Wednesday, March 4, 2009

கோக்கு மாக்கா கொஞ்சம் கேள்வி

பார்த்தியாபா பாகிஸ்தான் காரன் லொள்ள! பந்தாட்ற பசங்கள சுட்டதுக்கு தமிழ்நாடு தொடர்பிருக்காம். அவளோ சொரண இருந்தா இங்க இருந்து கிட்ட. இத விட்டு அங்க போய் அடிக்கராங்களா? இவனுங்க நல்லவனுங்கோ. எவ்ளோ அடிச்சாலும் தாங்கரானுங்கன்னு நக்கல் தான? சொல்லுங்கடா. ஒபாமாக்கு ஒன்னுக்கு வரலைன்னா கூட நாங்கதான்.

புலிகளைப் பத்தி பேசற அரசியல் தலைவர்களை கைது செய்யணுமாம் சாமி சொல்லிக்கிறான். இவன மாதிரி ஒரு கேடி பக்கர் பர்க்கலபா நானு. அம்மா கச்சி அய்யா கச்சி தவிர மத்தவங்க பேசராங்கன்னு அல்லாரையும் அமுக்கிட்டா சென்டர் எனக்கு ஸ்டேட் உனக்குன்னு பேரம் பேசவா?

கீர வாடினாப்பல கீதுன்னு கட்டு 5 ரூபா சொன்னா 4 ரூபாய்க்கு கேக்குறானுங்களே. கசங்கி போன டாலர்னு 45 ரூபாய்க்கு தருவியா, பாலிஸ் இல்லாம கீதுனு சவரன் 8000 ரூபாய்க்கி தருவியானு ஏன் கேக்க மாட்டானுங்கோ?


குப்ப குப்பயா ஜனங்கள சாவடிக்கறப்போ கமுக்கமா இருந்து இப்போ பந்தடிக்க போன பசங்கள பாய் அட்சிட்டானு அத்வானி கூட மீட்டிங் போட்டாராமே பிரணாப்பு. இன்னா கத தலீவா? இப்போ பொசலடிக்கல உனக்கு?

இலங்கைத் தமிழர்களைக் காக்க பா ஜ க வினால் மட்டுமே முடியும்னு அல்ட்ரானே பேமானி. இவன் தான வெள்ள காரன் லிஸ்ட்ல கீதுபானு தீவிரவாதின்னு சொன்ன பரதேசி. பக்சே தான் அட்சுனுக்கறானே அங்க கீறதெல்லம் பிலினு. இப்போ மட்டும் தீவிரவாதி இல்லாம பூடுமா? போடாங்.

அட்சி சாவடிங்கடான்னு சொல்லிட்டு சம்சாரத்த இட்டுகினு நேபால் போன பக்ஸே அவன் ஆள அட்சிட்டாங்கன்னு ஓடியாந்தான் பாரு. ஏன். அவங்காளுக்கு வந்தாதான் ரத்தமா? அவன் கிட்ட குண்டு வாங்கி அப்பாவிங்கள அட்சப்போ அல்வா துன்னா மாதிரி இருந்திச்சா?

இன்னாங்கடா எல்லா கச்சி காரனும் வக்கீலுங்களுக்கு சப்போர்டுன்னு டவுட்டுபா? கண்டுக்காம விட்டா கருப்பு கோட்ல செவப்பா ரத்தம் இருக்கறத போடோ புட்சி அல்லாம் நம்ம கச்சி கார பசங்கோன்னு கலைஞர் அலம்பல் பண்ணுவாரோன்னு உசாரா இருக்காங்களோ?

40 சீட்ல அம்மா கச்சி கெல்ச்சா அம்மாவ பிரதமாராக்கரேன்னாரே சாமி. அம்மா சசிகலாவ முதலமைச்சராரக்கரேன்னு சொல்லுமோ? அப்டி கண்டி நட்ந்திச்சி எல்டாம்ஸ் ரோட் பிளாட்பாரத்தில என் டென்ட் எனக்கில்லாம பூடுமே?

இந்த கோவில் சண்டைல போயும் போயும் சாமி தானா வக்கீலா கெட்சாங்க. மவனே, பாதி கேஸ்ல இப்போதான் சி ஐ ஏ காரா எவிடன்ஸ் குடுத்தா. சிவனோட புள்ள சுப்பிரமணிய சாமினு சிவபுராணத்துல கீது. நாந்தாம்பா வாரிசுன்னு லவட்டிகினு, பட்ட போட்ட நெத்தில நாமத்த போடமாட்டாரா? சிவ சிவா போய் கோவிந்தா கோவிந்தா ஆய்டுமேபா?

