Friday, March 20, 2009

லொள்ளுவதெல்லம் லொள்ளல்ல - 2

பார்த்திபன்:ஏய். இரு. எதுக்குடா உன் நண்பன‌ அடிச்சியாம்?

வடிவேலு: யோவ். அவன் என்னா பண்ணான் தெரியுமாய்யா? மார்ல வலியா இருக்குடா மாப்ள. நல்ல பெசலிஸ்ட் யாராச்சும் தெரியுமாடான்னு கேட்டா, கேப்டன் கிட்ட போ. அந்தாளுதான் செல்போன் வெளிச்சத்துலையே ஹார்ட் ஆபரேசன் பண்ணுவாருங்கறான். அவன அடிக்காம என்ன பண்ணச் சொல்ற?


அர்ஜுன்: வாய்யா ஏட்டு! என்ன ஹைவேஸ்ல அடி பட்ட தெருநாய் மாதிரி நைஞ்சி பஞ்சாகி வர?

வடிவேலு: அட சும்மா இருப்பா. சீமான் தம்பிய பார்க்கலாம்னு போனேன். வாங்கண்ணே! என்ன நிலவரம்னாய்ங்க. நான் சொன்னேன். எல்லாம் நல்லாதான் போயிக்கிருக்கு தம்பி. பயக புகுந்து விளையாடுறாய்ங்க. என்னா நினைச்சிருக்கான் ராணுவத்தான் நம்ம தம்பிங்கள. சிங்கம்லனு சொல்லி வாய் மூடல. நச்னு கம்பிக்குள்ளையே கையவிட்டு மூக்குல ஒரு குத்து. அப்புறம் தான் அங்க வந்த அமீர் தம்பி சொல்லிச்சி. சிங்கம்னா சிங்களத்தானாம்.


வடிவேலு: டேய்! ஆடு வளக்குறது அழகு பார்க்க இல்ல. கோழி வளக்குறது கொஞ்சரதுக்கில்ல. அறுக்கதான்.

பார்த்திபன்: அப்ப நாய் வளர்க்குறது எதுக்குடா நாறப்பயல?

வடிவேலு: வந்துட்டான்யா. வந்துட்டான்யா.


சத்தியராஜ்: என்னா மாப்ள! எலக்ஷன் வந்தாச்சி. கேப்டன் எங்க நின்னாலும் சுயேச்சையா நின்னு டெபாசிட் இல்லாம தோற்கடிப்பேன்னு சவால் விட்டியே? என்னா பண்ணப்போற?

வடிவேலு: சவாலா? என்னங்க சின்னபுள்ள தனமா பேசிக்கிட்டு. நான் எங்க சொன்னேன் அப்படி?

சத்யராஜ்: அடப் பார்ரா. சொன்னது பேபர்ல கூட வந்திச்சே?

வடிவேலு: அது நாற வாயி. இது வேற வாயி. போவியா. எப்பவோ சொன்னதெல்லாம் இப்போ கேட்டுகிட்டு.

4 comments:

Unknown said...

ஒண்ணொண்ணும் சூப்பர்!!!!!!!!!!!!!!

:-))))

கலகலப்ரியா said...

enna sir route a maaththittinga...

vasu balaji said...

ரூட்லாம் மாறலயே. லொள்ளு ரூட்ல தான் போக்கிருக்கோம். பஸ் தான் வேற. நான் என்ன பண்றது. அரசியல் வாதிங்கள்ளாம் கூட்டணில பிசி. உளர்ரதில்ல. அதான். ஹி ஹி.

டவுசர் பாண்டி said...

தலீவா ! மொத தபா உன்ன கண்டுகினு வந்து கீறேன்.
நா என்ன இன்றோஸ் பண்ணிக்கிறேன் ,
எம் பேர் டவுசர் பாண்டி.

ஜோக்கு எல்லாம் நல்லா கீது பா !

முன்ஜா நம்ப ஏரியா பக்கமா வா !