Thursday, September 17, 2009

மாப்பு ஊருல வெச்ச ஆப்பு

இன்னைக்கும் கொசுவத்திதான். அதாங்க ஃப்ளாஷ்பேக். ரொம்ப சின்ன புள்ளையா மகிழ்ச்சியான தருணங்கள்னா கவனம் வரும் ஊர் ஈரோடு. ஹி ஹி. வருசா வருசம் லீவுக்கும் அங்கதான் கேம்ப். சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துல கழிசடையா கால்வாய் நீர் தேங்கி இருக்கே. பக்கிங்காம் கால்வாய், அதுல தண்ணி இவ்வளவு மோசமா இல்லாம ஓடிட்டு இருந்தது. ஐலேன்ட் எக்ஸ்ப்ரஸ்னு ஒன்னு பகல்ல கிளம்பும். வண்டி கூடவே படகு சவுக்கு கட்டை ஏத்திக்கிட்டு கால்வாய்ல போகும். எதிர்ல உப்பு கொண்டுகிட்டு படகு வரும். நம்ப முடியுதா?

ஈரோடு. என்னோட மிகச் சுருக்கமான இளமைக் காலங்கள்ள சந்தோசமா இருந்த நாட்கள் அங்கதான். அது ஒரு இடுகை தேறும்.  73ம் வருசத்துக்கு அப்புறம் ஈரோடு போக முடியல. கிட்ட கிட்ட ஒரு மாமாங்கம் கடந்து நாம வேலைக்குப் போக ஆரம்பிச்சி ஒரு நாள் தகவல் வந்திச்சி. பெரியம்மாவுக்கு தொண்டைல கேன்ஸர், சாகறதுக்குள்ள பேத்திக்கும் தன்னோட அண்ணன் மகனுக்கும் கலியாணம்னு முடிவுன்னு. ரொம்ப வருசமாச்சா? அம்மா போகணும்டான்னு சொல்லிட்டாங்க.

ஹீரோ கிளம்பிட்டாரு. அம்மாவையும், வெண்ணையையும் கூட்டிகிட்டு. அட நாந்தேன். அதென்ன ஈரோவா. எப்போ போனாலும் குதிரை வண்டியில குதிரை பக்கத்துல உக்கார விடாம யப்பா, பின்னாடி கால தொங்க விட்டுக்கிட்டு உக்கார விடமாட்டாத  குதிரை வண்டிக்காரன்னே நம்ம பிரயாணம். பின்பாரம், தம்பி முன்னுக்கு வான்னு என்னமோ நாந்தான் மகா கனம் மாதிரி, நடுவுல தள்ளி  உட்ருவாங்க. அதெப்பிடி என் உசரத்துக்குன்னே குறுக்கு சட்டம் அடிச்சிருப்பானோ. பின் மண்டை ணங் ணங்னு இடிச்சி புண்ணாயிடும். இந்த வாட்டி நாந்தான் குதிரை பக்கத்துலன்னு கனவோடதான் போனது. ஈரோடு என்னமோ மாறவே மாறாதுன்னு நினைப்பு.

கோவை எக்ஸ்ப்ரஸ புடிச்சி, போய் இறங்கி, ரயில்வே குவார்டர்ஸ் இடப்புறம் வருதே எல்லாரும் வலப்புறமா வெளிய போறாங்களேன்னு குழம்பியே வெளிய வந்தா எல்லாம் ஆட்டோவா நிக்குது. அப்போவே புளிய கரச்சிடுச்சி. இவிங்க நம்மூரு ஆட்டோ காரங்க மாதிரியா என்னான்னு. எப்புடியோ இருக்கட்டும். நாம இப்போ வெளியுலகம் தெரிஞ்சவன்னு இறுமாப்பு. பண்ணக்கூடாத தப்ப பண்ணி பாக்கட்ல வெச்சிருக்கறது தெரியலீங்க எனக்கு.

உசாரா வடிவேலு மாதிரி (ரெம்ப நல்லவனா) ஒரு ஆட்டோ அண்ணன தேடுனேன். முத அடி விழுந்திச்சி. வரிசையாதான் வரும். முதல் ஆட்டோக்கு போன்னு. நல்லவரா இருக்கணுமேன்னு வேண்டிகிட்டே போனா வாடி வான்னு ஒரு அண்ணன்.


