Saturday, May 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 46

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

எடுத்த நடவடிக்கைல அழிஞ்சது போறாதா. ஒதுங்கி நின்னா எப்பவோ விடிஞ்சிருக்கும். பாவிகளா.
______________________________________________________
தமிழகத்தில் திமுக-காங் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்: ராகுல் காந்தி

அப்புறம் ஏன் அலைபாயணும். போய் படுங்க சாமிகளா. எரிச்சலாவது மிஞ்சும்.
______________________________________________________
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வேறுபாடில்லை: ராஜா

தாவறதுக்கு வசதின்னா?
______________________________________________________
ஐக்கிய சமஷ்டி முறைமை கட்டமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும்: மன்மோகன் சிங்

இத்தனை அழிவிற்குப் பின்னும் இது சாத்தியமான்னே யோசிக்க மாட்டிங்களா? நீங்க என்ன அவன் குரலா ?
______________________________________________________
தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு:சோனியா தரைவழி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

இப்போவாவது உறைக்குமா?
______________________________________________________
ஈழம் : மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. உத்தரவு

சாட்சி சொல்லவாவது ஆளுங்க இருக்கிறதுக்குள்ள ஆரம்பிங்க வெள்ளைச் சாமிகளா.
______________________________________________________
சோனியா- கலைஞர் ஒரே மேடையில் பிரச்சாரம்

அவங்க கட்சி ஒட்டு கூட விழாம பூடும்.
______________________________________________________
நான் அரசியலுக்கு வரும்போது பிறக்காத ராமதாஸ்-----: அமைச்சர் அன்பழகன் கடும் தாக்கு

ஸ்டாலின், அழகிரி எல்லாம் பிறந்துட்டாங்களா?
______________________________________________________
ஈழத்தமிழர்களை கொன்றுகுவிப்பதை துன்புறுத்தல் இல்லை என்கிறாரா மன்மோகன்சிங்: ஜெ.கேள்வி

அப்படித்தான் அர்த்தம்.
______________________________________________________
ஆயுள்ரேகை இல்லாத ’கை’:ஆர்.சுந்தர்ராஜன் கமெண்ட்

கை இவங்களது தான். ஆயுள்தான் யாருக்கோ இல்லாம போகுது. அல்லக்கை போல.
______________________________________________________
20கிலோ மீட்டர்- 4கிலோமீட்டர் ஆனது:பாதுகாப்பு வளையத்தை குறுக்கிய ராணுவம்!

பாதுகாப்பே இல்லைங்கும்போது 20 ஆனா என்ன 2 ஆனா என்ன.
______________________________________________________
தமிழ் ஈழம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது: விசுவ இந்து பரிசத்லைவர்

யார் விவகாரத்துக்கு யாரு உடன்படுறது. நீங்கள்ளாம் ஒதுங்கி நின்னா அது பாட்டுக்கு நடக்கும். உதவ வக்கில்லன்னா இப்படி பேச மட்டும் என்ன உரிமை? புறம்போக்கு பரதேசிங்களா.
______________________________________________________
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தருவோம் : பிரதமர்

உன் பாட்டன் பூட்டன்லாம் வாங்கி குடுத்துட்டாங்க. இவரு வாங்கி தரப் போறாரு. வாங்கற புத்தி போகுதா?
______________________________________________________
கலைஞர் - பிரதமர் சந்திப்பு:ஈழம் குறித்த பேச்சு!

ஆமாம். என்னான்னு மட்டும் உண்மை வராது.
______________________________________________________
ஈழம்-சோனியா கருத்து தெரிவிக்கவேண்டும்:பிஜேபி

அதில்லாமதான் எல்லாம் நிக்குது. போங்கையா.
______________________________________________________
சிங்கள ராணுவத்தளபதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: அமெரிக்க அமைப்பு

முதல்ல அண்ணந்தம்பிகளை அமுக்க பாருங்கையா. சந்தேகம்னா ஃபெயினக்க கேளுங்க. என்ன பண்ணலாம்னு.
______________________________________________________

2 comments:

கிரி said...

//ஒதுங்கி நின்னா எப்பவோ விடிஞ்சிருக்கும். பாவிகளா.//

நல்லா சொன்னீங்க

உங்கள் தோழி said...

//20கிலோ மீட்டர்- 4கிலோமீட்டர் ஆனது:பாதுகாப்பு வளையத்தை குறுக்கிய ராணுவம்!//

//பாதுகாப்பே இல்லைங்கும்போது 20 ஆனா என்ன 2 ஆனா என்ன.//


அப்பட்டமான உண்மை