Friday, March 27, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 5




நன்றி: நான் சத்யா



முத்துக்காள: யோவ். வெயிட்டர். இங்க வாய்யா.

வடிவேல்:(அட எளவெடுத்தவனே. கோழி 65னு என்ன சாவடிச்சனாச்சே இவன். இங்கயும் வந்துட்டான்!) என்னா வேணும்?
இங்க பாரு இப்பதே சொல்லிட்டேன் நம்பர் போட்ட ஐட்டம் எதுவும் இங்க விக்கறதில்ல.

முத்துக்காள: அட என்னண்ணே நீங்க பழசெல்லாம் மனசுல வெச்சிகிட்டு. ஆப் பிராந்தி ஒரு கூல்டிரிங்க் கொண்டு வாங்கண்ணே.

வடிவேலு: ஏண்டா. இதுல வில்லங்கமெதுவுமில்லையே.

முத்துக்காள: ஏண்ணே மிரள்ர. ஆப் பிராந்தி இதில வில்லங்கமிருக்கா? கூல்டிரிங்க் அதாவது குளிர்பானம் இதில இருக்கா? போய்கொண்டாங்கண்ணே. தொட்டுக்க கூட ஒண்ணும் கேக்கல போறுமா. போங்க.

வடிவேலு: இந்தாடா. பில்லு. காச எடு.

முத்துக்காள: இந்தாங்கண்ணே. காசு சரியா இருக்கா. இப்போ பிராந்தி இருக்கு, பானம் இருக்கு குளிரு எங்க சொல்லுண்ணே. அப்பதான் பிராந்தி அடிக்க சரியா இருக்கும்.

வடிவேலு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..ஏண்டா இப்படி சுத்தி சுத்தி விரட்டி சாவடிக்கற‌
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------------------------------
வடிவேலு: ஏம்பா. துப்பாகி சுடுறபோட்டில துப்பாக்கில எதையோ மாட்டி கொள்ள நேரம் அதுல பாத்து சுடுறாய்ங்களே. அது என்னா?

சத்யராஜ்: அது டெலஸ்கோப்டா வெண்ண. குறி பாக்குறதுக்கு.

வடிவேலு: அப்றம் என்ன போட்டி?. நேர கிட்ட போய் நின்னு சுடவேண்டியது தான. நம்ம ஊர்ல ஒரு ஆலமரம். அது கீள ஒரு 20, 25 குறவங்க பேமிலி. மொத்தமா கூடி உக்காந்து பேசிக்கிருப்பாய்ங்க. பேசிக்கிட்டே பகல்ல பசுமாடு தெரியாத ஒரு பெருசு படுக்கவெச்ச துப்பாக்கிய நிமித்தி டும்னு ஒரு போடு. பத்து காக்காயாவது விழும். பத்து நிமிசத்தில மொத்த பேமிலிக்கும் பிரியாணி. சுட்றதுன்னா அது. இப்பிடி டுபாக்கூரு வேல பண்ணி சுடுறதுக்கு மெடல் வேறயா?
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------------------------------
வடிவேலு: ஏம்பா. வரப்ப என்ன சொல்லி கூட்டியாந்த. பாரின்ல மக்கள்ளாம் நேர்மையானவங்க. கடைல ஆளில்லன்னா கூட தேவையானத எடுத்துகிட்டு காச வெச்சிட்டு போவாய்ங்கன்னு சொன்னல?

சத்யராஜ்: அதுக்கெனாடா இப்போ.

வடிவேலு: அங்க பாரு. போட்ல போக காசில்லாம ஒருத்தன் அந்த போட்ல கயத்த கட்டி ஒரு கட்ட மேல நின்னுகிட்டு ஓசில போறத. அந்த குருட்டு கபோதி இது தெரியாம வேகமா போறான்.

சத்யராஜ்:ஓடிபோயிரு.
‍------------------------------------------------------------------------------------------------


5 comments:

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா என்னை நினைவிருக்கா?

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா என்னை நினைவிருக்கா?

vasu balaji said...

ஆமாம். வாங்க. எங்க ரொம்ப நாளா காணோம்.

கிருஷ்ணா said...

எப்பிடிப்பா உங்களால மட்டும் இப்பிடியெல்லாம் யோசிக்க முடியுது. ரொம்ப அறிவாளிதான் நீங்க..

கலகலப்ரியா said...

ம்ம்.. வடிவேலு ரூட்ல போனா பொழைச்சிக்கலாம் போலேயே..:p..