நானு:சீனியந்தோட்டம் வரீங்களாண்ணா.
அண்ணன்: போலாந்தம்பி. உக்காருங்க. (வெண்ண பாஞ்சி உக்காந்துட்டான் படுபாவி)
நானு:எவ்ளவுங்ணா
அண்ணன்: பதினஞ்சு தானுங்.
நானு: இல்லிங்ணா. பத்துதானுங்ணா எப்பவும் குடுக்கிறது
அண்ணன்:எப்பொங் கடைசியா வந்தது( குசும்பு ஆரம்பம்)
நானு: (ஆஹா. சங்கப் புடிச்சிட்டாரே) கோபால கிருஷ்ணன் இல்லிங்ணா? இந்த ஸ்டேன்ட்ல தான் ஆட்டோ ஓட்றாரு. அவரு மருமவண்ணா.  அவரு பொண்ணு கலியாணத்துக்கு வந்தனுங். அவருதான் சொன்னாரு.
அண்ணன்: அட நம்ம கோபு. நீங்க உக்காருங் தம்பி. நான் அவருட்ட பதினஞ்சு வாங்கிக்கிறேன். நீங்க பத்து ரூபா அவருக்கு குடுத்துடுங்கன்னாரு பாருங்க. உச்சி மண்டைல டாம் அண்ட் ஜெர்ரில டாமுக்கு கேரட் முளைக்குமே. அப்புடி முளைச்சா மாதிரி இருந்துச்சி எனக்கு.

மத்த ஆட்டோல்லாம் சர்ரு சர்ருன்னு கிளம்புது. வெண்ண வேற ஏறி உக்காந்துட்டான். எல்லாம் விட நம்ம கோபுன்னுட்டாரு.  வீடு தெரிஞ்சிருக்கும். எப்புடி போறதுன்னு வழி காட்ட (தெரிஞ்சாதானே காட்ட) தேவையில்லைன்னு உட்கார்ந்தேன். சுப்பராயன் ஸ்டோர்ஸ்னு கவனம். (அதென்னமோ வரிசையா கட்டுன வாடகை வீடுங்களுக்கு அப்புடி பேரு. கதிர் ஒரு விளக்க இடுகை போட நிறைய மேட்டர் இருக்குங்). இறக்கி விட்டாரு. ரொம்ப ஸ்டைலா பேன்டு பாக்கட்ல கை விட்டு புது பத்து ரூபா நோட்டு கட்டு (ஹெ ஹெ மொத மொதல்ல அவ்வளவு காசு கைலங்கோவ்) எடுத்து, பின்னை புடுங்கி ரெண்டு நோட்டு எடுத்து ஸ்டைலா நீட்டி,  அஞ்சு ரூபா குடுங்கண்ணான்னேன். பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரியல.

கோபுன்னு குரல் விட்டாரு. மாமா வரவும், பதினஞ்சு ரூபா குடு. நாம் போணும். மருமவன நீ டீல் பண்ணிக்கன்னு விட்டு போய்ட்டாரு. மாமா கிட்ட போய் காச நீட்டவா? ஏன்னே புரியாம வீட்டுக்குள்ள போய் பெரியம்மாவ பார்த்து அழுது, அப்புறம் கலியாண வேலைல கலந்துக்கலாம்னு போனேன். ஆடி ஓடி கொஞ்சம் வேலை பார்த்ததுல களைப்பு. ஓட்டல்ல போய் ஏதாவது சாப்டலாம் வாடான்னு எங்கண்ணன கூட்டிகிட்டு போய் ரோஸ்டும் காபியும் அடிச்சிட்டு,  பில்லுக்கு தகடு தகடா நோட்ட நீட்டினா, வேற குடுங்கிறான்.

புரியல எனக்கு. என்னாடா வேற நோட்டு; கையால கூட தொடாமன்னு. இல்லிங் புது நோட்டு தானுங்களே. வேற நோட்டுன்னா என்னங்னா, இது செல்றது கஷ்டம் தம்பி. பழைய நோட்டு குடுங்கிறாரு. நானெங்க போக? அண்ணங்காரன் அவசரத்துல சொக்காய மாட்டிகிட்டு வந்தவன் பிதுக்கிட்டு இல்லடாங்குறான். இப்போ மாவாட்ட சொல்லிருவாங்களோனு பயத்தோட, இத வச்சிக்கிங்க, நான் வீட்ல போயிட்டு பழைய நோட்டு கொண்டு வரேன்னா பார்த்த பார்வைல அப்புடி ஒரு கொலை வெறி. ஏண்டா நான் என்ன இளிச்ச வாப் பயலான்னு. அப்புறம் ஆஃபீஸ் அடையாள அட்டை, போஸ்டாபீஸ்ல வேல செஞ்சிட்டிருக்கிற அக்கா பேரு எல்லாம் ஜாமீன் குடுத்து வீட்ட வந்து மாமா கிட்ட புலம்பி காசவாங்கிகிட்டு போய் குடுத்துட்டு வந்தேன்.

அப்புறம் மாமாகிட்ட கேட்டேன். ஏனுங் மாமா எங்க போனாலும் புது நோட்டு வேணாங்கிறாங்கன்னு. இப்போ படம் ரிலீஸ் ஆக முன்ன திருட்டு டிவிடி வரா மாதிரி அப்போ கோயம்புத்தூர்ல பேப்பர்ல புது நோட்டுனு செய்தி வந்ததுமே நோட்டடிப்பாங்க போல. கசங்குனது, ஒட்டுனது, இந்தப் பக்கம் பார்த்தா மத்த பக்கம் மூஞ்சி தெரியறது, சாயம் போனது எதுனாலும் வாங்குவாங்கடா. நம்பர் கிட்ட கிழிஞ்சி ஒட்டினது, புது நோட்டு ரெண்டும் செல்லாதுன்னு சொன்னாங்க. இப்பிடி என்னை காசிருந்தும் பிச்சக்காரனாகிட்டீங்களான்னு அவஸ்தையா போச்சு.

