Monday, August 31, 2009

மகிழ்ச்சியும் நன்றியும்..




மதியம் விகடனிலிருந்து என் பெயர் கேட்டு வந்த மின்னஞ்சலை மாலையில் தான் பார்த்தேன். தோழி கலகலப்ரியா என் மன்னித்துவிடு தேவதையே (இந்தப் பதிவில் மன்னித்து விடு தேவதையே - 2 ) தலை வாசலில் நீட் பகுதியில் வெளியாகி இருப்பதை மகிழ்வோடு கூறிப் பாராட்டினார். இன்னும் மகிழ்வாக அவருடைய அன்பு...நட்பு.. ம் தலைவாசலில் ஜூட் பகுதியில் வெளியாகி இருப்பதைக் கண்டோம். இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி:

எனது கவிதை விகடனில் படிக்க: http://youthful.vikatan.com/youth/vasudevanbalaji31082009.asp

தோழி கலகலப்ரியாவின் கவிதை: http://kalakalapriya.blogspot.com/2009/08/blog-post_31.html

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என்னை எழுதத் தூண்டி பாராட்டி, திருத்தி வழிகாட்டிய தோழி கலகலப்ரியாவிற்கு என் நன்றி.

பாலாண்ணே என்று அன்போடு விளித்து 'நறுக் கவி' என்றும் வலைச்சர அறிமுகமென்றும் சுட்டி, வழிகாட்டிய பழமை, ராஜ நடராஜன், ப்ரியமுடன் பிரபு மற்றும் தவறாமல் பின்னூக்கமிட்டு ஊக்கிய யூர்கன், சுரேஷ்குமார், சுரேஷ், சுப்பு, லவ்டேல் மேடி, கீத், நைஜீரியா ராகவன், கிரி, கும்மாச்சி, செந்தில் குமார், மற்றும் சுவையான பதிவர் விருதளித்த சகோதரி சக்தி, சூர்யாகண்ணன், பெயர் தெரியாத காரணத்தால் இது நம்ம ஆளு, தமிழ்நெஞ்சம் மற்றும் பெயர் குறிப்பிடாமல் விட்ட பதிவரல்லாத வாசகர்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் 'நறுக்குன்னு நாலு வார்த்தை' யை நூறாக்கியமைக்கும் நன்றி கூறுகிறேன்.

அன்புடன்
வானம்பாடிகள்
***

41 comments:

கலகலப்ரியா said...

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. !

//
தோழி கலகலப்ரியாவின் கவிதை: http://kalakalapriya.blogspot.com/2009/08/blog-post_31.html//

ஏன் சார் நான் தண்டோரா போடுறது போதாதுன்னு நீங்க வேற இங்க எனக்கு தண்டோரா போடணுமா.. அன்புத் தொல்லைக்கும் ஒரு அளவு வேணாமா ஐயா..

//இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என்னை எழுதத் தூண்டி பாராட்டி, திருத்தி வழிகாட்டிய தோழி கலகலப்ரியாவிற்கு என் நன்றி.//

ஆமாங்கோ.. எப்பவோ ஏதோ ஒரு சொல்லு திருத்தி இருப்பேன்.. அதுக்காக உங்க எல்லா இடுகைல உள்ள தப்பையும் என் தலைல கட்ட பார்க்கறீங்களே சார்..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் பாலாசார்

vasanth1717@gmail மெயிலிடுங்கள் அந்த வைரஸ்காட்டும் படத்தை அனுப்புகிறேன்

இப்போவும் காட்டுது குரோம்ல....

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. ! /

நன்றிங்க

/அன்புத் தொல்லைக்கும் ஒரு அளவு வேணாமா ஐயா../

அன்பை ஏங்க தொல்லையா நினைக்கிறீங்க? எங்க ஒரு மீட்டர் அன்புத் தொல்லை குடுங்கோ.

/அதுக்காக உங்க எல்லா இடுகைல உள்ள தப்பையும் என் தலைல கட்ட பார்க்கறீங்களே சார்../

சொற்குற்றமா? பொருட்குற்றமா?

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துக்கள் பாலாசார்

நன்றிங்க வசந்த். மெயில் அனுப்பி இருக்கிறேன். screen capture அனுப்புங்கள் ப்ளீஸ்.

பழமைபேசி said...

வாழ்த்துகள் பாலாண்ணே!

vasu balaji said...

