Friday, March 6, 2009

கத கேளு கத கேளு

ஈசாப்னு கேள்வி பட்டிருப்பிங்க தானே. அந்தாளு ஒரு அடிமை. ஆனா அறிவாளி. அந்தாளோட முதலாளி ஏதோ ஒரு தேர்தல்ல தலைவராய்ட்டாங்க. தின்றதுக்குன்னு ஒரு கூட்டமில்லாம தலைவனா. அந்தாளுக்கும் இருந்தாங்க. விருந்துன்னு நச்சரிப்பு. அந்தாளு ஈசாப்ப கூப்டு நல்ல கறியா என்னல்லாம் இருக்கோ வாங்கிக் கொண்டு வந்து விருந்துக்கு ரெடி பண்ண சொன்னாங்க. சாப்பிட உக்காந்தா நாக்கு கறில வருவல், குழம்புன்னு வகை வகையா எல்லாம் நாக்கு. ஓசில தின்றதுக்கு அழகே குத்தம் சொல்றது தான. ஒருத்தன் கேட்டான். என்னா தலைவரே? நல்ல கறி சோறு போடுவிங்கனு வந்தா எல்லாம் நாக்கு கறினு. தலைவருக்கு அசிங்கமா போச்சி. கூப்டாரு ஈசாப்ப. என்னடா வேல இது. நல்ல நல்ல கறியா வாங்க சொன்னா இப்படின்னாரு. ஈசாப் அமைதியா, நாக்க விட உசந்த கறி என்ன இருக்க முடியும். முதல்ல ருசி தெரியரதுக்கு நாக்கு வேணாமா. எவ்ளோ நல்ல விடயமெல்லாம் சொல்லும் நாக்கு. அதாங்கன்னா ஆகா ஆகான்னு மண்டய ஆட்டிட்டு போய்ட்டாங்க.

அடுத்த தேர்தல்ல அய்யா ஊத்திக்கிட்டாரு. ஓசில தின்றவங்களுக்கு தோல்வின்னா என்ன வெற்றின்னா என்ன! சாப்ட ஒரு சாக்கு. நன்றி தெரிவிச்சி சாப்பாடு போடணும்னு முடிவாச்சி. கடுப்பில ஈசாப்ப கூப்டு மட்டமான கறி எல்லாம் வாங்கி வந்து சாப்பாடு பண்ண சொன்னாங்க. திரும்ப எல்லாம் நாக்கு கறி. கடுப்பாகி எகிறினாங்க. அதுக்கும் அமைதியா எசமான். நாக்க விட மோசமான ஒண்ணு உண்டுமா? வாய்க்கு வந்தத பேசறது, குடி கெடுக்கறது, இவ்ளோ ஏன் உடம்புக்கு ஆவாதுன்னாலும் இது கொடுக்கற டார்ச்சர்ல கண்டத தின்ன வெச்சி நோயாளியாக்கறதும் நாக்கு. அதான்னு பதில். தலைவரு அசந்து போய்ட்டாராம்.

(பி.கு. இந்த கடைசி சாதனைன்னு கப்ஸா விட்டது, சண்டைன்னா சாவரது சகஜம் தானன்னு சொல்லிட்டு இப்போ உண்ணாவிரதம் இருக்கறது இதெல்லாம் கவனம் வந்தா நான் பொறுப்பில்லை)

4 comments:

VISWAM said...

Mighavum nandru. Ulaghathile bayanenkaramana aayutham nakkuthan yendru kalaivanar padiyathuthan ninaivukku varukirathu. thodarunghal ithupol. nandri

நாமக்கல் சிபி said...

:))

சக்(ங்)கடத்தார் said...

பாலா எப்பிடி இருக்கிறீர்?

எப்பிடிச் சுகம்?

நக்கல் நல்லாத் தான் இருக்கு...
அரசியலே ஒரு கொமெடி தான்...என்ன செய்ய,...

vasu balaji said...

வாங்கோ சக்கடத்தார். நல்லா இருக்கோம். உங்களைத்தான் காணோம்.