சரின்னு போஸ்டாபீசுக்கு அண்ணன கூட்டிகிட்டு போய் அக்கா பேர சொல்லி, நிலவரத்த சொல்லி போஸ்டாபீஸ்ல இத குடுத்தா கலக்ஷன்ல மாத்திக்கலாம்னு அறிவு பூர்வமா யோசிச்சிட்டு போனா, அக்கால்லாம் ஊட்டோட. இது ஆபீசு. போய் பேங்குல கேளுன்னுட்டாங்க. காலைல கலியாணம். பொண்ணுக்கு மாமன் சீல எடுக்கோணுமேன்னு பெரிய கடையா போய், முதல்லயே அடையாள அட்டைய காண்பிச்சி, அழமாட்டாக் குறையா கெஞ்சினதுல‌, துணி எடுங்க பிரச்சன இல்லன்னாங்க. அப்பாடா தெய்வம்யா நீயின்னு எடுத்து, அப்புடியே மேக்கொண்டு சில்லறையா குடுத்து ரெண்டு நூறு ரூபா வாங்கிட்டு வெளிய வரவும்தான் மனுசனா உணர்ந்தேன்.

அடுத்த கூத்து, அந்த வீதி பேரு கவனமில்ல. வார துணி சந்தை நடக்குற இடம். அங்கன ஒரு நகராட்சி கழிப்பிடம் . உலகத்துல வேற எங்கயும் கழிப்பிடத்தில பாட்டு பொட்டி வெச்சிருப்பாங்களான்னு தெரியல. வர்த்தக ஒலிபரப்பு ரொம்ப ஃபேமஸான நேரம். அங்க போலாம்டான்னு அண்ணனுங்க கூட்டிப் போனானுங்க. உள்ள போனவன் அடுத்த பாட்டு என்னா வரும்னு வெளிய வரமாட்டங்குறான். வெளிய நிக்கிறவன் பாட்டு கேக்க விடாம கதவ இடிக்கிறான்.

பாட்டு பிடிக்காமலோ, இல்ல இதுக்கு மேல உக்காந்தா கால் மறத்து போய்டுமுன்னோ, வெளிய வர்ற‌வன மறிச்சி பாட்டு கேக்க இதாடா இடம்னு அவசரத்த மறந்து சண்ட போடுறாங்க. இந்த கூத்துல ஒண்ணு ஓடிப் போய் பூந்துடிச்சி. இவன விட்டு அந்தாளு திரும்ப 'ஆலய மணிக்கதவே தாள் திறவாய்னு' பாடாத குறையா, நியாயம் கேக்குறாரு. வெளிய நிக்குறவனெல்லாம் லேபர் வார்ட்ல நிக்கிறா மாதிரி நிக்கிறப்ப, இதக் கண்டு அடக்க மாட்டாம கெக்கேக்கேனு நான் சிரிக்க, எதுக்குடா சிரிக்கிறன்னு எங்கண்ணனும் புரியாமலே சிரிக்க இந்த அவஸ்தையிலயும் லூசுப் பயலுவளான்னு அவங்க பார்த்த பார்வைய ஆஸ்கார் நடிகரால கூட பார்க்க முடியாது.
இப்ப ஒரு வேள டிஷ் டிவி வெச்சிருக்காங்களோ தெரியல. இன்னோரு அதிசயமும் கவனம் வருது. மண்ணெண்ணெயில ஆட்டோ ஓடும்னு எப்புடி கண்டு புடிச்சாங்களோ ஈரோட்டில‌. இதுக்கு மேலயும் சொன்னா, கதிர், மேடி எல்லாமா சேர்ந்து கெரசின் ஆட்டோ அனுப்பினாலும் அனுப்புவாங்க. சமாதானமா போயி நல்ல விசயமா இன்னோரு இடுகையில சொல்லிக்கிறேன்.

51 comments:

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா!
ஓட்டு போடலாம்னு பாத்தா! ரொம்ப நேரமா, பப்ளிஷ் பண்ணவே இல்லை..,

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன்

/சூப்பர் தலைவா!/

:)) நன்றி.

ஈரோடு கதிர் said...

அய்யய்யோ ஈரோட்ட கிழிச்சுத் தொங்கப் போடறாரே கேக்க ஒரு
நாதில்லையா....

ச்சே இன்னைக்குனு பார்த்து வால்பையனும், ஆரூரனும் சாதிச் சண்டையில பிசி....

வெளியூறு தம்பி பாலாசி வேற, மாட்டுக்காரன் பொண்டாட்டிகூட பிசினு மாடு கோவிச்சுக்கிட்ட வருத்தத்தில இருக்காரு....

