Saturday, August 15, 2009

யாரைப் போய் கேக்குறது?

1.கலைஞர்னு சொல்லமாட்டம கலின்ஜர்னு சொல்லியே பழகின தமிழன சர்வக்ஞர்னு சரியா சொல்லுடான்னு கன்னடத்தான் அடிக்கமாட்டானானு

2. சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் தமிழாக்கம் செய்து பாராட்டி பேசினாரே கலைஞர் இதுக்கு முன்னாடி படிச்சிருக்காரா? இத யாரு மொழிபெயர்த்து சொன்னதுன்னு

3. பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல்னு நமக்கு வந்தா பேரு வைக்கிறமே, அதுங்களுக்கு வந்தா மனிதக்காய்ச்சல்னு ஏன் சொல்லுறதில்லைன்னு

4.தனி ஈழம்தான் தீர்வுன்னு தம்மு கட்டி கத்தின கட்சியெல்லாம் தேர்தல் முடிஞ்சதும் தனக்கென்ன போச்சின்னு கெடக்குதுங்களே, இதுங்கள என்ன பண்ணலாம்னு

5. ஆறாவது மாடியில இருக்கிற பன்னாடைங்களெல்லாம் வெள்ள நிவாரணம் வாங்கிக்கிட்டு, அவன் சொத்தையா குடுக்கிறான்? நாம கட்டின வரிப்பணம்தானேன்னு பேசுதுங்களே இதுங்க மனுசங்கதானான்னு

6. வீட்டில LCD TV இருந்தாலும் அரசு இலவச தொலைக்காட்சிப் பெட்டி தருதுன்னு வாங்கிக்கிட்டு அதைக் கொண்டு வர 3 கி.மீ. கூட இல்ல மனசாட்சியே இல்லாம அம்பது ரூபாய் கேக்குறான் ஆட்டோக்காரன்னு அலுத்துக்கிற பரதேசிய எதைக்கொண்டு அடிக்கலாம்னு

7. என்னதான் கட்சித் தலைவின்னாலும் சொக்கு சாதாரண பிரஜை தானே? அரசு முடிவை எல்லாம் அவங்க கிட்ட கலந்தாலோசிப்பாங்களா மாட்டாங்களா? அவங்க சம்மதத்தோடதான் அரசு முடிவுன்னா அது இறையாண்மையை மீறினதில்லையான்னு

8. ஆந்திராவில் விளைச்சல் இல்லைன்னு விவசாயக் குடும்பங்கள் தற்கொலை பண்ணிக்கிறப்ப பலாலி விமான தளம் நவீன மயமாகணும்னு கோடி கோடியா குடுக்கிறாங்களே இது நியாயமான்னு

9. தமிழருக்கு ஆதரவா எவன் பேசினாலும் புலி ஆதரவுன்னு சகட்டு மேனிக்கு சொல்லுற இலங்கைக்கு சுரணையே இல்லாம கோடி கோடியா குடுக்கிறானுவளே ஏன்னு

10.ஐம்பதாயிரம் பேர் ஒரே நாள்ள சாவடிக்கப் பட்டாலும் ஒரு கே.பி. கடத்தப் பட்டாலும் எவனுமே ஏன்னு கேக்க மாட்டங்குறானே, அப்படி என்னதாண்டா உங்களுக்குன்னு

11. ரிஜிஸ்ட்ரார் ஆபீசில இந்த வருட வருமானத் திட்டத் தொகை இவ்வளவு, இன்றைக்கு வரை வருமானம் இவ்வளவுன்னு போடுறாங்களே. தேடிப் போய் ஆள் புடிச்சா வருமானத்தை பெருக்க முடியும்? பின்ன ஏன்னு

12. ஹோட்டல்ல‌ ரண்டு இட்டிலிய சாப்டாலும் பசிக்கிறா மாதிரியே இருக்கே, அவன் அதே ஒரு இட்டிலிக்காற மாவ இழுத்து இழுத்து பேப்பர் ரோஸ்ட்னு குடுத்தா வயறு ஊதிக்குதே எப்படின்னு

7 comments:

THANGA MANI said...

நன்று

பழமைபேசி said...

நல்ல நல்ல கேள்விகள்...

vasu balaji said...

/ THANGA MANI said...

நன்று/

நன்றிங்க‌!

vasu balaji said...

/ பழமைபேசி said...

நல்ல நல்ல கேள்விகள்.../

வாங்க பழமை!

யூர்கன் க்ருகியர் said...

Valid Questions....

கலகலப்ரியா said...

//யாரைப் போய் கேக்குறது?//

என்னிய கேட்டிருக்கலாம்ல.. :P

vasu balaji said...

/கலகலப்ரியா said...
என்னிய கேட்டிருக்கலாம்ல.. :P

ஆஹா. கேட்டுட்டோம்ல. சொல்லுங்க ப்ளீஸ்