Monday, March 16, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 12

(மனைவிகள் பிள்ளைகள் குறித்த ஜெ. கமென்டுக்கு தலீவர் பதில்)
ஒரு முன்னாள் முதல்வர் பேசும் பேச்சா இது?
தலைவரா இப்படி பேசுறாங்க. என்னாச்சி தெரியலயே?

பதிலுக்கு 'உடன் பிறவா சகோதரிகள் எத்தனை' எனக் கேட்கலாமா?
அப்டி போடுங்க த‌லைவரே! எப்பிடியும் கேக்காம‌ விட‌ப்போற‌தில்ல‌. இதுக்கெதுக்கு த‌ய‌க்க‌ம்.

திருமாவ‌ள‌வ‌ன் எங்க‌ள் அணியில் தான் இருக்கிறார்‍ - க‌லைஞ‌ர்
இல்ல‌ன்னா தான் த‌டைச் ச‌ட்ட‌த்தில‌ உள்ள‌ இருப்பார்ல‌. இத‌ சொல்ல‌ணுமா?

இல‌ங்கைப் பிர‌ச்சினைக்கு அர‌சிய‌ல் தீர்வு ஒன்றே வ‌ழி - ப்ர‌ணாப்
அதுக்கேன்யா 1500 கோடிக்கு ஆயுத‌ம் குடுக்க‌ணும் கொய்யாலே!

3வ‌து அணி காணாம‌ல் போய்விடும் - கார்த்திக்
இவ‌ரு இவ்வ‌ளோ நாள் எங்க‌ காணாம‌ போனாரு

40 தொகுதிக‌ளிலும் வெல்லுவ‌தே குறிக்கோள் - ஜெ
ஐ. ஐ. சுவாமி சும்மா சொல்லுவாரு மேடம் பிரதமராக்கறேன்னு. அதெல்லாம் நம்பி அறிக்கை விட்டா ?

ப‌ண்பில்லாம‌ல் என்னை மூச்சுக்கு முன்னூறு முறை க‌ருணாநிதி என‌ அழைப்ப‌வ‌ர் ஜெ - த‌லைவ‌ர்
அந்த‌ம்மா முத‌ல்ல‌ என்னா பேரோ அதான் சொல்லும். இல‌ங்கைன்னாலும் ச‌ரி. நீங்க‌ன்னாலும் ச‌ரி. ஆமாம் பேரு வைக்க‌ற‌தே குறிப்பிட‌தானே? அதில‌ என்னா ப‌ண்பு.

நான் அம்மையார் என்று தான் அழைப்பேன் - த‌லைவ‌ர்.
அய்ய‌ தோடா! அதுல‌ ம‌ணிவ‌ண்ணன் கூப்டுற‌ அம்ம‌ணில‌ இருக்க‌ற‌த‌ விட‌ தூக்க‌லா ந‌க்க‌ல் இருக்கிற‌து தெரியாதாக்கும்.

இல‌ங்கை ராணுவ‌த்துக்கு மேல‌திக‌ ஆள் சேர்ப்பு - ஃஃபொன்செகா
அன்னைக்கு க‌ண‌க்கில‌ எல்லாரும் போயாச்சி. 400 பேருதான்னு சொல்லி இப்பொ இது என்னா? விளையாடிண்டிருக்க‌றத‌ எல்லாம் புடிச்சி யூனிஃபார்ம் குடுத்து அனுப்ப‌ற‌து தானா? பாவிங்க‌ளா.

யாலா காட்டில் புலிக‌ளைத் தேடிப் போன‌ ப‌டையின‌ரை குள‌வி துர‌த்தி துர‌த்தி கொட்டிய‌து - செய்தி
கொட்டி (புலிக‌ள்) புடிக்க‌ போனா கொட்டிடுச்சி பாவ‌ம். பன்னாடைங்க புலிய தேடி போனா அதமட்டும் பண்ண மாட்டானுங்களே. தேன் கூட்ட பார்த்ததும் அதுல பாய்வானுங்கோ. கோத்த‌பாய் குள‌வியும் தீவிர‌வாதின்னு ஹார்ட் அட்டாக் வராமாதிரி அல‌ற‌ப் போறான். ம‌த்த‌ ப‌ர‌தேசிங்க‌ அர‌சிய‌ல் தீர்வு தான் வ‌ழி. குள‌வி கூட பேச்சு வார்த்த‌ ந‌ட‌த்த‌ சொல்லும்.

ந‌வ‌நீத‌ம் பிள்ளை புலிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர் என‌ நாங்க‌ள் க‌ருத‌வில்லை - பொக‌ல்லாக‌ம‌
த‌லைவ‌ர் டைப்ல‌ அடிக்க‌றான் பாரு. ஏண்டா சாவ‌டிக்க‌ற‌ன்னு கேக்குற‌ ஆளெல்லாம் புலி எள‌வெடுத்த‌வ‌னுங்க‌ளுக்கு.

எனது புத்திமதிகளைக் கேட்டிருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு ஏதாவது மிஞ்சி இருக்கும் -பிரபாகரனுக்கு ஆனந்த சங்கரி கடிதம்
பிச்ச‌க்கார‌ புத்தி போவுதா பாரு. யோவ். ஏதாவ‌து போரும்னு இருக்க‌ற‌ ஆளெல்லாம் ந‌ல்லா தான் இருக்கிங்க‌. மான‌மா சாவ‌ணும்னு இருக்க‌ற‌து தான் சாவுது. இந்தாளுக்கு கிளிநொச்சில‌ வீடு விக்க‌ணும். அதான் சாவுது.