இராகவன் நைஜிரியா said...

// அவர்: யக்கா. நீங்க கலகலப்ரியா தானே! //

காது ஜிமிக்கி வச்சே கண்டுபிடிச்சுடுவோமில்ல...

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்
/சூப்.....பருப்பு.../

சூப்.....பருப்பா..பருப்பு சூப்பா. பொருத்திருந்து தான் பார்க்கணும். நன்றி ஆரூரன்.

அதென்னா அன்புடன் ஆரூரன் போடாம..அவ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர்
October 7, 2009 7:17 PM
வாங்க ராகவன்... உங்கள வெச்சி படம் ஓட்டிகிட்டு இருக்காங்க, கதாநாயகனே இப்போ தான் வர்றீங்க... welcome, welcome....

பிரபாகர். //

கதாநாயகனாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ???

சரி சம்பளம் எவ்வளவுன்னு சொல்லலீங்க... கொஞ்சம் பார்த்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க...

ஒரு டூயட் சாங் ஸ்விஸில் வைக்கச் சொல்லுங்க... ஐரோப்பா பதிவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

// நான்: அப்பாடா! மீ த எஸ்கேப்பு! //

எங்க போறது... விட மாட்டோமில்ல...

இராகவன் நைஜிரியா said...

// இராக‌வ‌ன்:இப்புடி ப‌ட்டு ப‌ட்டுன்னு பின்னூட்ட‌ம் சாரி ப‌தில் சொல்ற‌து நீங்க‌தானே அக்கா அதான்! //

சரியாச் சொன்னீங்க... எப்படிங்க இப்படியெல்லாம்

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/வந்துட்டோமில்ல.../
/மீ த 25த் பின்னூட்டம்/
/நோ ஆட்டோஸ்... ஒன்லி ப்ளைட்ஸ்.../

வாங்க சார். ஆஹா ட்ரெயின்ல இருந்து இப்போ ஃப்ளைட்.
/சரி போனாப் போகுதுன்னு கொஞ்சம் நைஜிரியா இ-மெயில் அனுப்பலாமா?/

நோ நோ பேட் வர்ட்ஸ். வானம்பாடி பாவம்.பாலாண்ணே பாவம்.
/அது சரி... எங்க போகணும் அப்படின்னு ஞாபகம் இருக்கான்னு கேட்காமவிட்டாங்களே?/
நாந்தான் முருகா முருகான்னு சொல்லிட்டே வந்தேனா. அதான் கேக்கலை.

துபாய் ராஜா said...

//ராம் தியேட்டர் இப்போ மண்டபமா ஆயிடுச்சி ராஜா...//

இப்போ இல்லை பிரபாகர்.ஏழெட்டு வருசத்துக்கு மேல ஆச்சு... நானே நிறைய கல்யாணத்துக்கு போயிருக்கேன். ஒரு அடையாளத்துக்காக அப்படி சொன்னேன்.... :))

இராகவன் நைஜிரியா said...

// க‌ல‌க‌லா: இப்புடி எல்லாருக்கும் ந‌ல்ல‌வ‌ரா பாச‌மா வ‌ண‌க்க‌ம் சொல்றாங்க‌ன்னா நீங்களாத்தானே இருக்க முடியும். //

என்னை அவங்க நல்லவன் சொன்னாங்கம்மா... இந்த வசனம் ஞாபகத்துக்கு வருதுங்க...

பிரபாகர் said...

//ஒரு டூயட் சாங் ஸ்விஸில் வைக்கச் சொல்லுங்க... ஐரோப்பா பதிவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும்//

இங்க சிங்கப்பூர் வாங்க ராகவன், ஒரு ஃபைட் சீன் வெச்சிடுவோம்...

ஈரோடு கதிர் said...

me 44th

இராகவன் நைஜிரியா said...

// இராக‌வ‌ன்: தெரியுது தெரியுதுக்கா. ஃபோட்டோவ‌ விட‌ நேர்ல‌ ரொம்ப‌ பேக்கு மாதிரி இருக்கிற‌தால‌ குழ‌ம்பிட்டேன். வாங்க‌ண்ணே உள்ள‌ போலாம்.//

அண்ணே உங்களை அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் அண்ணே... போட்டோவை விட நேரில் ரொம்ப அழகா இருக்காரேன்னு கொழம்பிப் போயிட்டேன் அப்படின்னு வேணும்னா வச்சுக்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர்
October 7, 2009 7:25 PM
//ஒரு டூயட் சாங் ஸ்விஸில் வைக்கச் சொல்லுங்க... ஐரோப்பா பதிவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும்//

இங்க சிங்கப்பூர் வாங்க ராகவன், ஒரு ஃபைட் சீன் வெச்சிடுவோம்...
//

அண்ணே பிராபகர் அண்ணே அதுக்கு எல்லாம் டூப் போட்டு வச்சு முடிச்சுட சொல்லுங்க... இந்த உடம்பு அடி எல்லாம் தாங்காதுங்க

இராகவன் நைஜிரியா said...

