Monday, August 31, 2009

மகிழ்ச்சியும் நன்றியும்..




மதியம் விகடனிலிருந்து என் பெயர் கேட்டு வந்த மின்னஞ்சலை மாலையில் தான் பார்த்தேன். தோழி கலகலப்ரியா என் மன்னித்துவிடு தேவதையே (இந்தப் பதிவில் மன்னித்து விடு தேவதையே - 2 ) தலை வாசலில் நீட் பகுதியில் வெளியாகி இருப்பதை மகிழ்வோடு கூறிப் பாராட்டினார். இன்னும் மகிழ்வாக அவருடைய அன்பு...நட்பு.. ம் தலைவாசலில் ஜூட் பகுதியில் வெளியாகி இருப்பதைக் கண்டோம். இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி:

எனது கவிதை விகடனில் படிக்க: http://youthful.vikatan.com/youth/vasudevanbalaji31082009.asp

தோழி கலகலப்ரியாவின் கவிதை: http://kalakalapriya.blogspot.com/2009/08/blog-post_31.html

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என்னை எழுதத் தூண்டி பாராட்டி, திருத்தி வழிகாட்டிய தோழி கலகலப்ரியாவிற்கு என் நன்றி.

பாலாண்ணே என்று அன்போடு விளித்து 'நறுக் கவி' என்றும் வலைச்சர அறிமுகமென்றும் சுட்டி, வழிகாட்டிய பழமை, ராஜ நடராஜன், ப்ரியமுடன் பிரபு மற்றும் தவறாமல் பின்னூக்கமிட்டு ஊக்கிய யூர்கன், சுரேஷ்குமார், சுரேஷ், சுப்பு, லவ்டேல் மேடி, கீத், நைஜீரியா ராகவன், கிரி, கும்மாச்சி, செந்தில் குமார், மற்றும் சுவையான பதிவர் விருதளித்த சகோதரி சக்தி, சூர்யாகண்ணன், பெயர் தெரியாத காரணத்தால் இது நம்ம ஆளு, தமிழ்நெஞ்சம் மற்றும் பெயர் குறிப்பிடாமல் விட்ட பதிவரல்லாத வாசகர்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் 'நறுக்குன்னு நாலு வார்த்தை' யை நூறாக்கியமைக்கும் நன்றி கூறுகிறேன்.

அன்புடன்
வானம்பாடிகள்
***
Post a Comment