Friday, May 8, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 45


காக்கா பறக்கல. போரை நிறுத்தி மக்களெல்லாம் ஓரளவுக்கு அமைதியா இருக்காங்கன்னு சந்தோஷ படுறவங்க பார்க்கட்டும். அத்தனையும் குண்டு.
_______________________________________________
சோனியா-கலைஞர் 10ஆம் தேதி பிரச்சாரம்:செய்தி

ஹி ஹி..அன்னைக்கே தெரியும். செட்டப்புன்னு.
________________________________________________
சென்னை வரும் பிரதமர் பிரச்சாரத்தில் பங்கேற்கமாட்டார்: காங்.

நெல்லு குத்தைல சொல்லுவாங்கள்ள. எகிரி எகிரி குத்தினாலும் ஒரே கூலிதான். எகிறாம குத்தினாலும் ஒரே கூலிதான்னு. பிரசாரம் பண்ணா மட்டும் என்னா நடந்துடும்?
________________________________________________
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை: தங்கபாலு

இப்போ யாரு கூப்டாங்க. கெத்து வேறயா. அந்தம்மா கூப்பிட்டப்பவே போய் இருந்தா என்னல்லாமோ ஆயிருக்கும்.
________________________________________________
3வது அணி ஒரு மாயை: தங்கபாலு

முதல் அணி மப்பா?
________________________________________________
திமுக-காங் 40 இடங்களிலும்வெல்லும்:ஜெயந்திநடராஜன்

குடுத்த காசுக்கு மேலயே கூவறது இதான்!
________________________________________________
40கோடி பணம்-3கோடி மதுபானம்:அதிகாரிகள் குழப்பம்

தெளிஞ்சா சரி ஆயிடும்.
________________________________________________
இலங்கையில் நடப்பது தமிழர்கள் பிரச்சினை அல்ல: இந்துக்கள் பிரச்சனை: விசுவ இந்து பரிசத்

இருக்கிற குழப்பம் போதாது. இவனுங்க வேற. சாமிகளா உங்க வியாவாரம் அங்க பலிக்காது. அங்க தமிழ் ஜாதி ஒண்ணுதான்.
________________________________________________
ஈழத்தமிழர்களுக்காக ஜெ. என்ன தியாகம் செய்தார்: அன்பழகன்

கெடாசினதெல்லாம் தியாகம்னு சொல்லிட்டா சரிங்களா? என்னாமோ 5 வருஷம் ஒப்பந்தம். பாதில போனதில இவ்வளவு நட்டம்னு சொல்றாமாதிரியே சொல்றாங்கப்பு!
________________________________________________
போரை நிறுத்துவது பலனளிக்காது: ராஜபக்சே

ஆமாம் பின்ன! பலன் தான் என்னான்னு தெரிய மாட்டங்குது.
________________________________________________
மாறாக இந்த ஐந்தாண்டு காலத்தில் தான் சிங்கள ராணுவத்தின் 60 சதவீத அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

அப்பவே கூவக்கூடாதா? எவ்வளவு நாசம் பண்ணிட்டிங்கையா எல்லாருமா?
________________________________________________
புலிகளின் மண் அணைகளை தடுக்க எந்தத் தடையும் இல்லை: கோத்தபாய ராஜபக்சே

உங்களுக்கு எது தான் தடை? என்னமோ மண் மேடுன்னு பார்த்து அடிக்கிறா மாதிரில்ல அளப்பு
________________________________________________
தனி ஈழம் வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல:இ.கம்யூ.

உங்க கோரிக்கைய யாரு கேட்டா? கோர்ரவங்கள ஆதரிக்கிறீங்களா இல்ல குறுக்குசால் ஓட்டப் போறீங்களா?
________________________________________________
சிங்கள ராணுவத்தை தமிழர்கள் நம்ப வேண்டும்; ராஜபக்சே தம்பி சொல்கிறார்

அடிங்கோய்யாலே . நம்பினதெல்லாம் அம்போன்னு நிக்குது கொழுப்ப பாரு.
________________________________________________
பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள்; இலங்கை ராணுவம் தகவல்

அன்னைக்கு தானடா 400 சொன்னிங்க.
________________________________________________

3 comments:

சூர்யா ௧ண்ணன் said...

//முதல் அணி மப்பா?//

சூப்பர் தலைவா

vasu balaji said...

வாங்க சூர்யா. நன்றி

Tech Shankar said...

ஆகா. இந்த பதிவை அப்படியே அடுத்த தேர்தல் வரை வைத்திருந்து - அவங்கவங்க எப்படியெல்லாம் எதிர்த்துப் பேசுராங்க என்று அறிந்திடலாம்.