Monday, August 24, 2009

ஆறு 'மை'க்கூவும் அரை வேக்காடாய் ஒரு கவிதையும்.

(தலைப்பும் அமைப்பும் கலகலப்ரியாவிடம் சுட்டது)

காதல்
!

வலி விதைத்து
கண்ணீர் பாய்ச்சி
பூத்த மலர்..

கண்ணீர்..

பிரிவெனும் நெருப்பை
அணைக்கும் முயற்சியில்
ஆவியான மனம்..

நெருப்பு..

என்னைத் தவிர்த்து
யாருடனோ பேசுகையில்
உன் சிரிப்பு..

பூமி..

உன் வருகைக்காய்
காத்திருந்து வெடித்திருக்கும்
என் மனம்

ஆகாயம்..

நீ இருக்கையில்
வைரம் ஜொலிக்கும்
வெட்ட வெளி.

காற்று..

நீ செல்கையில்
பறித்துச் செல்லும்
என் மூச்சு.
***********************************************************************************
ஆத்மா..

மழையாய் வந்து பார்
உன்னில் கலந்து சேறாவேன்

நெருப்பாய் வந்து பார்
உன்னில் கலந்து தணலாவேன்

புயலாய் வந்து பார்
புழுதியாய் உன்னுள்ளிருப்பேன்

அமைதியாய் இருப்பினும்
நினைவாய் நானிருப்பேன்

பிரிக்க முடியாதென்னை
காரணம் நானுன்....
___/\___

(சரியா ந வே எழுதத் தெரியாத குழந்தை அதில் காக்காய் படம் போட்டு காட்டினா மாதிரி ஹைகூல ஒரு விஷயம் இருக்கு. என்னையே அறியாமல் பிரயத்தனம் இன்றி அமைந்தது. யாருக்காவது அந்தக் காக்கா தெரியுதா பார்க்கலாம் )

14 comments:

க.பாலாசி said...

//நெருப்பு..
என்னைத் தவிர்த்து
யாருடனோ பேசுகையில்
உன் சிரிப்பு..//

நன்றாக உள்ளது இந்த வரிகள் அன்பரே...மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள் இந்த கவிதையில்...

கடைசியாக உள்ள அந்த ஆத்மா கவிதை அருமை...அதில் நெருப்பாய் வந்துபார் உன்னில் கலந்து தணலாவேன் என்ற வரிகள் மிகவும் அழகு...

vasu balaji said...

நன்றி பாலாஜி

இது நம்ம ஆளு said...

வரிகள் அருமை

vasu balaji said...

/ இது நம்ம ஆளு said...

வரிகள் அருமை/

நன்றிங்க!

ktmoorthy said...

காதல்!

வலி விதைத்து
கண்ணீர் பாய்ச்சி
பூத்த மலர்..

Kadhal puthia definition miga arumai.

vasu balaji said...

/ktmoorthy said...

Kadhal puthia definition miga arumai.//

நன்றி மூர்த்தி

ஈரோடு கதிர் said...

சுட்ட தலைப்பிற்கு...

சுவையான கவிதைதான்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கவிதைகள்.ரசித்தேன்.

vasu balaji said...

நன்றி கதிர், ஸ்ரீ..

sakthi said...

ஆகாயம்..

நீ இருக்கையில்
வைரம் ஜொலிக்கும்
வெட்ட வெளி.

அருமை

vasu balaji said...

sakthi said...
அருமை

நன்றி சகோதரி.

Unknown said...

அட... இதையெல்லாம் எழுதினது நம்ம பாலாவா?... நல்லருக்கு.:)

vasu balaji said...

/ Kiruthikan Kumarasamy said...
அட... இதையெல்லாம் எழுதினது நம்ம பாலாவா?... நல்லருக்கு.:)//

:)).நிஜம்மாவா.

vasu balaji said...

அவ்வ்வ்வ்வ்வ். எவ்ளோ பேரு படிச்சிருப்பாய்ங்க. யாருக்கும் காக்கா தெரியலன்னு சொல்லக்கூட மனசு வரலையே.