Sunday, May 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 60

இலங்கைக்கான இந்திய தூதுவராக தமிழரை நியமிக்க கோரிக்கை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்

நடக்கிற கதையா பேசுங்கப்பா. கர்நாடகா ஆச்சு, கேரளா ஆச்சு, ஆந்திராதான் பாக்கி. அங்க ஆளு தேடுவாங்க.
_______________________________________________
பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினோம்:ராஜபக்சே

பிடிச்சிருந்தா இப்படி டிராமா போட்டிருக்க முடியாதே?
_______________________________________________
ராஜபக்சேயுடன் -பான் கி மூன் 1மணிநேர சந்திப்பு

என்ன பிரயோசனம். உங்க உதவி இல்லாம இவ்வளவு கொலை பண்ணி இருக்க முடியாது. மத்த படி நான் சொன்னது சொன்னதுதான்னு அனுப்பிட்டானே!
_______________________________________________
எங்களை விசாரிக்கும் முன்பு------: ராஜபக்சே சகோதரர் ஆவேசம்

உங்களுக்கு விசாரணை வேற கேடா? அப்படியே கழுவேத்தணும்.
_______________________________________________
ராஜபக்சேவிடம் விவாதித்தது என்ன?: கலைஞரிடம் விளக்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

அட! அரிச்சந்திரன் ஆவி புகுந்துட்டுதா? ஏதோ புளுகிட்டு போயிருப்பான்.
_______________________________________________
ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.

மனுசனா வாழணும்னு நினைக்கிறது தான் பிரச்சனை. அதனால தான் தீர்க்கிறாரு லட்சக் கணக்கில.
_______________________________________________
தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்

ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் பண்றீங்க. பினிசிங் பக்சே கைலயே விட்டு போறீங்களே எல்லாரும்.
_______________________________________________
கிளிநொச்சியில் ராணுவமுகாம்:இலங்கை அரசு திட்டம்

வை வை. எத்தன வாட்டிதான் கொண்டு வந்து கொண்டு வந்து குடுப்ப. அங்கயே இருந்தா வசதி.
_______________________________________________
இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்போம்: நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்

எல்லாம் நடிக்கும் போது அதே தொழில்ல இருக்கிறவங்க நீங்க நடிக்காமலா? பார்த்தோமே! எவ்வளவு உறுதுணைன்னு.
_______________________________________________
தொண்டு பணியாளர்கள், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை முகாம்களுக்குள் அனுமதிக்குமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்: ஜனாதிபதி மறுப்பு

எல்லாருக்கும் பெப்பே தான்! கோலெடுத்தா தான் குரங்காடும்.
_______________________________________________
அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்

தேவையில்ல போங்கடான்னு சொன்னா என்னாயிடும்? ஆதரவு தேவையா இருக்கும்போதே அரையணாக்கு மதிக்கல.
_______________________________________________
அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது: ஜே.வி.பி

ஆரம்பிக்கக் கூட இல்லை. இவனுங்க ஆரம்பிச்சிட்டானுங்க. எவனுக்காவது புரியுதா? எங்க இவனுங்கள அடிக்க வேணாம் புடிக்கட்டும்.
_______________________________________________
நடேசனும் புலித்தேவனும், உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்:மேரி கொல்வின்

அதனால தானே போட்டுத் தள்ளிட்டாங்கள்.
_______________________________________________
பரீட்சையில் காப்பியடித்த கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு

பிடிக்கிறாங்களான்னு பார்த்திருப்பாரு. உருப்படும்.
_______________________________________________
வயகராவை கண்டுபிடித்த விஞ்ஞானி 92 வயதான ராபர்ட் பர்ச்காட் சியாட்டில் நகரில் மரணம் அடைந்தார்.

டெஸ்ட் பண்ணாரோ?
_______________________________________________

7 comments:

seik mohamed said...

super

vasu balaji said...

thanks

ttpian said...

தமிழன் கருனானிதி மெல்ல இந்தியனாக மாறி,இப்போது இதாலிய பிரஜை!
வாழ்நாள் முழுவதும் உன்னை நம்பி ஏமாந்தேனே!

Unknown said...

நெம்ப சூப்பருங்கோவ்.....!!!

sakthi said...

தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்

ஸ்டார்டிங் எல்லாம் நல்லாதான் பண்றீங்க. பினிசிங் பக்சே கைலயே விட்டு போறீங்களே எல்லாரும்.

superb

vasu balaji said...

நன்றி மேடி, சக்தி.

யூர்கன் க்ருகியர் said...

//ஈழத் தமிழர்களின் பிரச்னைகள் என்னவென்று கண்டறித்து அவற்றை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.//

இனிமேதான் கண்டு பிடிக்கனுமாமா ?