யான பட்தாலும் குதுர மட்டம்னு சொல்லும் நம்ம பெர்சு. கரீட்டு தாம்பா. தலீவரு பாரு. தேர்தல் டேட் சொன்னப்புறம் டிவி பொட்டி, வெள்ள துட்டு குட்தா எதிர் பார்டிங்க எகிறுவாங்கன்னு கபால்னு வன்னியர் பொது சொத்து நல வாரியம் அறிவிச்சி டாக்டரையாவ வள்சி போட்டார் பார்த்தியா?

எலக்சனுக்கு தேதி சொல்றானுங்களே. கலக்சனுக்கு ஏன் சொல்ல மாட்டானுங்க. ஓட்டு எண்ணி முடியர வரைக்கும் கறந்துட மாட்டானுங்கோ?

தங்கம் இந்த வெல விக்குதே! எப்டி லட்டுக்குள்ள மூக்குத்தி, மோந்திரம்னு வெச்சி ஓட்டு சுடுவானுங்கோ?

இந்த ஓட்டு மிசின்ல கள்ள ஓட்டு போட முடியாதுன்னு அதிகாரிங்களும், முடியும்னு கச்சிங்களும்( இவங்க சொன்னா நிசமாத்தான் இருக்கும்) ஏன் கூவணும். பட்டன் அய்த்த சொல்லோ மூஞ்சிய போடோ புடிக்க முடியாதா? அப்டி கண்டி மிசினு இருக்கட்டுமே. ஒத்துக்குவானுஙன்ற?

இவ்ளோ கட்சி காரனுங்க இருக்கறானுங்கோ. போர நிறுத்த சொல்லு. அப்பாவி ஜனங்க சாவுதுன்னு கூவரானகண்டி எவன்னா அடிக்கறதுன்னா தானடா ஐ நாவ கேக்கணும். அரிசி ,பருப்பு, பால் மாவு, மருந்துன்னு குடுக்க எவனடா கேக்கணுன்னு ஏன் கேக்க மாட்ரான்?

தேளு கட்ச கொரங்கு கணக்கா குச்சினு குச்சினு இருந்தார தொங்கபாலு? இன்னா சவுண்ட காணோம். பீட்ர பேச வுட்டு அம்பேல் ஆய்ட்டாரு? அம்மா சொல்லி இருக்குமோ? ஓவரா ஊத்தாதடி. அடங்குன்னு?

ஆமாம்! தலீவரு உண்ணாவிரத‌ம்னாரு. ஒரு பய கண்டுக்கல. அப்பால கேன்ஸல்னு சொன்னாரா?

(இந்த பழைமைபேசி படிச்சமா. நம்ம தமிழே மறந்துடும்னு பயம் வந்துடுத்து. அது தான் சொல்லி பார்த்துகிட்டோம். அகராதி எல்லாம் போட்டால் அவமரியாதைன்னு தான் போடலை. தெரியலன்னா கேட்கலாம். கூச்சம் வேணாம். இஃகி ஃகி )

5 comments:

பழமைபேசி said...

பாலாண்ணே, செமயா இருக்கு பதிவு....

vasu balaji said...

வாங்க சிபி சார்.:)

vasu balaji said...

நன்றி தம்பி

கலகலப்ரியா said...

உங்க ஊரு பாஷைல பேசறப்போ ரொம்ப தெனாவட்டுதான்.. இந்த ஹிஹிஹிந்து பத்திரிக்கைக்கு இந்த ஆர்டிகிள் அனுப்பி வைங்களேன்.. ஹிஹி..

vasu balaji said...

அட இன்னாம நீ. கொய்ந்த பொண்ணா கீற. இந்து காரன் செத்து பூட்டங்கபா! படம் போட்டு தகவல் சொல்லணும்னு போய் நின்னாவே அத்த கொன்டா இத்த கொண்டான்னு சாவடிப்பான். இத போட்ருவானா! அவரு தான் தொரமாருங்கதான் கேனனு இங்கிலீசு பேப்பர் போட்ர ஆளாச்சே?