இருங்க... இருங்க.... கொஞ்சம் நல்லா யோசிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்....

ஈரோடு கதிர் said...

ஆனாலும் 2/2 ஓட்டு போட்டுட்டேன்.... என்ன பண்றது தாயபுள்ளையா பழகியாச்சு...

பாத்தீங்களா... இது .. இதுதான் ஈரோட்டுக்காறங்களோட நல்ல புத்தி

ஈரோடு கதிர் said...

//அண்ணன்: போலாந்தம்பி. உக்காருங்க. (வெண்ண பாஞ்சி உக்காந்துட்டான் படுபாவி)

அண்ணன்: பதினஞ்சு தானுங்.

அண்ணன்:எப்பொங் கடைசியா வந்தது( குசும்பு ஆரம்பம்)

அண்ணன்: அட நம்ம கோபு. நீங்க உக்காருங் தம்பி. நான் அவருட்ட பதினஞ்சு வாங்கிக்கிறேன். நீங்க பத்து ரூபா அவருக்கு குடுத்துடுங்கன்னாரு//

பாருங்க... நீங்க வந்தப்போ எங்க ஆட்டோக்கார அண்ணங்கூட எவ்வளவு மருவாதியா பேசியிருக்காரு...

ஆனா நீங்க வந்துட்டு போன பொறவு "மெட்ராஸ் பயலுவ மாதிரி" கசமுசான்னு தானுங் பேசறாங்க

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/ஆனாலும் 2/2 ஓட்டு போட்டுட்டேன்.... என்ன பண்றது தாயபுள்ளையா பழகியாச்சு...

பாத்தீங்களா... இது .. இதுதான் ஈரோட்டுக்காறங்களோட நல்ல புத்தி/

த்தோ. சொன்னேன்ல. ரொம்ப கொஞ்சூண்டு இளமையில இனிமை ஈரோட்டுல கண்டதுதான்னு. அது முதல்ல வேப்பம் பூ பச்சடி சாப்பிட்டு அப்புறம் மத்தது மாதிரி இத சொல்லிட்டு அப்புறம் மத்ததுன்னா அஹஹான்னு இருக்குமேன்னு தான்.

ஈரோடு கதிர் said...

//காசிருந்தும் பிச்சக்காரனாகிட்டீங்களான்னு அவஸ்தையா போச்சு.//

எனக்கென்னமோ உங்கள பாத்தப்புறம்தான் இந்த டவுட்டு எங்கூருக்காறங்களுக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன்...
எதுக்கும் அந்த குழந்தை (அட அதுதாங்க உங்க வெண்ணை(அண்ணா, வெண்ணைனா என்ன மன்னிசிருங்க)) கைகல பணத்தக் குடுத்திருந்தா எல்லோரும் நம்பி வாங்கியிருப்பாங்கனு நினைக்கிறேன்.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/அய்யய்யோ ஈரோட்ட கிழிச்சுத் தொங்கப் போடறாரே கேக்க ஒரு
நாதில்லையா..../

அய்யோ! நாங்கிழிஞ்சி நாறானத இல்ல சொன்னேன்.

/ச்சே இன்னைக்குனு பார்த்து வால்பையனும், ஆரூரனும் சாதிச் சண்டையில பிசி..../

அதாங்க நானும் பார்த்தேன் எழுதின விஷயமே வேற. எங்க எப்புடி திசை திரும்பிச்சின்னே தெரியல. கம்முன்னு வந்துட்டேன்.

/வெளியூறு தம்பி பாலாசி வேற, மாட்டுக்காரன் பொண்டாட்டிகூட பிசினு மாடு கோவிச்சுக்கிட்ட வருத்தத்தில இருக்காரு..../

அதான் கொஞ்ச நாளா இடுகை போடலியோ?:))

ஈரோடு கதிர் said...

தலைவா...
மேல சொன்னதெல்லாம் சும்மா டூப்பு...
வச்சிடாதிங்க ஆப்பு....

ஆனாலும் உங்க பதிவு டாப்பு....

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/பாருங்க... நீங்க வந்தப்போ எங்க ஆட்டோக்கார அண்ணங்கூட எவ்வளவு மருவாதியா பேசியிருக்காரு.../

அட அதுதாங்க அந்தூர்ல எனக்கு ரொம்ப புடிச்சது. நம்ம சொந்தக்கார பய புள்ள ரொம்ப நாளா ஆந்திரால வேல பார்த்து, மேட்டூருக்கு மாற்றல்ல வந்துச்சி. கருங்கல் பாளையத்தில மளிகை சாமான் லிஸ்டு குடுத்து, காசும் குடுத்து, சீக்கிரம் அனுப்பிடுய்யான்னு சொன்னான். கிட்ட கிட்ட 2000 ரூ வியாபாரம். மறுபேச்சே பேசாம காச திருப்பி குடுத்து மருவாதியா, தம்பி மரியாத தெரியாத ஆளுங்க கிட்ட வியாபாரம் வேணான்னுட்டாரு. இது வரைக்கும் யார்னாலும் வாங்க போங்கன்னு ஆயிட்டாரு நம்மாளு.