// க‌ல‌க‌லா: வான‌ம்பாடி என்கிற‌ பாலா என்கிற‌.. //

பாமரன் என்கிற வானம்பாடி பாமரன் என்கிற பாலா அண்ணன்...

பிரபாகர் said...

கதிர் பார்த்த டே பாய் லேட்டா வர்றாரு...

இராகவன் நைஜிரியா said...

// க‌ல‌க‌லா: நான் கோவிலுக்கு வ‌ந்தேன். இதெல்லாம் இந்தாளால‌ வ‌ந்த‌து. வான‌ம்பாடீஈஈஈஈஈ //

கலகலக்ப்ரியா அக்காவுக்கு இரண்டு மூன்று பற்கள் உடைந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து இருக்கு அண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// பிரபாகர்
October 7, 2009 7:31 PM
கதிர் பார்த்த டே பாய் லேட்டா வர்றாரு... //

பிறந்த நாள் கொண்டாடிட்டு வர வேண்டாமாங்களா?

க.பாலாசி said...

//கலகலா: சார். சரியாத்தான் போறமா? இல்லை நீங்க இடுகை எழுதறா மாதிரி தொடங்கிட்டு எங்க போகன்னு தெரியாம சுத்தி சுத்தி வருவீங்களே அப்படியா?//

இவ்வளவு கரைட்டா சொன்ன எங்க அக்கா வாழ்க.......

//அவர்: இல்லண்ணே. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டிருந்தீங்களா. அவங்க பேசி முடியற வரைக்கும் காத்திருந்து நீங்க பேசி, நீங்க முடிக்கிற வரைக்கும் காத்திருந்து அவங்க பேசின்னு சண்டை பதிவரால மட்டும்தான போட முடியும்.//

ஹி...ஹி....நம்மளபத்தி நாமளே சொல்லலாமா.......

//இராக‌வ‌ன்: தெரியுது தெரியுதுக்கா. ஃபோட்டோவ‌ விட‌ நேர்ல‌ ரொம்ப‌ பேக்கு மாதிரி இருக்கிற‌தால‌ குழ‌ம்பிட்டேன். வாங்க‌ண்ணே உள்ள‌ போலாம்.//

அவருக்கும் தெரிஞ்சிடுச்சா....

நல்ல காமடி....

இராகவன் நைஜிரியா said...

ஹையா 50வது பின்னூட்டமும் நானே போட்டு இருக்கேன்...

வெரி குட், வெரி குட்... ராகவா கீப் இட் அப்..(இது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாராட்டிக் கொள்வது)

இராகவன் நைஜிரியா said...

அலுவலகத்தில் இருப்பதால் இதற்கு மேல் கும்மி அடிக்க முடியவில்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

மீதி கும்மிகளை மாலை வீட்டிற்கு வந்த பின், நெட் கனெக்ஷன் சரியாக கிடைத்தால் போடப் படும் என்பதை மிக பணிவண்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தமிழ் அஞ்சல் said...

//கலகலா:சார். கார்லாம் இந்தப்பக்கமா போகவும் எங்க ஊர் நினைப்பில ரைட்னு நினைச்சிட்டேன்.//


))):1

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/அண்ணே உங்களை அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் அண்ணே... போட்டோவை விட நேரில் ரொம்ப அழகா இருக்காரேன்னு கொழம்பிப் போயிட்டேன் அப்படின்னு வேணும்னா வச்சுக்கலாம்./

இப்போதான் ஆம்பிளைங்க அழகில்லைன்னு ஜீவன் இடுகை பார்த்தேன். இதுக்கெல்லாம் மசங்குவமா?

/கலகலக்ப்ரியா அக்காவுக்கு இரண்டு மூன்று பற்கள் உடைந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து இருக்கு அண்ணே./

இது என் பல்லுக்கு வைக்கிற வினை

/ஹையா 50வது பின்னூட்டமும் நானே போட்டு இருக்கேன்...

