Sunday, August 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 84

தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வுத் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை: மகிந்த ராஜபக்ச

இத ஏண்டா அப்பப்ப சொல்லுறது. எப்போதைக்கும் இல்லைன்னு தெரியுமே. காசு வேற வந்தாச்சி. அடுத்த பிச்சை வரைக்கும் மறந்துடலாம்.
________________________________
'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!': உலுக்கும் உலக நீதிமன்றம்!

இதக்கூட சொல்லலைன்னா எப்படி? ஆவணத்துக்காக சொன்னதா? போங்கைய்யா.
________________________________
நாணய நிதியம் கடன் கொடுக்கத் தவறியிருந்தால் நட்பு நாடுகள் இலங்கைக்கு உதவியிருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பே போதும் என்கிறார் இந்தியப் பிரதிநிதி

கூட்டுக் களவாணிங்களாச்சே. கொடுக்கலைன்னா போட்டுக் குடுக்க மாட்டானா? தொலைபேசில அவன் ஏன் அழைக்கிறான். நீங்களே தினம் அழைச்சு வேணுமா வேணுமான்னும் குடுக்கலாம்.
________________________________
இலங்கையில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் காணாமல் போய்விடும்: கேணல் ஹரிகரன்

அதற்கு முன் தமிழினமும் காணாமல் போகலாம்.
________________________________
"போராட்டம் முடிவுக்கு வரவில்லை, போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்": 'த வீக்' வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

மாத்துறீங்களா ஏமாத்துறீங்களா? தெரியலையேப்பு.
________________________________
நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருக்கிகிறது:பாலித கோஹண

லீசுக்கு குடுத்துட்டீங்களா? கூடிய சீக்கிரம் எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அவங்கதான் பண்ணாங்கன்னு சொல்லிடுவான்.
________________________________
உயிருடன் உள்ளார் பொட்டுஅம்மான்: உறுதிப்படுத்தும் இலங்கை ராணுவ புலனாய்வு பிரிவு

கூடிய சீக்கிரம் மத்ததையும் ஒத்துக்குவானுங்க.
________________________________
ராஜினாமா செய்யப்போவதில்லை பூட்டா சிங்

பதவியில் இருக்கிறப்பவே புடிச்சிட்டாங்களாம். பதவியை விட்டா புள்ளைய எப்படி காப்பாத்தறது? மாட்டாம வாங்க சொல்லிக் கொடுக்க மறந்து பூட்டசிங்.
________________________________
ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்த தடை இல்லை: ஐகோர்ட்டு

தெருவுக்கு தெரு ஆரம்பிச்சிடுவாங்க. அரசே டாஸ்மாக் மாதிரி ஆரம்பிக்கலாம்.
________________________________
நடிகர்களை ரோல் மாடலாக ஏற்பதா? விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வேதனை

மாடலா இருந்தா நடிகையாவக சுலபம்னு நினைச்சிட்டாங்க போல.
***

4 comments:

Unknown said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

vasu balaji said...

நன்றி.

பழமைபேசி said...

//விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வேதனை//

அதான!

ராஜ நடராஜன் said...

//"போராட்டம் முடிவுக்கு வரவில்லை, போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்": 'த வீக்' வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

மாத்துறீங்களா ஏமாத்துறீங்களா? தெரியலையேப்பு.//

செய்!இல்லாட்டி கம்முன்னு இருக்கறது நல்லது.இப்ப நடக்கும் அப்ப நடக்குமுன்னு உயிர் பலியானதுதான் மிச்சம்:(