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/ஆனா நீங்க வந்துட்டு போன பொறவு "மெட்ராஸ் பயலுவ மாதிரி" கசமுசான்னு தானுங் பேசறாங்க/

:)). நாம வந்த காலத்துல மெட்ராஸ் பயலுவ மருவாதியாதான் இருந்தாய்ங்க. குசும்ப பாரு. ரொம்ப வருத்தமா இருக்கு கேக்கவே. இலைங்கறத கூட கண்ணுன்னு சேர்த்து கேக்குறப்ப வருத்தமே வராது.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/எதுக்கும் அந்த குழந்தை (அட அதுதாங்க உங்க வெண்ணை(அண்ணா, வெண்ணைனா என்ன மன்னிசிருங்க)) கைல பணத்தக் குடுத்திருந்தா எல்லோரும் நம்பி வாங்கியிருப்பாங்கனு நினைக்கிறேன்./

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இப்புடி கொல வெறி ஏன். சொந்தமா கூட நாலு பிட்ட போட்டு ஏத்தி விட்டிருப்பான் பயபுள்ள.

vasu balaji said...

கதிர் - ஈரோடு
/தலைவா...
மேல சொன்னதெல்லாம் சும்மா டூப்பு...
வச்சிடாதிங்க ஆப்பு....

ஆனாலும் உங்க பதிவு டாப்பு....//

ஆஹா. இது சோப்பு. :)) நன்றிங்க கதிர்.

கிரி said...

//ஐலேன்ட் எக்ஸ்ப்ரஸ்னு ஒன்னு பகல்ல கிளம்பும். //

நடிகன் படத்துல வர ஐஸ்லேண்ட் எஸ்டேட் மாதிரியா சார் :-))))

//ஈரோடு. என்னோட மிகச் சுருக்கமான இளமைக் காலங்கள்ள சந்தோசமா இருந்த நாட்கள் அங்கதான். //

சார் நான் கோபி தான் ..ரொம்ப பக்கம்

//கதிர் - ஈரோடு
இருங்க... இருங்க.... கொஞ்சம் நல்லா யோசிச்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்.//

நல்ல வேளை கோபி தப்பிச்சுது ;-)

ஈரோடு கதிர் said...

//கிரி Says:

நல்ல வேளை கோபி தப்பிச்சுது ;-)//

ஏம்பா...யாராவது கோபியப் பத்தி சீசீசீசீசீசீசீசீசீக்கிரம் எழுதுங்க

க.பாலாசி said...

//வர்த்தக ஒலிபரப்பு ரொம்ப ஃபேமஸான நேரம். அங்க போலாம்டான்னு அண்ணனுங்க கூட்டிப் போனானுங்க. உள்ள போனவன் அடுத்த பாட்டு என்னா வரும்னு வெளிய வரமாட்டங்குறான். வெளிய நிக்கிறவன் பாட்டு கேக்க விடாம கதவ இடிக்கிறான்.//

‘கேளுங்க கேளுங்க...கேட்டுகிட்டே இருங்க’ அப்டின்னு பாடியிருக்குமோ?

//மண்ணெண்ணெயில ஆட்டோ ஓடும்னு எப்புடி கண்டு புடிச்சாங்களோ ஈரோட்டில‌. இதுக்கு மேலயும் சொன்னா, கதிர், மேடி எல்லாமா சேர்ந்து கெரசின் ஆட்டோ அனுப்பினாலும் அனுப்புவாங்க. சமாதானமா போயி நல்ல விசயமா இன்னோரு இடுகையில சொல்லிக்கிறேன்.//

ஹலோ இன்னும் ரெண்டு பேரு இருக்கோம்...மறந்திட்டீங்க... அதனாலதான் எங்க ஊரு ஆட்டோ காரர டபாய்ச்சதுமில்லாம அத தைரியமா பதிவா போட்டு காமடி பண்றீங்க....இருக்கட்டும்...உங்கள அப்பால கவனிச்சிக்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே, இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுக்கிறேன். அப்பால வந்து கச்சேரி வச்சுக்கிறேன். வேலை ஜாஸ்தி அதான்...

ஆரூரன் விசுவநாதன் said...

வந்திட்டேன்...வந்திட்டேன்......

கதிர் தாயா புள்ளயா பழகின் ஈரோட்டுக்காரன் வேற சொல்லிட்டாரு...நானும் ஓட்டை போட்டுட்டு வர்றன்.

ஆரூரன் விசுவநாதன் said...

சரி... சரி.... ஏதோ எங்க எல்லாத்துக்காகவும் கதிரே உங்கள சமாளிச்சிட்டார். என்னதான் இருந்தாலும் நாங்க மரியாத தெரிஞ்ச ஈரோட்டுக்காரங்கல்ல?, என்னங்கண்ணா நான் சொல்றது?.


