Wednesday, April 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 24

மூப்பனார் கொடுத்த உம்மால் வெல்ல முடியும் புத்தகத்திலிருந்து சில துளிகள்:கலைஞர்

உம்மாலா? உம்மாவாலா?
________________________________________
திமுகவை யாராலும் அழிக்க முடியாது: மு.கண்ணப்பன்

புதுத் துடைப்பம் நல்லாதான் கூட்டும். ஒரு வேளை தானே அழிஞ்சிடும்ங்கராரோ?
________________________________________
7 தொகுதிகளிலும் பாமக டெபாசிட்இழக்கும்:பொன்முடி

அதுக்குள்ள வாங்கியாச்சா?
________________________________________
ராமதாஸ் ஆரூடம் பலிக்காது: தங்கபாலு

எந்த கூமுட்ட சாமியாவது நரபலி குடுத்தா அசைக்க முடியாதுன்னு சொல்லிட்டானா? இவ்ளோ குடுத்திருக்கோம். நாம தோக்க மாட்டோம்னு நம்பிக்கையா தொங்கு?
________________________________________
என்னைக் கவர்ந்தது கம்யூனிசம் தான்: கலைஞர்

எப்போ சேரப்போறீங்க. அம்மா கட்சில கூட்டணி வைக்க இப்படி ஒரு பிட்டா என்னா?
________________________________________
அதிமுகவை ஏன் புறக்கணித்தேன் :நடிகர் கார்த்திக்

வடிவேலு உதாரே கௌரவமா இருக்கு. அடங்குங்க சார்.
________________________________________
வைகோவை எதிர்த்து ஏன் போட்டியிடுகிறேன்: நடிகர் கார்த்திக் விளக்கம்

அந்தாள பார்த்தா அவ்ளோ இளக்காரமா போச்சி. வேற என்ன?
________________________________________
உங்கள் ஓட்டுபணத்திற்கா?மனிதாபிமானத்திற்கா?: வைகோ

முதலாவது எங்களுக்கு தேவையில்ல. இரண்டாவது உங்கள் யாருக்கும் இல்ல.
________________________________________
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார் தங்கபாலு: தாக்குகிறார் ராமதாஸ்

அட போங்க டாக்டரு. அவரு அம்மாதான் குதிருக்குள்ள இல்லன்னு சொல்லிட்டிருக்காரு.
________________________________________
நாளை பீகார் தேர்தல்: கண்டதும் சுட உத்தரவு

அய்யோ. மொத்தமா பங்கு போட்டு ஓட்டு அவங்களே போட்டுக்குவாங்களா? அப்ரமெப்படி ஓட்டு போட வெளீய வரது.
________________________________________
பெரும்பான்மை கிடைக்காவிட்டால்.... : பிரதமர்

வுடு ஜூட்.
________________________________________
தேர்தலுக்குபின் பாமகஅழிந்துபோகுமா:ராமதாஸ் பேட்டி

தொங்குக்கு ஜோசியம் சோன்னீங்களாம். உங்களுக்கு தெரியாதுங்களா?
________________________________________
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: நரேந்திர மோடிக்கு பிரியங்கா அறிவுரை

இதெல்லாம் நீங்க சொல்ல நாங்க கேட்டுகிரணும்னு தல எழுத்து. அம்மா படிச்சாங்களா கேளும்மா.
________________________________________
புலிகளை முற்றிலும் அழிப்போம்: சரத் பொன்சேகா

துள்ளுற மாடு பொதி சுமக்காது.
________________________________________
பாதுகாப்பு வலய பகுதி மீது அதிகாலை முதல் இலங்கை ராணுவம் தாக்குதல்

இதுக்கு பேரு ராணுவமா? இதான் தீவிரவாதம்.
________________________________________
ஈழமக்களுக்காக தேர்தலை தவிர்க்க நினைத்தேன்: திருமா

இப்பிடி பேசியே இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதயும் கெடுத்துப்பாரு இவரு. வேணாம் திருமா.
________________________________________
3 மணி நேரத்தில் 180 ஈழத்தமிழர் பலி

சமாதானம்தான் குடுக்க முடியல. கின்னஸ் சாதனையாவது குடுங்க வெள்ளச்சாமிகளா!
________________________________________
வவுனியா செல்கிறார் வாழும் கலை’ ரவிசங்கர்

டைமிங் சரியில்லயே சாமி!
______________________________________________________________

5 comments:

கலகலப்ரியா said...

//டைமிங் சரியில்லயே சாமி!//

ம்ம் இங்கயும் கொஞ்சம் டைமிங் தள்ளாடுதே.. :-?

vasu balaji said...

அது எங்க தள்ளாடுது. ஒண்ணு வாஸ்தவம். வெறுப்புல எழுதினது. எழவெடுத்தவனுங்க எப்படி தின்னு தூங்கி மறுநாளும் வந்து இப்படி ஒரு பிழைப்புனு.

vasu balaji said...

கலகலப்ரியாவுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நறுக்குன்னுதான் இருக்கு>>>>

vasu balaji said...

நன்றி ஞானசேகரன் சார்.