பழமைபேசி said...

/ வாழ்த்துகள் பாலாண்ணே!//

உங்கள் ஊக்கமெல்லாம் தான் உரம் பழமை. மிக்க நன்றி.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பாலா அண்ணே வாழ்த்துகள்.

கலகலப்ரியா அவங்களுக்கும் வாழ்த்துகள்.

அண்ணே, கூகுள் குரோமில், உங்க வலைப்பூ வைரஸ் அட்டாக் ஆயிருக்குன்னு காண்பிக்குது. உடனே என்ன அப்படின்னு பாருங்க.

முதல் நால் கூகுள் குரோமில் காண்பிச்சால், ஃபயர் பாக்சில் மறுநாள் நிச்சயமாக காண்பிக்கும்.

சரி பண்ணுங்கண்ணே.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

பழமைபேசி said...

/ வாழ்த்துகள் பாலாண்ணே!//

உங்கள் ஊக்கமெல்லாம் தான் உரம் பழமை. மிக்க நன்றி. //

சரியாகச் சொன்னீங்கண்ணே...

ஐயா பழமைபேசிக்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

//இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என்னை எழுதத் தூண்டி பாராட்டி, திருத்தி வழிகாட்டிய தோழி கலகலப்ரியாவிற்கு என் நன்றி.//

ஆமாங்கோ.. எப்பவோ ஏதோ ஒரு சொல்லு திருத்தி இருப்பேன்.. அதுக்காக உங்க எல்லா இடுகைல உள்ள தப்பையும் என் தலைல கட்ட பார்க்கறீங்களே சார்.. //

ச்சே என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.

உங்க மேல எவ்வளவு மரியாதையும், மதிப்பும் வச்சு சொல்லியிருக்காரு..

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...

/ கலகலப்ரியா said...

/அன்புத் தொல்லைக்கும் ஒரு அளவு வேணாமா ஐயா../

அன்பை ஏங்க தொல்லையா நினைக்கிறீங்க? எங்க ஒரு மீட்டர் அன்புத் தொல்லை குடுங்கோ. //

கிலோ கண்க்கில் என்று கேள்விப் பட்டேங்க.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே, கூகுள் குரோமில், உங்க வலைப்பூ வைரஸ் அட்டாக் ஆயிருக்குன்னு காண்பிக்குது. உடனே என்ன அப்படின்னு பாருங்க.

முதல் நால் கூகுள் குரோமில் காண்பிச்சால், ஃபயர் பாக்சில் மறுநாள் நிச்சயமாக காண்பிக்கும்.

சரி பண்ணுங்கண்ணே./

விகடன் சுட்டியால இருக்கலாமோ தெரியலை. வசந்தும் சொன்னாங்க. இங்க என் கணினியிலும் இன்னோரு கணினியிலும் வரவில்லை. எதற்கும் சுட்டியை நீக்கி விடுகிறேன். பாராட்டுக்கு மிக்கன் நன்றி ஐயா.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ச்சே என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.

உங்க மேல எவ்வளவு மரியாதையும், மதிப்பும் வச்சு சொல்லியிருக்காரு..//

அது சரியான வாலு சார். அனியாயத்துக்கு லொள்ளு பண்ணும்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/கிலோ கண்க்கில் என்று கேள்விப் பட்டேங்க./

இப்டி வேற இருக்கோ.

கலகலப்ரியா said...

இராகவன் ஐயா.. நம்ம பக்கத்ல உங்க வாழ்த்த சொல்ல முடியலைன்னாலும் இங்க சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ...

மதிப்பும் மருவாதியும் மனசில இருந்தா போதாதுங்களா அப்டின்னுதானுங்க கேட்டேன்..

வானம்பாடி சார்.. விட்டா அடியாள் செட் பண்ணி அடிப்பீங்க போலயே... வேணாம் அழுதுடுவேன்..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/வானம்பாடி சார்.. விட்டா அடியாள் செட் பண்ணி அடிப்பீங்க போலயே... வேணாம் அழுதுடுவேன்..//

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல? உங்கள அடிக்க அடியாள் வேறயா? ஒரே ஒரு கரப்பாம்பூச்சி பார்சல்ல வரும்.

கலகலப்ரியா said...