பேசுனது ....பேசி புட்டீங்க.....சே....எழுதுனது எழுதிப்புட்டீங்க..... மருவாதிய நாலு நல்ல வார்த்தையும் எழுதிபோடுங்க....ஆமா....

என்னதான் கோவமிருந்தாலும், ஒத்துக்கனும்....சூப்பராத்தான்...... எழுதறீங்கண்ணா....


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.

vasu balaji said...

கிரி
/நடிகன் படத்துல வர ஐஸ்லேண்ட் எஸ்டேட் மாதிரியா சார் :-))))/
இல்லிங்க கிரி.நிசமாத்தான். :))

/நல்ல வேளை கோபி தப்பிச்சுது ;-)/

ஆஹா. கோபிக் காரங்களும் குசும்புக்காரங்களா இருக்காங்களே.

vasu balaji said...

கதிர் - ஈரோடு

/ஏம்பா...யாராவது கோபியப் பத்தி சீசீசீசீசீசீசீசீசீக்கிரம் எழுதுங்க/

ஐயோ. இது வடிவேலு பஞ்சாயத்துல ஊர்சண்டய இழுத்து விட்டா மாதிரி ஆய்டுத்தே.:))

vasu balaji said...

க.பாலாஜி
/‘கேளுங்க கேளுங்க...கேட்டுகிட்டே இருங்க’ அப்டின்னு பாடியிருக்குமோ?/
பாட்டு விளம்பரம்னு கலக்கலா இருக்கும். பழைய பாட்டு புதுப் பாட்டு நடுவில விளம்பரம்னு.

/ஹலோ இன்னும் ரெண்டு பேரு இருக்கோம்...மறந்திட்டீங்க... அதனாலதான் எங்க ஊரு ஆட்டோ காரர டபாய்ச்சதுமில்லாம அத தைரியமா பதிவா போட்டு காமடி பண்றீங்க....இருக்கட்டும்...உங்கள அப்பால கவனிச்சிக்கிறேன்.../

:)). ஆகக் கூடி ஆடோ கெரசின்ல ஓடுன விசயம் ஒருத்தருக்கும் தெரியல. நானா டபாய்ச்சேன். டாம் மாதிரி மண்டய தடவிக்கிட்டே திரிஞ்சேங்குறேன் அந்தண்ணன் உட்ட ரவுசுல.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/அண்ணே, இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுக்கிறேன். அப்பால வந்து கச்சேரி வச்சுக்கிறேன். வேலை ஜாஸ்தி அதான்.../

:)). வாங்க சார். ஆமாம். அங்கனயும் ஒரு கச்சேரி வீதி இருக்கு.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன்

/வந்திட்டேன்...வந்திட்டேன்......

கதிர் தாயா புள்ளயா பழகின் ஈரோட்டுக்காரன் வேற சொல்லிட்டாரு...நானும் ஓட்டை போட்டுட்டு வர்றன்./

காப்பாத்தி விட்ட கதிருக்கு நான் என்ன கைம்மாறு பண்ணபோறன். அவ்வ்வ்

vasu balaji said...

/ஆரூரன் விசுவநாதன்

பேசுனது ....பேசி புட்டீங்க.....சே....எழுதுனது எழுதிப்புட்டீங்க..... மருவாதிய நாலு நல்ல வார்த்தையும் எழுதிபோடுங்க....ஆமா.../

பின்ன. அண்ணந் தம்பியெல்லாம் ஆளுக்கொரு பக்கம் சிதறினாலும் அடைஞ்சு வெச்சதில இருந்து வெளீய வந்து காடு, கம்மாய்னு சுத்துனது அங்கல்ல.
/என்னதான் கோவமிருந்தாலும், ஒத்துக்கனும்....சூப்பராத்தான்...... எழுதறீங்கண்ணா....


வாழ்த்துக்கள்/

நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 17, 2009 9:34 PM
இராகவன் நைஜிரியா
/அண்ணே, இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுக்கிறேன். அப்பால வந்து கச்சேரி வச்சுக்கிறேன். வேலை ஜாஸ்தி அதான்.../

:)). வாங்க சார். ஆமாம். அங்கனயும் ஒரு கச்சேரி வீதி இருக்கு.//

அந்த கச்சேரி வீதியில கும்மி அடிப்பாங்களாம்ங்க...

இராகவன் நைஜிரியா said...

// ஐலேன்ட் எக்ஸ்ப்ரஸ்னு ஒன்னு பகல்ல கிளம்பும். வண்டி கூடவே படகு சவுக்கு கட்டை ஏத்திக்கிட்டு கால்வாய்ல போகும். எதிர்ல உப்பு கொண்டுகிட்டு படகு வரும். நம்ப முடியுதா? //

ஓரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்... அது மாதிரி அந்த காலத்தில் கூவத்தில் படகு போனதை பார்த்து இருக்கீங்களா.. பெரியவர்தாங்க நீங்க

இராகவன் நைஜிரியா said...

