Friday, July 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 77

கொசோவோவின் உருவாக்கம் சர்வதேச ஒத்துழைப்புக்கு அச்சுறுத்தல் -ஜனாதிபதி மஹிந்த

என்ன ஒத்துழைப்பு? மொத்தமா அழிக்கிறதுக்கும், அடைத்து வைக்கவுமா? அவங்களாவது பிழைச்சு போகட்டுமே ராசா.
_________________________________________________
சிறிலங்கா படைகளைவிட்டு 65,000 பேர் தப்பியோடியுள்ளனர்

உசிருக்கு பயந்தா மன சாட்சிக்கு பயந்தா? அப்ப சண்ட போட்டதாரு? இரவல் படையா?
_________________________________________________
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேசத்தின் கண்ணோட்டமும் கருத்தில் கொள்ளப்படும்

அவனவனும்தான் போட்டி போட்டு குடுக்கறாங்களே. எதற்கிந்த கண்துடைப்பு?
_________________________________________________
முகாம்களிலுள்ள மக்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஐ.நா. பான் கீ மூனிடம் ராஜபக்ஷ

அந்தாளு ஏன் பண்ணலைன்னு கேக்கவா போறாரு.
_________________________________________________
புலிகளை எதிர்ப்பதில் சில நாடுகள் நேர்மையாகச் செயற்படவில்லை: அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி

அட அட நேர்மைக்கு உதாரணம் இவருகிட்டதான் கத்துக்கணும்.
_________________________________________________
மீக நீண்ட காலத்திற்கு பின்னர் வன்னி மக்கள் உண்மையான சுதந்திரத்தை தற்போது அனுபவித்து வருகின்றனர்: கருணா

அட நாயே! வாலாட்டுறதுக்கும் அளவில்லையா? அங்கால போய் பாரு. உனக்கு சுதந்திரம் கிடைச்சுடும்.
_________________________________________________
மீளக்குடியமர்த்தும் பணியின் முன்னேற்றத்தை நேரில் கண்டறிய பான் கீ மூன் இலங்கை விஜயம்

நம்பிட்டோம்ல. ஐ. நா. ஆளுங்கள விட்டுடு ராசா புண்ணியமா போயிடும்னு கால நக்க போகுது போல.
_________________________________________________
மோசமான சூழ்நிலையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்களைப் பெற முடியவில்லை: பான் கி மூன்

சாகடிக்க விட்டதை பற்றி கவலை இல்லை. செத்த கணக்கு தெரியலைன்னு அழுகையா?
_________________________________________________
இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளின் குறைகளை போக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் கண்டிப்புடன் தெரிவித்ததாக மன்மோகன் சிங்.

பண்றங்கையா. கோவிச்சிக்கிறாதிங்கன்னு பக்சே கெஞ்சல்னு சேர்த்து சொல்லி இருந்தாலும் நம்புவம்ல.
_________________________________________________
ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணபதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது: ஹிலாரி கிளிண்டன்

ஆமாம் பின்ன. கொஞ்சம் மிஞ்சி இருக்கில்ல. உங்க பங்கு என்ன?
_________________________________________________
அனைத்துலக விதிகளை மீறும் இலங்கை: ஐ.நா. பணியாளர்கள் சங்கம் குற்றச்சா‌ற்று

அட. இப்போதான் கண்டு பிடிச்சிருக்காங்கையா.
_________________________________________________

16 comments:

கும்மாச்சி said...

செய்தியின் கமெண்ட் ஒவ்வொன்றும் சூபருங்க.

கும்மாச்சி said...

செய்தியின் கமெண்ட் ஒவ்வொன்றும் சூபருங்க.

கிரி said...

பாலா வாங்க! வாங்க! ஓய்வு முடிந்ததா :-)

vasu balaji said...

நன்றி கும்மாச்சி

vasu balaji said...

/பாலா வாங்க! வாங்க! ஓய்வு முடிந்ததா :-)/

:). வாங்க கிரி. ஆமாம்.

நசரேயன் said...

மீண்டும் வருக நறுக்க

யூர்கன் க்ருகியர் said...

Welcome back sir!

பழமைபேசி said...

பாலாண்ணே, வாங்க, வணக்கம்! நல்லா இருக்கீயளா?

ராஜ நடராஜன் said...

வந்துட்டீகளாக்கும்!நல்லா நறுக்குன்னு கேளுங்க இன்னும்.

vasu balaji said...

/ நசரேயன் said...
மீண்டும் வருக நறுக்க/

நன்றி நசரேயன்.

vasu balaji said...

/யூர்கன் க்ருகியர்..... said...
Welcome back sir!/

நன்றி க்ரூகியர்.

vasu balaji said...

/ பழமைபேசி said...
பாலாண்ணே, வாங்க, வணக்கம்! நல்லா இருக்கீயளா?/

வாங்க பழமை. வணக்கம். நலம். நன்றி.

vasu balaji said...

/ ராஜ நடராஜன் said...
வந்துட்டீகளாக்கும்!நல்லா நறுக்குன்னு கேளுங்க இன்னும்./

ஹி. ஹி. நன்றி.

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

appukke aappudiyooo said...

// ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!//

பார்த்துங்னா நீங்களே சொறிஞ்சிட்டு உங்களுக்கே சொருகிட போறீங்க.. !

sakthi said...

welcome back