ஹல்லோ.. என்ன சார்.. நான் உங்க அடியாள் பத்தி பேசிண்டிருந்தா.. நீங்க ராஜபக்சே அடியாள அனுப்பறேங்கிறீங்க..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ஹல்லோ.. என்ன சார்.. நான் உங்க அடியாள் பத்தி பேசிண்டிருந்தா.. நீங்க ராஜபக்சே அடியாள அனுப்பறேங்கிறீங்க..//

=)).இந்த சூனியாவால வந்த வினை. இந்தியால இருந்து எதுனாலும் அந்த ராஜபிச்சைக்கு அடியாள்னு ஆய்டுத்தா?

கலகலப்ரியா said...

இல்லைங்க கரப்பான் பூச்சி ஆய்டும்...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/இல்லைங்க கரப்பான் பூச்சி ஆய்டும்...//

அப்போ முதல்ல நான் சொன்னது?

கலகலப்ரியா said...

அதுதாங்க இது..!

vasu balaji said...

கலகலப்ரியா said...

அதுதாங்க இது..!

/ஆஹா. இது கவுண்டராலயே ஜெயிக்கமுடியாத விளையாட்டாச்சே. நான் எம்மாத்திரம்.

sakthi said...

வாழ்த்துக்கள் பாலா சார்

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்
அய்யா
வாழ்த்துகள்

Maheswaran Nallasamy said...

Kalakkunga..ithu arampamthan//:)

vasu balaji said...

sakthi said...

வாழ்த்துக்கள் பாலா சார்

நன்றிங்க சக்தி

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

வாழ்த்துகள்
அய்யா
வாழ்த்துகள்

நன்றிங்க கதிர்

vasu balaji said...

Maheswaran Nallasamy said...

Kalakkunga..ithu arampamthan//:)

நன்றி மஹேஸ். நீங்க கலக்குங்க சாமிகளா. நாங்களும் பாராட்ட வேணாமா?

யூர்கன் க்ருகியர் said...

கவிதை மிக நன்று.
ஓ...இதான் உங்க பேரா.. இன்றுதான் தெரியும் :)

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் தலைவா!
(எப்பவுமே நான் கொஞ்சம் லேட் தான்..,)

vasu balaji said...

யூர்கன் க்ருகியர் said...

கவிதை மிக நன்று.
ஓ...இதான் உங்க பேரா.. இன்றுதான் தெரியும் :)

நன்றிங்க யூர்கன். ஆமாம்.ஹி ஹி

vasu balaji said...

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் தலைவா!
(எப்பவுமே நான் கொஞ்சம் லேட் தான்..,)

நன்றி தலைவா.

இது நம்ம ஆளு said...

வாழ்த்துக்கள் :)

vasu balaji said...

இது நம்ம ஆளு said...

வாழ்த்துக்கள் :)

நன்றிங்க.

க.பாலாசி said...

வளரட்டும் உங்கள் பணி....அன்பரே...

எனது வாழ்த்துக்களும் கூட, வயதில்லை என்றாலும் வணங்குகிறேன்...

vasu balaji said...

:D . நன்றி பாலாஜி.

Unknown said...

காலம் கடந்து விழுந்த பார்வை.. இருந்தாலும் வாழ்த்துக்கள் பாலா...

அதெப்பிடி உங்கள் நறுக்குன்னு நாலு வார்த்தை மட்டும் யார் கண்ணிலும் படுவதில்லை????? (அதெப்படி, பட்டால் நாண் இட்டுக்கொண்டு செத்துவிடுவார்கள் பலர்)

vasu balaji said...

Kiruthikan Kumarasamy said...

/வாழ்த்துக்கள் பாலா... /

நன்றி கீத்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அய்யா வாழ்த்துகள் :)

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அய்யா வாழ்த்துகள் :)

நன்றிங்க செந்தில்.

கிரி said...

வாழ்த்துக்கள் சார்

நேற்று தான் உங்க படத்தோடு உங்கள் வயதையும் பார்த்தேன், பெயர் கூறி அழைத்ததற்கு மன்னிக்கவும்

vasu balaji said...

கிரி said...

/ வாழ்த்துக்கள் சார்

நேற்று தான் உங்க படத்தோடு உங்கள் வயதையும் பார்த்தேன், பெயர் கூறி அழைத்ததற்கு மன்னிக்கவும்/

நன்றி கிரி. அழைப்பதற்குத்தானே பெயர். அதற்கெதற்கு மன்னிப்பு.