// 73ம் வருசத்துக்கு அப்புறம் ஈரோடு போக முடியல. //

ஏன் அண்ணே அப்புறம் உங்களை தொடர்வண்டியில் ஏறக்கூடாது என்று யாராவது தடையுத்தரவு போட்டுட்டாங்களா?

இராகவன் நைஜிரியா said...

// பின்பாரம், தம்பி முன்னுக்கு வான்னு என்னமோ நாந்தான் மகா கனம் மாதிரி, நடுவுல தள்ளி உட்ருவாங்க. அதெப்பிடி என் உசரத்துக்குன்னே குறுக்கு சட்டம் அடிச்சிருப்பானோ. பின் மண்டை ணங் ணங்னு இடிச்சி புண்ணாயிடும். இந்த வாட்டி நாந்தான் குதிரை பக்கத்துலன்னு கனவோடதான் போனது. ஈரோடு என்னமோ மாறவே மாறாதுன்னு நினைப்பு. //

கும்பகோணத்தில் குதிரை வண்டி (ஜட்கா என்றும் சொல்லுவார்கள்) கிடையாதுங்க. கும்பகோணம் முழுக்க எனக்குத் தெரிஞ்சு மாட்டு வண்டிதாங்க. சிதம்பரத்தில் ஜட்கா வண்டி உண்டுங்க. கொசுவத்தி சுத்த வச்சுட்டீஙகளே..

இராகவன் நைஜிரியா said...

// நானு:சீனியந்தோட்டம் வரீங்களாண்ணா.
அண்ணன்: போலாந்தம்பி. உக்காருங்க. (வெண்ண பாஞ்சி உக்காந்துட்டான் படுபாவி)
நானு:எவ்ளவுங்ணா
அண்ணன்: பதினஞ்சு தானுங்.
நானு: இல்லிங்ணா. பத்துதானுங்ணா எப்பவும் குடுக்கிறது
அண்ணன்:எப்பொங் கடைசியா வந்தது( குசும்பு ஆரம்பம்)
நானு: (ஆஹா. சங்கப் புடிச்சிட்டாரே) கோபால கிருஷ்ணன் இல்லிங்ணா? இந்த ஸ்டேன்ட்ல தான் ஆட்டோ ஓட்றாரு. அவரு மருமவண்ணா. அவரு பொண்ணு கலியாணத்துக்கு வந்தனுங். அவருதான் சொன்னாரு.
அண்ணன்: அட நம்ம கோபு. நீங்க உக்காருங் தம்பி. நான் அவருட்ட பதினஞ்சு வாங்கிக்கிறேன். நீங்க பத்து ரூபா அவருக்கு குடுத்துடுங்கன்னாரு பாருங்க. உச்சி மண்டைல டாம் அண்ட் ஜெர்ரில டாமுக்கு கேரட் முளைக்குமே. அப்புடி முளைச்சா மாதிரி இருந்துச்சி எனக்கு. //

பெரிசாதான் கொம்பு முளைச்சு இருக்குங்க.

ஆனா ஆயிரம்தான் சொல்லுங்க, சாவுகிராக்கி காலங்கார்த்தல வந்து பேரம் பேசிக்கினு கீற அப்படின்னு நல்ல வார்த்தையா நாலு சொல்லாம எவ்வளவு மரியாதையாகப் பேசினார் பாருங்க.. அதுதாங்க ஈரோடு ஸ்பெஷல் போலிருக்கு

இராகவன் நைஜிரியா said...

// மண்ணெண்ணெயில ஆட்டோ ஓடும்னு எப்புடி கண்டு புடிச்சாங்களோ ஈரோட்டில‌. //

இப்போ சென்னையிலும் மண்ணெண்ணெயில் ஆட்டோ ஓட ஆரம்பிச்சுடுச்சுங்க..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பின் வரும் url போய் பாருங்க.. உங்க வலைப்பூ 6 இடத்தைப் பிடிச்சு இருக்கு.. முதல் இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்..

http://topblogs.tamilers.com/

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/அந்த கச்சேரி வீதியில கும்மி அடிப்பாங்களாம்ங்க.../

அங்க கோர்ட் இருந்த கவனம். கும்மி கேசுன்னு புடிச்சிடப்போறாங்க.:))

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/ஓரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்... அது மாதிரி அந்த காலத்தில் கூவத்தில் படகு போனதை பார்த்து இருக்கீங்களா.. பெரியவர்தாங்க நீங்க/

கூவம் அடையாறு கூட கலக்குறது. இது பக்கிங்காம் கால்வாய். டெல்லி ரூட்ல போனா நெல்லூர் வரைக்கும் கண்ணா மூச்சி ஆடும். இப்பவும் எண்ணூர் தாண்டி கட்டு மரம் பார்க்கலாம். இங்கதான் சேறு அடைஞ்சி தரை தட்டிடுச்சி. யப்பா. விட்ட பச்சையப்ப முதலியார் ஃப்ரண்டுன்னு சொல்லிடுவாங்க போல.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/ஏன் அண்ணே அப்புறம் உங்களை தொடர்வண்டியில் ஏறக்கூடாது என்று யாராவது தடையுத்தரவு போட்டுட்டாங்களா?/