வெரி குட், வெரி குட்... ராகவா கீப் இட் அப்..(இது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பாராட்டிக் கொள்வது)/

அங்க இருந்து கவுண்டமணி பின்னூட்டத்தில இதெல்லாம் ஜகஜமப்பாங்கறாரு.

vasu balaji said...

க.பாலாஜி
/இவ்வளவு கரைட்டா சொன்ன எங்க அக்கா வாழ்க......./
/ஹி...ஹி....நம்மளபத்தி நாமளே சொல்லலாமா......./
/அவருக்கும் தெரிஞ்சிடுச்சா....

நல்ல காமடி..../

மேல எல்லாரும் தொடரச் சொல்லி சொல்லி இருக்காங்களே. பாக்கறதில்லையா? நாளைக்கு நம்மள இந்த வானம்பாடி என்ன பண்ணப் போறானோன்னு யோசிக்க வேணாமா. இப்புடி வாயை குடுத்து மாட்டிக்கிறீங்களே பதிவர்களா! அவ்வ்வ்வ்

vasu balaji said...

திருப்பூர் மணி Tirupur mani

/))):1/

முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன். நன்றி மணி சார்.

தமிழ் அமுதன் said...

ஹா.ஹா ..நல்லாருக்கு..தொடருங்கள் .!!

எம்.எம்.அப்துல்லா said...

தொடரும் :)

கலகலப்ரியா said...

முதல்ல.. என்னிய அக்கான்னு சொல்லி யூத் ஆக ட்ரை பண்ற எல்லா பெருசுங்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு.. ! என்ன எழுதி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்.. !

கலகலப்ரியா said...

சந்திரமுகிக்கு தந்தி அடிச்சி வரவழைக்கிறீங்களே சார் ஏன் இந்த தற்கொலை வெறி..?!

கலகலப்ரியாக்கு இந்த பழிவாங்கற வேலை எல்லாம் புடிக்காது..! புடிக்கலைன்னா மரியாதையா ஒதுங்கி போற ஆளுலே.. ! ஆனா சந்திரமுகி கொலையே பண்ணிப்பிட்டு அங்கனயே உக்காந்து புட்டு சாப்புடுற ஆளு..!

கலகலப்ரியா said...

//எலக்ட்ரிக் ட்ரெயினில் வெள்ளரிக்காய் தின்றுகொண்டு போகலாம் என்று அடம் பிடிக்கிறார்//

வெள்ளரிக்கா சாப்டுறது டெர்ரர்ன்னு இப்போதான் சார் தெரியும்..

//இல்லை நீங்க இடுகை எழுதறா மாதிரி தொடங்கிட்டு எங்க போகன்னு தெரியாம சுத்தி சுத்தி வருவீங்களே அப்படியா//

பரவால்ல உங்க கற்பனை கொஞ்சம் உண்மையும் கலந்து வருது..

//
கலகலா: எனக்கு அப்போவே சந்தேகம்//

உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க சார்.. இப்டியா கேட்பேன்.. ஹெஹெஹே..

//இப்புடி ப‌ட‌த்த‌ போட்டு கொள்ள‌ பேத்த‌ ஏமாத்தியிருக்க‌ நீயி.//

இதில யாரு எப்டி ஏமாந்தாங்க சார்..? ஃபைனான்ஸ் கம்பனி நடத்தின ரேஞ்சுக்கு சொல்லிப்டீங்க சார்.. நல்லா இருங்க..

//
(தொடருமோ முற்றுமோ உங்க ஊக்கத்தைப் பொறுத்து)//

எது? என்னிய வச்சி காமெடி பண்றதா?

ப்ரியமுடன் வசந்த் said...

//முதல்ல.. என்னிய அக்கான்னு சொல்லி யூத் ஆக ட்ரை பண்ற எல்லா பெருசுங்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு.. ! என்ன எழுதி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்.. !//

என்னியவா சொன்னீங்க..

சீ போ உங்கூட கா.....

கலகலப்ரியா said...

//
சூப்பர் தலைவா!
ஜிமிக்கி மேட்டர் சூப்பர், கலகலப்ரியா இன்னும் வரலை போல, வந்தாங்கன்னா, உங்க டப்பா டான்ஸ் ஆடிடும் தலைவா!
உங்க நிலைமையை அப்புறம் வந்து பார்க்கிறேன்.//

நான் ரொம்ப சாதுங்னா..

