Saturday, May 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 66

இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார்:கலைஞர்

இது வரைக்கும் யாருக்கு எப்படி உதவினீங்கன்னு தெரியும். இத தொடர வேணாம் அய்யா. மக்களுக்கு உருப்படியா நல்லதா பண்ணுங்க.
_____________________________________________
இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே

என்னா பெரிய மனசு. உன்ன யாரு கேட்டாங்க சொல்ல முடியுமா?
_____________________________________________
18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். :ராஜபக்ஸே

ஆக இதுதான் காரணமா?
_____________________________________________
புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்னா டைமிங்கு! என்னா செட்டப்பு!
_____________________________________________
விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. :பக்ஸே

நீயெல்லாம் இப்படி பேசுற அளவுக்கு நடந்துகிட்டமே! நாண்ட்டுகிட்டு சாவாம இருக்கோம் பாரு. ஆனாலும் நிஜமாச்சே.
_____________________________________________
புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே

நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு.
_____________________________________________
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ராஜபக்ச.

எந்த வெக்கங்கெட்ட நாயின்னு தெரியும். அவன்ட சொல்லு எங்க போனாலும் ஆம்லட்னு.
_____________________________________________
தமிழக முதல்வருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு.

பதவிக்கு அலயிற நரிகள். எங்க சங்கரிய காணோம். மானத்த விட்டா மாரு முட்ட சோறுக்கு வழி கேக்க வந்தாங்க போல.
_____________________________________________
புலிகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு மலேசிய அரசாங்கத்திடம் அமைச்சர் ரோஹித்த கோரிக்கை

அடுத்த இலக்கு அங்கயா? ராணுவமா அது? கூலிப்படையா?
_____________________________________________
பழ.நெடுமாறன் மீது சென்னைபோலீசார் வழக்குப்பதிவு

50 நிமிஷம் கூட பேசிட்டா கொலைக்குத்தமா? ஆளும் கட்சிக் கூட்டமெல்லாம் சரியா முடிச்சிடுராங்களா?
_____________________________________________
45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

அப்போ கடலுக்குள்ள இருந்த மீனெல்லாம் வெளியே வந்துடும்.
_____________________________________________
ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்

ஈழத் தமிழ்நாடு வேலைதான் இல்லையே. நாடு இருக்கு போறாங்க. வீடு இல்லாதவங்களப் பத்தி அவங்களுக்கென்ன?
_____________________________________________
20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!

அமைச்சர்னா அந்தஸ்து வேணாமா? விலைவாசி அப்படி. கண்ணு போடாதிங்கப்பா.
_____________________________________________
அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திவருகிறது: எஸ் எம் கிருஷ்ணா

கத்தியும் நீங்களே குடுத்தா துண்டு போட்டு பகிர்ந்துடுவாங்க.
_____________________________________________
ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்

அப்ப்டியே போய்டு. இந்த பக்கம் வந்தா நாறிபோய்டுவ!
_____________________________________________

14 comments:

Suresh Kumar said...

புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே

நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு./////////////

உண்மையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே

என்னா பெரிய மனசு. உன்ன யாரு கேட்டாங்க சொல்ல முடியுமா?//

ஹி... இதெல்லாம் வேற கேட்பாங்களா... எல்லாம் நமக்கே தெரியுமே..

இராகவன் நைஜிரியா said...

தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com - ல் இணைத்துள்ளேன்.

முடிந்தால் தமிழர்ஸின் ஓட்டுப் பட்டையையும் இணையுங்கள் நண்பரே.

இராகவன் நைஜிரியா said...

// 45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

அப்போ கடலுக்குள்ள இருந்த மீனெல்லாம் வெளியே வந்துடும்.//

கடலுக்குள் இருக்கும் மீன் வெளியே வருதோ இல்லையோ, மீன் பிடிக்க போனவங்க நல்லபடியா திரும்பி வரவேண்டும்.

இராகவன் நைஜிரியா said...

// 20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!

அமைச்சர்னா அந்தஸ்து வேணாமா? விலைவாசி அப்படி. கண்ணு போடாதிங்கப்பா.//

கோடி என்பது இப்போது எல்லாம் ஒன்றுமில்லைன்னு ஆகிப் போச்சுங்க..

vasu balaji said...

/ இராகவன் நைஜிரியா said...

தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com - ல் இணைத்துள்ளேன்.

முடிந்தால் தமிழர்ஸின் ஓட்டுப் பட்டையையும் இணையுங்கள் நண்பரே./

வாங்க ராகவன் சார். நன்றி. செய்கிறேன்.

vasu balaji said...

/Suresh Kumar said...

உண்மையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க/


நன்றி சுரேஷ்.

sakthi said...

புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே

நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு.

சவுக்கடி விலை போனவர்களுக்கு

sakthi said...

18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். :ராஜபக்ஸே

ஆக இதுதான் காரணமா?

ஒத்துக்கிட்டான் அவன் வாயாலேயே

sakthi said...

ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்

ஈழத் தமிழ்நாடு வேலைதான் இல்லையே. நாடு இருக்கு போறாங்க. வீடு இல்லாதவங்களப் பத்தி அவங்களுக்கென்ன?

அதானே

vasu balaji said...

வருகைக்கு நன்றி சக்தி

கிரி said...

//இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார்:கலைஞர்

இது வரைக்கும் யாருக்கு எப்படி உதவினீங்கன்னு தெரியும். இத தொடர வேணாம் அய்யா. மக்களுக்கு உருப்படியா நல்லதா பண்ணுங்க.//

நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே

vasu balaji said...

//கிரி said...

நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே//

அப்படித்தான் இருக்கு

ராஜ நடராஜன் said...

//விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. :பக்ஸே//

இறையாண்மை அம்மணமா திரியுது!