படிப்பு வேலைன்னு ஆளுக்கு ஒரு பக்கம் சிதறியாச்சு அதான்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/கும்பகோணத்தில் குதிரை வண்டி (ஜட்கா என்றும் சொல்லுவார்கள்) கிடையாதுங்க. கும்பகோணம் முழுக்க எனக்குத் தெரிஞ்சு மாட்டு வண்டிதாங்க. சிதம்பரத்தில் ஜட்கா வண்டி உண்டுங்க. கொசுவத்தி சுத்த வச்சுட்டீஙகளே../

மாயவரம் மயிலக்காளை வண்டிக்கு முன்னாடி ஜட்கால்லாம் தூசு. வில்லு வண்டியாச்சே.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா
/ஆனா ஆயிரம்தான் சொல்லுங்க, சாவுகிராக்கி காலங்கார்த்தல வந்து பேரம் பேசிக்கினு கீற அப்படின்னு நல்ல வார்த்தையா நாலு சொல்லாம எவ்வளவு மரியாதையாகப் பேசினார் பாருங்க.. அதுதாங்க ஈரோடு ஸ்பெஷல் போலிருக்கு/

ஆமாங்க சார். பெருமையான விஷயம்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/இப்போ சென்னையிலும் மண்ணெண்ணெயில் ஆட்டோ ஓட ஆரம்பிச்சுடுச்சுங்க../

இது எப்போல இருந்து?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/அண்ணே பின் வரும் url போய் பாருங்க.. உங்க வலைப்பூ 6 இடத்தைப் பிடிச்சு இருக்கு.. முதல் இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்..

http://topblogs.tamilers.com/

ஆமாங்க சார். இவ்வளவு நேரம் 5 ல இருந்தது. 4 நாளைக்கு முன்னயே நாள் ஃபுல்லா ஒன்னில இருந்தது. நன்றி சார்.

புலவன் புலிகேசி said...

நண்பரே!!! ஈரோட்டிற்கே சென்று வந்தது போல் இருந்தது. நல்ல பதிப்பு....

vasu balaji said...

புலவன் புலிகேசி
/நண்பரே!!! ஈரோட்டிற்கே சென்று வந்தது போல் இருந்தது. நல்ல பதிப்பு..../

நன்றிங்க.

thiyaa said...

அருமையான பதிவு வாழ்த்துகள் மாப்பு

vasu balaji said...

தியாவின் பேனா

/அருமையான பதிவு வாழ்த்துகள் மாப்பு/

:). நன்றி

SUBBU said...

:)))))))
:)))))))

இது நம்ம ஆளு said...

ல்லாமா சேர்ந்து கெரசின் ஆட்டோ அனுப்பினாலும் அனுப்புவாங்க. சமாதானமா போயி நல்ல விசயமா இன்னோரு இடுகையில சொல்லிக்கிறேன்.
:)

vasu balaji said...

SUBBU
/:)))))))
:)))))))/

:>:)))

vasu balaji said...

இது நம்ம ஆளு

/:)/

வாங்க சார். எங்க ஆளையே காணோம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//உலகத்துல வேற எங்கயும் கழிப்பிடத்தில பாட்டு பொட்டி வெச்சிருப்பாங்களான்னு தெரியல//

நிறைய ஊர்ல இருக்குங் சார் கண்டுக்குனு வாங்க.......

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்

/நிறைய ஊர்ல இருக்குங் சார் கண்டுக்குனு வாங்க......./

அப்புடியா. இது தெரியாதே.

துபாய் ராஜா said...

//சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துல கழிசடையா கால்வாய் நீர் தேங்கி இருக்கே. பக்கிங்காம் கால்வாய், அதுல தண்ணி இவ்வளவு மோசமா இல்லாம ஓடிட்டு இருந்தது. ஐலேன்ட் எக்ஸ்ப்ரஸ்னு ஒன்னு பகல்ல கிளம்பும். வண்டி கூடவே படகு சவுக்கு கட்டை ஏத்திக்கிட்டு கால்வாய்ல போகும். எதிர்ல உப்பு கொண்டுகிட்டு படகு வரும். நம்ப முடியுதா?//

நிச்சயமா நம்பமுடியலை. நகர வாழ்க்கைன்னு நரகமாக்கிட்டோம். :((

vasu balaji said...

துபாய் ராஜா
/நிச்சயமா நம்பமுடியலை. நகர வாழ்க்கைன்னு நரகமாக்கிட்டோம். :((/

ஆமாங்க ராஜா. அதனாலதான் கொஞ்ச மழைக்கே வெள்ளம்.