Sunday, July 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 78

இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்?

ஏன் போனவங்க திரும்பலையா? அங்க புடுங்கிங்க யாருமில்லையா?
__________________________________________________________
மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்கள் தொடர்பாக பிரித்தானியா அழுத்தம்

நீங்களும்தான் அழுத்திட்டே இருக்கீங்க. அவன் நடத்திட்டே இருக்கான். என்னா நாடகமோ.
__________________________________________________________
இலங்கை விவகாரம் குறித்து ஹிலாரி இந்தியத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்

எங்க இப்போ சொல்லட்டும். ஐயோ அவன் இறையாண்மை போயிடும். நாம என்ன பண்ணன்னு. அவன் விவகாரத்த அங்க ஏங்க பேச முடியல.
__________________________________________________________
சிறிலங்காவிற்கான கடனுதவியை தடுக்குமாறு அமெரிக்க அமைச்சின் கோரிக்கை

அண்ணனே கடனுக்கு சாவரப்போ இவரு சொல்றத யாரு கேக்க போறா. கோரிக்கைய தவிர வேற ஒண்ணும் பண்ண முடியாது.
__________________________________________________________
ஜூன் 2வது வாரத்தில் புலிகளைத் தேடிப்போன 150 ராணுவத்தினரில் 125 பேருக்கு மேல் சாவு. தப்பியவர்கள் படுகாயம். அதிர்ச்சியில் ராணுவம்: செய்தி

5000 பேரை அனுப்பக் காரணம் இதுவா?
__________________________________________________________
தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவம்ஆடைகள் களைந்து, நிர்வாணமாய் கைகளை உயர்த்திக்கொண்டு வரச்செய்த கொடுமை

மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவிக்கலையா இன்னும். இதத்தான் காலம் காலமா பண்றானே.
__________________________________________________________
விடுதலைப் புலிகளின் சொந்தத் தயாரிப்பான நீர்மூழ்கி வாகனம் நேற்று கண்டுபிடிப்பு: ராணுவம்

நாள பின்ன கடலுக்கடியில் புலிகள் அரண்மனை கண்டுபிடிப்புன்னு கூட வரும். பன்னாடைங்க. கடன் வாங்கி வாங்கி சுடத்தெரியாம அதுக்கும் ஆளு வேணும். பாருங்கடா ஒரு வசதி இல்லாம என்னல்லாம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு சாவடிக்கணும்.
__________________________________________________________
எதிர்காலத்தில் புலிகள் பூனையாகக் கூட எழ முடியாது! பொல்லைக்கூட கையில் எடுக்க முடியாது என்கிறார் ரம்புக்வெல

எவனோ சண்டை போட்டு எவனோ செத்தா இவனுங்க பண்ணுற அலம்பல் தாங்கலடா சாமி.
__________________________________________________________
இனவிகிதாரசாரத்திற்கு ஏற்ப பிரதேசங்கள் பிரிக்கப்படுவதை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்

ஆமாம். அண்ணன் தம்பிங்களுக்குள்ள பிரிச்சிக்கிறதுக்கு இதெல்லாம் எதுக்கு?
__________________________________________________________
இராணுவத்திலிருந்து தப்பியோடி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு ? :கோத்தபாய‌

வெக்கம் கெட்ட கூட்டம். இதுக்கு ராணுவம்னு பேரு வேறயா?
__________________________________________________________
திமுக-காங்கிரஸ்தான் கூட்டணிக்கு இலக்கணம்: கலைஞர்

அதாவது காட்டிக் குடுக்கிறது தான் இலக்கணமா?
__________________________________________________________
கள்ள நோட்டுக்களைக் கொடுத்து ஆடுகளை வாங்கி நூதன மோசடி

விற்ற‌ ஆடுங்கள் திருடினதா இருக்கும்.
__________________________________________________________
திருமலையில் ஸ்ரேயா சாமி தரிசனம்

பக்தர்களுக்கு ஸ்ரேயா தரிசனம். கோவிந்தா கோவிந்தா.
__________________________________________________________
பன்றி கூட்டத்தில் புகுந்த கிங் பிஷ்ஷர் விமானம்

பன்றிக்காய்ச்சலை ஒழிக்க இப்படி பண்ணாங்களோ?

***

6 comments:

கலகலப்ரியா said...

அப்பாடா.. இப்படி உருப்படியா ஏதாவது எழுதுறத விட்டு எதுக்கு.. இதுதான் சரி.. பிரம்மாதம் போங்கோ..!

vasu balaji said...

அது சரி.

sakthi said...

எவனோ சண்டை போட்டு எவனோ செத்தா இவனுங்க பண்ணுற அலம்பல் தாங்கலடா சாமி.

nijam than

SUBBU said...

//திமுக-காங்கிரஸ்தான் கூட்டணிக்கு இலக்கணம்: கலைஞர்

அதாவது காட்டிக் குடுக்கிறது தான் இலக்கணமா?//
அதுதான் வேரென்ன!!!

Maheswaran Nallasamy said...

juper. சீக்கிரம் 100-வது பதிவை எதிர் பார்க்கிறோம்.

vasu balaji said...

நன்றி மஹேஸ்