Monday, May 18, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 55

தியாகத்திருவிளக்கு சோனியா: கலைஞர் புகழாரம்

ஆமாம். எவ்ளோ உயிர எரிய வெச்சிருக்கு. 12 சீட் போனதுக்கு இப்படியெல்லாம் காக்கா புடிச்சாதான் கேட்ட மந்திரி பதவி கிடைக்கும். நடத்துங்கய்யா.
____________________________________________
உறவுக்கு கை கொடுப்போம்;உரிமைக்கு குரல் கொடுப்போம்: முதல்வர் கருணாநிதி

உறவுக்கு கை கொடுத்தீங்களே! பார்த்தோமே. உரிமையும் கிடையாது அடிமைன்னு சொன்னீங்க. குரல் கொடுப்பாராம்.
____________________________________________
தங்கபாலு தோல்வி:பாதி மீசையை எடுத்து பாதி மொட்டை அடித்த தொண்டர்

எதுன்னாலும் சூதாடணுமா?
____________________________________________
டெல்லி செல்கிறார் கலைஞர்: சோனியாவுடன் ஆலோசனை

இதென்னா ஜனங்க உசிரா தந்தி, தபால், ஃபோன்ல முடிக்க. பதவியாச்சே. நேர போனா தான் பேரம் படியும்.
____________________________________________
பிஜேபி தோல்வி: லாலு மகிழ்ச்சி

அட அட. என்னல்லாம் பண்றாங்கய்யா. பதவி படுத்துற பாடு.
____________________________________________
ஜனாதிபதியிடம் அனுமதி கேட்கும் மன்மோகன்சிங்

எல்லாத்துக்கும் கேட்டா பண்ணாங்க.
____________________________________________
மம்தா மந்திரியானால்-: பிரதமரின் சகோதரி

அவரென்னா டி. ராஜேந்தரா. சகோதரி கேட்டுச்சின்னு போஸ்ட் குடுக்க. அதெல்லாம் அம்மா சொல்லணும்.
____________________________________________
பாஜக தோல்விக்குகாரணம் வருண், மோடி:சரத் யாதவ்

ஏதோ ஒரு காரணம். இவருக்கென்ன குறையோ பாவம்.
____________________________________________
புதிய எம்.பிக்களில் 150 பேர்மீது கிரிமினல் வழக்குகள்!

அப்போ மத்தபேரெல்லாம் தகுதியே இல்லையா?
____________________________________________
போராளிகள் சயனைடு குப்பிகளை கடித்து தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நிகழாமல் காப்பாற்றுங்கள்:வைகோ

அதுக்குதான் வழியே இல்லாம என்னல்லாம் உண்டோ விட்டடிக்கிறானே?
____________________________________________
உடனே போர்நிறுத்தம்:திமுக தீர்மானம்

அப்போ நிறுத்தின போர் எப்போ ஆரம்பிச்சிதாம். ஆறு மணி சாதனை அய்யகோவா?
____________________________________________
பிரபாகரன் பற்றிய செய்தி:முன்னெச்சரிக்கையாக சென்னையில் 300 பேர் கைது

யாரை எச்சரிக்க?
____________________________________________
தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்; வேறுவிதமான போராட்டங்களில் ஈடுபடுவார்கள்: தா.பாண்டியன்

எவன் சட்டை பண்றான்?
____________________________________________
இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியிடுவதை கண்டித்து, நெல்லை வக்கீல்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதில ஒரு அற்ப சந்தோஷம். போகட்டும் விடுங்க.
____________________________________________
வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள்:கியூ பிராஞ்ச் போலீசார் கண்காணிப்பு

எதுக்கு? வாழுறாங்களா சாவுறாங்களான்னு கண்காணிப்பா?
____________________________________________
போர் கைதிகளாக இருந்த 7படையினர் விடுதலைப்புலிகளினால் விடுவிப்பு

அதனால தான் தீவிரவாதின்னு சொல்லுறது. இல்லாம சாவடிச்சிருந்தா அதுக்கு பேரு ராணுவம்.
____________________________________________

போரினால் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 10 பில்லியன் அமெ.டொலர்கள் தேவை: இலங்கை அரசாங்கம்

யாருடைய‌ பொருளாதாராம். ம‌ந்திரிக‌ளுக்கா? நிவார‌ண‌த்துல‌ சுருட்டுங்க‌ ராசா. உங்க‌ளுக்கு தெரியாதா?
____________________________________________
யுத்தத்தில் வெற்றி பெற்ற படையினருக்கு ரணில் விக்ரமசிங்க பாராட்டு

ஐரோப்பா போய்ட்டு வந்து அடிச்சாருய்யா அந்தர் பல்டி. சபாசு.
____________________________________________
"ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்": செ.பத்மநாதன் தகவல்

இத‌க் கேட்ட‌வ‌ங்க‌ள்ளாம் வாயே தொற‌க்க‌லையே?
____________________________________________
கொழும்புப் பயணம் தோல்வியடைந்த நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார் விஜய் நம்பியார்

எதுக்கு வ‌ந்தாரு என்ன‌ தோல்வின்னு சொல்ல‌வா போறாரு அந்தாளு.
____________________________________________

6 comments:

sakthi said...

உறவுக்கு கை கொடுப்போம்;உரிமைக்கு குரல் கொடுப்போம்: முதல்வர் கருணாநிதி

உறவுக்கு கை கொடுத்தீங்களே! பார்த்தோமே. உரிமையும் கிடையாது அடிமைன்னு சொன்னீங்க. குரல் கொடுப்பாராம்.

hahahhaahhaa

kalakrel

sakthi said...

உடனே போர்நிறுத்தம்:திமுக தீர்மானம்

அப்போ நிறுத்தின போர் எப்போ ஆரம்பிச்சிதாம். ஆறு மணி சாதனை அய்யகோவா?

mudiyalai

hahahaah

romba sirikavaikarenga

கலையரசன் said...

//வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள்:கியூ பிராஞ்ச் போலீசார் கண்காணிப்பு
எதுக்கு? வாழுறாங்களா சாவுறாங்களான்னு கண்காணிப்பா?//

செவிட்ட அடிச்ச மாதிரி கேள்வி கேட்டீங்க!
நறுக்குன்னு நாலு வார்த்த இல்லண்ண,
எட்டு வார்த்த கேளுங்க!!

vasu balaji said...

நன்றி சக்தி, கலையரசன்

கலகலப்ரியா said...

ம்ம்

vasu balaji said...

வாங்க கலகலப்ரியா.
ம்ம்