Saturday, May 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 39

கொழும்புக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்கள்.பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர்.

உண்ணா விரதம் இருந்தவர் என்னா விரதம் இருக்கப் போகிறார்?
___________________________________________________
சாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை ஜெயலலிதா கைவிட வேண்டும்: சு.சாமி

பேச்சுக்கே சொன்னதா இருக்கட்டுமே. நம்புறவங்க நம்புறோம். இந்தாளு ஏன் கெடந்து குதிக்குது.
___________________________________________________
இலங்கை தமிழர்கள் பலியாக முதல் காரணம் ப.சிதம்பரம்தான்: ராமதாஸ்

ஆரம்பிச்சி 8 மாசமாச்சி. எப்போ கண்டு பிடிச்சிங்க ஐயா?
___________________________________________________
இலங்கை: போரை நிறுத்திவிட்டதாக பாசாங்கு: டி.ராஜா

இதுக்கு பேரு பாசாங்கா.வேற வார்த்த இருக்கும் பாருங்க.
___________________________________________________
ஈழப்பிரச்சனைக்கு போராடுவதற்கு கலைஞர்தான் சரியானவர். திருமா.

அந்த சனங்களுக்கு அவன் போடுற எரிகுண்டு ஒண்ணுமே இல்ல. தினம் தினம் நம்பின நீங்க பேசுறது அத விட கொடுமை.
___________________________________________________
தோல்வி பயத்தில் ராமதாஸ்:திருமா

அவரு பிழைச்சிக்குவாரு. உங்க கதைய பாருங்கய்யா.
___________________________________________________
எஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு

காமெடி
___________________________________________________
எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை

அழைப்பில்லங்க வருது!
___________________________________________________
இன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்

இதெல்லாம் தேவையா. யாராவது நோவுன்னா மருத்துவர் என்ன மதம்னு கேக்குறாங்களா?
___________________________________________________
என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.

அதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க.
___________________________________________________
விவசாயிகள்நலனை பா.ஜ.புறக்கணிக்கிறது:மன்மோகன்

1500 கோடி இவங்க நலனுக்கு கொடுத்திருந்தா இப்படி பேசலாம்.
___________________________________________________
பீகாரில் கள்ள ஓட்டு: லாலு குற்றச்சாட்டு

இல்லைன்னா அது பீகாரே இல்லை.
___________________________________________________
காந்தியை மறந்த அரசியல்வாதிகள்: நரேஷ்குப்தா

தினம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தின்னு இருக்கே. அப்புறம் எப்படி?
___________________________________________________

6 comments:

பழமைபேசி said...

வணக்கம் போட்டுக்கறன் பாலாண்ணே!

vasu balaji said...

வாங்க பழமை. இது நல்லாருக்கு. :))

கிரி said...

//என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.

அதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க//

:-)

Anonymous said...

Excellent

இராகவன் நைஜிரியா said...

// எஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு

காமெடி//

சூப்பர் காமெடி.

vasu balaji said...

வாங்க இராகவன் சார்.