கலகலப்ரியா said...

////முதல்ல.. என்னிய அக்கான்னு சொல்லி யூத் ஆக ட்ரை பண்ற எல்லா பெருசுங்களுக்கும் ஒரு பெரிய கும்பிடு.. ! என்ன எழுதி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்.. !//

என்னியவா சொன்னீங்க..

சீ போ உங்கூட கா.....//

அட ச்சே.. நீ என்னிய மாதிரி யூத்.. உன்னிய சொல்லுவேனா தம்பி...

கலகலப்ரியா said...

//கதிர் - ஈரோடு Says:


//நான்: பாருங்க‌ண்ணே இதுதான் அவ‌ங்க‌ ப‌திவு. க‌ல‌க‌ல‌ப்ரியான்னு. ரொம்ப‌ ந‌ல்லா எழுதுவாங்க‌ண்ணே. த‌ன் க‌விதைக்கு தானே உரை எழுதின‌ ஒரே ப‌திவ‌ர்ணே. //

பிரியாஆஆஆஆஆஆ..... பன்னீர் சொம்பால இன்னும் மண்டைய உடைக்கலையா!!!!!!!???//

கதிர் இந்த மண்டைக்கேல்லாம் செம்பு தாங்காது... ஆனா மண்டை உடையறது மட்டும் நிச்சயம்டி..

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆனா சந்திரமுகி கொலையே பண்ணிப்பிட்டு அங்கனயே உக்காந்து புட்டு சாப்புடுற ஆளு..//

நான் முன்னாடியே சொன்னேன் பாலா சார் நீங்க கேக்கலை

கலகலப்ரியா said...

//துபாய் ராஜா..//

நீங்களுமா ஐயா.. :(.. யார நம்பறதுன்னே தெரியல இந்த காலத்தில..

கலகலப்ரியா said...

//பிரியமுடன்...வசந்த் Says:

//ஆனா சந்திரமுகி கொலையே பண்ணிப்பிட்டு அங்கனயே உக்காந்து புட்டு சாப்புடுற ஆளு..//

நான் முன்னாடியே சொன்னேன் பாலா சார் நீங்க கேக்கலை//

அது பட்டும் திருந்தாத கேஸ்..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா Says:

// க‌ல‌க‌லா: நான் கோவிலுக்கு வ‌ந்தேன். இதெல்லாம் இந்தாளால‌ வ‌ந்த‌து. வான‌ம்பாடீஈஈஈஈஈ //

கலகலக்ப்ரியா அக்காவுக்கு இரண்டு மூன்று பற்கள் உடைந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து இருக்கு அண்ணே.//

தோடா இவிங்களுக்கு நான் அக்கான்னா எனக்கு பல்லு வேற இருக்குதாமில்ல.. அது உடைய வேற செய்றதாமில்ல.. இதுக்கு வானம்பாடி சார் கற்...பனையே பரவால்ல..

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா Says:
October 7, 2009 7:20 PM

// பிரபாகர்
October 7, 2009 7:17 PM
வாங்க ராகவன்... உங்கள வெச்சி படம் ஓட்டிகிட்டு இருக்காங்க, கதாநாயகனே இப்போ தான் வர்றீங்க... welcome, welcome....

பிரபாகர். //

கதாநாயகனாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ???

சரி சம்பளம் எவ்வளவுன்னு சொல்லலீங்க... கொஞ்சம் பார்த்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க...

ஒரு டூயட் சாங் ஸ்விஸில் வைக்கச் சொல்லுங்க... ஐரோப்பா பதிவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும்//

ஒரு கொலை விழுந்த மாதிரியும் இருக்கும்... :-l

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு கொலை விழுந்த மாதிரியும் இருக்கும்... :-l//

ஹையோ ஹையோ

ஹ ஹ ஹ ஹா...

இதுக்குத்தான் இம்பூட்டு நேரம் வெயிட்டிங்.....

vasu balaji said...

@@ஜீவன்
நன்றிங்க.
@@எம்.எம்.அப்துல்லா
நன்றிங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.
அனைவருக்கும் நன்றி.

Unknown said...

// வ‌டிவேலு:தெதெதெ. நிறுத்து நிறுத்து. யாரு த‌ண்ணிய‌ ஊத்த‌ற‌து மேல‌. தைரிய‌மிருந்தா எதிர்ல‌ நின்னு ஊத்து. அதென்ன‌ ஒளிஞ்சிருந்து ஊத்த‌ற‌து சின்ன‌ப்புள்ள‌ த‌ன‌மா!

