Friday, May 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 59

தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை

அதுக்குதான் அவசர அவசரமா மரணச் சான்றிதழ், எரியூட்டல் எல்லாமா?
_____________________________________________
ராஜிவ் காந்தியை கொன்ற பிரபாகரனை கொன்றபிறகு தான், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவேன் என உறுதி எடுத்தேன்: சு.சுவாமி

இப்போவாவது ஜெயின் கமிஷனுக்கு விசாரணைக்கு போவீரா?
_____________________________________________
ஐநா பான் கீ மூன் 24 மணி நேரப் பயணமாக கொழும்பு வருகிறார்.

கண்துடைப்புக்கு இவ்வளவு போதும். தின்னு, தூங்கி, பேசினது போக பறந்தபடி பார்த்து பாராட்டிட்டு போறது தானே!
_____________________________________________
இலங்கைக்கு எல்லா வகையிலும் அமெரிக்கா உதவ தயாராக இருக்கிறது’’என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.

முதல்ல அவனுக்குதான் உதவணும். ஆளு படை அனுப்பி வெச்சா மாட்டிக்காம புளுக வசதி. செத்ததை எல்லாம் மறைக்க வசதி. பண்ணுங்க சாமிகளா.
_____________________________________________
சிங்கள அரசின் போர்க்குற்றங்கள்:ஆராய்கின்றது அமெரிக்கா

கையும் களவுமா பிடிக்காம படம் புடிச்சி ஆவப்போறதென்ன. இதான் பொய்னு சொல்லிட்டு போய்ட்டே இருப்பான்.
_____________________________________________
பிரபாகரன் மனைவி, மகள் இறக்கவில்லை:சிங்கள ராணுவம்

கொஞ்சம் கூட சுரணையில்லாம நாளுக்கு ஒண்ணு புளுகறான். இந்த நாய்ங்க குடுக்கிற வாக்குறுதிக்கெல்லாம் பாராட்டு வேற.
_____________________________________________
தமிழ்நாட்டில் 75 ஆயிரம் இலங்கை அகதிகள் தஞ்சம்

இப்போ ஏன் இந்த கணக்கெடுக்கறானுவ.
_____________________________________________
இழப்புகளை ஈடு செய்வதன் வழியாகவும் அவர்களை அவசரமாக நல்ல நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவும்தான் தீர்வுக்கு கொண்டுவரமுடியும். இலங்கை அரசாங்கம் அப்படி செய்யத்தவறினால்: –ஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னன்

இன்னாளுக்கே தண்ணி காட்டுறான். முன்னாளுக்கெல்லாம் பதில் கூட சொல்ல மாட்டான்.
_____________________________________________
அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டது: 19 அமைச்சர்கள் பதவி ஏற்பு

சாதனையாளருக்கு வேதனை.
_____________________________________________
அடுத்த கட்ட நடவடிக்கை:கலைஞர் பேட்டி

ஈழப் பிரச்சனைல எடுத்தா மாதிரி இல்லாம உறைக்கிறா மாதிரி இப்போவாவது எடுப்பிங்களா?
_____________________________________________
‘’காங்கிரஸ் கட்சி - திமுக நட்பு கட்சிதான்’’:டி.ஆர்.பாலு

பின்ன! அவசரப்பட்டு வாய விட்ற முடியுமா. பதவி ஒரு பக்கம், இன்னும் 2 வருஷம் தள்ளணுமே.
_____________________________________________
காங். சமரச முயற்சி: கலைஞரை சந்திக்க குலாம்நபி ஆசாத் சென்னை வருகிறார்

ஏன்? சிதம்பரம் சொன்னா இனிமே கேக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா?
_____________________________________________
இலங்கை அகதி முகாம்களில் பெண்களை கற்பழிக்கின்றனர்; இங்கிலாந்து டி.வி. தகவல்

ஆளாளுக்கு வந்து பார்த்து அகில உலக தரத்தில இருக்குன்னு சொல்றாங்களாம். நம்பியாரும் சொன்னாராம். அப்போ இதெல்லாம் சகஜமப்பாவா?
_____________________________________________
இலங்கை போரில் 6200 சிங்கள வீரர்கள் பலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒரு நாள்ளயா இருக்கும். இவனுங்க அதிகார பூர்வ அறிவிப்ப எவன் நம்புறான்.
_____________________________________________
விடுதலை புலிகள் மீண்டும் துளிர் விட முடியாது; மந்திரி ஆவேச பேச்சு

ரொம்பதாம்பா சீன் போடுறானுவ. அவனவனுக்கும் அஸ்தில ஜூரம். இதில சலம்பல் வேற.
_____________________________________________
முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள ராணுவம் சொல்கிறது

என்னாடா அவசரம். உங்க ஊர்ல மார்சுவரி இல்லையா? பாவம் எந்த அப்பாவியோ இவனுங்க கிட்ட இப்படி நாறுது.
_____________________________________________
அவசியமற்ற நேரத்தில் பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலவரம் குறித்து விவாதம் நடத்த முனைப்பு காட்டப்படுகிறது: மஹிந்த சமரசிங்க

ஆமாம்டா. இப்பவாவது அவனுங்களுக்கு உறைக்குமா தெரியல. எல்லாம் முடிச்சப்புறம் விவாதம் பண்ணி என்ன பண்ணப் போறாங்க.
_____________________________________________
இந்திய அரசாங்கமே இலங்கை தமிழரின் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

ஆமாம். அதுக்கு தலைமைக்கு இவரைப் போட்டு அனுப்பி வைக்கணும் அங்க. அழுகின முட்டைதானே! அப்பப்போ அடிச்சா வாய தொறக்காம இருப்பானில்ல இந்தாளு. பண்ணுங்கப்பு.
_____________________________________________
பிரபாகரனின் மரண சான்றிதழை இந்தியா கோருகிறது

2125 கோடி விலை குடுத்து ஒரு போலி சர்டிபிகேட். கின்னஸ்ல வருமா?
_____________________________________________
ஜனாதிபதி மஹிந்தவுக்கு ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது

இவனுக்குத்தான் குடுக்கணும். அக்கிறமமா அங்க கிடைச்ச இடத்தில வைத்தியம் பண்ணவங்களுக்கெல்லாம் குடுத்தா விருதுக்கு கேடு வந்துடும். போங்கய்யா.
_____________________________________________

5 comments:

Anonymous said...

Pls see the current situation of so called "Liberated Jaffna"

http://www.kalachuvadu.com/issue-113/page44.asp

Anonymous said...

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”
ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

யூர்கன் க்ருகியர் said...

//2125 கோடி விலை குடுத்து ஒரு போலி சர்டிபிகேட். கின்னஸ்ல வருமா?//

:)

Anonymous said...

Friend News & comment(lengthy) -Indha style romba mokkaiya iruku...Interesting a yedhavadhu try pannalame...Krish

கலையரசன் said...

வாழ்த்துருக்கள்!
தொடருங்கள் சந்திப்போம்!
அப்படியே, நம்ம பக்கமும் வாங்க!