நான்: அண்ணே. த‌ண்ணி இல்ல‌ண்ணே. ப‌ன்னீரு தெளிச்சாங்க‌ண்ணே வ‌ர‌வேற்க‌ற‌துக்கு. அங்காருங்க‌ க‌ல‌க‌ல‌ப்ரியா.

வ‌டிவேலு: நீதான் தெளிச்சியா பாப்பா. எந்த‌ வ‌குப்பு ப‌டிக்க‌ற‌.

நான்: ண்ணே. அந்த‌ம்மா ப‌டிக்க‌ல‌ண்ணே. வேலைக்கு போறாங்க‌. மேசை கொஞ்ச‌ம் உச‌ர‌ம் அதான். அவ‌ங்க‌ளும் ப‌திவ‌ர்ணே. சிவ‌ சிவா. //






ஹ...ஹ..ஹா........ செம காமெடி.... இது டாப்பு.........!!






// வ‌டிவேலு:காதுல‌ ஜிமிக்கி போட்டா க‌ல‌க‌ல‌ன்னு ச‌த்த‌ம் வ‌ருமா? கால்ல‌ கொலுசு போட்டாதான் வ‌ரும். இப்புடி ப‌ட‌த்த‌ போட்டு கொள்ள‌ பேத்த‌ ஏமாத்தியிருக்க‌ நீயி. ந‌ம்ம‌கிட்ட‌யேவா. நாம‌ யாரு. சூனா பானா தெரியும்ல‌. ஒளுங்கா கொலுசு போட்ட‌ கால் ப‌ட‌ம் போடு. //


அட ஆமால்ல......






ஹ..ஹ..ஹா........ !! செம கலக்கல் பதிவி....!! இதுக்கு நம்ம ப்ரியா அம்முனிகிட்ட இருந்து எதாவது எதிர்பதிவு........??

தமிழ் நாடன் said...

சரியான கலக்கல் அண்ணே!

vasu balaji said...

லவ்டேல் மேடி

/ஹ..ஹ..ஹா........ !! செம கலக்கல் பதிவி....!! இதுக்கு நம்ம ப்ரியா அம்முனிகிட்ட இருந்து எதாவது எதிர்பதிவு........??/

சாரி. எங்கம்மா இங்கயே கிழிச்சி ஒட்டி பங்க்சர் ஒட்டும்.

vasu balaji said...

தமிழ் நாடன்
/சரியான கலக்கல் அண்ணே!/

நன்றிங்க

டவுசர் பாண்டி said...

//(மிரண்டு சுற்றுமுற்றும் பார்க்க ராகவேந்திரா கலியாண மண்டபம். அய்யோ இது இடப்பக்கத்தில இல்ல வரும்னு பதறிப் போய் விழி பிதுங்கி நின்றபடி) இல்லம்மா லெஃப்ட்ல திரும்பிட்டோம் போல.//

தலீவா !! இன்னா மேரி அசால்ட்டா எழ்திகீரீங்கோ !! சபாஷ் !! அடி தூள் , பின்னிட்டிங்கோ !!

அத்த பதிவர் சந்திப்பு , எங்க நாங்களும் வந்து கலந்துகர்த்துக்கு தான் , அக்காங் !! எங்கள எல்லாம் கூப்புட மாட்டீங்களா ? தொடரட்டும் ,

லேட்டா வந்தாலும் இந்த டவுசரு லேட்டஸ்ட்டா , வரேன் ! ஆமாம் , டவுசருக்கு அனுமதி உண்டா !! ( அட நான் எம்பேர சொன்னேம்பா )

vasu balaji said...

டவுசர் பாண்டி

/நன்றிங்க பாண்டி. இன்னா தலீவா. அனுமதி அது இதுனு பெரி பெரி வார்தல்லாம் சொல்ற.அதெல்லாம் பெரீ மன்சாலுங்க பண்ற வேல. நல்து கெட்து எதுனாலும் கூப்டாம போய்க்கறது தான் நம்மல மாதிரி பாமர பசங்க பயக்கம். இன்னான்ற.

இது நம்ம ஆளு said...

(தொடருமோ முற்றுமோ உங்க ஊக்கத்தைப் பொறுத்து)
தொடரும் !
:)